Tuesday, March 15, 2022

காரடையான் நோன்பு ஸ்பெஷல் !

காரடையான் நோன்பு ஸ்பெஷல் !

மல்லிகையும் மணமும் போல
மஞ்சளும் மங்கலமும் போல
கம்பனும் கவியும் போல
கண்ணனும் கீதையும் போல!

உமையும் மகேஸ்வரனும் போல
உண்மையும் நிம்மதியும் போல
காஞ்சியும் காமாட்சியும் போல
கருணையும் காஞ்சிகுருவையும் போல!

உருகும்மனமும் குருவருளும் போல
உருகாதவெண்ணையும் ஓரடையும் போல
பிரியாதவுறவும் பிரியமும் போல
தரவேணும் குருவே வரமதுபோல!

ஹரஹர சங்கர எனும் உயர் நாமம்
தினம் பாடியே இங்கு உயர்வோம் நாமும்!
ஜயஜய சங்கர என்று இனியேனும்
தினம் துதித்து வளர்வோம் மேன்மேலும்!!

 சுமங்கலிகள் தங்களின் கணவர்களின் நலனுக்காக அனுஷ்டிக்கும் காரடையான் நோன்பு நாளான இன்று மஹாபெரியவாளின் ஆசிகளும் அநுக்கிரமும் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

 ஹர ஹர சங்கர ! 
ஜெய ஜெய சங்கர !

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...