Saturday, March 8, 2025

Human Body Chemicals And Minerals

 சிறிது தண்ணீர் குடித்துவிட்டு வாசிக்கவும்...

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.
மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.
உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.(MI@55)
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு உள்ளனவாம். படித்த பதிவு.

ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் வழிபாட்டு முறைகள்-1


ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் 

Chinnar Wildlife Sanctuary -Trektamilnadu -Munnar

 

உடுமலை to மூணார் ரோடுல உள்ளது சின்னார் வைல்டு லைப் பாரஸ்ட்...

உடுமலையில் இருந்து 30 கிமீ தொலைவில் தொடங்குகிறது... 🏍️
மற்றுமொரு அழகிய தமிழக கேரளா எல்லை இது...
வெப்ப மண்டல காடு, புல்வெழிகாடு, சோலைக்காடுனு ஒரு சேர இருக்க கூடிய கேரளாவின் ஒரே பகுதி சின்னார் தான்...
இங்கு யானைகள், 🐘🐘
புலி, சிறுத்தை,🦌🐅
நான்கு வகையான மான்கள்,🦌🦌
காட்டு மாடு,🐃🐂
240 வகையிலான பட்டம் பூச்சிகள்,🦋
40 வகையான ஆத்து மீன்கள்னு🐟🐠 இன்னும் நிறைய...
ஆசியாவில் வாழக்கூடிய அபூர்வமான அணில் வகை இங்க தான் இருக்குனு சொல்றாங்க.,🐿️
நேரம் கிடைத்தால் போய் வாருங்கள் இந்த காட்டு பாதையில் மூணாறு, மறையூர் செல்வது அப்படி ஒரு ஆனந்தம் மற்றும் சிறு திகில் நிறைந்த அனுபவம்,
எப்போது எங்கே யானை இருக்கும் என்றே தெரியாது, அப்டி ஒரு அனுபவ சாலை, அழகிய மலை பாதை நிறைய நேரங்களில் பைக்கில் தான் பயணம் செய்து உள்ளேன்,
கார், பஸ் பாத்துக்காப்பாக அமையும், உடுமலையில் இருந்து மூணார் தமிழக அரசு பேருந்து, கேரளா அரசு பேருந்து, தனியார் பேருந்தும் செய்யப்படுகிறது, சின்னார் செக் போஸ்ட் வரும் போது சிறு புத்துணர்ச்சி பெரும் மனது, திரும்ப அதே திகிலூட்டும் சாலை இடையே நமக்கு தூவானம் அருவியின் பேரிரைச்சல் அந்த காட்டுக்குள் தனியாக தெரியும், மறையூர் நெருங்கும் போது மீண்டும் ஒரு புத்துணர்ச்சி,
தூவனம் அருவி ட்ரக்கிங் நல்லதொரு அனுபவம், சின்னார் காட்சி கோபுரத்தில் உச்சியில் இருந்து அழகிய காட்டை காண்பது பேரின்பம், ஒருமுறையேனும் சென்று வாருங்கள், அவ்வளவு அழகு இந்த சின்னார் வன உயிரின உய்விடம்...
https://trektamilnadu.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் தமிழக அரசு சார்பில் நாம் பயணம் மேற்க்கொள்ள இயலும்...
ஆச்சர்யங்களை நோக்கிய பயணம் தொடரும்... 🏍️

தென்னந்தோப்புகளும் சாலையின் இரு பக்கமும் மேற்கு தொடர்ச்சி

 

அழகிய ரயில் பயணங்களில் இதுவும் ஒன்று...

தென்காசி நெல்லை வழியாக ஆரல்வாய்மொழி நாகர்கோயில் கன்னியாகுமரி செல்லும் வழி...
கிட்டத்தட்ட 20 கிலோமீட்டருக்கு மேல் மின் காற்றாடிகள் சாலை இருபக்கமும் நெடுக சுற்றிக்கொண்டே இருக்கும்...
தென்னந்தோப்புகளும் சாலையின் இரு பக்கமும் மேற்கு தொடர்ச்சி மலைகளும் நாம் பயணிக்கும் போது நமது கூடவே சேர்ந்து பயணிக்கும்...
ஜூன் ஜூலை மாதங்களில் தான் தென்மேற்கு பருவக்காற்று அதிகமாக வீசும் அந்த நேரத்தில்தான் காற்றாலை மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும்.

எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான்

 அப்பா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்’’ என மகன் ஆரம்பித்தான். அவனுக்கு 10 வயது இருக்கும்.

‘‘சொல்லுப்பா?’’
‘‘நீங்க படிச்சது ஆங்கில இலக்கியமா?’’
‘‘ஆமா. ஏன் கேக்குறே?’’
‘‘இலக்கியம் படிச்சிட்டு ஏன் கணினி வியாபாரம் பண்ணுனிங்க?’’
‘‘ஏன்... வைக்கக்கூடாதா?’’
‘‘வைக்கலாம். ஆனா உங்க படிப்புக்கும் நீங்க செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே அப்பா!’’
‘‘சரி, இப்ப நீ சைக்கிள் ஓட்டுறேதானே... அது எப்படி ஓடுகிறது?’’
‘‘அது டயர் இருக்கறதால ஓடுதுப்பா!’’
‘‘அந்த டயர்ல காத்து இல்லன்னா என்னவாகும்?’’
‘‘சைக்கிளை ஓட்ட முடியாது.’’
‘‘சரி, இப்படி காற்று அடைக்கிற சைக்கிள் டயரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்... சொல்லு!’’
‘‘ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் டன்லப் என்ற விஞ்ஞானிதான் அதைக் கண்டுபிடித்தவர் அப்பா.’’
‘‘சரியான விடை. காற்று அடிக்கும் வகை சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் ஜான் டன்லப்தான். ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது. அவர் ஒரு கால்நடை மருத்துவர். அவருக்கும் டயருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் தன் மகனின் முச்சக்கர சைக்கிளை வேகமாக நகர வைக்க என்ன வழி என்று யோசித்தார். இந்த காற்று அடைக்கும் டயரைக் கண்டறிந்தார்.
அதைப் பயன்படுத்தும்போது சைக்கிள் வேகமாக ஓடியது. அந்த காற்று அடைக்கும் டயர் முறை பிரபலமாகி, அதைக் கண்டுபிடித்த பெருமையும் ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது.’’
‘‘இந்த புதிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அப்பா.’’
‘‘ஆமாம். இதைக் கேட்கும் அனைவருக்கும் ‘கால்நடை மருத்துவரா காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்’ என்று ஆச்சரியமாக இருக்கும். ஜான் டன்லப் தான் கற்ற கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பார்க்கவில்லை.
எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான் அவர் கல்லூரியில் கற்றுக் கொண்டதாக நினைத்தார். அதனால்தான் தன் மகனின் சைக்கிளைக் கூட தனது துறையைச் சார்ந்ததாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்.’’
‘‘புரிகிறது அப்பா!’’

இதைப்படிப்பதினால் சனி தோஷம் விலகும்

 

நளன் – தமயந்தி கதை....

*************************
இதைப்படிப்பதினால் சனி தோஷம் விலகும்
**********************************************
படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.
ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டி லுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.
தன் மனைவி ஒருஆணுடன் தங்கியிருக்கிறா ள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.
சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்ன பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பற வையைக் கண்டான்.
நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.
இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வர த்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நள னும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர்.
தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ் வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்ய மாட்டார். அதே நேரம், கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.
ஒரு முறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.
இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தை களை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.
பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டி ல் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றி யது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டி னான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோ டன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினா ன். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிது பன்னனின் தேரோட்டி யாக வேலை செய்தான். அவன் அங்கிருப்ப தை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தா ள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.
அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான்.
திருநள்ளாறு தலத்தை அடைந்த போது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். “சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.
நளன் கதை படித்த நீங்கள் உங்கள் கடமையை ச் சரி வரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்.
சீரும் சிறப்பும் பெற்று வாழ்க வளமுடன்...

Thursday, March 6, 2025

நவதானியங்கள் ஒன்பது

நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை எட்டாகப் பிரித்தான்....

கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு

திசையை எட்டாகப் பிரித்த தமிழன் 
இசையை ஏழாகக் கொடுத்தான்... 

ச ரி க ம ப த நி

இசையை ஏழாக கொடுத்த தமிழன் 
சுவையை ஆறாக பிரித்தான்... 

இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு 
உவர்ப்பு
துவர்ப்பு

சுவையை ஆறாக பிரித்த தமிழன் 
நிலத்தை ஐந்தாக பிரித்தான்... 

குறிஞ்சி  (மலைப்பகுதி) 
முல்லை   ( வனப்பகுதி) 
நெய்தல்  ( கடல் பகுதி) 
மருதம்      ( நீர் மற்றும் நிலம்) 
பாலை      ( வறண்ட பகுதி) 

நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன்
காற்றை நான்காக பிரித்தான்... 

தென்றல்
வாடை 
கோடை 
கொண்டல்

கிழக்கிலிருந்து வீசும் காற்று
கொண்டல் 

தெற்கிலிருந்து வீசும் காற்று
தென்றல்

மேற்கிலிருந்து வீசும் காற்று
கோடை 

வடக்கிலிருந்து வீசும் காற்று
வாடை

காற்றை நான்காக பிரித்த தமிழன்
மொழியை மூன்றாக பிரித்தான்... 

இயல் ( இயற் தமிழ் ) 
இசை  ( இசைத்தமிழ்) 
நாடகம் ( நாடகத்தமிழ்) 

இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 

இம்மூன்று மொழிகளுக்கும் தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 

மொழியை மூன்றாக பிரித்த தமிழன்
வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... 

அகம் 
புறம் 

கணவன் மனைவி வாழும் வாழ்க்கை
அக வாழ்க்கை... 

வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம் 
புற வாழ்க்கை... 

வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்... 
ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்... 

ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான் 
அதை... 
உயிரினும் மேலாக வைத்தான்... 

இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்... 

"ஒழுக்கம் விழுப்பந் தரலான் 
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

பார்த்தேன்,
படித்தேன் 
ரசித்தேன் 
பகிர்ந்தேன்

Monday, March 3, 2025

வெள்ளை மாளிகையில் டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே ஏற்பட்ட மோதல்

 


வெள்ளை மாளிகையில் டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே ஏற்பட்ட மோதல் எதிரொலியாக ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. 


ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் அவர் அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை அடுத்து ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.

பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி வான்ஸ், அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷியா உடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. உங்களின் செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்.. உங்களின் நிலைப்பாடு உங்களின் நாட்டை அழித்துவிடும், என்றார்.

இதை கேட்டு கோபமடைந்த ஜெலன்ஸ்கி, ரஷியாவை நீங்கள் தடுக்கவே இல்லையே.. ரஷியா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜங்க செயல்பாடு.. ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்? போர் என்றால் சிக்கல்தான்.. உங்களுக்கும் ரஷியாவிற்கு இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷியாவால் உங்களுக்கும் ஆபத்து வரும்" என்று அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், "உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை.. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்து நீங்கள்தான்.. இந்த மோசமான சூழலில் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை, நீங்கள் பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்" என்றார்.

இதற்கு கோபமாக பதில் அளித்த ஜெலன்ஸ்கி, நீங்கள் இரண்டு நாட்டு போரை பற்றி சத்தமாக இப்படி மீடியா முன் பேசுவது சரியா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் விளையாடவில்லை.. இந்த போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம்.. நாங்கள் தனித்துவிடப்பட்டு உள்ளோம்.. அதற்கு நன்றி" என்று அவர் கூறினார். என்றுள்ளார்.

அவர் பேச்சில் கடுப்பான டிரம்ப், "அப்படி எல்லாம் பேசாதீர்கள்.. நீங்கள் தனியாக இல்லை.. நீங்கள் தனியாக இருந்தால் கதையே வேறு. அமெரிக்கா உதவி இருக்கிறது உங்களுக்கு... முன்னாள் பதவியில் இருந்த முட்டாள் அதிபர் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் தந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். வான்ஸ் சத்தமாக பேசவில்லை. நாங்கள் இருப்பதால் ஏதோ உங்கள் நாடு இருக்கிறது.

இல்லையென்றால் இந்த போரில் நீங்கள் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை.. நீங்கள் 3ம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.. ஒப்பந்தம் செய்ய விருப்பம் இருந்தால் அடுத்த முறை இங்கே வாருங்கள்" என்று காட்டமாக கூறினார்.

இந்த கடுமையான பேச்சு வார்த்தையால் திட்டமிடப்பட்டிருந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு ரத்தானது. பின்பு வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளிறிய முகத்துடன் வெளியேறினார்.

இதனைத்தொடந்து பேச்சு வார்த்தை குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அறிக்கையில், வெள்ளை மாளிகையில் மிகவும் அர்த்தமுள்ள சந்திப்பை நடத்தினோம் என்றும் அமெரிக்கா ஈடுபட்டால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமைதிக்குத் தயாராக இல்லை என்று தீர்மானித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமைதிக்குத் தயாராக இருக்கும்போது திரும்பி வரலாம் என்று அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ் தனது எக்ஸ் பதிவில், "அமெரிக்காவுக்கு நன்றி, உங்கள் ஆதரவுக்கு நன்றி.. அதிபர் டொனால்டு டிரம்ப்க்கும் நன்றி, உக்ரைனுக்குக்கு நியாயமான மற்றும் நிரந்தர அமைதி தேவை, அதற்காக நாங்கள் சரியாக பாடுபடுவோம்" என்று கூறியிருந்தார்.

இதனிடையே மற்ற நாடுகளுக்கு இதை செய்வதை விட.. அமெரிக்காவின் நட்பு நாடு ஒன்றிற்கு டிரம்ப் இதை செய்ததுதான் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பா, நேட்டோ படையில் உள்ள மற்ற உலக நாடுகளை இது கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் மாா்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை இடி

 

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 


காற்றுசுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் தென்மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் மாா்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று இரவு முதல் லேசான மழை பெய்து வந்தது. அதிகாலை முதல் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சிவன் கோவில், மார்க்கெட், வஉசி சாலை, திரேஸ் புரம் டூவிபுரம், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் காரணமாக சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று சிரமம் அடைந்தனர். திடீர் மழையல் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

thoothukudi post office e sevai maiyam

 

தூத்துக்குடி அஞ்சலங்களில் பொது சேவை மையம்


தூத்துக்குடி அஞ்சலகங்களில் பொதுமக்களுக்காக பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறும் "பொது சேவை மையம்"  செயல்படுகிறது.

இது தொடர்பாக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி கோட்டத்தில், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம்  ஆகிய மூன்று தலைமை அஞ்சல் அலுவலகங்கள் உட்பட அனைத்து துணை அஞ்சலகங்களிலும் CSC என்னும் பொது சேவை மையம் செயல்படுகிறது. இந்த பொது சேவை மையங்களின் மூலம் பொதுமக்கள் பின் வரும் சேவைகளை எளிதாக பெறலாம். 

மின் கட்டணம் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ், லேண்ட்லைன் கட்டணம்/பிராட்பேண்ட் கட்டணம் / DTH ரீசார்ஜ், LIC பாலிசி / பிற தனியார் இன்சூரன்ஸ்  பிரீமியம், விமான மற்றும் பேருந்து  பயணசீட்டு முன்பதிவு, FASTAG பில்  செலுத்துதல், ஜீவன் பிரமான், ஓய்வூதியர் சான்று, பான் கார்டு விண்ணப்பம், பாஸ்போர்ட் விண்ணப்பம், தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS), பயிர் காப்பீட்டு திட்டம் (PMFBY),  மற்றும் பல சேவைகளை பெற  அஞ்சலகங்களை அணுகி பயனனடயுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என்று தெரிவித்துள்ளார்.

Tamilnadu 2 Biggest Airport

தமிழகத்தின் 2வது பெரிய விமான நிலையம் ஆகிறது துாத்துக்குடி!


தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, 3,115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் உடைய இரண்டாவது பெரிய ஓடுதளம் உள்ள விமான நிலையமாக துாத்துக்குடி மாறுகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, பஸ், ரயில், கப்பல், விமானம் என நான்கு வகை போக்குவரத்து வசதியும் உடைய நகரம் துாத்துக்குடி. பெரிய தொழிற்சாலைகள், துறைமுகம் என, வளர்ந்து வரும் நகரமாக துாத்துக்குடி விளங்குகிறது. 'பர்னிச்சர் பார்க், வின் பாஸ்ட் எலக்ட்ரிக் கார்' உற்பத்தி ஆலை, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் என, அடுத்தடுத்து புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்களின் வசதிக்காக, துாத்துக்குடி விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. துாத்துக்குடி - சென்னை இடையே, தினமும் ஐந்து முறையும், துாத்துக்குடி - பெங்களூரு இடையே தினமும் இரண்டு முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கூடுதல் விமானங்களை கையாளும் வகையில், 227.33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. 17,341 சதுர மீட்டரில் அமைக்கப்படும் புதிய முனையத்தில், விமான போக்குவரத்து கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதை சார்ந்த அலுவலக கட்ட டங்கள், தீயணைப்பு துறை கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.

துாத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமான நிலையத்தின் புதிய முனையத்திற்கு செல்லும் வகையில், 1 கி.மீ.,க்கு இணைப்பு சாலை புனரமைக்கும் பணியும் நடக்கிறது. புதிய முனையத்தின் புறப்பாடு பகுதியில் நான்கு வாயில்களும், 21 பயணியர், 'செக் இன் கவுன்டர்'களும், மூன்று 'ஏரோ பிரிட்ஜ்'களும், இரண்டு வருகைக்கான, 'கன்வேயர் பெல்ட்'களும் அமைக்கப்படுகின்றன.

மேலும், ஒரே நேரத்தில் ஐந்து விமானங்களை நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணியர் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், இரண்டு வி.ஐ.பி., அறைகள், 'லிப்ட்' வசதிகள், பயணியர் அதிகமாக வருகை தரும் நேரங்களில், ஒரு மணி நேரத்திற்கு, 1,440 பயணியரை கையாளும் வகையிலான வசதிகள் என, அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

புதிய முனையம் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக அமைக்கப்படுகிறது. முனைய கட்டடங்கள் முழுதும் சூரியசக்தி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 76 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய முனையத்தில், 113.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3,115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால், மிகப்பெரிய ஏ - 321 ரக ஏர்பஸ் விமானங்களும் வந்து செல்ல முடியும். ஓடுதளம் அமைக்கும் பணி, இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, விமான நிலைய உயர் அதிகாரிகள் கூறியதாவது: விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடைந்ததும், சென்னை, பெங்களூருக்கு மட்டுமின்றி, ஹைதராபாத், மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட, நாட்டின் பெரிய நகரங்களுக்கும் விமான சேவை துவங்கப்படும். தற்போது, 78 பயணியர் வரை செல்லும் ஏ.டி.ஆர்., ரக விமானங்கள் தான் இயக்கப்படுகின்றன.

இனி, 250 பயணியருடன் செல்லும், 'ஏ321' ரக ஏர்பஸ் விமானங்களும் இயக்கப்படும். சென்னை விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் 3,611 மீட்டர். அதற்கு அடுத்தபடியாக, 3,115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் உடைய இரண்டாவது பெரிய ஓடுதளம் உள்ள விமான நிலையமாக துாத்துக்குடி மாறுகிறது. இதன் மூலம் துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணியர் பயன் பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொழில்முனைவோர் சிலர் கூறியதாவது:துாத்துக்குடி முக்கிய தொழில் நகரமாக உள்ளது. இதற்கு துறைமுகம், விமான நிலையம் இருப்பது முக்கிய காரணம். தற்போது, விமான நிலையமும் விரிவாக்கம் செய்யப்படுவதால், பயணியர் போக்குவரத்து அதிகமாகும்; சரக்குகளை அதிகம் கையாள முடியும்.ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலை சார்ந்தவர்கள் பெரிதும் பயன் பெறுவர். வர்த்தகம் மேம்படும். உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநில, வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் ஈர்க்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தூத்துக்குடி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில்

 Thoothukudi Thiruvananthapuram Intercity Express

தூத்துக்குடி - திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவதற்காக ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 


இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திருச்சி - திருவனந்தபுரம், கோவை-சென்னை உள்பட பல நகரங்களுக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்குகின்றன. 

பெரும்பாலும் முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வகையில் தற்போது நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி திருவனந்தபுரத்துக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

திருவனந்தபுரம், தூத்துக்குடியில் துறைமுகங்கள் உள்ளன. அதை சார்த்த பல்வேறு தொழில் நிமித்தங்களுக்கான ஆயிரக் கணக்கானவர்கள் இரு நகரங்களுக்கு இடையே பயணிக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் இருந்தும் திருநெல்வேலி, தூத்துக்குடி நகரங்களுக்கும், திருவனந்தபுரத்துக்கும் ஆயிரக் கணக்கான மக்கள் செல்கிறார்கள். 

இந்த மக்களின் வசதிக்காக இரு நகரங்களையும் இணைக்கும் வகையில் தூத்துக்குடி திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது மிகவும் அத்தியாவசியமான தேவையாக மாறி உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வர இருக்கிறது. திருவனந்தபுரத்தில் ஐ.எஸ் ஆர்.ஓ. மையம் அமைந்துள்ளது.

குமரி, திருநெல்வேலி எல்லையில் மகேந்திரகிரியில் ஐ.எஸ்.ஆர்.ஓ. மையம் அமைந்துள்ளது. தொழில் சார்ந்த பல்வேறு விஷயங்கள் தூத்துக்குடி, திருவனந்தபுரம் நகரங்களில் உள்ளன. எனவே இவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்விட்டபல தரப்பட்ட மக்களின் நலன்களுக்கான இரு நகரங்களுக்கும் இடையே இன்டர்சிட்டி ரயில் சேவை என்பது உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக ரயில்வே துறைக்கு, நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் டவுன் ரயில்வே நகரை சேர்ந்த மோகன் என்பவர் ரயில்வே துறைக்குகோரிக்கை மனு அனுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே நிர்வாகம் தூத்துக்குடி - திருவனந்தபுரம் இடையே நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி வழியாக இன்டர்சிட்டி ரயில் இயக்குவதற்கான பரிசீலனை உள்ளது. விரைவில் இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்படும் என கூறி உள்ளது. 

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடந்துகின்றன. இந்த பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து முழுமையாக இயங்கும் பட்சத்தில் இந்த வழித்தடங்களில் இட நெருக்கடி குறையும். எனவே கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். அந்த வகையில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் டவுன் வழியாக திருநெல்வேலி, மதுரை, திருச்சி. விழுப்புரம் வழியாக சென்னைக்கும், ஐதராபாத்துக்கும் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக் கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Saturday, March 1, 2025

கன்னியாகுமரி-மும்பை இடையே ஹோலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

கன்னியாகுமரி-மும்பை இடையே ஹோலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சனி 1, மார்ச் 2025 12:26:03 PM ஹோலி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

ஹோலி பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண்: 01005) வருகிற மார்ச் 10 மற்றும் 17 ம் தேதிகளில் அதிகாலை 12.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.15 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடையும்.

அதே போல மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு செல்லும் வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண்: 01006) மார்ச் 11 மற்றும் 18ம் தேதிகளில் அதிகாலை 2.15 மணியளவில் புறப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, February 27, 2025

பயணங்கள், அனுபவங்கள் என்னவெல்லாம் செய்யும் :

பயணங்கள், அனுபவங்கள் என்னவெல்லாம் செய்யும் :

ஒரு பட்டாம்பூச்சி பத்தே நிமிடங்களில் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று கற்றுத்தரும்..

யாருக்கும் காத்திராமல், யாரையும் காத்திருக்க வைக்காமல், நமது நேரத்தில் நாம் வாழ்வோம்.,

நடையில் வேகம் கூட்ட வேண்டுமா, செய்யலாம்.,
ஒரே இடத்தில ஒன்றரை மணி நேரம் ஆணியத்தாற்போல் ரசித்துக்கொண்டே நிற்க வேண்டுமா, செய்யலாம். 

மலை ஏறலாம். சறுக்கி விழலாம். மரமேறலாம்., ஓடையில் குதிக்கலாம்.

நிறைய பேருடன் பேசலாம். உடன் பயணிகலாம். புதிய விஷயங்களை கற்கலாம். 

புதிய நண்பர்கள் கிடைப்பர். பழைய விரோதிகளை மறந்தே போவோம்., 

சமயங்களில் யாருக்கோ வலிய சென்று உதவுவோம். சம்பந்தமே இல்லாமல் ஒருவர் லிப்ட் தருவார்.

பொக்கை வாய் பாட்டி நம் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்!

ஆடு மேய்க்கும் சிறுவனிடம் தோற்றுப்போவோம்!

தொட்டாஞ்சினுங்கி இலைகளினூடே தொடாமலே சிணுங்கும் பூவை ரசிக்கலாம்!

கழுதை ஏற்றம் முதல் யானை ஏற்றம் வரை கற்கலாம் (அதிர்ஷ்டமிருந்தால் ஒரு உதை, மிதி வாங்கலாம்). 

வண்ணாந்துறையில் கபடி ஆடலாம். 

திட்ட வந்த பெரிய மனிதரை நடுவராக்கலாம். நம் பிஸ்கெட்/சிப்ஸ் பாக்கெட்டுகளை அவர்களின் சோளரொட்டிக்கு பண்டமாற்றம் செய்து கொள்ளலாம்.

மொத்தத்தில், நாம் எப்போதும் தூக்கிச் சுமப்போமே ஒரு மூட்டை, அது இல்லாமல் வெகு இலகுவாய் உணர்வோம்!

தினசரி வாழ்வில் நாம் எத்தனை அர்த்தமில்லா விஷயங்களுக்காக வருந்தி மெனக்கெடுகிறோம் என்று உணரலாம்!

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மிக அழகான பரந்து விரிந்த இல்லிக்கல் கல்லு மாலை...

கேரள மாநிலத்தில் பார்த்த இடங்களையே பார்த்து பார்த்து போரடித்தவர்களுக்கு புதிய அழகான இடங்களை வித்தியாசமான இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்....

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மிக அழகான பரந்து விரிந்த ஒரே மலை இல்லிக்கல் கல்லு மாலை...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரம் கொண்ட மலை இந்த இல்லிகல் கல்லு 

ஒரு ஜீப் செல்லும் அளவுக்கு மட்டுமே பாதை பாதையின் இரு மருங்கிலும் ஆளுயர புற்கள் மலையின் உச்சிக்கு சென்றவுடன் அழகான வியூ பாயிண்ட் மேலிருந்து அந்த இடத்தைப் சுற்றி பார்ப்பது மிக அழகாக இருக்கும்

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...