Tuesday, March 15, 2022

ஸ்ரீ_ஆதிசங்கர_பகவத்பாதர்_அருளிச்செய்த_வில்வாஷ்டகம்_தமிழ்மொழியில்

🌿#ஸ்ரீ_ஆதிசங்கர_பகவத்பாதர்_அருளிச்செய்த_வில்வாஷ்டகம்_தமிழ்மொழியில்🌿

மூன்று தளம் மூன்று குணம் மூன்று விழி மூவாயுதம்
மூலமெனக் கோலம் தரும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

முப்பிறவி துயர் நீக்கும் முப்பிரிவாய் விளங்கிடுமே
புனிதமெலாம் அள்ளித் தரும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கோடி கோடி கல்யாணம் செய்து வைக்கும் இனிய பலன்
குறைகளின்றி தந்திடுமே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

காசி சேஷ்த்தரம் வசிப்பதனால் கால பைரவ தர்சனத்தால்
வரும் பலனை தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

பூச்சிகளால் வீணாகா அதிசயமாம் வில்வதளம்
மங்களமே தினம் அருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

திங்கள் எனும் இந்துவாரம் விரதமுடன் பூஜை செய்ய
ஏற்ற தளம் வில்வதளம்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

வாஜபேயம் சோமயாகம் வளர்க்கின்ற யாகபலன்
அத்தனையும் தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கயைபிரயாகை யாத்திரையை செய்வதனால் வரும் பலனை
தந்திடுமே வில்வதளம்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

சாளக்கிராமம் வணங்கும் பலன் சான்றோரை வணங்கும் பலன்
தந்தருளும் எந்நாளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கோடி யானை தான பலன், அஸ்வமேத யாக பலன்
ஆயிரமாய் தந்திடுமே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

காண்பதுவும் புண்ணியமே தொடுவதுவும் புண்ணியமே
கனிவருளும் நெஞ்சினிலே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

பாடசாலை ஆலயங்கள் பல ஆயிரம் அமைப்பதனால்
வருகின்ற பலன் அருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

அன்னதானம் ஆயிரமாய் செய்கின்ற ஜென்ம பலன்
அளித்திடுமோர் அர்ச்சனையே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

வில்வாஷ்டகம் தன்னை சிவனருகில் உரைப்போர்க்கு
செல்வமெலாம் கூடி வரும்
சிவனருளும் தினம் வரும்

🍃நமசிவாய🍃

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...