Tuesday, April 18, 2023

தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்

 

தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (19.04.2023) மற்றும் நாளை (20.04.2023) ஆகிய 2 நாட்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 14 முதல் 17 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும்,18 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24-மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 40.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை

 

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை: நாளை முதல் துவக்கம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) மாணவா் சோ்க்கை நாளை (ஏப்.17) திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமாா் 53 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) இறுதி வேலை நாள் ஏப்.28-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்த நிலையில், தனியாா் பள்ளிகளைப் போல் அரசுப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும். அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளின் மாணவா் சோ்க்கை ஆண்டுதோறும் தாமதமாக நடைபெறுவது தனியாா் பள்ளிகளுக்கு சாதகமாகி வருகிறது. இந்த தாமதம் பெற்றோா்களிடம் எளிதில் மன மாற்றத்தை ஏற்படுத்திவிடும். இந்த நடைமுறை வருங்காலங்களில் தொடரும்பட்சத்தில் அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கை குறைவதைத் தடுக்க முடியாது என தலைமை ஆசிரியா்கள், கல்வியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2023-24) அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கை ஓரிரு நாள்களில் தொடங்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரபூா்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை முன்கூட்டியே தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வுப் பேரணி ஏப்.17 முதல் 28-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ளது.

இந்தப் பேரணிக்காக தயாரிக்கப்படும் பிரத்யேக வாகனத்தில் பள்ளிக் கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறும். இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியா்களும் பங்கேற்கவுள்ளனா். மாணவா் சோ்க்கை கொண்டாட்டத்துக்கான செலவுத் தொகை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும்.

1 முதல் 9- ஆம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளைச் சோ்க்க விரும்பும் பெற்றோா் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாள்களில் வழங்கப்படும் என்றனா்.

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது

 

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது: பேரவையில் முன்வடிவுநிறைவேறியது!

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது.

சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது: 2001-ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் இதனால் நீதி துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த சட்டத்திருத்தத்தில் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது. இதே போல, நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைதாள் கட்டணம் ஐந்து லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத்தாள் கட்டணம் 500 ரூபாயும், நிறுவனங்களுக்கான ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா பேரவையில் நிறைவேறியவுடன் அமலுக்கு வர உள்ளது.

குமரியில் கோடை விடுமுறை சீசன் தொடங்கியது

 

குமரியில் கோடை விடுமுறை சீசன் தொடங்கியது: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!

உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

தமிழ் புத்தாண்டை முன்னிட் டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டியும் கன்னியாகுமரியில் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான இறுதி ஆண்டு பொதுத்தேர்வு முடிவடைத் துள்ளதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த வண்ண மாக உள்ளனர்.

முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். அவர்கள் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். அதன் பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறை யில் நீண்ட வரிசையில் காத்தி ருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மாலை நேரங்களில் கடற்க ரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்க ரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ண மாக உள்ளனர். இதில் ஏராள மான சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இத னால் விடுமுறை நாளானஇன்று சுற்றுலா தலங்கள் களை கட்டிஉள் ளது. இந்த சுற்றுலா தலங் களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரைப் பகுதி யில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்புகுழும போலீ சாரும் தீவிர கண் காணிப்பு பணியில்ஈடுபட்டு வந்தனர்.

திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி

 

திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி: பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை!


திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியீட்டார். இது தொடர்பாக அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் கூறுகையில், "மாநிலத் தலைவர் ஆன பிறகு மாதம் ரூ.8 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது. எனது வீட்டு வாடகை, உதவியாளர்களுக்கான ஊதியத்தை நண்பர்கள் தான் தருகிறார்கள். காருக்கு கட்சி தான் பெட்ரோல் போடுகிறது.

காவல் பணியில் இருந்த போது லஞ்சப்பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினர். ரஃபேல் வாட்ச் வரிசையில் 147-வது வாட்சை நான் வாங்கினேன். 3 லட்சத்திற்கு இந்த வாட்சை நான் வாங்கினேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரஃபேல் வாட்சை வாங்கினேன். 2021ம் ஆண்டு இந்த வாட்சை வாங்கிய அவர், மே மாதம் என்னிடம் கொடுத்தார்" என்று தெரிவித்தார். மேலும் ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வட சென்னை எம்பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார். இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அண்ணாமலை தெரிவித்தார்.

கோடை காலத்தில் குழந்தைகளை ஆரோக்கியமாக

கோடை காலத்தில் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?


கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை குறைவாக கொடுக்கவேண்டும் என குழந்தைகள் நல மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். 

கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவரும், பேராசிரியருமான  தூத்துக்குடி மருத்துவர் இரா.வெங்கட சுப்பிரமணியன் கூறியதாவது:  பொதுவாக கோடை காலத்தில் வெப்பத்தின் காரணமாக குழந்தைகள் வெயிலில் விளையாடும்போது சரிவர தண்ணீர் எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் நீர்ச்சத்து குறைந்து (dehydration)  குழந்தைகள் சோர்ந்து போகும். சிலசமயங்களில் நீர்ச்சத்து மிக குறைந்தால் மயக்கம் மற்றும் வலிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது மற்றும் குழந்தைகளுக்கு வெயில் காலங்களில் தோளில் வேர்க்குரு மற்றும் வேணைக்கட்டி, புண்கள் வரவாய்ப்புள்ளது. தொண்டைவலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் அடிக்கடி ஏற்படும்.

மேற்கண்ட உடல் பாதிப்புகளை கீழ்க்கண்ட முறைகளை மேற்கொள்ளும் போது தடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். பருத்தியிலான மேலாடைகளை அணிவிக்கலாம். காலை, மாலை இருவேளைகளிலும் குழந்தைகளை சுத்தமான தண்ணீரில் குளிப்பாட்டலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி சுத்தமான தண்ணீரை தேவையான அளவு அருந்த பழக்க வேண்டும். உணவுகளில் நீர்ச்சத்து அதிகமாகவும், காரம், எண்ணெய் அளவாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

அசைவ உணவுகளை குறைவாக கொடுக்கவேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் முளைக்கட்டிய தானிய வகைகளை அதிக அளவில் கொடுக்க வேண்டும். நொங்கு, இளநீர், பப்பாளிபழம், வாழைப்பழம், வெள்ளரிக்காய் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சுபழம், திராட்சைபழம், அண்ணாச்சிப்பழம் இவைகளை சளி, அலர்ஜி உள்ள குழந்தைகள் முடிந்த அளவு குறைத்து கொள்வது சிறந்தது.

தினமும் சுகாதாரமுறையில் தயாரிக்கபட்ட மோர் மற்றும் தயிர் அடிக்கடி குழந்தைகளுக்கு  கொடுப்பது நீர்ச்சத்து குறைந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ளும். குழந்தைகள் வெயிலில் திறந்த வெளியில்  நீண்ட நேரம் விளையாடிவிட்டு வீட்டிற்குள் வரும்பொழுது குழந்தைகளின் உடல் வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். குழந்தைகள் நன்றாக காற்றோட்டமான இடத்தில் சிறிது நேரம் இழைப்பாறிய பிறகு தண்ணீர் கொடுப்பது சளி பிடிக்காமல் தவிர்க்கும் என மருத்துவர் இரா.வெங்கட சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசில் 7500 பணியிடங்கள்

 

மத்திய அரசில் 7500 பணியிடங்கள்: மே 3ம் தேதி வரை விண்ணபிக்கலாம் - ஆட்சியர்


மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தேர்வுக்கு மே 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (Staff selection Commission,Government of India ) ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு - 2023 (Combined Graduate Level Examination 2023)” தொடர்பான அறிவிப்பினை 03.04.2023 அன்று வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்/சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் ‘C” மற்றும் குரூப் ‘C” நிலையில், 7500ற்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை அறிவித்துள்ளது.

இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் (Recruitment Notice) விரிவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFIles/noticeCGLE03042023.pdf என்ற இணையதள முகவரியிலும் உள்ளது.

இப்பணிக்காலியிடங்களுக்கு WWW.sss.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும்.

இப்பணிக்காலியிடங்களுக்கு www.sss.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும்.

தென் மண்டலத்தில் கணினி அடிப்படையினலான தேர்வு ஜூலை 2023ல், தமிழ்நாட்டில் 07 மையங்களிலும், புதுச்சேரியில் 01 மையத்திலும், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 03 மையங்களிலும் என மொத்தம் 21 மையங்கள்/நகரங்களில் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டத்தில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam – CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவ்விணையதளத்தில் ‘TN Career Services Employment' மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் AIM TN என்ற YouTube Channel- களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறலாம். எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளர்.

தூத்துக்குடியில் சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்

தூத்துக்குடியில் சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அவசரகால வாகனங்கள் உரிய நேரத்தில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சாலைப் பணிகள், கழிவு நீர் கால்வாய், மழைநீர வடிகால் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகரின் பல பகுதிகளில் சாலைகள் சுமார் 3அடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பங்களில் வயர்கள் தாழ்ந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

இதனால் தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசரகால வாகனங்கள் உரிய நேரத்தில் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அண்ணா நகர் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டபோது தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சிறிய வாகனம் மூலம் தீ ஆணைக்கப்பட்டது. மேலும் ஜேசிபி போன்ற வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு மின் கம்பங்களை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பல வீடுகளின் சாய்தளங்கள் சாலை வரை இழுத்து அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.  இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஐஸ் வாட்டர் உஷார் ஆளையே கொல்லும்... ஜாக்கிரதை...

 ஐஸ் வாட்டர் உஷார் ஆளையே கொல்லும்... ஜாக்கிரதை...

வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. வெய்யில் கொடூரம்... தவறான முடிவெடுக்கத் தூண்டும்.... ஆம்... வெயிலில் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்ததும்... வெப்பக் கொடுமையால்.. ஐஸ் வாட்டரை குடித்து விடாதீர்கள்.

40 டிகிரி செல்சியஸ் அல்லது 

105 டிகிரி அனல் காற்று வீசும் என்றும் பகலில் பயணம் செய்யாதீர்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.

இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் வாட்டர் மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம்.

அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு மருத்துவர் தனது நண்பர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தை கழுவியிருக்கிறார். உடனே, அவருடை பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார்.

வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும். ஐஸ் வாட்டரை குடிப்பது மட்டுமே ஆபத்து அல்ல. ஐஸ் வாட்டரில் கைகளையோ, முகத்தையோ, பாதங்களையோ கழுவுவதுகூட ஆபத்து என்கிறார்கள். 

அதாவது, உஷ்ணமான நமது உடலை ஐஸ் நீரால் திடீரென தாக்கக்கூடாது என்கிறார்கள். வீட்டுக்குள் நுழைந்து 30 நிமிடங்கள் வரை ஆசுவாசப்படுத்தி, வீட்டுக்குள் நிலவும் வெப்பத்துக்கு நமது உடலை தயார்செய்துவிட்டு பிறகுதான் இயற்கையான குளிர் நீரிலோ, வெதுவெதுப்பான அதாவது 90 முதல் 95 டிகிரி வெப்பமுள்ள தண்ணீரை குடிக்கலாம்.

நல்ல உறுதிவாய்ந்த உடலுடைய நபர் வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். கொதிக்கும் தனது உடலை உடனடியாக குளிர வைக்க விரும்பி குளிர்நீர் ஷவரில் குளித்தார். 

உடனே, அவருடைய தாடைகள் இறுகிக்கொண்டன. வாயை திறக்க முடியவில்லை. நல்லவேளை ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். 

கைகால்கள் முடங்கி, உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. நடப்பதற்கே சிரமப்படும் நிலையில் அவர் இருக்கிறார் என்று ஒரு டாக்டர் கூறுகிறார்.

வெயில் நேரத்தில் பிரிட்ஜ் வாட்டர், ஐஸ் போட்ட வாட்டரை குடிக்காதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை செய்யுங்கள். ஐஸ் வாட்டரை தவிர்த்து உடல்நலத்தை பாதுகாப்போம் என்ற பிரச்சாரம் இப்போது பரவி வருகிறது

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மக்கள் அவதி!

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மக்கள் அவதி!

தூத்துக்குடியில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இடையில் இரண்டு நாட்கள் லேசான சாரல் மழை எட்டிப்பார்த்தாலும், போதிய மழை பெய்யவில்லை. இதனால் தொடர்ச்சியாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டியெடுத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். 

ரோடுகள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.  வாகனங்களில் செல்பவர்கள் ஆங்காங்கே ரோட்டோரம் உள்ள குளிர்பான கடைகளுக்கு சென்று வெயிலின் தாக்கத்தை தணித்தனர். இதற்காக சாலையோரங்களில் குளிர்பான கடைகள், மற்றும் இளநீர், கம்மங்கூழ்  கடை உள்ளிட்ட கடைகள் முன்பு ஏராளமானோர் குவிந்து தாகத்தை தீர்த்து வருகின்றனர். 

தர்பூசணி பழங்கள் விற்பனையும் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் சிக்னல்களில் கூட நிற்க முடியாமல் சாலையோர மரங்களின் நிழலில் ஒதுங்கி நிற்கின்றனர். கோடை வெயில் இன்னும் உக்கிரத்தை காட்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Thursday, March 30, 2023

இராமேஸ்வரம் கோவிலில் சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்

*இராமேஸ்வரம் கோவிலில் சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்:*

ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.

இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும், பக்தர்களாலும் கவனிக்கபடாமல்,பூஜைகள் நடைபெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி

பிடிக்கப்பட்டு,பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர் கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவ லிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார்

மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம்.

இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்ன வென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்ட தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாக‌இருந்த மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது. இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் யாரும் தரிசித்தது இல்லை.

இந்த லிங்கத்தை தரிசிப்பதற்குரிய பிராப்தம் இருந்தால் தரிசிக்க முடியும். மேலும் ராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது. பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்புலிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசியமாகும்.

இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு முறை சிலர்,ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.

அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.

அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார்.

அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.

மேலும் இராமேஸ்வரம் கோவிலில் அநேகம்பேருக்கு தெரியாத சேதுமாதவர் சன்னதி ஒன்று உள்ளது.

காலில்சங்கிலியுடன் பெருமாள்-சேதுமாதவர் சன்னிதி சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான்.

அவனது குழந்தை பாக்கியம் இல்லா குறையைத் தீர்க்க மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.

மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான்.

பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார்.

அன்றிரவில் மன்னனின் கனவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.

இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார்.

அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் இராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு இந்த சேதுமாதவர் சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் மட்டுமே கடுமையான பிதுர்தோஷத்தை நீங்கும் என்பது எவருக்குமே தெரியாத தேவரகசியமாகும்.

ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி தோஷம் வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.

இராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவரகள் பல நூறு வருடங்கள் பழமையான நீலேஸ்வரர் லிங்கம்.,உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம், சேது மாதவர் சன்னிதி மற்றும் பாதாள பைரவர் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று தரிசித்து பயன்பெறுவதற்காக இந்த விபரங்கள் பதிவிடபட்டுள்ளது.

கண் பார்வை இத்தலத்தில் கிட்டியதால்

வாமன வடிவில் வந்த திருமால் மூன்றடி மண் கேட்க, “நீங்கள் கூறும் தானத்தைக் கொடுக்கிறேன்” என்று கூறி கெண்டியிலிருந்து நீரை வார்த்துக் கொடுக்க முனைய அந்த கெண்டியின் துளை வழியில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் கருவண்டு வடிவத்தில் உருமாறித் தடுத்தார். வாமன அவதாரத்தில் வந்த மகாவிஷ்ணு தன்னிடம் வைத்திருந்த தர்ப்பைப் புல்லினால் துளைப்பகுதியில் குத்தியவுடன் அதில் மறைந்திருந்த சுக்கிராச்சாரியார் வெளிவந்தார். அப்போது சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பார்வையை இழந்து விட்டது.

தானம் கொடுப்பவர்கள் கொடுப்பதை யாரும் தடுக்கக் கூடாது என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிய முடிகிறது. பிறகு திருமாலிடம் சுக்கிரன் மன்னிப்புக் கேட்டு தன்னுடைய பார்வையை திரும்பவும் தருமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு திருமால் “இப்பூவுலகில் மாங்காடு என்னும் தலத்தில் பார்வதிதேவி காமாட்சியாக வடிவெடுத்து பஞ்சாக்னி வளர்த்து தவம் செய்கிறாள். அவளது தவத்தை பூர்த்தி செய்ய இறைவன் பூவுலகம் வருவார்.

நீ மாங்காடு சென்று தவமிருந்தால் அத்தருணத்தில் உன் விழிக்கு பார்வை கிடைக்கும்” என்று கூறினார். பின்னர் சுக்கிராச்சாரியார் மாங்காட்டுக்கு வந்து சிவலிங்கம் அமைத்து இறைவனுக்கு பூஜை செய்யச் சுக்கிர தீர்த்தக்குளம் ஒன்றை உருவாக்கி சிவனை எண்ணி தவம் செய்தார். இறைவன் கயிலாயத்தில் இருந்து இப்பூவுலகில், கடும் தவம் புரிந்த காமாட்சி அம்மனுக்கு காட்சி தர வந்தார்.

வரும் வழியிலேயே சுக்கிர முனிவர் சிவனை வழிபடுவது அறியவே, சுக்கிர முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், முனிவரின் முன்தோன்றி அருள்புரிந்து சுக்கிர முனிவருக்கு பார்வை கொடுத்தார். “உன் கடுந்தவம் என்னை மிகவும் ஈர்த்தது” எனக்கூறி ஈசன் தொண்டருள் அடக்கம் என்பதை மெய்ப்பிக்க அவருக்கு நல்லருள் புரிந்ததுடன், அவரது விருப்பத்தின் பேரில் அங்கேயே கோயில் கொண்டு அமர்ந்து விட்டார்.

ஈசன் அருள்புரிந்து சுக்கிராச்சாரியாருக்கு கண் பார்வை இத்தலத்தில் கிட்டியதால் ஒரு கண் பார்வை மாறு கண் பார்வை, மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தலத்திற்கு வந்து வெள்ளீஸ்வரரை வழிபட்டு சென்றால் பலன் பெறுவது நிச்சயம் என்கிறார்கள். சுக்கிரனுக்கு வெள்ளி என்ற ஒரு பெயர் உண்டு. எனவே அவருக்கு அருள் புரிந்ததையட்டி ‘வெள்ளீசுவரர்’ என்ற திருநாமத்துடன் இன்றும் கோயில் கொண்டிருப்பதைக் காணலாம். அதேபோல வடமொழியில் சுக்கிரனுக்கு பார்கவன் என்ற பெயர் உண்டு. அதையட்டி இந்த வெள்ளீசுவரர் வடமொழியில் ‘பார்கவேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

எளியோர்க்கும், வறியோர்க்கும் கடுந்தவம் முனைவோர்க்கும் காட்சி தரும் இறைவன் அம்மையை மட்டும் “மீண்டும் தவம் செய்வாய். காஞ்சிபுரத்துக்கு வந்து தவத்தை தொடர்வாய்” என்று கூறி அங்கு அம்மையை மணம் புரிவதாக அசரீரியாய்க் கூறி மறைந்தார்.

சுக்கிரமுனிவர் தாம் தவம் செய்த வெள்ளீஸ்வரராகிய லிங்கத்திற்கு தொடர்ந்து பூஜை செய்து வந்தார். மாங்காட்டின் நடுவே பிலத்தில் கன்னிப்பெண் கடுந்தவம் செய்வதை அறிந்து, அவள் இறைவியே என்பதை உணர்ந்து அம்மையின் அருகில் சென்று வணங்கினார். இறைவன் தனக்கு காட்சி கொடுத்த வரலாற்றையும் தன்பெயர் தாங்கி வீற்றிருப்பதையும் சிவனின் கருணைப் பொழிவையும் எடுத்துரைத்து, வெள்ளீஸ்வரரை சென்று தரிசனம் செய்து பின்னர் இறைவன் கட்டளைப்படி காஞ்சி மாநகர் சென்று திருமணம் செய்து கொண்டாள். வெள்ளீசுவரர் திருக்கோயில் புனிதம்மிக்கதாகக் கருதப்பட்டு மக்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

Wednesday, March 22, 2023

தமிழில் உள்ள ஊர் பெயர்கள்..!!

தமிழில் உள்ள ஊர் பெயர்கள்..!!

எடப்பாடி அல்ல;
இடையர்பாடி 

மதுரை அல்ல;
மருதத்துறை.

மானாமதுரை அல்ல;
வானவன் மருதத்துறை

காளையார் கோவில் அல்ல;
கானப்பேரெயில்

சிவகங்கை அல்ல;
செவ்வேங்கை

திருவாரூர் அல்ல;
ஆரூர்

பொள்ளாச்சி அல்ல;
பொழில் ஆட்சி

சிதம்பரம் அல்ல;
திண்டிவனம் போல்
அது தில்லைவனம்

கான்சாபுரம் அல்ல;
கான்சாகிபு புரம்
(மருதநாயகம் நினைவாக வைத்த பெயர்)

வத்ராயிருப்பு அல்ல;
வற்றாத ஆறு இருப்பு.

தனுஸ்கோடி அல்ல;
வில்முனை

இராமேஸ்வரம் அல்ல;
சேதுக்கரை

இராமநாதபுரம் அல்ல;
முகவை

காஞ்சிபுரம் அல்ல;
கஞ்சிவரம்

செங்கல்பட்டு அல்ல;
செங்கழுநீர்பட்டு

சேர்மாதேவி அல்ல;
சேரன்மகாதேவி

விருத்தாசலம் அல்ல;
முதுகுன்றம்

வேளாங்கண்ணி அல்ல;
வேலற்கன்னி

சைதாப்பேட்டை அல்ல;
சையது பேட்டை

தேனாம்பேட்டை அல்ல;
தெய்வநாயகம் பேட்டை

கொசப்பேட்டை அல்ல;
குயவர்பேட்டை

குரோம் என்ற லெதர் கம்பெனியை காயிதே மில்லத் உருவாக்கியதால் குரோம்பேட்டை
ஆனால் அது தோல் பேட்டை தான்.

புரசைவாக்கம் அல்ல;
புரசைப்பாக்கம்

பெரம்பூர் அல்ல;
பிரம்பூர்

சேத்துப்பட்டு அல்ல;
சேற்றுப்பேடு

அரும்பாக்கம் அல்ல;
அருகன்பாக்கம்

சிந்தாதரிப்பேட்டை அல்ல;
சின்னத்தறிப்பேட்டை

உடுமலைபேட்டை அல்ல;
ஊடுமலைப்பேட்டை

பல்லாவரம் அல்ல;
பல்லவபுரம்

தாராசுரம் அல்ல;
ராராசுரம்

ஈரோடு அல்ல;
ஈரோடை

ஒகனேக்கல் அல்ல;
புகைக்கல்

தர்மபுரி அல்ல;
தகடூர்

பழனி அல்ல;
பொதினி

கும்பகோணம் அல்ல;
குடந்தை

தரங்கம்பாடி அல்ல;
அலைகள்பாடி

காவிரிபூம்பட்டினம் அல்ல;
காவிரிபுகும்பட்டினம்

பூம்புகார் அல்ல;
புகும்புகார்

ஸ்ரீரங்கம் அல்ல;
அரங்கம்

திருவையாறு அல்ல;
ஐயாறு

சீர்காழி அல்ல;
சீகாழி

வேதாரண்யம் அல்ல;
திருமறைக்காடு

கல்பாக்கம் அல்ல;
கயல்பாக்கம்

சேலம் அல்ல;
சேரளம்

திருத்தணி அல்ல;
திருத்தணிகை

திருவண்ணாமலை அல்ல;
அண்ணாந்துமலை.

Sunday, March 5, 2023

இந்தாங்க முதல் மாத சம்பளம்

"இந்தா அம்மா.. என் முதல் மாத சம்பளம்.. 30 ஆயிரம் ரூபாய்.. அப்பா எப்பவாச்சும் இப்படி முப்பது ஆயிரம் சம்பாதித்து இருக்கிறாரா.. எனக்கு இன்னும் கூட பதவியும் சம்பளமும் கூடிக்கிட்டே போகும்..!" இதுவரை மகன் இப்படிப் பேசி அந்த தாய் கேட்டதே இல்லை. வீட்டில் அதிகம் பேசவே மாட்டான் . அப்பாவிடம் சுத்தமாக பேசுவதே இல்லை. அப்படிப்பட்டவன் வாயில் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள்...? மனம் துணுக்குற்றாள் அம்மா . "என்னடா.. வார்த்தை எல்லாம் தடிப்பா வருது..? அதுவும் அப்பாவை பற்றி ரொம்ப ஏளனமாக பேசுற..!" "அவர் மட்டும் என்னை ஏளனமாக நடத்தலையா.. காலேஜ் போன புதுசுல ஒரு போன் வாங்கி தாங்கன்னு கேட்டதற்கு இழுத்தடிச்சு ஒரு வருஷம் கழிச்சுத் தானே வாங்கி தந்தாரு..! "அப்பாவோட வருமானம் அவ்வளவுதான்டா இருந்துச்சு..! " அதெல்லாம் இல்ல.. போன் வாங்கி தந்தா பிள்ளை படிப்பு கெட்டுடுமோன்னு நினைச்சிருப்பார்..!" "அது சரிதானே.. நீயும் மூன்றாவது செமஸ்டர் மார்க் குறைவாகத்தானே எடுத்தே..! " மார்க் குறைவாக எடுத்தால் பொறுமையா சொல்லலாம் இல்ல..? எதுக்கு போனை பிடுங்கி உன் கையிலே கொடுத்து, "பத்திரமா வச்சிரு.. அவன் காலேஜ் முடிச்ச அப்புறம் கொடுத்தா போதும்.. என்று சொன்னாராம்..?" "அப்பவாச்சும் நீ படிப்பில கவனம் செலுத்துவாய் என்றுதானேடா.. மகனே..! " நான் தான் இனிமே ஒழுங்கா படிக்கிறேன் என்று சொன்னேன்ல.. அப்புறம் எதுக்கு காலேஜ் வந்து என் கிளாஸ் டீச்சர் கிட்ட விசாரிச்சாரு.. எனக்கு எவ்வளவு கேவலமா இருந்துச்சு தெரியுமா..?" " எப்பவும் நான் உன்னை கவனிச்சுக்கிட்டே இருக்கேன் என்ற பயத்தை உனக்கு ஏற்படுத்துவதற்காகத் தான் அப்பப்போ காலேஜ் வந்து போறேன்னு அவரே சொல்லி இருக்காரு..!" " அதெல்லாம் கூட பரவாயில்லம்மா.. மூணாவது செமஸ்டெர்ல பெயிலா கூட ஆகல.. பர்சன்டேஜ் குறைஞ்சிடுச்சுன்னு நீ, தங்கச்சி, உன் அண்ணன் பசங்க எல்லாரும் வீட்ல இருக்கும்போதே சேர்ல உட்கார்ந்து இருந்த என்னை இழுத்துப் போட்டு நங்குன்னு மிதிச்சாரு.. எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும்..? அன்னைக்கு எடுத்தேன் சபதம்..இவர் முன்னாலே ஒரு கவுரவமான மனுசனா வாழ்ந்து காட்டணும்னு. காலேஜ்ல நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் பாஸ் பண்ணிய இரண்டு பேரில் நானும் ஒருத்தன். இப்பொழுது வேலைக்குச் சேர்ந்து இது முதல் மாசம் சம்பளம் வாங்கிட்டு வந்துட்டேன்.. இந்த பணத்தை கொண்டு போய் அவர்கிட்ட காட்டி இனிமேலாவது யாரையும் ஏளனமாக நினைக்காதீங்க.. என்று சொல்லு..போ..!" "ஏம்பா..இப்போ நீ பேசும்போது இடையில் ஏதோ சொன்னியே சபதம் எடுத்தேன் என்று.. அந்த வைராக்கியத்தை உனக்குள்ள ஏற்படுத்தணும்னு தான்டா அவர் தன்னுடைய பாசத்தை எல்லாம் மறைத்து கண்டிப்பாக நடந்து கொண்டார்..! அம்மாக்கள் கூட பிள்ளைகள் நம்மை நாளைக்குக் காப்பாத்தணும் என்ற எதிர்பார்ப்போடு தான்டா இருப்பாங்க.. அப்பாக்கள் அப்படி இல்லையடா..மகனே.." நம்மை விட நம்ம பிள்ளை நல்லா இருந்தா போதும்னு" தான் நினைப்பாங்க..! அம்மா உன் உடம்பை தான் வளர்ப்பா.. அப்பா தான் உன் வாழ்க்கையைப் பற்றி நினைப்பார்..!" " நீ சரியான ஜால்ரா.. எப்ப பாரு அவருக்கு சப்போரட்டாத்தான் வருவ..!" " இந்த வார்த்தையை ஒரு 15 வருடம் கழித்து சொல்கிறாயா என்று பார்ப்போம்..!" " ஏன்.. சொல்வேனே..! உன் வீட்டுக்காரரை நீதான் மெச்சுக்கணும்..!" "உன்னால சொல்ல முடியாது.. ஏன்னா அப்போ நீயும் சில பிள்ளைகளுக்கு அப்பா ஆகி இருப்பே..!பிள்ளைகள் குறித்தான அப்பாக்களின் எண்ணங்கள் உனக்கு புரிந்து போயிருக்கும்..!" அப்போது அப்பா வீட்டிற்குள் நுழைகிறார். " பாரு அப்பாவே வந்துட்டாரு .. அந்தப் பணத்தை அவர்கிட்ட நீயே கொடு என்ன சொல்கிறார் என்று பாரு..!" "என்ன சொல்லப் போறாரு.. "மாசாமாசம் இதே மாதிரி நிறைய சம்பாதிச்சு பைசா குறையாமல் கொண்டு வந்து கொடுக்கணும்னு.." கட்டளை போடப் போறாரு ..! அப்பாஅருகில் வந்து இருந்தார்..! " அப்பா..! " "இவனா அழைக்கிறான் என்னைய..?" அதிசயமாக ஏறிட்டுப் பார்த்தார் மகனை. அவர் கண்களில் சிறு மின்னல் கீற்று.. முகத்தில் சில வினாடி பிரகாசம்..! "இந்தாங்க முதல் மாத சம்பளம்..!" "எவ்வளவு..?" "முப்பதாயிரம்.. ட்ரெய்னிங் பீரியட் இரண்டு வருஷம் முடிஞ்சா லட்சத்துக்கு மேலே வரும்..!" "நல்லது.. அதை நீயே வச்சுக்கோ ..!" "ஏன் அப்படி சொல்றீங்க..?" " ஆமா தம்பி.. நான் கூட சின்னச் சின்ன அனாவசிய செலவு செய்வேன்.. நீ ரொம்ப சிக்கனமாக இருக்கிறத கவனிச்சிருக்கேன்..! அப்பா உங்களுக்கு எந்த சொத்தம் சேர்த்து வைக்கல.. படிக்க வச்சிட்டேன்.. அதுதான் நான் உனக்கு தர சொத்து. உன் பணத்தை நீயே வச்சுக்கிட்டு நீ என்னென்ன ஆசைப்பட்டாயோ அதற்கு செலவு பண்ணிக்கோ.. என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் கஞ்சி ஊத்துவேன்.. அதுக்கப்புறம் நீ அவங்களை பொறுப்பா பாத்துக்கப்பா..!" " நான் பார்த்துப்பேன்பா.. நீங்க கண்கலங்காதிங்கப்பா..!" " நான் அதற்கு கண் கலங்கவில்லை.. ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் நீ என்னை "அப்பா" ன்னு கூப்பிட்டுப் பேசினல்ல..!" மகன் கண்கள் கலங்க அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டான்..! "அப்பா.. இத்தனை நாளா உங்களை தப்பாப் புரிஞ்சிட்டேம்பா..! மகன் பற்றி இருந்த அப்பாவின் கைகளில் வயோதிகத்தின் சிறு நடுக்கம்.. மகனின் கைகளிலோ குற்றம் இழைத்தப் பெரு நடுக்கம் ...! அப்பாவின் விழிகளில் கசிந்த கண்ணீர் ஆனந்தக் கரையாடிக்கொண்டிருந்தது... மகனின் கண்களில் வழிந்த கண்ணீர் குற்ற உணர்வைக் கரைத்தோடிக் கொண்டிருந்தது...! ட்விட்டரில் பல பகுதிகளாக வந்ததை ஒருங்கிணைத்து தமிழில் நான் இதனை டைப் செய்வதற்குள் அரை மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.. கண்ணீர் உருளுவதை கட்டுப்படுத்த இயலாது இதனை ஒரு வழியாக முடித்து விட்டேன். தமிழில் இவ்வளவு பெரிய பதிவைச் செய்வது என்பது மிகுந்த சிரமமான ஒன்று. ஒவ்வொரு முறையும் ஏகப்பட்ட தவறுகள்.. அழித்து அழித்து டைப் செய்வதற்குள் போதும் என்று ஆகிவிட்டது..! சம்பாதித்து முடித்த அப்பாக்களும் வேலையிலிருந்து ஓய்வு பெறப் போகும் அப்பாக்களும் இதனைக் கண்ணீரோடு (என்னைப்போலவே) படிப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா...

ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா... எட்டு வயது சிறுவன் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான்.. சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார் சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான். பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான். அதற்கு அந்த கடைக்காரர் மிகுந்த கோபமுற்று இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி விட்டார். அவன் வந்து கொண்டிருந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு காரின் முன்னே சென்று விழுந்தான். அந்த கார் நிறுத்தப்பட்டது. நல்ல வேளை அடியேதும் படவில்லை. அந்த காரில் இருந்து இறங்கிய அந்த பெரியவர் அந்த சிறுவனை பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்டார். அந்த சிறுவன் நடந்ததை, கூறி பின்னர் அவரிடமே, தன்னுடைய ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி, உங்களிடம் இறைவன் இருந்தால் இந்த ஒரு ரூபாயை வைத்து கொண்டு எனக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டான். அதற்கு அந்த பெரியவர், ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு அந்த இறைவனை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான். சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை என் தாய் தான். தற்போது என் தாய் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார் என்று கூறி விட்டனர். அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த பெரியவர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவன் தானே வேண்டும், நான் தருகிறேன் என்று கூறி, ஒரு கடிதம் எழுதி, அதை ஒரு உறையுள் போட்டு கொடுத்து, இதனை கொண்டு போய் உன் தாய் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் குறிப்பிட்ட ஒரு மருத்துவரின் பெயரைச் சொல்லி அவரிடம் கொண்டு போய் கொடு என்று கூறி அனுப்பி வைத்தார். சிறுவனும் அவ்வாறே நேராக மருத்துவமனைக்கு சென்று அந்த மருத்துவரை கண்டு அந்த உறையை கொடுத்தான். அந்த உறையை பிரித்து பார்த்த மருத்துவர், மருத்துவமனையின் நிறுவனர் தன் கைப்பட எழுதிய அந்த கடிதத்தை கண்டு அதிர்ந்து போய் உடனே அந்த தாய்க்கு தீவிர உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அந்த சிறுவனின் தாயை காப்பாற்றினார். முக்கிய மருத்துவர்கள் புடை சூழ மருத்துவமனையின் நிறுவனர் (அதாவது அந்த பெரியவர்) உயிர் பிழைத்த தாயை காண வந்தார். அவர்களை பார்த்த தாய், மருத்தவ செலவை பற்றி நினைத்து, என்ன ஆகுமோ என அச்சத்தில் உறைந்து இருந்தாள். அந்த பெரியவர், அந்த ஏழை தாயிடம் கவலை படாதீர்கள், உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் உங்கள் மகன் செலுத்தி விட்டான். இதை கேட்டதும் தாய், அதிர்ந்துபோய் தன் அருகே தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்தாள். மேலும் தொடர்ந்த பெரியவர், செலவு போக மீதித் தொகையை உங்கள் மகனை படிக்க வைப்பதின் மூலம் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றார். தாய் மிகவும் பயந்து போய் அந்த பெரியவரிடம் காரணத்தை கேட்டபோது, அவர் " உங்கள் மகனின் அந்த கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் கடவுளை பெற்றே தீருவேன் என்ற விடா முயற்சி ஆகியவைதான் இந்த சேவையை செய்ய காரணம் என்று கூறினார். மனதில் நம்பிக்கை மற்றும் விடா முயற்சி இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்... அன்பே கடவுள்....அன்பே சிவம் படித்ததில் பிடித்தது...

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...