Saturday, March 8, 2025

அழகிய இடம் கோழிக்கோடு அருகே உள்ள வடகரா

 

கேரளாவின் வடக்கு மாவட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோம்..!

👇👇👇
கேரளாவில் வடக்கு மாவட்டங்கள் கோழிக்கோடு மலப்புரம் கண்ணூர் காசர்கோடு ஆகியவை.,
இந்த மாவட்டங்கள் பெரும்பாலும் கடலும் ஆறுகளும் ஒன்றாக பின்னிப் பிணைந்து காணப்படும்.‌‌.!
ஆற்றங்கரை ஓரமாக தென்னை மரங்கள் ஆற்றில் சாய்ந்தது போன்று அழகாக இருக்கும்..!
தென்னை மரத்தில் ஏறி அதன் வழியாக ஆற்றில் குதித்து குளித்து மகிழ்வார்கள்..!
இந்த படத்தில் உள்ள அழகிய இடம் கோழிக்கோடு அருகே உள்ள வடகரா..!
வயநாடு கேரளாவில் உள்ள வடகிழக்கு மாவட்டம் ஆகும்..!

ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில்-3

 



நமது குல தெய்வ கோவிலின் நாக தேவதைகள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டி வணங்குகிறோம்.



ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில்

மகளிர் தின வாழ்த்துகள்.

 சித்தார்த்தன் புத்தனாவதற்காக அவனது மனைவியையும் குழந்தையையும் அரண்மனையில் விட்டு நீங்கிய போது அவர்களுக்கு என்னவாயிற்று என்ற கேள்வி எழுந்தது.

விக்ரம் பட்டாச்சார்யாவின் விளக்கம் அந்தக் கதையை சொல்கிறது.
***********************************************
அந்த இரவில் அவன் அவர்களை விட்டுச் சென்றான். அவர்களுக்கு மகன் பிறந்திருந்த அதே இரவுதான். செய்தியை கேள்விப்பட்டதும் அவள் இடிந்து போனாள்.
இருந்தும் அவள் யாரிடமும் குறை சொல்லிக் கொண்டிருக்கவில்லை. சித்தார்த்தனை இழந்த அவளது வாழ்க்கை அர்த்தமற்றதாகிப் போனது. அவளது மகன், அவள் தொடர்ந்து வாழ்வதற்கான ஒரே காரணமாகிப் போனான். உலகமே உற்று நோக்கும் சிறந்த மனிதனாக தனது மகனை வளர்க்க உறுதி பூண்டாள்.
அவளது உறவினர்களும் நட்புக்களும் அவளை உதறிவிட்டுச் சென்றவனை மறந்து, வாழ்வை முதலில் இருந்து மறுபடியும் ஆரம்பிக்க அறிவுறுத்தினார்கள்.
மற்றொரு திருமணம் செய்து கொள் என்ற அவர்களின் அறிவுரையை அவள் மறுத்தாள். அழகும் இளமையும் ததும்பி நின்ற அவளை கரம் பிடிக்க பலர் வாசலில் நின்றிருந்தனர். அவர்கள் யாருக்கும் அவளது இதயக் கதவு திறக்கவே இல்லை.
ஒரு நாள் அவன் திரும்பி வந்தான்.
தன் முன்னே நிற்கும் அவன் தான் தன்னை தவிக்க விட்டு சென்றவனா என உற்றுப் பார்த்தாள்.
"உம்மை புத்தர் என்று அழைக்கிறார்கள்" என்று அவனிடம் மென்மையாகக் கூறினாள்.
" நானும் அவ்வாறே கேள்விப் பட்டேன்" என தன்மையாக பதிலளித்தான் அவன்.
" அதன் அர்த்தம் என்ன" என வினவினாள்.
"ஞானம் பெற்றவன், அறிந்தவன் என நினைக்கிறேன்" என்றான்.
புன்சிரிப்புடன் அமைதியானாள்.
" நாம் இருவருமே சில பாடங்களை படித்திருக்கிறோம். ஓ புத்தனே! நீ படித்த பாடங்கள் மனிதர்களுக்கு ஆன்ம பலத்தை கூட்ட பயன்படலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் படித்த பாடங்கள் யாருக்கும் தெரியாமலேயே போய்விடும்" என மிக ஆழமான வார்த்தைகளைக் கூறினாள்.
" அப்படியென்ன பாடம் என தெரிந்து கொள்ளலாமா" என புத்தன் கேள்விக்குறியோடு அவளை நோக்கினான்.
கண்களில் நீர் பணிக்க தீர்க்கமான பார்வையோடு யசோதரை கூறினாள்
"மன தைரியம் கொண்ட பெண் ஒருவள் முழுமை பெற வேறு யாரும் தேவையில்லை.......
அவள் தானே முழுமையானவள்"
மகளிர் தின வாழ்த்துகள்.

போல குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு-2.3.2025

 



இயற்கையின் சொர்க்கம் போல காட்சியளிக்கிறது தென்காசியும் குற்றால அருவியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும்....

தமிழ்நாட்டில் நேற்று முதல் கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் மட்டும் பருவமழை காலம் போல தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை தென்காசி மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை தொடர்கிறது....
மார்ச் ஏப்ரல் மாதங்களில் குற்றால அருவி வறண்டு காணப்படும் வெறும் பாறை மட்டுமே காட்சி தரும்...
ஆனால் இயற்கையின் அருட் கொடை போல குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதமான தென்றல் காற்று மேற்கு தொடர்ச்சி மலையை தவழும் மேககூட்டங்கள் குளுகுளு காற்று கனமழை என சொர்க்கம் போல காட்சியளிக்கிறது தென்காசி.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது:

 

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது:
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்கள் தன்உடலில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.
மல்லாந்து கால்களையும், கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.
குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையா
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.
சித்தர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் நன்மைக்காகவே இருக்கும்…
நம் வாழ்க்கை நம் கையில்… நாம் எவ்வாறு நல் வழிகளை பின்பற்றுகிறோமோ அவ்வாரே நமக்கு நன்மைகளும் கிடைக்கும்…. வாழ்க வளமுடன் …
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…. நல்லதை பகிருங்கள்… அனைவரும் பயன் பெறட்டும்…

குன்னக்குடி வைத்தியநாதன்

 

குன்னக்குடி வைத்தியநாதன்

🎹குன்னக்குடி பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை! அதுவே அவரின் பெரிய வெற்றியும் கூட!
* அவர் நெற்றியில் திருநீறும் குங்குமமும், அவர் ஜிலுஜிலு சட்டைகளும், அவர் செய்யும் அங்க சேட்டைகளும், குழந்தைகளை மட்டுமில்லை, இக்கால இளைஞர்களையும் வெகுவாகவே கவரும்!
* அவர் கச்சேரியில் செவிக்கு மட்டும் விருந்து இல்லை! கண்களுக்கும் விருந்து தான்! அவர் இசை, பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும்!
தூய இசை வல்லுனர்கள், குன்னக்குடி செய்யும் வித்தைகளை ஒப்பா விட்டாலும், குன்னக்குடியின் ஜனரஞ்சகத்தையோ, இசை எளிமையையோ மறுக்கவே முடியாது!
மெல்லிசைக்கும், மேடை இசைக்கும் பாலம் போட்டவர் குன்னக்குடி!
* வயலின் என்றால், ஏதோ தலைவர்கள் மறையும் போது மட்டும் தொலைக்காட்சியில் வாசிப்பது என்று இருந்த ஒரு நிலையை மாற்றிக் காட்டியவர் குன்னக்குடி!
*வயலின் என்னும் பக்க வாத்தியம், பக்கா வாத்தியம் ஆனது!
* சின்ன வயலினுக்கு, பெரிய தவில் என்ற நினைத்துப் பார்க்க முடியாத ஜோடிப் பொருத்தம் எல்லாம் ஏற்படுத்திக் காட்டிய Experimenter தான் குன்னக்குடி!
* தமிழிசைக்கு அவர் ஆற்றிய பணி அளவில்லாதது!
* தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்! திருவையாறு தியாகராஜ ஆராதனையை பல ஆண்டுகள் நன்முறையில் நடத்திக் காட்டியவரும் கூட

பூசணிஜூஸ் பருகினால்

 

திருஷ்டி காய்னு ஒதுக்க வேண்டாமே .....

குடலில் ஒரு துளி கழிவுகளை கூட விட்டு வைக்காது இந்த ஜூஸ்!!
தினமும் எழுந்ததும் டீ,காபி குடிப்பதை நிறுத்திவிட்டு வெண்பூசணி காயில் ஜூஸ் செய்து பாருங்கினால் குடல் முழுமையாக சுத்தமாகும்.நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த இந்த காயை அரைத்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
#வெண்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
*நார்ச்சத்து *நீர்ச்சத்து *கலோரி *இரும்பு *மெக்னீசியம் *வைட்டமின் பி மற்றும் சி
வெண்பூசணியில் இருக்கின்ற நார்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.குடல் இயக்கம் மற்றும் செரிமான இயக்கம் சீராக நடைபெற வெண்பூசணி சாறு தயாரித்து பருகலாம்.
#பூசணிஜூஸ் பருகினால்
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாக வெண்பூசணி சாறு செய்து பருகலாம்.
ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்யும் மருந்தாக இது திகழ்கிறது.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க வெண்பூசணி சாறு பருகலாம்.
தினசரி வெண்பூசணியை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் வெண் பூசணிக்கு இருக்கிறது.
#வெண்பூசணி ஜூஸ் தயாரிக்கும் முறை:
#தேவையான பொருட்கள்:-
1)வெண்பூசணி துண்டுகள் - கால் கப்(தோல் நீக்கப்பட்டது)
2)தண்ணீர் - ஒரு கப்
#பயன்படுத்தும் முறை:-
1.முதலில் ஒரு கீற்று வெண்பூசணியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
2.பிறகு இதனை மிக்சர் ஜாரில் ஒன்றில் போட்டுக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
3.இந்த வெண்பூசணி ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி காலை வேளையில் பருகி வந்தால் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேறும்.இந்த வெண்பூசணி துண்டுகளுடன் உப்பு,மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.

படுதோல்வியடைந்த நிலையில்

 

ஒருவன் தன்னுடைய தொழிலில்

படுதோல்வியடைந்த நிலையில், தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார்.
சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பைத் தொட்டியில் தனக்குத் தேவையான பாட்டில்களை நிரப்பி எடுத்துச் சென்றார். மீண்டும் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார். அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டுச் சென்றது.
கடைசியாக வந்த ஒரு பசு, குப்பையில் கிடந்த பச்சிலையை சாப்பிட்டு தன் பசியை போக்கிக் கொண்டது. இதைப் பார்த்த, படு தோல்வியடைந்த அந்த நபர்,
கூறிய வார்த்தைகள் 'ஒரு சிறிய குப்பைத் தொட்டியில் இத்தனை பேர் பிழைத்து வாழ்கிறார்கள் என்றால், இந்த பரந்து விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும் எப்படி எல்லாம் பிழைத்து வாழலாம் என்று, தன் மனதை திடப்படுத்திக் கொண்டு இனி தனக்கு தோல்வியே கிடையாது இனி வரும் காலங்கள் பொற்காலமே, மிக பெரிய வெற்றியே என தன்னம்பிக்கையுடன் தன் பழைய தொழிலை தொடங்கச் சென்றார். இந்த பரந்த உலகில் நாம் அனைவரும் ஜெயிக்கப் பிறந்தவர்கள்...

சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்

எழுதியது யாருனு தெரியலை...

படித்ததில் பிடித்தது ........
தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)
அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)
மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.
ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.
ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.
மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.
ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.
அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.
அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.
அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.
“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.
அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.
அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.
அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.
அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.
மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.
இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.
செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.
அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.
முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.
யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.
ஆனால், அப்பாக்கள் வரம்.
*தாயிடம் நிரூபியுங்கள்*-* கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.
*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.
*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.
*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று
*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று
*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று
வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...