Saturday, February 22, 2025

தன் உடலை காக்காதவன்

 உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னைத் தேடு..!
ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று..!
ஊர் உனக்கு மகுடம் சூட்டி உத்தமன் என பட்டம் தந்தாலும்!— at Kolathur Sivan Temple கொளத்தூர் சிவன் கோவில்.
உடல் உன்னை கை விட்டால் உன் பட்டமும் உன் பதவியும்
பிடி சாம்பலாகி விடும்..!
புறத்தில் உன் குடும்பத்தை நேசித்தாய்....அது உன் குடும்பம் என கண்டும் கொண்டாய்...!
ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்றாய்..!
ஆனால் உனக்கு காவல் தெய்வமாக, உன் உயிருக்கு காக்கும் கடவுளாக,
இருப்பது உன் உடலே...!
அக குடும்பத்தை மறந்து விடாதே. உன் அக குடும்பம் உன் உடலே..!
உன் அக குடும்பம் சரியில்லை என்றால்
சூரிய குடும்பத்தில் நீ இருக்க இயலுவதில்லை..!
உன் உள் குடும்பம் உன் உடலே!
அதை மறந்தால் உன் வெளி குடும்பம் கதறினாலும்
உன்னை காக்கவும் யாரால் முடியும்..!
மற்ற உயிர்களுக்கு ஒருவன் செய்யும் பாவத்திற்கு
விமோசனம் உண்டு..!
ஒருவன் அவன் உடலுக்கே செய்யும் பாவத்திற்கு
விமோசனம் இல்லை...!
காரணம் அந்த உடல் அவன் உயிருக்காகவே
சிறப்பு மிக்க வரமாக கொடுக்கப்பட்டதால்..!
உடலுக்கு ஒருவன் செய்யும் தொண்டே பூஜை..!
உடலுக்கு உள் சென்று உனக்காக உழைக்கும்
உறுப்புகளை வணங்குவதே ஆலயம் சென்று
வணங்குவதை விட உயர்வானது..!
உடல் அனுமதித்தால் தான் ஒருவன் சித்தனும் ஆக முடியும்..!
ஒருவன் எப்படி பட்டவன் ஆக வேண்டும் என்று தீர்மானிப்பது அவனின் எண்ணங்களே..!
ஆனால் அந்த எண்ணங்களை தீர்மானிப்பது உடலே..!
ஒருவன் எதுவாக ஆக விரும்புகிறானோ
அதை தீர்மாணிப்பதும் உடலே...!
ஒருவன் உண்ணும் உணவும் பேணி காக்கும் உடலும் அழைத்து செல்லும் அதன் அதன் தன்மைக்கு ஏற்ப..!
ஒருவன் அவன் உள் குடும்பமான உடலை கவனித்தால்..!
அந்த உள் குடும்பமே உன் வெளி குடும்பத்தை காக்கும்..!
பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் குலத்தின் குலதெய்வம் அவரின் உடலே..!
உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!
தியானம் நம் மனதோடு பேச செய்யும்.
ஆசனம் நம் உடலோடு பேச செய்யும்.
அதை தேடு...!!
இந்த தத்துவத்தை திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் தெள்ளத்தெளிவாக சொல்லுகிறார்...
"தன் உடலை காக்காதவன் புழுவாய் புழு புழுத்து இறப்பார்" என்று கூறியுள்ளார்..

குருவருளோடு இறைவனை நாடு குருவே சரணம்

 உடலை உறுதி செய் அதை உள்ளத்தில் இறைவனை நிறுத்தி தியானம் செய்வோம் குருவருளோடு இறைவனை நாடு குருவே சரணம்



திருநெல்வேலியிலிருந்து தாதர் வரை செல்லும் அதிவிரைவு ரயில்

 பயணிகளின் கனிவான கவனத்திற்கு திருநெல்வேலியிலிருந்து தாதர் வரை செல்லும் அதிவிரைவு ரயில்....

ரயில் நேரம் 👇 🛑
Tirunelveli
DEP 07:15
Kovilpatti
ARR 08:09 DEP 08:10
Virudunagar Jn
ARR 09:03 DEP 09:05
Madurai Jn
ARR 09:50 DEP 09:55
Dindigul Jn
ARR 11:05 DEP 11:10
Karur
ARR 12:18 DEP 12:20
Erode Jn
ARR 13:20 DEP 13:30
Tiruppur
ARR 14:13 DEP 14:15
Coimbatore Jn
ARR 15:07 DEP 15:10
Palakkad Jn
ARR 16:17 DEP 16:20
Shoranur Jn
ARR 17:05 DEP 17:10
Kozhikkode
ARR 18:22 DEP 18:25
Kannur
ARR 19:52 DEP 19:55
Mangaluru Jn
ARR 22:00 DEP 22:10
Udupi
ARR 23:41 DEP 23:42
Honnavar
ARR 01:31 DEP 01:32
Karwar
ARR 02:43 DEP 02:44
Madgaon
ARR 04:05 DEP 04:15
Thivim
ARR 05:01 DEP 05:02
Kankavali
ARR 06:41 DEP 06:42
Ratnagiri
ARR 09:00 DEP 09:05
Chiplun
ARR 11:01 DEP 11:02
Roha
ARR 13:35 DEP 13:40
Panvel
ARR 14:59 DEP 15:00
Thane
ARR 15:54 DEP 15:55
Dadar
ARR 16:40 End

சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா?

 

சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா?

✨பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகரானவர் சனி பகவானே ஆவார்.
✨பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.
✨நவகிரகங்களில் மிகவும் முக்கியமான பாவகிரகமாக சனி கருதப்படுகிறார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட சனிபகவானின் பார்வையை, சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. அதனால் சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடக்கூடாது. கோவில்களில் இரண்டு பக்கங்களில் நின்று தான் வழிபட வேண்டும்.
✨சனிபகவான் என்று மட்டும் இல்லை, கோயிலில் உள்ள எந்த தெய்வத்தையும் நேருக்கு நேர் நின்று தரிசிக்கக்கூடாது.
✨தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தி நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற தெய்வ வாகனங்களுக்கு மட்டுமே உண்டு.
✨நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. இதை ஸ்தான பலம், ஸம்யோக பலம், திருஷ்டி பலம் என்று கூறுவர்.
✨சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனி பகவானுக்கு பிடித்தமான ஒன்றாகும். எனவே இந்த வழிபாடு மேற்கொள்பவர்கள் சனியின் பார்வையிலிருந்து தப்பலாம்.
✨சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனிக்கிழமையில் வரும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்கள் ஏதேனும் ஒன்றில் சனி பகவானுக்கு விரதம் தொடங்கி 21 சனிக்கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
✨இயற்கையிலேயே அசுப கிரகமான சனி கிரகத்தின் 3, 7, 10ம் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், சனீஸ்வரரை நேருக்கு நேர் நின்று தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள்.
சனிபகவான் புராணக்கதை :
✨நவகிரகங்களை தனது கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்தான் இலங்கை வேந்தன் ராவணன். இவன் சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில் படுக்கவைத்து, அவர்களின் மார்பின் மீது கால்களை வைத்து மிதித்துக்கொண்டு அரியணை ஏறும், இறங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.
✨இதற்காக நவகிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளில் வரிசையாக மேல்நோக்கி படுக்கவைக்கப்பட்டிருந்தது. ஆனால், சனி கிரகம் மட்டும், தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால் மேல் நோக்கிப் பார்க்காமல், கீழ் நோக்கி குப்புறப் படுத்திருந்தது.
✨ராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட நினைத்த நாரதர், ராவணன் சபைக்கு வந்தார். அங்கே ராவணன் நவக்கிரகங்களை தனது காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், "ராவணா, உனது கட்டளையை மதித்து இந்த நவகிரகங்கள் அனைவரும் மேல்நோக்கி படிகளில் படுத்திருக்கிறார்கள். ஆனால், சனி கிரகம் மட்டும் உன்னை அவமதிக்கும் வகையில் கீழ் நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா?" என்று கூற, ராவணனும் சனி கிரகத்தை மேல் நோக்கிப் படுக்கச் சொன்னான்.
✨தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்காததால், சனி கிரகமும் படிக்கட்டில் மேல் நோக்கியபடி திரும்பிப் படுத்தது. ராவணன் தனது காலால் சனி கிரகத்தை மார்பில் மிதித்து ஏறுகையில், சனி கிரகத்தின் குரூரமான பார்வை ராவணனின் மீது விழுந்தது. அப்போது முதல் ராவணனுக்கு ஏழரை ஆரம்பித்தது. அதன்பின், சில காலங்களிலேயே இராமனின் கையால் வீழ்த்தப்பட்டு மடிந்தான் இராவணன்.
✨நாரதரும் தான் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் அங்கிருந்துப் புறப்பட்டார். புராணத்தில் கூறப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பதே சிறந்தது என்பதை அறியலாம்.
✨சனிக்கிழமை தோறும் நவக்கிரகம் சுற்றும் பழக்கம் உள்ளவர்கள், சனீஸ்வரனை நேருக்கு நேர் நின்று வழிபடாமல் சன்னதிகளின் இரு பக்கங்களில் நின்று வழிபடலாம். இவ்வாறு வழிபட்டால் சனிபகவானின் கெடு பார்வையால் நமக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது.
✨மேலும், ஏழரை சனி, பாதச் சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி நடைபெறும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் சனிபகவானுக்கு 27 தடவை சுற்றி வந்து எள் விளக்கு ஏற்றி வந்தால் சனீஷ்வரனின் தாக்கம் குறைந்து, ஆபத்துகள் விலகும் என்பது ஐதீகம்.

Friday, February 21, 2025

Human life layers -பிரம்மண்டம்ம்

 


பாலக்காடு 1 ~ Nelliyampathy hills view point

 பாலக்காடு 6 ~ Nelliyampathy hills view point

பல மலைகள் குட்டி குட்டி நீர் ஓடைகள்
"பாலக்காட்டின் ராணி" என்று அழைக்கப்படும் நெல்லியம்பதியின் மலை உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறோம் , வளைவான மலைப்பாதை...
காடுகள் மரங்களுக்கு நடுவே பாதைகள் தொலைந்து போனது போல் தெரிந்தாலும், பயணத்தில் சில இடங்கள் உங்களை விழித்தெழ வைக்கும்.
பப்பாளியை உப்பு நீரில் ஊற வைத்திருப்பதையோ கட்டஞ்சாயா கிடைக்கும் கடையென்றாலோ
ரவி எல்லாரையும் விழித்தெழ வைத்திடுவான், நல்லவேளை பொத்துண்டி அணைக்கட்டிற்குப் பிறகு எங்கும் கடைகள் இல்லை..
நகரத்தின் கூச்சலையும் , புறச்சூழலில் ஏற்படுகின்ற மனஅழுத்தத்தையும் மறந்து, மலைக்குப் பயணம் செல்வது ஒரு தெய்வீக உண்ர்வுதான்,
காரில் பயணிக்கும்போது சட்டென்று கண்ணாடியை இறக்கும்போது காதுகளுக்குள் நுழையும் குளிராய் , இதயத்தை சில்லிட வைக்கும் மெல்லிய பனியோடுடனான காற்றின் வாசனையில், மலையில் மிதப்பதாய் உணரவைத்தது...
வழியில் எங்களை அழைத்துச் செல்லும் ITL டிராவலின் ரெஸ்ட்ராரெண்டில் ஒரு தேநீர் அருந்திவிட்டு மலை மேலேறிச் சென்றோம்,
வீவ் பாயிண்ட் செல்ல சிறிய நடக்க வேண்டும், முதியவர்கள் தவிர்த்துக் கொள்ளுதல் நலம்..
மேலே செல்லச் செல்ல எல்லாம் தொலைந்து போய்க்கொண்டே இருக்கிறது , செல்போன் சிக்னல் உட்பட எல்லாமும் துண்டிக்கப்பட்டு விட்டது , கீழிருந்து சுமந்து வந்த பாரங்கள் கூட,
மரங்கள் சிலிர்த்து எங்கள் முடி கலைத்து வரவேற்றது.. நடந்தே மலை உச்சியில் உள்ள view point க்கு சென்றோம்.
அங்கிருந்து கீழே பார்த்தவுடன் கொல்லங்கோடு முழுவதும் எங்கள் கண்களுக்கு தெரியத் தொடங்கியது, ஒவ்வொரு வீடும், பசுமை நிலங்கள், தூரத்தில் தண்ணீர் விழாத அருவி, எல்லாம் ஒரு பெரிய ஓவியத்தைப் போல்!
மலையில் கொஞ்சம் உலவிவிட்டதால் மனசு இலகுவாயிற்று, அமைதியான ஒரு அனுபவம்.
மலை இறங்கி வந்து அங்குள்ள கடையில் ஜிஞ்சர் க்ரஷ் ஒன்று குடித்தோம் , அங்குள்ள கிராமங்களிலேயே தயாரிப்பார்கள் போல் நல்ல சுவை. ஒருவேளை மலை,பசுமை, காற்று, நிலம்—இவை கலந்தால் இப்படித்தான் சுவையாக இருக்குமோ?
மொபைல் தொடர்புக்கு அப்பால் சென்றாலே இயற்கை நம்மோடு இணைய ஆரம்பிக்கிறது
ஜுன் ஜூலையில் இந்த நெல்லியம்பதி மலைப்பாதையில் வந்து பாருங்கள், வாழ்க்கையின் அழகை முழுமையாய் உணரலாம்!

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!-1

 பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!

* வெந்தயம். - 250gm
* ஓமம் - 100gm
* கருஞ்சீரகம் - 50gm
* மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.
இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.
👉 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.
👉 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
👉 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.
👉 இருதயம் சீராக இயங்குகிறது.
👉 சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.
👉 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.
👉 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.
👉 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.
👉 கண் பார்வை
தெளிவடைகிறது.
👉 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.
👉மலச்சிக்கல் நீங்குகிறது.
👉 நினைவாற்றல் மேம்படுகிறது.
கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
👉 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.
👉 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.
👉 ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.
👉 நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.
👍 இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

மேஜிக்கல்சீட்ஸ் என்று சொல்லப்படும் வெந்தயம்!!

 #மேஜிக்கல்சீட்ஸ் என்று சொல்லப்படும் வெந்தயம்!!

#அத்தனைக்கும் #அரு #மருந்து:
வெந்தயம் என்ற சமையல் அறையில் இருக்கும் விதைகள் இத்தனை நன்மைகள் உடையதா? என்று வியப்படைய வேண்டி இருக்கிறது. சிறுவயதில் அடிவயிற்று வலி என்றால் கொஞ்சம் வெந்தயத்தை கொடுத்து வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடிக்க சொல்வார்கள் என் தாயார் .
ஆனால் மிகப் பெரிய பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு சாதாரண சமையலறை அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் வெந்தயம் பயன்படுகிறது என்றால் அதை நாம் ஏன் முறையாக பயன்படுத்தக் கூடாது?
#சர்க்கரைகுறைபாட்டை
#அக்கறையோடுவிரட்டும்:
வெந்தயத்தை அப்படியே போட்டுக் கொண்டு தினமும் விளங்குவது ஒரு சிலர் பழக்கம் இன்னும் சிலர் வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி செய்து தினம் ஒரு ஸ்பூன் அளவில் சாப்பிடுவது என்ற பழக்கத்தை உடையவர்கள் ஆனால் இதையெல்லாம் தாண்டி கொஞ்சம் மெனக்கெட்டு வெந்தயத்தை முளைகட்டி பயன்படுத்தும் பழக்கத்திற்கு நாம் வரவேண்டும்.
தினமும் 20 கிராம் அளவு முளைக்கட்டிய வெந்தயம் உங்கள் சர்க்கரையை இரண்டு மாதங்களில் கட்டுக்குள் கொண்டு வந்து விடும் இதை நானே பரிசோதித்து பார்த்தேன் என் நண்பர்களுக்கு சொல்லி அவர்களும் பலன் கண்டிருக்கிறார்கள் என்பதால் என் முகநூல் நண்பர்களுக்கும் சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
#ஊறவைத்தவெந்தயம் #ஊருக்கேநல்லது:
வெந்தயத்தை தேவையான அளவு எடுத்துக் கொண்டு ஆறு மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும் பிறகு அதை சுத்தமான துணியில் வடிகட்டி எடுத்து கட்டி 8 மணி நேரம் வைத்தால் முளைப்பு வந்துவிடும் ஒன்றரை சென்டிமீட்டருக்கும் சற்று அதிகமாக முளைப்பு வந்து விட்டால் அதில் இருக்கும் உங்களுக்கு பிடிக்காத கசப்பு சுவை நீங்கிவிடும் ஆனால் பலன் அதேதான் சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும் ஆனால் 20 கிராம் அளவு போதுமானது இதை இரவு நேரங்களில் படுப்பதற்கு முன்பு சாப்பிடலாம் அல்லது காலையில் உணவு உண்ட பிறகு சாப்பிடலாம் ஏனென்றால் இரவில் சாப்பிட்ட உணவுக்கு வேலை இல்லை என்பதால் சர்க்கரை அதிகமாகும் அதை கட்டுக்குள் வைக்க இது மிகவும் பயன்படும்.
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் லோ சுகர் ஆகும் என்பதால் காலை சிற்றுண்டி முடித்த பிறகு கூட சாப்பிடலாம்.
#இதயபாதுகாப்பின் #இதயம்:
சில ஆய்வு முடிவுகள் இதய பாதுகாப்பிற்கு இது மிகப் பெரிய உறுதுணையாக இருக்கிறது என்று சொல்கிறது முக்கியமாக ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேருவதை இது தடுக்கிறது.
#உங்களையார்என்று #எடைபோடும்:
உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெந்தயம் பயன்படுகிறது அது மட்டுமல்ல அதிகப்படியான எடை இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டால் எடை குறைந்து உங்களை ஸ்லிம் அண்ட் பிட்டாக காட்டும் அற்புதத்தை செய்யும் முளைகட்டிய வெந்தயம்.
#முடிஉடைவேந்தர்கள்:
பள்ளிச்செல்லும் மாணவ மாணவிகளுக்கு கூட முடி உதிர்தல் பிரச்சனை இப்பொழுதெல்லாம் ஆரம்பித்து விடுகிறது அதேபோல பொல்லாத பொடுகு தொல்லை தருகிறது இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் வெந்தயமும் சரி செய்யும் அதே சமயம் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலைக்கு தடவிக் கொண்டாலும் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் நீங்கள் முடி உடைய வேந்தர்களாக உலா வரலாம் என்பதற்கு இது கேரண்டி.
#இந்தியாவின்இரும்பு #மனிதர்கள்:
இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் போன்று நீங்களும் உடலில் இரும்பு சத்து அதிகமான மனிதராக போற்றப்படுவீர்கள். வெந்த+அயம்
என்ற சொல் சமைத்த இரும்புச் சத்து என்ற பொருளை தருகிறது என்று சித்த மருத்துவம் சொல்கிறது அதாவது இரும்புச்சத்தை நீங்கள் சமைத்து சாப்பிடுகிறீர்கள் என்று பொருள் அந்த அளவிற்கு உங்கள் இரும்பு சத்து அளவை சரி செய்து உங்களை இரும்பு மனிதர்களாக உலா வரச் செய்யும் மேஜிக்கை செய்கிறது வெந்தயம்.
#அந்தமூன்றுநாட்கள்:
மாதவிடாய் காலங்களில் அடிவயிற்று வலி வயிற்றுக் கடுப்பு போன்றவற்றால் அவதியுறும் பொழுது அந்த நாட்களில் வெந்தயம் பலன் தரும் என்ற சிந்தனை பெண்களுக்கு பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு வர வேண்டும் இதை நீங்கள் முன்கூட்டியே முளைகட்டி வைத்து திட்டமிட வேண்டும்.
#கண்ணானகண்ணன்:
கண்ணான கண்ணன் என்று போற்றப்படும் அளவிற்கு உங்கள் கண் பாதுகாப்பிற்கு கண்ணுக்கு குளிர்ச்சி தரும் அற்புத பொருளாக முளை கட்டிய வெந்தயம் திகழ்கிறது.
#மூலநோய்க்குகாலன்:
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து ஆரம்பித்து அதன் முற்றிய நிலையான மூலநோய் வரை சரி செய்யும் வேலையை செய்கிறது முளைக்கட்டிய வெந்தயம்.
#மூன்றுமுக்கியசத்துக்கள்
வைட்டமின் சி,இரும்பு சத்து, பொட்டாசியம் ஆகிய மூன்றும் மிகவும் அவசியமான ஒன்று இந்த மூன்றும் ஒரு சேர உங்களுக்கு கிடைக்கிறது என்றால் அது முளைக்கட்டினால் மாத்திரம் சாத்தியம் அதனால் முளைகட்டிய வெந்தயம் உங்களுக்கு இந்த கூடுதல் பலனை தருவதற்காக காத்திருக்கிறது.
#உடல்சூட்டிற்குஉலை #வைக்கும்:
தொடர்ந்து முளைகட்டிய வெந்தயம் சாப்பிட்டு வர உடல் சூடு குறைந்து கட்டுக்குள் வரும் என்பதால் இதுவும் ஒரு கூடுதல் பலன் ஆனால் மேற்கண்ட எல்லா விஷயங்களையும் சரிசெய்யும் வெந்தயத்தை சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் யோசித்து சாப்பிட வேண்டும். அல்லது அவர்கள் வறுத்து பொடி செய்து வெந்தயத்தை பயன்படுத்தலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு குளிர்ச்சியை அள்ளி வழங்கக் கூடியது முளைகட்டிய வெந்தயம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
#மளிகைலிஸ்டில்
#நம்பர்ஒன்:
என்ன இந்த மாசம் மளிகை லிஸ்டில் முதல் மரியாதை இதற்குத்தானா?
ஒரு கிலோ வெந்தயம் வாங்கினால் போதுமா?
சாப்பிட ஆரம்பியுங்கள் இரும்பு சத்துக் கூடும் அப்புறம் மளிகை சாமானை தூக்குவதற்கு அந்த வெந்தயமே உங்களுக்கு உதவிடும் 😀.

வண்டி எண் 20672 பெங்களூரு cantonment இருந்து மதுரை வந்தே

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20672 பெங்களூரு cantonment இருந்து மதுரை வந்தே பாரத் விரைவு ரயில் உள்ளது பெங்களூரு cantonment:1:30pm

கிருஷ்ணராஜபுரம்:1:43pm
சேலம்:4:42pm நாமக்கல்:5:23pm
கரூர்:5:48pm
திருச்சிராப்பள்ளி:7:20pm
திண்டுக்கல்:8:28pm
மதுரை :9:40pm குறிப்பு ( பெங்களூரு cantonment கட்டணம் இருந்து மதுரை கேட்டரிங் சேர்த்தால் 1432 உங்களுக்கு கேட்டரிங் தேவையில்லை என்றால் 1068 மட்டும் செவ்வாய் கிழமைகளில் கிடையாது ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Featured Post

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. 🔴🟢🔴 சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூ...