Saturday, March 8, 2025

அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி (செட்டியாபத்து) பெரிய சுவாமி குரு இருக்க பயமேன்

 

அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி

(செட்டியாபத்து)
🦚🙏🏼🦚 பெரிய சுவாமி 🐅🙏🏽🐅
🙏🏻குரு இருக்க பயமேன்🙏🏾
🪻🙏🪷 ஹரி ஓம் ராமானுஜா யா 🌹🙏🏿🌻

தமிழகத்தின் 'கடைசி கிராமம்' என்பது இந்த 'எல்லப்பெட்டி

 

கிளாசிக் எல்லப்பட்டி - சூரியன் இரண்டு மாநிலங்களில் உதிக்கும் இடம்
💚தமிழகத்தின் 'கடைசி கிராமம்' என்பது இந்த 'எல்லப்பெட்டி', மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் கேரளாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள எல்லையில் ஆமைந்துள்ளது
🌧️மூடுபனி மற்றும் மென்மையான சரால் குளிரால் மூடப்பட்டிருக்கும், யெல்லப்பட்டி மூணாரின் கிழக்கே, சற்று விலகி அமைந்துள்ளது. மலைகள் மற்றும் ஆச்சரியமான சூரிய உதயங்களின் தாயகம் இந்த இடம்,
💚மூணாறில் உள்ள புகழ்பெற்ற டாப் ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் யெல்லப்பெட்டி மலைகள் உள்ளன - மூணாறில் உள்ள மிக உயரமான பகுதி, மூணாறு-கொடைக்கானல் பாதையில். மலைகளுக்கு 35 கிலோமீட்டர் தூரத்தை தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குண்டலா மற்றும் மாட்டுப்பெட்டி அணைகளைக் கடந்து ஒரு மணி நேர பயணத்தில் கடக்க முடியும்.
💚எல்லப்பெட்டி கிராமம் பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் அழகிய எஸ்டேட் பகுதி ஆகும்.,
💛பாதை கேரளாவில் இருந்தாலும், டாப் ஸ்டேஷன் பகுதிகள் தமிழகத்தை சார்ந்தவையாகும்.,
🍓ஸ்ட்டாப்பேரி பழங்கள், அருவிகள், தேயிலை தோட்டங்கள், காடுகள், பசுமை மலைகள், முகாம்கள் ஆகியவை சூழ்ந்துள்ளது,
🚜அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை, மழை நேரங்களில் இன்னும் வசீகர அழகை பெற்றுவிடுகிறது இந்த எல்லபட்டி, டாப் ஸ்டேஷன் பகுதிகள்.,
🚌ஆச்சர்யங்களை நோக்கிய பயணங்கள் தொடரும்...

Dady-அப்பா

 




ஒரு நண்பனின் வாழ்வில்
மறக்க முடியாத நினைவுகள் 💐
அப்பாவின் அன்பையும் அக்கறையையும் நாம் உணர நீண்ட காலங்கள் எடுக்கின்றது.
82 வயதைக் கடந்து
எனக்காக காத்திருந்த என் அப்பா
நீ சாப்பிடுப்பா என்று மெல்லிய குரலில்
சொன்னது அப்பா..
நான் உன்னை பார்த்து விட்டேன்
இனிமேல் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை... என்று சொல்லும் போது
கண்களில் கண்ணீர்..😭😭😭😭
தங்கியிருந்த தாயின் கருவறை
புனிதமானது அதே போல நாம்
விழும் போது தாங்கிக் கொண்ட
அப்பாவின் தோள்களும்
புனிதமானது.
பலரது வாழ்வில் கடைசி
வரை விளங்கிக்கொள்ள
முடியாத புத்தகம் அப்பா..!
தாங்கிப் பிடிக்க
அம்மாவும் தூக்கி
நிறுத்த அப்பாவும்
இருக்கும் வரை யாரும்
வீழ்ந்தது இல்லை.
பிள்ளைகள் கேட்கும்
பொருளை வாங்கிக்
கொடுப்பதில் தான்
அப்பாவின் சந்தோசம்
நிறைந்திருக்கின்றது.
குழந்தையாக இருந்த
பொழுது உன்னை இறுக
கட்டியணைத்த படி உன்
அரவணைப்பிலும்
பாதுகாப்பிலும் வாழ்ந்த
நாட்கள் மீண்டும் வராத
என்று என் இதயம்
ஏங்குகிறது அப்பா.
தன் தலைக்கு மேலே
உட்கார வைத்து நம்மை
அழகு பார்க்கும் அப்பாவை
நாம் ஒரு போதும் தலை குனிய
வைத்து விடக் கூடாது.
என்னை தூக்கி அணைக்க
முடியாமல் நீ தவித்த
தவிப்பை உன் கண்கள்
எனக்கு காட்டிக்
கொடுக்கிறது அப்பா.
நான் ரசித்த அழகிய
இசை என் அப்பாவின்
இதயத்துடிப்பு.
தன் மூச்சு உள்ள வரை
எனக்காக நேசிப்பவர்…
எனக்காக தான்
சுவாசிப்பவர் என்
அப்பா மட்டும்..!
அப்பா நமக்கு
என்னவெல்லாம் செய்தார்
என்பதை நாம் உணர்வதற்கு
வாழ்க்கையில் பல
வருடங்களை கடக்க
வேண்டி இருக்கின்றது.
அப்பாவை தவிர நமக்கு
நல்ல நடத்தையை
வாழ்க்கையில் வேறு
எந்த ஆசானாலும்
கற்பிக்க முடியாது.
அன்பை வார்த்தையில்
வெளிப்படுத்தாமல் தன்
உழைப்பு மூலம்
உணர்த்தும் ஒரே உறவு
அப்பா மட்டும் தான்.
தாய் நமக்காக
கஷ்டப்படுவதை நம்மால்
கண்டு பிடித்து விட முடியும்.
ஆனால் தந்தை நமக்காக
கஷ்டப்பட்டதை மற்றவர்கள்
சொல்லித் தான் பிற்காலத்தில்
தெரிய வரும்.
உண்மையாக உழைத்து
சொந்த காலில் நிற்கும்
பொழுது தான் புரிகிறது.
இத்தனை நாள் தன்
தோளில் சுமப்பதற்கு
எவ்வளவு வலிகளை
கடந்திருப்பார்
என்று “அப்பா”.
அம்மாவின் அன்பு கடல்
அலை போல வெளிபட்டுக்
கொண்டே இருக்கும்..
ஆனால் அப்பாவின் அன்பு
நடுக்க கடல் போன்றது
வெளியே தெரியாது
ஆனால் ஆழம் அதிகம்.
அப்பாவின் அன்பை
விட சிறந்த அன்பு இந்த
உலகில் எதுவும் கிடையாது.
கடவுளுக்கும் அப்பாவிற்கும்
சிறு வேறுபாடு தான்
கண்ணுக்கு தெரியாதவர்
கடவுள்.. கண்ணுக்கு
தெரிந்தும் பலராலும்
கடவுள் என புரிந்து
கொள்ளப்படாதவர்
“அப்பா”.
செதுக்கப்பட்ட ஒவ்வொரு
சிலையும் கடவுள் என்றால்
எனக்கு அப்பாவும் கடவுள்
தான். அடித்தாலும் அன்பால்
அணைக்கும் கடவுள் அப்பா.
சில நேரம் பல வலிகளை
மறக்க அப்பாவின்
வார்த்தைகள் மட்டும்
போதுமாக இருக்கின்றது.
நாம் தவறான பாதையில்
சென்றால் ஓடி வந்து
நம்மை தடுக்கும் முதலாவது
உறவு அப்பாவாக தான்
இருக்க முடியும்…!
இன்னொரு ஜென்மம் ஒன்று இருந்தால்
உங்களுக்கு மகனான பிறக்க வேண்டும்
நீங்கள் உயிரோடு இருக்கும் போதே...
தங்களின் ஆசை நிறைவேற்ற வேண்டும்...
நான் முழுசா படிக்காத புத்தகம்
என் அப்பா ❤️

அழகிய இடம் கோழிக்கோடு அருகே உள்ள வடகரா

 

கேரளாவின் வடக்கு மாவட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோம்..!

👇👇👇
கேரளாவில் வடக்கு மாவட்டங்கள் கோழிக்கோடு மலப்புரம் கண்ணூர் காசர்கோடு ஆகியவை.,
இந்த மாவட்டங்கள் பெரும்பாலும் கடலும் ஆறுகளும் ஒன்றாக பின்னிப் பிணைந்து காணப்படும்.‌‌.!
ஆற்றங்கரை ஓரமாக தென்னை மரங்கள் ஆற்றில் சாய்ந்தது போன்று அழகாக இருக்கும்..!
தென்னை மரத்தில் ஏறி அதன் வழியாக ஆற்றில் குதித்து குளித்து மகிழ்வார்கள்..!
இந்த படத்தில் உள்ள அழகிய இடம் கோழிக்கோடு அருகே உள்ள வடகரா..!
வயநாடு கேரளாவில் உள்ள வடகிழக்கு மாவட்டம் ஆகும்..!

ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில்-3

 



நமது குல தெய்வ கோவிலின் நாக தேவதைகள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டி வணங்குகிறோம்.



ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில்

மகளிர் தின வாழ்த்துகள்.

 சித்தார்த்தன் புத்தனாவதற்காக அவனது மனைவியையும் குழந்தையையும் அரண்மனையில் விட்டு நீங்கிய போது அவர்களுக்கு என்னவாயிற்று என்ற கேள்வி எழுந்தது.

விக்ரம் பட்டாச்சார்யாவின் விளக்கம் அந்தக் கதையை சொல்கிறது.
***********************************************
அந்த இரவில் அவன் அவர்களை விட்டுச் சென்றான். அவர்களுக்கு மகன் பிறந்திருந்த அதே இரவுதான். செய்தியை கேள்விப்பட்டதும் அவள் இடிந்து போனாள்.
இருந்தும் அவள் யாரிடமும் குறை சொல்லிக் கொண்டிருக்கவில்லை. சித்தார்த்தனை இழந்த அவளது வாழ்க்கை அர்த்தமற்றதாகிப் போனது. அவளது மகன், அவள் தொடர்ந்து வாழ்வதற்கான ஒரே காரணமாகிப் போனான். உலகமே உற்று நோக்கும் சிறந்த மனிதனாக தனது மகனை வளர்க்க உறுதி பூண்டாள்.
அவளது உறவினர்களும் நட்புக்களும் அவளை உதறிவிட்டுச் சென்றவனை மறந்து, வாழ்வை முதலில் இருந்து மறுபடியும் ஆரம்பிக்க அறிவுறுத்தினார்கள்.
மற்றொரு திருமணம் செய்து கொள் என்ற அவர்களின் அறிவுரையை அவள் மறுத்தாள். அழகும் இளமையும் ததும்பி நின்ற அவளை கரம் பிடிக்க பலர் வாசலில் நின்றிருந்தனர். அவர்கள் யாருக்கும் அவளது இதயக் கதவு திறக்கவே இல்லை.
ஒரு நாள் அவன் திரும்பி வந்தான்.
தன் முன்னே நிற்கும் அவன் தான் தன்னை தவிக்க விட்டு சென்றவனா என உற்றுப் பார்த்தாள்.
"உம்மை புத்தர் என்று அழைக்கிறார்கள்" என்று அவனிடம் மென்மையாகக் கூறினாள்.
" நானும் அவ்வாறே கேள்விப் பட்டேன்" என தன்மையாக பதிலளித்தான் அவன்.
" அதன் அர்த்தம் என்ன" என வினவினாள்.
"ஞானம் பெற்றவன், அறிந்தவன் என நினைக்கிறேன்" என்றான்.
புன்சிரிப்புடன் அமைதியானாள்.
" நாம் இருவருமே சில பாடங்களை படித்திருக்கிறோம். ஓ புத்தனே! நீ படித்த பாடங்கள் மனிதர்களுக்கு ஆன்ம பலத்தை கூட்ட பயன்படலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் படித்த பாடங்கள் யாருக்கும் தெரியாமலேயே போய்விடும்" என மிக ஆழமான வார்த்தைகளைக் கூறினாள்.
" அப்படியென்ன பாடம் என தெரிந்து கொள்ளலாமா" என புத்தன் கேள்விக்குறியோடு அவளை நோக்கினான்.
கண்களில் நீர் பணிக்க தீர்க்கமான பார்வையோடு யசோதரை கூறினாள்
"மன தைரியம் கொண்ட பெண் ஒருவள் முழுமை பெற வேறு யாரும் தேவையில்லை.......
அவள் தானே முழுமையானவள்"
மகளிர் தின வாழ்த்துகள்.

போல குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு-2.3.2025

 



இயற்கையின் சொர்க்கம் போல காட்சியளிக்கிறது தென்காசியும் குற்றால அருவியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும்....

தமிழ்நாட்டில் நேற்று முதல் கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் மட்டும் பருவமழை காலம் போல தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை தென்காசி மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை தொடர்கிறது....
மார்ச் ஏப்ரல் மாதங்களில் குற்றால அருவி வறண்டு காணப்படும் வெறும் பாறை மட்டுமே காட்சி தரும்...
ஆனால் இயற்கையின் அருட் கொடை போல குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதமான தென்றல் காற்று மேற்கு தொடர்ச்சி மலையை தவழும் மேககூட்டங்கள் குளுகுளு காற்று கனமழை என சொர்க்கம் போல காட்சியளிக்கிறது தென்காசி.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது:

 

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது:
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்கள் தன்உடலில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.
மல்லாந்து கால்களையும், கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.
குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையா
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.
சித்தர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் நன்மைக்காகவே இருக்கும்…
நம் வாழ்க்கை நம் கையில்… நாம் எவ்வாறு நல் வழிகளை பின்பற்றுகிறோமோ அவ்வாரே நமக்கு நன்மைகளும் கிடைக்கும்…. வாழ்க வளமுடன் …
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…. நல்லதை பகிருங்கள்… அனைவரும் பயன் பெறட்டும்…

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...