Thursday, February 13, 2025

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 12641 கன்னியாகுமரி இருந்து ஹசரத் நிஜாமுதீன்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 12641 கன்னியாகுமரி இருந்து ஹசரத் நிஜாமுதீன் வாரம் இருமுறை (புதன் மற்றும் வெள்ளி ) ஆகிய தினங்களில் மட்டும் கன்னியாகுமரி:8:30pm

நாகர்கோயில்:8:50pm
திருநெல்வேலி:10:15pm கோவில்பட்டி :11:08pm
சாத்தூர்:11:28pm
விருதுநகர்:12:03Am
மதுரை:12:50Am
திண்டுக்கல்:1:52Am
திருச்சிராப்பள்ளி:3:05Am
விருத்தாசலம்:4:38Am
விழுப்புரம்:5:40Am
மேல்மருவத்தூர்:6:33Am
செங்கல்பட்டு:7:08Am
தாம்பரம்:7:38Am
சென்னை எழும்பூர் :8:25Am
விஜயவாடா:3:30pm
பல்ஹர்ஷா:10:50pm நாக்பூர்:1:55Am
பேதுல்:4:18Am
இடார்சி:6:35Am
போபால்:8:15Am
ஜான்சி:12:05pm
ஆக்ரா கண்டோன்மென்ட்:3:35pm
ஹசரத் நிஜாமுதீன்:6:35pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16811 மயிலாடுதுறை இருந்து சேலம்

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16811 மயிலாடுதுறை இருந்து சேலம் தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில்                                     மயிலாடுதுறை : 6:00Am                                                                    குத்தலாம் : 6:12Am                              நரசிங்கப்பேட்டை : 6:19Am                   ஆடுதுறை :6:26Am                                  திருவிடைமருதூர் :6:30Am                 திருநாகேஸ்வரன் :6:34Am                      கும்பகோணம் : 6:40Am                       தாரசுராம் : 6:47Am                                      சுவாமிமலை :6:51Am                                  சுந்தராப்பெருமாள் கோவில் 6:56Am     பாபநாசம் :7:02Am                                  பண்டாரவாடை :7:07Am                              அய்யம்பேட்டை :7:11Am                                பசுபதிக்கோவில் :7:15Am                                           திட்டை :7:23Am                                                 தஞ்சாவூர் :7:48Am                                 ஆலங்குடி:8:01Am                                                 பூதலூர் :8:09Am                                          அய்யனார்புறம் :8:15Am                             சோளகம்பட்டி:8:21Am                                 தொண்டைமான்பட்டி :8:28Am                திருவெறும்பூர் :8:34Am                              மஞ்சத்திடல் : 8:41Am                                பொன்மலை :8:47Am                               திருச்சிராப்பள்ளி :9:30Am                    பாலக்கரை :9:46Am                           திருச்சிராப்பள்ளி கோட்டை :9:58Am     முத்தரசநல்லூர்:10:09Am                        ஜீயபுரம்:10:15Am                                     எல்மனூர்:10:20                                      பெருகமணி:10:25Am                              பெட்டவாய்த்தலை:10:32Am               குளித்தலை:10:44Am                        லால்பேட்டை:10:54Am                           மகாதானபுரம்:11:01Am                            சித்தலவாய்:11:06Am                                 மாயனூர்:11:12Am                                     வீரராக்கியம் :11:21Am

தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்" பழமொழியின் அர்த்தம்?

"தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்" பழமொழியின் அர்த்தம்?

தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும் - என்ற பழமொழி விவசாயம் தொடர்பான ஆழ்ந்த சூத்திரம் குறித்த ஒன்று என்பது நம்மில் பலர் அறியாதது!
வாழை மரங்களுக்கிடையில் 8 அடியும், தென்னை மரங்களுக்கிடையில் 16 அடியும் இடைவெளி இருக்க வேண்டும் என்ற சூத்திரத்தை இப்பழமொழி வெளிப்படுத்துகிறது.
ஆனால்…
தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும் - என்ற பழமொழிக்கு 'தாயின் திறமையை விட மகளின் திறமை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்' - என்ற தவறான பொருள்படவே புரிந்து கொண்டிருக்கிறோம்.
தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும் - என்ற பழமொழியில்...
தாய் - என்ற சொல் வாழையையும்,
பிள்ளை - என்ற சொல் தென்னையையும் குறிக்கும்.

நன்கு வளர்ச்சியடைந்த வாழை மரத்தை 'தாய் மரம்' என்றும், அதனைச்சுற்றி சிறிதாக முளைத்து வளர்பவற்றை 'கன்று' எனவும் அழைப்பது வழமை! அதேபோல் தென்னையின் கன்றுக்கு 'தென்னம்பிள்ளை' என்று பெயர்.

வாழைத் தோப்பில் மரங்களை நடவு செய்யும் போது இரண்டு மரங்களுக்கிடையில் 8 அடி இருக்க வேண்டும் என்பதையும் , தென்னை மரங்களுக்கிடையில் 16 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்பதையே - இப்பழமொழி வெளிப்படுத்துகிறது.

'எட்டடி வாழை, பத்தடி பனை, பதினாறடி தென்னை' - என்ற வழக்கும்,

' எட்டடி - வாழை கமுகு
ஈரடி - கரும்பு கத்தரி
பதினாறடி - பிள்ளை' - என்ற வழக்கும் இதைப் போன்ற ஒத்த விதிமுறைகள் குறித்து விவசாயிகளிடை வழங்கப்படுவது ! (கமுகு = பாக்கு மரம்) .
மேற்குறிப்பிட்டபடி இடைவெளி இருந்தால் தான் மரங்களின் வேர்கள் வளர்ச்சி சீராக இருக்கும். மரங்கள் வளர்ந்த பின், மரங்களின் இலைகள் பக்கத்து மரங்களின் இலைகளைத் தொடாது, போதுமான சூரிய ஒளி நிலத்தில் விழுந்து சரியான விளைச்சலைத் தரும்!
இதே கருத்தை வேறு விதமாக....
"தென்னைக்கு தேரோட,
வாழைக்கு வண்டியோட,
கரும்புக்கு ஏரோட,
நெல்லுக்கு நண்டோட..." - என்றும் சொல்வதுண்டு!

Food Saving Tips

வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!!
*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.
*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.
*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.
*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது
.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது
*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.
*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.
*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்
*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.
*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.
*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்
. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும
*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
*உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.
*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்
*புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.
*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.
*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்
*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.
*ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
*கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.
*தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
*தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.
*வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.
*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.
*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்
. *பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்...

யாரும் யாரையும் இந்த உலகில் சுமக்க போவதில்லை...

யாரும் யாரையும் இந்த உலகில் சுமக்க போவதில்லை...
நம்ம இல்லைனா என்ன ஆகும் என்ற கவலை தேவையற்றது..
யார் இருந்தாலும் இல்லையென்றாலும் அவரவருக்கு கடவுள் நிர்ணயித்த வாழ்க்கையை வாழ்ந்து தான் தீர வேண்டும்...
யாருடைய துன்பத்தையும் யாராலும் தீர்க்க முடியாது...
இதை செய்யாதே, அதை செய்யாதே என்றோ இதை செய் உனக்கு நல்லது என்றோ யாரையும் வற்புறுத்துவதும் தேவையற்றது....
எவருடைய தலைவிதியும் எவர் கையிலும் இல்லை...
எல்லாமே இறைவன் செயல் என்னும் போது நம்மால் எதை தடுக்க முடியும் ? 
நதி போல ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்...

Human life Important Numbers

*ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான மருத்துவ எண்கள் இவை..*     

 1. இரத்த அழுத்தம்: 120/80
 2. துடிப்பு: 70 - 100
 3. வெப்பநிலை: 36.8 - 37
 4. சுவாசம்: 12-16
 5. ஹீமோகுளோபின்: ஆண்கள் (13.50-18)
  பெண்கள் ( 11.50 - 16 )
 6. கொலஸ்ட்ரால்: 130 - 200
 7. பொட்டாசியம்: 3.50 - 5
 8. சோடியம்: 135 - 145
 9. ட்ரைகிளிசரைடுகள்: 220
 10. உடலில் உள்ள இரத்தத்தின் அளவு: 5-6 லிட்டர்
 11. சர்க்கரை: குழந்தைகளுக்கு (70-130)
  பெரியவர்கள்: 70 - 115
 12. இரும்பு: 8-15 மி.கி
 13. வெள்ளை இரத்த அணுக்கள்: 4000 - 11000
 14. பிளேட்லெட்டுகள்: 150,000 - 400,000
 15. இரத்த சிவப்பணுக்கள்: 4.50 - 6 மில்லியன்..
 16. கால்சியம்: 8.6 - 10.3 mg/dL
 17. வைட்டமின் D3: 20 - 50 ng/ml (ஒரு மில்லிலிட்டருக்கு நானோகிராம்கள்.
18. வைட்டமின் B12: 200 - 900 pg/ml

*முதல் குறிப்பு:*
உங்களுக்கு உடம்பு சரியில்லையோ அல்லது எந்த நோயும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு வருடமும் கப்பிங் செய்ய வேண்டும்.?
(கப்பிங் என்றால் என்ன?
கப்பிங் என்பது ஒரு பழங்கால குணப்படுத்தும் சிகிச்சையாகும், சிலர் வலியைக்குறைக்க பயன்படுத்துகின்றனர். வழங்குநர் உங்கள் முதுகு, வயிறு, கைகள், கால்கள் அல்லது உங்கள் உடலின் பிற பகுதிகளில் கோப்பைகளை வைக்கிறார்.  கோப்பையின் உள்ளே, ஒரு வெற்றிடம் அல்லது உறிஞ்சும் விசை தோலை மேல்நோக்கி இழுக்கிறது.
கப்பிங் என்பது பாரம்பரிய சீன மற்றும் மத்திய கிழக்கு மருத்துவத்தின் ஒரு வடிவமாகும்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் கப்பிங் சிகிச்சையை கடைபிடித்துள்ளனர்.)

*இரண்டாவது குறிப்பு:*
உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும் அல்லது தேவைப்படா விட்டாலும் எப்போதும் தண்ணீரைக்குடியுங்கள்... மிகப்பெரிய உடல்நல பிரச்சனைகள் மற்றும் அவற்றில் பெரும்பாலானவை உடலில் நீர் பற்றாக்குறையால் ஏற்படுகின்றன.
      
*மூன்றாவது உதவிக்குறிப்பு:*
உங்கள் ஆர்வத்தின் உச்சியில் இருக்கும் போது கூட விளையாட்டுகளை விளையாடுங்கள்... கராத்தே, கால்பந்து, நீச்சல் அல்லது நடைபயிற்சி... அல்லது எந்த வகையான  விளையாட்டாக இருந்தாலும், உடலை நன்கு அசைக்க வேண்டும்.

*நான்காவது குறிப்பு*
 உணவை குறைத்து...
அதிகப்படியான உணவு ஆசையை விடுங்கள்... ஏனெனில் அது ஒருபோதும் நல்லதைத்தராது.  உங்களை இழக்காதீர்கள், உண்ணுங்கள் ஆனால் அளவைக்குறைக்கவும்.

*ஐந்தாவது குறிப்பு*
கூடுமானவரை, முற்றிலும்  தேவையில்லாமல் காரைப்பயன்படுத்தாதீர்கள்... நீங்கள் விரும்புவதை (மளிகை சாமான்கள், நீங்கள் வசிக்கும் மிகஅருகில்  ஒருவரைப்பார்ப்பதற்கு செல்வது...) அல்லது எந்த இலக்கையும் அடைய நடந்தே முயற்சிக்கவும்.

*ஆறாவது குறிப்பு*
கோபத்தை விடுங்கள்...
கோபத்தை விடுங்கள்...
கோபத்தை விடுங்கள்...
கவலையை விடுங்கள்... கவலைதரும் விஷயங்களை கவனிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்...
குழப்பமான சூழ்நிலைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதீர்கள்... அவை அனைத்தும் ஆரோக்கியத்தைக் குறைத்து ஆன்மாவின் சிறப்பைப்பறிக்கின்றன. 

*ஏழாவது குறிப்பு*
சொல்வது போல்.. பணத்தை வெயிலில் விட்டுவிட்டு.. நீங்கள் நிழலில் உட்காருங்கள்.. உங்களையும் உங்களை சுற்றியுள்ளவர்களையும் மட்டுப்படுத்தாதீர்கள்.. பணம் நம்மை வாழ வைத்தது, அதற்காக நாம் வாழ அல்ல.

*எட்டாவது குறிப்பு*
யாருக்காகவும் வருத்தப்பட வேண்டாம்.
உங்களால் சாதிக்க முடியாத ஒரு விஷயமும் இல்லை
உங்களால் சொந்தமாக முடியாத எதுவும் இல்லை.
புறக்கணி, மறந்துவிடு;

*ஒன்பதாவது குறிப்பு*
பணிவு.. அப்புறம் பணிவு.. பணம், மதிப்பு, அதிகாரம், செல்வாக்கு.. எல்லாமே ஆணவத்தால் சீரழிந்தவை..
மனத்தாழ்மையே மக்களை அன்புடன் நெருங்க வைக்கிறது.

*பத்தாவது குறிப்பு*
உங்கள் தலைமுடி நரைத்திருந்தால், இது வாழ்க்கையின் முடிவைக்குறிக்காது. ஒரு சிறந்த வாழ்க்கை தொடங்கிவிட்டது என்பதற்கு இது ஒரு சான்று. நம்பிக்கையுடன், நினைவுடன் வாழுங்கள், பயணம் செய்யுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்.

*((கடைசி மற்றும் மிக முக்கியமான ஆலோசனை)*
      நம்பிக்கை வையுங்கள்.
*நீங்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியத்தையும்  மகிழ்ச்சியையும் பெற்று வாழ விரும்புகிறேன்*
என்றும் அன்புடன் வாழ்வோம்... நன்றி🙏

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 66052புதுச்சேரி இருந்து சென்னை எழும்பூர்

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 66052புதுச்சேரி இருந்து சென்னை எழும்பூர் தினசரி உள்ளது புதுச்சேரி :4:00pm
வில்லியனுர்:4:09pm
சின்னபாபுசமுத்திரம்: 4:18pm
வளவனுர்: 4:29pm
விழுப்புரம்: 4:40pm
முண்டியம்பாக்கம்: 4:56pm
விக்கிரவாண்டி :5:06pm
மயிலம்: 5:22pm
திண்டிவனம் :5:34pm
மேல்மருவத்தூர்:5:58pm
மதுராந்தகம் :6:13pm
செங்கல்பட்டு: 6:33pm
சிங்கப்பெருமாள்கோயில் :6:49pm
கூடுவாஞ்சேரி:7:04pm
தாம்பரம் :7:18pm
கிண்டி :7:34pm
மாம்பலம் :7:41pm
சென்னை எழும்பூர் :8:35pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஆம்பல் ஆம்பல்


இது வாய்க்காலில் முதல் பூ இந்த சீசன்ல. இனி பனி குறையும். சிவ ராத்திரி வந்துவிட்டால் குளிர் முற்றிலும் குறையும்.

இது என்ன பூ? ஆம்பல்? நீங்க சொல்லுங்க. மத்யானம் மலர்ந்தது மூடிக் கொள்ளும். இப்போ காலைல இந்த தரிசனம், உச்சிக்கு மொட்டு போல ஆகிறது. இப்படி எல்லாம் செய்யச் சொல்லி யார் சொன்னது? நான் ஒரு ஜீவன் இதை கண்டு களிக்கிறேன் என்பது அதற்கு ஓர்மை உண்டா? நான் இந்த மலரை கவனிப்பது போல என்னை அது கவனிக்குமா? அழுக்கு தண்ணி வாய்க்கால்ல எப்படி இவ்வளவு அழகான வண்ணத்தில்? எங்கிருந்து இந்த செடி வருது? காற்றோடு மிதந்து வெகு தூரத்தில் இருந்து வந்ததா? அல்லது வாய்க்கால் மண்ணுலயே இருக்குதா?  மழைக்காலத்துல மஞ்சள் மான்ஸ்டர் வரும். தூர் வார்ரோம்னு. இந்த வித்துகளையும் சேர்த்து மனசாட்சி இல்லாமல் கரைல அள்ளி கொட்டி விட்டு போகும். அந்த பிசாசு மெஷின்ல தப்பிச்ச விதைதான் இவ்வளவு மலர்ந்து நம்மை சந்தோஷப் படுத்துவது! சரி இவங்க பேரு என்ன? யாரு இந்த பூ?

Monday, February 10, 2025

அகத்தியர் கூறிய ஜலதோசத்திற்கான மருத்துவம்,

 அகத்தியர் கூறிய ஜலதோசத்திற்கான மருத்துவம்,

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று ஜலதோஷம் பிடித்தவர்கள் புலம்புவதை கேட்டிருக்கிறோம்.
ஆனால், உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. அவற்றில் குறிப்பிட்ட ஒரு சிலவற்றை பார்ப்போம்.
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் (மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.
மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாக கூறப்பட்டுள்ளது.
அகத்தியர் தன் நூலில் ‘அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும்’ என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும், ஆனால் அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். இதுதான் ஜலதோஷத்தை தீர்த்து வைக்கும மருந்து. நமது முன்னோர்கள் மருத்துவ குறிப்புகள் பலவற்றை மர்மமான வார்த்தை ஜாலத்தால் பல்வேறு காரணங்களால் மறைத்து வைத்திருக்கின்றனர். அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாததால்தான் நமது பாரம்பரிய வைத்திய முறைக்கு ஆதரவு குறைந்து போனதற்கு முக்கிய காரணமாகும்.
வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் , மஞ்சள் பொடி (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்து மண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும். சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் வேண்டாம். மஞ்சள் சேர்வதால் எக்காரணம் கொண்டும் உடல் புண்ணாகாது.
இக்கலைவை பூசியதும் சுமார் 1 மணி நேரம் நன்றாக தூங்கம் வரும், ஒரு மணிநேரத்திற்கு பின்பு பார்த்தால் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் முழுவதுமாக குணமாகிவிடும். சிறுவர்களுக்கும் இதை பயன்படுத்தலாம்.

புவனேசுவர் இருந்து ராமேஸ்வரம் வராந்திரா ரயில் வண்டி எண் 20896

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வெள்ளி கிழமையில் வண்டி எண் 20896 புவனேசுவர் இருந்து ராமேஸ்வரம் வராந்திரா ரயில் உள்ளது புவனேசுவர் :12:10pm குர்தா சாலை: 12:25pm பெர்காம்பூர் : 1:57pm விஜயநகரம் : 5:40pm விசாகப்பட்டினம்:6:50pm துவ்வாடா : 7:43pm இராசமன்றி :10:28pm விஜயவாடா :1:28Am ( சனி )

நெல்லூர் : 5:04Am கூடூர் :5:38am சென்னை எழும்பூர் :8:10Am விழுப்புரம் :10:50am திருப்பதிரிபுலியூர் : 11:35Am சிதம்பரம் :12:18Pm

சீர்காழி :12:39pm மயிலாடுதுறை : 1:18pm கும்பகோணம் :1:58pm தஞ்சாவூர் :2:33pm திருச்சிராப்பள்ளி : 4:15pm புதுக்கோட்டை : 5:13pm காரைக்குடி :6:25pm தேவகோட்டை ரோடு :6:37pm சிவகங்கை :7:03pm மானாமதுரை :7:40pm பரமக்குடி :8:08pm ராமநாதபுரம் : 8:33pm மண்டபம் :9:59pm ( குறிப்பு தற்பொழுது வரை மண்டபம் வரை செல்கிறது விரைவில் ராமேஸ்வரம் செல்லும் ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

எல்லாம்_ஆன்மீகம்

 #எல்லாம்_ஆன்மீகம்.

அன்பாய் இருப்பது ஆன்மீகம்
அன்பாக பேசுவது ஆன்மீகம்
அறிவைத் தேடுவது ஆன்மீகம்
அறிவாக செயல்படுவது ஆன்மீகம்
அறிவை பக்குவப்படுத்துவது ஆன்மீகம்
அதிகாரம் செய்யாதிருப்பது
ஆன்மீகம்
அழகில் மயங்காதிருப்பது
ஆன்மீகம்
அகங்காரம் கொள்ளாதிருப்பது
ஆன்மீகம்
அடக்கமாக வாழ்வது ஆன்மீகம்
அறிவாக வாழ்வது ஆன்மீகம்
அறிந்து பேசுவது ஆன்மீகம்
ஆணவம் கொள்ளாதிருப்பது
ஆன்மீகம்
ஆசையை அடக்கி வாழ்வது ஆன்மீகம்
ஆதியை உணர்த்துவது ஆன்மீகம்
ஆதி ஏட்டினை உணர்வது ஆன்மீகம்
ஆசை வார்த்தைக்கு மயங்காதிருப்பது
ஆன்மீகம்
ஆண்டவனைத் தேடாதிருப்பது ஆன்மீகம்
ஆலயம் செல்லாதிருப்பது
ஆன்மீகம்
ஆகாய அதிசயம் உணர்வது ஆன்மீகம்
ஆசைக்குள் அறிவை அழியவிடாதிருப்பது ஆன்மீகம்
ஆகாய லோகங்களை உணர்வது ஆன்மீகம்
இல்லறத்தோடு வாழ்வது ஆன்மீகம்
இரக்ககுணம் உனக்கிருப்பது ஆன்மீகம்
இறந்தவரைப் பார்த்து அழாதிருப்பது ஆன்மீகம்
இயற்கையை உணர்வது ஆன்மீகம்
இரக்கத்தோடு வாழ்வது ஆன்மீகம்
இவ்வுலகம் நரகம் என்று அறிவது ஆன்மீகம்
உன் திமிரை பாசமாக்குவது ஆன்மீகம்.
உதவுபவனை தடுக்காதிருப்பது ஆன்மீகம்
உண்மை பேசுவது ஆன்மீகம்
உழைப்பால் உயர்வது ஆன்மீகம்
உறவாடி கெடுக்காதிருப்பது ஆன்மீகம்
உனக்கு உதவினவரை மறவாதிருப்பது ஆன்மீகம்
உன் உள்ளம் தான் உனக்கு நீதி என அறிவது ஆன்மீகம்
உன் பெற்றோரை உயிரிருக்க வணங்குவது ஆன்மீகம்
உனக்கு உதவுகின்றவரை வணங்குவது ஆன்மீகம்
உழைத்து வாழ்வது ஆன்மீகம்
உன்னை அறிவது ஆன்மீகம்
கலகம் செய்யாதிருப்பது
ஆன்மீகம்
ஒற்றுமையாக வாழ்வது ஆன்மீகம்
ஒழுக்கமாக இருப்பது ஆன்மீகம்
ஒழுக்கத்தோடு வாழ்வது ஆன்மீகம்
ஒளியை அறிவது ஆன்மீகம்
காற்றை வணங்குவது ஆன்மீகம்
உழைப்பது ஆன்மீகம்
உதவுவது ஆன்மீகம்
உன் செயலை உணர்வது ஆன்மீகம்
உன் சரீரத்தைப் பக்குவப்படுத்துவது ஆன்மீகம்
சான்றோராக வாழ்வது ஆன்மீகம்
சாந்தமாக இருப்பது ஆன்மீகம்
சிந்தித்து செயல்படுவது ஆன்மீகம்
சிந்தித்து உணர்வது ஆன்மீகம்
சித்தாந்தம் அறிவது ஆன்மீகம்
சுத்தத்தை விரும்புவது ஆன்மீகம்
சூழ்ச்சி செய்யாதிருப்பது
ஆன்மீகம்
சூதுவாது இல்லாதிருப்பது ஆன்மீகம்
சேர்ந்து வாழ்வது ஆன்மீகம்
ஞானத்தோடு வாழ்வது ஆன்மீகம்
தவறு செய்யாதிருப்பது
ஆன்மீகம்
சூதுவாது இல்லாதிருப்பது ஆன்மீகம்
தவறை மறைக்காதிருப்பது ஆன்மீகம்
தன்னம்பிக்கை உனக்கிருப்பது ஆன்மீகம்
தர்மம் செய்ய கால நேரம் பார்க்காதிருப்பது ஆன்மீகம்
தானம் கொடுப்பது ஆன்மீகம்
தாவரத் தன்மைகளை அறிவது ஆன்மீகம்
தாய் தந்தையர் செல்வத்தை விரும்பாதிருப்பது ஆன்மீகம்
தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழச் செய்வது ஆன்மீகம்
தாய், தந்தையரை துன்புறுத்தாதிருப்பது ஆன்மீகம்
தியாகம் செய்வது ஆன்மீகம்
திருடாதிருப்பது
ஆன்மீகம்
நல்வார்த்தை பேசுவது ஆன்மீகம்
நன்றி மறவாதிருப்பது ஆன்மீகம்
நம்பிக்கை துரோகம் செய்யாதிருப்பது
ஆன்மீகம்
நாவடக்கம் கொள்வது ஆன்மீகம்
நாம் என்று வாழ்வது ஆன்மீகம்
நாட்டுப்பற்று கொள்வது ஆன்மீகம்
நிலத்தை வணங்குவது ஆன்மீகம்
நிழல் தரும் மரத்தை நேசிப்பது ஆன்மீகம்
நேர்மையோடு வாழ்வது ஆன்மீகம்
பறவைகளை அறிவது ஆன்மீகம்
பசிப்பவனுக்கு உணவு அளித்தல் ஆன்மீகம்
பகை கொள்ளாதிருப்பது
ஆன்மீகம்
பசுவை வணங்குவது ஆன்மீகம்
பிறர் கெட நினைக்காதிருப்பது ஆன்மீகம்
பிறரை மதித்து நடப்பது ஆன்மீகம்
பிறர் துன்பம் போக்கிட நினைப்பது ஆன்மீகம்
பிறர் நலம் நாடுவது ஆன்மீகம்
பிறர் மனம் புண்படாது நடப்பது ஆன்மீகம்
பழி சொல்லாதிருப்பது
ஆன்மீகம்
பிரபஞ்ச வேதம்தான் ஆன்மீகம்
செல்வத்தை மதிக்காதிருப்பது ஆன்மீகம்
அழகென்று அலையாதிருப்பது ஆன்மீகம்
மலரை உணர்வது ஆன்மீகம்
மனைவியை துன்புறுத்தாதிருப்பது ஆன்மீகம்
மனிதா, துன்பம் வரும் இருந்தும் சிரிப்பது ஆன்மீகம்
பாதணி அணியாதிருப்பது ஆன்மீகம்
பிறருக்கு வழி சொல்வது ஆன்மீகம்
புலன் ஒன்பதை உணர்ந்து அறிவது ஆன்மீகம்
பூமாலை சூடாதிருப்பது ஆன்மீகம்
பெற்றோருக்கு பணிவிடை செய்வது ஆன்மீகம்
பெற்றோரை நேசிப்பது ஆன்மீகம்
பெண்ணை அடிமைப்படுத்தாதிருப்பது ஆன்மீகம்
பெருஞ்செல்வம் சேர்க்காதிருப்பது ஆன்மீகம்
பெற்றோரை பகைக்காதிருப்பது ஆன்மீகம்
தூய்மை ஆடைதான் ஆன்மீகம்
மேலுலக்கத்தாரை நேசிப்பது ஆன்மீகம்.
நற்றுணையாவது நமச்சிவாயவே!!!

வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை தினசரி விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை தினசரி விரைவு ரயில் உள்ளது மயிலாடுதுறை : 12:10pm குத்தாலம் :12:21pm ஆடுதுறை : 12:31pm

கும்பகோணம் :12:40pm பாபநாசம் : 12:52pm தஞ்சாவூர் :1:13pm பூதலூர் : 1:31pm திருவெறும்புர் :1:45pm மஞ்சதிடல் :1:50pm திருச்சிராப்பள்ளி :2:20pm மணப்பாறை :2:54pm வையம்பட்டி :3:09pm வடமதுரை : 3:24pm திண்டுக்கல் : 3:55pm கொடைக்கானல் ரோடு :4:14pm மதுரை :5:10pm திருப்பரங்குன்றம்: 5:26pm திருமங்கலம் :5:35pm கள்ளிக்குடி :5:44pm விருதுநகர் : 6:03pm திருத்தங்கல்: 6:22pm சிவகாசி :6:29pm ஶ்ரீவில்லிபுத்தூர்:6:44pm இராசபாளையம்:6:59pm சங்கரன்கோவில் :7:29pm பாம்புக்கோவில்சந்தை:7:41pm கடையநல்லூர்:7:52pm தென்காசி :8:09pm செங்கோட்டை :8:55pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

வண்டி எண் 20681 தாம்பரத்திலிருந்து செங்கோட்டை சிலம்பு அதிவேக விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20681 தாம்பரத்திலிருந்து செங்கோட்டை சிலம்பு அதிவேக விரைவு ரயில் வாரம் மும்முறை (புதன், வெள்ளி, மற்றும் சனி ) ஆகிய தினங்களி தாம்பரம் :8:55pm செங்கல்பட்டு :9:23pm மேல்மருவத்தூர் :9:48pm விழுப்புரம் :10:58pm விருத்தாசலம் :11:40pm திருச்சிராப்பள்ளி :1:45Am . புதுக்கோட்டை :2:30Am காரைக்குடி :3:03Am தேவகோட்டை ரோடு :3:11Am சிவகங்கை :3:35Am மானாமதுரை :4:03Am அருப்புக்கோட்டை :4:54Am விருதுநகர் :5:18Am திருத்தங்கல்:5:36Am சிவகாசி :5:44Am ஶ்ரீவில்லிபுத்தூர்:5:59Am ராஜபாளையம் :6:13Am சங்கரன்கோவில் :6:38Am பாம்புக்கோவில் சந்தை :6:54Am கடையநல்லூர்:7:09Am தென்காசி :7:48Am செங்கோட்டை :8:30Am குறிப்பு ( இனி சிலம்பு அதிவேக விரைவு ரயில் சென்னை எழும்பூர் செல்லாது தாம்பரத்தில் இருந்து தான் புறப்படும் மற்றும் வந்து சேரும் ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை தினசரி விரைவு ரயில் உள்ளது மயிலாடுதுறை : 12:10pm குத்தாலம் :12:21pm ஆடுதுறை : 12:31pm

கும்பகோணம் :12:40pm பாபநாசம் : 12:52pm தஞ்சாவூர் :1:13pm பூதலூர் : 1:31pm திருவெறும்புர் :1:45pm மஞ்சதிடல் :1:50pm திருச்சிராப்பள்ளி :2:20pm மணப்பாறை :2:54pm வையம்பட்டி :3:09pm வடமதுரை : 3:24pm திண்டுக்கல் : 3:55pm கொடைக்கானல் ரோடு :4:14pm மதுரை :5:10pm திருப்பரங்குன்றம்: 5:26pm திருமங்கலம் :5:35pm கள்ளிக்குடி :5:44pm விருதுநகர் : 6:03pm திருத்தங்கல்: 6:22pm சிவகாசி :6:29pm ஶ்ரீவில்லிபுத்தூர்:6:44pm இராசபாளையம்:6:59pm சங்கரன்கோவில் :7:29pm பாம்புக்கோவில்சந்தை:7:41pm கடையநல்லூர்:7:52pm தென்காசி :8:09pm செங்கோட்டை :8:55pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

சின்ன சின்ன கைவைத்தியங்கள்

 பழைய காலத்தில் பெரியவர்கள் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு சின்ன சின்ன கைவைத்தியங்கள் செய்தார்கள் அது என்னவென்று தெரியுமா?

1)தீராத விக்கலை நிறுத்தஒரு 30 வினாடிகள் இரு காது துவாரங்களையும்
விரல்களால்அடைத்துக்கொள்ளுங்கள்.நின்று போகும் தீராத விக்கல்!
2) ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்குசர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்பறந்து போகும் விக்கல்!
3) கொட்டாவியை நிறுத்தகொட்டாவி வருவதற்கான காரணம்Oxigen பற்றாக்குறை தான்.ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகிவிடுவீர்கள்.
4) உடல் துர் நாற்றத்தைப்போக்க நீங்கள்குளிக்கும் போது தண்ணீரில்ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினைகலந்து பிறகு குளிக்கவும்.நாள் முழுக்க புத்துணர்வுடன்இருக்கலாம்
5) வாய் துர்நாற்றத்தால் கஷ்டமாக உள்ளதா கவலை வேண்டாம். எலுமிச்சை சாற்றில் சிறிது உப்புசேர்த்து குடித்து வந்தாலும்,வாயைக் கொப்பளித்து வந்தாலும்வாய் துர்நாற்றம் நீங்கும்.
6)தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா பயப்பட வேண்டாம். வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
7)வேனல் கட்டி தொல்லையா கவலை வேண்டாம் வெள்ளைப் பூண்டை நசுக்கிசிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
😎 மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.
9) நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
10)சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.
11) சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
12) புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.
13) மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.
14) சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
15)பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...