Monday, March 17, 2025

காலப்போக்கில் எல்லாமே காம்போவாக வந்துவிடும்.

 

சென்னையில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு முதல் முறையாக போயிருந்தேன்.

இட்லி கேட்டேன்.
‘காம்போ ஏதும் சாப்பிடுறீங்களா?’ என்று கேட்டார் சர்வர் .
எனக்கு புரியவில்லை.
‘அப்படின்னா சார்?’ என அப்பாவியாக கேட்டேன்.
‘இட்லி, வடை, கொஞ்சம் பொங்கல் இருக்கும்’ என்றார்.
புதுசாக இருக்கே என வாங்கி சாப்பிட்டேன்.
இன்று சரவணவபவனில் மட்டுமல்ல... காம்போ இல்லாத கடைகளே இல்லை.
இப்போ இது எதுக்கு?
சொல்றேன்...
எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சுவலி.
சென்னையில் தி.நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு பரிசோதனைகள் முடிந்ததும், மருத்துவமனை தரப்பில் இருந்து பேசினார்கள்.
‘உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ செய்யணும். காம்போ- வாக எடுத்துக்குறீங்களா?’ என்று கேட்டார்கள்.
எனக்கு சட்டென்று சரவணபவன் நினைவுக்கு வந்து போனது.
ஒருவேளை சாப்பாடும் சேர்த்து போடுவாங்களோ என யோசித்தபடி அவர்களிடம் தொடர்ந்து பேசினேன்.
‘இந்த காம்போவில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட், ஐசியு, சிசியு, டாக்டர் பீஸ் எல்லாம் சேர்த்து மூன்று லட்சம் வரும்! இதுவே நீங்க தனித்தனியா எடுத்துகிட்டா அதிகம் ஆகும்!’ என்று சொன்னார்கள்.
எனக்கு மிரட்சியாக இருந்தது.
அந்த மருத்துமனையில், ஹார்ட்க்கு, டெலிவரிக்கு, கிட்னிக்கு என தனித்தனி காம்போ இருக்கிறது.
அந்த மருத்துமனையில் மட்டுமல்ல... சென்னையில் பல மருத்துவமனைகளில் இந்த காம்போ சிஸ்டம் இருக்கிறதாம்!
மனிதனின் உயிருக்கு அவ்வளவுதான் மரியாதை.
காலப்போக்கில் எல்லாமே காம்போவாக வந்துவிடும்.
வாழ்க்கையும் காம்போவிலேயே முடிந்துவிடும்.
இதுதான் வாழ்க்கை.
இவ்வளவு தான் வாழ்க்கை.
அதற்குள் தான் எவ்வளவு போட்டிகளும் பொறாமைகளும்!

பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் கரகோரம் நெடுஞ்சாலை

 கரகோரம் நெடுஞ்சாலை: உலகின் எட்டாவது அதிசயம்



பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் கரகோரம் நெடுஞ்சாலை, உலகின் மிக உயரமான நடைபாதை சாலைகளில் ஒன்றாக நிற்கிறது, இது மூச்சடைக்கக்கூடிய அதிகபட்ச உயரம் 4,714 மீட்டர் உடையது. "உலகின் எட்டாவது அதிசயம்" என்று அழைக்கப்படும் இந்த பொறியியல் அற்புதம், உயர்ந்த மலைகள் வழியாகச் சென்று, கிரகத்தின் மிகவும் கரடுமுரடான நிலப்பரப்புகளில் சிலவற்றின் கண்கவர் காட்சிகளை வழங்குகிறது. இது வெறும் சாலை அல்ல - இது வரலாறு, கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகு வழி பயணம்.

தைராய்டு வியாதிக்கு இனி இதை சாப்பிட்டாலே போதும்... தேங்காய் பூ

 

தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை.... இதை சாப்பிட்டாலே போதும்...
தேங்காய் பூ
தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.
இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.
** நோய் எதிர்ப்பு சக்தி :
தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்
** சக்தி தரும் :
மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ரை பண்ணிப் பாருங்களேன்.
** ஜீரண சக்திக்கு :
உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்க்லை குனமாக்குகிறது
** சர்க்கரை வியாதிக்கு :
தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.
** இதயம் :
இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
** தைராய்டு :
நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.
** புற்று நோய் :
ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது.
** உடல் எடை :
உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உட்ல எடை குறையும்.
** சிறு நீரகம் :
சிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிரு நீரகத்தை பெறலாம்.
** முதுமை :
தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வய்தான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.

என் 128 அனுபவங்கள் :

 என் 128 அனுபவங்கள் :

இதை தாண்டி இன்னும் தேவையானு தெரில..
.
1.நீயே அறிவாளி. ( நாம் )
.
.
2.நல்லவர் போல பேசுவர்கள் அனைவரும் .நடிக்க தெரிந்த கெட்டவர்கள்.
( நாடக பேச்சு )
.
3.பணம் இருந்தால் உன் அருகில் ஆயிரம் காக்கைகள்,
பணம் இல்லை என்றால் உன் அருகில் ஒரு ஈ கூட இருக்காது.
( மக்கள் )
.
4.எதிரியை கூட நம்பலாம்
ஏனென்றால் அவன் உன் பலம் தெரிந்தவன். ( எதிரி )
.
.
5.கூட இருப்பவனை நம்பாத.
ஏனென்றால் உன் பலவீனம் தெரிந்தவன். எப்ப வேண்டுமானாலும் உன் பலவீனத்தை பயன்படுத்தி உனக்கு எதிரான வேலை செய்வான் ( நண்பன் )
.
.
6.நல்ல உறவினர் என்று யாருமில்லை.
(சொந்தகாரர்கள் )
.
.
7.உன்னால் கண்டிப்பாக எதையும் செய்ய முடியும் . உன்னை மட்டும் நம்பு
.
.
8.சுயநலம் மிக முக்கியம்.
( இல்லைய என்றால் இளிச்சவாயன் )
.
.
9.யார் மீதும் கோபம் கொள்ளாதே.
யாரை பற்றியும் யாரிடமும் கூறதே.
( டைம் வேஸ்ட் )
.
.
10.கெட்டவர்களிடம் பேச்சுவார்த்தை கூட தேவை இல்லை.
( எவ்ளோ பெரிய மனிதனா இருந்தாலும் )
.
.
11.கடவுள் உண்டு. அவன் உன்னை பார்த்து கொண்டு தான் உள்ளான்.
( விதி )
.
.
12.வார்த்தைகளை கொட்டாதே. மனதில் வைத்து கொள்.
( பக்குவம் )
.
.
13.யாரையும் நம்பாதே.
( உண்மை )
.
.
14.உனக்கு தெரியாதவை யாருக்கும் தெரியாது . கண்டிப்பாக உனக்கு தெரியும் . முயற்சி செய்
.
.
15.புகழ்ச்சிக்கு அடிமை ஆகாதே.
( ஆணவத்தின் முதற்புள்ளி )
.
.
16.உன் வழி தனி வழி
( சரியான சிந்தனை )
.
.
17.பொருமை மிக முக்கியம்.
( காத்திரு )
.
.
18.விடா முயர்ச்சி வீண் போகாது.
( தொடர்ந்திரு )
.
.
19.தன்னம்பிக்கை மிக முக்கியம்.
( நம்மீது )
.
.
20.யாரையும் ஏமாற்றாதே . திரும்ப வரும் .
.
.
21. தெரியாதவரிடம் கூட கருணை காட்டு , தெரிந்தவர்களிடம் கருணை காட்டாதே . . ( பழிப்போர் உலகம் )
.
.
22.உன்னுடயதை சாப்பிட்டவர் மட்டுமே
உனக்கு கெட்டதை செய்வார்கள்.
( நன்றி மறந்த உலகம் )
.
.
23. ரகசியத்தை யாரிடமும் கூறதே.
( மற்றவர் செயல்படுத்துவார்கள் )
.
.
24.எதிலும் யாரையும் நம்பி இருக்காதே
கைவிட்டு விடுவார்கள்.
( கைவிட்டு சென்றால் நற்கதி தான் )
.
.
25.உன்னை புகழ்ந்து பேசும் போது அமைதியாக இரு.
( கேட்கலாம் )
.
.
26.உன்னை இகழ்ந்து பேசும் போது கேட்காமல் இரு. ( காத்திரு காலம்
வெற்றி தரும் )
.
.
27.கடமை என்று செய்தால் வெற்றி கிடைக்கும். கடமைக்கு என்று செய்தால் தோல்வி பெருவாய்.
( பொறுப்பு வேண்டும் )
.
.
28.எதையும் நாளை என்று தள்ளி வைக்காதே.
(அது நடக்காது )
.
.
29.சோம்பல் வாழ்வின் எதிரி.
( தோல்வின் காரணம் )
.
.
30.வாய்மையே வெல்லும் என்பது பொய்.
பொய் தான் ஜெய்க்கும்.
பொய் தான் நம்புவார்கள்.
( நல்லவர்கள் ஏழையா வாழ காரணம் )
.
.
31. பணம் , கள்ளத்தனம் , பொய் , பித்தாலாட்டம் , அடுத்தவர் உடமையை சுரண்டல் , மனசாட்சி இல்லாதவர்களுக்கு மட்டுமே இந்த சமூதாயம் மதிப்பு மரியாதை தரும்.
( சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர் உண்மையான செயல் )
.
.
32.குடும்பத்தை தவிர யார் மீதும் அதிக அன்பு வைக்காதே.
(அவர்கள் உன்னை ஏமாற்றினால் தாங்கமாட்டாய் )
.
.
33. ஊரை விட்டு விலகி வாழ்.
( எந்த பிரச்சினைலும் உன் பெயர் இருக்காது )
.
.
34. நல்லவர்கள்
என்று எதையும் அவரிடம்
கூறாதே.
( நாளைக்கே அவர் போஸ்ட் ஒட்டுவார் )
.
.
35.உறவினர்கள் அனைவரும் உள்ளத்தில் விஷத்தை வைத்து வெளியில் தேனாய் பேசுவார்கள்.
( 99% உறவினர் உண்மையான குணம் )
.
.
36. சிறியவர்களிடம் வேடிக்கை வேண்டாம்
( சின்ன கல்லில் மலத்தை துடைத்ததை போல் அசிங்க படுவாய் )
.
.
37.இன்று உன்னோடு இருப்பவர்கள் நாளை வேறொருவருடன் இருப்பார்கள்.
( பணம் , குணம் இரண்டும் மாற்றும் உலகம் )
.
.
.
38. உன் பேச்சை மீறாத பெண்ணை காதலி , திருமணம் செய். பேச்சை மீறி நடக்கும் மனைவி பின்னாடி என்ன கீழ்த்தரமான வேலை வேண்டும் என்றாலும் செய்வாள்
( பெண்ணால் உயர்வு , தாழ்வுக்கான காரணம் )
.
.
39. இன்று உனக்காக பொய் பேசும் பெண். பின்பு மற்றவர்காக உன்னிடமே பொய் பேசுவாள்.
( கண்டிப்பா நடக்கும் )
.
.
40. நல்ல எண்ணத்தோடு நல்லது செய்தால் கடவுள் மட்டும் உன்னோடு இருப்பார் எந்த கஷ்டத்திலும்.
( கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் உணர )
.
.
41. நல்லா அக்கரையா பேசுகிறார் அவர் நல்லவர் என்று நினைக்காதே. கஷ்டத்தில் கொஞ்சம் பணம் கேட்டு பார்.உன் பக்கமே திரும்ப மாட்டார்
( பட்டு திருந்தினேன் )
.
.
42.கெட்ட பழகத்திலிருந்து விலகி நில்.
உன்னை நீ தனியாய் அறிவாய்...
.
.
43. நி செய்யும் ஒவ்வொன்றும் நாளை உன்னை தேடி வரும். அது நல்லதா கெட்டதா என்று முடிவு செய்து கொள்.
( கண்டிப்பா திரும்ப வரும் )
.
.
44. கடவுளிடம் பக்தி தேவைஇல்லை பயம் வேண்டும். அது உன்னை கெட்ட செயலிடம் இருந்து விலகி வைக்கும்.
( பயம் தான் )
.
.
45. எதிலும் நீயே அனுபசாலி நி செய்யும் வேலையில் நுணுகங்களையும் குறைகளையும் கண்டுபிடி. உன்னை விட அந்த வேலைய சிறப்பாக செய்ய ஆளே கிடையாது..என்றும் நீயே முதலாளியாக இருப்பாய்..
( நாம் )
.
.
46. வேலை தெரிந்தவன் தினக்கூலி.
வேலையில் நுணுக்கம் தெரிந்தவன்
முதலாளி..
( பெரிய தொழிலதிபரின் வளர்ச்சின் ரகசியம் )
.
.
47. உன்னை அவமான படுத்தியவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும் எதிரியாக நினைக்காதே. அவர் உனக்கு செய்ததை நினைத்து வருந்தும் அளவிற்க்கு வாழ்ந்து காட்டு...
( முயற்சி பண்ணு )
.
.
48. யாருக்கும் அறிவுரை கூறாதே. கேட்டு பின்னாடி உன்னை தப்பா பேசுவான். அவங்களே வந்து கேட்டா கூட தெரியலனு சொல்.
( கெட்டவன் எல்லாம் நல்லா இருக்கான் நாம் தான் அப்டியே இருக்கோம் )
.
.
49.ஒருவருக்கு அவசரத்துக்கு செய்வது உதவி . அடிகடி செய்தால் நி அடிமை அவர்களுக்கு. அதனால் உன் தன்மானத்தை இழப்பாய்..
உதவி செய் அடிமை ஆகாத.
( அடிமையா நினைக்கிறாங்க )
.
.
50.இந்த வாழ்க்கை நிலையானது . நம்மை யாரும் ஒன்றும் பன்ன முடியாதுனு ஆணவம் எப்போதும் வேண்டாம். எதுவும் நிலை இல்லை.
( சிலரின் வாழ்ந்த கெட்ட அனுபவம் )
.
.
51.உன்னை யாரென்று உனக்கே புரியவைத்தவன் எதிரி. எனவே எதிரி கண்டிப்பா தேவை
( எதிரி )
.
.
52. உன்னை ஆயிரம் பேர் தவறா பேசினாலும் அதை காதில் வாங்காத. நி ஒழுங்கா இரு. உயர்ந்து வருவாய்.
( ஊர் வாய் )
.
.
53. கஷ்டத்தில் உடன் இருந்து உதவியவனை மறக்காதே வாழ்நாளில். இன்பத்தில் உடன் இருந்து தின்றுவிட்டு கஷ்டத்தில் ஓடி போனவனையும் மறக்காதே.
( கூட ஒட்டி இருந்தவர்கள் குணம் )
.
.
54.மன்னிப்பு என்பது தவறுக்கு
துணை இருப்பது..
( உண்மை )
.
.
55.தெரியாமல் செய்த தவறை மன்னித்துவிடு.தெரிந்தே செய்த தவறை தண்டிக்க மறக்காதே..
இல்லை என்றால் அதவிட பெரிய தவறு செய்வார்கள்..
( செய்தார்கள் )
.
.
56.உன்னை வெறுப்பவர்களும் எதிர்ப்பவர்களும் எதிரிகள் அல்ல.
நி அழிய வேண்டும் என்று நினைப்பவர்களே எதிரி..
( உன் கூட இருப்பர்கள் கூட )
.
.
57.குடும்பம் என்னும் வண்டியில் ஆண் முன் சக்கரமாகவும் பெண் குடும்ப பாரத்தை சுமக்கும் , இன்ப துன்பம் என்னும் கரடான பாதையில் குடும்பம் சென்றாலும் அதை பொருத்து தாங்கி செல்லும் பின் சக்கரமாக பெண் இருக்க வேண்டும்.
எவ்வளவு குடும்ப பாரம் தாங்கி சென்றாலும் ஆண் என்னும் முன் சக்கரத்தை பெண் என்னும் பின் சக்கரம் முந்தி செல்ல கூடாது.
அவ்வாறு சென்றால் குடும்பம் என்னும் வண்டி சிதைந்து போகும்.
( பெண் என்றால் இதான் )
.
.
58. காரியவாதிகளுக்கு நிரந்திரமாக எதிரி கிடையாது. காரியம் சாதிக்க
அன்பாக அக்கறையா பேசி காலில் விழக்கூட தயங்க மாட்டார்கள்.
உன்னால் காரியம் நடந்தாலும் நடக்காட்டாலும் உன்னை தூக்கி எறிவார்கள். உன்னை பற்றி தவறாக பேசுவார்கள்...
காரியவாதிகளின் பேச்சு கல்லும் கரையும் மாறி பேசுவார்கள்.
காரியவாதிகள் என்றும் பொய்யே
பேசுவார்கள்
அவர்களிடம் எச்சரிக்கை...
( கேட்டு இருக்கோம் )
.
.
59. நம்ம யாருக்கும் எந்த கெட்டது பன்னல கெட்டதும் நினைகிறது இல்ல நமக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டத்த கடவுள் கொடுகிறானு வருந்தாத.நல்லவர்கள்
பாண்டவர்கள் 13
வருடம் சோறுக்கே வழி இல்லாம வனவாசம் அனுபவித்தார் ஆனால் அந்த 13 வருடம் கெட்டவன் துரியோதனன் ராஜயோக வாழ்க்கை அனுபவித்தான். நாட்டையே ஆண்டான் பின்பு மாண்டு தான் போனான். திரும்ப நல்லவர்களே ஆண்டாரகள். கடவுள் கெட்டவனுக்கு நல்ல வாழ்க்கை கொடுப்பான் ஆனால் நிரந்தரமாக அல்ல.
( நினைச்சு பார்த்தது )
.
.
60. நல்லவர் வாழ கிருஷ்ணன் போல உடன் இருப்பான் கடவுள்.
கெட்டவர் அழிய சகுனி போல உடன் இருப்பான் கடவுள்.
( பார்த்தது )
.
.
61. ஒருவர் உன்னிடத்தில் மற்றவரை பற்றி தப்பாக பேசி கலகம் செய்தால் . காதில் வாங்காதே.. எங்க அவரிடம் நி போய் கேட்பாய் என்று.
அவர்களே அவர்களிடம் போய் அந்த தப்பாய் பேசியதாலாம் நி தான் என்று உன்னை பற்றி பல மடங்கு கலகம் செய்வார்கள். பொதுவாக கலகம் செய்வோரிடம் பேச்சு வார்த்தை வேண்டாம்.
( நடந்தது )
.
.
62.வெற்றி பெற்றால் வருவது ஆணவம்.
தோல்வி பெற்றால் வருவது அனுபவம்.
( இன்னும் தொடருது )
.
.
.
.
63.தோல்வியே எதிலும் சிறந்தது.
தோல்வியால் நி அனுபவசாலி ஆகிறாய்.5000 ரூபாய் விசயத்தில் ஏமாந்து தோற்ற நி. 5,00,000 விசயத்தில் எஎச்சரிக்கையாய் காப்பாற்ற படவாய்.
அதே 5000 ஜெய்த்தவன் அதே நம்பிக்கையில் 5,00,000 தோற்று
போவான்
( தப்பித்து இருக்கேன் )
.
64.சிறிய விசயத்தில் பெற்ற தோல்வியே பெரிய வெற்றியின் ரகசியம்.
( பார்த்து இருக்கோம் )
.
.
65.பெரிய தோல்வியின் காரணம் சிறிய வெற்றி பெற்றதே. தொழில் , நட்பு , உறவு , காதல் , எல்லாவற்றுக்கும் பொருந்தும்...
நி தோல்வி பெற்ற அனுபவசாலியாக இரு.
( உணர்ந்திட்டோம் )
.
.
66.அதிகம் பேசாத. அதிகமாக கேள்.
பேசும் போது மூளை சரியாக புரிந்து கொள்ளாது , கேட்கும் போது அதிகம் புரிந்து கொள்ளும்.
( உண்மை புரிய நாள் ஆகும் )
.
.
67.உதட்டுக்கு ஓய்வு கொடு
செவிக்கு வேலை கொடு.
( அப்போ அப்போ மாறி போகுது )
.
.
68.நீ தான அறிவாளி மற்றவரின் பேச்ச கேட்டாலும் அத அப்படியே செய்யாதே. அடிமைகள் அப்படி செய்யும்.உன் அறிவுக்கு அது சரியா வருமா என்று யோசி. அதில் எதாவது செய்தால் அதவிட சிறப்பாக செய்ய முடியுமா என்று யோசி.
( நம் குணம் )
.
.
69.உன் அருகில் உள்ளதை எதை அதிகம் உதாசின படுத்துகிறாயோ
அது உன்னை விட்டு போன பின்பு அதன் அ ருமை உணர்ந்து மீண்டும் அது கிடைக்காமல் வருத்தபடுவாய்.
( இழந்தது நிறைய உண்டு )
.
.
70.உனக்கு எதிலும் குரு தேவை இல்லை .
நீயே அறிவாளி.. அவர் சொல்லி ஒரு தடவை செய்த வேலையை செய்து அப்டியே மறப்பதை விட
நி உன் அறிவில் 5 தடவை செய்து தோற்று போ . ஆயுள் முழுவதும் மறக்கமாட்டாய் அந்த வேலையை.
( நம் குணம்)
.
.
71.உடலில் உணவு ஜீரணம் ஆகி வெளியேறுவது போல் மனதை விட்டு கெட்ட எண்ணங்களை ஜீரணமாக்கி வெளியேற்று.
ஜீரணமாகி உருவாகும் சுத்த ரத்தம் போல் நல்ல எண்ணம் உண்டாகும்...
நல்லதே நடக்கும் வாழ்வில்.
( பழக்கபடுத்தினு வரேன் )
.
72.ஆன்மிக பாதை தவறை தவிற்க்கும் பாதை.
( கண்டிப்பா )
.
73.எதை ஒன்றை அதிகம் நேசிகிறாயோ அதுவே உன்னை அதிகம் வேதனைப்படுத்தும்.
( அனுபவம் )
.
74..கனவு என்பது நிழல் போல . உன்னை பின் தொடர்வது..
பயம் வேண்டாம்..
( பயந்த காலம் உண்டு )
.
75.உலகில் விளைமதிப்பற்றது கண்ணீர் உனக்காக மற்றவர் கண்ணில் அது வரும் போது...
( உணர வேண்டியது )
.
76.நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை உன் கர்மா பின் தொடர்ந்து வருகிரது. எனவே பாவம் மேல் பாவம் சேர்க்காதே..
( செய்ய கூடாதது )
.
77.வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஏற்படுவது ஒரு வகையான பசியே. அந்த பசிக்கு மட்டும் உணவு கொடு. இல்லை என்றால் அது உன்னையே விழுங்கி விடும்
( ஆசையிலும் சிக்கனம் வேண்டும் )
.
78.சிக்கனத்திலும் சின்ன சின்ன உதவி செய்
( நல்லவர்களுக்கு மட்டும் )
.
79.தான் என்ற கர்வம் உன்னை அழிப்பது மட்டும் இல்ல உன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும்.
( பலரை அழித்து உள்ளது )
.
80. முடிந்தவரை காலனி அணியாமல் நடந்து பழகு..
மூளையில் புது உணர்ச்சி இருக்கும்.
சரியான முடிவே நீ எடுப்பாய்.
( பழக்கம் உள்ளது )
.
81.உனக்கு ஏற்படும் வலிக்கு மருந்து
நல்ல தூக்கமும் நல்ல சாப்பாடும்.
இரண்டும் நன்றாக இருந்தால் மன வலியும் உடல் வலியும் விலகி விடும்.
( இன்னும் கிடைக்காத வேதனை )
.
82.கெட்டவர்களுக்கு கெட்டவரை பிடிக்கும் . நல்லவனாய் நீ இருந்தால் நல்லவர்க்கு மட்டுமே உன்னை பிடிக்கும்.
( இன்னும் கெட்டவர்கள் பழக்கம் இல்ல )
.
83.கெட்டவன் கேடு நினைப்பான். இறைவனும் அவனுக்கு துணை இருப்பான். அது விதி.
( விதி )
.
84.நீ வெளியில் சொல்வது நடப்பதில்லை. சொல்லாததது நடக்கும்.
எதுவும் சொல்லாதே.
( ஒன்னும் நடக்கில )
.
85.மானம் ஒன்றே பெரிது . சின்ன விசயங்களில் நீ அசிங்கபடலாம். அது
அனுபவமாக கொள்.
( அப்டி நினைச்சாலும் வாழ்ந்தாலும் கடவுள் ரொம்ப அசிங்க படுத்துவான் )
.
86.உன்னை மதிப்போரை மதி.மதிக்காதவர் பெரிய ஆளா இருந்தாலும் மதிக்காதே.
( பழக்க தோஷம் )
.
86.வாழ்க்கை இன்பம் பாதி துன்பம் . துன்பத்தை அனுப்பவிக்கும் போது சோர்ந்து போகாதே இன்பம் வர போகிறது என்று உற்சாகமாக இரு.
( பட் முடில )
.
87.வார்த்தைகள் கூர்மையான ஆயுதம் அதனை மற்றவர் மீது செலுத்தாதே.
( கட்டுபடுத்து உன் நாக்கு )
.
88.அடிப்பட்ட பிறகு நீ அனுபசாலி. மீண்டும் அந்த தவறை செய்யாதே.
( கண்டிப்பா இல்ல )
.
89.இரக்கம் காட்ட வேண்டிய இடத்தில் மட்டும் காட்டு.
( உண்மை )
.
90.நீயே உயர்ந்த மனிதன்.
( கண்டிப்பா நினை )
.
91.தகுதி தராதரம் இல்லாதவரிடம் பழகாதே . ரொம்ப அசிங்கபடுவாய்...
( பல தடவை )
.
92.நி ஒருவனுக்கு இலவசமாய் கொடுத்த பெரிய பொருளுக்கு மதிப்பு இல்லை.....
அதே அவனிடம் வாங்கிய சிறிய பொருளுக்கும் சிறிய
பணத்திற்கும் மதிப்பு உண்டு....
( பல தடவை )
.
உன் பொருள் மண் ஆனாலும் அதற்க்கு மதிப்பு கொடுத்து கொடு . .
அப்போது தான் நீயும் மதிக்கபடுவாய்
.
93. மனசுபோல வாழ்க்கை இல்ல
மனசாட்சி இல்லாதவர்க்கே வாழ்க்கை
( ஊர்ல பார்த்தா நல்லா வாழரவன் எல்லோரும் )
.
94.உண்மையான நட்பு , உறவு , குடும்பம் மூன்றையும் பெற்றவர்கள் கண்களுக்கு
பார்க்கும் எல்லாம் பசுமையாக தான் தெரியும்
அதில் வலி கண்டவர்கள் கூறும்போது
மறுக்க தான் செய்வார்கள் . நீ சரியா இருந்தா அவர்கள் சரியா இருந்திருப்பார்கள் என்று கூறுவார்கள்..
( கேலி செய்பவர்களுக்கு )
.
வலியும் வேதனையும் வந்த பின்னே உணர்வார்கள்..
.
95.
விதி என்று வாழ்பவர் தனக்கு கிடைத்தது இவ்ளோதான் என்று எந்த தவறும் செய்யாமல் வாழ்கிறார்கள்
( நல்லவர்கள் )
.
விருப்பம் இல்லாமல் வாழ்பவர்கள் தான் விரும்பியதை அடைய எல்லா தவறும் செய்கிறார்கள்..
( கெட்டவர்கள் )
விதியை நம்பியவர்கள் நல்லவர்கள்..
கிடைத்ததை கொண்டு வாழ்ந்து முன்னேற பார்...
விரும்பியது எல்லாம் வேண்டும் என்றால் தவறான செயல் தான் செய்வாய்...
.
96.குடும்பத்தை விட மற்றவரை நேசித்தும் நம்பிய பிறகு தான் தெரியும்
கண்ணீர் ,மரண மனவேதனை இரண்டுக்கும் அவர்கள் தான் காரணம் என்று.
குடும்பத்தை மட்டும் நேசி.
( உண்மை )
.
97. தேவைபடும்போது தேடும் உறவை விட
தடுக்கி விழும்போது தாங்கும் உறவை நேசி
வாழ்வில் துன்பம் இல்லை
( இன்னும் இல்ல )
.
98.சொல்ல ஆசைகள் ஆயிரம் இருந்த போதும் மௌனத்தோடு வாழும் இதயத்திற்கு மட்டுமே தெரியும்
அவை வெளிய விட்டால் நம்மை அழித்துவிடும் என்று
ஆசை துன்பத்திற்கு காரணம்.
( ஆசை என்ற வார்த்தை இல்ல )
.
99.வாழ்க்கையிலும் சரி வண்டியிலும் சரி
பொறுமையாக போக வேண்டும்
பயணம் தாமதமானாலும்
சேரவேண்டிய இலக்கு பிரச்சனையின்றி அடையலாம்..
( பழக்கமாயிடுச்சு )
.
100.அடுத்தவனின் காசை எடுத்து அவன் காசிலே அவனுக்கு உதவி செய்து அந்த காசில் கொஞ்சம் உன் பாக்கெட்டில் வைத்து கொள்
நீ நல்லவன் என்று என்றும் புகழப்படுவாய்.
.
அதே உன் பாக்கெட்டில் உன் காசை எடுத்து அவனுக்கு செலவு செய்து உதவி செய்தால் நீ கெட்டவன்
நீ அவன் காசை திண்றவன் என்று இழகபடுவாய்.
.
கலியுக உண்மை..
( நடந்துன்னு வருது )
.
101.உயிராய் அன்பாய் பேசும்
பொய்யான உதடே உத்தமன்
என்று வாழும் என்றும்..
.
உண்மைகாக ஊமையாய் வாழும் உதடு
கெட்டவன் என்று வாழும் என்றும்.
( நாடக கம்பனியை நடத்தரவன் நல்லவன் )
.
102.தேவைக்கு நம்மை ஊறுகாயாய் அவமானத்தோடு பயன்படுத்தும் உறவுகளின் மத்தியில்
தனிமையில் தன்மானத்தோடு வாழ்வது கௌரவம்....
( கேடுகெட்ட உறவினர்கள் )
.
103.காலம் முழுவதும் செய்தவன் உதவி
கடைசியில் முன்நின்றவன் பெயரில்
பதிவு செய்து காலம் முழுவதும்
பேசப்படும்...
( இதான் நடக்கிறது )
.
104.நேரம் சொல்லாமல் மெளனமாக இருக்கும் போது
ஊர் ஆயிரம் சொல்லும்.
அதான் நேரம் ....
.
.
நேரம் கூறும் நேரம்
ஊர் ஊமையா இருக்கும்..
அதான் நேரம்..
( விதி )
.
105.உண்மையானவர்கள் யார்க்கும் எதற்கும் இறங்கி போகமாட்டார்கள்...
பொய்யானவர்கள் மட்டுமே எல்லாவற்றுக்கும் இறங்கி போவார்கள்..
பொய்யானவர்கள் முதலில் ஜெயித்தாலும் முகத்திரை கிழிக்கபட்டு
உண்மை வெல்லும் கடைசியில்...
( நம்பிக்கை உண்டு இது நடக்கும் என்று )
.
106. அரசனுக்கு கொடுக்க மறுத்த பெண்
கள்வனோடு ஓடி போனாளாம்
.
விதி யாரை விட்டது
( விதி )
.
107.வேண்டாம் என்று வெறுத்து சொன்னதை யோசித்து பார்
உன்னோடு இருப்பதெல்லாம்
அவைகள் தான் ..
வேண்டும் என்றதை நினைத்து பார்
ஊரே அதை வெறுத்து இருக்கும்..
கடவுள் எப்போதும் உயர்ந்தவன்..
( உண்மை )
.
108.பறவையின் அடக்கமும் அமைதியும் கூட்டில் அடைந்து இருப்பதை வைத்து முடிவு செய்வது முட்டாள்தனம்..
கூட்டைவிட்டு வெளிவந்தபின் நாட்டை தாண்டி கூட போகுமாம்..
( சிலர் வீட்டுஉள்ள நல்ல புள்ள வெளிய வேற )
.
109.மற்றவர்கள் உன்னை பெருமையாய் பேசி கிடைக்கும் பொய்யான சந்தோசத்தை விட ,
நீ உனக்காக செய்து உன் மனதளவில் அடையும் உண்மையான சந்தோசமே வாழ்க்கை கண்ணீரின்றி அமையும்.
( நம் குணம் )
.
110.என்ன தான் பாம்புக்கு பால் ஊத்தி வளர்த்தாலும்
அந்த பால் அது உடம்புல விஷமா தான் ஊரும்.
.
என்ன தான் கெட்டவர்களுக்கு
நீங்க நல்லது பண்ணலாம்
உங்களுக்கு கெட்டது தான் செய்வார்கள்.
( அனுபவம் )
.
111.உபதேசமும் மருந்தும் பாதிக்க பட்டவனுக்கு மட்டுமே கொடு
.
மற்றவனுக்கு கொடுக்காதே
.
கொடுத்தால் இழப்பது
உன் மரியாதையை தான்..
( கண்டிப்பா )
.
112.சிலரின் தேவைக்கு நீ உப்பாக இரு
அளவோடு உன்னை பயன்படுத்துவார்கள்
.
தண்ணீராக இருக்காதே தாகத்துக்கு மட்டும் அல்ல சாக்கடைக்கும்
உன்னை பயன்படுத்துவார்கள்
( இதான் உலகம் )
.
113.சில நேரங்களில் சிலர் பார்வைக்கு நீ கெட்டவனாக தெரியலாம்
.
அதனால் நீ உன்னை மாற்றி கொள்வது தவறு.
.
என்றும் நீ நீயா இரு
உலகம் உன்னை புரிந்து கொள்ளும் ஒருநாள்...
( நடக்கும் )
.
114.வேண்டும் என்று தேடி
கிடைக்காமல் வருந்துவதை விட
வேண்டாம் என்று இருந்து பார்
.
நீ எதிர்பார்க்காத அளவிற்கு தேடி வரும்
அனைத்தும்.
( ஆசை எதிலும் இல்ல )
.
115.ஒருவரின் சுயநலமும் துரோகம் தான் உன்னை தோற்கடித்தால்
.
அது உன் தோல்வி அல்ல
.
அது உன் அனுபவம் இனி புரிந்து நட.
( நடக்கிறேன் )
.
116.மாறுவது உலகம் அல்ல
மனித மனம் மட்டுமே
இந்த உலகம் நிலையானது
உன் தேவைக்கு உலகம் அல்ல
அதன் தேவைக்கு தான் நீ
உதவியாக இரு அடிமையாக இருக்காதே.
( உதவி தான் செய்றேன் )
.
117.தினமும் நீ தூரத்தில் இருந்து
சுமந்து வந்து நீர் ஊற்றி உயிரை காப்பாற்றினாலும்.
.
ஏதோ ஒருநாள் வந்து பெய்யும்
மழையை தான் இந்த உலகம்
தூக்கி பேசும்...
.
காலம் முழுவதும் நீ செய்த உதவி
கடைசியில் வந்து செய்தவன் பெயரில்
எழுதப்படும்...
( நடந்துனு வருது )
.
118.ஒருவன் நல்லவனா கெட்டவனா ?
அவன் உயர்ந்தவனா தாழ்ந்தவனா ? என்று
அவன் ஆடையும் பேச்சும் வைத்து தீர்மானிக்கிறது இந்த சமூகம்...
.
அவன் மனம் மற்றும் செயல் கண்டு அல்ல....
( உலக இயல்பு )
.
119.அமைதியானவர்கள் கோபுரம் போல்
நிரந்தரமாக நின்று வாழ்கிறார்கள்
.
.
தீடீர் என்று வாழ்வு வந்தவர்கள் பளபளக்கும்
காத்தாடி போல உயரே பறக்கும் போது
நாம் கோபுரத்தை விட உயரத்தில் இருக்கோம் என்று ஆணவத்தில் ஆடி பறந்து கடைசியில்
கீழே தான் விழுகிறார்கள்..
( கடைசியில் தெரியும் )
.
பழமையானாலும் கோபுரம் கோபுரம் தான்...
.
120.கஷ்டப்படுவர்கள் ஒதுக்கப்படுவார்கள்
சீன் போடுபவர்கள் மதிக்கபடுவார்கள்..
( இதுவரை நடந்துன்னு வருது )
121. வசதி வாய்ப்பு வந்த உடன் குணம் மாறுபவர்கள் நாகத்தை விட விஷம் கொண்டவர்கள் . அவர்களிடம் விலகி இருப்பது நல்லது .
.
122 . கண்மூடிதனமாக யாரையும் நம்ப கூடாது . பெரிய விளைவுகள் சந்திக்க நேரிடும்
.
123. இந்த உலகம் தன் சுய தேவைக்கும் தன் சுய இன்பத்திற்காகவும் உன்னை பயன்படுத்த தயங்காது ,
.
124 . நேற்று உன்னோடு பழக்கம் , நாளை இன்னொருவரிடம் பழக்கம் . மாறி கொண்டே போவார்கள் . நீ மாறாமல் இருந்தால் அது உன் முட்டாள் தனம் .
.
125 .தகுதி தராதரம் இல்லாவர்களை நினைத்து நீ எவ்வளவு வருந்தினாலும் அவர்கள் உணர மாட்டார்கள் . நீ உன்னை மாற்றுவதே சிறந்தது .
.
126. சமூகத்தில் அவன் பெரிய இடத்தில் இருக்கிறான் அவன் நல்லவன் , தவறு செய்ய மாட்டான் என்று நீ அவனை நம்பினால் பெரிய அளவில் ஏமாற்றபடுவாய் .
.
127. பொய்யாக நடித்தால் மட்டுமே இந்த உலகம் உன்னை நல்லவன் என்று கூறும் , பொய்யாக நடிக்க விருப்பம் இல்லை என்றால் கெட்டவன் என்று ஒதுக்கப்படுவாய் . .
.
128 . அறிவுரையும் , ஐடியாவையும் கொடுப்பவன் உயர்ந்த இடத்தில் இருந்தால் அவன் தவறாகவே கூறினாலும் ஏற்றுக்கொள்வார்கள் . . ஆனால் ஒருவன் தாழ்ந்த இடத்தில் இருந்து சரியாகவே அறிவுரையும் , ஐடியா கூறினாலும் அது தவறாகவே எண்ணி அசிங்கப்படுத்துவார்கள் . .

இந்த பதிவு நகைக்சுவையாகவும், யதார்த்தமான உண்மையை

சுகர்னு docter கிட்ட போராங்க....

அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.
ஒரு_வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.
😂மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.
🧔அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்....
காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது....
இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.
(1) தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல....
(2) மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல....
(3) ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை....
(4) வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்....
TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.
வீட்டுல இருக்கிற வெந்தயத்தை, காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.
பாடையில போகற வரைக்கும்
அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.....
👆👆👆இந்த பதிவு நகைக்சுவையாகவும், யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.....
மனம் கெட்டால் உடல் கெடும்,
உடல் கெட்டால் மனம் கெடும்.
அதனால் மனதுக்கும், உடலுக்குமான, முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..
ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!
அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗
1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.
2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.
3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.
4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.
5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.
அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.
9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.
10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.
11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.
13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.
கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!
இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!
மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!
உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!
ஆரோக்யம் அனுபவியுங்கள்............!.

90 காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு இது தான் அன்றைக்கு பேவரிட்

 

*நாங்க இதை பொடி பிஸ்கட்னு சொல்லுவோம்... அஞ்சி காசுக்கு மூனு....*

90 காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு இது தான் அன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸ்...
செட்டியாரின் பலசரக்கு கடையில் தகர டப்பாவில் இந்த பிஸ்கட் மூடி வைத்திருப்பார்.
ஒத்த பைசா பிஸ்கட், 5 பைசாக்கு 5 பிஸ்கட், பத்து பைசாக்கோ, இருபது பைசாக்கோ பிஸ்கட் வாங்கி யூனிபார்ம் பாக்கெட்டில் போட்டு பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில் ஒவ்வொரு பிஸ்கட்டாக வாயில் போடுவோம்,
வாயில் போட்ட ஒத்த பிஸ்கட்டை தின்னுவது இல்லை. உமிழ்நீரில் அந்த பிஸ்கட் கொவுந்து போகும் பிறகு அப்படியே நுனைத்தபடி சுவையுடன் ருசித்து விழுங்குவது தான் இந்த பிஸ்கட் தின்னும் முறை, என எழுதபடாத சட்டம் உண்டு..
சில நேரங்களில் பள்ளிக்கு வந்த பிறகு மீதம் பிஸ்கட் டவுசர் பாக்கெட்டில் இருந்தால், அதை சக பள்ளி தோழனுக்கு கொடுப்போம்.. சும்மா இல்லை.? பண்ட மாற்று முறையில்...
நான் பிஸ்கட் தந்தால் நீ, சிலேட் குச்சி, சிலேட் அழிக்கும் பச்சிலை, அல்லது சின்ன கச்சி (சின்ன கோலி) இதில் ஏதாவது ஒன்று தரவேண்டும்...
பர்கர், ஷவர்மா, சிக்கன் ரோல் , லேஸ் ஆகியவை இன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸின் ஆளுமை, ஒத்த பைசா பிஸ்கட் மறக்கபட்டும், மறைக்கபட்டும் உள்ளது. ( இந்த பிஸ்கட் ஒரு சில இடங்களில் இப்போதும் உள்ளது)
ஒத்த பைச பிஸ்கட்டை ருசித்து தின்ற கடைசி தலைமுறையும் நாம் தான்..

உலகின் மிக நீளமான கடலுக்கடியில் சாலை சுரங்கப்பாதை பற்றிய 3 உண்மைகள்

 

உலகின் மிக நீளமான கடலுக்கடியில் சாலை சுரங்கப்பாதை பற்றிய 3 உண்மைகள்:

1. நார்வேயில் உள்ள ரைஃபில்கே சுரங்கப்பாதை உலகின் மிக நீளமான மற்றும் ஆழமான
கடலுக்கு அடியில் செல்லும் குகை வழி ஆகும்.
14.4 கிமீ நீளம்
கடல் மட்டத்திற்கு கீழே 292 மீட்டர் ஆழத்தையும் அடைகிறது.
2. – இது ரைஃபாஸ்ட் சுரங்கப்பாதை அமைப்பின் ஒரு பகுதி.
ஸ்டாவஞ்சர் நகரை ரைஃபில்கேவுடன் இணைக்கிறது, பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது.. படகுகள் தேவை இல்லை.
3. கட்டுமானம் 2013 இல் தொடங்கியது.
டிசம்பர் 30, 2019 அன்று திறக்கப்பட்டது.

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம்

 பாம்புகள் ஜாக்கிரதை

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!
1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும்.
2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.
3 குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.
5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன.
6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.
7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.
8. பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.
உங்கள் வீடுகளில் நுழைந்த பாம்புகளை விரட்ட முயற்சிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் அதிக வெப்பத்தின் காரணமாக பதுங்க இடம் தேடும் பாம்புகள் அதிக கோபம் கொண்டிருக்கும். நம்மைத் தாக்க முற்படும்.
நீங்கள் இதனை பகிர்வதன் மூலம் அதிகமானனவர்களை இந்த ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ள உதவும். கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அதிகம் பலனளிக்கக்கூடும்.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...