Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Wednesday, March 19, 2025
How to make jasmine coffee....மல்லி காபி செய்வது எப்படி
தேவையானவை:
தனியா - 150 கிராம், சுக்கு - 50 கிராம், மிளகு - 10 கிராம், திப்பிலி - 10 கிராம், சித்தரத்தை - 10 கிராம், சதகுப்பை - 10 கிராம், பனை வெல்லம் - தேவையான அளவு.
செய்முறை:
பனை வெல்லம் நீங்கலாக மற்ற பொருட்களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். இந்தப் பொடியை காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையானபோது ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு டீஸ்பூன் பொடி, தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டினால்... மணமான மல்லி காபி ரெடி!
குறிப்பு: சித்தரத்தையை நன்கு தட்டி உடைத்த பின் வறுக்கவும்.
தேனி போடிநாயக்கனூர் போடிமெட்டு பூப்பாறை மூணார்....
தேனி போடிநாயக்கனூர் போடிமெட்டு பூப்பாறை மூணார்....
தேனியிலிருந்து தினசரி மூணாறுக்கு ஐந்து முறைக்கு மேல் பேருந்து செல்கிறது....
இந்தப் பாதை தேசிய நெடுஞ்சாலை ஆகும்...
மூணாறுக்கு தமிழ்நாட்டிலிருந்து இரண்டு முக்கியமான வழிகள் உள்ளன...
1. உடுமலைப்பேட்டை வழியாக மூணார் செல்வது இந்த வழி அடர்ந்த காட்டு வழி போன்றது இந்த வழியில் சென்றால் நிறைய யானைகள் உட்பட பல விலங்குகளை பார்க்கலாம்...
2. தேனி போடிநாயக்கனூர் போடிமெட்டு வழியாக மூணார் செல்வது இந்த வழியில் சென்றால் அழகிய தேயிலைத் தோட்டங்களையும் ஏலக்காய் தோட்டங்களையும் பார்த்து ரசிக்கலாம்...
மூன்றாவதாக தமிழ்நாட்டிலிருந்து கம்பம்மெட்டு வழியாகவும் மூணாறு செல்லலாம்...
முக்கால்வாசி பேர் இந்த வழியை அதிகம் பயன்படுத்த மாட்டார்கள்.
Monday, March 17, 2025
சுருக்குனு ஸஹர்க்கு ஒரு சிக்கன் சால்னா வைத்து பாருங்க
நல்ல சல சலன்னு இந்த மாறி சுருக்குனு ஸஹர்க்கு ஒரு சிக்கன் சால்னா வைத்து பாருங்க
ஒரு கடாயில் தாராளமாக எண்ணெய் ஊற்றி
அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் அல்லி போட்டு
10 சின்னவெங்காயம் , 1 பெரியவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிவிடவும்
சேர்த்து நல்ல சுருங்கி வந்தபிறகு
பொடியா நறுக்கின தக்காளி ,உப்பு, பச்சைமிளகாய் ஒன்று சேர்த்து ஒருமுறை வதக்கிய பின்னு ,
2 ஸ்பூன் மிளகு இடித்து பொடிசெய்து சேர்த்து வதக்கிவிடவும்
கடைசியில் சிக்கனை சேர்த்து என்னைப்பிரிந்து வெந்து வரும்பொழுது
பாதி டம்பளர் தண்ணீர் ஊற்றி கிரேவி பதம் வந்தவுடன் இறக்கி சாப்பிட்டு பாருங்கள்
பிராணவாயு அதிகளவு தரும் மூங்கில் மரங்கள்
பிராணவாயு அதிகளவு தரும் மூங்கில் மரங்கள்
ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது.
பயணிகள் கவனத்திற்கு வண்டி எண் 22621 ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி
பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22621 ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி வாரம் மும்முறை (சனி, திங்கள் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் :9:00pm
மண்டபம் :9:30pm
ராமநாதபுரம்:9:55pm
பரமக்குடி :10:19pm
மானாமதுரை:10:48pm
விருதுநகர் :12:23Am
திருநெல்வேலி :2:20Am
நாகர்கோயில் :3:32Am
கன்னியாகுமரி :4:15Am குறிப்பு ( தற்பொழுது மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்டு செல்லும் ) என்பது குறிப்பிட்டதக்கது மறு மார்க்கம் கால அட்டவணை கீழ கொடுக்கப் பட்டது 


பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22622கன்னியாகுமரி இருந்து ராமேஸ்வரம் அதிவேக விரைவு ரயில் வாரத்தில் மமூன்று நாட்கள் (ஞாயிறு, செவ்வாய், மற்றும் வியாழன் ) ஆகிய தினங்களில் மட்டும் உள்ளது கன்னியாகுமரி :10:15pm




நாகர்கோயில்:10:27pm
வள்ளியூர்:10:59pm
திருநெல்வேலி :11:55pm
விருதுநகர்:1:28Am
மதுரை :2:35Am
மானாமதுரை :3:13Am
ராமநாதபுரம்:3:53Am
மண்டபம் :4:50Am குறிப்பு இந்த ரயில் ரயில் தற்பொழுது மண்டபம் வரை இயக்கப்படுகிறது விரைவில் ராமேஸ்வரம் செல்லும் ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 









கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகர் போக்குவரத்து கழகம்
கோவை கோட்டம்:
கோவை கோட்டத்தின் மூலம் மூன்று மண்டலங்களில்,
* கோவை,
*ஈரோடு,
ஆகிய மூன்று மாநகராட்சிகளில் பேருந்து சேவை வழங்கப்படுகிறது.
இதில்....
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகர் போக்குவரத்து கழகம் சேவையை வழங்குகிறது.
மேலும் ,
திருப்பூர், ஈரோடு ஆகிய மாநகரங்களுக்கு சாதாரண கட்டணத்தில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
போக்குவரத்து மண்டலங்கள்:
*கோவை - TN 38 N
*ஈரோடு - TN 33 N
*நீலகிரி - TN 43 N
*திருப்பூர் - TN 39 N
என்ற எண்களில் பேருந்து போக்குவரத்து சேவைகளை மண்டலங்களின் மூலம் இயக்கிவருகிறது.
1)கோயம்புத்தூர் மண்டலத்தின் மூலம் ,
கோவை மாவட்டத்திலும்,
2)ஈரோடு மூலம் ஈரோடு மாவட்டத்திலும்,
3)திருப்பூர் மண்டலத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்திலும்
4)உதகை மண்டலத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்திலும் பேருந்து சேவை வழங்கப்படுகிறது.
*மண்டலங்களும் பணிமனைகளும்

*உப்பிலிபாளையம்,
*சுங்கம்-1,2 ,
*ஒண்டிப்புதூர் -1,2,3 ,
"உக்கடம் -1,2 ,
*அன்னூர்
*மருதமலை
*கருமத்தம்பட்டி
*பொள்ளாச்சி -1,2,3
*வால்பாறை
*சூலூர்.

*காசிபாளையம் (ஈரோடு)-1,2
*பள்ளிபாளையம் (ஈரோடு)-3
*பவானி
*பெருந்துறை
*கொடுமுடி
*கரூர்
*கவுந்தப்பாடி
*அந்தியூர்
*கோபிசெட்டிபாளையம்
*நம்பியூர்
*சத்தியமங்கலம்
*தாளவாடி.

*திருப்பூர் -1,2
*காங்கேயம்
*பல்லடம்
*தாராபுரம்
*உடுமலைப்பேட்டை
*பழனி -1,2.

*உதகை -1,2
*கூடலூர்
*குன்னூர்
*கோத்தகிரி
*மேட்டுப்பாளையம்
*பிற மாநில,மாவட்ட சேவைகள்:
தமிழகம் மட்டுமின்றி பிற மாநில சேவைகளையும் இந்த அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் கேரளா, கர்நாடக, ஆந்திரா என பிற மாநிலங்களில் தனது சேவைகளை வழங்குகிறது.

*பாலக்காடு
*ஆலப்புழை
*திருவனந்தபுரம்
*கோழிக்கோடு
*இடுக்கி
*எர்ணாகுளம்
*கண்ணூர்
*மலப்புரம்
*கொல்லம்
*திருச்சூர்
*குருவாயூர்
*காசர்கோடு
*கொச்சி
என கேரள மாநிலத்திற்கு கோவை மண்லடப் போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது.
பதிவு : Classic TNSTC KL buses
காலப்போக்கில் எல்லாமே காம்போவாக வந்துவிடும்.
சென்னையில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு முதல் முறையாக போயிருந்தேன்.
இட்லி கேட்டேன்.
‘காம்போ ஏதும் சாப்பிடுறீங்களா?’ என்று கேட்டார் சர்வர் .
‘அப்படின்னா சார்?’ என அப்பாவியாக கேட்டேன்.
‘இட்லி, வடை, கொஞ்சம் பொங்கல் இருக்கும்’ என்றார்.
புதுசாக இருக்கே என வாங்கி சாப்பிட்டேன்.
இன்று சரவணவபவனில் மட்டுமல்ல... காம்போ இல்லாத கடைகளே இல்லை.
இப்போ இது எதுக்கு?
சொல்றேன்...
எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சுவலி.
சென்னையில் தி.நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு பரிசோதனைகள் முடிந்ததும், மருத்துவமனை தரப்பில் இருந்து பேசினார்கள்.
‘உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ செய்யணும். காம்போ- வாக எடுத்துக்குறீங்களா?’ என்று கேட்டார்கள்.
எனக்கு சட்டென்று சரவணபவன் நினைவுக்கு வந்து போனது.
ஒருவேளை சாப்பாடும் சேர்த்து போடுவாங்களோ என யோசித்தபடி அவர்களிடம் தொடர்ந்து பேசினேன்.
‘இந்த காம்போவில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட், ஐசியு, சிசியு, டாக்டர் பீஸ் எல்லாம் சேர்த்து மூன்று லட்சம் வரும்! இதுவே நீங்க தனித்தனியா எடுத்துகிட்டா அதிகம் ஆகும்!’ என்று சொன்னார்கள்.
எனக்கு மிரட்சியாக இருந்தது.
அந்த மருத்துமனையில், ஹார்ட்க்கு, டெலிவரிக்கு, கிட்னிக்கு என தனித்தனி காம்போ இருக்கிறது.
அந்த மருத்துமனையில் மட்டுமல்ல... சென்னையில் பல மருத்துவமனைகளில் இந்த காம்போ சிஸ்டம் இருக்கிறதாம்!
மனிதனின் உயிருக்கு அவ்வளவுதான் மரியாதை.
காலப்போக்கில் எல்லாமே காம்போவாக வந்துவிடும்.
வாழ்க்கையும் காம்போவிலேயே முடிந்துவிடும்.
இதுதான் வாழ்க்கை.
இவ்வளவு தான் வாழ்க்கை.
அதற்குள் தான் எவ்வளவு போட்டிகளும் பொறாமைகளும்!
பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் கரகோரம் நெடுஞ்சாலை
கரகோரம் நெடுஞ்சாலை: உலகின் எட்டாவது அதிசயம்
பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் கரகோரம் நெடுஞ்சாலை, உலகின் மிக உயரமான நடைபாதை சாலைகளில் ஒன்றாக நிற்கிறது, இது மூச்சடைக்கக்கூடிய அதிகபட்ச உயரம் 4,714 மீட்டர் உடையது. "உலகின் எட்டாவது அதிசயம்" என்று அழைக்கப்படும் இந்த பொறியியல் அற்புதம், உயர்ந்த மலைகள் வழியாகச் சென்று, கிரகத்தின் மிகவும் கரடுமுரடான நிலப்பரப்புகளில் சிலவற்றின் கண்கவர் காட்சிகளை வழங்குகிறது. இது வெறும் சாலை அல்ல - இது வரலாறு, கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகு வழி பயணம்.
Subscribe to:
Posts (Atom)
Featured Post
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. 🔴🟢🔴 சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூ...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி (செட்டியாபத்து) பெரிய சுவாமி குரு இருக்க பயமேன் ஹரி ஓம் ராமானுஜா யா