Saturday, March 8, 2025

குன்னக்குடி வைத்தியநாதன்

 

குன்னக்குடி வைத்தியநாதன்

🎹குன்னக்குடி பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை! அதுவே அவரின் பெரிய வெற்றியும் கூட!
* அவர் நெற்றியில் திருநீறும் குங்குமமும், அவர் ஜிலுஜிலு சட்டைகளும், அவர் செய்யும் அங்க சேட்டைகளும், குழந்தைகளை மட்டுமில்லை, இக்கால இளைஞர்களையும் வெகுவாகவே கவரும்!
* அவர் கச்சேரியில் செவிக்கு மட்டும் விருந்து இல்லை! கண்களுக்கும் விருந்து தான்! அவர் இசை, பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும்!
தூய இசை வல்லுனர்கள், குன்னக்குடி செய்யும் வித்தைகளை ஒப்பா விட்டாலும், குன்னக்குடியின் ஜனரஞ்சகத்தையோ, இசை எளிமையையோ மறுக்கவே முடியாது!
மெல்லிசைக்கும், மேடை இசைக்கும் பாலம் போட்டவர் குன்னக்குடி!
* வயலின் என்றால், ஏதோ தலைவர்கள் மறையும் போது மட்டும் தொலைக்காட்சியில் வாசிப்பது என்று இருந்த ஒரு நிலையை மாற்றிக் காட்டியவர் குன்னக்குடி!
*வயலின் என்னும் பக்க வாத்தியம், பக்கா வாத்தியம் ஆனது!
* சின்ன வயலினுக்கு, பெரிய தவில் என்ற நினைத்துப் பார்க்க முடியாத ஜோடிப் பொருத்தம் எல்லாம் ஏற்படுத்திக் காட்டிய Experimenter தான் குன்னக்குடி!
* தமிழிசைக்கு அவர் ஆற்றிய பணி அளவில்லாதது!
* தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்! திருவையாறு தியாகராஜ ஆராதனையை பல ஆண்டுகள் நன்முறையில் நடத்திக் காட்டியவரும் கூட

பூசணிஜூஸ் பருகினால்

 

திருஷ்டி காய்னு ஒதுக்க வேண்டாமே .....

குடலில் ஒரு துளி கழிவுகளை கூட விட்டு வைக்காது இந்த ஜூஸ்!!
தினமும் எழுந்ததும் டீ,காபி குடிப்பதை நிறுத்திவிட்டு வெண்பூசணி காயில் ஜூஸ் செய்து பாருங்கினால் குடல் முழுமையாக சுத்தமாகும்.நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த இந்த காயை அரைத்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
#வெண்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
*நார்ச்சத்து *நீர்ச்சத்து *கலோரி *இரும்பு *மெக்னீசியம் *வைட்டமின் பி மற்றும் சி
வெண்பூசணியில் இருக்கின்ற நார்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.குடல் இயக்கம் மற்றும் செரிமான இயக்கம் சீராக நடைபெற வெண்பூசணி சாறு தயாரித்து பருகலாம்.
#பூசணிஜூஸ் பருகினால்
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாக வெண்பூசணி சாறு செய்து பருகலாம்.
ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்யும் மருந்தாக இது திகழ்கிறது.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க வெண்பூசணி சாறு பருகலாம்.
தினசரி வெண்பூசணியை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் வெண் பூசணிக்கு இருக்கிறது.
#வெண்பூசணி ஜூஸ் தயாரிக்கும் முறை:
#தேவையான பொருட்கள்:-
1)வெண்பூசணி துண்டுகள் - கால் கப்(தோல் நீக்கப்பட்டது)
2)தண்ணீர் - ஒரு கப்
#பயன்படுத்தும் முறை:-
1.முதலில் ஒரு கீற்று வெண்பூசணியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
2.பிறகு இதனை மிக்சர் ஜாரில் ஒன்றில் போட்டுக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
3.இந்த வெண்பூசணி ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி காலை வேளையில் பருகி வந்தால் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேறும்.இந்த வெண்பூசணி துண்டுகளுடன் உப்பு,மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.

படுதோல்வியடைந்த நிலையில்

 

ஒருவன் தன்னுடைய தொழிலில்

படுதோல்வியடைந்த நிலையில், தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார்.
சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பைத் தொட்டியில் தனக்குத் தேவையான பாட்டில்களை நிரப்பி எடுத்துச் சென்றார். மீண்டும் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார். அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டுச் சென்றது.
கடைசியாக வந்த ஒரு பசு, குப்பையில் கிடந்த பச்சிலையை சாப்பிட்டு தன் பசியை போக்கிக் கொண்டது. இதைப் பார்த்த, படு தோல்வியடைந்த அந்த நபர்,
கூறிய வார்த்தைகள் 'ஒரு சிறிய குப்பைத் தொட்டியில் இத்தனை பேர் பிழைத்து வாழ்கிறார்கள் என்றால், இந்த பரந்து விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும் எப்படி எல்லாம் பிழைத்து வாழலாம் என்று, தன் மனதை திடப்படுத்திக் கொண்டு இனி தனக்கு தோல்வியே கிடையாது இனி வரும் காலங்கள் பொற்காலமே, மிக பெரிய வெற்றியே என தன்னம்பிக்கையுடன் தன் பழைய தொழிலை தொடங்கச் சென்றார். இந்த பரந்த உலகில் நாம் அனைவரும் ஜெயிக்கப் பிறந்தவர்கள்...

சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்

எழுதியது யாருனு தெரியலை...

படித்ததில் பிடித்தது ........
தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)
அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)
மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.
ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.
ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.
மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.
ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.
அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.
அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.
அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.
“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.
அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.
அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.
அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.
அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.
மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.
இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.
செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.
அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.
முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.
யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.
ஆனால், அப்பாக்கள் வரம்.
*தாயிடம் நிரூபியுங்கள்*-* கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.
*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.
*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.
*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று
*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று
*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று
வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*.

வண்டி எண் 16731 பாலக்காடு இருந்து திருச்செந்தூர் தினசரி ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16731 பாலக்காடு இருந்து திருச்செந்தூர் தினசரி ரயில் உள்ளது பாலக்காடு ஜங்சன் :6:00Am

பாலக்காடு டவுன் :6:09Am
புதுனகரம் :6:23Am
கொல்லெங்கோடு:6:31Am
முதலமட:6:40Am
மீனாட்சிபுரம் :6:49Am
ஆனைமலை ரோடு:6:57Am
பொள்ளாச்சி சந்திப்பு :7:08Am கோமங்கலம்:7:24Am
உடுமலைப்பேட்டை:7:33Am
பழனி:8:07Am ஒட்டன்சத்திரம்:8:28Am
திண்டுக்கல் சந்திப்பு:8:55Am
அம்பாத்துரை:9:12Am
கொடைக்கானல் ரோடு:9:22Am
சோழவந்தான்:9:39Am
மதுரை சந்திப்பு:10:20Am
திருப்பரங்குன்றம் :10:39Am திருமங்கலம் :10:50Am
விருதுநகர் சந்திப்பு:11:13Am
சாத்தூர் :11:36Am
கோவில்பட்டி :11:56Am கடம்பூர்:12:18pm
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு:12:31pm
தாழையுத்து :12:51pm திருநெல்வேலி :1:25pm பாளையங்கோட்டை :1:39pm ஸ்ரீவைகுண்டம் :1:53pm
ஆழ்வார் திருநகரி :2:00pm
நாசரேத்:2:07pm
கச்சன்விலை :2:14pm
குறும்பூர்:2:18pm
ஆறுமுகனேரி:2:25pm
காயல்பட்டினம் :2:29pm
திருச்செந்தூர்:2:58pm மறுமார்க்கமாக 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16732 திருச்செந்தூர் இருந்து பாலக்காடு தினசரி விரைவு ரயில் உள்ளது திருச்செந்தூர்:12:20pm
காயல்பட்டினம் :12:27pm
ஆறுமுகனேரி:12:30pm
குறும்பூர்:12:36pm
கச்சன்விலை :12:40pm
நாசரேத்:12:46pm
ஆழ்வார் திருநகரி :12:53pm ஸ்ரீவைகுண்டம்:12:59pm
பாளையங்கோட்டை:1:03pm
திருநெல்வேலி:1:25pm
தாழையுத்து:1:41pm
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு: 2:01pm
கடம்பூர் :2:14pm
கோவில்பட்டி:2:33pm
சாத்தூர்:2:56pm
விருதுநகர்:3:18pm
திருமங்கலம்:3:44pm
திருப்பரங்குன்றம்:3:59pm
மதுரை சந்திப்பு:4:20pm
சோழவந்தான்:4:44pm
கொடைக்கானல் ரோடு:4:58pm
அம்பாத்துரை:5:14pm
திண்டுக்கல்:5:47pm
ஒட்டன்சத்திரம்:6:23pm
பழனி:6:57pm
உடுமலைப்பேட்டை:7:18pm
கோமங்கலம்:7:32pm
பொள்ளாச்சி சந்திப்பு :7:58pm
ஆனைமலை ரோடு:8:07pm
மீனாட்சிபுரம்:8:15pm
முதலமட:8:24pm
கொல்லெங்கோடு:8:33pm
புதுனகரம் :8:41pm
பாலக்காடு டவுன் :8:55pm
பாலக்காடு ஜங்சன் :9:14pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Human Body Chemicals And Minerals

 சிறிது தண்ணீர் குடித்துவிட்டு வாசிக்கவும்...

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.
மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.
உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.(MI@55)
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு உள்ளனவாம். படித்த பதிவு.

ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் வழிபாட்டு முறைகள்-1


ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் 

Chinnar Wildlife Sanctuary -Trektamilnadu -Munnar

 

உடுமலை to மூணார் ரோடுல உள்ளது சின்னார் வைல்டு லைப் பாரஸ்ட்...

உடுமலையில் இருந்து 30 கிமீ தொலைவில் தொடங்குகிறது... 🏍️
மற்றுமொரு அழகிய தமிழக கேரளா எல்லை இது...
வெப்ப மண்டல காடு, புல்வெழிகாடு, சோலைக்காடுனு ஒரு சேர இருக்க கூடிய கேரளாவின் ஒரே பகுதி சின்னார் தான்...
இங்கு யானைகள், 🐘🐘
புலி, சிறுத்தை,🦌🐅
நான்கு வகையான மான்கள்,🦌🦌
காட்டு மாடு,🐃🐂
240 வகையிலான பட்டம் பூச்சிகள்,🦋
40 வகையான ஆத்து மீன்கள்னு🐟🐠 இன்னும் நிறைய...
ஆசியாவில் வாழக்கூடிய அபூர்வமான அணில் வகை இங்க தான் இருக்குனு சொல்றாங்க.,🐿️
நேரம் கிடைத்தால் போய் வாருங்கள் இந்த காட்டு பாதையில் மூணாறு, மறையூர் செல்வது அப்படி ஒரு ஆனந்தம் மற்றும் சிறு திகில் நிறைந்த அனுபவம்,
எப்போது எங்கே யானை இருக்கும் என்றே தெரியாது, அப்டி ஒரு அனுபவ சாலை, அழகிய மலை பாதை நிறைய நேரங்களில் பைக்கில் தான் பயணம் செய்து உள்ளேன்,
கார், பஸ் பாத்துக்காப்பாக அமையும், உடுமலையில் இருந்து மூணார் தமிழக அரசு பேருந்து, கேரளா அரசு பேருந்து, தனியார் பேருந்தும் செய்யப்படுகிறது, சின்னார் செக் போஸ்ட் வரும் போது சிறு புத்துணர்ச்சி பெரும் மனது, திரும்ப அதே திகிலூட்டும் சாலை இடையே நமக்கு தூவானம் அருவியின் பேரிரைச்சல் அந்த காட்டுக்குள் தனியாக தெரியும், மறையூர் நெருங்கும் போது மீண்டும் ஒரு புத்துணர்ச்சி,
தூவனம் அருவி ட்ரக்கிங் நல்லதொரு அனுபவம், சின்னார் காட்சி கோபுரத்தில் உச்சியில் இருந்து அழகிய காட்டை காண்பது பேரின்பம், ஒருமுறையேனும் சென்று வாருங்கள், அவ்வளவு அழகு இந்த சின்னார் வன உயிரின உய்விடம்...
https://trektamilnadu.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் தமிழக அரசு சார்பில் நாம் பயணம் மேற்க்கொள்ள இயலும்...
ஆச்சர்யங்களை நோக்கிய பயணம் தொடரும்... 🏍️

தென்னந்தோப்புகளும் சாலையின் இரு பக்கமும் மேற்கு தொடர்ச்சி

 

அழகிய ரயில் பயணங்களில் இதுவும் ஒன்று...

தென்காசி நெல்லை வழியாக ஆரல்வாய்மொழி நாகர்கோயில் கன்னியாகுமரி செல்லும் வழி...
கிட்டத்தட்ட 20 கிலோமீட்டருக்கு மேல் மின் காற்றாடிகள் சாலை இருபக்கமும் நெடுக சுற்றிக்கொண்டே இருக்கும்...
தென்னந்தோப்புகளும் சாலையின் இரு பக்கமும் மேற்கு தொடர்ச்சி மலைகளும் நாம் பயணிக்கும் போது நமது கூடவே சேர்ந்து பயணிக்கும்...
ஜூன் ஜூலை மாதங்களில் தான் தென்மேற்கு பருவக்காற்று அதிகமாக வீசும் அந்த நேரத்தில்தான் காற்றாலை மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும்.

எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான்

 அப்பா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்’’ என மகன் ஆரம்பித்தான். அவனுக்கு 10 வயது இருக்கும்.

‘‘சொல்லுப்பா?’’
‘‘நீங்க படிச்சது ஆங்கில இலக்கியமா?’’
‘‘ஆமா. ஏன் கேக்குறே?’’
‘‘இலக்கியம் படிச்சிட்டு ஏன் கணினி வியாபாரம் பண்ணுனிங்க?’’
‘‘ஏன்... வைக்கக்கூடாதா?’’
‘‘வைக்கலாம். ஆனா உங்க படிப்புக்கும் நீங்க செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே அப்பா!’’
‘‘சரி, இப்ப நீ சைக்கிள் ஓட்டுறேதானே... அது எப்படி ஓடுகிறது?’’
‘‘அது டயர் இருக்கறதால ஓடுதுப்பா!’’
‘‘அந்த டயர்ல காத்து இல்லன்னா என்னவாகும்?’’
‘‘சைக்கிளை ஓட்ட முடியாது.’’
‘‘சரி, இப்படி காற்று அடைக்கிற சைக்கிள் டயரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்... சொல்லு!’’
‘‘ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் டன்லப் என்ற விஞ்ஞானிதான் அதைக் கண்டுபிடித்தவர் அப்பா.’’
‘‘சரியான விடை. காற்று அடிக்கும் வகை சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் ஜான் டன்லப்தான். ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது. அவர் ஒரு கால்நடை மருத்துவர். அவருக்கும் டயருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் தன் மகனின் முச்சக்கர சைக்கிளை வேகமாக நகர வைக்க என்ன வழி என்று யோசித்தார். இந்த காற்று அடைக்கும் டயரைக் கண்டறிந்தார்.
அதைப் பயன்படுத்தும்போது சைக்கிள் வேகமாக ஓடியது. அந்த காற்று அடைக்கும் டயர் முறை பிரபலமாகி, அதைக் கண்டுபிடித்த பெருமையும் ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது.’’
‘‘இந்த புதிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அப்பா.’’
‘‘ஆமாம். இதைக் கேட்கும் அனைவருக்கும் ‘கால்நடை மருத்துவரா காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்’ என்று ஆச்சரியமாக இருக்கும். ஜான் டன்லப் தான் கற்ற கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பார்க்கவில்லை.
எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான் அவர் கல்லூரியில் கற்றுக் கொண்டதாக நினைத்தார். அதனால்தான் தன் மகனின் சைக்கிளைக் கூட தனது துறையைச் சார்ந்ததாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்.’’
‘‘புரிகிறது அப்பா!’’

இதைப்படிப்பதினால் சனி தோஷம் விலகும்

 

நளன் – தமயந்தி கதை....

*************************
இதைப்படிப்பதினால் சனி தோஷம் விலகும்
**********************************************
படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.
ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டி லுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.
தன் மனைவி ஒருஆணுடன் தங்கியிருக்கிறா ள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.
சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்ன பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பற வையைக் கண்டான்.
நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.
இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வர த்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நள னும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர்.
தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ் வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்ய மாட்டார். அதே நேரம், கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.
ஒரு முறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.
இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தை களை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.
பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டி ல் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றி யது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டி னான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோ டன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினா ன். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிது பன்னனின் தேரோட்டி யாக வேலை செய்தான். அவன் அங்கிருப்ப தை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தா ள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.
அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான்.
திருநள்ளாறு தலத்தை அடைந்த போது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். “சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.
நளன் கதை படித்த நீங்கள் உங்கள் கடமையை ச் சரி வரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்.
சீரும் சிறப்பும் பெற்று வாழ்க வளமுடன்...

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...