Wednesday, January 29, 2025

காரமடை வனப்பகுதி ,பரளிக்காடு பரிசல் துறையை


 கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ளது காரமடை வனப்பகுதி. இப்பகுதியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவை நடத்தி வருகிறது காரமடை வனத்துறை. சனி, ஞாயிறுகளில் அனுமதி. 20 பேருக்கு குறையாமல் முன்பதிவு செய்தால், எந்த நாளிலும் அனுமதிப்பார்கள். பரிசல் பயணம், மதிய உணவு, ஆற்று குளியலுக்கு பெரியவர்களுக்கு ரூ.300, 15 வயதுக்கு உட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.200 கட்டணம். கோவையில் இருந்து காரமடை வழியாக இரண்டரை மணி நேர பயணத்தில் பரளிக்காடு பரிசல் துறையை அடையலாம். காலை 10 மணி அளவில் பூச்சிமரத்தூரில் உள்ள பரிசல்துறையில் தயாராக இருக்க வேண்டும். அங்கு செல்ல பஸ் வசதி இல்லை. பைக், காரில் செல்லலாம்.

வனத்துறையினர், அப்பகுதி மலைவாழ்மக்கள் வரவேற்பார்கள். சுக்கு காபி கொடுத்து உபசரிப்பார்கள். பரிசல் கரையில் இயற்கை எழிலோடு பெரிய மரங்களும், நிழலும் ஆசுவாசப்படுத்தும். அங்கிருந்தவாறு பரிசல் நடக்கும் பில்லூர் ஆற்றின் அழகை, இருபுறமும் மலைகள் பசுஞ்சுவராய் காட்சியளிப்பதை ரசிக்கலாம். 30&க்கும் அதிகமான பரிசல்கள் உள்ளன. ஒரு பரிசலில் 4 பேர் வீதம் செல்லலாம். 2 மணி நேரம் பரிசலில் பயணிக்கலாம்.
மலையடிவாரங்களில் தற்காலிகமாக இறங்கி ஓய்வெடுக்கலாம். வனப்பகுதியில் காலாற நடக்கலாம். அங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளை பார்வையிடலாம். சலிக்க, சலிக்க மேற்கொண்ட பரிசல் பயணம் முடிந்து பரிசல் கரையில் இறங்கினால் மலைவாழ் மக்கள் சமைத்த உணவு தயாராக இருக்கும்.
அதில் களி உருண்டை, நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, கேசரி, சப்பாத்தி, கீரை மசியல், வெங்காய தயிர்பச்சடி, தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய் மினரல் வாட்டர் வழங்குவார்கள். உணவின் ருசி நம்மை கிறங்கடிக்கும். பரிசல் கரையில் உள்ள மர கயிறு ஊஞ்சலில் விளையாடி மகிழலாம்.அங்கிருந்து மாலை 3 மணியளவில் வனத்துறையினர் காரமடை செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு அழைத்து செல்வார்கள். கூழாங்கற்கள் நிறைந்த ஆற்றின் நீர் குளிர்ச்சியானது. மூழ்கி எழுந்தால் மொத்த களைப்பும் பறந்துபோய் புத்துணர்ச்சி வந்துவிடும்.
ஆற்றில் 5 மணி வரை ஆட்டம் போடலாம். பின்னர் வனத்துறையினர் வழியனுப்பி வைப்பார்கள். பரிசல் பயணம், ஆற்றுக்குளியல் வனத்துறையினரின் கண்காணிப்பில் நடப்பதால் தைரியமாக செல்லலாம். பரளிக்காடு சுற்றுச்சூழல் வனச்சுற்றுலாவை குடும்பத்தோடு குதூகலிக்கலாம். வன அதிகாரியை 90470 51011 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு 3 நாள் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.

சூரியமலை ! பாதாள குகைக்குள் கொங்கண சித்தர் !

 சூரியமலை ! பாதாள குகைக்குள் கொங்கண சித்தர் !





சித்தர் வாழும் ஒற்றை மலை
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணா புரம் ஒன்றியத்தில் உள்ளது தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதி. இங்கிருந்து மேலும் 4 கி.மீ. சென்றால் சூரியமலை தென்படும். இந்த மலையைத்தான் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒற்றை மலை என்று குறிப்பிடுகின்றனர். இந்த மலை ஊரை விட்டு சற்று ஒதுக்குப்புறமாக இருக்கிறது. இந்த மலையில் ஒரு மர்மக் குகை இருப்பதாகவும், அதற்கு பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் அங்குள்ளவர்கள் சில அமானுஷ்ய தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.
‘பாதாள குகைக்குள் வி‌ஷப்பூச்சிகள் அதிகம். அதனால் யாரும் நுழைய முடியாது. இந்தக் குகையில் கொங்கண சித்தர் என்ற முனிவர் வாழ்ந்ததாகவும், அவர் பல சித்து விளையாட்டுகளை செய்து வந்ததோடு, மருத்துவ மூலிகைகளை பயன்படுத்தி எந்தப் பொருளையும் தங்கமாக மாற்றும் வித்தையை கற்றவர்’ என்கின்றனர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மலையை குடைந்து உருவாக்கப்பட்ட மர்மமான அந்த பாதாள குகையில் 2 அறைகள் உள்ளன. முதல் அறை சற்று பெரியதாக காணப்படுகிறது. 2–வது அறை சிறியது. இந்த அறையில் தான், படுத்தபடி நுழையும் அளவுக்கு மிகச்சிறிய துவாரம் காணப்படுகிறது. அதனுள் மைதானம் போன்ற இடமும், அதில் அமைக்கப்பட்ட நாலு கால் மண்டபத்தில் தங்கப் புதையலும் இருப்பதாகவும், அந்தப் புதையலை இன்றைக்கும் அந்த சித்தர்தான் பாதுகாத்து வருவதாகவும் இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேல போய், ‘அந்த குகைக்குள் தங்க ஊஞ்சலில் அமர்ந்தபடி சித்தர் ஓய்வெடுத்து வருகிறார்’ என்கிறார்கள். ‘குகைக்குள் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே..’ என்ற அசட்டு தைரியத்தில் சில அசகாய சூரர்கள் முயற்சி செய்தும் பார்த்துள்ளனராம். ஆனால் அவர்களால் அந்த துவாரத்தின் வழியே சிறிது தூரம் கூட செல்ல முடியவில்லை. மூச்சுத் திணறல் ஏற்பட்டு, போன வேகத்திலேயே பின்வாங்கிவிட்டார்களாம்.
குகைக்கு வெளியே மலைப் பாறையில் மேடை போல செதுக்கப்பட்டு, அதில் மூலிகைகளை அரைப்பதற்கு உரல் போல ஒரு துளை உள்ளது. அந்த இடத்தில் தியானம் செய்வதற்கு ஏற்ப சிறிய மேடை போன்ற அமைப்பும் இருக்கிறது. இவையெல்லாம் கொங்கண சித்தர் அங்கு வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகளாகவே அந்தப் பகுதி மக்கள் பார்க்கின்றனர். பாதாள குகைக்கு முன்பு 100 அடி தூரத்தில் கொங்கண சித்தரின் சிலை, விநாயகர் சிலை உள்ளிட்ட பல சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. பவுர்ணமி மற்றும் வெள்ளி, சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் தவறாமல் வழிபாடு செய்து வருகின்றனர்.

திருமூர்த்தி மலையை

 

உடுமலைப்பேட்டையில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நாள் முழுவதும் பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

🛕இங்கு அமைந்துள்ள பஞ்ச லிங்க அருவியில் குளியலுக்காகவும், அமணலிங்கேஸ்வரர் தரிசனத்திற்காகவும் இங்கு ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்கள் என்றால் இரண்டு மடங்கு சுற்றுலாப்பயணிகள் இங்கு குவிந்து விடுகின்றனர்.
🚶🚶‍♂️கோவிலில் இருந்து சற்று மேல் நோக்கி நடந்தால் திருமூர்த்தி அருவியை அடையலாம், மூலிகை நிறைந்த நீர் சில்லென்று கொட்டும் அருவியில் குளித்தால், அனுபவம் சொல்ல வார்த்தைகள் இல்லை,
🍛உணவு தயார் செய்து எடுத்து போய் விட்டால் அருமையாக இந்த இடத்தை அனுபவிக்கலாம், காரணம் நிறைய கடைகளில் உணவு தரமானதாக இல்லை என்பதே, அருகில் உள்ள அமராவதி அணைக்கு சென்றால் மீன் சாப்பாடு சுட சுட கிடைத்து எனக்கு, உங்கள் அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்க தெரிந்துகொள்வோம்,
🚙நீங்கள் எங்கு இருந்து பயணப்பட்டாலும்
கோவை காந்திபுரத்தில் இருந்து சரியாக 82 கிலோ மீட்டர் பயணித்தால் திருமூர்த்தி மலையை அடைந்துவிடலாம்.
🚌திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 84 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தலம் அமைந்துள்ளது. வார இறுதியில் குழந்தைகளுடன், பெரியவர்களும் ஜாலியாக சென்றுவர ஏற்ற ஸ்பாட் இது

Monday, January 27, 2025

பாம்பாட்டி சித்தர்.. ஆச்சர்ய சித்தர்

 பாம்பாட்டி சித்தர்.. ஆச்சர்ய சித்தர்

பாம்பாட்டி ஒருவர் பாம்புகள் பிடிப்பதில் வல்லவர். எத்தகைய கொடிய விஷமுள்ள பாம்பும் இவர் கண் பார்வைக்கும், கைப்பிடிக்கும் தப்பித்துச் செல்ல முடியாது. பக்கத்திலுள்ள காடு ஒன்றில் நவரத்தினப் பாம்பொன்று இருப்பதாகக் கேள்விப்பட்டு அக்காட்டினுள் சென்றார்.
இரவு நேரம். இருட்டில் பாதை தெரியாமல் தட்டுத்தடுமாறிக்கொண்டு காட்டினுள் நடந்து கொண்டிருந்த பாம்பாட்டியின் எதிரே பிரகாசமான ஒளியுடைய பாம்பொன்று மெல்ல ஊர்ந்து கொண்டு சென்றது.
அதன் அழகில், அதன் ஒளியில் ஆட்பட்டு அதனைப் பிடிக்கவும் செய்யாமல் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தார். தேடிப்போன புதையலைக் கண்ணெதிரே கண்டுங்கூடக் கைப்பற்ற
முடியாதவராகி ஏதோ சிந்தைனையில் அப்படியே ஆடாமல்அசையாமல் நின்றார். கொஞ்ச நேரத்தில் அந்தப் பாம்பு தவயோகி ஒருவராக வடிவமெடுத்து நின்றது.
அவர்தான்" சட்டைமுனி சித்தர். "
இந்த சட்டைமுனி சித்தர் அந்தப் பாம்பாட்டிக்கு நல்லறிவு புகட்டினார்.
உலக நிலையாமையைக் கூறினார். பின்னர் அவருக்குத் தீட்சையளித்து மறைந்தார்
தாயுமானவரின் சித்தர் கனம் பகுதியைப் போலவே பாம்பாட்டி சித்தரும் ‘சித்தர் வல்லபங்கூறல்’ பகுதியைப் பாடியுள்ளார்.
.
நாங்களெல்லாம் சித்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவோம்.
எங்களுக்கு அபூர்வ சக்திகள் பல உண்டு.
இதற்கெல்லாம் காரணம் நாங்கள் இறைவன் மேல் பற்றும் ஏனைய பொருள்களின் மேல் பற்று இல்லாதவர்களாயிருப்பதே என்று சித்தர்களின் வல்லபத்தைக் கூருகிறார் பாம்பாட்டிச் சித்தர்.
"சீயும் மலமுஞ் செந்நீரும் நிணமும்
சேர்ந்திடுதுர்நாற்றமுடைக்குடமது
உடைந்தால்
நாயும் நரியும் பேயும் கடுகும்
நமதென்றே தின்னு மென்றடாய் பாம்பே"
எவ்வளவு சீரும் சிறப்புமாய் வளர்த்த இந்த உடலானது உலகில்
பார்க்கின்ற பொருளையெல்லாம் தனதென்றே சொந்தம் கொண்டாடும்,
சீழும் குருதியும் மலமும் சேர்ந்த இந்த நாற்றக்குடமான உடல் இறந்து விட்டால் நாயும், நரியும், பேயும், கழுகும் என்னுடையது இந்த உடல் என்று பங்கு போட்டுச் சாப்பிட ஆரம்பித்து விடும்.
இப்பொழுது சொல்லுங்கள், இந்த உடல் நம்முடையதா? அல்லது நாய் நரிகளுக்குச் சொந்தமானதா? என்று
கேள்வி விடுக்கின்றார் பாம்பாட்டிசித்தர்.
மனிதர் என்னதான் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடினாலும் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு என்று இந்தச் சித்தர் அறுதியிட்டுக் கூறுகின்றார்.
“நாறுகின்ற மீனைப் பல தரம் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவினாலும் அதனது இயல்பான நாற்றம் போகாது. அதுபோல மனிதன் என்னதான் பரிகாரங்கள் செய்தாலும் அவன் செய்த பாவ வினைகள் அவனை விட்டகலாது அவனைத் தண்டித்தே தீரும் என்கிறார்.
என்னதான் புனித நீராடினாலும் பாவங்கள் தண்டனைக் குரியவையே என்பது பாம்பாட்டியாரின் தீர்ப்பாகும்.
"சொல்லும் புளியம்பழத்தி னோடு போலீவ”
எத்தனை சொந்தங்கள் நமக்குத் துணை நின்றாலும் அவையெல்லாம் உண்மையான சொந்தங்கள் அல்ல என்றும் "இறைவன்" ஒருவனே நம்முடைய உண்மையான சொந்தம் என்றும் உணர்ந்து "மேல் ஓட்டினுள் ஒட்டாத புளியம் பழம் "போல வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பாம்பாட்டிச் சித்தர் அறிவுரை கூறுகின்றார்.
சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கர நாராயணசாமி கோவில் பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி மிக அருகில் உள்ளது.

கொடைக்கானலில் உள்ள மதிகெட்டான் சோலையை பற்றி அறிந்து கொள்வோம்

 கொடைக்கானலில் உள்ள மதிகெட்டான் சோலையை பற்றி அறிந்து கொள்வோம்...

கொடைக்கானல் நகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பேரிஜம் ஏரிக்கு அருகில் இந்த மதிகெட்டான் சோலை உள்ளது...
400 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடுகளைக் கொண்டது மதிகெட்டான் சோலை சூரிய ஒளி கீழே படாத அளவிற்கு மிகவும் அடர்த்தியான காடுகள்...
மனிதர்கள் உள்ளே சென்றால் வெளியே வர முடியாதபடி பாதை மறந்து போகும் அளவுக்கு மிகவும் அடர்ந்த காடுகள்...
தமிழ்நாட்டிலேயே மர்ம காடுகள் என்று அழைக்கப்படுகிறது இந்த மதிகெட்டான் சோலை..
மனிதர்களுக்கு ஒவ்வாத தாவரங்கள் பூவாசம் இங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை

 சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?
அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள். அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள். பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம்.

அதிகமாக போக்குவரத்து நடைபெறும் 10 தேசிய நெடுஞ்சாலைகள்:

 தமிழகத்தில் 24 மணி நேரமும் லாரி, கார் என அதிகமாக போக்குவரத்து நடைபெறும் 10 தேசிய நெடுஞ்சாலைகள்:

1. NH - 44 ( Sri Nagar - Kanniyakumari)
ஒசூர் - கிருஷ்ணகிரி - சேலம் - கரூர் - திண்டுக்கல் - மதுரை - திருநெல்வேலி - கன்னியாகுமரி சாலை.......
2. NH 48 ( New Delhi - Chennai)
சென்னை - காஞ்சிபுரம் பைபாஸ் - ராணிப்பேட்டை - வேலூர் - வாணியம்பாடி - கிருஷ்ணகிரி சாலை
3. NH 32 ( Chennai - Thindivanam)
NH - 132 ( Thindivanam - Vizhupuram )
NH 38 ( Vellore - Tuticorin)
சென்னை - திண்டிவனம் - விழுப்புரம் - பெரம்பலூர் -
திருச்சி - மதுரை - தூத்துக்குடி
4. NH 544 ( Salem - Cochin)
சேலம் - பவானி - கோவை
5. NH 79 : ( Ulundurpet - Salem )
உளுந்தூர்பேட்டை - கள்ளக்குறிச்சி -ஆத்தூர் - சேலம்
6. NH 83 ( Coimbatore - Nagapattinam)
கோவை - பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல் - திருச்சி - தஞ்சாவூர் -நாகை
7. NH 179 A ( Salem - Vaniyambadi)
சேலம் - அரூர் - ஊத்தங்கரை - திருப்பத்தூர் - வாணியம்பாடி
8. NH 77 ( Krishnagiri - Thindivanam )
கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை - திருவண்ணாமலை - செஞ்சி - திண்டிவனம்
9. NH 81 ( Coimbatore - Trichy - Jayankondam -Chidambaram)
இதில் கோவை - பல்லடம் - கரூர் - திருச்சி - கீழப்பழூர்
இந்த நெடுஞ்சாலையில் கீழப்பழூர் வரை மட்டுமே போக்குவரத்து அதிகமாக இருக்கும்.......கீழப்பழூர் முதல் சிதம்பரம் வரை அவ்வளவாக இருக்காது....
10. NH 716 ( Chennai - Bellary)
சென்னை - திருவள்ளூர் - திருத்தணி - திருப்பதி
மாநில நெடுஞ்சாலையில்
திருச்சி - நாமக்கல் இடையே 24 மணி நேரமும் அதிகமான போக்குவரத்து நடைபெறுகிறது........

சித்தர்களின் தாய் வீடு என்று போற்றப்படும் ஆதி கதிர்காமம்

 ஒவ்வொரு வருடமும் ஒருமாத கால விரதமிருந்து செல்லும் அற்புதமான, அமானுஷ்யமான, ஆபத்தான கபில்வத்தை காட்டுவழி பயணம்....

(1) இலங்கையில் சித்தர்களின் தாய் வீடு என்று போற்றப்படும் ஆதி கதிர்காமம்....
(2) ஆதியில் குபேரன் இங்கு வழிபாடு இயற்றியதாக வரலாறு....
(3) தொடர்ச்சியாக 8 மணிநேரம் இலங்கையில் அடர்ந்த யாள மோனராகலை காட்டுக்குள் பல சிற்றாறுகள், வனங்களை கடந்து பயணித்தால் இயற்கையே கோயிலாக அமைத்த ஒரு அற்புத சித்தர்கள் வனம்...
(4) எந்த வித வெளியுலக தொடர்புமே இல்லாத சித்தர்களின் புனித பூமி
(5) முருக பெருமான் தவமியற்றி, அற்புத சக்திகளை பெற்று ஆதி சமாதியாகி ஒளியில் கலந்த அற்புத இடம்....
(6) நவகோடி சித்தர்களுக்கும் முருக பெருமான் தவத்தை கற்று கொடுத்த இடம்.....
(7) போகர் பெருமான் ஆதியில் தவமியற்றிய தபோவனம்
(😎 கதிர்காமத்தில் ஆதியில் இருந்த போகர் பெருமான் நவ பாஷாணங்களை கொண்டு உருவாக்கிய நவ பாஷாண வேல், நவாக்ஷரி யந்திரத்தை மறைத்து வைத்த இடம்...
(9) கஜபாகு மன்னன் முதல் முதலில் இலங்கையில் கண்ணகி வழிபாடு நடத்திய இடம்....
(10) இன்று வரை இலங்கையில் சிம்மாசனத்தில் அமரும் அரசர்கள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் இங்கு சென்று வழிபாடு நடத்திய பின் தான் பதவியில் அமர்வது சாசனமாகவே உள்ளது. (முதல் முதலில் சிங்கள வரலாற்றில் துட்டகைமுனு இங்கு தொடங்கி வைத்தான். இந்த விதிமுறையை....
(11) முறையாக ஒருமாத காலம் விரதமிருந்து குறிப்பிட்ட விதிமுறைக்கமைய சென்று வழிபாடு நடத்தினால் கேட்ட வரங்கள் உடனே கிடைக்கும் அற்புத இடம்... (இது வரை என் அனுபவத்தில் பல்லாயிரம் பேரிடம் பார்த்த அனுபவம்....
(12) இன்று வரை வேற்று கிரக வாசிகள் வந்து இறங்கும் அற்புத இடமாக இந்த இடம் போற்ற படுகிறது....
1ம் நாள்:-
---------------
உகந்தை மலை நோக்கி பயணித்து மாலை உகந்தை மலை முருகன் ஆலயத்தை அடைதல்.
இரவு 7 மணிக்கு உகந்தை மலையில் வேல் பூஜை, 210 சித்தர்கள் வேள்வி, சிறப்பு அறிவுறுத்தல்கள் இரவு உணவை எடுத்தல், பயணம் பற்றிய அனைத்து அறிவுறுத்தல்கள் விடயங்களை பகிரல், தொடர்ந்து அனைவரும் ஓய்வு எடுத்தல்.
2ம் நாள்:-
----------------
அதிகாலை 5.30க்கு உகந்தை ஆலயத்தில் பயணம் சிறப்பாக அமைய சிறப்பு வழிபாடுகள்...
காலை 6.00 மணிக்கு விசேட ஜீப் மூலம் உகந்தையில் இருந்து கபிலவத்தை பயணம் ஆரம்பம். குமண சரணாலயத்தை கடந்து குமுக்கன் அம்மன் ஆலயத்தை அடைதல்.
காலை 8 மணிக்கு குமுக்கன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள "மிக சக்தி வாய்ந்த வன தேவதைக்கு சிறப்பு பொங்கல், சிறப்பு மடை பூஜைகள், சிறப்பு வன தேவதைகளுக்கு வன பூஜை"
தொடர்ந்து கபிலவத்தை நோக்கி பயணம்.....
காலை 11 மணிக்கு கும்பகர்ணன் ஆறு என்று சொல்லப்படும் குமுக்கன் ஆறு உற்பத்தியாகும் கும்பக கர்ப்ப பாறையில் அனைவரும் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடு செய்தல். தொடர்ந்து மதிய உணவை எடுத்து கொண்டு அனைவரும் கபில வத்தை நோக்கி பயணம்.....
மாலை 4மணியளவில் கபிலவத்தை சித்தர்கள் வனத்தை அடைதல். அனைவரும் ஓய்வெடுத்து சித்தர்கள் வனங்கள் அனைத்தும் சுத்தி பார்த்தல்.
மாலை 5 மணிக்கு புண்ணிய ஆத்மாக்கள், வன தேவதைகள் அனைத்தும் வாசம் செய்யும் பாவங்களை எல்லாம் போக்கும் அபூர்வ மூலிகை சக்திகளை கொண்ட கபில நதி எனப்படும் கபிலவத்தை "கங்கையில் மரகத லிங்கத்துக்கு மாபெரும் ருத்ர அபிஷேகம்"
இரவு 7 மணிக்கு இரவு போசனங்கள் எடுத்தல், பயணத்தில் அனைவரின் அனுபவங்களை பகிரும் கலந்துரையாடல்....
இரவு 12 மணிக்கு நள்ளிருளில் அனைத்து தேவதைகளும் உலா வரும் சித்ரா பௌர்ணமி நன்னாளில் அற்புத நேரத்தில் கபில வன கங்கை கரையில் "இந்த உலகத்தை ஆளும் 210 சித்தர்களின் அதி சக்தி வாய்ந்த சித்தர்கள் வேள்வி, சிறப்பு வன பூஜை," சிறப்பு கூட்டு வழிபாடு. தொடர்ந்து கங்கை கரையில் அனைவரும் உறங்குதல்.....
3ம் நாள்:-
----------------
காலை 5 மணிக்கு நதியில் நீராடி நம் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற சப்த கன்னிகைகளுக்கு சிறப்பு பூஜை வழிபாடு, விசேட பொங்கல் பூஜை, இந்த உலகை நவகோடி சித்தர்களின் அருளாட்சியின் கீழ் முருக பெருமான் வாசம் செய்யும் கபில வன புளியமர நிழலில் கீழ் மாபெரும் கூட்டு வழிபாடு. தொடர்ந்து வனபோஜனம் செய்து வனத்தில் இயற்கை உணவை உட்கொள்ளல்....
காலை12 மணிக்கு அனைத்து வழிபாடுகளும் நிறைவு பெற்று கபிலவத்தையில் இருந்து மீண்டும் உகந்தை நோக்கி பயணித்தல்.
மாலை 6மணிக்கு உகந்தை ஆலயத்தில் இருந்து மீண்டும் நம் இல்லங்களுக்கு பயணித்தல்.
ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து முக்கியமான நம் சித்தர்களின் . நண்பர்களுடன் மட்டும் அங்கு சென்று நான் தரிசிக்கும் அபூர்வ பயணம்...
தொடர்ந்தும் அவன் அழைப்பான்... பயணிப்பேன்....
அவன் அழைப்பு இல்லாமல் கனவிலும் கூட யாரும் இங்கு சென்று சக்திகளை அடைய முடியாது....
அவன் அருளாலே
அவன் தாள் வணங்கி.....
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்

Saturday, January 25, 2025

தாம்பரத்திலிருந்து செங்கோட்டை சிலம்பு அதிவேக விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20681 தாம்பரத்திலிருந்து செங்கோட்டை சிலம்பு அதிவேக விரைவு ரயில் வாரம் மும்முறை (புதன், வெள்ளி, மற்றும் சனி ) ஆகிய தினங்களில்

தாம்பரம் :8:55pm
செங்கல்பட்டு :9:23pm மேல்மருவத்தூர் :9:48pm
விழுப்புரம் :10:58pm விருத்தாசலம் :11:40pm திருச்சிராப்பள்ளி :1:45Am .
புதுக்கோட்டை :2:30Am
காரைக்குடி :3:03Am தேவகோட்டை ரோடு :3:11Am சிவகங்கை :3:35Am
மானாமதுரை :4:03Am அருப்புக்கோட்டை :4:54Am
விருதுநகர் :5:18Am திருத்தங்கல்:5:36Am
சிவகாசி :5:44Am ஶ்ரீவில்லிபுத்தூர்:5:59Am ராஜபாளையம் :6:13Am சங்கரன்கோவில் :6:38Am பாம்புக்கோவில் சந்தை :6:54Am கடையநல்லூர்:7:09Am
தென்காசி :7:48Am செங்கோட்டை :8:30Am
#குறிப்பு ( இனி சிலம்பு அதிவேக விரைவு ரயில் சென்னை எழும்பூர் செல்லாது தாம்பரத்தில் இருந்து தான் புறப்படும் மற்றும் வந்து சேரும் )
அவசியம் #Share செய்யுங்கள் இது ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கும் 💯
தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் அருகாம்பச்சை என்றும்,

 உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை: அதிர்ந்து போன மருத்துவர்கள்.

இன்றைக்குத் தான் சாதாரண தலைவலிக்கே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். நம்முன்னோர்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கையில் மூலிகைகளே பிரதானமாக இருந்தது.
அவர்களின் மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகை தான் அருகாம்பச்சை என்றும், சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி. இதன் பூர்வீகம் மேலை நாடு என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் நம்மூரு காடுகளிலும் திபு, திபுவென வளர்ந்து விடுகிறது. அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச் செடி மூன்றடி உயரம் மட்டுமே வளரும். இதன் இலைகள் முருங்கை இலைகள் போல, சின்னதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். இந்த செடியில் மஞ்சள் நிறத்தில் பூவும் பூக்கும்.
இவை வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடவை. இதன் இலைகள், வேர்கள், காய்கள் அனைத்தும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது. இவை வீடு, வணிக நிறுவனங்களிலும் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இந்த மூலிகை செடி இருக்கும் இடத்தில் ஈக்கள் மொய்க்காது. இந்த செடி நாய், பூனைகளுக்கும் ஆகாது.
இந்த இலைக்கு எழும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றலும் உண்டு. முதுகு தண்டு பாதிப்பை குணமாக்கும். முதுகுத்தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளையும் இது குணமாக்கும். சிறுநீர் கழிக்கும் போது அவரும் எரிச்சலைப் போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும். கருப்பை பாதிப்புகளையும் அகற்றும். இந்த இலைகளுக்கு மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மையும் உண்டு. மன அழுத்தத்தினால் உருவாகும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி இரத்தத்தை தூய்மைப்படுத்தி வயிற்றுப் புழுக்கள அழிக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடல் சூட்டையும் போக்கும். மேலும் அதனால் ஏற்படும் வாத உடல் வலி, வயிற்று வலியையும் போக்கும். சுளுக்கைக், கூட இந்த இலை சுளுக்கெடுத்து விடும். அதாவது போக வைத்துவிடும். மூலவியாதி, உடல் அணுக்களை பாதிக்கும் புற்றுவியாதி ஆகியவற்றையும் சரி செய்யும்.சுவாச பாதிப்பை போக்கும்.
இந்த இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப் போல் கடைந்து உணவில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் மூட்டு வலி, சிறுநீர்ப்பை அடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஓடிவிடும்.
இதேபோல் இந்த இலையை நிழலில் உலர்த்து, இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதிமதுரப்பொடி, சதகுப்பை, கருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, இதையெல்லா பொடியாக்கி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அதில் சிறிதளவு எடுத்து அத்துடன் பணங்கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
உங்களை மன அழுத்தம் வாட்டுகிறதா? அதற்கும் கூட சதாப்பு இலை மருந்து தான். இந்த இலைகளை சிறிதுஎடுத்து, நன்கு மையமாக அரைத்து அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும்.
இந்த இலைச்சாறை தேனில் குழைத்தும் சாப்பிடலாம். இந்த இலையை நன்றாக அரைத்து அந்த விழுதை மிளகுத்தூள் சேர்த்து, கொஞ்சம் எடுத்து தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு சங்கில் இட்டு வாயில் ஊட்டினால் குழந்தைகளின் மார்பு சளி மட்டுப்படும்.
பக்கவாத பாதிப்பால் பலரும் வீட்டுக்குள் முடங்கிப் போய் இருப்பார்கள். இவர்கள் சதாப்பிலைகளை நன்றாக அரைத்து உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவினால் சிறிது, சிறிதாக பாதிப்புகள் அகலும். இதேபோல் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் இது குணமாக்கும். இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீர் வற்றியதும் ஆறவைத்து தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை பருகினால் மூட்டுவலி சரியாகும். குடல் புழு அழியும். இரத்த நாள அடைப்புகள் இருந்தால் அதையும் போக்கிவிடும்.
ஞாபசக்தியை அதிகரிப்பது, கண் வீக்கம், வலியை போக்குவது என இதன் பயன்கள் இன்னும் அதிகம். உங்க ஊர் நாட்டு மருந்து கடைகளில் இந்த இலை கிடைக்கிறதா என முயற்சித்து பாருங்களேன்.

தூத்துக்குடி இருந்து பாலக்காடு பாலருவி தினசரி விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16791 தூத்துக்குடி இருந்து பாலக்காடு பாலருவி தினசரி விரைவு ரயில் உள்ளது தூத்துக்குடி :10:00pm

துத்தி-மேலூர் :10:07pm
திருநெல்வேலி :10:55pm
சேரன்மகாதேவி :11:13pm
அம்பாசமுத்திரம் :11:29pm
கீழகடையம்:11:39pm
பாவூர்சத்திரம்:11:49pm
தென்காசி :12:03Am
செங்கோட்டை :12:35Am
தென்மலை :1:39Am
புனலூர் :2:40Am
அவனீஸ்வரம்:2:54Am
கொட்டாரக்கரை:3:03Am
எழுகோன்:3:10Am
குந்தாரா:3:20Am
கொல்லம் :4:30Am
பெரிநாடு:4:46Am
முண்ட்ரோத்துருத்து:4:52Am
சாஸ்தாங்கோட்டை:5:00Am
கருநாகப்பள்ளி:5:11Am
ஓச்சிறை :5:21Am காயம்குளம்:5:31Am
மாவேலிக்கரை:5:42Am
செரியநாடு:5:49Am
செங்கன்னூர்:5:56Am
திருவல்லவாழ்:6:07Am
சங்கனாச்சேரி:6:17Am
கோட்டயம்:6:40Am
ஏற்றுமானூர்:6:54Am
குருப்பந்தாரா:7:05Am
வைக்கம் சாலை:7:17Am
பிறவம்:7:26Am
முளந்துருத்தி:7:38Am
திருப்பூணித்துறை:7:52Am
எர்ணாகுளம் டவுன் :8:38Am
ஆலுவா:9:05Am
அங்கமாலி:9:17Am
திருச்சூர்:9:57Am
ஒட்டப்பாளையம்:10:48Am
பாலக்காடு:12:00pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

உயிரோட்டமுள்ள நந்தி

 உயிரோட்டமுள்ள நந்தி

சிவசைலம் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில் திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது.
ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி இந்திரன் தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும் சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று அங்கிருந்து செல்ல எழ முயற்சித்தது. மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியது. இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருக்கிறது. உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும் இந்த நந்தியின் மீது பார்க்க முடியும். இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும் அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும் அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன.

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

 நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் நாக சாதுக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனர் கும்பமேளாவுக்குப் பிறகு, அவர்கள் எங்கு திரும்பி செல்கின்றனர்?
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாஜ்ராஜில் தொடங்கி உள்ளது. இந்த கும்பமேளாவில் கலந்து புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர். கும்பமேளாவின் போது, #சனாதன தர்மத்தின் தனித்துவமான மற்றும் மிகவும் துறவி மரபின் ஒரு பகுதியாக இருக்கும் நாக சாதுக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் கும்பமேளாவின் முக்கிய ஈர்ப்பாகவும் ஆன்மீக நிகழ்வின் மையமாகவும் உள்ளனர்.
நாக சாதுக்களின் மர்மமான வாழ்க்கை காரணமாக, அவர்களை கும்பமேளாவில் மட்டுமே சமூக ரீதியாகக் காண முடியும். அவர்கள் கும்பமேளாவிற்கு எப்படி வருகிறார்கள், அங்கிருந்து எப்படி செல்கிறார்கள் என்பது ஒரு மர்மம், ஏனென்றால் அவர்கள் பொதுவில் வந்து செல்வதை யாரும் பார்த்ததில்லை. லட்சக்கணக்கான இந்த நாக சாதுக்கள் எந்த வாகனத்தையும் அல்லது பொது வாகனத்தையும் பயன்படுத்தாமல், மக்களால் பார்க்கப்படாமல் கும்பமேளாவுக்கு வருகிறார்கள்.
அவர்கள் இமயமலையில் வசிப்பதாக நம்பப்படுகிறது, மேலும் அவர்கள் பொது மக்களிடையே காணப்படும் ஒரே நேரம் கும்பமேளா மட்டுமே. கும்பமேளாவில் உள்ள இரண்டு பெரிய நாக அகாராக்கள் மகாபரிநிர்வாணி அகாரா மற்றும் வாரணாசியில் உள்ள பஞ்சதஷ்ணம் ஜூனா அகாரா ஆகும்.
பெரும்பாலான நாக சாதுக்களும் இங்கிருந்து வருகிறார்கள். பெரும்பாலும் நாக சாதுக்கள் திரிசூலங்களை ஏந்தி தங்கள் உடல்களை சாம்பலால் மூடிக்கொள்கின்ற்னர். அவர்கள் ருத்ராட்ச மணிகள் மற்றும் விலங்குகளின் தோல்கள் போன்ற பாரம்பரிய உடைகளையும் அணிவார்கள்.
கும்பமேளாவில் குளிப்பதற்கான உரிமையை முதலில் பெறுபவர்கள் இவர்களே, அதன் பிறகு மற்ற பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அதன் பிறகு அவர்கள் அனைவரும் அந்தந்த மர்ம உலகங்களுக்குத் திரும்புகிறார்கள். அவர்களின் இந்த மர்ம உலகம் எங்கே என்பதை தெரிந்து கொள்வோம்...
நாக சாதுக்களின் மடம் (அகதாஸ்)
கும்பமேளாவின் போது, நாக சாதுக்கள் தங்கள் அகதாக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். கும்பமேளாவுக்குப் பிறகு, அவர்கள் அந்தந்த அகதாக்களுக்குத் திரும்புகிறார்கள். அகதாக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன, மேலும் இந்த சாதுக்கள் அங்கு தியானம், சாதனா மற்றும் மத போதனைகளைப் பயிற்சி செய்கிறார்கள்.
ரகசிய மற்றும் ஒதுங்கிய சாதனா
நாக சாதுக்கள் தங்கள் துறவி வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர்கள். கும்பமேளாவுக்குப் பிறகு, பல நாக சாதுக்கள் சாதனா மற்றும் தபஸ்யா செய்ய இமயமலை, காடுகள் அல்லது பிற அமைதியான மற்றும் ஒதுங்கிய இடங்களுக்குச் செல்கிறார்கள். அவர்கள் கடினமான தவங்கள் மற்றும் தியானத்தில் நேரத்தை செலவிடுகிறார்கள், இது அவர்களின் ஆன்மா மற்றும் சாதனாவின் முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கும்பமேளா அல்லது பிற மத நிகழ்வுகள் நடைபெறும் போது மட்டுமே அவர்கள் பொதுவில் வருகிறார்கள்.
புனித யாத்திரைத் தலங்களில் வசிப்பது
சில நாக சாதுக்கள் காசி (வாரணாசி), ஹரித்வார், ரிஷிகேஷ், உஜ்ஜைன் அல்லது பிரயாக்ராஜ் போன்ற பிரபலமான புனித யாத்திரைத் தலங்களில் வசிக்கிறார்கள். இந்த இடங்கள் அவர்களுக்கு மத மற்றும் சமூக நடவடிக்கைகளின் மையமாகும். எப்படியிருந்தாலும், ஒரு நாகராக மாறுவது அல்லது புதிய நாகர்களின் தீட்சை பிரயாகை, நாசிக், ஹரித்வார் மற்றும் உஜ்ஜைன் கும்பமேளாவில் மட்டுமே நடைபெறுகிறது.
மதப் பயணங்கள்
நாக சாதுக்கள் இந்தியா முழுவதும் மதப் பயணங்களை மேற்கொள்கின்றனர். பல்வேறு கோயில்கள், புனித யாத்திரைத் தலங்கள் மற்றும் மத நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் அவர்கள் தங்கள் இருப்பைக் குறிக்கின்றனர்.
பல நாக சாதுக்கள் ரகசியமாக வாழ்கிறார்கள், வழக்கமான சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்களின் ஆன்மீக பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை அவர்களை சமூகத்திலிருந்து வேறுபட்டவர்களாகவும், சுயாதீனமானவர்களாகவும் ஆக்குகிறது.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...