Wednesday, January 1, 2025

தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு...

 

தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு...

ஆசியாவிலேயே அதிகமாக காற்று வீசும் இடம் எந்த நேரமும் 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிக்கொண்டே இருக்கும்..
கம்பம் மெட்டு வழியாகவும் இந்த இடத்திற்கு செல்லலாம் அல்லது குமுளிக்கு சென்று குமுளியில் இருந்து மூணாறு செல்லும் சாலை வழியாக நெடுமங்கண்டம் வழியாகவும் இந்த இடத்திற்கு வரலாம்...
உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் பட கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோ ஆசியாவில்லையே எனக்குப் பிடித்த சுற்றுலா தளங்களில் இந்த இடம் முதன்மையானது என்று குறிப்பிட்டுள்ளார்...
இந்த இடத்திற்கு மேலும் அழகு தருவது மலை உச்சியில் உள்ள குறவன் குறத்தி சிலை தான்..
வாருங்கள் ஒரு முறையாவது சென்று வருவோம்.


அழகிய சீத்தார்குண்டு அருவியும்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்...

கண்ணுக்கும் நெஞ்சிக்கும் குளிர்ச்சி தரும் அழகிய மாவட்டம் பாலக்காடு மாவட்டம்...
கேரளா மாநிலத்தின் மிக அழகான அணை மிகப்பெரிய பூங்காவுடன் கூடிய அணை மலப்புழா அணை...
அணைக்கு அருகில் பாலக்காடு கோட்டை மிகவும் பிரம்மாண்டமான கோட்டை...
கேரளாவின் மிக அழகிய கிராமம் என்றால் அது கொல்லங்கோடு கிராமம் தான்...
கொல்லங்கோடு கிராமத்தின் அழகிய வயல்வெளிகள் முடிந்தவுடன் தொடங்கும் மலைப்பகுதிகள் அதுவே நெல்லியம்பதி மலைகள்...
நெல்லியாம்பதி மலையில்தான் அதிக காபி தோட்டங்கள் உள்ளது..
அழகிய சீத்தார்குண்டு அருவியும் உள்ளது

மகிழ்ச்சி என்பது என்ன...?

மகிழ்ச்சி என்பது என்ன...?

பிரபல துருக்கியக் கவிஞர் ஒருமுறை தனது ஓவிய நண்பரான அபிதின் தினோ என்பவரிடம் 'மகிழ்ச்சி' என்ற ஓவியத்தை உருவாக்கச் சொன்னார்.
ஒரு குடும்பம் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை ஓவியமாக ஓவியர் சித்தரித்தார்.
கட்டிலின் ஒரு கால் உடைந்து, இரண்டு செங்கற்களால் தாங்கப்பட்டு, பாழடைந்த அவர்களது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகிக் கொண்டிருந்தது.
ஒரு குடை அந்த மழை நீரை தடுத்துக்கொண்டிருந்தது. அந்த குடும்பத்தின் நாய் கூட படுக்கையில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது.
இந்த ஓவியம் அழியாததாக உலக புகழ் பெற்றதாக மாறியது.
இந்த ஓவியத்தை ஆழமாகப் பார்த்து, உண்மையில் மகிழ்ச்சி என்றால் என்ன என்று சிந்தியுங்கள் நண்பர்களே...
இந்த படத்தைப் பார்த்த பிறகு, மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் இல்லாதது அல்ல, கடினமான சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டு அமைதியைக் காண்பது என்று நான் நம்புகிறேன்.
சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், உங்களிடம் இருப்பவற்றில் நல்லதைப் பார்க்க முயற்சி செய்யுங்கள்.
இருப்பதை சரியாக பயன்படுத்தினால், நினைப்பது தானாக வரும்.
நிம்மதி என்பது புற விஷயங்களில் அல்ல. அக விஷயங்களில் உள்ளது. உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி வருத்தப்படுவதை நிறுத்துங்கள்.
உங்கள் இதயம் கனமாக இருக்கும் போதெல்லாம், இந்த ஓவியத்தை நினைவில் கொள்ளுங்கள்.
எப்பொழுதும் திருப்தியாகவும் நிம்மதியாகவும் தூங்குங்கள்

அழகு சுந்தரா…

 

==================================

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்…
==================================
கயிலையில் அலங்கார மண்டபத்தில் ஒரு முறை சிவபெருமான் தன்னை கண்ணாடியில் கண்டார்.
ஒரு கணம் அவர் அழகில் அவரே சொக்கிப் போய்விட்டார். நம்மில் சிலர் கண்ணாடியில் தெரியும் நம் உருவத்தை பார்த்து பேசுவதில்லையா?
அது போல கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை நோக்கி, “அழகு சுந்தரா… கொஞ்சம் வெளியே வா!” என்று அழைத்தார்.
அழைப்பது யார்?
காலத்தையே நிர்ணயிப்பவன் அல்லவா?
அவரது வாக்கினின்று வெளிவருவது என்ன சாதாரண வார்த்தைகளா?
வேதங்களைவிட புனிதமானவை ஆயிற்றே..!
எனவே கண்ணாடியில் பார்த்து ரசித்த உருவம், உடனே நேரில் வந்துவிட்டது.
நிழல் நிஜமாகிவிட்டது….
பரமன் வாக்கிற்கு உள்ள வலிமை!!
தன்னுடைய பிம்பத்திலிருந்து வந்த அந்த உருவத்திற்கு ‘சுந்தரர்’ என்று பெயரிட்டார்.
பெயர் சூட்டினால் போதுமா?
ஏதாவது பணி தரவேண்டுமல்லவா?
தன்னுடைய திருநீற்று பேழையை தாங்கும் பணியை கொடுத்தார்.
(நிழலுக்கு கிடைச்ச பாக்கியத்தை பார்த்தீங்களா? ஹூம்… நிழலாய் இருந்தாலும் நல்லோர் நிழலாய் இருக்கவேண்டும்!)
எப்போதெல்லாம் இறைவன் திருநீறு பூசவேண்டும் என்று கருதுகிறானோ அப்போதெல்லாம் திருநீறு கொண்டு போகும் பணியை செய்து வந்தார் நிழலில் இருந்து உருவான ‘சுந்தரர்’. அதாவது ஈசனின் நேரடி உதவியாளர்.
நந்திக்கும் கிடைக்காத பேறு இது.
தேவர்கள் பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் உருவானது அல்லவா?
அந்த விஷத்தின் வீரியத்தால் பலரது பார்வை பாதிக்கப்பட்டது. அனைவரும் சிதறி ஓடினர். கடைசியில் அவர்கள் தஞ்சமடைந்த இடம் கயிலை. ஈசன் உடனே தனது முதன்மைத் தொண்டர் சுந்தரரைத் அந்த விஷத்தை எடுத்து வரச் சொன்னார். சுந்தரரும் சென்று அந்த விஷத்தை திரட்டி ஒரு சிறிய நெல்லிக்கனி அளவாக ஆக்கினார்.
அதை கொண்டு வந்து ஈசனிடம் ஒப்படைத்தார். ஈசன், இதை வெளியே விட்டுவைத்தால் ஆபத்து என்று கருதி உடனே அதை தான் வாங்கி விழுங்கிவிட்டார். இதைக் கண்டு அன்னை பதறிப் போய, விஷம் உள்ளே இறங்காதவாறு, தொண்டையில் கை வைத்துப் பிடித்தாள். விஷம் அப்படியே நின்றது.
அப்போது முதல் ஈசனுக்கு திருநீலகண்டம் என்று பெயர் ஏற்பட்டது.
விஷத்தை பார்த்தோர், அதை நுகர்ந்தோர், என அனைவரும் பாதிக்கப்பட்ட நிலையில், சுந்தரருக்கு மட்டும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம், அவர் தினசரி திருநீற்றுப் பேழையை தாங்கி வந்ததால் திருநீற்றுக்கு விஷத்தை முறிக்கும் சக்தி உண்டு.
விஷத்தை தாங்கி வந்ததால் சுந்தரருக்கு ஆலால சுந்தரர் என்ற திருநாமம் உண்டாயிற்று.
சரி… இப்படி அணுக்கத் தொண்டராய் இருந்தவர் எப்படி பூவுலகில் பிறந்தார்?
கயிலையில் மிகப் பெரிய நந்தவனம் ஒன்று உண்டு. சிவபூஜைக்கு சிவகணங்கள் அங்கு தான் பூக்களை பறிப்பது வழக்கம். பார்வதி தேவியின் பணிப்பெண்களும் அங்கு தான் பூக்களை பறிப்பார்கள்.
ஒருமுறை சுந்தரர் அந்த நந்தவனத்தை கடந்து செல்ல முற்பட்டபோது, அப்போது அங்கு பூக்களை பறிக்க வந்த பார்வதி தேவியின் பணிப்பெண்கள் கமலினி, அனந்திதை என்ற இருவரையும் பார்த்தார். ஒரு இனம் புரியாத பரவசம் ஏற்பட்டது. அவர்கள் பேரழகில் மயங்கினார். அவர்களும் ஆலால சுந்தரரின் அழகில் மயங்கினர்.
இது இறைவனுக்கு உடனே தெரிந்துபோனது.
“சுந்தரா… நீ புவலகில் சென்று பிறந்து எல்லாவித இன்பங்களையும் துய்த்துப் பின்னர் மீண்டும் கயிலை வந்தால் போதும்” என்றார்.
சுந்தரர் கலங்கிப் போனார்… “தேவ தேவா… தங்களை விட்டு இமைப் பொழுதும் என்னால் பிரிந்திருக்க முடியாதே… என்னை மன்னித்து நல்லருள் செய்யுங்கள் சுவாமி” என்று பல்வேறு விதமாக மன்றாடினார்.
“கவலை வேண்டாம்… உரிய நேரம் வரும்போது நாம் உன்னை தடுத்தாட்கொள்வோம்” என்று திருவாய் மலர்ந்தருளினார் திருநீலகண்டர்.
பூலோகப் பிறப்பு
ஈசனின் ஆணையின்படி, பூவுலகில் தமிழகத்தில் திருநாவலூர் என்னும் தலத்தில் சடையனார்-இசைஞானியார் என்னும் சிவநெறி வழுவாமல் வாழ்ந்து வந்த தம்பதியர்க்கு மகனாக பிறந்தார் சுந்தரர்.
திருவாரூரில் உள்ள ஈசன் மீது அக்குடும்பத்தினர் பெரும் பக்தி கொண்டிருந்ததால் தங்கள் மகவுக்கு நம்பியாரூரர் என்று பெயரிட்டனர்.
பாலகனாயிருந்த நம்பியாரூரரின் அழகையும் தேஜஸையும் கண்டு வியந்த நரசிங்க முனையர் என்னும் குறுநில மன்னன், “இக்குழந்தை சம்பந்தரின் மறுபிறப்போ?” என்று எண்ணி வியந்து, நம்பியாரூரரின் பெற்றோரான சடையனார் – இசைஞானியார் இருவரின் அனுமதியையும் பெற்று தனது அரண்மனைக்கு கொண்டு சென்று, கல்வியும் ஞானமும் புகட்டி செல்லப் பிள்ளை போல வளர்க்கலானார்.
உரிய பருவம் வந்ததும் அவனுக்கு உபநயனம் செய்வித்து பல்விரு வித்தைகளையும் பயிற்றுவித்தார்.
அழகின் சிகரமாய் திகழ்ந்தார் இளைஞர் நம்பியாரூரர். அவருக்கு “நான்… நீ…” அனைவரும் போட்டிபோட்டு பெண்கொடுக்க முன்வந்தனர். புத்தூரைச் சேர்ந்த சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் மகளுக்கு நம்பியாரூரை திருமணம் செய்விப்பது என்று முடிவு செய்து, திருமணம் நிச்சயத்தினர்.
சுந்தரருக்காக ஏற்கனவே கமலினியும் அனந்திதையும் பரவை நாச்சியாராகவும், சங்கிலி நாச்சியாராகவும் பிறந்து காத்திருக்க, இவர் இப்பெண்ணை மணந்துகொண்டால் என்னாவது? மேலும் உரிய நேரத்தில் தான் தடுத்தாட்கொள்வோம் என்று ஈசன், சுந்தரரிடம் கயிலையில் வாக்கு கொடுத்திருந்தபடியால், இறைவன் ஒரு கிழவரைப் போல வேடந்தாங்கி மணக்கோலத்தில் மங்கல நாண் கட்ட தயாராக இருந்த சுந்தரரிடம் வந்து நின்றார்.
“நிறுத்து… நம்மிடையே ஒரு வழக்கிருக்கிறது.
அதைத் தீர்த்த பிறகு உன் திருமணத்தை வைத்துக்கொள்” என்றார்.
பின்னர் சபையோரிடம், சுந்தரரின் பாட்டன், “நானும் எனது சந்ததியினரும் உனக்கு அடிமை” என்று எழுதி வைத்துச் சென்ற ஓலையை காண்பித்து சுந்தரர் தன் அனுமதியின்றி திருனமணம் செய்ய இயலாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
திருமணம் நின்றது. வெகுண்டெழுந்த சுந்தரர், அவர் கையிலிருந்த ஓலையை பிடுங்கி கசக்கி எறிந்து “போடா பைத்தியக்காரா” என்றார்.
“இது படி ஓலை தான். மூல ஓலை என்னிடம் பத்திரமாக இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பஞ்சாயத்து கூடி, சுந்தரர் முதியவருக்கு அடிமை என்றும் அவர் சொல்படியே கேட்கவேண்டும் என்று தீர்ப்பானது.
தொடர்ந்து முதியவர் சுந்தரரை அழைத்து திருவெண்ணெய்நல்லூர் கோவிலுக்குள் புகுந்து பின்னர் மாயமாகிப் போனார். சித்தம் கலங்கிய சுந்தரர் செய்வதறியாது திகைத்து நின்று பொது, சிவபெருமான் ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு காட்சி தந்து, சுந்தரருக்கு கயிலையில் நடந்த அனைத்தையும் நினைவூட்டி, உன் அவதார நோக்கத்தை நிறைவேற்றவே நாம் உன்னை தடுத்தாட்கொண்டோம்.
நீ நம்மோடு வன்சொற்களைச் சொல்லி வன்றொண்டர் என்கிற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினோடு செய்யத்தக்க அருச்சனையாவது பாடலேயாம்.
ஆதலால், நம்மேலே தமிழ்ப்பாட்டுக்களைப் பாடு” என்று அருளிச்செய்ய சுந்தரர் அவரை ஏச பயன்படுத்திய “பித்தா என்ற வார்த்தையைக் கொண்டே முதல் பாடலை பாடியருளினார்.
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்
மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால்
வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே
சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ‘திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101 மட்டுமே.
சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
“நீள நினைந்தடியேன்” என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம். இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.
சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன், பொருள், மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார்.
திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்….’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்தார். இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
சிவ சிவ

புலஸ்தியர் மகரிஷியால்

அகத்தியர்- ஓரு அதிசயம்! அபூர்வம்! ஆச்சர்யம்!

காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா. அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது, அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால், அவர்களுக்கு அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார்.
அபூர்வமான இந்தப் படத்தில் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உள்ளது.
1. அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு ‘தேவதாரு மரம்’.
2. அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம், போன்ற அனைத்தும் ‘திருத்தோடகன்’ என்னும் பொற்கொல்லரால் பிரத்தியேகமாக அகத்தியருக்காக செய்து கொடுக்கப்பட்டது.
3. அகத்தியர் அணிந்திருக்கும் பூணூலானது, விபூதி கலந்த ஒரு நிறத்தில் இருக்கும். இதன் பெயர் ‘திரிபூரணம்’ என்பதாகும். இது கௌதம முனிவரால் கொடுக்கப்பட்டது.
4. அகத்தியரும், லோபமுத்திரா அன்னையும் அணிந்திருக்கும் பூமாலையானது வன்னி, வில்வம், துருக்கத்தி, செம்பாலை ஆகிய 4 விதமான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையாகும். இந்த மாலையை தொடுத்துக் கொடுத்தவர் லோபமுத்ரா அன்னையின் தோழியான ‘பர்வதினி’ என்பவர்.
5. லோபமுத்ரா தேவியானவர் ஶ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மிகப் பெரிய சக்தி உபாசகி. அம்பாளின் மிகப் பெரிய சிஷ்யையாக லோபமுத்ரா தேவியைப் பற்றி ‘லலிதா திரிசதை’ யில் கூறப்பட்டுள்ளது. ஶ்ரீ வித்யா உபாசனை செய்பவர்கள் சிவப்பு நிற பட்டு உடுத்துவர். அதனால் சிவப்பு நிற பட்டு தான் லோபமுத்ரா அன்னைக்கு திருமண ஆடையாக நெய்யப்பட்டது.
7. லோபமுத்ரா அன்னை அம்பாளையே அடைய வேண்டி நின்றதால் ‘லோபா’ என்று பெயர் வந்தது. ‘முத்திரா’ என்றால் ஆனந்தத்தைப் பெற்றவள் என்று பொருள்.
8. லோபமுத்ரா அன்னை காலில் அணிந்திருக்கும் மெட்டியானது ‘சரளி’ எனப்படும் ஒரு அபூர்வ வகையான வைரக்கல்லால் ஆன அணிகலானாகும். இதைக் கொடுத்ததே அகத்தியர் தான்.
9.லோபமுத்ரா அன்னையின் அருகில் உள்ள மயிலானது, அவரது தோழியான ‘சேதத்தரணி’ என்பவராவார்.
10. அகத்தியர் அருகில் உள்ள மான், அவரின் முதன்மைச் சீடரான புலஸ்தியர் மகரிஷியே ஆவார்.
11. லோபமுத்ரா அன்னையின் தோளில் அமர்ந்திருக்கும் கிளியானது மிகவும் விசேஷமானது. அன்னையினால் கண்டறியப்பட்ட மகாவித்தை ஒன்று உண்டு. அது ‘ஹாதி வித்தை’. அந்த வித்தைக்குரிய தேவியே லோபமுத்திரை தான். அந்த வித்தையை உபாசனை செய்து யோகநிலையில் வந்த ஒரு பெண் தான் ‘மயூஷினி’. அவரே கிளி உருவத்தில் அமர்ந்திருக்கிறார்.
12. லோபமுத்ரா அன்னையின் கையில் உள்ளது ‘அமிர்தக்கலசம்’. இது பரமேஸ்வரனால் கொடுக்கப்பட்டது.
13. அன்னையின் கூந்தலில் ‘பொற்காந்தல்’ எனப்படும் ஒரு மலர் சூடியிருக்கிறார்கள்.
இவ்வளவு விசேஷங்கள் நிறைந்த இந்த அபூர்வ திருமணக் காட்சியானது பொதிகை மலையில் உள்ள வடகிழக்கு பகுதியில் இருக்கும் ‘பூமண் மேடு’ என்னும் இடத்தில் தான் நிகழ்ந்தது. இந்த அரிய நிகழ்வுகள் அனைத்தும் அகத்தியரின் தலைமைச் சித்தரான புலஸ்தியர் மகரிஷியால் கூறப்பட்டது.
இவருக்கு பிடித்த பூ மல்லிப்பூ பிரசாதம் தயிர் சாதம் ஈம் என்ற பிஜட்சார மந்திரம் இவருடையது. ஓம் அகத்திசாய நமஹ நாமம் சொன்னால் அருள் புரிவார்.

Tuesday, December 31, 2024

ரமண_மகரிஷி

*#ரமண_மகரிஷி_ஜெயந்தி*

ஸ்ரீ ரமணர் மதுரைக்குக் கிழக்கே முப்பது மைல் தொலைவிலுள்ள திருச்சுழி என்னும் கிராமத்தில் 1879-ஆம் ஆண்டு #டிசம்பர்_30 ஆம் நாள் பிறந்தார்.பெற்றோர்கள் சுந்தரமய்யர் அழகம்மை ஆவர்.ரமணருக்கு பெற்றோர் வைத்த பெயர் #வேங்கட_ராமன்.அவருக்கு நாகசாமி என்ற மூத்த சகோதரரும் நாக சுந்தரம் என்ற இளைய சகோதரரும் உண்டு.அலமேலு இளைய சகோதரி.
திருச்சுழி பஞ்சாயத்துத் தலைவராயிருந்த சுந்தரமய்யர் இறந்த போது ரமணருக்கு வயது பதினொன்று.தந்தையின் மரணம் வாழ்வு,சாவு பற்றிய உண்மையை அவருக்கு உணர்த்தியது.ரமணருக்கு விளையாட்டில் இருந்த அளவு விருப்பம் படிப்பில் இல்லாமல் போனது. தந்தையின் மறைவுக்குப் பிறகு சுந்தரமய்யரின் சகோதரர்களான சுப்பையரும், நெல்லையப்பரும் அக்குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.ரமணர் மதுரையில் இருந்த சித்தப்பா சுப்பையர் வீட்டில் தங்கிப் படித்தார்.
1896 ஜூலை மாதத்தில் ஒரு நாள் வீட்டு மாடியில் இருந்த போது அவரை மரண பயம் கவ்விக் கொண்டது அவர் முழு உணர்வோடு இருந்தாலும் உடல் பிணம் போல் விறைத்துப் போனது.அவருள் ‘நான் என்பது என்ன?’என்ற கேள்வி எழுந்தது.உடம்பின் செய்கையில் இருந்து வேறுபட்டு இயங்கும் ஓர் ஆற்றல் அது என்று அவர் உணர்ந்தார்.அந்த உணர்வு உறுதிப்பட அவருடைய மரணபயம் நீங்கியது.அந்நிகழ்ச்சிக்குப் பிறகு சாதாரண வாழ்க்கை என்பது அவருக்கு இயலாது போயிற்று.அடிக்கடி அவருக்கு சமாதி அனுபவம் ஏற்பட்டது.
ஒரு நாள் சுப்பையரைப் பார்க்க வந்த நண்பரொருவர் தாம் #திருவண்ணாமலை சென்று வந்ததையும் #அருணாசலேஸ்வரர் மகிமையையும் கூறக் கேட்டார் ரமணர். அப்போது மகரிஷி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.அந்த நண்பர் சொன்னதைக் கேட்டதிலிருந்து அவருக்குப் படிப்பில் நாட்டம் குறைந்தது.ஸ்ரீரமணருக்கு மனம் முழுவதும் அருணாச்சல நினைவாயிருந்தது.திருவண்ணாமலையிலிருந்து தமக்கு அழைப்பு வந்ததாய் அவருக்குத் தோன்றியது.வீட்டில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றார்.‘நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவரது உத்தரவின் பேரில் கிளம்பிவிட்டேன்.இது நல்ல காரியத்தில் பிரவேசித்து இருக்கிறது.யாரும் இது குறித்து வருந்த வேண்டாம் என்பதே அக்கடிதத்தில் இருந்த செய்தி.தடைகள் பல கடந்து 1896 செப்டம்பர் முதலாம் நாள் அவர் திருவண்ணாமலையை அடைந்தார்.நேராக கோவில் கருவறைக்குச் சென்று ‘அப்பா, நான் வந்து விட்டேன் என்று தன் வருகையை அறிவித்தார்.
சில மாதங்கள் உடலை மறந்து இதயத்தில் மூழ்கி இதய ஆனந்தத்தில் திளைத்தார்.முழு மவுனத்தில் இருந்தார்.அவ்வப்போது யாரேனும் ஒரு கவளம் உணவை அவருடைய வாயில் திணிப்பார்கள்.அவர் உணவிட்டவரையும் அறியார் தாம் உண்டதையும் அறியார்.ரமணரைத் தரிசிக்க பக்தர்கள் திரள் திரளாய் வந்தனர்.அது அவருடைய தியானத்துக்கு இடையூறாக இருந்தது.அவர் பாதாள லிங்கேசுவரர் கோயிலுக்குள் இருந்த குகையில் தியானத்தைத் தொடர்ந்தார்.சேஷாத்ரி சுவாமிகள் மூலம் அவரது பெருமை மேலும் பரவலாயிற்று.மீனாட்சி அம்மாள் என்கிற பெண்மணி அவருக்குத் தொண்டு செய்து வந்தார்.பிற்பாடு ‘குருமூர்த்தம்’, ‘மாந்தோப்பு’ என்று இடம் மாறி நிஷ்டையில் இருந்தார்.பல குன்றுகளிலும், குகைகளிலும் தியானம் செய்தார்.
ரமணரின் இருப்பிடம் தேடி அவரது தாயாரும், மூத்த சகோதரரும் அவரைக் காண வந்தனர்.மகான் நிலையில் இருந்தவரைக் கண்டு வியந்தனர்.தங்களுடன் ஊருக்கு வரும்படி அழைத்தனர்.ஆனால் ரமணர் அவர்களுடைய வேண்டுகோளை மறுத்துவிட்டார்.கணபதி முனிவர்,சிவப்பிரகாசம் பிள்ளை போன்றோர் ரமணருக்கு நெருக்கமாயினர்.அருணாச்சல பஞ்சரத்னம்,உபதேசசாரம்,அட்சரமணி மாலை போன்ற பல நூல்களை ரமணர் இயற்றினார்.அவர் மிகவும் எளிமையானவர்.பின்னாளில் ஆசிரமம் அமைத்து வசித்தபோது அங்கே பக்தர்களுக்கு உணவு சமைக்கும் வேலையிலும் உதவுவார்.அவர் சிக்கனமானவர்.சிறு காகிதத் துண்டையும் தூக்கி எறியாமல் ஏதாவது குறிப்புகள் எழுதப் பயன்படுத்துவார்.பறவைகளிடத்தும் விலங்குகளிடத்தும் அன்பு காட்டிய ரமணரின் புகழ் எங்கும் பரவியது.வெளிநாட்டவர் பலரும் அவரைத் தரிசிக்க வந்தார்கள்.உள்நாட்டிலும் சிலர் அவருடனேயே சீடர்களாய் தங்கிவிட்டனர்.அவர்கள் எல்லாருடைய சௌகரியத்துக்காகவும் பின் ஆசிரமம் அமைக்கப்பட்டது.
ரமணருடைய மூத்த சகோதரர் இறந்த பின் அண்ணியாரும் காலமானார். இளைய சகோதரி துறவறம் மேற்கொண்டார். இளையவர் நாக சுந்தரத்தின் மனைவியும் மரித்தார்.அதனால் ரமணரின் தாயாரும் இளைய சகோதரரும் திருவண்ணாமலைக்கே வந்து விட்டனர்.இளையவர் ‘நிரஞ்ஜனானந்த சுவாமிகள்’ என்கிற தீட்சா நாமத்துடன் (ரமணரால் தீட்சையளிக்கப்பெற்று) ஆசிரமப் பொறுப்பேற்றார்.1922 மே மாதம் உடல் நலக் குறைவுற்று தாயார் இறந்த போது ரமணர் அவருக்கு ஹஸ்த தீட்சை அளித்து பிறப்பற்ற முக்தி கிடைக்கச் செய்தார்.ரமணர் ஆசிரமம் பெரிய அளவில் வளர்ச்சி கண்டது.அவருடைய நூல்களை வெளியிட்டு விற்பனை செய்ய ஆசிரமத்தில் ஒரு தனிப் பிரிவே இயங்கி வந்தது.
ரமணருக்கு எழுபது வயதானபோது உடம்பில் கட்டிகள் தோன்றின.அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டது.அறுவை சிகிச்சை செய்தும் தொந்தரவு நீங்கிய பாடில்லை.அவருடைய எழுபதாவது வயதைக் குறித்து ரமண ஜெயந்தி வெகு விமரிசையாய் கொண்டாடப்பட்டது.சுவாமிகள் தங்களை விட்டுப் போவதை எண்ணி பக்தர்கள் பெருந்துயரத்துக்குள்ளாயினர்.அவர் சொன்னார் ‘நான் எங்கே போவேன் இங்குதான் இருப்பேன் என்று.அன்று 16.4.1950 வெள்ளிக்கிழமை இரவு மணி 8.47.பகவான் ரமணர் மகா சமாதி அடைந்தார்.அவர் மரணம் அடைந்த அன்று வானில் ஒளி மிக்க விண்மீனாய் அவர் ஆன்மா ஊர்ந்து சென்றது.அருணாசலத்தின் உச்சியை அடைந்து மறைந்தது.அன்று ஆயிரக்கணக்கானவர்கள் அந்த ஜோதியைக் கண்டனர்.இன்றும் ஒவ்வோர் இதயத்திலும் ஒளிவிடும் விளக்காய் அவர் விளங்குகிறார்.

கொஞ்சம் தேனி பக்கம் வாங்க.

ஊட்டி, கொடைக்கானலைப் பார்த்து போர் அடிச்சிருச்சா.. கொஞ்சம் தேனி பக்கம் வாங்க.. கம்மி பட்ஜெட்டுல நிறைய விசிட் செய்யலாம்!

வைகை அணை: தேனியில் இருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கும் இங்கு சிறுவர் பூங்காவும் உண்டு
(1 / 6)
வைகை அணை தேனியில் இருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கும் இங்கு சிறுவர் பூங்காவும் உண்டு.
சுருளி அருவி: தேனியில் இருந்து 49 கி.மீ தொலைவில் இருக்கும் பாதுகாப்பான அருவி, சுருளி அருவி ஆகும். இங்கு அனைவரும் நின்று குளிக்கவும் உடை மாற்றவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து மூலிகைகளுடன் கலந்து வரும் இந்த சுருளி அருவி நீர் உடலுக்கு புதுத்தெம்பைத் தரக்கூடியது.
(2 / 6)
சுருளி அருவி: தேனியில் இருந்து 49 கி.மீ தொலைவில் இருக்கும் பாதுகாப்பான அருவி, சுருளி அருவி ஆகும். இங்கு அனைவரும் நின்று குளிக்கவும் உடை மாற்றவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து மூலிகைகளுடன் கலந்து வரும் இந்த சுருளி அருவி நீர் உடலுக்கு புதுத்தெம்பைத் தரக்கூடியது.
மேகமலை: தேனியில் இருந்து சின்னமனூர் வழியாக 51 கி.மீ பயணித்தால் குலுகுலு மேகமலையை அடையலாம். தங்குமிடம் வசதியுண்டு.
(3 / 6)
மேகமலை: தேனியில் இருந்து சின்னமனூர் வழியாக 51 கி.மீ பயணித்தால் குலுகுலு மேகமலையை அடையலாம். தங்குமிடம் வசதியுண்டு.
கொழுக்குமலை: தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இருந்து சூரியநெல்லி சென்று, அங்கிருந்து ஜீப் மூலமாக கொழுக்கு மலையை அடையலாம். கொழுக்கு மலை தேனி மாவட்டத்தில் இருந்தாலும் பாதை வசதி இல்லாததால், இன்றும் கேரள மாநில எல்லைக்குள் நுழைந்து தான், கொழுக்கு மலை செல்ல வேண்டும். தேனியில் இருந்து சூரியநெல்லிவழியாக 65 கி.மீ பயணித்து கொழுக்குமலையை அடையலாம். கேம்பிங் செய்யவும், சூரிய உதயத்திற்கு உற்ற இடமாக இந்த இடம் திகழ்கிறது. இங்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலை பொடி தயாரிக்கும் தொழிற்சாலையும் உண்டு.
(4 / 6)
கொழுக்குமலை: தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இருந்து சூரியநெல்லி சென்று, அங்கிருந்து ஜீப் மூலமாக கொழுக்கு மலையை அடையலாம். கொழுக்கு மலை தேனி மாவட்டத்தில் இருந்தாலும் பாதை வசதி இல்லாததால், இன்றும் கேரள மாநில எல்லைக்குள் நுழைந்து தான், கொழுக்கு மலை செல்ல வேண்டும். தேனியில் இருந்து சூரியநெல்லிவழியாக 65 கி.மீ பயணித்து கொழுக்குமலையை அடையலாம். கேம்பிங் செய்யவும், சூரிய உதயத்திற்கு உற்ற இடமாக இந்த இடம் திகழ்கிறது. இங்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலை பொடி தயாரிக்கும் தொழிற்சாலையும் உண்டு.
கும்பக்கரை: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ளது, கும்பக்கரை அருவி. கொடைக்கானல் மலைப்பகுதியில் உருவாகும் ஒன்றிணைந்து இந்த அருவியை உருவாக்குகிறது. இங்கு கெஜம் எனப்படும் சுழல்கள் இருப்பதால் சற்று பாதுகாப்பாக குளிக்கவேண்டிய அருவி.
(5 / 6)
கும்பக்கரை: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ளது, கும்பக்கரை அருவி. கொடைக்கானல் மலைப்பகுதியில் உருவாகும் ஒன்றிணைந்து இந்த அருவியை உருவாக்குகிறது. இங்கு கெஜம் எனப்படும் சுழல்கள் இருப்பதால் சற்று பாதுகாப்பாக குளிக்கவேண்டிய அருவி.
மேகமலை சின்னசுருளி: தேனியில் இருந்து கடமலைக்குண்டு வழியாக 46 கி.மீ பயணித்தால் சின்னசுருளியை அடைந்து ஜில்லென மூலிகை குளியல் போடலாம். இந்த அருவி சற்று வனத்தில் இருப்பதால் ஒரு குழுவாக சென்றால் பாதுகாப்பான முறையில் குளித்துவிட்டு வரலாம். அருவிக்குள் பிளாஸ்டிக் கேன்கள், கவர்கள் எடுத்துச் செல்ல தடையுண்டு.
(6 / 6)
மேகமலை சின்னசுருளி: தேனியில் இருந்து கடமலைக்குண்டு வழியாக 46 கி.மீ பயணித்தால் சின்னசுருளியை அடைந்து ஜில்லென மூலிகை குளியல் போடலாம். இந்த அருவி சற்று வனத்தில் இருப்பதால் ஒரு குழுவாக சென்றால் பாதுகாப்பான முறையில் குளித்துவிட்டு வரலாம். அருவிக்குள் பிளாஸ்டிக் கேன்கள், கவர்கள் எடுத்துச் செல்ல தடையுண்டு.
மற்ற கேலரிக்கள்

திருநெல்வேலி,

 திருநெல்வேலி, திருநவேலி, நெல்லை என்று தமிழர்களாலும் , தின்னெவெளி (TINNEVELLY) என்று ஆங்கிலேயர்களாலும் அழைக்கப்படும், தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரம்.

தலைநகர் சென்னையிலிருந்து 625 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இம்மாவட்டத்தில் ஒவ்வொரு ஊர்களுமே தனிச்சிறப்பைக் கொண்டுள்ளன.
#நெல்லையின்_சிறப்புகள்
மிகவும் புகழ்பெற்ற நகரங்கள் :
திருநெல்வேலி , சங்கரன்கோவில் , தென்காசி , அம்பாசமுத்திரம், வள்ளியூர், திசையன்விளை, நாங்குநேரி ஆகும். செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி தினமாக கொண்டாடப்படுகிறது.
பெயர் விளக்கம்:
16 ஆம் நுற்றாண்டு நுல் வேணுவனப் புராணம் திருநெல்வேலிக்கு 'வேணுவனம்' என்று பெயர் சூட்டிப் பாடுகிறது. 'வேணு' என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும்.
தனது அடியாரின் காய்வதற்காக போட்ட நெல் மழையில் நனைந்து விடாமல் திருவே (இறைவனே) #வேலியாக நின்று பாதுகாத்ததால். திருநெல்வேலி என்று பெயர்காரணம். இன்றும் ஆண்டு தோறும் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நெல்வயல்களே வேலியாக உடைய ஊர் என்கிற பொருளில் 'திருநெல்வேலி' எனவும் அழைக்கப்படுகிறது.
இரட்டை நகரங்கள் :
திருநெல்வேலியும் #பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன. தாமிரபரணி ஆறு ஆனது இவ்விரு நகரங்களுக்கிடையே ஒடுகின்றது. பாளையங்கோட்டை கல்வி நிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் #ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது.
பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.
இரட்டை நகரங்களை இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலமும் அங்கிருந்து தெரியும் நகரின் காட்சியும் அழகானவை.

சிறப்புகள் :
பழம் பொருட்கள் கண்டுபிடிப்பு :
சேரன்மாதேவிக்கு அருகே தோண்டி எடுக்கப்பட்ட கல் ஆயுதங்கள், ஜெர்மன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சீவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த பகுதியான மருகால்தலையில் உள்ள பாறைக் குடைவுகளில் பாலிமொழியில் அசோகன் கல்வெட்டுகளும், பௌத்தர்களின் படுக்கைகளும் காணப்படுகின்றன.
மொகலாயர் காலத்தில் கட்டப்பட்ட நாராயணம்மாள் சத்திரம் இவ்வூரில் இருக்கிறது.
திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. உக்கிரபாண்டியன் கட்டிய கோட்டையும், அகழியும் இன்றும் உக்கிரன்கோட்டையில் காணலாம்.
வீரகேரளம்புதூரில் ஊற்றுமலை ஜமீன்களின் அரண்மனை இன்றுள்ளது. மலையடிக் குறிச்சியிலும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழின் தோற்றம் :
தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் பாணினியையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.
திருநெல்வேலி ஆன்மீக சுற்றுலா தளங்கள் :
1.காந்திமதி சமேத நெல்லையப்பர் கோவில்.
2.தென்காசி விஸ்வநாதர் திருக்கோவில்.
3.சங்கரன்கோவில் கோமதியம்மன் கோவில்.
4.பண்பொழி திருமலைகுமாரக் கோவில்.
5.திருப்புடைமருதூர் திருக்கோவில்.
6. பாபநாசநாதர் திருக்கோவில், பாபநாசம்.
7. குற்றாலநாதர் திருக்கோவில், குற்றாலம்.
8.சொரிமுத்து அய்யனார் கோவில்.
9.கிருஷ்ணாபுரம் கோவில் சிற்பங்கள்.
10.திருக்குறுங்குடி நம்பி கோவில்.
11.நாங்குநேரி பெருமாள் கோவில்.
12.பணகுடி இராமலிங்கசுவாமி கோவில்.
13.வள்ளியூர் முருகன் கோவில்.
14.நித்திய கல்யாணி அம்மன் கோவில்.
15.சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில்.
16.குறுக்குத்துறை முருகன் கோவில்.
17. அம்பாசமுத்திரம் சிவன் கோவில்.
18.உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில்.
19.குட்டம் ஆனந்தவல்லியம்மன் கோவில்.
20.நவ திருப்பதி (நவ கைலாயங்கள்).
21.கைலாசநாதர் கோவில், அம்பை.
22.விஸ்வாமித்திரர் கோவில், விஜயாபதி.
23.அகத்தியர் கோவில், அகத்தியமலை.
24.இராஜகோபாலசுவாமி கோவில்,ஜங்சன்.
25.வரதராஜ பெருமாள் கோவில், தருவை.
26.பாளை கதீட்ரல் தேவாலயம்.
27.உவரி கப்பல்மாதா தேவாலயம்.
28.உவரி புனித அந்தோனியார் திருத்தலம்.
29.தெ.கள்ளிகுளம் பனிமயமாதா ஆலயம்.
30. திசையன்விளை உலக இரட்சகர் ஆலயம்.
31.ஆத்தாங்கரை பள்ளிவாசல்.
32.பொட்டல்புதூர் தர்கா.
33. கடையநல்லூர் ஜும்மா பள்ளிவாசல்.
முக்கிய இடங்கள் :
1.ஆதிச்சநல்லூர் அகழ்வராய்ச்சி மையம்.
2.மாவட்ட அறிவியல் மையம், கொக்கிரகுளம்.
3.முண்டந்துரை - களக்காடு சரணாலயம்.
4.கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்.
5.ஐந்தருவி.
6.அகத்தியர் மலை.
7.பாபநாசம் அணை.
8.மணிமுத்தாறு அணை.
9.பொதிகை மலை.
10.தேரிக்காடு.
11.கால்டுவெல் இல்லம், இடையன்குடி.
12.அரசு அருங்காட்சியகம், நெல்லை.
13.குண்டாறு அணை.
14.விஜயநாராயணம் கடற்படை தளம்.
15.மகேந்திரகிரி விண்வெளி மையம்.
16.தாமிரபரணி புஷ்கர தளங்கள்.
17.கூடன்குளம் அணுமின் நிலையம்.
18.பல முக்கிய சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவு இல்லங்கள்.
19.குத்துக்கல்வலசை.
20.மாஞ்சோலை.
21.பழைய குற்றாலம்.

அல்வா :
திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இருட்டுக்கடை அல்வா புகழ்பெற்றது.
சங்கரன்கோவில் பிரியாணி:
தமிழ்நாட்டின் சங்கரன்கோவில் பகுதியில் இந்த வகை ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பெயர் பெற்றது.
இங்குள்ள ஆடுகளின் வளர்ப்பும் அரிசியின் தரமும் இதன் சிறப்புகளாக உள்ளன.
தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகள் சுவையில் சிறந்தவை.
சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே அல்லாமல் வெளி ஊர் மற்றும் வெளிமாநில மக்களின் நல்லாதரவைப் பெற்றது.
கல்லிடைக்குறிச்சி இரட்டை அப்பளம் !!
இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிராபரணி ஆறு செல்லும் ஊரான கல்லிடைக் குறிச்சியானது இரட்டை அப்பளத்திற்குப் பெயர் போனது. அப்பளம் இல்லாத விருந்து இல்லை. கல்லிடைக்குறிச்சி அப்பளம் தரமான, சுவையான அப்பளம். தாமிரபரணி, தரணிக்கு புகழ் சேர்க்கும் பற்பல நிகழ்வுகளில். அப்பளமும் ஓர் சிறப்பு. மரவள்ளிக் கிழங்கு அப்பளம், அரிசி அப்பளம், உளுந்து அப்பளம்
அருமையாக இருக்கும்.
#LemonCity_Puliyangudi_TenkasiDistrict
புளியங்குடி, #திருநெல்வேலி சீமை #தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நகராட்சியாகும். அதன் தற்போதைய உத்தேச மக்கள் தொகை எழுபதாயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
புளியங்குடி எலுமிச்சை நகரம் எனவே அந்தப் பகுதி மக்களால் பெருமையாகச் சொல்லப்படுகிறது. ஒரே ஒரு விவசாயப் பொருளை மட்டுமே வைத்து அந்தப் பகுதி பிரபலமாகி, அதன் பெயரிலேயே நகரம் அறியப்படுவது என்பது அநேகமாக தமிழ்நாட்டில் புளியங்குடி ஒன்றாகவே இருக்கும் எனத் தெரிகிறது. அதுவும் கூட எலுமிச்சை என்பது அரிசியையோ அல்லது உப்பையோ போல அத்தியவசியமான உணவுப் பொருள் அல்ல. அது ஒரு துணைப் பொருள் மட்டுமே.
திசையன்விளை சந்தை - சிறப்பு!
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் திசையன்விளை முருங்கைக்காய்.
திசையன்விளை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் முருங்கைகள் பயிரிடப்பட்டுள்ளது. வறட்சியை தாங்கும் சக்தி முருங்கைக்கு உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர்.

பத்தமடை பாய் :
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ள ஊர் பத்தமடை. இந்த பத்தமடை பாய் நெய்வதற்கு உலக அளவில் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பூலித்தேவன் நினைவகம் :
ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவன் மாவீரன் பூலித்தேவன். 1715 ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவன் 1755 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினான். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுது காட்டச் செய்தான்.
இத்தகைய மாவீரனை சங்கரன்கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவரோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனான். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனார் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம் நெற்கட்டும்செவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி நிறுவனங்கள் :
மாநகராட்சி - திருநெல்வேலி.
நகராட்சிகள் - 6.
ஊராட்சி ஒன்றியம் - 19.
பேரூராட்சிகள் - 39.
சட்டசபை தொகுதிகள் - 11.
1.திருநெல்வேலி.
2.பாளையங்கோட்டை.
3.சேரன்மாதேவி.
4.அம்பாசமுத்திரம்.
5.தென்காசி.
6.ஆலங்குளம்.
7.வாசுதேவநல்லூர்.
8.சங்கரன் கோவில்.
9.இராதாபுரம்.
10.நாங்குநேரி.
11.கடையநல்லூர்.

கல்வி :
பள்ளிகள் : தொடக்கப்பள்ளிகள் 1,460 , நடுநிலை 411 , உயர்நிலை 90 , மேல்நிலை 129 , கல்லு}ரிகள் 14 உள்ளன.
தொழில் கல்வி நிறுவனங்கள்-3
அரசு மருத்துவக் கல்லு}ரி@ அரசு சித்த மருத்துவக் கல்லு}ரி
தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-7
தொழிற் நுட்பக் கல்லு}ரிகள் 5
ஆசிரியர் பயிற்சி நிறுவனம்-8
மருத்துவம் :
மருத்துவமனைகள்-10,
தொடக்க மருத்துவ நலநிலையம் - 55,
துணை தொ.ம.நலநிலையம்-385.
ஆற்றுவளம் :
மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால் பல சிற்றாறுகளும், பேராறுகளும் இங்கு உற்பத்தியாகி நீர்வளத்தைத் பெருக்கியுள்ளன.
தாமிரபரணி :
பொதியமலையில் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு, களரியாறு, சேர்வை ஆறு ஆகிய வற்றின் நீரால் தாமிரபரணி தோன்றுகிறது. இந்த ஆறு ஆழ்வார் திருநகரிக்கு 20 கி.மீ தொலைவிலுள்ள புன்னைக் காயல் என்னுமிடத்தில் மன்னார் வளைகுடாக் கடலுடன் கலக்கிறது.
தென்மேற்கு பருவமழையாலும், வடகிழக்குப் பருவ மழையாலும் இந்த ஆற்றுக்கு நீர் வருகிறது. இதனால் பயனடையும் பரப்பு 1750 ச.கி.மீ. மைல்களாகும். இந்த ஆற்றின் நீளம் 121 கி.மீ.தான். இதிலும் 24 கி.மீ தொலைவு மலைமீதே பாய்கிறது. மலைக்குக் கீழே இதன் ஓட்டம் 97 கி.மீ தான்.
சிற்றாறு :
இதன் நீளம் 62 கி.மீ. இந்த ஆற்றினால் தென்காசி-திருநெல்வேலி வட்டங்களில் 27,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. குற்றாலமலை அருவியிலிருந்து ஆறாக உருபெறுகிறது. இது தவிர நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி முதலிய பல சிற்றாறுகள் இம்மாவட்டம் முழுவதும் உண்டு.
அணைகள் :
மணிமுத்தாறு அணை :
அணையின் மொத்த நீளம் 3 கி.மீ அதாவது 9820 அடியாகும். அதன் நடுவேயுள்ள கல் அணையின் நீளம் 1230 அடி தேக்கம் கூடிய நீரின் பரப்பு மூன்றே கால் ச.மைல் சாதாரணமாக 406 கோடி கன நீரைத் தேக்கலாம். இதன் மூலம் 65,000 ஏக்கர் நிலம் நீர்பாசன வசதி பெறுகின்றன.
பாபநாசம் அணைகள் :
பாபநாசம் மலை மீது மேலணை-கீழணை என்ற 2 அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலணை 2 மலைகளுக்கிடையில் கட்டப் பட்டுள்ளது. இங்கு 120 அடிவரை நீரைத் தேக்கி வைக்கலாம்.
ஸ்ரீமுகப்பேரி அணை :
தென்காசி வட்டத்திலிருந்து வரும் கறுப்ப நதி மூன்று மைல்கள் தூரம் ஓடி, பிறகு அனும நதியோடு இணைகிறது. இவ்விடத்தில் மோட்டை அணையும், ஸ்ரீமுகப்பேரி அணையும் உள்ளன. இராமாநதித்திட்டத்தின் மூலம் 1,500 ஏக்கரும், கருணையாற்றின் திட்டத்தால் 7,500 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.
கடநா நதி (கருணை ஆறு)அணை :
சம்பங்குளத்தில் உள்ளது கடநா நதி அணை.
மலைவளம் :
திருநெல்வேலியிலுள்ள பணகுடிக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மும்பை வரை செல்கிறது. சிவகிரியில் உள்ள மலையில் 20 மலை முகடுகள் உள்ளன. இவற்றின் சராசரி உயரம் 1500 மீட்டர் ஆகும்.
தொகுப்பு :
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.
அகத்தியமலை :
பொதிகை மலை என்பது இதுதான். இதன் உயரம் 1800 மீ. இங்குதான் தாமிரபரணி உற்பத்தியாகிறது. அகத்தியர் மலை மலைமுகடுகளால் போர்த்தப்பட்டே காட்சி தரும். இரண்டு பருவக்காற்றாலும் இம்மலை நன்மை அடைகிறது.
ஐந்தலை பொதிகை :
அகத்திய மலைக்குத் தெற்கே இம்மலை இருக்கிறது. சமவெளியிலிருந்து கிழக்கே நோக்கினால், வரிசையாக அணிவகுத்து நிற்கும் உருவத்தோற்றம் தென்படும். இங்கே தான் நாகமலையும் அதன் பக்க மலைகளும் உள்ளன. திருக்குறுங்குடிக்கப்பால் இம்மலைபகுதி 1800 மீ வரை உயர்ந்து காணப்படுகிறது. இதுவே திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் இறுதிக் கட்டமாகும்.
திருநெல்வேலியில் குறிப்பிடத்தக்கவர்கள் :
மணியாச்சி வாஞ்சிநாதன், மாவீரன் அழகுமுத்துக்கோன் ( கட்டாலங்குளம்), பூலித்தேவன், வீரபாண்டிய
கட்டபொம்மன் (பாஞ்சாலங்குறிச்சி),
ஊமைத்துரை - (பாஞ்சாலங்குறிச்சி),
வ.உ.சிதம்பரனார் - (ஒட்டப்பிடரம்),
மாவீரன் சுந்தரலிங்கனார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (எட்டயபுரம்), சிங்கம்பட்டி ஜமீன்.
ஆன்மிகத் தலங்கள் :
காந்திமதி நெல்லையப்பர் கோவில் :
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில். இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
முப்பீட தலங்கள்:
அம்பாசமுத்திரம் - திருமூலநாதர்தி கோயில்.
ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் கோயில்.
வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில். (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).
பஞ்ச ஆசன தலங்கள்:
ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்.
களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்.
நான்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்.
விஜயநாராயணம்- மனோன்மணீசர் கோயில்.
செண்பகராமநல்லூர் - ராமலிங்கர் கோயில்.
தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்:
சங்கரன்கோவில் - சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் - மண் தலம் (ப்ருத்திவி).
கரிவலம்வந்தநல்லு}ர் - பால்வண்ணநாதர் - அக்னி தலம்.
தாருகாபுரம் - நீர் தலம்.
தென்மலை- காற்று தலம்.
தேவதானம் - ஆகாய தலம் (தற்போதைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது).
காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்:
சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்.
ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் கோயில்.
கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்.
திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் கோயில்.
பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்.
இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்:
களக்காடு- சத்யவாகீசர்.
பத்தை - குலசேகரநாதம்.
பத்மனேரி - நெல்லையப்பர்.
தேவநல்லு}ர் - சோமநாதம்.
சிங்கிகுளம் - கைலாசநாதம்.
நவ சமுத்திர தலங்கள் :
1.அம்பாசமுத்திரம்.
2.ரவணசமுத்திரம்.
3.வீராசமுத்திரம்.
4.அரங்கசமுத்திரம்.
5.தளபதிசமுத்திரம்.
6.வாலசமுத்திரம்.
7.கோபாலசமுத்திரம்.
8.வடமலைசமுத்திரம் (பத்மனேரி).
9.ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).
பஞ்ச பீட தலங்கள் :
பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.
கூர்ம பீடம் - பிரம்மதேசம்.
சக்ர பீடம் - குற்றாலம்.
பத்ம பீடம் - தென்காசி.
காந்தி பீடம் - திருநெல்வேலி.
குமரி பீடம் - கன்னியாகுமரி. (இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது).
காட்டு வளம் :
காடுகளின் பரப்பு 40,253,16 ஹெக்டேர்கள். இம்மாவட்டத்தின் காடுகள் அனைத்தும் மலைகளில்தான் காணப்படுகின்றன.
மரங்களில் கோங்குதான் விலை மதிப்புடையது. இங்கு காடுகள் காணப்படும் வட்டங்கள்: நாங்குநேரி, அம்பா சமுத்திரம், தென்காசி வட்டங்கள். செங்கோட்டை வட்டத்துக் காடுகளில் இரயில் பாதை போடப்பயன்படும் 'ஸ்லீப்பர்' கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன.
அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல், செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகை களும், தேக்கு, கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன.
நாங்குநேரி வட்டத்தில் ஒடை மரங்களும், மகிழ மரவகைகளும், எட்டி, வெள்ளத்துவரை போன்ற மரவகைகளும் உண்டு.
செங்கோட்டை காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்குப் பயிராக்கப்படுகின்றன. மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன.
காட்டு விலங்குகள் :
செங்கோட்டை காடுகளில் யானை, காட்டெருமை இன்னும் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன.
சங்கரன் கோவில், அம்பா சமுத்திரம் நாங்குநேரி காடுகளில் காட் டெருதுகள் காணப்படுகின்றன.
புலிகள் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் உள்ளன. சிறுத்தைக் குறைவு. தேனுண்ணும் கரடி வகை அதிகம்.
தலை சிறுத்த சாம்பர் மானும், குற்றாலம், திருக்குறுங்குடி பகுதிகளில் மலையாடுகளும் உள்ளன. எலிமான்கள் போன்ற இவை கண்களுக்குத் தெரிவதில்லை. மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான்களும், காட்டு நரிகள், நீண்டவால் குரங்குகள் போன்றவையும் காணப்படுகின்றன.
பறவைகள் :
மணிப்புறா, கிளி, பெரிய அலகு கொம்புப்பறவை ஆகியவை இம்மலைகளில் காணப் படுகின்றன. சனவரி-பிப்ரவரியில் சாம்பல் நிறமுடைய பெலிக்கன் பறவைகள் இலங்கையில் இருந்து வந்து நாங்குநேரி வட்டத்திலுள்ள விஜய நாராயணபுரம் குளத் திற்கு அருகில் தங்கி தாயகம் செல்கின்றன.
பருத்தி வாத்து என்ற ஒருஇனம் இங்கு நிரந்தரமாக வாழ்கிறது.
உள்ளான்களும், மரஉள்ளான்களும் தாழ்ந்த மலைக் குன்றுகளில் அதிகமாக வாழ்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு விதமாகப் பூச்சிகள் வாழ்கின்றன.
நிலவளம் :
திருநெல்வேலி மாவட்டம் ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு திகழ்கிறது.
மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகள் குறிஞ்சி நிலமாகவும், முல்லை நிலமாகவும் உள்ளன. மருதநில வளத்தைத் தாமிரபரணி பாயும் ஆற்றுப் பகுதிகளில் காணலாம். புன்செய் பயிர்கள் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வட்டங்களில் விளைகின்றன. இவை கரிசல் காடுகள்.
உவரி, கூடன்குளம் நெய்தல் நிலமாகவும்,
மணற்பகுதிகளாக உள்ள பாலைப் பகுதிகளை 'தேரிக் காடுகள்' என்று அழைக்கின்றனர். திசையன்விளை வட்டத்தின் தென் பகுதிகளில் இவற்றைக் காணலாம். இங்கு சில மணற்குன்றுகள் 200 அடிக்கும் மேல் உள்ளன.

தருவைகள் :
பாலைவன ஊற்றுகளை போல இம்மணற்குன்றுகளில் தேங்கும் நீர் நிலத்தடி நீரோடு சேர்ந்து சிற்றேரிகளாக காட்சி தருகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள் 'தருவை'கள் என்று அழைக்கின்றனர்.
கனிமங்கள் :
சுண்ணாம்புக்கல் :
சிமெண்ட் தயாரிப்புக்குத் தேவையான இப்பொருள் நாங்குநேரி வட்டத்திலுள்ள வள்ளியூர், களக்காடு, முதலிய ஊர்களில் கிடைக்கிறது.
கார்னர்டு மணல் :
உப்புத்தாள் செய்ய உதவும் இவ்வகை மணல் கடலோரப் பகுதிகளில் கிடைக்கிறது.
அல்லனைட் :
அணுசக்திக்கு தேவையான இம்மூலப்பொருள் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.
மோனசைட் :
இது உலோகச் சத்து நிறைந்த பொருள். கடற்கரை மணலில் கிடைக்கிறது. விளக்குத்திரி, மென்மையான எரியும் கம்பிகள், சில மருந்துகள் ஆகியவை செய்வதற்கு இது பயன்படுகிறது.
மைக்கா :
நாங்குநேரி வட்டம் மூலக்கரைப்பட்டியில் சிறிதளவு கிடைக்கிறது.
கிராபைட் :
உருக்கு வேலைக்கு உதவும். சிறுகலங்கள் செய்வதற்கும், சிலவகை எண்ணெய் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. அம்பை வட்டத்திலுள்ள சிங்கம்பட்டிப் பகுதியிலும், சங்கரன் வட்டத்துக் குருவிக்குளம் பகுதியிலும் இது மிகுதியாகக் கிடைக்கிறது.
வேளாண்மை :
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வட்டங்களில் நெல்லும், சங்கரன் கோயில் வட்டத்தில் பருத்தியும், மிளகாயும் மிகுதியாக விளைகின்றன. இம் மாவட்டத்து நெல் வகைகளுள், ஆனைக் கொம்பன் என்னும் வகை குறிப்பிடத்தக்கது.
19-ஆம்நு}ற்றாண்டில் பருத்தி விளைச்சல் அதிகம் இருந்தது. தற்போது குறைந்தளவே சாகுவடி செய்யப்பட்டு வருகிறது.
தென்காசி வட்டத்தில் உளுந்து, சோளம் ஆகிய வையும் சங்கரன் கோயில் நாங்கு நேரி வட்டங்களில் மிளகாயும், தென்காசி வட்டத்தில் மிளகும் விளைகின்றன. இங்கு மாம்பழ விளைச்சலும் அதிகம். இவை எல்லாக் காலங் களிலும் இங்குக் கிடைக்கின்றன. இராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர் பகுதிகள் பனைமரங்கள் மிகுதி.
பணப்பயிர்கள் :
1884-ஆம் ஆண்டு இங்கு காப்பித் தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன.
1902-ஆம் ஆண்டு நாங்குநேரி வட்டத்தில் 27 காப்பி எஸ்டேட்டுகள் இருந்தன.
1915-இல் 13 தோட்டங்கள் மட்டும் தனியார் வசம் இருந்தன. சில தோட்டங்களில் பழங்களை விளைவித்தனர். இங்கு சீன-ஜப்பானிய வகைகள் பயிரிடப்பட்டன.
குற்றாலத்திற்கு மேல் மலைப்பகுதியில் இருக்கும் தெற்குமலை எஸ்டேட்டுகளும், ஹோப் எஸ்டேட்டுகளும் குற்றாலத்துத் தேனருவிக்குச் செல்லும் வழியில் உள்ள தெற்குமலை எஸ்டேட்டுகளும் குறிப்பிடத்தக்கனவாகும்.
சுற்றுலாத் தலங்கள் :
பாபநாசம் நீர்வீழ்ச்சி :
அம்பாசமுத்திரம் இரயில் நிலையத்திலிருந்து 8கி.மீ. தொலைவில் உள்ளது. அகத்திய மலையில் தோன்றும் சிற்றாறு மேலணையிலிருந்து 40 அடி தொலைவில் விழுகிறது.
மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி :
குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி. அருவிக்குக் கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம்.
பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்னை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம்.
குற்றாலம் :
திருக்குற்றாலம், தென்காசியிலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் அருவியைப் பார்ப்பதற்கு ஏற்று காலமாகும்.
இவ்வுரைச் சிறப்பித்து 'குற்றால குறவஞ்சி' என்ற இலக்கியம் எழுந்துள்ளது.
குற்றாலத்தில் அருவியாக விழும் ஆற்றின் பெயர் சிற்றாறு ஆகும். இந்த ஆறு திரிகூட மலையில் தோன்றி, வரும் வழியில் முதலில் நு}று அடி உயரத்திலிருந்து விழுகிறது.
தேன் அருவி :
தேன் அடைகள் மிகுந்து காணப்படுவதால் இப்பெயர் உண்டாயிற்று
ஐந்தருவி :
சிற்றாற்றின் ஒரு பிரிவு ஐந்து அருவிகளாக விழுகிறது. அதனால் இதனை ஐந்தருவி என அழைக்கின்றனர். ஆற்றுநீர், ஐந்து அருவிகளாக விழும் காட்சி கண்களுக்கு இனிமையாகும்.
முண்டந்துறை புலிகள் புகலிடம் :
திருநெல்வேலியிலிருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது. இப்புகலிடம் புலிகளின் பாதுகாப்பு கருதி உண்டாக்கப்பட்டது. மேலும் இங்கு சிறுத்தை, சாம்பார் மான், பன்றிக் கரடி, நீலகிரி வகை குரங்கு, சிங்கவால் குரங்கு போன்றவைகளைக் காணலாம். முண்டந்துறையைக் காண ஏற்ற காலம் அக்டோபரிலிருந்து ஜனவரி வரை செல்லலாம். தங்குவதற்கு ஏற்ற வசதிகள் உண்டு. முன்னரே பதிவு செய்ய வேண்டும்.
களக்காடு விலங்குப்புகலிடம் :
திருநெல்வேலியிலிருந்து 47 கி.மீ தொலைவில் உள்ளது. தாவர வியலாளர்களுக்கும், விலங்கியலாளர்களுக்கும் ஏற்ற இடம்.
இங்கு பலவகையான தாவரங்களும், புலி, சிறுத்தை, குள்ளநரி, காட்டு நாய்கள், ராஜநாகம் மலைப்பாம்பு, பலவகைப்பாம்புகள் ஆகியவை காணப்படு கின்றன.
இப்புகலிடத்தைக் காண்பதற்கு ஏற்ற மாதங்கள் : மார்ச்சிலிருந்து செப்டம்பர் வரை@ இங்கு சிங்கவால் குரங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.
இம்மாவட்டத்தில் மேலும் காணத்தகுந்த இடங்களாக இருக்கும் பறவைகள் புகலிடங்கள் கூந்தக்குளம் பறவைகள் புகலிடம், மற்றும் அரியகுளம் பறவைகள் புகலிடம் முதலியவை.
தாமிரபரணி :
திருநெல்வேலிக்குனு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் அத்தனை பெருமைகளுக்கும் காரணம் தாய் தாமிரபரணி தாங்க. பொதிகை மலைல பிறந்து நெல்லை தூத்துக்குடியை செழிக்க வைக்கிற தெய்வம். உலகத்தில் உள்ள எல்லா நதிகளும் மக்களின் பாவத்தை போக்விட்டு, தன் பாவத்தை தாமிரபரணியிடம் வந்து போக்கிக்கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த தண்ணியோட ருசிக்கு எந்த தண்ணியும் ஈடாகாது. திருநெல்வேலி அல்வா தொடங்கி இம்மக்களோட வீரம் வரைக்கும் இந்த தண்ணி தான் காரணம்.
திருநெல்வேலி அல்வா :
இருட்டுக்கடை , திருநெல்வேலி
திருநெல்வேலிக்கு பெருமை சேக்குற இன்னொரு விஷயம் அல்வா. உலகத்துல எத்தனையோ வகையில அல்வா இருக்கலாம். ஆனா திருநெல்வேலி அல்வா எல்லாத்தையும் தூக்கி சாப்ட்ரும். அதே போல திருநெல்வேலிலயும் எத்தனையோ அல்வா கடைகள் இருக்குது. ஆனா நெல்லையப்பர் கோவில் வாசல்ல இருக்குற இருட்டுக்கடை அல்வா கடைக்கு இருக்குற மவுசு யாருக்கும் இல்லை. அந்த கடைல நூறு அல்வாவை வாங்கி நெல்லையப்பர் கோபுரத்தை பாத்துக்கிட்டே சாப்பிடும் சுகமே தனி...!

#திருநெல்வேலி தமிழ் :
தமிழகத்தில் பல வட்டார வழக்குகள் புழக்கத்தில் இருக்கின்றன. மதுரை, கோவை, சென்னை, குமரி என்று பல பகுதி மக்களால் அவைகள் பேசப்படுகின்றன. அவைகளை விட நெல்லை, தூத்துக்குடி வட்டார பகுதிகளில் புழங்கும் தமிழ் தனித்துவம் வாய்ந்தது. அண்ணாச்சி, மக்கா, தொடங்கி ஏல போன்ற சொற்கள் நெல்லை தமிழை முல்லைத் தமிழாக்குகின்றன. நெல்லைத்தமிழ் பேசுவோரின் வார்த்தைகளிலும், குணத்திலும் அன்பும் வீரமும் பொங்கி வழிவதை காண முடியும்.
#OXFORD நகரம்:
நெல்லை பாளையங்கோட்டை தென்னிதியாவின் 'OXFORD' என்று புகழப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே கல்விப்பணியில் தமிழகத்திலேயே சிறந்து விளங்கியது இந்நகரம். இன்றும் சாலை தோறும் கல்விச்சாலைகளை இங்கு காண முடியும். ஒரு நகரத்தில் பள்ளி கல்லூரிகள் இருப்பது இயல்பு. அனால் பள்ளி கல்லூரிகளுக்காகவே ஒரு நகரம் இருப்பது இங்கே நெல்லையில் தான்,.
#குற்றாலம்.
நெல்லை மக்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால், திருநெல்வேலி யில் இருந்து எந்த திசையில் சென்றாலும் வெறும் 50 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சுற்றுலா தளம் வந்துவிடும். உதாரணத்திற்கு ,
கிழக்கே - திருச்செந்தூர் .
மேற்கே - பாபநாசம்,குற்றாலம்.
தெற்கே - கன்னியாகுமரி (89 km).
வடக்கே - கழுகுமலை.
இப்படி சுற்றி சுற்றி சுற்றுலா தலங்களை கொண்டதாக விளங்குகிறது நெல்லை மாவட்டம்.
#ஆன்மீக தலங்கள் :
குறுக்குத்துறை :
புண்ணிய நதி தாமிரபரணி பாயும் பூமி ஆதலால் புண்ணிய தலங்களுக்கு நெல்லை மாவட்டத்தில் பஞ்சமில்லை. நவ கைலாச கோவில்கள் நெல்லை மாவட்ட தாமிரபரணி கரையோரம் வரிசையாக அமைந்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் நூற்றுக்கணக்கான பழம்பெரும் கோவில்கள், தொன்மையான கிருஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் என்று ஆன்மீக மனம் நெல்லை பிராந்தியம் முழுவதும் வீசிக்கொன்டே இருக்கிறது.
திருநெல்வேலி பற்றிய மீதமுள்ள அனைத்து தகவல்களையும், ஒவ்வொன்றாக நமது முகநூல்தளத்தில் பின்வரும் பதிவுகளில் விரிவாக காண்போம்.
குறிப்பு :
1.தென்காசி மாவட்ட பிரிவினைக்கு முன் தொகுக்கப்பட்ட தகவல்கள்.
2.முகநூலில் ஒரு பதிவில் இதற்குமேல் எழுத அனுமதிக்கப்படவில்லை, எனவே மீதமுள்ள சிறப்புகள் மற்றும் பல சுற்றுலாத் தளங்களை ஒவ்வொரு பதிவாக நமது முகநூல்தளத்தில் காணலாம். விடுபட்ட பகுதிகளுக்கு மன்னிக்கவும். நன்றி!

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...