Saturday, January 25, 2025

ஆன்க்ஸியோலிடிக் விளைவுகளை

 யானை நெருஞ்சில்

சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளுக்கு மிகுந்த பலனைக் கொடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய இலைகள், காய்கள், வேர், தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
சிறுநீரக் கல் இருக்கும் பட்சத்தில் எதை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தொற்றால் ஏற்படக்கூடிய சிறுநீர் எரிச்சல், அடிவயிற்று வலி, சிறுநீர் மஞ்சலாக செல்வது ஆகியவை குணப்படுத்தப்படுகிறது.
யானை நெருஞ்சில் இலை சாறு சிறுநீரகத்தில் உருவாகும் ஆகிய பாக்டீரியாக்களை அழிக்கிறது. சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. சிறுநீர் துவாரம், ஆண்குறி புண், ஆண் மலட்டுத்தன்மை, விந்தணு குறைபாடு இவைகள் நீங்கும்.
பெண்களுக்கு ஏற்படும் வௌ்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், பால்வினை தொற்றுநோய்க்கள் போன்ற நோய்களை குணப்படுத்தும். ஆண்களுக்கு வயோதிகக்காலத்தில் ஏற்படும் பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினை சீர் செய்து பிராஸ்டேட் சுரப்பியை சீராக சுரக்கச் செய்கிறது.
இலை, காம்பு, காய் அனைத்தும் பிடுங்கி ஒரு கையளவு, 250 மிலி சுத்தமான நீரில் போட்டு 30 நிமிடம் வைத்தால் அந்த நீரானது எண்ணெய் அல்லது குழப்பு போல் ஆகம். இதைக் குடித்தால் மேற்கண்ட நோய்கள் போகும். மேலும் சொப்பனஸ்கலிதம், தாது உடைதல், சிறுநீ்ர் எரிச்சல் நீங்கும்.
யானை நெருஞ்சில் காயை காயவைத்து உலர்த்தி கஷாயம் செய்து குடித்து வந்தால் சிறுநீரகக் கல் நீங்கும். யானை நெருஞ்சிலின் சமூலம்(அனைத்தும்) அரைத்து நெல்லி அளவு எருமைத்தயிரில் கலக்கி காலை ஒரு வேளை மட்டும் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டால் நீர்க்கட்டு, நீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், தேக எரிச்சல் நீங்கும்.
இதன் இலையை இடித்து சூரணம் செய்து இரண்டு வேளைப் பாலில் போட்டு நாட்டுச் சர்க்கரை கூட்டி சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் வயிற்றுப்புண் நீங்கும். இதன் தண்டை இடித்துச் சாறு எடுத்து பாலில் கலக்கி உண்டு வந்தால் சிறுநீரக, எரிச்சல், விந்து நீர்த்துப்போதல், சிறுநீர் போகும்போது வலி , ஆண்மைக்குறைவு இவைகள் நீங்கும்.
மனநல கோளாறுகளுக்கு:
நெருஞ்சிலில் உள்ள சப்பைனின்களின் இருப்பு காரணமாக, மனத் தளர்ச்சி எதிர்ப்பு மற்றும் ஆன்க்ஸியோலிடிக் விளைவுகளை கொண்டுள்ளன, இதனால் இந்த மூலிகையை பதட்டம் மற்றும் மனச்சோர்வு மேலாண்மைக்கு பயன்படுத்தலாம்.
இதயத்திற்கு:
நெருஞ்சில் ஆண்டிஆக்சிடண்ட்டிகளால் நிறைந்து காணப்படுகிறது, இது கார்டியோ பாதுகாப்பு செயல்களுக்கு பொறுப்பானதாகும். இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டிரால் அளவை குறைக்க உதவுகிறது மேலும் இதனால் இந்த மூலிகை அதிரோஸ்கிளிரோஸ் மற்றும் பிற இதய கோளாறுகளை தடுக்க உதவுகிறது.
நெருஞ்சிலின் பக்க விளைவுகள்
பெரும்பாலான ஆய்வுகள் நெருஞ்சில் நுகர்வு பாதுகாப்பானது மேலும் இது எந்த தீவிர பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதைக் காட்டுகின்றன. நெருஞ்சில் வயிறு கோளறுகளை ஏற்படுத்தலாம், இதனால் ஆண்களுக்கு புரோஸ்டேட் அளவு அதிகரிக்கக்கூடும். உங்கள் தினசரி உணவில் நெருஞ்சிலை சேர்த்து கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது நல்லது.

No comments:

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...