Thursday, January 16, 2025

விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்

 *விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்: முழு பட்டியல் இதோ.*

சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் அதிகரித்து வருகின்றன.
ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டில், சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 80 வது இடத்தில் உள்ளது.
62 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
*அந்த நாடுகள்*
அங்கோலா
பார்படாஸ்
பூடான்
பொலிவியா
பிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள்
புரூண்டி
கம்போடியா
கேப் வெர்டே தீவுகள்
கொமோரோ தீவுகள்
கூக் தீவுகள்
டிஜிபவுட்டி
டொமினிகா
எல் சால்வடார்
எத்தியோப்பியா
பிஜி
கபோன்
கிரீனடா
கினியா பிசாவு
ஹைதி
இந்தோனேஷியா
ஈரான்
ஜமைக்கா
ஜோர்டான்
கஜகஸ்தான்
கென்யா
கிரிபாட்டி
லாவோஸ்
மகாவோ
மடகாஸ்கர்
மலேஷியா
மாலத்தீவுகள்
மார்ஷல் தீவுகள்
மொரிஷியானா
மொரிஷியஸ்
மான்ட்செரட்
மொசம்பிக்
மியான்மர்
நேபாளம்
நையூ
ஓமன்
பலாவு தீவுகள்
கத்தார்
ருவாண்டா
சமோவா
செனகல்
சீசெல்ஸ்
சியாரா லியோன்
சோமாலியா
இலங்கை
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
செயின்ட்லூசியா
செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினடின்ஸ்
தான்சானியா
தாய்லாந்து
தைமூர்
டோகோ
டிரினாட் மற்றும் டோபாகோ
துனிஷியா
துவாலு
வனுடு
ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும்.

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய

 ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம்.

🍁
அன்புள்ள மகனுக்கு,
வாழ்வும் தாழ்வும் சில காலம்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை ,
மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்.
1. வாழ்க்கை, அதிர்ஷ்டம், நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை.
தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை.
சில கருத்துக்களை அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறி விடுவது நல்லது.
2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப்போவதில்லை.
3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும்.
இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும்.
கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை, பொல்லாங்கை காட்டாதே.
உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்ல விதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை.
உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல், பொக்கிஷம் போன்றதாகும்.
அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு.
மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம்.
ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகு முறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது.
உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை.
நீ விழிப்புடன் இருக்க வேண்டும்.
அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.
2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை.
உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை.
இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.
3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது.
இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னை விட்டு சென்று விட்டதை நாளை நீ கண்டு கொள்வாய்.
வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.
4. அன்பு தான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும்.
காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி குறைந்து விடுகிறது.
உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு.
காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும்.
இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே.
அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.
5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை.
நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை.
என்னென்ன அறிவுத்திறனை நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும்.
ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை.
அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது.
உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்.
நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும்.
நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா, ரதத்திலா வசதி படைத்தவனாகவா அல்லது ஏழையாகவா என்று.
7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது.
நீ அனைவருக்கும் நல்லவனாக இரு.
ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே.
நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.
8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன்.
ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை.
நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
இலவசமாக உணவு கிடைக்காது.
9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல.
நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம்.
நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.
அன்புடன் ,
உன் அப்பா.
இக் கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர், குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது.
இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள், கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும்.
இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும்.
அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.

அகத்திக்கீரை !

 அகத்திக்கீரை !

அகத்திக்கீரையில் இருக்கிறது விஷத்தை முறிக்கும் ஆற்றல்
அகத்திக்கீரை உடல் சூடு தணிக்கிற, வயிற்றுப்புண்ணை ஆற்றுகிற, மனக்கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை குணமாக்கும், அருங்குணங்கள் கொண்டது. இது மொத்தம், 63 வகை சத்துக்களை கொண்டதாக, சித்த மருத்துவம் கூறுகிறது. அகத்திக்
கீரையில், 8.4 சதவீதம் புரதச்சத்து, 1.4 சதவிகிதம் தாது உப்புகள் மட் டுமின்றி, மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின், ஏ, சி ஆகிய சத்துக்களும் உள்ளன. அகத்தி என்றால், 'அகம் தீ' என்று பொருள்.
அகத்திக்கீரை உடலில், ரத்த ஓட்டத்தை சமப்படுத்தி, சீரான ரத்த ஓட்டத்தை தருவதாலேயே, அதற்கு 'அகத்தி' என்று பெயர் வந்ததாக ஒரு கருத்து உண்டு. இந்தக்கீரை உடலின் உள் உறுப்புகளையும் சுத்தப்படுத்தும் பணியினைச் செய்கிறது. இந்தக்கீரை பெரும்பாலும், வெற்றிலைக்கொடிக்கால்களில், வெற்றிலைக்கொடி படவர்வதற்கும், மிளகுத்தோட்டத் தில் மிளகுக்கொடி படர்வதற்காகவும் துணையாக, சிறுமரமாக வளர்க்கப்படுகிறது. அகத்தி, சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி, பேய் அகத்தி என பல வகை இருந்தாலும், பொதுவாக இதில் 2 வகை உண்டு.
ஒன்று வெள்ளை நிறப்பூக்களையும், மற்றொன்று சிவப்பு நிறப்பூக்களையும் கொண்டது. இவற்றின் இலை, பூ, பட்டை மற்றும் வேரும் மருந்தாக
பயன்படும் அருங்குணங்களை கொண்டதாகும்.
அகத்தியின் அருங்குணம்: இந்த அகத்திக்கீரையை சமைத்து சாப்பிட்டால், எளிதாக ஜீரணமாகும். பித்த நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து, கண்கள் குளிர்ச்சியாகும். சிறுநீர், மலம் சிக்கலின்றி வெளி யேறும். மன இறுக்கம் தளர்ந்து மனக்கோளாறுகளும் சரியாகும். 'அல்சர்' குணமாக அருமையானதொரு மருந்தாகும். கீரையுடன், சின்ன வெங்காயம்,மிளகு, சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண் எளிதாக குணமடையும்.
இந்த கீரையின் சாற்றை, சேற்றுப்புண்களில் பூசி வந்தால், விரைவில் ஆறிவிடும். நாள்பட்ட புண்களின் மீது, கீரையை மட்டும் அரைத்துத்தடவி வந்தால், விரைவில் ஆறிவிடும். தேமல் வந்த இடத்திலும், அகத்தி இலையை தேங்காய் எண்ணெய் விட்டு, வதக்கி சிறு சிறு விழுதுகளாக அரைத்துப்பூசி
வந்தால், விரைவில் குணமடையும். இந்தக்கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து, மருக்களின் மீது தொடர்ந்து பூசிவந்தால், அவை காய்ந்து உதிர்ந்து மறையும். அகத்திப்பூவை பொரியல் செய்து சாப்பிட்டால், கண் எரிச்சல், தலைசுற்றல், நீர்கக்கடுப்பு சரியாகும். பீடி, சிகரெட் குடிப்பவர்கள் இந்த அகத்திக்கீரை மற்றும் பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால், அவர்களது உடலில் ஏறியிருந்த விஷம் மலத்துடன் சேர்ந்து வெளியேறும்.
புகைப்பிடிக்கும் ஆர்வமும் குறையும். அகத்திக்கீரையுடன், சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், இதய படபடப்பு, இதயவீக்கம், சிறுநீரக நோய்கள், புற்றுநோய் கூட கட்டுக்குள் வரும். அகத்திப்பட்டையை 50 கிராம் எடுத்து, இடித்து, 8 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சி, வடிகட்டிக் குடித்தால், அம்மை நோய் கூட இறங்கி விடும்.
அகத்தி, மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்டது. எனவே, சித்தமருந்துகள் சாப்பிடும் போது, அகத்திக்
கீரையை சாப்பிடக்கூடாது. இந்தக்கீரையுடன், கோழிக்கறி சாப்பிடக்கூடாது. மது அருந்தி விட்டு அகத்திகீரையை சாப்பிட்டால், மாரடைப்பு ஏற்படும். தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே, மேற்கண்ட மருத்துவ ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.

ரிஷியாக மாறிய மார்கண்டேயன்

 "இந்த மரணம் என்னை என்ன செய்யும்"?

#மிருகண்டர் என்பவர் ஒரு மகரிஷி. அவருடைய மனைவி #மருதவதி. அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைச்செல்வம் இல்லை.
அதற்காக #சிவபெருமானை வேண்டினார்கள். ஒருநாள் மகரிஷி முன் தோன்றிய சிவபெருமான், "மிருகண்டா, உன்னால் நான் மனம் குளிர்ந்தேன். சொல், நீண்ட காலம் வாழும் #முட்டாள்களாக இருக்க போகும், #நூரு குழந்தைகள் வேண்டுமா? அல்லது #பதினாறு_வருடங்களே வாழப்போகும் #புத்திசாலியான ஒரு குழந்தை வேண்டுமா?" என்று கேட்டார்.
அதற்கு மகரிஷி "கடவுளே, அந்த #புத்திசாலி_மகனை மட்டும் கொடுங்கள்", என உடனடியாக கூறினார். "நல்லது! உனக்கு அவன் கிடைப்பான்!" என சிவபெருமான் கூறிமறைந்தார். விரைவிலேயே மகரிஷிக்கு மகன் பிறந்தான் அவனுக்கு #மார்கண்டேயன் என பெயரும் வைத்தார். அந்த சிறுவனும் புத்திசாலியாகவும் அழகானவனாகவும் வளர்ந்தான், வேத சாஸ்திரங்களை அவன் சுலபமாக கற்றுக் கொண்டான். அனைவருக்கும் அவனை பிடித்திருந்தது.
அந்த சிறுவன் 16 வயதை நெருங்கி கொண்டிருந்த போது, மிருகண்ட மகரிஷியின் கவலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு நாள் மார்கண்டேயன் தன் தந்தையை பார்த்து "#தந்தையே, ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?" என கேட்டான்.
அதற்கு "மகனே, நான் உன்னிடம் என்ன சொல்வது? உன்னை எங்களுக்கு சிவபெருமான் அளிக்கையில் நீ 16 வருடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பாய் என கூறினார்! நீ இப்போது அந்த வயதை அடைய போகிறாய்! இந்த வருடம் முடியும் போது நீ எங்களை விட்டுச்சென்றால் உன் இழப்பை நாங்கள் எப்படி தாங்குவோம்" என மகரிஷி #கண்ணீருடன் கூறினார்.
உடனே மார்கண்டேயன் "தந்தையே! இது தான் காரணமா? சிவபெருமானுக்கு அவரின் பக்தர்களின் மீது நீங்காத #அன்பு உண்டு, அதை நீங்களே என்னிடம் கூறியுள்ளீர்கள்! அவர் பலரையும் சாவில் இருந்து இதற்கு முன் காப்பாற்றி இருக்கிறார். அதை நான் #புராணங்களில் படித்து இருக்கிறேன். அதனால் இன்றிலிருந்து இரவும் பகலுமாக நான் சிவபெருமானை வணங்க ஆரம்பிக்கிறேன். கண்டிப்பாக அவர் என்னையும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது." என மார்கண்டேயன் கூறினான்.
தன் மகனின் வார்த்தைகளை கேட்ட மிருகண்ட மகரிஷி சந்தோஷம் அடைந்தார். தன் மகனுக்கு ஆசி வழங்கினார். #கடற்கடையில் சிவலிங்கம் ஒன்றினை மார்கண்டேயன் கட்டினான். காலை, மாலை, இரவு என எந்நேரம் ஆனாலும் சிவபெருமானை வழிபட தொடங்கினான்.
கடைசி தினத்தன்று, மார்கண்டேயன் பஜனைகள் பாட தொடங்கும் போது, மரணத்தின் கடவுளான #எமன் ஒரு எருமையின் மீது ஏறி அங்கு வந்து, மார்கண்டேயனிடம் "உன் பஜனையை நிறுத்து சிறுவனே! இந்த பூலோகத்தில் உன் வாழ்க்கை முடிவடைந்து விட்டது. #மரணத்திற்கு_தயாராக_இரு" என எமன் கூறினார். இதை கேட்ட மார்கண்டேயன் பயப்படவில்லை. தன் தாயை குட்டி எப்படி பற்றிக்கொள்ளுமோ அதே போல் அவன் சிவலிங்கத்தை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டான்.
சிறுவனின் கழுத்தில் எமன் பாசக்கயிற்றை வீசினார்! அவனை சிவலிங்கத்தை விட்டு இழுக்க முயன்றார். அப்போது பாசக்கயிறு சிவலிங்கத்தில் பட்டு அந்த #சிவலிங்கம்_வெடித்தது! அதனுள் இருந்து சிவபெருமான் வெளியேறி எமனை #நெஞ்சில் எட்டி உடைத்த சிவபெருமான்....
"எமா, போய் விடு. இந்த சிறுவனை தொடாதே! இவன் என் #மனம்_கவர்ந்த_பக்தன். இவன் என்றும் 16 வயது முடியாத #சிரஞ்சீவியாக வாழ்வான்" என கூறினார்.
எமன் நிலை குலைந்து போனார். எப்போதும் போல் இல்லாமல் இன்னும் பக்தியுடன் சிவபெருமானை வணங்கினான் மார்கண்டேயன். அந்த #ஜெபத்தின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் "இந்த மரணம் என்னை என்ன செய்யும்" என முடியும்.
இப்போதும் கூட பலரும் இதனை ஜெபிப்பார்கள். வீட்டிற்கு வந்த மார்கண்டேயன் தன் பெற்றோரின் கால்களில் விழுந்தான். அவனை கட்டித்தழுவிய அவர்கள் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டனர். மிகப்பெரிய #ரிஷியாக மாறிய மார்கண்டேயன் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்...

மூணார் ஆனைமுடி சிகரம்..

 


தென்னிந்தியாவிலேயே மிக உயரமான சிகரம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள #மூணார் ஆனைமுடி சிகரம்..

ஆனைமுடி சிகரம் இரவிக்குளம் நேஷனல் பார்க் வரையாடு பூங்கா பகுதியில் தான் உள்ளது...
தமிழ்நாட்டின் மாநில விலங்கான #வரையாடு இந்தப் பகுதியில்தான் அதிகமாக காணப்படுகிறது...
ஆனை முடி சிகரத்தின் மொத்த உயரம் 2695 மீட்டர் உயரமும் அதாவது 8,842 அடி உயரமும் கொண்டது...
ஏறத்தாழ ஆணை முடி சிகரமும் தமிழ்நாட்டில் உதகை மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா சிகரமும் உயரத்தில் கொஞ்சம் தான் மாறுபடும்‌
தொட்டபெட்டா சிகரம் 2637 மீட்டர் உயரமும் அதாவது 8632 அடி உயரமும் கொண்டது..
இதில் சிறப்பு என்னவென்றால் உதகையில் உள்ள தொட்டபெட்டாவை எளிதில் சென்று அழகாக சுற்றிப் பார்க்கலாம்...
ஆனால் ஆணை முடி சிகரத்தை எளிதாக சென்று சுற்றிப் பார்க்க முடியாது.

சர்க்கரை வியாதி விரல்

 



சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான்


அவர்களுக்காக ஒரு பதிவு!
விரலை வெட்ட வேண்டாம்:👌
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷
மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇
சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,
சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,
விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,
காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,
தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.
காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,
எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,
புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.
எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.
முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.🏨
இதற்கு கண்கண்ட மருந்து👀
ஆவாரம்_இலை 🌿🌿🌿🌿🌿🌿🌿
இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.
இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!
படித்தேன்...பகிர்ந்தேன்..

பூம்பாறையும் ஒன்னா ஆயிடுச்சு

 

எப்பவும் மனசுக்கு நெருக்கமான இடங்கள்ல,

இதுவும் ஒன்னு...
பூம்பாறை💚
கொடைக்கானலோட மகுடம்னு சொல்லலாம்...
மலை முகடுகளை உரசி செல்லும் முகில் கூட்டங்கள்,
இந்த பூம்பாறையின் அழகான அடையாளம்...
பைன் மரங்கள், தைல மரங்கள் மற்றும் சொகுசு விடுதிகளின் ஆக்ரமிப்புக்கு தப்பிய,
சொச்ச சோலைக்காடுகள் இங்கு பேரழகு...
வருசத்துல அதிகமா மழை பெய்யற இடமும் இது தான்...
பல நீருற்றுகளுக்கு ஆதாரமும் இது தான்...
கோடை காலங்கள்ல கூட,
இங்க பனி மூட்டத்தை காணலாம்...
இது எல்லாத்தையும் விட,
குழந்தை வேலப்பர் கோயில்...
பூம்பாறைக்கு உரிய தனிச் சிறப்பு...
இன்னும் இப்படி பல சொல்லிட்டே போகலாம்...
இதனாலயே,
என் மனசுக்கு நெருக்கமான இடங்கள்ல,
பூம்பாறையும் ஒன்னா ஆயிடுச்சு🥰

தென்னக இரயில்வேயின் புதிய அட்டவணையில் 01.01.2025 முதல்

 தென்னக இரயில்வேயின் புதிய அட்டவணையில், முக்கிய இரயில்கள்...

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம்: 01.01.2025 முதல்....
20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை 5 மணி.
22671 மதுரை தேஜஸ் காலை 6.00 மணி.
16127 குருவாயூர் காலை 10.20 மணி.
12635 மதுரை வைகை மதியம் 1.45 மணி.
20665 நெல்லை வந்தே பாரத் (செவ்வாய் தவிர) மதியம் 2.45 மணி.
12605 பல்லவன் மதியம் 3.40 மணி.
20605 செந்தூர் மாலை 4.00 மணி.
12642 திருக்குறள் - கன்னியாகுமரி (வாராந்திர Sun & Tue) மாலை 4.10 மணி.
12652 மதுரை - சம்பர்க் கிராந்தி (வாராந்திர Wed & Fri) மாலை 4.10 மணி.
16101 கொல்லம் மாலை 5.00 மணி.
12633 கன்னியாகுமரி மாலை 5.20 மணி.
22661 இராமேஸ்வரம் மாலை 5.45 மணி.
16751 இராமேஸ்வரம் மாலை 7.15 மணி.
12693 முத்து நகர் இரவு 7.30 மணி.
20635 அனந்தபுரி இரவு 7.50 மணி.
12661 பொதிகை இரவு 8.10 மணி.
12631 நெல்லை இரவு 8.40 மணி
12665 கன்னியாகுமரி (வாராந்திர Tue) இரவு 9.05 மணி.
12637 பாண்டியன் இரவு 9.40 மணி.
12653 மலைக் கோட்டை இரவு 11.30 மணி.
அவசியம் #Share செய்யுங்கள் இது ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கும்

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...