Thursday, January 16, 2025

தென்னக இரயில்வேயின் புதிய அட்டவணையில் 01.01.2025 முதல்

 தென்னக இரயில்வேயின் புதிய அட்டவணையில், முக்கிய இரயில்கள்...

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம்: 01.01.2025 முதல்....
20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை 5 மணி.
22671 மதுரை தேஜஸ் காலை 6.00 மணி.
16127 குருவாயூர் காலை 10.20 மணி.
12635 மதுரை வைகை மதியம் 1.45 மணி.
20665 நெல்லை வந்தே பாரத் (செவ்வாய் தவிர) மதியம் 2.45 மணி.
12605 பல்லவன் மதியம் 3.40 மணி.
20605 செந்தூர் மாலை 4.00 மணி.
12642 திருக்குறள் - கன்னியாகுமரி (வாராந்திர Sun & Tue) மாலை 4.10 மணி.
12652 மதுரை - சம்பர்க் கிராந்தி (வாராந்திர Wed & Fri) மாலை 4.10 மணி.
16101 கொல்லம் மாலை 5.00 மணி.
12633 கன்னியாகுமரி மாலை 5.20 மணி.
22661 இராமேஸ்வரம் மாலை 5.45 மணி.
16751 இராமேஸ்வரம் மாலை 7.15 மணி.
12693 முத்து நகர் இரவு 7.30 மணி.
20635 அனந்தபுரி இரவு 7.50 மணி.
12661 பொதிகை இரவு 8.10 மணி.
12631 நெல்லை இரவு 8.40 மணி
12665 கன்னியாகுமரி (வாராந்திர Tue) இரவு 9.05 மணி.
12637 பாண்டியன் இரவு 9.40 மணி.
12653 மலைக் கோட்டை இரவு 11.30 மணி.
அவசியம் #Share செய்யுங்கள் இது ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கும்

Friday, January 10, 2025

குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை


 கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .

சரி கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்..... எங்கும். எதிலும். 🥀🍂
கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்..
சரி என்று அவர்கள் என்னதான் போடுகிறார்கள் என்று தீர விசாரித்து அதையே மளிகை கடையில் கேட்டதில் கிடைத்தது இந்த 4 வித மூலிகை பொட்டலங்கள்.இதில் அப்படி என்ன இருக்கிறது ?
அ) பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்)
ஆ) சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம்.
இ) கங்களி இன்ன பிற மூலிகைகள்.🌱🍃
பழக்கத்தில் (ஜீரோ பாக்டீரியா) பன்னாட்டு கம்பெனியின் மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள். மெச்ச வேண்டும்.
எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்காவை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து ஊரில் இருக்கும் மலையாளத்தானை நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ? அடிப்போம் ?
இந்த பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 25/- முதல் 60/- வரை விற்கிறது. 5 லிட்டர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் போட்டால் போதும்.
பொது நலன் கருதி வெளியீடு.. இயற்கையாகவே வாழப் பழகு இயற்கை உணவை உட்கொண்டு.

ஹெர்னியா’ என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தண்ணீரை

 


*ஹெர்னியா’ என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தண்ணீரை இப்படி குடிங்க!*

தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்
நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.
சிறுநீரக பாதிப்பு
தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.
ஆர்த்ரிடிஸ்
சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.
நரம்புகள் டென்சன் ஆகும்
பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.
அண்ணாந்திச் குடித்தால் காது நோய் ஏற்படுத்தும்
டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் குடித்தால் காது நோய்களுக்கு வழிவகுக்கும். தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.
சில குறிப்புகள்
உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.
மதிய உணவுக்கு முன் 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.
இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.
டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும்.
அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.
வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
நம்மில் பலரும் நின்று கொண்டு நீர் அருந்துவதும் , இடது கையால் அருந்துவதும், ஒரே மூச்சில் அவசரமாக அருந்துவதும் சர்வ சாதாரணமாகவே செய்கிறோம்.

சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes)


 *ஏறக்குறைய சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா?*

மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes) தான் அது.
நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா? ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.!
அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு!
அத்தகைய நஞ்சு நமது வாகனங்களில் நீண்ட தூரம் அதிக நாட்கள் பயணித்த பிறகு சைலன்சரில் படிந்திருக்கும் கரிக்கழிவு போன்றது தான் அந்த Free Radicals.
எப்படி வண்டியை சர்வீஸ் விட்டு சைலன்சரை சுத்தம் செய்கிறோமோ அதற்கு இணையானது தான் நாம் உண்ணும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes).
அது நமது உடலில் தேங்கும் கேன்சரை உண்டாக்கும் கழிவுகளை சுத்தமாக துடைத்து எடுத்து ஒழிக்கிறது.
நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க கேன்சர் பற்றிய பயமே இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால் சீசனில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கை தேவையான அளவு சாப்பிடுங்கள்.

தேன்சோலை ங்கற அழகான இடம்...

 




பழனி to கொடைக்கானல் போற வழில...

மேல்பள்ளம் தாண்டி...
வடகவுஞ்சி கிராமத்துக்குள்ள போனா...
அங்க...
பெரும்பள்ளம் போற வழில இருக்கு...
இந்த தேன்சோலை ங்கற அழகான இடம்...
Main roadல இருந்து தள்ளி 10 km இருக்கறதுனால...
இங்க சுத்தமாவே ஆள் நடமாட்டம் இருக்காது...
யூகலிப்டஸ் மரங்களும் பைன் மரங்களும் நிறைஞ்ச,
குட்டி காடு இது...
இங்க நிறைய தேன் கூடுகள் இருக்கு...
நாலு மரங்களுக்கு ஒரு மரம்னு தேனீக்கள் கூடு கட்டி இருக்கு...
அதனாலயே இந்த இடத்துக்கு தேன்சோலைனு பெயர் வந்துச்சாம்...
கழுகும், குட்டி குட்டி பறவைகளையும் இங்க பார்க்கலாம்...
கொஞ்சம் பட்டாம்பூச்சிகளையும் ரசிக்கலாம்...
Week end தவிர...
மத்த எல்லா நாட்களிலும்...
இந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாம அமைதியா இருக்கும்...
இங்க இருக்கற குட்டி pine forestல...
கொஞ்ச நேரம் படுத்து தூங்க கூட செய்யலாம்...
அவ்ளோ அமைதியா அவ்ளோ சுத்தமா இருக்கும்...
காட்டோட பேசவும்...
காற்றோட பாடவும்...
மரங்களின் பாஷை அறியவும்...
அடிக்கடி இந்த இடத்துக்கு வந்திடுவேன்...
Machine மாதிரியான நம்ம வாழ்க்கைல...
கொஞ்ச break எடுக்க...
இந்த மாதிரி இடங்கள், அவசியம் தேவை...
Routine ah எல்லாரும் போற park, boatingனு போனா...
அங்க நாம இயல்பா இருக்க முடியாது...
குழந்தைதனத்தை expose பண்ண முடியாது...
மனிதர்கள் சத்தத்தை கடந்து, இயற்கையின் மொழியறிய முடியாது...
அதனால...
இப்படிபட்ட இடங்களை தேடுங்க...
அங்க மௌனமா இயற்கையோடு பேசுங்க🥰

அமேசான் ஆற்றின் மீது ஏன் பாலங்கள் இல்லை?

 


அமேசான் ஆற்றின் மீது ஏன் பாலங்கள் இல்லை?

தென் அமெரிக்காவில் 4,345 மைல்கள் (7,062 கிலோமீட்டர்) நீளம் ஓடுகிறது.
சில பகுதிகளில் 11 கிலோமீட்டர் (7 மைல்கள்) அகலம்.
.
சதுப்பு நிலப்பரப்பு, அடர்த்தியான மரங்கள், செடி, கொடிகள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது,
காலநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
பல்லுயிர் பெருக்கத்தை வளர்க்கின்றது.
ஆற்றின் அகலம், ஆழம், பெரும் அளவிலான நீரோட்டம்.
வெள்ளப்பெருக்கு,
ஆற்றின் போக்கில் அடிக்கடி தடம் மாறுதல் மற்றும் பல காரணங்களால்,
அமேசான் ஆற்றில் பெரிய பாலங்கள் கட்ட முடியவில்லை.
நதியே ஒரு இயற்கையான நெடுஞ்சாலையாக இருக்கின்றது.
பயணிகள் படகுகள் மற்றும் பெரிய சரக்குக் கப்பல்கள் போக்குவரத்து பெருமளவில் நடைபெறுகின்றது.
பாலம் தேவைப்படக்கூடிய இடங்களில், படகுகள் மற்றும் படகுகளின் உள்கட்டமைப்பு போக்குவரத்தது சிறப்பாக உள்ளது.
அமேசான் கரையில் உள்ள மனாஸ் மற்றும் பெலேம் ஆகிய நகரங்களில் ஆற்றைக் கடக்க படகுகள். சில இடங்களில் சிறிய பாலங்கள் உள்ளன.
அமேசான் ஆற்றின் மீது ஒரு பெரிய பாலம் கட்டுவது உள்ளூர் வாழ்விடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
செலவு கூடுதல் ஆகும், தொடர்ந்து பராமரிக்க முடியாது.
டிரான்ஸ்-அமேசானியன் நெடுஞ்சாலை போன்ற இடங்களில் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளுடன் சில வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன.
அமேசான் நதியின் துணை நதிகள் அல்லது ரியோ நீக்ரோ மற்றும் மடீரா நதி போன்ற அருகிலுள்ள ஆறுகளைக் கடக்கும் சில சிறிய பாலங்கள் உள்ளன.

மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்

 *மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!*

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..
இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..
தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை உடலுக்கு ஏற்றது..
அரேபிய பேரீச்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..
ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்கப் படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்தக் கனி.
ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..
மா, பலா ,வாழை என தனக்குச் சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..
இங்கு வெள்ளையன்
வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.
வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்...
வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..
தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...
புகையிலையும் அப்படி வந்ததே.
இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.
உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.
வெள்ளையன் சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான்,
வெற்றிலைக்குப் பாக்கைக் கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.
கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.
கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.
தேங்காய் இருந்த
இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌
மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிரி என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டுக்காரன்.
நோய்கள் பெருகின..
ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...
ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்? கேரட் , பீட்ரூட்
இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி..
ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..
அத்தோடு விட்டானா?
அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.
விளைவு..?
தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...
சப்பாத்தியினைக் கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.
சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு...
ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான்..
நோய் பெருகிற்று....
அதாவது சூடான பூமியில் சூடு
கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...
வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா?
குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்.
உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..
இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..
எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது.
இன்று எண்ணெயும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...
பரிதாபம்.
காரணம், அவற்றுக்கு உண்மையான
பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....
அவை என்ன செய்யும்?
எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...
ஆரோக்கியமில்லா உணவினைக் கொடுத்துவிட்டன‌...!
நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும் நிலையென்றால் தனியார்
நிலையங்கள் எப்படி இருக்கும்?
எதையோ தின்று
எதையோ குடித்து,
எதையோ புகைத்து, எதையோ மென்று
இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்
எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..
ஆப்ரிக்காவிலும்
அரேபியாவிலும் காப்பி இருந்தது..
தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது.
பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!
புரிகிறதா...?
இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..
பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,
இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது.
காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..
அவை இன்றியும் வாழமுடியும்...
அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன.
பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல.
விஷம் அவை..
இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன.
இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது
ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும்
காணலாம்..
தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..
துளசி போல் அருமருந்தில்லை..
அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.
தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..
தேர்களில் தெய்வங்களுக்கு
வீசபடும் மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.
உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...
அசைவத்தில் கூட கிராம ஆலயங்களைக் கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி
இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.
அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே,
சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..
அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும்
நோய்க்கு இடம் கொடா...
மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..
இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..
அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்..
கருத்தரிப்பு சிக்கல்
சிசேரியன் என மறுபுறம்.
மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..
பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..
அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்... மாறாக அதெல்லாம் பழமை என
ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..
அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது
இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..
அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...
நாம் பாரம்பரியத்தை
மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது...
என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..
ஆம்.
மாறாக, கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும்
ஆகபோவது ஒன்றுமில்லை...
நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..
அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...✍🏼

Thursday, January 9, 2025

கஸ்தூரி வெண்டை சற்றே பூசினாப்


 வெண்டைக்கா எனக்கு பிடித்த காய் கிடையாது. ஆனால் சமைக்க பிடிக்கும். சிவப்பு வெண்டைக்காய் அபூர்வமா எப்பவாவது கிடைக்கும். இப்போல்லாம் இல்லவே இல்லை.

எங்க தோட்டத்துல வெண்டை ஆளுயரத்திற்கு வளரும். திருச்சில வாய்க்கால் ஓரமா விவசாய நிலத்துல இருந்த வீடு அல்லவா? உய்யக் கொண்டான் வாய்க்கா நீர் காலங்காலமா ஓடி செழித்த பூமி. என் கை வண்ணம் வேற. கேட்கவா வேண்டும்? வெண்டை, கத்தரி, பாம்பு புடலை, சீன் அவரை, வெள்ளரி, அவரைக்கா, வாழை, என்று என்னை ஒரு ராணி போல உணர வைத்த மண் அது!
அடர் சிவப்பு நிறத்தில் கூட வெண்டை இருக்கிறது.
கஸ்தூரி வெண்டை சற்றே பூசினாப்ல ஒரு அழகா இருக்கு பாருங்க. நிஜத்துல இவங்கள பாக்கணும் ஆசை.
யானை தந்தம் வெண்டை ஒரு அடிக்கும் மேலே வளைந்து தந்தம் போல இருக்குமாம். நான் பார்த்தது இல்லை. பார்ப்பேனா தெரியலை.
ஆண்டவன் படைப்புல எத்தனை வடிவம், வண்ணம், ருசி பாருங்களேன். ஆச்சர்யமாக இருக்குல்ல? எல்லாமே வெண்டைக்காய் தான். ஆனால் ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கிறது சிறப்பு!

Kilavarai Village, Kodaikanal Tamilnadu

 #கிளாவரை #கொடைகானல் லின் உயரமான மலையில் அமைந்துள்ள ஓர் அழகிய சிறிய கிராமம்.

Kilavarai Village, Kodaikanal Tamilnadu


மார்கழி மாத குளிரில் ஆஸ்துமா

 மார்கழி மாத குளிரில் ஆஸ்துமா நோயாளிகள்,முதியவர்கள் படும் துன்பம் நரகமாக இருக்கும்..நெஞ்சு சளியால் முதியவர்கள் மூச்சுதிணறலால் சிரமப்படுவார்கள்...

சுடுநீரில் பூண்டை தட்டிப்போட்டு அந்த நீரை குடித்தால் மூச்சு திணறல்,நெஞ்சு சளிகுணமாகும்..துளசி நீரும் நல்ல பலன் கொடுக்கும்!! கேரளாவில் சீரக நீர்தான் அதிகம் அருந்துவார்கள்..அது அஜீரண பிரச்சினையை சரியாக்கும்...
13 மிளகை மென்று பால் அல்லது சுடுநீர் குடித்தால் சளி அகலும்...வெற்றிலையில் மிளகு 4 வைத்து மென்றாலும் சளி அகலும்..ஆங்கில மருந்தையே நாடாதீங்க..அந்த மாத்திரை ஜீரணம் ஆக இன்னொரு மாத்திரை சாப்பிடுற அளவுக்கு குளிர் இருக்குற காலம் இது

அதலைக்காய் என்னும் அற்புத மருந்து


#புற்றுநோயிலிருந்து
#எய்ட்ஸ் வரை அனைத்தையும் குணப்படுத்தும் ஒரே காய்! அதிர்ஷ்டம் இருந்தால் உடனே வாங்கி விடவும்!
நமது முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் அவர்களின் உணவுமுறை. நாம் இப்போது முப்பது வயதுகளிலியே சர்க்கரைநோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாவதும் நமது உணவுமுறையால்தான்.
இயற்கை நமக்கு எண்ணற்ற கொடைகளை தந்திருக்கிறது, அதை முன்னோர்கள் மதித்து செயல்பட்டதால்தான் அவர்களால் ஆரோக்கிய வாழ்வு வாழ முடிந்தது. இயற்கையை மதிக்காததன் விளைவு இன்று நம் வருமானத்தில் பாதி மருத்துவ செலவிற்கே செல்கிறது.
ஆந்திரா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது #அதலைக்காய் என்னும் அற்புத மருந்து.
#அதலைக்காய் பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரு காய் உங்களை சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் என்றால் நம்புவீர்களா? ஆனால் இது பாதுகாக்கிறது என்பதுதான் உண்மை.
இந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரமாகும். இதிலுள்ள சத்துக்கள் நம்மை பலவகையான நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியது.
இதனை யாரும் விளைவிக்க வேண்டிய அவசியமில்லை. மழைக்காலம் வந்தால் இது தானாகவே சாலையோரமும், விளைநிலங்கள் அருகிலும் விளையத்தொடங்கும் இது தென்மாவட்ட விவசாயிகளுக்கு முதலீடே இல்லாமல் இலாபம் தரக்கூடியத்தாகும்.
இதிலுள்ள சத்துக்கள் முறையே நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் என இதில் உள்ள சத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தனை சத்துக்கள் நிறைந்த இதை நாம் கவனிக்காமல் இருப்பது நமது அறியாமைதான்.
அதலைக்காய் பாகற்காயை போன்றே கசப்பு சுவையுள்ளது, அதனாலேயே பெரும்பலானோர் இதனை உண்பதில்லை. ஆனால் இதன் மகிமையை அறிந்தவரகள் இதனை ஒருபோதும் வெறுப்பதில்லை. இதனை சாம்பாராக வைக்க இயலாது எனவே பொரியலாகவோ அல்லது புளி குழம்பாகவோ சமைத்து சாப்பிடலாம்.
சரியான பக்குவத்தில் சமைத்தால் சுவையிலும், சத்துகளிலும் இதனை மிஞ்ச வேறு காய்கறிகளே இல்லை.
#சர்க்கரை_நோய்
இதன் சதைப்பகுதி இன்சுலின் போல செய்லபடக்கூடியது. இன்சுலின் என்பது நமது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள மிகவும் அவசியம். மேலும் சர்க்கரையை குறைக்கும் பல சத்துக்களை கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு அதலைக்காய் இயற்கை கொடுத்த வரமாகும்.
#புற்றுநோய்
இதிலுள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்கள் இரத்தத்தில் வளர்வதற்கான ஆற்றலை தடுக்கிறது. முக்கியமாக இது கணையத்தை பாதுகாப்பதால், இதனை தொடர்ந்து உண்பவர்களுக்கு கணைய புற்றுநோய் வர வாய்ப்புகள் மிகக்குறைவு. அதுமட்டுமின்றி இதில் உள்ள லெய்ச்சின் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, புற்றுநோய் செல்கள் பாதிப்பையும் தடுக்கிறது.
#சிறுநீரக_செயல்பாடு
சிறுநீரக பாதிப்பு என்பது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கக்கூடியது. ஒருவேளை உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தால் இந்த அதலைக்காயை சாப்பிட மறந்துவிடாதீர்கள்.
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கறையத்தொடங்கும். இதில் உள்ள பைடோநியூட்ரின் உங்கள் இரத்தத்தை சுத்திகரிப்பதில் உதவும்.
#எய்ட்ஸ்
எய்ட்ஸ் நோய் என்பது நம் இரத்த உள்ள அணுக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து நம் உடலின் பாகங்களை செயல்பட விடாமல் செய்வதே. அதலைக்காய் நம் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
இதன் மூலம் ஹெச்ஐவி கிருமிகளின் தாக்கம் குறையும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்க்கவே கூடாது. அதலைக்காய் கருக்கலைப்பிற்கும் பயன்படுத்த படுகிறது.
#எடை_குறைப்பு
முன்பே கூறியது போல இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் பசியுணர்வை கட்டுப்படுத்தும், எனவே நீங்கள் இதனை சிறிதளவு சாப்பிட்டாலே பசி அடங்கியது போல் திருப்தியாய் உணருவீர்கள் எனவே நீங்கள் அதிகம் சாப்பிடுவதை இது தடுக்கும்.
அதுமட்டுமின்றி இதில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளது. ஒரு கப் அதலைக்காயில் 16 கலோரிகள் மட்டுமே இருக்கும். ஆதலால் எடை குறைக்க விரும்புவோர் தங்கள் டயட்டில் முக்கியமாக சேர்க்க வேண்டியது இந்த அதலைக்காய்.
#பிரச்சினை
அதலைக்காயில் உள்ள ஒரே பிரச்சினை இதை பறித்தவுடன் சமைத்துவிட வேண்டும். இல்லையெனில் காய்கள் வெடித்துவிடும். எனவே இதனை வெளியூர்களில் பார்ப்பது மிகவும் கடினம். ஒருவேளை உங்கள் அதிர்ஷடம் இந்த அதலைக்காயை பார்க்க நேர்ந்தால் உடனடியாக வாங்கிவிடவும்.

சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி

 1980க்கு முன்பு 300 வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் 50 வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.


கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA..... அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும். 


இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.


ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .


அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.


ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.


இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு" விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.


அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,, 


இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.


1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். 


ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.


சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.


சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். 


எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.


அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.


இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம்.


எப்படி ஆயினும்.... பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...