Monday, March 17, 2025

இந்த பதிவு நகைக்சுவையாகவும், யதார்த்தமான உண்மையை

சுகர்னு docter கிட்ட போராங்க....

அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.
ஒரு_வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.
😂மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.
🧔அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்....
காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது....
இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.
(1) தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல....
(2) மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல....
(3) ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை....
(4) வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்....
TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.
வீட்டுல இருக்கிற வெந்தயத்தை, காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.
பாடையில போகற வரைக்கும்
அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.....
👆👆👆இந்த பதிவு நகைக்சுவையாகவும், யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.....
மனம் கெட்டால் உடல் கெடும்,
உடல் கெட்டால் மனம் கெடும்.
அதனால் மனதுக்கும், உடலுக்குமான, முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..
ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!
அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗
1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.
2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.
3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.
4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.
5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.
அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.
9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.
10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.
11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.
13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.
கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!
இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!
மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!
உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!
ஆரோக்யம் அனுபவியுங்கள்............!.

90 காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு இது தான் அன்றைக்கு பேவரிட்

 

*நாங்க இதை பொடி பிஸ்கட்னு சொல்லுவோம்... அஞ்சி காசுக்கு மூனு....*

90 காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு இது தான் அன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸ்...
செட்டியாரின் பலசரக்கு கடையில் தகர டப்பாவில் இந்த பிஸ்கட் மூடி வைத்திருப்பார்.
ஒத்த பைசா பிஸ்கட், 5 பைசாக்கு 5 பிஸ்கட், பத்து பைசாக்கோ, இருபது பைசாக்கோ பிஸ்கட் வாங்கி யூனிபார்ம் பாக்கெட்டில் போட்டு பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில் ஒவ்வொரு பிஸ்கட்டாக வாயில் போடுவோம்,
வாயில் போட்ட ஒத்த பிஸ்கட்டை தின்னுவது இல்லை. உமிழ்நீரில் அந்த பிஸ்கட் கொவுந்து போகும் பிறகு அப்படியே நுனைத்தபடி சுவையுடன் ருசித்து விழுங்குவது தான் இந்த பிஸ்கட் தின்னும் முறை, என எழுதபடாத சட்டம் உண்டு..
சில நேரங்களில் பள்ளிக்கு வந்த பிறகு மீதம் பிஸ்கட் டவுசர் பாக்கெட்டில் இருந்தால், அதை சக பள்ளி தோழனுக்கு கொடுப்போம்.. சும்மா இல்லை.? பண்ட மாற்று முறையில்...
நான் பிஸ்கட் தந்தால் நீ, சிலேட் குச்சி, சிலேட் அழிக்கும் பச்சிலை, அல்லது சின்ன கச்சி (சின்ன கோலி) இதில் ஏதாவது ஒன்று தரவேண்டும்...
பர்கர், ஷவர்மா, சிக்கன் ரோல் , லேஸ் ஆகியவை இன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸின் ஆளுமை, ஒத்த பைசா பிஸ்கட் மறக்கபட்டும், மறைக்கபட்டும் உள்ளது. ( இந்த பிஸ்கட் ஒரு சில இடங்களில் இப்போதும் உள்ளது)
ஒத்த பைச பிஸ்கட்டை ருசித்து தின்ற கடைசி தலைமுறையும் நாம் தான்..

உலகின் மிக நீளமான கடலுக்கடியில் சாலை சுரங்கப்பாதை பற்றிய 3 உண்மைகள்

 

உலகின் மிக நீளமான கடலுக்கடியில் சாலை சுரங்கப்பாதை பற்றிய 3 உண்மைகள்:

1. நார்வேயில் உள்ள ரைஃபில்கே சுரங்கப்பாதை உலகின் மிக நீளமான மற்றும் ஆழமான
கடலுக்கு அடியில் செல்லும் குகை வழி ஆகும்.
14.4 கிமீ நீளம்
கடல் மட்டத்திற்கு கீழே 292 மீட்டர் ஆழத்தையும் அடைகிறது.
2. – இது ரைஃபாஸ்ட் சுரங்கப்பாதை அமைப்பின் ஒரு பகுதி.
ஸ்டாவஞ்சர் நகரை ரைஃபில்கேவுடன் இணைக்கிறது, பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது.. படகுகள் தேவை இல்லை.
3. கட்டுமானம் 2013 இல் தொடங்கியது.
டிசம்பர் 30, 2019 அன்று திறக்கப்பட்டது.

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம்

 பாம்புகள் ஜாக்கிரதை

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!
1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும்.
2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.
3 குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.
5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன.
6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.
7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.
8. பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.
உங்கள் வீடுகளில் நுழைந்த பாம்புகளை விரட்ட முயற்சிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் அதிக வெப்பத்தின் காரணமாக பதுங்க இடம் தேடும் பாம்புகள் அதிக கோபம் கொண்டிருக்கும். நம்மைத் தாக்க முற்படும்.
நீங்கள் இதனை பகிர்வதன் மூலம் அதிகமானனவர்களை இந்த ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ள உதவும். கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அதிகம் பலனளிக்கக்கூடும்.

Sunday, March 16, 2025

சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும்




சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் பாதை இந்த வழியாக கேரள வயநாடும் செல்லலாம்....
அழகாகவும் திரில்லிங்காகவும் இருக்கும்.

Saturday, March 15, 2025

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16328 குருவாயூர் இருநது மதுரை

#குருவாயூர் to #மதுரை 

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16328 குருவாயூர் இருநது மதுரை தினசரி விரைவு ரயில் உள்ளது குருவாயூர்:5:50Am
திருச்சூர்புங்குனம் :6:12Am
திருச்சூர் :6:17Am ஒல்லூர் :6:28Am புதுக்காடு:6:38Am இரிஞ்சாலகுடை :6:48Am சாலக்குடி :6:55Am அங்கமாலி ஃபார் காலடி:7:12Am
அலுவா:7:23Am
களமசேரி:7:32Am
இடப்பல்லி:7:42Am
எர்ணாகுளம் டவுன் :7:58Am
திரிபுனிதிடுர:8:18Am
முலன்டுருட்டி:8:28Am
பிரிவோம் ரோடு:8:38Am
வைகோம் ரோடு:8:48am
குருப்பந்த்தரா:8:56Am
எட்டுமனுர்:9:05Am
கோட்டயம்:9:35Am
சங்கனாச்சேரி:9:54Am
திருவல்லா:10:03Am
செங்கன்னூர்:10:13Am
மாவேலிக்கரை:10:26Am
கயங்குளம்:10:40Am
கருணாகப்பள்ளி:10:57Am
சாஸ்தான்கோட்டா:11:08Sm
கொல்லம் ஜங்சன்:12:10Am
கிலிகொல்லுர்:12:23pm
சாந்தனடொப் ஹல்ட் :12:28pm
குன்டர :12:35pm
குன்டர ஈஸ்ட் :12:39pm
ஏழுகொனெ:12:45pm
கொட்டாரக்கரா:12:54pm
குரி:1:04pm
ஆவ்னெஸ்சரம்:1:10pm
புனலூர்:1:20pm
எடமன்:1:44pm
ஓட்டுக்கள்:2:02pm
தென்மலை:2:14pm
கழுத்துருட்டி:2:24pm
எடபாளயம் ஹல்ட்:2:31pm
ஆர்யன்காவு நெந் பிளாக்:2:38pm
ஆர்யன்காவு:2:48pm
பகவதிபுரம்:3:10pm
செங்கோட்டை:3:40pm
தென்காசி சந்திப்பு:3:56pm
கடையநல்லூர்:4:12pm
பாம்பகோவில் சந்தை:4'24pm
சங்கரன்கோவில்:4:36pm
இராஜபாளையம் : 4:58pm
ஸ்ரீவில்லிபுத்தூர்: 5:12pm
சிவகாசி:5:29pm
திருத்தங்கல்:5:37pm
விருதுநகர் சந்திப்பு :6:03pn
கல்லிகுடி:6:15pm
திருமங்கலம்:6:26pm
திருப்பரங்குன்றம்:6:39pm
மதுரை சந்திப்பு:7:10pm                              
மறு மார்க்கம் அட்டவணை கீழ கொடுக்கப் பட்டது 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
பயணிகள் கனிவான கவனத்திறகு எண் 16327 மதுரை இருந்து குருவாயூர் தினசரி ரயில் உள்ளது மதுரை சந்திப்பு : 11:35Am
திருப்பரங்குன்றம் :11:44Am
திருமங்கலம் :11:54Am
கல்லிகுடி :12:03pm
விருதுநகர் சந்திப்பு :12:13pm
திருத்தங்கல்:12:29pm 
சிவகாசி :12:39pm ஸ்ரீவில்லிபுத்தூர்:12:54pm
இராஜபாளையம் : 1:03pm   
சங்கரன்கோவில் :1:29pm
பாம்பகோவில் சந்தை:1:39pm
கடையநல்லூர்:1:49pm 
தென்காசி சந்திப்பு:2:13pm
செங்கோட்டை:3:15pm
பகவதிபுரம்:3:34pm 
ஆர்யன்காவு:3:54pm
ஆர்யன்காவு நெந் பிளாக்:4:04pm
எடபாளயம் ஹல்ட்:4:10pm
கழுத்துருட்டி:4:19pm
தென்மலை :4:31pm ஓட்டுக்கள்:4:42pm
எடமன்:5:01pm
புனலூர் :5:55pm
ஆவ்னெஸ்சரம்:6:10pm
குரி :6:17pm
கொட்டாரக்கரா :6:27pm
ஏழுகொனெ :6:34pm
குன்டர ஈஸ்ட் :6:40pm
குன்டர :6:49pm
சாந்தனடொப் ஹல்ட் :6:57pm
கிலிகொல்லுர் :7:05pm
கொல்லம் ஜங்சன்:7:40pm
சாஸ்தான்கோட்டா:8:04pm
கருணாகப்பள்ளி:8:14pm
கயங்குளம் சந்தி:8:33pm
மாவேலிக்கரை:8:44pm
செங்கன்னூர் :8:56pm
திருவல்லா :9:06pm
சங்கனாச்சேரி:9:16pm
கோட்டயம் :9:42pm
எட்டுமனுர் :9:57pm
குருப்பந்த்தரா :10:05pm
வைகோம் ரோடு:10:13pm
பிரிவோம் ரோடு:10:22pm 
முலன்டுருட்டி:10:36pm
திரிபுனிதிடுர :10:54pm
எர்ணாகுளம் டவுன்:11:32pm
இடப்பல்லி:11:44pm
களமசேரி:11:54pm
அலுவா:12:04Am
அங்கமலி:12:19Am
திருச்சூர் :1:23Am
குருவாயூர்:2:10Am குறிப்பு (இந்த ரயில் பல வருடங்களாக ஓடி கொண்டு இருக்கிறது அதைப் போல தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு தெரிந்து விட்டதா கடந்து போங்கள் நம்முடைய நோக்கம் ரயிலை முழுமையாக பயன்படுத்த வேண்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Palani to kodaikannal bus time

 


ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் Iynthuveetuswamy Temple- Chettiyapathu-4

 


கேரள கடற்கரைகள் உலகப் புகழ்பெற்றவை...

 



கேரள மாநில நில அமைப்பின் காட்சி...
கேரள கடற்கரைகள் உலகப் புகழ்பெற்றவை...
மேற்கு தொடர்ச்சி மலையும் கடலும் ஒரு சேர இருப்பது கேரள கடற்கரைகளின் பேரழகு...
வால் போன்ற அமைப்பை கொண்ட ஒரு சிறிய மாநிலம் கேரளா...
கேரளா மாநிலம் 35% மட்டுமே நிலப்பரப்பை கொண்டது....
மீதி 65% மலைகளும் காடுகளும் கொண்டது...
கேரளாவில் 35% நிலப்பரப்பில் 60% மக்களும் 65% மலைப் பகுதிகளில் 40% மக்களும் வாழ்கிறார்கள்...
கேரள மாநிலத்தில் தென்கிழக்கில் பெரிய மலைக் காடாக தெரிவதுதான் இடுக்கி மாவட்டம்...
கேரளாவின் மிகப்பெரிய மாவட்டம் இடுக்கி...
கேரளாவின் மிகப்பெரிய மலை மாவட்டமும் இதுதான்.

தூத்துக்குடியின் அடையாளமாக இருப்பதுதான் மக்ரூன்

 

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு அடையாளமாகத் திகழ்கிறது. தூத்துக்குடியின் அடையாளமாக இருப்பதுதான் மக்ரூன்.

வெண்மை நிறத்தில் சிறிய பிரமிடு வடிவத்தில் அமைந்த ஒரு வித்தியாசமான இனிப்பு மக்ரூன். மக்ரூன் என்பது ஒரு போர்த்துக்கீசியச் சொல். இது முதன்முதலில் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் அறிமுகமானதால் இது ‘தூத்துக்குடி மக்ரூன்’ என்று அழைக்கப்படுகிறது. தற்போது தூத்துக்குடியில் பல பேக்கரிகள் மக்ரூன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. தூத்துக்குடிக்கு வந்த போர்த்துகீசிய மாலுமிகள் மூலமாக மக்ரூன்கள் தூத்துக்குடிக்கு அறிமுகமாயின என்று கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மக்ரூனை தயாரித்து விற்பனை செய்து அறிமுகப்படுத்தி அதை பிரபலப்படுத்தியவர் அருணாசலம் பிள்ளை என்பவர். தூத்துக்குடி மாவட்டத்தில் சின்ன நட்டாத்தி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அங்கிருந்த ஒரு போர்த்துகீசியரிடமிந்து மக்ரூன் தயாரிப்பினைக் கற்று அதை தூத்துக்குடியில் அறிமுகம் செய்தார் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடியில் புகழ்பெறத் தொடங்கிய மக்ரூன் பின்னர் தமிழ்நாடெங்கும் பரவியது.
முட்டையின் வெள்ளைக்கரு, பெரிய முழு முந்திரிப்பருப்பு, சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கபடுவது இந்த மக்ரூன். முட்டை வெள்ளைக்கருவுடன் சிறிது மஞ்சள் கரு கலந்து விட்டாலோ அல்லது முந்திரிப்பருப்பின் தரம் குறைந்தாலோ மக்ரூனின் சுவையே மாறிவிடும். எனவே, இந்த மூலப்பொருட்களை கவனமாகக் கையாண்டு மக்ரூன் தயாரிக்கப்படுகிறது.
இனி, மக்ரூன் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்று பார்ப்போம். முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு பிளெண்டர் கொண்டு நன்றாக அடிக்க வேண்டும். நுரை போன்று ஆனவுடன் அதனுடன் சர்க்கரை மற்றும் இடித்துத் தூளாக்கப்பட்ட முந்திரி பவுடரைச் சேர்த்து மீண்டும் நன்றாக பிளெண்டர் மூலம் அடிக்க வேண்டும். நன்றாக அடித்ததும் மாவு பதத்திற்கு வரும். ஒரு காகிதத்தை கூம்பு வடிவத்தில் மடித்து அதற்குள் மக்ரூன் மாவை ஊற்றி பொட்டலத்தின் மேற்பகுதியை மூடி கூம்புப்பகுதியை சிறிது கத்தரித்து ஒரு தட்டின் மீது கூம்பு வடிவத்தில் மக்ரூனைப் பிழிய வேண்டும். பேக்கரி அடுப்பில் வைத்து சுமார் நான்கு மணி நேரம் மிதமான சூட்டில் வேக வைத்து பின்னர் எடுக்க வேண்டும். இப்போது மக்ரூன் ரெடி.
இனிப்புப் பண்டமான மக்ரூன் மொறுமொறுப்பாக இருக்கும். கூம்பு வடிவில் வெண்மை நிறத்தில் உள்ள ஒரு மக்ரூனை எடுத்து வாயில் போட்டு கடித்துத் தின்றால் அதன் சுவை நம்மை அடிமையாக்கிவிடும். முழு பாக்கெட் மக்ரூனும் மளமளவென காணாமல் போகும். மக்ரூனை வாங்கிய உடன் சாப்பிட்டு விட வேண்டும். இல்லையென்றால் காற்று புகாமல் வைத்துப் பாதுகாக்க வேண்டும். காற்று கலந்து விட்டால் மக்ரூன் இறுகி அதன் மொறுமொறுப்புத் தன்மையை இழந்து விடும். இதன் பின் சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்காது. காற்று புகாத டப்பாக்களில் வைத்தால் பதினைந்து நாட்கள் வரை கெடாமல் சுவை மாறாமல் இருக்கும் என்று கூறுகின்றனர்.
தற்போது தூத்துக்குடி மட்டுமின்றி, சென்னை, திருநெல்வேலி, கோவில்பட்டி, திருச்செந்தூர் முதலான பகுதிகளிலும் மக்ரூனைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். ஆனால், இன்று வரை தூத்துக்குடி மக்ரூனின் சுவை தனிச்சிறப்புடன் திகழ்கிறது.
தூத்துக்குடி சென்றால் மறக்காமல் மக்ரூனை வாங்கி சாப்பிட்டு மகிழுங்கள். உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாங்கி வந்து பரிசளியுங்கள்.

அழகான இந்த உழவுக்காட்சி 1877 ஆம் ஆண்டு ஆஸ்கார் மல்லிட்


 சீரான வரிசை மற்றும் ஒரே அளவில் ஆழமுடன் நிலத்தை உழுவதற்கு பயன்படும் பழங்கால விதைக்கலப்பை கருவியை கொண்டு உழவர்கள் விவசாயம் செய்வதை ஒரு ஆங்கிலேயர் மேற்பார்வை செய்கிறார்!!!

❤️🇮🇳🙏
அழகான இந்த உழவுக்காட்சி
1877 ஆம் ஆண்டு ஆஸ்கார் மல்லிட் oscar Mallite என்பவரால் அலகாபாத்தில் எடுக்கப்பட்டது!!!
இந்த கருவி ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் சீரான வரிசைகளில் விதைகளை நடுகின்றன, இதனால் கைமுறையாக விதைப்பதை விட முளைப்பு விகிதமும் பயிர் விளைச்சலும் அதிகரிக்கும்!!!

SpiceJet புதிய அறிவிப்பு! ✈️ 2025 மார்ச் 30 முதல், தினமும் 2 முறை சென்னை - தூத்துக்குடி

 


🦉SpiceJet புதிய அறிவிப்பு! ✈️
2025 மார்ச் 30 முதல், தினமும் 2 முறை சென்னை - தூத்துக்குடி விமான சேவைகளை SpiceJet தொடங்குகிறது. இதனால், இந்த வழித்தடத்தில் (sector) மொத்தம் 7 விமானங்கள் தினசரி இயக்கப்படும்!
🔥 எதிர்பாராத வளர்ச்சி! தூத்துக்குடிக்கு இத்தனை விமானங்கள் இயக்கப்படும் என யாருக்குத் தெரியும்?
💼 வணிகப் பயணிகள், சுற்றுலா பயணிகள், மற்றும் மீன்பிடி தொழிலுடன் தொடர்புடையவர்களுக்கு இது ஒரு பெரிய செய்தி!

Wednesday, March 12, 2025

KSRTC- KERALA DOUBLE DUCKER BUS -MUNNAR KSRTC STAND STARTING POINT-TOURIST PLACES 3 HOURS TRIP

 KSRTC 

TOURIST PLACES 3 HOURS TRIP

1,SIGNAL POINT

2,LOCKHART VIEWPOINT

3,GAP ROAD

4,MALAYIL KALLAN CAVE

5,PERIYAKANAL WATERFALLS

6,ORANGE FARM VIEW

7,ANAYIRANGAL DAM VIEW


UPPER DESK SEATS :RUPEES 400 (INDIAN MONEY)

LOWER DESK SEATS :RUPEES 200 (INDIAN MONEY)


MORNING TIME : 9.00AM

AFTERNOON TIME :12.30 PM

EVENING TIME :12.30 PM

BOOKING WEBSITES --- www.ksrtc.in

Spice jet is back to Serve Tuticorin from 30-03-2025

*Spice jet is back to Serve Tuticorin from 30-03-2025*

*Spicejet opened the booking for 2 Chennai Flights and 1 Bangalore Flight from TCR*

*Chennai - Tuticorin*

06.00 AM ----> 07.40 AM
02.20 PM ----> 03.55 PM

*Tuticorin - Chennai*

12.10 PM ----> 01.45 PM
04.55 PM ----> 06.30 PM


*Tutocorin - Bangalore*

08.00 AM ----> 09.35 AM


*Bangalore - Tuticorin*

09.55 AM ----> 11.45 AM

Tuesday, March 11, 2025

சிம்பொனி என்றால் என்ன...?

சிம்பொனி என்றால் என்ன...?

ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான். 

உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது..
அதில் முக்கியமானவை:
1.சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra)
2.சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra).

16ம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாக கலந்தே இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்க முடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்டது.
அது தான் சிம்பொனி..
இதற்கு சரியான வடிவத்தைக் கொண்டுவந்து இதை புகழ் பெற வைத்தவர் Father of Symphony என்று அழைக்கப்படுகிற ஜோசப் ஹைடன் (1732-1809)..
மொசாட் மற்றும் பீத்தோவன் இருவருக்கும் இவர்தான் குருநாதர்.

மீண்டும் சிம்பொனிக்கு வருவோம்.
ஒரு இசை வடிவம் எப்பொழுது சிம்பொனி என்று அழைக்கப்படுகிறது?..
ஒரு சிம்பொனி எவ்வளவு நேரம் இசைக்கப்பட வேண்டும்?,
எத்தனை இசைக் கருவிகள் பயன்படுத்த வேண்டும்?,
எவ்வளவு இசைக் கலைஞர்கள் பங்குபெற வேண்டும்?..

ஒரு சிம்பொனி குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் இருக்க வேண்டும்..
18 முதல் 24 வகையான இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். 
80 முதல் 120 இசைக் கலைஞர்கள் வரை ஒரு அரங்கத்தில் இதை இசைக்க வேண்டும்..

இந்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்தால் கூட அது சிம்பொனி ஆர்கஸ்ட்ரா என்று அழைக்கப்படாது. மாறாக அது சேம்பர் ஆர்கஸ்ட்ரா என்றுதான் அழைக்கப்படும்.

ஏன் இதற்கு இவ்வளவு கட்டுபாடுகள?..
இதற்கு சிம்பொனி எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டால் இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்..

சிம்பொனி நான்கு பகுதிகளாக இசைக்கப்பட வேண்டும் என்பதை முதலில் பார்த்தோம்.
இப்போது அந்த நான்கு பகுதிகள் எவை?..
அது எப்படி இருக்க வேண்டும்?..

இதை விளக்குவதற்கு இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம்..
1. The Fast Movement:
காலையில் திருமண நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. இது துவக்க நிலை உறவினர்கள், நண்பர்கள், விஐபிகள் போன்றவர்கள் அங்கு வருகை தர ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் கோலாகலமாக இருக்கும். இதை குறிப்பதற்கு இசை துள்ளலாக, கொஞ்சம் அதிரடியாக இருக்க வேண்டும்.

2. The Slow Movement:
இப்போது அரண்மனைக்குள் அனைவரும் செட்டில் ஆகியிருப்பார்கள். மணமகன், மணமகள் அங்கு தோன்றுவார்கள்.‌ இப்போது துவக்க நிலை இசையை நன்றாக விரிவுபடுத்தி இசையின் ஆழத்திற்கு செல்ல வேண்டும். இந்த பகுதி அமைதியானதாக இருக்க வேண்டும். மெலடி டியூன்ஸ் இங்கு அதிகம் வாசிக்கப்படும்.

3. The Dance Number:
திருமணம் முடிந்து கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கிறது. இப்போது அந்த இடம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். இதை குறிக்கும் வகையில் இசை என்பது நடனம் ஆடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். 

4. An Impressive Fast Movement:
இப்போது அரண்மனைக்குள் தீ பிடித்து விடுகிறது. அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் பதட்டமாக இருக்கும். இதுதான் சிம்பொனியின் உச்சகட்டம். இங்கு இசையில் நிறைய பரிசோதனைகள் செய்து பார்க்கப்படும். இங்கு இசையமைப்பாளர் தன் முழு திறமையையும் காண்பித்து சிம்பொனியை நிறைவு செய்வார்.

இந்த நான்கு பகுதிகளையும் உருவாக்குவதற்கு தான் இருபது நிமிடங்களுக்கு மேல் இசை தேவைப்படுகிறது. இதற்குத்தான் எண்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.

மிக முக்கியமாக, சிம்பொனி இசையை ஸ்டுடியோவுக்கு உள்ளே உருவாக்கி பின்னர் அதை வெளியிடக் கூடாது. ஒரு பெரிய அரங்கத்தில் 80க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களோடு, ஒவ்வொரு இசையையும் இருபது நிமிடங்களுக்கு மேல் பார்வையாளர்களுக்கு முன்னிலையில் இசைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது சிம்பொனியாகக் கருதப்படும்..

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...