Wednesday, February 19, 2025

நாகை – இலங்கை இடையே நாளை(12.2.2020) முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து

 நாகை – இலங்கை இடையே நாளை முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து.

நாகை- இலங்கை இடையே நாளை முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை துவங்குகிறது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை 2023ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23ம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மூலம் மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்தாண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் கப்பல் இயக்கப்பட்டது.
வாரத்தில் 5 நாட்களுக்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வந்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கப்பல் போக்குவரத்து நாளை (12ம் தேதி) முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
இனி வாரத்துக்கு செவ்வாய்க்கிழமை தவிர இதர 6 நாட்களும் கப்பல் இயக்கப்படும்.
டிக்கெட் முன் பதிவுக்கு www.sailsubham.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இதில் ஒரு நபர் 10 கிலோ வரை பொருட்களை எடுத்து செல்லலாம்.
இலங்கையில் 3 நாள் தங்கி சுற்றி பார்த்து வரும் பேக்கேஜ் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

 

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்:

01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
03. ஆழிக்கிணறு - (Well in Seashore) கடலுக்கு அருகே தோண்டி, கட்டிய கிணறு
04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி.
05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர்த் தேக்கம்.
06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.
08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
09. ஏரி - (Irrigation Tank) வேளாண்மை பாசன நீரத் தேக்கம்.
10. ஓடை - (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
11 கட்டும் கிணக்கிணறு – (Built-in -well) சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
12. கடல் - (Sea) சமுத்திரம்.
13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
14. கலிங்கு - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர்த் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன்னெ 9ச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. கால் – (Channel) நீரோடும் வழி.
16. கால்வாய் - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
17. குட்டம் – (Large Pond) பெருங் குட்டை.
18. குட்டை - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
19. குண்டம் - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
23 . குளம் - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.
24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
25 . கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
26. வாளி – (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27. கேணி – ( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.
28. சிறை - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
29. சுனை- (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
30. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.
31. தடம் - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்புறமும் கட்டப்பட்ட குளம்.
32 . தளிக்குளம் - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
33. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
34. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.
35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
36. தொடு கிணறு - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
37. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.
38. நீராவி - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. பொங்கு கிணறு - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.
41. பொய்கை - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
42. மடு - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
43. மடை - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
44. மதகு - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.
45. மறு கால் - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
46. வலயம் - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.
47 வாய்க்கால் - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.

காலை எழுந்ததும் மலச்சிக்கல் இல்லாமலும்.,

 

காலை எழுந்ததும் மலச்சிக்கல்

இல்லாமலும்.,
இரவு தூங்கப் போகும் போது
மனச்சிக்கல் இல்லாமலும்
எவர் தன் பொழுதுகளை அமைத்துக்
கொள்கிறாரோ அவரே பூரண
ஆரோக்கியவான்
இரவு படுக்கப் போவும் போது குடித்து
விட்டுப் படுத்தால் விடி காலை அது
எழுப்பி விட்டு விடும். மலச்சிக்கலுக்கு
துத்தி இலை கை கண்ட மருந்து.
ஒரு ஆளுக்குப் பத்து துத்தி இலையை
ஒரு தம்ளர் நீர் விட்டுக் கொதிக்க
வைத்து பனைவெல்லம் தேங்காய்ப்
பால் கலந்து குடித்து விட்டுப் படுக்க
வேண்டியதுதான்...
இது மருந்து போல் கஷ்டப்பட்டுக்
குடிக்க வேண்டியதில்லை. ரசித்து
ருசித்து குடிக்கலாம். கிட்டத்தட்ட
பாதாம் பால் குடிப்பது போல் இருக்கும்.
இதற்கு ஒரு சித்தர் பாடல் கூட
உண்டு.
" மூலநோய் கட்டி முளைப்புழுப்
புண்ணும் போகும்
சாலவதக்கிக் கட்டத்தையே -
மேலுமதை எப்படியேனும்
புசிக்க எப்பிணியும் சாந்தமுறும்
இப்படியிற் துத்தி யிலைக்கே... "இரவு வணக்கங்கள்..

தும்பை செடியின் இலை மற்றும் பூ

 


தும்பை செடியின் இலை மற்றும் பூ ஆகிய இரண்டிலுமே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன....

1. தும்பை பூவை, பாலில் போட்டு நன்கு காய்ச்சி குடித்து வந்தால், சளி தொல்லையை விரைவில் குணப்படுத்தலாம்....
2. சிறிதளவு தும்பை பூக்களை எடுத்து கசக்கி, அதன் சாற்றை மூக்கில் இரண்டு சொட்டு விட்டால் தீராத தலைவலியும் பறந்து போகும்....
3. 25 கிராம் அளவிற்கு தும்பைப் பூக்களை எடுத்து அதனை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி, எண்ணெய் குளிர்ந்த பின் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி தீரும்....
4. தும்பை பூ சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்....
5. தும்பை பூ மற்றும் தும்பை இலை இரண்டையும் சம அளவு எடுத்து கசக்கி அதில் வரும் சாறை மூக்கில் விட்டால் மூக்கிலிருந்து வரும் ரத்தம் நின்று விடும்....
6. தும்பை இலையை அரைத்து, வடிகட்டி அதில் கிடைக்கும் சாற்றை காலை வெறும் வயிற்றில் மூன்று ஸ்பூன் அளவு குடித்து வந்தால் இளைப்பு பிரச்சனை சரியாகும்...
7. தும்பை இலைகளை கசக்கி விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் துணியுடன் சேர்த்து கட்டினால் விஷம் வெளியேறும்...
கீர்த்தி இயற்கை அங்காடி

திருப்பதி to புதுச்சேரி தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில்

 

🚆 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16111 திருப்பதி இருந்து புதுச்சேரி தினசரி முற்றிலும் முன்பதிவில்லா விரைவு ரயில் உள்ளது 🚆
திருப்பதி : 4:00Am
ரேணிகுண்டா:4:15Am
புதி:4:53Am
தடுக்கு:5:04Am
புத்தூர்:5:14Am
வேபகுண்டா:5:22Am
ஏகாம்பரகுப்பம்:5:32Am
நகரி:5:36Am
வெங்கடநரசிம்மராஜுவாரி:5:43Am
பொன்படி:5:49An
திருத்தணி:6:20Am
அரக்கோணம்:7:10Am
திருமால்பூர்:8:12Am
காஞ்சிபுரம்:8:23Am
காஞ்சிபுரம் கிழக்கு:8:28Am
வாலாஜாபாத்:8:41Am
பாலூர் :8:54Am
செங்கல்பட்டு :9:15Am
மதுராந்தகம்:9:39Am
மேல்மருவத்தூர்:9:49Am
ஒலக்கூர்:10:03Am
திண்டிவனம்:10:19Am
மயிலம்:10:28Am
விக்கிரவாண்டி:10:48Am
விழுப்புரம்:11:45Am
சின்னபாபு சமுத்திரம்:12:09pm
வில்லியனுர்:12:17pm
புதுச்சேரி:12:38pm
தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் !

திப்பிலியின் பயன்கள்...

 


1890 மெட்ராஸ் திருவல்லிக்கேணி

 

1890 மெட்ராஸ் திருவல்லிக்கேணி

உங்கள் விற்பனையை அதிகரிக்க

உங்கள் விற்பனையை அதிகரிக்க அல்லது விற்பனையில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க மற்றும் ‌அதிக வாடிக்கையாளர்களை அதிகரிக்க ஒரு அற்புதமான தீர்வு/குறிப்பு!!*💰🍎🍎🍎🍎
7 அல்லது 9 ஆப்பிள் விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். (பின்குறிப்பு: ஆப்பிளுக்குள் காணப்படும் விதைகள்)
அவற்றை புனித நீரில் (கோவில் கும்பாபிஷேகத்தில் பெறப்பட்ட நீர் ‌ அல்லது புனித நதியின் நீர் அல்லது மஞ்சள் கலந்த நீர்) நனைக்கவும்.
அவற்றை உலர்த்தி உங்கள் பணப்பையில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் மாயாஜாலம் நடப்பதை நேரில் காணுங்கள். காண்பீர்கள். உணருங்கள், உணர்வீர்கள்.
குறிப்பு: பரிகார வகுப்பில் கற்றவை.

Monday, February 17, 2025

Pearl City Superfast Express,

12694/Pearl City Superfast Express (PT)
முத்து நகர் அதிவேக விரைவு வண்டி     पर्ल सिटी सुपरफास्ट एक्सप्रेस
This is the Shortest Route between Tuticorin and Chennai Egmore.
Travel Time: 11h 0m    18 halts    Distance: 652 km    Avg Speed: 59 km/hr
Max Permissible Speed: 110 km/hr between MEJ/Vanchi Maniyachchi Junction and MBM/Mambalam

thoothukudi time 
08:40PM

11h 00m
07:40AM
Tuticorin (TN)
Chennai Egmo... (MS)

Thursday, February 13, 2025

தென்னைக்கு இயற்கை முறையில் இடுபொருள்

 தென்னைக்கு இயற்கை முறையில் இடுபொருள் கொடுக்கும் விபரம் :

1வது நாள் : ஒரு மரத்திற்கு 10 மில்லி சூடோமோனஸ் தரைவழி தண்ணீர் வழி தரவும்.ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும்.
7 வது நாள்: ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் எருக்கு கரைசல் தரைவழி தரவும்.
ஒரு மரத்திற்கு 30-50 மில்லி மீன் அமிலம் பாசனத்துடன் தரவும்.
14 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது 30-50 மில்லி மீன் அமிலம் தரைவழி பாசத்துடன் தரவும்.
24 வது நாள்: ஒரு மரத்திற்கு 30 -50 மில்லி இ. எம் கரைசல் பாசனம் வழி தரவும்.
ஒரு மரத்திற்கு கடலை புண்ணாக்கு கரைசல் 3 லிட் அல்லது கோமியம் 200 ml அல்லது 50 கிராம் பாஸ்போ பாக்டீரியா வீதம் தரைவழி தரவும்.
பொதுவாக இது நாள் வரை சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் அல்லது புதிதாக வைக்கப்பட்டத் தென்னைக்கு*
3 மாத பராமரிப்பு:
1. தரைவழி மரத்திற்கு 20 கிராம் சூடோமோனாஸ் அல்லது விரிடி தரைவழி தரவேண்டும்.
2. வட்டப்பாத்தியில் மரத்திற்கு அரைக் கிலோ வேப்பம் புண்ணாக்கு வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும்.
3.வட்டப்பாத்தியில் மரத்திற்கு 5 கிலோ காய்ந்த தொழுவுரம் அல்லது 2 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும்.
4. புதுப்பாளை விடவோ அல்லது குரும்பை உதிராமலிருக்க அல்லது காய் பெருக்க போரான் சத்து கொடுக்கலாம். எருக்கு கரைசலை தரலாம்.
5. தோகையில் உள்ள கசடுகளை நீக்கலாம்,
6. 2 கிலோ வேப்பம்புண்ணாக்குடன் 2 கிலோ நிலத்தின் மண்ணை நன்கு கலந்து தென்னையின் தோகைகளுக்குள் போட்டு விட வேண்டும், இது அவசியம்.
மண் உப்பாகவோ (PH 7.5க்கு மேல்) தண்ணீர் சப்பையாக உப்பாக( TDS 500க்கு மேல்) இருந்தால் தரைவழி மரத்திற்கு இ.எம் கரைசலை 20 மி.லிட் வரை ஒவ்வொரு பாசனத்தின் போதும் தரலாம்.
பாசனம்
மரத்திற்கு பொதுவாக 80 லிட் தண்ணீர் தருவது நலம். குறைந்தபட்சம் 15-20 லிட்டர களாவது தரவேண்டும். அதனுடன் இயற்கை இடுபொருள் குறைந்தபட்சமாவது கலந்து தரவேண்டும்.
மூடாக்கு முக்கியம்.குறைந்த தண்ணீர்,இடுபொருள் இருந்தாலும் மூடாக்கு இருப்பது நல்ல பெரிய பலன் தரும்
இதெல்லாம் முடிந்த அளவு செய்வோம்... நாட்டு தென்னை நடவுக்கு தயாரா இருக்கு எப்ப நடராங்கனு பார்ப்போம். ...
காய் 6 ரூபாயில் இருந்து 17 ரூபாய் தற்போது விலை... விலை ஏற்ற இறக்கம் தான் காய்ப்பு இருந்தால் தான் கட்டுபடியாகும்

INDIAN TRAINE NEW whatsapp SERVICE

 ரயில்வேயின் புதிய வாட்ஸ்அப் சேவை.. ஒரே கிளிக்கில் முழுமையான தகவல்கள்...

இப்போது ரயில்வே தொடர்பான பல சேவைகளையும் வாட்ஸ்அப் மூலம் பெற முடியும். ரயில் பயணிகள் PNR நிலையை அறிதல், ரயில் தற்போது இருக்கும் இடத்தைப் பார்த்தல், உணவு ஆர்டர், ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயில் அட்டவணை, கோச் நிலை ஆகிய பல தேவைகளுக்கு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம். ரயில் பயணத்தின் போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் புகார் தெரிவிக்கவும் வாட்ஸ்அப்பில் வழி உள்ளது.இப்போது ரயில்வே தொடர்பான பல சேவைகளையும் வாட்ஸ்அப் மூலம் பெற முடியும். ரயில் பயணிகள் PNR நிலையை அறிதல், ரயில் தற்போது இருக்கும் இடத்தைப் பார்த்தல், உணவு ஆர்டர் என்று பல வசதிகள் வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படுகின்றன.
ரயில் பயணத்தின் போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் புகார் தெரிவிக்கவும் வாட்ஸ்அப்பில் வழி உள்ளது. ரயில் பயணத்தின்போது தேவைப்படும் பல வசதிகளைப் பெறுவதை ரயில்வேயின் வாட்ஸ்அப் சேவை எளிமையாக மாற்றியுள்ளது.
ரயில்வேயின் வாட்ஸ்அப் சேவை தானியங்கி முறையில் செயல்படுகிறது. இதில் மனிதத் தலையீடு ஏதும் இல்லை. வாட்ஸ்அப்பில் உள்ள ரயில்வேயின் சாட்பாட் (chatbot) உடன் உரையாடுவதன் மூலம் ரயில் பயணிகளுக்குத் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
ரயிலோஃபை (Railofy) என்ற சாட்பாட்அடிப்படையில் வாட்ஸ்அப் சேவை செயல்படுகிறது. ரயில்வேயின் வாட்ஸ்அப் சேவைக்கு, 98811-93322 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமிக்க வேண்டும்.
எண்ணைச் சேமித்த பிறகு, சாட்போட்டின் மெசேஜ் பாக்ஸுக்குச் சென்று ஆங்கிலத்தில் ஹாய் சொல்லுங்கள். சற்றுநேரத்தில் ஒரு மெசேஜ் வரும். அதில் PNR நிலை, ரயிலில் உள்ள உணவு, எனது ரயில் எங்கே இருக்கிறது, ரிட்டர்ன் டிக்கெட் பதிவு, ரயில் அட்டவணை, ரயில் பயணத்தின் போது கோச் நிலை, புகார் அளித்தல் போன்ற ஆப்ஷன்கள் தெரியும். இதில் தேவையான சேவையைத் தேர்வு செய்து, தொடர்ந்து சாட்பாட் கூறும் வழிகாட்டுதலைப் பின்பற்றலாம்.

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

 *சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?*

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்....
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல
உடல் உபாதைகள் உருவாகிறது.....
இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...
நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு
வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.
மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால்
போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.
இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,
அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்....
எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...
எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...
கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...
சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...
சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...
சாப்பிடும் முறை...!
---------------------------------
(1) நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...
(2) எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...
(3) பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...
(4) சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...
(5) அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...
(6) பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...
(7) பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...
(😎 ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...
(9) இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...
(10) சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...
(11) சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...
(12) சாப்பிட வேண்டிய நேரம்...
காலை - 7 to 9 மணிக்குள்
மதியம் - 1 to 3 மணிக்குள்
இரவு - 7 to 9 மணிக்குள்
(13) சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்கñ வேண்டும்...
(14) சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...
*அமருங்கள் சம்மணமிட்டு*

நிலாம்பூர் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து ஷோரனூர்

 





பச்சை பசுமையின் ஊடாடி பாயும் அழகான ரயில் பாதையும் ரயிலும்!!!

கேரள மாநிலத்தின் நிலாம்பூர் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து ஷோரனூர் செல்லும் இயற்கை எழில் படர்ந்த ரயில் பாதை

ரயில்கள் நாமக்கலில் புறப்படும் நேரம்

 நாமக்கலில் இருந்து நாளை(வியாழன்) முதல் வரும் திங்கள் வரையிலான நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 மதுரை - பெங்களூரூ வந்தே பாரத் ரயிலிலும், மாலை 5:25 மணிக்கு நாமக்கலில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல 20672 பெங்களூரூ - மதுரை வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட் இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் முன்கூட்டியே திட்டமிட்டு விரைவாக முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். (குறிப்பு : சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களுக்கு டிக்கெட்டுகள் விரைவாக முடிந்துவிடும் என்பதால் நாமக்கல் மக்கள் முன்னதாகவே திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்ளுங்கள்).

📌இந்த ரயில்கள் நாமக்கலில் புறப்படும் நேரம்:- (செவ்வாய் தவிர மற்ற நாட்கள்)
🚊காலை 8:30 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயில்
🚊மாலை 5:25 மணிக்கு 20672 மதுரை வந்தேபாரத் ரயில்
💸இந்த ரயிலில் நாமக்கலில் இருந்து பெங்களூரூ செல்ல கட்டண விவரம்:-
◾CC வகுப்பு (உணவு தவிர்த்து) - ரூ.800/-
◾EC வகுப்பு (உணவு தவிர்த்து) - ரூ.1575/-
◾CC வகுப்பு (உணவு சேர்த்து) - ரூ.1145/-
◾EC வகுப்பு (உணவு சேர்த்து) - ரூ.1975/-
💸இந்த ரயிலில் நாமக்கலில் இருந்து மதுரை செல்ல கட்டண விவரம்:-
◾CC வகுப்பு (உணவு தவிர்த்து) - ரூ.720/-
◾EC வகுப்பு (உணவு தவிர்த்து) - ரூ.1420/-
◾CC வகுப்பு (உணவு சேர்த்து) - ரூ.1010/-
◾EC வகுப்பு (உணவு சேர்த்து) - ரூ.1770/-

கீரையாக சந்தையில் ஆராக்கீரை

ஆரை...

செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட மிகவும் சிறிய நீர் தாவரம் ..
கீரையாக சந்தையில் ஆராக்கீரை அல்லது ஆழக்கீரை என்ற பெயரில் விற்பனைக்கு வருவதுண்டு..
தமிழகமெங்கும் நீர்நிலைகளிலும் வாய்க்கால்களிலும் தானே வளர்வது..
இலை மருத்துவப் பயனுடையது வெப்பம் நீக்கி தாகம் தணிக்கும் செய்கை உடையது ...
#கீரையை சமைத்துண்ண #தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும் ...
@கீரையை சமைத்துண்ண பகுமூத்திரம் போகும் ...
@இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாக காய்ச்சி பாலும் பனங்கற்கண்டும் கலந்து காலை மாலை பருகிவர பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் ரத்தம் போதல் ஆகியவை தீரும். ..

Featured Post

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. 🔴🟢🔴 சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூ...