Thursday, January 9, 2025

கஸ்தூரி வெண்டை சற்றே பூசினாப்


 வெண்டைக்கா எனக்கு பிடித்த காய் கிடையாது. ஆனால் சமைக்க பிடிக்கும். சிவப்பு வெண்டைக்காய் அபூர்வமா எப்பவாவது கிடைக்கும். இப்போல்லாம் இல்லவே இல்லை.

எங்க தோட்டத்துல வெண்டை ஆளுயரத்திற்கு வளரும். திருச்சில வாய்க்கால் ஓரமா விவசாய நிலத்துல இருந்த வீடு அல்லவா? உய்யக் கொண்டான் வாய்க்கா நீர் காலங்காலமா ஓடி செழித்த பூமி. என் கை வண்ணம் வேற. கேட்கவா வேண்டும்? வெண்டை, கத்தரி, பாம்பு புடலை, சீன் அவரை, வெள்ளரி, அவரைக்கா, வாழை, என்று என்னை ஒரு ராணி போல உணர வைத்த மண் அது!
அடர் சிவப்பு நிறத்தில் கூட வெண்டை இருக்கிறது.
கஸ்தூரி வெண்டை சற்றே பூசினாப்ல ஒரு அழகா இருக்கு பாருங்க. நிஜத்துல இவங்கள பாக்கணும் ஆசை.
யானை தந்தம் வெண்டை ஒரு அடிக்கும் மேலே வளைந்து தந்தம் போல இருக்குமாம். நான் பார்த்தது இல்லை. பார்ப்பேனா தெரியலை.
ஆண்டவன் படைப்புல எத்தனை வடிவம், வண்ணம், ருசி பாருங்களேன். ஆச்சர்யமாக இருக்குல்ல? எல்லாமே வெண்டைக்காய் தான். ஆனால் ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கிறது சிறப்பு!

Kilavarai Village, Kodaikanal Tamilnadu

 #கிளாவரை #கொடைகானல் லின் உயரமான மலையில் அமைந்துள்ள ஓர் அழகிய சிறிய கிராமம்.

Kilavarai Village, Kodaikanal Tamilnadu


மார்கழி மாத குளிரில் ஆஸ்துமா

 மார்கழி மாத குளிரில் ஆஸ்துமா நோயாளிகள்,முதியவர்கள் படும் துன்பம் நரகமாக இருக்கும்..நெஞ்சு சளியால் முதியவர்கள் மூச்சுதிணறலால் சிரமப்படுவார்கள்...

சுடுநீரில் பூண்டை தட்டிப்போட்டு அந்த நீரை குடித்தால் மூச்சு திணறல்,நெஞ்சு சளிகுணமாகும்..துளசி நீரும் நல்ல பலன் கொடுக்கும்!! கேரளாவில் சீரக நீர்தான் அதிகம் அருந்துவார்கள்..அது அஜீரண பிரச்சினையை சரியாக்கும்...
13 மிளகை மென்று பால் அல்லது சுடுநீர் குடித்தால் சளி அகலும்...வெற்றிலையில் மிளகு 4 வைத்து மென்றாலும் சளி அகலும்..ஆங்கில மருந்தையே நாடாதீங்க..அந்த மாத்திரை ஜீரணம் ஆக இன்னொரு மாத்திரை சாப்பிடுற அளவுக்கு குளிர் இருக்குற காலம் இது

அதலைக்காய் என்னும் அற்புத மருந்து


#புற்றுநோயிலிருந்து
#எய்ட்ஸ் வரை அனைத்தையும் குணப்படுத்தும் ஒரே காய்! அதிர்ஷ்டம் இருந்தால் உடனே வாங்கி விடவும்!
நமது முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் அவர்களின் உணவுமுறை. நாம் இப்போது முப்பது வயதுகளிலியே சர்க்கரைநோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாவதும் நமது உணவுமுறையால்தான்.
இயற்கை நமக்கு எண்ணற்ற கொடைகளை தந்திருக்கிறது, அதை முன்னோர்கள் மதித்து செயல்பட்டதால்தான் அவர்களால் ஆரோக்கிய வாழ்வு வாழ முடிந்தது. இயற்கையை மதிக்காததன் விளைவு இன்று நம் வருமானத்தில் பாதி மருத்துவ செலவிற்கே செல்கிறது.
ஆந்திரா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது #அதலைக்காய் என்னும் அற்புத மருந்து.
#அதலைக்காய் பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரு காய் உங்களை சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் என்றால் நம்புவீர்களா? ஆனால் இது பாதுகாக்கிறது என்பதுதான் உண்மை.
இந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரமாகும். இதிலுள்ள சத்துக்கள் நம்மை பலவகையான நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியது.
இதனை யாரும் விளைவிக்க வேண்டிய அவசியமில்லை. மழைக்காலம் வந்தால் இது தானாகவே சாலையோரமும், விளைநிலங்கள் அருகிலும் விளையத்தொடங்கும் இது தென்மாவட்ட விவசாயிகளுக்கு முதலீடே இல்லாமல் இலாபம் தரக்கூடியத்தாகும்.
இதிலுள்ள சத்துக்கள் முறையே நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் என இதில் உள்ள சத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தனை சத்துக்கள் நிறைந்த இதை நாம் கவனிக்காமல் இருப்பது நமது அறியாமைதான்.
அதலைக்காய் பாகற்காயை போன்றே கசப்பு சுவையுள்ளது, அதனாலேயே பெரும்பலானோர் இதனை உண்பதில்லை. ஆனால் இதன் மகிமையை அறிந்தவரகள் இதனை ஒருபோதும் வெறுப்பதில்லை. இதனை சாம்பாராக வைக்க இயலாது எனவே பொரியலாகவோ அல்லது புளி குழம்பாகவோ சமைத்து சாப்பிடலாம்.
சரியான பக்குவத்தில் சமைத்தால் சுவையிலும், சத்துகளிலும் இதனை மிஞ்ச வேறு காய்கறிகளே இல்லை.
#சர்க்கரை_நோய்
இதன் சதைப்பகுதி இன்சுலின் போல செய்லபடக்கூடியது. இன்சுலின் என்பது நமது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள மிகவும் அவசியம். மேலும் சர்க்கரையை குறைக்கும் பல சத்துக்களை கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு அதலைக்காய் இயற்கை கொடுத்த வரமாகும்.
#புற்றுநோய்
இதிலுள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்கள் இரத்தத்தில் வளர்வதற்கான ஆற்றலை தடுக்கிறது. முக்கியமாக இது கணையத்தை பாதுகாப்பதால், இதனை தொடர்ந்து உண்பவர்களுக்கு கணைய புற்றுநோய் வர வாய்ப்புகள் மிகக்குறைவு. அதுமட்டுமின்றி இதில் உள்ள லெய்ச்சின் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, புற்றுநோய் செல்கள் பாதிப்பையும் தடுக்கிறது.
#சிறுநீரக_செயல்பாடு
சிறுநீரக பாதிப்பு என்பது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கக்கூடியது. ஒருவேளை உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தால் இந்த அதலைக்காயை சாப்பிட மறந்துவிடாதீர்கள்.
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கறையத்தொடங்கும். இதில் உள்ள பைடோநியூட்ரின் உங்கள் இரத்தத்தை சுத்திகரிப்பதில் உதவும்.
#எய்ட்ஸ்
எய்ட்ஸ் நோய் என்பது நம் இரத்த உள்ள அணுக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து நம் உடலின் பாகங்களை செயல்பட விடாமல் செய்வதே. அதலைக்காய் நம் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
இதன் மூலம் ஹெச்ஐவி கிருமிகளின் தாக்கம் குறையும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்க்கவே கூடாது. அதலைக்காய் கருக்கலைப்பிற்கும் பயன்படுத்த படுகிறது.
#எடை_குறைப்பு
முன்பே கூறியது போல இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் பசியுணர்வை கட்டுப்படுத்தும், எனவே நீங்கள் இதனை சிறிதளவு சாப்பிட்டாலே பசி அடங்கியது போல் திருப்தியாய் உணருவீர்கள் எனவே நீங்கள் அதிகம் சாப்பிடுவதை இது தடுக்கும்.
அதுமட்டுமின்றி இதில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளது. ஒரு கப் அதலைக்காயில் 16 கலோரிகள் மட்டுமே இருக்கும். ஆதலால் எடை குறைக்க விரும்புவோர் தங்கள் டயட்டில் முக்கியமாக சேர்க்க வேண்டியது இந்த அதலைக்காய்.
#பிரச்சினை
அதலைக்காயில் உள்ள ஒரே பிரச்சினை இதை பறித்தவுடன் சமைத்துவிட வேண்டும். இல்லையெனில் காய்கள் வெடித்துவிடும். எனவே இதனை வெளியூர்களில் பார்ப்பது மிகவும் கடினம். ஒருவேளை உங்கள் அதிர்ஷடம் இந்த அதலைக்காயை பார்க்க நேர்ந்தால் உடனடியாக வாங்கிவிடவும்.

சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி

 1980க்கு முன்பு 300 வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் 50 வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.


கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA..... அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும். 


இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.


ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .


அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.


ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.


இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு" விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.


அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,, 


இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.


1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். 


ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.


சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.


சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். 


எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.


அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.


இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம்.


எப்படி ஆயினும்.... பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன.

Saturday, January 4, 2025

அசோகர் பயன்படுத்திய செடிவளர்ப்பு

செடி நட்டால் மட்டும் போதுமா தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டுமல்லவா.. அசோகர் பயன்படுத்திய செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்..
நாம் பயன்படுத்தாத பானை ஒன்றை எடுத்து அதன் அடியில் சிறுதுளையிட்டு..நட்ட மரச்செடியின் அருகில் குழிதோண்டி வைக்க வேண்டும்.
பிறகு பானையில் நீரை ஊற்றிவிட்டு ஒரு துணியால் மூடிவிட்டால்...நீர் எளிதாக நீராவி ஆகாது.நீரும் துளையின் வழியாக சொட்டு சொட்டாக வேருக்கு அருகிலேயே இறங்கும்.
இதனால் நாம் வாரம் ஒருமுறை நீர் ஊற்றினாலே போதும்.நீரும் மிச்சம்.நேரமும் மிச்சம்.
செடியும் ஆரோக்கியமாக கிளைத்து வளரும்.தண்ணீர் அதிகமாக இல்லாத (அல்லது) நீர் ஊற்ற நேரம் கிடைக்காத இளைஞர்கள் இம்முறையை கடைப்பிடித்தால் நிச்சயமாக நம்மால் நிறைய செடிகளை நட்டு எளிதாக பராமரிக்கவும் முடியும்.
நீரையும் ஆவியாகாமல் சேமிக்கலாம்....
படித்துவிட்டு நிச்சயமாக ஒரு மரச்செடியை நடுவீர்கள் என்று நம்புகின்றேன்.
வாழ்த்துக்கள்...
நன்றி
உயிர்நாடி விவசாயம்

பணம் யாருக்கும் இழப்பில்லாம

ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு. அவரு லாட்ஜுக்கு ஒருத்தர் வந்தாரு. ரூம் புக் பண்றதுக்கு முன்னாடி ரூம் எப்பிடியிருக்கு என பார்க்கணும்னு சொன்னாரு. உடனே லாட்ஜ் ஓனர் அப்பிடின்னா 500 ரூவா டெபாஸிட் குடுக்கணும்னு சொன்னாரு. உடனே அந்த ஆள் ஒரு புது 500 ரூவாவை எடுத்து டேபிள் மேல வச்சிட்டு படியேறி ரூம் பார்க்க போனாரு.*
*லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவாவை எடுத்து லாட்ஜ்ல ரூம் தொடைக்கிற அம்மாகிட்ட குடுத்து போன மாசம் சம்பளத்துல பாக்கி வச்ச 500 ரூவா இந்தான்னாரு. அந்தம்மா அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பக்கத்துல இருந்த டீக்கடையில குடுத்து போன மாச டீ பாக்கி இந்தா வச்சிக்கோன்னு குடுத்தாங்க.*
*அந்த டீக்கடைக்காரரு அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பால் பண்ணையில முதலாளிக்கிட்ட குடுத்து போன மாச பால் பாக்கி இந்தாங்கன்னு சொன்னாரு. பால் பண்ணை முதலாளி அந்தப் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய் கால்நடை மருத்துவர்கிட்ட கொடுத்து, இந்தாங்க சார், கடந்தமாதம் மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தபோது, சில்லறை இல்லைன்னு 2000 ரூவா நோட்டு வாங்கிக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல, இந்தாங்கன்னு கொடுத்தார். அந்த நோட்டை எடுத்துக்கிட்டு லாட்ஜுக்கு வந்த மருத்துவர், கடந்தமாதம் தங்கி இருந்த ரூம் வாடகை பாக்கி இந்தாங்கன்னு 500 ரூவாவை குடுத்தார்.*
*லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவா நோட்டை மறுபடி டேபிள் மேல வச்சாரு. ரூம் பார்க்க வந்தவரு, எனக்கு எந்த ரூமும் பிடிக்கலை. நான் போறேன்னு 500 ரூவாவ எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.*
*இப்ப 500 ரூவா வந்த இடத்துக்கே போயிடுச்சி. ஆனா போற வழியில சம்பள பாக்கி, டீக்கடை பாக்கி, பால் பாக்கி,பால் பண்னை பாக்கி,மருத்துவர் பாக்கி, லாட்ஜ் வாடகை பாக்கி என எல்லாத்தையும் சரி பண்ணிட்டுப் போயிடுச்சி. யாருக்கும் இழப்பில்லாம.*
படித்தேன் ரசித்தேன் .👍

கோபிசெட்டிபாளையம் முதல் திருச்செந்தூர் கோவில் வரை செல்கிற TNSTC பேருந்தை


அன்பான பொதுமக்களே கோபிசெட்டிபாளையம் முதல் திருச்செந்தூர் கோவில் வரை செல்கிற TNSTC பேருந்தை பற்றி பார்ப்போம்.
இந்த பேருந்து கோபிசெட்டிபாளையம்
 டிப்போ சார்பாக இயக்கப்படுகிறது.
இந்த பேருந்து தினசரி இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துக்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. இந்த பேருந்து காலை சரியாக 8 மணிக்கு கோபிசெட்டிபாளையம்
 பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
இது குன்னத்தூர் , பெருமாநல்லூர் , திருப்பூர் புதிய பேருந்து நிலையம் , திண்டுக்கல் புறவழி சாலை வழியாக மதுரை மாட்டுத்தாவணி , தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் கோவில் வாசலுக்கு செல்கிறது. இதே மாதிரி மாலையில் சரியாக 8 மணிக்கு கோபிசெட்டிபாளையம்
பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
இது குன்னத்தூர் , பெருமாநல்லூர் , திருப்பூர் புதிய பேருந்து நிலையம் , திண்டுக்கல் புறவழி சாலை வழியாக மதுரை மாட்டுத்தாவணி தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் கோவில் வாசலுக்கு செல்கிறது. மறுமார்க்கமாக திருச்செந்தூர் கோவில் வாசல்பேருந்து நிலையத்திலிருந்து காலை சரியாக 7 மணிக்கு கோபிசெட்டிபாளையம்க்கு புறப்படும். இதே மாதிரி மாலையில் 7 மணிக்கும் ஒரு பேருந்து என தினசரி இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கு முன் பதிவு வசதி உள்ளது. ஆதலால் TNSTC app download பண்ணி முன் பதிவு செய்தும் பயணிக்கலாம். இந்த பேருந்து திருப்பூர் தடத்தில் செல்வதால் , மக்கள் ஆதரவு அதிகமாகக் இருக்கிறது. இந்த பேருந்து புறவழி சாலை வழியாக செல்ல கூடியதாகும்.
 இந்த பேருந்தின் பயண நேரம் 9:30hrs ஆகும் .கோபிசெட்டிபாளையம்
 முதல் திருச்செந்தூர் வரைபயண கட்டணம் ஒரு நபருக்கு₹328. பொதுமக்களே நம் பேருந்து வேகம் கட்டுப்பாட்டுடன் போனாலும் , பாதுகாப்போடு இயங்குகிறது. என்னைக்குமே நம் அரசு பேருந்துகள் தான் பாதுகாப்பு . அதனால் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளுங்கள்.

பனை மரத்தில் மொத்தம் 34

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. 
அவைகள்...

1. 🌴ஆண் பனை
2. 🌴பெண் பனை
3. 🌴கூந்தப்பனை
4. 🌴தாளிப்பனை
5. 🌴குமுதிப்பனை
6.🌴சாற்றுப்பனை
7. 🌴ஈச்சம்பனை
8. 🌴ஈழப்பனை
9. 🌴சீமைப்பனை
10. 🌴ஆதம்பனை
11. 🌴திப்பிலிப்பனை
12. 🌴உடலற்பனை
13. 🌴கிச்சிலிப்பனை
14. 🌴குடைப்பனை
15. 🌴இளம்பனை
16. 🌴கூறைப்பனை
17. 🌴இடுக்குப்பனை
18. 🌴தாதம்பனை
19. 🌴காந்தம்பனை
20. 🌴பாக்குப்பனை
21. 🌴ஈரம்பனை
22. 🌴சீனப்பனை
23. 🌴குண்டுப்பனை
24. 🌴அலாம்பனை
25. 🌴கொண்டைப்பனை
26. 🌴ஏரிலைப்பனை
27. 🌴ஏசறுப்பனை
28. 🌴காட்டுப்பனை
29. 🌴கதலிப்பனை
30. 🌴வலியப்பனை
31. 🌴வாதப்பனை
32. 🌴அலகுப்பனை
33. 🌴நிலப்பனை
34. 🌴சனம்பனை

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :
பனை உணவுப் பொருட்கள் :

🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி
🌴பனங்கிழங்கு
🌴ஒடியல்
🌴ஒடியல் புட்டு
🌴ஒடியல் கூழ்
🌴 புழுக்கொடியல்
🌴முதிர்ந்த ஓலை
🌴 பனை குருத்து

உணவுப்பொருள் அல்லாதவை :

🌴பனை ஓலைச் சுவடிகள்
🌴பனை ஓலைத் தொப்பி
🌴குருத்தோலை

வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் :

🌴பனையோலை
🌴நீற்றுப் பெட்டி
🌴கடகம்
🌴பனைப்பாய்
🌴கூரை வேய்தல்
🌴வேலியடைத்தல்
🌴பனைப்பாய்
🌴பாயின் பின்னல்
🌴பனையோலைப் பெட்டி

விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் :

🌴கிணற்றுப் பட்டை
🌴எரு
🌴துலா
அலங்காரப் பொருட்கள் :
🌴பனம் மட்டை
🌴வேலியடைத்தல்
🌴நார்ப் பொருட்கள்
🌴தட்டிகள் பின்னல்

வேறு பயன்பாடுகள் :

🌴கங்குமட்டை
🌴தும்புப் பொருட்கள்
🌴விறகு
🌴மரம்

கட்டிடப்பொருட்கள் :

🌴தளபாடங்கள்
🌴பனம் விதை
🌴எரிபொருள்

கிடைக்கும் பனை உணவுப் பொருட்கள் :

🌴 பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுகருப்பட்டி
🌴சுக்கு கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சக்கரை
🌴 பனங்கிழங்கு மாவு
🌴 பனங்கிழங்கு சத்துமாவு
🌴பதநீர்
🌴பனம்பழம் ஜுஸ்
🌴பனை விதை
🌴பனங்கன்று
🌴பனங்கிழங்கு
🌴பனைப்பாய்
🌴புழுக்கொடியல்
🌴ஓடியல்

🌴நாம் ஒவ்வொருவரும் இரு பனை விதைகளை நடவு செய்தால் வரும் காலம் எப்படி இருக்கும் என்று யூகித்துப் பாருங்கள் √

Wednesday, January 1, 2025

தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு...

 

தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு...

ஆசியாவிலேயே அதிகமாக காற்று வீசும் இடம் எந்த நேரமும் 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிக்கொண்டே இருக்கும்..
கம்பம் மெட்டு வழியாகவும் இந்த இடத்திற்கு செல்லலாம் அல்லது குமுளிக்கு சென்று குமுளியில் இருந்து மூணாறு செல்லும் சாலை வழியாக நெடுமங்கண்டம் வழியாகவும் இந்த இடத்திற்கு வரலாம்...
உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் பட கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோ ஆசியாவில்லையே எனக்குப் பிடித்த சுற்றுலா தளங்களில் இந்த இடம் முதன்மையானது என்று குறிப்பிட்டுள்ளார்...
இந்த இடத்திற்கு மேலும் அழகு தருவது மலை உச்சியில் உள்ள குறவன் குறத்தி சிலை தான்..
வாருங்கள் ஒரு முறையாவது சென்று வருவோம்.


அழகிய சீத்தார்குண்டு அருவியும்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்...

கண்ணுக்கும் நெஞ்சிக்கும் குளிர்ச்சி தரும் அழகிய மாவட்டம் பாலக்காடு மாவட்டம்...
கேரளா மாநிலத்தின் மிக அழகான அணை மிகப்பெரிய பூங்காவுடன் கூடிய அணை மலப்புழா அணை...
அணைக்கு அருகில் பாலக்காடு கோட்டை மிகவும் பிரம்மாண்டமான கோட்டை...
கேரளாவின் மிக அழகிய கிராமம் என்றால் அது கொல்லங்கோடு கிராமம் தான்...
கொல்லங்கோடு கிராமத்தின் அழகிய வயல்வெளிகள் முடிந்தவுடன் தொடங்கும் மலைப்பகுதிகள் அதுவே நெல்லியம்பதி மலைகள்...
நெல்லியாம்பதி மலையில்தான் அதிக காபி தோட்டங்கள் உள்ளது..
அழகிய சீத்தார்குண்டு அருவியும் உள்ளது

மகிழ்ச்சி என்பது என்ன...?

மகிழ்ச்சி என்பது என்ன...?

பிரபல துருக்கியக் கவிஞர் ஒருமுறை தனது ஓவிய நண்பரான அபிதின் தினோ என்பவரிடம் 'மகிழ்ச்சி' என்ற ஓவியத்தை உருவாக்கச் சொன்னார்.
ஒரு குடும்பம் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை ஓவியமாக ஓவியர் சித்தரித்தார்.
கட்டிலின் ஒரு கால் உடைந்து, இரண்டு செங்கற்களால் தாங்கப்பட்டு, பாழடைந்த அவர்களது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகிக் கொண்டிருந்தது.
ஒரு குடை அந்த மழை நீரை தடுத்துக்கொண்டிருந்தது. அந்த குடும்பத்தின் நாய் கூட படுக்கையில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது.
இந்த ஓவியம் அழியாததாக உலக புகழ் பெற்றதாக மாறியது.
இந்த ஓவியத்தை ஆழமாகப் பார்த்து, உண்மையில் மகிழ்ச்சி என்றால் என்ன என்று சிந்தியுங்கள் நண்பர்களே...
இந்த படத்தைப் பார்த்த பிறகு, மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் இல்லாதது அல்ல, கடினமான சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டு அமைதியைக் காண்பது என்று நான் நம்புகிறேன்.
சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், உங்களிடம் இருப்பவற்றில் நல்லதைப் பார்க்க முயற்சி செய்யுங்கள்.
இருப்பதை சரியாக பயன்படுத்தினால், நினைப்பது தானாக வரும்.
நிம்மதி என்பது புற விஷயங்களில் அல்ல. அக விஷயங்களில் உள்ளது. உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி வருத்தப்படுவதை நிறுத்துங்கள்.
உங்கள் இதயம் கனமாக இருக்கும் போதெல்லாம், இந்த ஓவியத்தை நினைவில் கொள்ளுங்கள்.
எப்பொழுதும் திருப்தியாகவும் நிம்மதியாகவும் தூங்குங்கள்

அழகு சுந்தரா…

 

==================================

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்…
==================================
கயிலையில் அலங்கார மண்டபத்தில் ஒரு முறை சிவபெருமான் தன்னை கண்ணாடியில் கண்டார்.
ஒரு கணம் அவர் அழகில் அவரே சொக்கிப் போய்விட்டார். நம்மில் சிலர் கண்ணாடியில் தெரியும் நம் உருவத்தை பார்த்து பேசுவதில்லையா?
அது போல கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை நோக்கி, “அழகு சுந்தரா… கொஞ்சம் வெளியே வா!” என்று அழைத்தார்.
அழைப்பது யார்?
காலத்தையே நிர்ணயிப்பவன் அல்லவா?
அவரது வாக்கினின்று வெளிவருவது என்ன சாதாரண வார்த்தைகளா?
வேதங்களைவிட புனிதமானவை ஆயிற்றே..!
எனவே கண்ணாடியில் பார்த்து ரசித்த உருவம், உடனே நேரில் வந்துவிட்டது.
நிழல் நிஜமாகிவிட்டது….
பரமன் வாக்கிற்கு உள்ள வலிமை!!
தன்னுடைய பிம்பத்திலிருந்து வந்த அந்த உருவத்திற்கு ‘சுந்தரர்’ என்று பெயரிட்டார்.
பெயர் சூட்டினால் போதுமா?
ஏதாவது பணி தரவேண்டுமல்லவா?
தன்னுடைய திருநீற்று பேழையை தாங்கும் பணியை கொடுத்தார்.
(நிழலுக்கு கிடைச்ச பாக்கியத்தை பார்த்தீங்களா? ஹூம்… நிழலாய் இருந்தாலும் நல்லோர் நிழலாய் இருக்கவேண்டும்!)
எப்போதெல்லாம் இறைவன் திருநீறு பூசவேண்டும் என்று கருதுகிறானோ அப்போதெல்லாம் திருநீறு கொண்டு போகும் பணியை செய்து வந்தார் நிழலில் இருந்து உருவான ‘சுந்தரர்’. அதாவது ஈசனின் நேரடி உதவியாளர்.
நந்திக்கும் கிடைக்காத பேறு இது.
தேவர்கள் பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் உருவானது அல்லவா?
அந்த விஷத்தின் வீரியத்தால் பலரது பார்வை பாதிக்கப்பட்டது. அனைவரும் சிதறி ஓடினர். கடைசியில் அவர்கள் தஞ்சமடைந்த இடம் கயிலை. ஈசன் உடனே தனது முதன்மைத் தொண்டர் சுந்தரரைத் அந்த விஷத்தை எடுத்து வரச் சொன்னார். சுந்தரரும் சென்று அந்த விஷத்தை திரட்டி ஒரு சிறிய நெல்லிக்கனி அளவாக ஆக்கினார்.
அதை கொண்டு வந்து ஈசனிடம் ஒப்படைத்தார். ஈசன், இதை வெளியே விட்டுவைத்தால் ஆபத்து என்று கருதி உடனே அதை தான் வாங்கி விழுங்கிவிட்டார். இதைக் கண்டு அன்னை பதறிப் போய, விஷம் உள்ளே இறங்காதவாறு, தொண்டையில் கை வைத்துப் பிடித்தாள். விஷம் அப்படியே நின்றது.
அப்போது முதல் ஈசனுக்கு திருநீலகண்டம் என்று பெயர் ஏற்பட்டது.
விஷத்தை பார்த்தோர், அதை நுகர்ந்தோர், என அனைவரும் பாதிக்கப்பட்ட நிலையில், சுந்தரருக்கு மட்டும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம், அவர் தினசரி திருநீற்றுப் பேழையை தாங்கி வந்ததால் திருநீற்றுக்கு விஷத்தை முறிக்கும் சக்தி உண்டு.
விஷத்தை தாங்கி வந்ததால் சுந்தரருக்கு ஆலால சுந்தரர் என்ற திருநாமம் உண்டாயிற்று.
சரி… இப்படி அணுக்கத் தொண்டராய் இருந்தவர் எப்படி பூவுலகில் பிறந்தார்?
கயிலையில் மிகப் பெரிய நந்தவனம் ஒன்று உண்டு. சிவபூஜைக்கு சிவகணங்கள் அங்கு தான் பூக்களை பறிப்பது வழக்கம். பார்வதி தேவியின் பணிப்பெண்களும் அங்கு தான் பூக்களை பறிப்பார்கள்.
ஒருமுறை சுந்தரர் அந்த நந்தவனத்தை கடந்து செல்ல முற்பட்டபோது, அப்போது அங்கு பூக்களை பறிக்க வந்த பார்வதி தேவியின் பணிப்பெண்கள் கமலினி, அனந்திதை என்ற இருவரையும் பார்த்தார். ஒரு இனம் புரியாத பரவசம் ஏற்பட்டது. அவர்கள் பேரழகில் மயங்கினார். அவர்களும் ஆலால சுந்தரரின் அழகில் மயங்கினர்.
இது இறைவனுக்கு உடனே தெரிந்துபோனது.
“சுந்தரா… நீ புவலகில் சென்று பிறந்து எல்லாவித இன்பங்களையும் துய்த்துப் பின்னர் மீண்டும் கயிலை வந்தால் போதும்” என்றார்.
சுந்தரர் கலங்கிப் போனார்… “தேவ தேவா… தங்களை விட்டு இமைப் பொழுதும் என்னால் பிரிந்திருக்க முடியாதே… என்னை மன்னித்து நல்லருள் செய்யுங்கள் சுவாமி” என்று பல்வேறு விதமாக மன்றாடினார்.
“கவலை வேண்டாம்… உரிய நேரம் வரும்போது நாம் உன்னை தடுத்தாட்கொள்வோம்” என்று திருவாய் மலர்ந்தருளினார் திருநீலகண்டர்.
பூலோகப் பிறப்பு
ஈசனின் ஆணையின்படி, பூவுலகில் தமிழகத்தில் திருநாவலூர் என்னும் தலத்தில் சடையனார்-இசைஞானியார் என்னும் சிவநெறி வழுவாமல் வாழ்ந்து வந்த தம்பதியர்க்கு மகனாக பிறந்தார் சுந்தரர்.
திருவாரூரில் உள்ள ஈசன் மீது அக்குடும்பத்தினர் பெரும் பக்தி கொண்டிருந்ததால் தங்கள் மகவுக்கு நம்பியாரூரர் என்று பெயரிட்டனர்.
பாலகனாயிருந்த நம்பியாரூரரின் அழகையும் தேஜஸையும் கண்டு வியந்த நரசிங்க முனையர் என்னும் குறுநில மன்னன், “இக்குழந்தை சம்பந்தரின் மறுபிறப்போ?” என்று எண்ணி வியந்து, நம்பியாரூரரின் பெற்றோரான சடையனார் – இசைஞானியார் இருவரின் அனுமதியையும் பெற்று தனது அரண்மனைக்கு கொண்டு சென்று, கல்வியும் ஞானமும் புகட்டி செல்லப் பிள்ளை போல வளர்க்கலானார்.
உரிய பருவம் வந்ததும் அவனுக்கு உபநயனம் செய்வித்து பல்விரு வித்தைகளையும் பயிற்றுவித்தார்.
அழகின் சிகரமாய் திகழ்ந்தார் இளைஞர் நம்பியாரூரர். அவருக்கு “நான்… நீ…” அனைவரும் போட்டிபோட்டு பெண்கொடுக்க முன்வந்தனர். புத்தூரைச் சேர்ந்த சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் மகளுக்கு நம்பியாரூரை திருமணம் செய்விப்பது என்று முடிவு செய்து, திருமணம் நிச்சயத்தினர்.
சுந்தரருக்காக ஏற்கனவே கமலினியும் அனந்திதையும் பரவை நாச்சியாராகவும், சங்கிலி நாச்சியாராகவும் பிறந்து காத்திருக்க, இவர் இப்பெண்ணை மணந்துகொண்டால் என்னாவது? மேலும் உரிய நேரத்தில் தான் தடுத்தாட்கொள்வோம் என்று ஈசன், சுந்தரரிடம் கயிலையில் வாக்கு கொடுத்திருந்தபடியால், இறைவன் ஒரு கிழவரைப் போல வேடந்தாங்கி மணக்கோலத்தில் மங்கல நாண் கட்ட தயாராக இருந்த சுந்தரரிடம் வந்து நின்றார்.
“நிறுத்து… நம்மிடையே ஒரு வழக்கிருக்கிறது.
அதைத் தீர்த்த பிறகு உன் திருமணத்தை வைத்துக்கொள்” என்றார்.
பின்னர் சபையோரிடம், சுந்தரரின் பாட்டன், “நானும் எனது சந்ததியினரும் உனக்கு அடிமை” என்று எழுதி வைத்துச் சென்ற ஓலையை காண்பித்து சுந்தரர் தன் அனுமதியின்றி திருனமணம் செய்ய இயலாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
திருமணம் நின்றது. வெகுண்டெழுந்த சுந்தரர், அவர் கையிலிருந்த ஓலையை பிடுங்கி கசக்கி எறிந்து “போடா பைத்தியக்காரா” என்றார்.
“இது படி ஓலை தான். மூல ஓலை என்னிடம் பத்திரமாக இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பஞ்சாயத்து கூடி, சுந்தரர் முதியவருக்கு அடிமை என்றும் அவர் சொல்படியே கேட்கவேண்டும் என்று தீர்ப்பானது.
தொடர்ந்து முதியவர் சுந்தரரை அழைத்து திருவெண்ணெய்நல்லூர் கோவிலுக்குள் புகுந்து பின்னர் மாயமாகிப் போனார். சித்தம் கலங்கிய சுந்தரர் செய்வதறியாது திகைத்து நின்று பொது, சிவபெருமான் ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு காட்சி தந்து, சுந்தரருக்கு கயிலையில் நடந்த அனைத்தையும் நினைவூட்டி, உன் அவதார நோக்கத்தை நிறைவேற்றவே நாம் உன்னை தடுத்தாட்கொண்டோம்.
நீ நம்மோடு வன்சொற்களைச் சொல்லி வன்றொண்டர் என்கிற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினோடு செய்யத்தக்க அருச்சனையாவது பாடலேயாம்.
ஆதலால், நம்மேலே தமிழ்ப்பாட்டுக்களைப் பாடு” என்று அருளிச்செய்ய சுந்தரர் அவரை ஏச பயன்படுத்திய “பித்தா என்ற வார்த்தையைக் கொண்டே முதல் பாடலை பாடியருளினார்.
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்
மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால்
வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே
சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ‘திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101 மட்டுமே.
சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
“நீள நினைந்தடியேன்” என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம். இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.
சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன், பொருள், மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார்.
திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்….’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்தார். இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
சிவ சிவ

புலஸ்தியர் மகரிஷியால்

அகத்தியர்- ஓரு அதிசயம்! அபூர்வம்! ஆச்சர்யம்!

காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா. அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது, அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால், அவர்களுக்கு அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார்.
அபூர்வமான இந்தப் படத்தில் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உள்ளது.
1. அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு ‘தேவதாரு மரம்’.
2. அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம், போன்ற அனைத்தும் ‘திருத்தோடகன்’ என்னும் பொற்கொல்லரால் பிரத்தியேகமாக அகத்தியருக்காக செய்து கொடுக்கப்பட்டது.
3. அகத்தியர் அணிந்திருக்கும் பூணூலானது, விபூதி கலந்த ஒரு நிறத்தில் இருக்கும். இதன் பெயர் ‘திரிபூரணம்’ என்பதாகும். இது கௌதம முனிவரால் கொடுக்கப்பட்டது.
4. அகத்தியரும், லோபமுத்திரா அன்னையும் அணிந்திருக்கும் பூமாலையானது வன்னி, வில்வம், துருக்கத்தி, செம்பாலை ஆகிய 4 விதமான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையாகும். இந்த மாலையை தொடுத்துக் கொடுத்தவர் லோபமுத்ரா அன்னையின் தோழியான ‘பர்வதினி’ என்பவர்.
5. லோபமுத்ரா தேவியானவர் ஶ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மிகப் பெரிய சக்தி உபாசகி. அம்பாளின் மிகப் பெரிய சிஷ்யையாக லோபமுத்ரா தேவியைப் பற்றி ‘லலிதா திரிசதை’ யில் கூறப்பட்டுள்ளது. ஶ்ரீ வித்யா உபாசனை செய்பவர்கள் சிவப்பு நிற பட்டு உடுத்துவர். அதனால் சிவப்பு நிற பட்டு தான் லோபமுத்ரா அன்னைக்கு திருமண ஆடையாக நெய்யப்பட்டது.
7. லோபமுத்ரா அன்னை அம்பாளையே அடைய வேண்டி நின்றதால் ‘லோபா’ என்று பெயர் வந்தது. ‘முத்திரா’ என்றால் ஆனந்தத்தைப் பெற்றவள் என்று பொருள்.
8. லோபமுத்ரா அன்னை காலில் அணிந்திருக்கும் மெட்டியானது ‘சரளி’ எனப்படும் ஒரு அபூர்வ வகையான வைரக்கல்லால் ஆன அணிகலானாகும். இதைக் கொடுத்ததே அகத்தியர் தான்.
9.லோபமுத்ரா அன்னையின் அருகில் உள்ள மயிலானது, அவரது தோழியான ‘சேதத்தரணி’ என்பவராவார்.
10. அகத்தியர் அருகில் உள்ள மான், அவரின் முதன்மைச் சீடரான புலஸ்தியர் மகரிஷியே ஆவார்.
11. லோபமுத்ரா அன்னையின் தோளில் அமர்ந்திருக்கும் கிளியானது மிகவும் விசேஷமானது. அன்னையினால் கண்டறியப்பட்ட மகாவித்தை ஒன்று உண்டு. அது ‘ஹாதி வித்தை’. அந்த வித்தைக்குரிய தேவியே லோபமுத்திரை தான். அந்த வித்தையை உபாசனை செய்து யோகநிலையில் வந்த ஒரு பெண் தான் ‘மயூஷினி’. அவரே கிளி உருவத்தில் அமர்ந்திருக்கிறார்.
12. லோபமுத்ரா அன்னையின் கையில் உள்ளது ‘அமிர்தக்கலசம்’. இது பரமேஸ்வரனால் கொடுக்கப்பட்டது.
13. அன்னையின் கூந்தலில் ‘பொற்காந்தல்’ எனப்படும் ஒரு மலர் சூடியிருக்கிறார்கள்.
இவ்வளவு விசேஷங்கள் நிறைந்த இந்த அபூர்வ திருமணக் காட்சியானது பொதிகை மலையில் உள்ள வடகிழக்கு பகுதியில் இருக்கும் ‘பூமண் மேடு’ என்னும் இடத்தில் தான் நிகழ்ந்தது. இந்த அரிய நிகழ்வுகள் அனைத்தும் அகத்தியரின் தலைமைச் சித்தரான புலஸ்தியர் மகரிஷியால் கூறப்பட்டது.
இவருக்கு பிடித்த பூ மல்லிப்பூ பிரசாதம் தயிர் சாதம் ஈம் என்ற பிஜட்சார மந்திரம் இவருடையது. ஓம் அகத்திசாய நமஹ நாமம் சொன்னால் அருள் புரிவார்.

Tuesday, December 31, 2024

ரமண_மகரிஷி

*#ரமண_மகரிஷி_ஜெயந்தி*

ஸ்ரீ ரமணர் மதுரைக்குக் கிழக்கே முப்பது மைல் தொலைவிலுள்ள திருச்சுழி என்னும் கிராமத்தில் 1879-ஆம் ஆண்டு #டிசம்பர்_30 ஆம் நாள் பிறந்தார்.பெற்றோர்கள் சுந்தரமய்யர் அழகம்மை ஆவர்.ரமணருக்கு பெற்றோர் வைத்த பெயர் #வேங்கட_ராமன்.அவருக்கு நாகசாமி என்ற மூத்த சகோதரரும் நாக சுந்தரம் என்ற இளைய சகோதரரும் உண்டு.அலமேலு இளைய சகோதரி.
திருச்சுழி பஞ்சாயத்துத் தலைவராயிருந்த சுந்தரமய்யர் இறந்த போது ரமணருக்கு வயது பதினொன்று.தந்தையின் மரணம் வாழ்வு,சாவு பற்றிய உண்மையை அவருக்கு உணர்த்தியது.ரமணருக்கு விளையாட்டில் இருந்த அளவு விருப்பம் படிப்பில் இல்லாமல் போனது. தந்தையின் மறைவுக்குப் பிறகு சுந்தரமய்யரின் சகோதரர்களான சுப்பையரும், நெல்லையப்பரும் அக்குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.ரமணர் மதுரையில் இருந்த சித்தப்பா சுப்பையர் வீட்டில் தங்கிப் படித்தார்.
1896 ஜூலை மாதத்தில் ஒரு நாள் வீட்டு மாடியில் இருந்த போது அவரை மரண பயம் கவ்விக் கொண்டது அவர் முழு உணர்வோடு இருந்தாலும் உடல் பிணம் போல் விறைத்துப் போனது.அவருள் ‘நான் என்பது என்ன?’என்ற கேள்வி எழுந்தது.உடம்பின் செய்கையில் இருந்து வேறுபட்டு இயங்கும் ஓர் ஆற்றல் அது என்று அவர் உணர்ந்தார்.அந்த உணர்வு உறுதிப்பட அவருடைய மரணபயம் நீங்கியது.அந்நிகழ்ச்சிக்குப் பிறகு சாதாரண வாழ்க்கை என்பது அவருக்கு இயலாது போயிற்று.அடிக்கடி அவருக்கு சமாதி அனுபவம் ஏற்பட்டது.
ஒரு நாள் சுப்பையரைப் பார்க்க வந்த நண்பரொருவர் தாம் #திருவண்ணாமலை சென்று வந்ததையும் #அருணாசலேஸ்வரர் மகிமையையும் கூறக் கேட்டார் ரமணர். அப்போது மகரிஷி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.அந்த நண்பர் சொன்னதைக் கேட்டதிலிருந்து அவருக்குப் படிப்பில் நாட்டம் குறைந்தது.ஸ்ரீரமணருக்கு மனம் முழுவதும் அருணாச்சல நினைவாயிருந்தது.திருவண்ணாமலையிலிருந்து தமக்கு அழைப்பு வந்ததாய் அவருக்குத் தோன்றியது.வீட்டில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றார்.‘நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவரது உத்தரவின் பேரில் கிளம்பிவிட்டேன்.இது நல்ல காரியத்தில் பிரவேசித்து இருக்கிறது.யாரும் இது குறித்து வருந்த வேண்டாம் என்பதே அக்கடிதத்தில் இருந்த செய்தி.தடைகள் பல கடந்து 1896 செப்டம்பர் முதலாம் நாள் அவர் திருவண்ணாமலையை அடைந்தார்.நேராக கோவில் கருவறைக்குச் சென்று ‘அப்பா, நான் வந்து விட்டேன் என்று தன் வருகையை அறிவித்தார்.
சில மாதங்கள் உடலை மறந்து இதயத்தில் மூழ்கி இதய ஆனந்தத்தில் திளைத்தார்.முழு மவுனத்தில் இருந்தார்.அவ்வப்போது யாரேனும் ஒரு கவளம் உணவை அவருடைய வாயில் திணிப்பார்கள்.அவர் உணவிட்டவரையும் அறியார் தாம் உண்டதையும் அறியார்.ரமணரைத் தரிசிக்க பக்தர்கள் திரள் திரளாய் வந்தனர்.அது அவருடைய தியானத்துக்கு இடையூறாக இருந்தது.அவர் பாதாள லிங்கேசுவரர் கோயிலுக்குள் இருந்த குகையில் தியானத்தைத் தொடர்ந்தார்.சேஷாத்ரி சுவாமிகள் மூலம் அவரது பெருமை மேலும் பரவலாயிற்று.மீனாட்சி அம்மாள் என்கிற பெண்மணி அவருக்குத் தொண்டு செய்து வந்தார்.பிற்பாடு ‘குருமூர்த்தம்’, ‘மாந்தோப்பு’ என்று இடம் மாறி நிஷ்டையில் இருந்தார்.பல குன்றுகளிலும், குகைகளிலும் தியானம் செய்தார்.
ரமணரின் இருப்பிடம் தேடி அவரது தாயாரும், மூத்த சகோதரரும் அவரைக் காண வந்தனர்.மகான் நிலையில் இருந்தவரைக் கண்டு வியந்தனர்.தங்களுடன் ஊருக்கு வரும்படி அழைத்தனர்.ஆனால் ரமணர் அவர்களுடைய வேண்டுகோளை மறுத்துவிட்டார்.கணபதி முனிவர்,சிவப்பிரகாசம் பிள்ளை போன்றோர் ரமணருக்கு நெருக்கமாயினர்.அருணாச்சல பஞ்சரத்னம்,உபதேசசாரம்,அட்சரமணி மாலை போன்ற பல நூல்களை ரமணர் இயற்றினார்.அவர் மிகவும் எளிமையானவர்.பின்னாளில் ஆசிரமம் அமைத்து வசித்தபோது அங்கே பக்தர்களுக்கு உணவு சமைக்கும் வேலையிலும் உதவுவார்.அவர் சிக்கனமானவர்.சிறு காகிதத் துண்டையும் தூக்கி எறியாமல் ஏதாவது குறிப்புகள் எழுதப் பயன்படுத்துவார்.பறவைகளிடத்தும் விலங்குகளிடத்தும் அன்பு காட்டிய ரமணரின் புகழ் எங்கும் பரவியது.வெளிநாட்டவர் பலரும் அவரைத் தரிசிக்க வந்தார்கள்.உள்நாட்டிலும் சிலர் அவருடனேயே சீடர்களாய் தங்கிவிட்டனர்.அவர்கள் எல்லாருடைய சௌகரியத்துக்காகவும் பின் ஆசிரமம் அமைக்கப்பட்டது.
ரமணருடைய மூத்த சகோதரர் இறந்த பின் அண்ணியாரும் காலமானார். இளைய சகோதரி துறவறம் மேற்கொண்டார். இளையவர் நாக சுந்தரத்தின் மனைவியும் மரித்தார்.அதனால் ரமணரின் தாயாரும் இளைய சகோதரரும் திருவண்ணாமலைக்கே வந்து விட்டனர்.இளையவர் ‘நிரஞ்ஜனானந்த சுவாமிகள்’ என்கிற தீட்சா நாமத்துடன் (ரமணரால் தீட்சையளிக்கப்பெற்று) ஆசிரமப் பொறுப்பேற்றார்.1922 மே மாதம் உடல் நலக் குறைவுற்று தாயார் இறந்த போது ரமணர் அவருக்கு ஹஸ்த தீட்சை அளித்து பிறப்பற்ற முக்தி கிடைக்கச் செய்தார்.ரமணர் ஆசிரமம் பெரிய அளவில் வளர்ச்சி கண்டது.அவருடைய நூல்களை வெளியிட்டு விற்பனை செய்ய ஆசிரமத்தில் ஒரு தனிப் பிரிவே இயங்கி வந்தது.
ரமணருக்கு எழுபது வயதானபோது உடம்பில் கட்டிகள் தோன்றின.அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டது.அறுவை சிகிச்சை செய்தும் தொந்தரவு நீங்கிய பாடில்லை.அவருடைய எழுபதாவது வயதைக் குறித்து ரமண ஜெயந்தி வெகு விமரிசையாய் கொண்டாடப்பட்டது.சுவாமிகள் தங்களை விட்டுப் போவதை எண்ணி பக்தர்கள் பெருந்துயரத்துக்குள்ளாயினர்.அவர் சொன்னார் ‘நான் எங்கே போவேன் இங்குதான் இருப்பேன் என்று.அன்று 16.4.1950 வெள்ளிக்கிழமை இரவு மணி 8.47.பகவான் ரமணர் மகா சமாதி அடைந்தார்.அவர் மரணம் அடைந்த அன்று வானில் ஒளி மிக்க விண்மீனாய் அவர் ஆன்மா ஊர்ந்து சென்றது.அருணாசலத்தின் உச்சியை அடைந்து மறைந்தது.அன்று ஆயிரக்கணக்கானவர்கள் அந்த ஜோதியைக் கண்டனர்.இன்றும் ஒவ்வோர் இதயத்திலும் ஒளிவிடும் விளக்காய் அவர் விளங்குகிறார்.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...