Tuesday, April 18, 2023

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மக்கள் அவதி!

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மக்கள் அவதி!

தூத்துக்குடியில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இடையில் இரண்டு நாட்கள் லேசான சாரல் மழை எட்டிப்பார்த்தாலும், போதிய மழை பெய்யவில்லை. இதனால் தொடர்ச்சியாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டியெடுத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். 

ரோடுகள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.  வாகனங்களில் செல்பவர்கள் ஆங்காங்கே ரோட்டோரம் உள்ள குளிர்பான கடைகளுக்கு சென்று வெயிலின் தாக்கத்தை தணித்தனர். இதற்காக சாலையோரங்களில் குளிர்பான கடைகள், மற்றும் இளநீர், கம்மங்கூழ்  கடை உள்ளிட்ட கடைகள் முன்பு ஏராளமானோர் குவிந்து தாகத்தை தீர்த்து வருகின்றனர். 

தர்பூசணி பழங்கள் விற்பனையும் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் சிக்னல்களில் கூட நிற்க முடியாமல் சாலையோர மரங்களின் நிழலில் ஒதுங்கி நிற்கின்றனர். கோடை வெயில் இன்னும் உக்கிரத்தை காட்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...