Monday, February 7, 2022

திருமலை அமிர்தகலச பிரசாதம்!

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தி..!

உடனே, குழந்தைப்பேறு கிடைக்கவும், பிறக்கும் குழந்தையினால் பெற்றோருக்கு சிறப்பினை உண்டாக்கும் திருமலை அமிர்தகலச பிரசாதம்!

ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும், திருமலை திருப்பதியில பெருமாளுக்கு அமிர்தகலசம் அப்படிங்கிற ஒரு பிரசாதம் நைவேத்யம் செய்யறாங்க.

இது அரிசிமாவு, மிளகு,வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படும் ஒரு பிரசாதம்.

சாமிக்கு நைவேத்யம் செய்துவிட்டு, அடுத்து கருடாழ்வாருக்கு நைவேத்யம் செஞ்சபிறகு, இந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்யறாங்க.

இதோட சிறப்பு என்னன்னா, அமிர்தகலசம் சாப்பிடும் தம்பதிகளுக்கு உடனே, குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதுதான்..,

அதுமட்டுமில்லாம,இந்த அமிர்தகலசம் பிரசாதம் எடுத்துக்கொண்ட தம்பதிகளுக்குப் பிறக்கும் அந்த குழந்தையினால் அந்தத் தம்பதிகளுக்கு சிறப்பு உண்டாகும் என்றும் ஆகம சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அளவிற்கு விசேஷ சக்தி கொண்ட பிரசாதம்தான் அமிர்தகலசம்..!

இந்த அமிர்தகலசம் ஞாயிறு காலை மட்டுமே திருமலை திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

குழந்தை இல்லை அப்படிங்கிற மனக்குறையோட தவிச்சிட்ட இருக்கற தம்பதிகள், இந்த அமிர்தகலசம் பிரசாதத்த வாங்கி சாப்பிட்டு, பெருமாளோட அருளால, உங்க குறைய போக்கிக்கலாம்.

அது மட்டுமில்லாம,பெருமாளோட பரிபூரண ஆசியோட பிறக்கும் அந்தக் குழந்தையால, உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் பெருமை கிடைக்கும் அப்படிங்கறதும், எத்தனை பெரிய ஆசீர்வாதம்..!

அதனால, குழந்தை இல்லாத தம்பதிங்க திருப்பதி கோயில்ல, இந்த அமிர்தகலசம் பிரசாதம் வாங்கிச்சாப்பிட்டு, உங்க குறை தீர, எல்லாம் வல்ல அந்த வேங்கடவன் அருளவேண்டும்னு, பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

அமிர்தகலசம் எனும் இந்தப் பிரசாதத்தை வாங்கறதுக்கு வார,வாரம் ஞாயித்துக்கிழமைகள்ல குழந்தை இல்லாத தம்பதிகள் மத்தியில கடும் போட்டி இருப்பதா சொல்றாரு டாக்டர் ரமண தீட்சிதர்.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...