Tuesday, July 9, 2024

அகோரிகள்

அகோரிகள்..

நிர்வாண உடலெங்கும் சாம்பல் பூசிக்கொண்டு, நீண்ட ஜடாமுடிகளோடு உலா வரும் இவர்கள்தான் கும்பமேளாவில் முதலில் குளிக்கும் உரிமை பெற்றவர்கள். 

ஹரி ஓம் ஷம்போ சிவ ஷம்போ மகாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்

நுனி நாக்கு ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவதில்லை, தங்க நாற்காலியில் அமர்வதில்லை, கைகளை உயர்த்தி ஆசீர்வதிப்பதில்லை, ‘எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்வதில்லை, டி.வி கேமராவைப் பார்த்ததும் புன்னகை பூப்பதில்லை. ஆனாலும் இவர்களை விடாமல் மக்கள் கூட்டம் துரத்துவது ஏன்?

‘நங்கா’ என்ற இந்தி வார்த்தைக்கு ‘நிர்வாணம்’ என அர்த்தம். ‘நங்கா சாது’ என்ற பெயர்தான் பேச்சுவழக்கில் ‘நாகா சாது’ ஆனது. அகோரிகள் எனவும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ‘அகோரப் பசியோடு மனித உடல்களைத் தின்பவர்கள் என்பதால் இப்படி பெயர் பெற்றார்கள்’ என பலர் தப்பாக திகில் கதை விட்டிருக்கிறார்கள். ‘கோரம்’ என்றால் கொடூரமானது; 

‘அகோரா’ என்றால் கால பைரவர். அவரை வணங்கும் சாதுக்கள் என்பதால் இவர்களுக்கு இந்தப் பெயர்.

நாகா சாதுக்கள் தத்தாத்ரேயர் உருவாக்கிய படை என்பார்கள். சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு இவர்களை சங்கராச்சாரியார் பயன்படுத்தினார். அறிவாலும் ஆயுதத்தாலும் எப்போதும் சண்டையிடத் தயாராக இருக்கும் படை இவர்கள். மரணத்தைப் பற்றிய அச்சம் இவர்களுக்குத் துளியும் கிடையாது. வாள், மண்டை ஓடு குத்திய திரிசூலம், ஈட்டி என ஆயுதங்களை ஏந்தியபடி இவர்கள் பயணம் மேற்கொள்வார்கள். எந்த ஊருக்குப் போனாலும் சுடுகாட்டில்தான் தங்குவார்கள். 

இந்தியாவிலும் நேபாளத்திலும் இமயமலையை ஒட்டிய பகுதிகளில் இவர்கள் இருக்கிறார்கள். நாகா சாதுக்கள் இருக்குமிடம் ‘அகாரா’ எனப்படும். சைவம், வைணவம் என சகல பிரிவிலும் சேர்த்து மொத்தம் 16 அகாராக்கள் உண்டு. இந்த அகாராக்களை சாராமல் தனியாக நாகா சாதுக்கள் கிடையாது. ஏதோ ஒரு குகையில் தனியாக அடைந்து கிடந்து தவம் இருப்பதெல்லாம் வழக்கம் இல்லை. 

நாகாக்கள் கூட்டமாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர் உண்டு. சும்மா வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு வருகிற எல்லோரும் நாகா ஆகிவிட முடியாது. உறவுகளை முற்றிலுமாகத் துண்டிக்க வேண்டும்; சோப்பு, சீப்பு, இனிப்பு என உலக வாழ்க்கை இன்பங்களைத் தரும் எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது; ஆசைகளைத் துறக்க வேண்டும்; உடைகள்தான் குடும்ப உறவோடு ஒரு மனிதனைப் பிணைக்கிறது என்பதால் அதையும் துறக்க வேண்டும். விபூதி சாம்பலை உடலில் பூசிக்கொள்ள வேண்டும். இமயமலைச் சூழலின் கடுங்குளிரிலிருந்து இவர்களை இந்த சாம்பலே காக்கிறது. உடலோடு இணையாத பொருளாக இவர்கள் அணிந்திருப்பது ருத்ராட்ச மாலை மட்டுமே! நீண்டிருக்கும் தலைமுடியை சடை போல சுருட்டி தலையில் கொண்டை போல வைத்திருப்பார்கள். சுடுகாட்டு சாம்பலைப் பூசியிருந்தாலும், இவர்கள்மீது துர்நாற்றம் வீசுவதில்லை.

பிறப்பதும் இறப்பதும் மறுபடியும் பிறப்பதுமான உலகச் சுழற்சியிலிருந்து தாங்கள் விடுபட்டு மோட்சத்தை அடைவதாக நாகாக்கள் நம்புகிறார்கள். காடுகளில் கிடைக்கும் மூலிகைகளை உண்டு வாழும் இவர்களுக்கு வயதானாலும் முடி நரைப்பதில்லை; கிழப்பருவத்தின் சுவடுகளும் உடலில் தெரிவதில்லை. யோகா, தியானம், மூலிகை ஆராய்ச்சி என இவர்களின் தினப்பொழுதுகள் கழிகின்றன. தங்களுக்குள் கூட இவர்கள் அநாவசியமாக ஒரு வார்த்தை பேசிக் கொள்வதில்லை. 

கும்பமேளா போன்ற காலங்களில் மட்டுமே மக்கள் கூடும் இடங்களுக்கு இவர்கள் வருகிறார்கள். அதன்பின் அமைதியாக நடந்தே இமயமலைக் காடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். பொதுவாக இவர்கள் கூச்ச சுபாவிகள். பொதுமக்களை தங்கள் அருகில் நெருங்க விட மாட்டார்கள். 

சண்டையில் எத்தனை பேரையும் எதிர்கொள்ளும் உடல்பலமும், மாயங்களை நிகழ்த்தும் சக்தியும் இவர்களுக்கு உண்டு என்பது பலரின் நம்பிக்கை. இறந்தவர்களை இவர்கள் உயிர்பிழைக்க வைத்த அதிசயமும் நடந்திருக்கிறதாம். ஒருமுறை டார்ஜிலிங் மன்னரை இப்படி நாகா சாதுக்கள் உயிர்பெற வைத்திருக்கிறார்களாம். இந்த வித்தைகளைக் கற்றுக்கொள்ளும் ஆசையில் பலர் இமயமலைக் காடுகளில் நாகா சாதுக்களைத் தேடி அலைகிறார்கள். 

நாகா சாதுக்களின் 16 அகாராக்களில் ஸ்ரீபஞ்ச்யாதி அகாரா மட்டும் ஒவ்வொரு கும்பமேளாவிலும் புதிதாக சாதுக்களை சேர்த்துக் கொள்கிறது. ‘பால நாகா சாது’ என்ற பெயரோடு இவர்களுக்கு தீட்சை தரப்படும். இவர்களுக்கு கோவணம் மட்டும் அணிந்துகொள்ள அனுமதி உண்டு. கடுமையான பரீட்சைகளில் தேறியே இவர்கள் ‘நாகா சாது’ ஆக முடியும். ஐந்து குருக்களிடம் தங்கள் மன உறுதியை இவர்கள் நிரூபிக்க வேண்டும். இடையில் சிறு சலனம் ஏற்பட்டாலும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். 

எல்லாம் துறந்த நாகாக்கள், கும்பமேளாவின்போது மணப்பெண் போல தங்களை அலங்கரித்துக் கொண்டு குளிக்கிறார்கள். நெற்றியில் குங்குமப் பொட்டு, கண்களில் மை, உடலெங்கும் சந்தனம், கழுத்திலும் கைகளிலும் இடுப்பிலும் மாலை, கம்மல், வளையல் எல்லாம் அணிந்துகொண்டு மங்களகரமாக குளிக்கிறார்கள். 

அதன்பின் சாம்பலில் கலக்கிறது வாழ்க்கை

அன்புடன்
 அன்பே சிவம் கணேஷ் 

மற்றவர்கள் பெருமையாக பேசவேண்டும் என்று வாழ்வதைவிட, உங்கள் நிம்மதிக்காக வாழுங்கள்....

"பெருமை" உங்களுக்கு என்ன செய்யும்!

30 ஆண்டுகளுக்கு பிறகு எனது வகுப்பு தோழனை அன்று சந்தித்தேன்.

நான் அவரை ஒரு ஹோட்டல் லாபியில் மீண்டும் பார்த்தபோது, அவர் எளிமையானவராக இருந்தார்.

அவர் எளிய உடைகளை அணிந்திருந்தார். 

நான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தேன்.

அவர் என்னிடம் நடந்து வந்து என்னை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார். என்னுடன் ஒப்பிடுகையில் என்னைவிட கொஞ்சம் வசதி கம்மியானவராகவே தெரிந்தது.

நாங்கள் தொலைபேசி எண்களையும், தொடர்பு விவரங்களையும் பரிமாறிக்கொண்டோம்.
என்னுடையதை கொடுத்தபோது அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சியைக் காண முடிந்தது.

பெருமிதத்துடன் எனது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவரில் அவரை வீட்டில் இறக்கி விடுகிறேன் என்று அவரிடம் சொல்லி அதை அவரிடம் காட்டினேன்.

அவர் மறுத்து, அவர் ஏற்கனவே தனது காரை வரச்சொல்லி இருப்பதாக கூறினார். 
அது பழையதாகத் தோன்றியது.

'2001 ஹோண்டா'

மறுநாள் அவரை என் வீட்டில் மதிய உணவுக்கு அழைத்தேன்.  
எனது வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அவருக்குக் காட்ட வேண்டும்.

நான் வசித்த பார்க்வியூவுக்கு அவர் காரில் வந்தார். 
எனது வீட்டைப் பார்த்து அவர் ஈர்க்கப்பட்டார்.
அந்த வீட்டை லோன் போட்டு கடனில் தான் வாங்கி இருந்தேன்.
நாங்கள் மதிய உணவு சாப்பிட்டோம். 

அவர் சிறு வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் இருப்பதாக என்னிடம் கூறினார்.  
நான் அவருக்கு எப்படி உதவுவது என்று கேட்டேன். 
அவர் நலமாக இருப்பதாக கூறி மறுத்து விட்டார். 
ஆர்வமிருந்தால் கொஞ்சம் கடனை அடைக்க உதவுகிறேன் என்று கூட சொன்னேன்... 
அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.

அவர் என்னை விரைவில் அவரது வீட்டிற்கு அழைப்பதாக என்னிடம் கூறினார். 
அவருடைய பழைய கார் வந்தது. என்னிடம் இருப்பவற்றிற்கு நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருந்தேன். 

“விரல்கள் அனைத்தும் சமமாக இல்லை” என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்...
நான் அதிர்ஷ்டசாலி. 
நான் நல்ல கம்பெனியில் வேலை செய்கிறேன்.

இரண்டு வாரங்கள் கழித்து, அவரைப் பார்க்க நானும் என் மனைவியும் சென்றோம்.
அந்த நண்பனின் அந்தஸ்தில் அவள் ஈர்க்கப்படாததால் கூட வர தயங்கினாள்.

கல்லூரியில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்பதை சொல்லி என்னால் அவளை எளிதில் சமாதானப்படுத்த முடிந்தது.

எஸ்டேட்டைப் பார்த்தோம். 
அவரது வீட்டிற்குச் செல்லும் வழியைக் கேட்டோம். 
எங்களை வழிநடத்துபவர்கள் அவருடைய பெயரை கேட்டவுடன் மரியாதையுடன் பேசினார்கள்.

அது ஒரு எளிய ஆனால் அழகான வீடு. ஒரு 4 படுக்கையறை பங்களா. முன்னால் 4 கார்கள் நிற்பதைப் பார்த்தேன். 

நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தோம். 
அது உள்ளே மனதை தொடும் அழகுடன் எளிமையாக நேர்த்தியாக இருந்தது. எங்களை அன்புடன் வரவேற்றார்.

மதிய உணவு நன்றாக பரிமாறப்பட்டது.

மதிய உணவின் போது, அவர் எனது எம்.டி பற்றி கேட்டார். 
அவர்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறினார். 
அருகில் இருந்த அவரது டேபிள் ஒன்றில் கம்பெனி கிஃப்ட் ஒன்றைப் பார்த்தேன். நான் பணிபுரிந்த கம்பெனியின், சுமார் 38% பங்குகளை அந்த கம்பெனி வைத்திருந்தது. 

அவரிடம் இதுபற்றி விசாரித்தேன். அவர் சிரித்தார் . அவர் என்னிடம், அந்த கம்பெனி தன்னுடையது என்று சொன்னார்.
இந்த பெரிய தோட்டமும் அவருக்குச் சொந்தமானது என்றார்.

எப்போது "சார்" என்று கூப்பிட்டேன் என்று தெரியவில்லை... 
எனக்கும் அவர் மீது பிரமிப்பு ஏற்பட்டது.

பணிவு பற்றி நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்.
ஒரு பெரிய பாடம். 

தோற்றம் ஏமாற்றும்.

என் அசௌகரியத்தை அவர் கவனித்தார்.

வீட்டிற்குத் திரும்பும்போது நான் மிகவும் அமைதியாக இருந்தேன். 

என் மனைவி பணிவாகவும் மிகவும் அமைதியாகவும் இருந்தாள். 

அவள் மனதில் உள்ள எண்ணங்களை என்னால் உணர முடிந்தது. 

கார் கண்ணாடியில் நான் என்னையே பார்த்தேன். 

கடன்கள், அதிக சுமைகள் ஆகியவற்றில் வாழ்கிறேன், ஆனால் எனக்குச் சம்பளம் கொடுப்பவர் மிகவும் அமைதியானவர், எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்..!

உண்மையில் ஆழமான ஆறுகள் அமைதியாக ஓடுகின்றன..!

மற்றவர்கள் பெருமையாக பேசவேண்டும் என்று வாழ்வதைவிட, உங்கள் நிம்மதிக்காக வாழுங்கள்....
🙏🙏🙏❤️❤️❤️ 

#படித்ததில்_பிடித்தது

Monday, July 8, 2024

விளையாடக் கூப்பிட்டால்தான்நீங்கள் உண்மையான கிழவன்..!

அறுபதைத் தொட்டால்
பயணத்தைக் குறையுங்கள்.
எழுபது ஆனால்
எங்குமே போகாதீர்கள்..!

நீங்கள் போன வீடுகளில்
அவர்களின் பிள்ளைகள்
அழைப்புக் கொடுத்தால்.
உங்கள் பிள்ளைகள் போகட்டும்.

நீங்கள் அத்தோடு
நட்பையும் உறவுகளையும்
மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்..!

நினைவுகள் 
கூடிக்கொண்டே போவது 
மனதுக்கு நல்லதல்ல..!
மறதி தான் 
மனதுக்கான நல்ல மருந்து...!

பட்டங்களை பதவிகளை
அதனால் கிடைத்த
பாராட்டுக்களை பரிசுகளை
அடியோடு மறந்துவிட்டு 
மலர்களைப் போல
தினசரி புதிது புதிதாய்
பூத்துக் குலுங்கி
சிரிக்கப் பழகுங்கள்..!

முதுமை என்பது வரம்.
அது எல்லோருக்கும்
கிடைப்பதில்லை.
கிடைத்தவர்கள்
பழையதை நினைத்து
முதுமையை
பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள்..!

பேரனோ பேத்தியோ
ஓடிவந்து உங்களை...
விசில் அடிக்கச் சொல்லி
விளையாடக் கூப்பிட்டால்தான்
நீங்கள் 
உண்மையான கிழவன்..!

வில்வம் துளசியை பார்த்தாலே புண்ணியம் -

வில்வம் துளசியை பார்த்தாலே புண்ணியம் -

 அமாவாசை பவுர்ணமியில் பறிக்க கூடாது
ஆயிரக்கணக்கான பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதைக்காட்டிலும் துளசியாலும் வில்வத்தினாலும் அர்ச்சனை செய்தாலே விஷ்ணுவும் சிவனும் மகிழ்ச்சியடைகின்றனர். வில்வமும் துளசியும் தெய்வீக அம்சம் கொண்டவை 

 வில்வம் சிவன் கைகளில் ஏந்தியுள்ள திரிசூலத்தின் அடையாளம். அதன் மூன்று கூர்மைகளும் இச்சா சக்தி ஞான சக்தி கிரியாசக்தி எனக் கருதப்படுகிறது. துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவனும், மத்தியில் திருமாலும் வசிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதைக்காட்டிலும் துளசியாலும் வில்வத்தினாலும் அர்ச்சனை செய்தாலே விஷ்ணுவும் சிவனும் மகிழ்ச்சியடைகின்றனர். வில்வமும் துளசியும் தெய்வீக அம்சம் கொண்டவை இவற்றை எல்லா நாட்களிலும் பறித்து விட முடியாது பறிக்கவும் கூடாது.

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே வில்வ இலையால் சிவனை பூஜிப்பவர்களுக்கு இறுதி காலத்தில் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்.

மனிதன் நிமிர்ந்து நிற்கக் காரணம் முதுகுத்தண்டு. வில்வமரம் அதிக வளைவுகள் இல்லாமல் நிமிர்ந்திருக்கும் தன்மை உடையது. இதனால் வில்வம் கொண்டு சிவனை வழிபடுபவர்கள் எதற்கும் அஞ்சாமல், நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ் சோம் என்ற நாவுக்கரசரின் சொல்லுக்கேற்ப எமனையே எதிர்த்து நிற்கலாம் என்பது ஐதீகம். மேலும் வில்வ இலைகள் முப்பிரிவானவை. ஒரு காம்பில் மூன்று இலைகள் இருக்கும். இது சிவனின் மூன்று கண்களைக் குறிக்கும்.

தேவலோக மரம் வில்வ மரம் 

தேவலோகத்தைச் சேர்ந்த பஞ்ச தருக்களில் ஐந்து மரங்களில் மகாவில்வமும் ஒன்று ஒரு முறை மகா வில்வ மரத்தை பிரதஷினம் வந்தால் கைலாய மலை போய் வந்த பலன் கிடைக்கும். வில்வ இலைகளைப் பறிக்கவும் சில நியதிகளும் உண்டு. சூரிய உதயத்துக்கு முன் பறிக்கவேண்டும். திங்கட்கிழமை சதுர்த்தி அஷ்டமி நவமி சதுர்த்தசி பௌர்ணமி ஆகிய திதிகளில் வில்வம் பறிக்கக்கூடாது. வில்வ இலைகளைப் பின்னப்படுத்தாமல் அதாவது மூன்று இதழ்களும் முழுமையாக இருக்கும்படியாகப் பறிக்கவேண்டும்.

மகாவில்வம்

வில்வத்தில் 12 வகைகள் உள்ளன. அவற்றில் மகா வில்வம்,காசி வில்வம்,ஏக வில்வம் என்னும் மூன்றும் முக்கியமானவை. இதில் மகாவில்வத்தை கோவில்,ஆசிரமம், ஜீவ சமாதி போன்ற இடங்களில் மட்டுமே வளர்க்க வேண்டும். மகா வில்வம் வித்தியாசமானது. 5,7,9,11,12,இதழ்கள் கொண்டதாக திகழ்கிறது.

சிதம்பர ரகசியம் 

மகாவில்வத்தில் இலைகள் ஒரு காம்பில் ஏழு,ஒன்பது,பனிரெண்டாக இருக்கும். சிவ பெருமானை மகா வில்வ தளத்தினால் அர்சிப்பது மிகவும் விசேசமானது.பன்மடங்காய் பலன்தரும் அதனால் ஆலயங்களில் மட்டுமே அபூர்வமாக வளர்க்கப்படும். மகா வில்வமானது நடராஜ் பெருமான் நாட்டியத்தில் உத்திர நட்சத்திர நாளில் அபிஜத் முகூர்த்தம்,பிரம்ம முகூர்த்தம் போன்ற பன்னிரு முகூர்த்தங்களில் ஒவ்வொரு வில்வ இலையாக உண்டானது. இதன் ஆதி மூலத்தை சிதம்பரத்தில் சிதம்பர ரகசியத்தின் ஒரு அங்கமாய் உள்ள சுவர்ண வில்வ மாலையாக தரிசிக்கலாம். மகா வில்வத்தின் இலைகளை அதிகமாகப் பறித்தல் கூடாது. மகா வில்வ மரத்தை அனைவரும் தரிசிக்கலாம். ஆலயங்களில் மக்கள் நன்மைக்காக நடத்தப் பெறும் பூஜைகளிலும் யாகத்திலும் பயன்படுத்த வேண்டும்.

வில்வத்தை எப்போது பறிக்கலாம்

வில்வ இலைக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. ஒரு தடவை உபயோகித்த வில்வ இலையை, தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து விட்டு மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தலாம். அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வ இலையை பறிக்கக்கூடாது. வில்வத்தை மூன்று இலைகளாகக் கொண்ட தளமாகத்தான் பறித்து பூஜிக்க வேண்டும்.

மும்மூர்த்திகளும் வசிக்கும் துளசி 

துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவனும், மத்தியில் திருமாலும் வசிக்கிறார்கள். மேலும் 12 ஆதித்யர்கள், 11 ருத்திரர்கள், 8 வசுக்கள் பீஷ்மருக்கு முன்னதாக பிறந்த கங்கா புத்திரர்கள், 2 அசுவினி தேவர்களும் (தேவலோக மருத்துவர்கள்) வாசம் செய்வதாக ஐதீகம். துளசி இலை போட்ட நீர் கங்கை நதிக்கு சமமானது என்பதால் பெருமாள் வழிபாட்டில் துளசி முக்கிய இடம் பெறுகிறது. செவ்வாய், வெள்ளி, மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, துவாதசி, இரவு, நேரங்களில் துளசியை பறிக்கக் கூடாது.

விஷ்ணு துளசி

யார் துளசி தேவியைப் பற்றி அறிகிறானோ, அவனது சகல ஜன்ம பாபங்களும் விடுபட்டு, ஸ்ரீ ராதா கிருஷ்ணனை அடைகிறான். துளசிச்செடி அடியில் உள்ள மண்ணை கொஞ்சம் குழைத்து தனது உடலில் சாற்றிக்கொண்டவன் 100 கிருஷ்ண பூஜைகளை அன்று செய்த பலன் பெறுவான். துளசியை ஆராதித்து கிருஷ்ணனுக்கு அர்ச்சிப்பவன், எல்லா புஷ்பங்களை அர்ச்சிப்பதன் பலன் பெறுவான். இறந்தபிறகு கிருஷ்ணனையே அடைகிறான்.

துளசி செடியால் பரிசுத்தம்

துளசி செடி எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் வசிப்பவர்களில் கிருஷ்ணனும் ஒருவன். யாராவது வழியில் நடந்து செல்லும் போது எங்காவது ஒரு துளசி தோட்டம், நந்தவனத்தை கடந்து வணங்கி போகிறானோ, அவன் சர்வ பாப, தோஷங்கள் நீங்கப் பெறுவான். காற்றில் எங்கிருந்தாவது துளசி வாசனை வந்து அதை நுகர்வதாலும் கூட ஒருவன் பரிசுத்தமாகிறான்.

தானம் செய்த பலன்கள்

துளசி கட்டையை உபயோகித்து கிருஷ்ணனுக்கு செய்யும் தூப ஆராதனை, 100 அக்னி ஹோத்ர பலனையும், 100 கோ தான பலனும் கொடுக்கும்.
கிருஷ்ணனுக்கு நைவேத்யம் பண்ணும் உணவு, துளசி கட்டை கலந்த அக்னியில் தயாரிக்கப் பட்டிருந்தால் மேருமலை அளவு தானியங்களை தானம் செய்த பலன் தரும்.

மோட்சம் கிடைக்கும்

ஒரு சிறு துளசி குச்சியால் ஏற்றிய தீபம், பல லட்சம் தீபங்களை கிருஷ்ணனுக்கு ஏற்றிய பலன் தரும். இப்படி விளக்கேற்றியவனைப் போல கிருஷ்ணனுக்கு பிடித்தவன் வேறு யாருமில்லை. யாருடைய உடல் துளசி கட்டையோடு தகனம் செய்யப்படுகிறதோ அவனுக்கு உடலோடு அவன் பாபங்களும் எரிந்துவிடும் எவன் அந்திம காலத்தில் விஷ்ணுவின் நாமத்தை சொல்கிறானோ, துளசி கட்டையை தொடுகிறானோ , அவன் மோக்ஷம் எய்துவான். கிருஷ்ணனே அவனை எதிர் கொண்டு அவன் கையைப் பிடித்து தன்னோடு அழைத்து செல்வார் .
 மகா வில்வம் பற்றிய சிறப்பு தகவல்கள் !!

வில்வத்தில் பல வகைகள் உள்ளன. அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம்.

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
 
மகா வில்வம்: தேவலோகத்தைச் சேர்ந்த பஞ்ச தருக்களில் ஐந்து மரங்களில் மகாவில்வமும் ஒன்று. ஒரு முறை "மகா வில்வம்" பிரதஷினம் செய்தால், கைலாய மலை போய் வந்த பலன் கிடைக்கும்.

மகா வில்வம் வித்தியாசமானது. 5, 7, 9, 11, 12 இதழ்கள் கொண்டதாக விளங்குகிறது. வில்வத்தில் 12 வகைகள் உள்ளன. அவற்றில் மகா வில்வம், காசி வில்வம், ஏக வில்வம் என்னும் மூன்றும் முக்கியமானவை. 
 
இதில் மஹாவில்வத்தை கோவில், ஆசிரமம், ஜீவசமாதி போன்ற இடங்களில் மட்டுமே வளர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வீட்டில், வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடாது.
 
மஹாவில்வத்தில் இலைகள் ஒரு காம்பில் ஏழு, ஒன்பது, பனிரெண்டாக இருக்கும். மகா வில்வ தளத்தினால் அர்சிப்பது மிகவும் விசேசமானது. பன்மடங்காய் பலன்தருவது. புண்ணியத்தை மழையாகப் பொழிவது. அதனால் ஆலயங்களில் மட்டுமே அபூர்வமாக வளர்க்கப்படும்.
 
மகா வில்வதளங்களை அதிகமாகப் பறித்தல் கூடாது. இதனால் புண்ணிய மகா வில்வ மரத்தை அனைவரும் தரிசிக்கலாம். ஆலயங்களில் மக்கள் நன்மைக்காக நடத்தப் பெறும் பூசனைகளிலும் யாகத்திலும் பயன்படுத்த வேண்டும்.

Saturday, July 6, 2024

இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம் கோர்ப்போம்.

அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்று கொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒரு பெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தார். எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். 
அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப்பெண்ணுக்கு உதவச்சென்றார்.

தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். 
ஏன் இந்தக் குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித்தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலை செய்து அதை மாட்டிக்கொடுத்தார். அந்த மனிதரின் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில் இலேசாக சிராய்ப்பு. 

“ஓகேம்மா.. வேலை முடிஞ்சுது. 
இனிமே நீங்க கிளம்பலாம்”னார். 

“உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”என, அந்தப் பெண் கேட்டார். எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத் தயாராகவே இருந்தார். ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. இது ஓர் உதவிதான். அதனால, எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் பத்திரமாக போங்கள் என்றார்.

இல்லப்பா… நீங்கள் இந்த நடுவழியில் உதவி செய்யவில்லையென்றால் என் கதி என்னவோ, அதனால், எவ்ளோ வேணும்னு தயங்காம கேளுங்கள்; கொடுக்கிறேன்” என்று அந்தப்பெண் சொன்னார்.

அதற்கு அவர், “அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க, மேடம்... என் பெயர் பிரெய்ன் ஆண்டர்சன். அடுத்த முறை உதவி தேவைப்படற யாரையாவது பார்த்தீங்கன்னா, அப்போ எனக்குக்கொடுக்க நினைக்கிற தொகையை அவங்களுக்குக் கொடுத்துட்டு, என்னை மனசுல நினைச்சுக்கோங்க. அது போதும்”னு சிரிச்சுட்டு, வந்த வழியைப்பார்த்து சென்றுவிட்டார் பிரெய்ன்.

சில மைல் தூரம் போனதும், ஒரு சிறிய உணவகத்தில் காரை நிறுத்தி உணவருந்தச் சென்றார் அந்தப்பெண். அங்கு, ஒரு பணிப்பெண் வேகமாக வந்து, முகத்தைத்துடைக்க, 
முதலில் ஒரு துண்டைக்கொடுத்தார். 
"சாப்பிட என்ன வேண்டும் எனக்கேட்டு, சுறுசுறுப்பாக பரிமாறினார். அந்த பணிப்பெண், எட்டுமாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு, முகத்தில் எவ்விதச் சோர்வுமின்றி, இப்படி வேலை செய்வதை இரசித்தார் அந்தப்பெண். 
சாப்பிட்டு முடிந்ததும், அவர் நூறு டாலர் கொடுத்தார். 
அதைக்கொடுக்கும்போது பிரெய்ன் ஆண்டர்சனை நினைத்துக்கொண்டார்.

அந்தப் பணிப்பெண், கட்டணத்தொகை போக, கல்லாவிலிருந்து மீதி சில்லறை வாங்கிக்கொண்டு வருவதற்குள், அந்தப்பெண் வெளியேறி, காரில் கிளம்பிப் போய்விட்டார். "அடடா… மீதியை வாங்காமல் போயிட்டாங்களே!" ன்னு நினைத்துக்கொண்டே, 
மேஜையில் பார்த்தால், கைதுடைக்கும் துணிக்குக்கீழே, 
இன்னும் 400 டாலர் பணம் இருந்தது. 
கூடவே, ஒரு துண்டுச்சீட்டில், ‘மை டியர்.
இந்தப்பணம் உனக்குத்தான். 
இந்தச்சமயத்தில் உனக்கு இது தேவைப்படலாம்.
 மற்றபடி, நீ எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. 
ஒரு நெருக்கடியில், முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு உதவி செய்தார். 
அதன் தொடர்ச்சியாக, இப்போது உனக்கு நான் செய்திருக்கிறேன். 
ஒருவேளை, எனக்கு நீ ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், இந்த அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், 
உதவி தேவைப்படும் வேறு ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியைச்செய்" என்று எழுதி வைத்திருந்தார்கள்..

அடுத்த மாதம் பிரசவச்செலவுக்கு என்ன செய்யவதென்று அந்த பணிப்பெண்ணும், அவர் கணவரும் அதிகமாகவே கவலைப்பட்ட நேரத்தில், 
இந்தப்பணம் அவர்களுக்குப் பெரிய உதவி..

 இரவு வீட்டுக்குப் போனதும், அந்த பணிப்பெண், 
தன் கணவரிடம் நடந்ததை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக விவரித்து,
 “எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு. கவலையை விடுங்க, மை டியர் பிரெய்ன் ஆண்டர்சன்”னு சொன்னாராம்.

ஸ்கேட்போர்ட் விளையாட்டில் புகழ்பெற்றவர் தான் பிரெய்ன் ஆன்டர்சன். 
இந்த உண்மை நிகழ்வை கேட்கும்போது, உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா 
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள்.

தக்கநேரத்தில், யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும் போது, வேறு யாரோ ஒருவர் வழியாக கிடைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம்.

இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம் கோர்ப்போம். 
நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், யாரோ ஒருவர் நம்மீது காட்டும் அன்பினால் தான்...

அந்த காலத்தில் எப்படி எந்தடெக்னாலஜியும் இல்லாமகிணறு வெட்டுனாங்க??? .

நம் முன்னோர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமக்கு
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ :

மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும.் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .

சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . .கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.
செம..!

தன்னம்பிக்கையை மனதில் வைத்து வைராக்கியத்துடன் உழைக்கும் எவர்க்கும் வெற்றி கைகூடாமல் போனதில்லை

"பிழைக்கத் தெரியாத முட்டாள்" என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார்.

தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.

அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.
அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.

தனது வாழ்க்கை அனுபவத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார்.

Toyoto நிறுவனத்திற்கு piston (உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.

யாருக்காகவும் அவன் காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.

இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள்.

முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள்.

புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார்.
மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய piston மாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார். 

அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. 

மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.
எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. 

அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமெண்ட் தட்டுப்பாடு.

எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சிமெண்ட் கூட கிடைக்கவில்லை. 
ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர் நண்பன்.

இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சிமெண்ட் கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.
ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.

அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.

ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால், தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.

மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.
இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........

ஆனால், அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......

“நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளி கூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.”

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.

எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். 

அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.*

அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.
அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.

அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.

அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று????

அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.

கையில் பணமில்லை, வங்கிகள் கடன் தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.

அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.

முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.*

5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.*

முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.
இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.

முயற்சியை மூலதனமாக கொண்டு, தன்னம்பிக்கையை மனதில் வைத்து வைராக்கியத்துடன் உழைக்கும் எவர்க்கும் வெற்றி கைகூடாமல் போனதில்லை நண்பர்களே..

பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம்

பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்து விட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். 

மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார் ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர், கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர் எனவே வயதான காலத்தில் வாய் திறந்து கேட்கமாட்டார் குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள். 

சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள், மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்.

பேரன் பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதீர்கள் அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்.

குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு இப்போது உங்கள் காலம் பார்த்துப் பார்த்து செய்வதற்கு.

ஒருவர் மறைந்த பின்னர் அதைச் செய்யவில்லையே இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதை விட அவர் உயிருடன் இருக்கும் போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி வகை செய்யுங்கள்.

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிக மிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெண் கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள் பெண் சூழலுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்து வாழ்பவள்.

ஆனால் குடும்பத் தலைவன் அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்குரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் எது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்த பின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள் அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்.

ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டிய பதிவு என்பதால் படித்ததை பகிர்ந்து கொள்கின்றேன்.

திருச்செந்தூரில் பிரகாரத்தில்

திருச்செந்தூரில் பிரகாரத்தில் பக்தர் ஒருவர் கந்த சஷ்டி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொல்லி முடித்ததும், ""கந்த சஷ்டி பாடி முருகப்பெருமானை வணங்குவது தங்களுக்கு அதீத விருப்பமோ"" என நான் கேட்க,

அவர் லேசான புன்னகையுடன் சொன்னார், ""ஐயா நான் தீவிரமான நாத்திகவாதியாக இருந்தவன், என்னை போல் எவரும் கடவுளையும், கடவுளை வணங்குபவரையும் மிகவும் கீழ்தரமாக பேசி இருக்க மாட்டார்கள் அந்தளவுக்கு பேசியவன்""
 .
""30 ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் திருச்செந்தூர் வந்து அதிகாலையில் நான் மட்டும் கடலுக்கு குளிக்க வந்தேன். அலையின் சுழற்சியில் உள்ளே சென்று விட்டேன், என்னால் கடலில் இருந்து வேளியேற முடியாமல்""

""என்னையும் மறந்து, முருகா... முருகா... முருகா... என்று கத்தினேன். யாரோ எனது தலைமுடியை இறுக்கமாக பிடித்தது போல உணர்ந்தேன், அடுத்த நொடி கரையில் வந்து வீழ்ந்தேன்""

""எழுந்து நின்று பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் எவரும் தென்படவில்லை, கண்களில் கண்ணீர் ததும்ப ததும்ப என்னால் முடிந்தளவுக்கு, உரத்த குரலில், ""முருகா... முருகா... முருகா..."" என சொல்லிக் கொண்டே முருகப்பெருமான் சன்னதியில் விழுந்து வணங்கினேன்.

அன்று முதல் நான் கடலில் விழுந்து பிழைத்த நாளையே, ""எனது பிறந்தநாளாக"" கொண்டு, ஒவ்வொரு வருடம் திருச்செந்தூரில் கந்தசஷ்டி பாடி முருகப்பெருமானை வணங்கி மகிழ்கிறேன் என்று அந்த பக்தர் சொல்ல, 

எங்களின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, முருகப்பெருமானை தரிசனம் செய்தோம். 
திருச்செந்தூரில் இருந்து.....

Friday, July 5, 2024

மனைவி கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது...

தாம்பத்திய சூத்திரம்....

மனைவி கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது...

அவங்க எதிர்பார்ப்பு எல்லாமே ரொம்ப சிம்பிளா தான் இருக்கும்…..

நாம தான் ஏதோ பெரிய பெரிய விஷயத்தை நெனச்சிகிட்டு இருப்போம்..

ஆனா அவங்க எதிர்பார்ப்பது…

முதல்ல நம்பிக்கை, அன்பு மற்றும் தாய்மைதான்.
எல்லாவற்றிலும் நம்பிக்கை கொடுங்கள். 

நம் துணையிடம் சொன்னால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புங்கள்…

பாசம் கொடுப்பதில் பாரி வள்ளலாக இருக்க வேண்டும்…

அடுத்து அவங்க எதிர்பார்க்கிறது…

அரவணைப்பு..அவர்கள் வீட்டில் செல்லமாக வளர்ந்து இருப்பார்கள்.. 

நம்ம வீட்டில் அவர்கள் உள்ள கால சூழ்நிலை தெரிய சில காலம் ஆகும் அதுவரை அவர்களை குழந்தை போல அரவணைத்து 

இது அப்படி அது இப்படி என்று சொல்லி கொடுத்து அரவணைக்க வேண்டும்..

அடுத்து

விட்டு கொடுத்தல்…

யாருக்கு விட்டுகொடுக்கிறோம்..
நம்முடைய துணை தானே என்று எண்ணுதல் வேண்டும்.. 

விட்டு கொடுப்பவர்கள் யாரும் கெட்டு போனதாய் சரித்திரம் இல்லை…

அதுக்கு அப்பறம் டெய்லியும் அவங்க நம்ம கிட்ட எதிர்பார்ப்பது…

• காலையில நமக்கு காபி கொடுக்கும் போதே…நீ காபி குடிச்சிட்டியா செல்லம்னு கேக்கனும்…

• சாப்பிடும்போது சமையலை பாராட்ட வேண்டும்…

தயவு செய்து யாருடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்..(பத்திரகாளி போல கோவம் வரும்)

• எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கனும்

• அலுவலகம் போகும் போது போயிட்டு வரேன் குட்டிமா அல்லது சின்ன பிலையிங்/ மவுத் கிஸ் ஒன்று கொடுக்கனும்..

• அலுவலகத்ல இருக்கும்போது மதியம் போன் பண்ணி சாப்பிடியானு கேக்கனும்..

• அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரும்போதே உனக்கு ஏதாவது வேணுமானு கேக்கனும்…

எதுவும் வேணாம் சொன்னாங்க அப்படினா மல்லிப்பூ மட்டும் வாங்கி வரலாம்..

• வீட்டுக்கு வந்த உடனே அலைபேசியை தூக்கி எறிந்து விட்டு அவங்க கிட்ட கொஞ்ச நேரம் மனசு விட்டு பேசணும்..

• சமைக்கிற அப்போ உதவி செய்யனும். 
(பின்னால நின்னு இல்லை ஹிஹிஹி..)

• முக்கியமான ஒன்னு நம் உடைகளை கண்ட இடங்களில் போட கூடாது. அந்த அந்த இடத்தில் வைக்கனும்.

• எக்காரணத்தை கொண்டும் பொண்டாட்டியை அடிக்க கூடாது....

குழந்தைகள் முன் சண்டை போட/ வாக்குவாதம் செய்யக் கூடாது

• அவர்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள்..

• அவர்கள் கனவுக்கு உதவுங்கள்

பிறந்த நாள் திருமண நாள் தீபாவளி பொங்கல் இந்த நாட்களுக்கு ஆடை எடுத்து அவர்களுக்கு பரிசளியுங்கள்.

முக்கியமாக அந்த 3 நாட்களில் ஓய்வு கொடுங்கள்...
உளுந்த கஞ்சி அல்லது உளுந்து வடை வாங்கி கொடுத்து தலையை கோதி விட்டு நெற்றியில் ஒரு முத்தம் கொடுங்கள்.

அப்புறம் பாருங்கள் உங்கள் வீட்டில் சந்தோஷமும் குதூகலமும் குசலம் விசாரிக்கும். . 

தலை/ மீசை நரைத்தாலும் வீட்டில் அன்யோன்யம் சிட்டு குருவியைபோல துள்ளி விளையாடும் ...✍🏼🌹

நாம் ஒரு படி இறங்கினால் பெண்கள் இரண்டு படி இறங்குவார்கள்.

இப்படி இருந்து பாருங்கள் வீட்டில்...

அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்

தன் மகளை அளவுக்கு அதிகமாக 
நேசிக்கும் ஒரு தகப்பனின்.... 🗣 👼🏻 #உணர்வுப்_பூர்வமான_எச்சரிக்கை...!!
~~~~~~ 🐝 🌷 🌴🌷 🐝 ~~~~~~
தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்... ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று..

ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்..

ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்..

பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம்போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா?? என கேட்டார்..🐝 

மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்..

அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...

அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது...

இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...ஷ...ரு🌴🌷 

இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்...!!!

ஆம் அன்பான பிள்ளைகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது...

எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!! 🌷 🌴🌷 

அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்

காலம் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்ன?

காலம் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்ன?

 தற்போதைய நடைமுறையில் பெண்ணை விட மணமகன் அதிகமாக படித்திருக்க வேண்டும் என்பது முதல் அடியாக வைக்கப்படுகிறது. படித்து முடித்ததும் பெண் வேலைக்கு சென்று விட்டால் நல்லது தான். ஆனால் அந்த இடத்தில் ஒப்பீடு என்பது ஆரம்பம் ஆகிறது.

பெண் BE முடித்து இருந்தால் பையன் ME முடித்திருக்க வேண்டும்.

பெண் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினால் பையன் அதைவிட 20000 ரூபாயாவது அதிகமாக வாங்கவேண்டும்.

பெண் வேலை பார்க்கும் இடத்திற்கு பையன் மாறி வரவேண்டும்.

திருமணத்திற்கு பின்னர் பெண் வேலையை விடமாட்டாள் என்றெல்லாம் பெண்ணைப்பெற்றவர்களின் எதிர்பார்ப்புகளும்,நிபந்தனைகளும் கூடிக்கொண்டு செல்கின்றன.

நல்லவிதமாக குணமாக,ஒழுக்கமாக இருக்கும் பையன் கூட ஏதேனும் ஒரு காரணத்தால் இரண்டு அல்லது மூன்று கம்பெனிகள் மாறி சீனியாரிட்டி இழந்து 80,000 வாங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் கூட அவனை நிராகரித்த பெண்களை எனக்கு தெரியும்.

பெண்களின் படிப்பு முடிந்து வேலைக்கு வந்ததுமே பெண்களின் பெற்றோருக்கும் சம்பாதிக்கும் போது சிறிது ஆணவம் வந்துவிடுகிறது என்பதில் யாராலும் மறக்க முடியாத உண்மை.

என் பொண்ணு சம்பாதிக்கிறா.

என் பொண்ணு வேலைக்கு போறா.

என் பொண்ணு இவ்வளவு வாங்குறா.

என் பொண்ணு இந்த கம்பெனியில் இன்ன போஸ்டிங்! என்றெல்லாம் முன்னைப்போல இல்லாமல் இப்போது பெண்ணை பெற்றவர்தான் மாப்பிள்ளையின் பெற்றோர்களிடம் கெத்து காண்பிக்கும் நிலை வந்துவிடுகிறது .இங்கேயே அமரலாமா? தொடரலாமா?என்ற மணமகனை பெற்றவர்களுக்கு எண்ணம் எழுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.

இதில் சராசரியாக பெண்ணின் திருமண வயது 22 இல் ஆரம்பித்து 25 /27 என்று உயர்ந்து இன்றைக்கு 29 இல் வந்து நிற்கின்றது. 29 வயது பெண்ணுக்கு நான்கு வயது வித்தியாசத்தில் மாப்பிள்ளை பார்த்தால் கூட மணமகனுக்கு 33 வயதாயிருக்கும். அந்த நேரம் வாலிபன்தோற்றத்திலிருந்து அடுத்த நிலைக்கு மாறும் சமயம் உடல், முகம், முடி போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும் காலம்.

இன்னொருபக்கம் பெண் வயதுகூடினால் கருவுறுதல் முதற்கொண்டு சிரமங்கள் அதிகரிக்கும்.இன்றைக்கெல்லாம் பல் மருத்துவமனைகளும் ,செயற்கைகருத்தரிப்பு மருத்துவமனைகளும் ,அதிகரிப்பது இங்கேதான் ஆரம்பம்.

மனது வலிக்கும் விஷயம் தான் இருந்தாலும் சொல்வது தவறில்லை.தெரிந்த பெண்மணி ஒருவருக்கு வரனுக்காக பேசிய சமயம்என்னுடைய மைத்துனி ஒருமுறை சொன்னார் வயது என்ன? என்று கேட்டார். 31 என்று பதிலுக்கு மாமா !எக்ஸ்பயர்ட் என்று பொட்டிலடித்தாற்போல கூறினார். அந்த வார்த்தை உண்மையாகவே இப்போதும் மனதில் சுடுகின்றது.

செல்லக்கிளியின் சொந்தங்களிலேயே திருமண வயது அதிகரித்தநிலையில் பெண்கள் இருக்கவே செய்கின்றார்கள். ஆனால் அதே சமயம் பத்தாம் வகுப்பு முடித்த பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பெண்கள் மிகச் சரியாக 19லிருந்து 21 வயதுக்குள் திருமணம் ஆகி விடுகிறது. இன்னும் சொல்லப்போனால் 18 வயது நிரம்பாமல் கோவிலில் ரிஜிஸ்டர் செய்ய முடியாமல் நடந்த திருமணமும் எனக்கு தெரியும்.

எனவே இவற்றில் பெண்ணை பெற்றவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமா? பையனைப் பெற்றவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமா? என்பது அவர் அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் செல்லக்கிகிளியின் தினசரி பிரார்த்தனை ஒன்று உண்டு. திருமணம் ஆகாமல் இருக்கும் வரன்களுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டும். அப்படியும் திருமணம் ஆகி குழந்தைப்பேறு தாமதிப்பவர்களுக்கு விரைவில் குழந்தை கிடைக்க வேண்டும்.

சட்டுபுட்டுன்னு பேசி காலகாலத்துல கல்யாணத்த முடிச்சு வைங்கப்பா!!!

காலத்தே பயிர் செய்!

கல்யாணமும் செய்து கொள்!

பருவத்தில் பயிர் செய்!

பிள்ளையும் பெற்றுக்கொள்!

நன்றி

வணக்கம்.

Monday, June 3, 2024

JRD டாட்டா

ஒரு நாள் கடும் மழையில் ஒரு மூதாட்டி குளிரில் நடுங்கியபடி பேருந்து நிலயத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு விலை உயர்ந்த ஆடம்பர கார் அந்த பேருந்து நிலயத்த்தின் ஓரமாக நின்றது.
கார் க்லாஸ்ஸை இறக்கி ஒரு sir. அம்மா நீங்க எங்க போகனும்.
மூதாட்டி- நான் ரொம்ப தூரம் போகனும் உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம். நான் பஸ் 
புடிச்சி போயிடறேன்.
மழைல பாம்‌பே புல்லா போக்குவரத்து ஸ்தம்பிச்சி போயிடுத்து. நீங்க எவ்ளோ நேரம் இங்க நின்னாலும் பஸ் வராது.
ஆட்டோ, taxi ஏதாவது புடிச்சி போனால் தான் உன்டு.
மூதாட்டி- அதுக்கு என் கைல காசு இல்லைங்க.
இளைஞர்- உங்க வீடு எங்க இருக்குனு சொல்லுங்க. என் வீட்டுக்கு பக்கத்துல உங்க வீடு இருந்தால் நான் உங்கள ட்ராப் பண்ணிடறேன்.
மூதாட்டி- தன் விலாசத்தை அந்த விசால மனம் படைத்த மனிதரிடம் கூறினார்.
அந்த இளைஞர் உங்கள் விட்டிற்கு மிக அருகில் தான் என் வீடு உள்ளது.
உங்களை ட்ராப் பண்றதுல எனக்கு எந்த சிரமமும் இல்லை. வண்டியில் ஏறுங்கள் என்று கூறி அந்த மூதாட்டிக்கு கார் கதவை திறந்து விட்டு அவரை மும்பை சேரி பகுதியில் இறக்கி விட்டார்.
அந்த மூதாட்டி அவருக்கு கை கூப்பி நன்றியை சொல்லி விட்டு உங்க கிட்ட நான் பஸ் ஸ்டாண்ட் லயே கேக்ணும்னு நினைச்சேன்.
இளைஞர்- என்ன விஷயம் கேளுங்க.
மூதாட்டி- உண்மையிலேயே உங்க வீடு இந்த குப்பத்திற்கு பக்கத்துலயா இருக்கு.
உங்களை பார்த்தால் அப்படி தெரியலையே.
இளைஞர்- ஆமாம். அப்படி சொன்னதால் தான நீங்க வண்டில ஏறினீங்க.
மூதாட்டி- உங்க பேர் என்னனு தெரிஞ்சிக்கலாமா.
இளைஞர்- JRD டாட்டா.
இவர் வெளிநாடு சென்ற பொழுது. 
இந்தியர்களுக்கு ரூம் இல்லை என்று ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லில் சொன்னார்கள்.
பின்னர் இந்தியா வந்து. இந்தியாவின் முதல் ஸ்டார் ஹோட்டலான தாஜ் கட்டி.
இந்தியர்களுக்கே இடம் என்றார்.
இவரை எந்த ஹோட்டல் அவமதித்ததோ.
அதே ஹோட்டல் உரிமையாளர் வேலை நிமித்தமாக இந்தியா வந்து தாஜ் ஹோட்டல்லில் ரூம் கேட்டார்.
அவருக்கு JRD டாட்டா ரூம் கொடுக்கவில்லை.
இந்தியாவின் முதல் இரும்பாலையை நிறுவியவரும் இவரே.
இந்தியர்கள் தயாரிக்கும் இரும்புகளை பல்லால் கடித்தே உண்ணலாம் என்று வெளி நாட்டவர் முதலில் ஏளனம் செய்து.
பின் இவரிடமே ஸ்டீல் ஆர்டர் எடுத்தனர்.
இவர் பிறந்தது மறைந்தது இரண்டும் nov 29இல்.

World news paper

Monday, May 20, 2024

தலையெழுத்தையே மாற்ற வல்லது.

தலையெழுத்தையே மாற்றவல்லது சிவபுண்ணியம்

அவர் ஒரு பிரபல ஜோதிடர்.
அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை
சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. 
அந்தளவு
ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர்.

எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்து கொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள்
வருவார்கள்.

தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.

“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். 
கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. 
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. 
அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று
தெரியவில்லை. 
நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா?
என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.

ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத்
தொடங்கினார். 
சோழிகளை உருட்டிப் போட்டார். கட்டங்களாய்
ஆராய்ந்தார். 
ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.

பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும்
முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று
விரிவாக ஆராய வேண்டி இருக்கிறது.

எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை
இதே நேரத்திற்கு வாருங்கள். 
நான் உங்களுக்கு அனைத்தையும்
சொல்லிவிடுகிறேன்” என்றார்.

“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு
எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும் போது கொடுங்க போதும்…”

“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”
தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அங்கு வந்த ஜோதிடரின் மூத்த மகள், “அப்பா, ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க?
இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. 
முழுக்க முழுக்க
வர்றவங்களுக்கு ஜாதகம்தான் பார்த்து பலன் சொல்லப் போறேன்னு
சொன்னீங்க?” 
என்று கேட்டாள்.

அதற்கு ஜோதிடர், “அம்மா, அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்
போகிறது. 
அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத்தான். 
மேலும் சோழி உருட்டி கூட பார்த்து விட்டேன். 
பரிகாரம் செய்வதற்கு கூட
அவருக்கு அவகாசம் இல்லை. 
இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை.
அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்
பாவம்” என்றார்.

இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரை நோக்கி வயல்
வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. 
சிறிது
நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை
கொட்டியது.

வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த
தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். 
சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை
நோக்கி ஓடினான் தொழிலாளி.

அது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி. 
மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். 

“ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று
சிதிலமடைந்து காணப்படுகிறதே. 
நான் மட்டும் ஏழையாக இல்லாமல்
பண வசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம்
செய்து விடுவேன்’ என்று நினைத்துக் கொண்டார்.

அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான்
புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக் கொண்டார். 
கோபுரம்,ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். 
கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து
கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை
வணங்குவது போல் தனது சிந்தனையை ஓட விட்டார்.

அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்த
போது, அங்கே அவரது தலைக்கு மேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து
அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.

இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து
அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது.
அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். 
நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

அப்போது சரியாக இரவு ஏழரை மணி. வீட்டுக்கு சென்று தன் மனைவி
மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.

மறுநாள் மாலை வழக்கம் போல ஜோதிடரை சந்திக்க சென்றார்.
தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
அவரை வரவேற்று அமர வைத்து விட்டு ஒரு வேளை தான் சரியாக பலன்
கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின்
ஜாதகத்தை ஆராய்ந்தார்.

ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். 
அவர்
கணக்கு சரியாகவே இருந்தது. 
பின் அவர் எப்படி பிழைத்தார்?

இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்க வேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம்
குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இவரோ பரம ஏழை. 
அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும்
அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடியும்? 
அதுவும் ஒரு இரவுக்குள்? 
இப்படி பலவாறு சிந்தித்த படி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம்
கேட்டார்.

ஜோதிடர் தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு
ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.

மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர்
அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும்,
பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான்
கருதியதாகவும் கூறினார்.

ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. 
இந்த தொழிலாளி
மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே
அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்து கொண்டார்.

“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். 
இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை
வழியனுப்பி வைத்தார்.

ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது
விதியை மாற்ற வல்லவை. 
எனவே எப்போதும் நல்லதையே நினைக்க வேண்டும்.
அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும்
இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி
அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.

நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும்.

சிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது.
ஆனால், தலையெழுத்தையே மாற்ற வல்லது. 
அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடைய வேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த சிவபுண்ணியம் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றி விட்டது.

இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும்
என்ற விதியை மாற்றுவது. 

தலைக்கு வருவதை தலைப் பாகையோடு போகச் செய்யும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு.
🙏#சிவமேசெல்வம்🙏

Wednesday, May 15, 2024

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

 நாம ஏன் சோணகிரியா இருக்கோம்?

தொத்த பாடியா இருக்கோம்?
பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது?
உணவு முறையும் ஒரு காரணம்.
சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளின் உணவு பழக்கம்!
மன்னர்கள் குடிமக்களின் உணவுகளில் வித்தியாசம் இல்லை.
சோளம், கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி அரிசி உணவுகளைத் தான் உண்டிருக்கிறார்கள்.
இவையே முதன்மையான உணவு.
இன்று நாம் சிறுதானியம் என சொல்லும் பயிறு வகைகள் அருந்தானியம் என்றழைத்தனர். அதிகம் அதனையே உண்டனர்.
செய்முறை விளக்கம் தெரியவில்லை.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவையே ஐந்திணைகள். இதில் வாழ்ந்த மக்கள் அந்த இடத்தின் தன்மைக்கேற்ப உணவு முறைகளை பின்பற்றி வந்தனர். குறிஞ்சியில் உள்ள மக்கள் தேன், திணை போன்ற உணவுகளை உண்டனர்.
முல்லை மக்கள் இறைச்சி, பச்சை காய்கறிகள் போன்றவற்றையே உணவாக பயன்படுத்தினர்.
மருத நில மக்கள் அரிசி, கேழ்வரகு, திணை, கம்பு, சோளம் போன்றவற்றை உண்டு களித்தனர்.
நெய்தலில் உள்ள மக்கள் அதிக கடல் உணவுகளையே சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.
பாலை நிலத்தினர் இறைச்சி, மீன், போன்றவற்றையே பிரதான உணவாக உண்டார்கள்.
இட்லியும் தோசையும் அப்போதே இருந்திருக்கிறது.
இது போக கோதுமை ரொட்டி உண்டிருக்கிறார்கள்.
கறி வகைகளில்
ஆடு, கோழி, மீன், பன்றியும் உண்டிருக்கிறார்கள்.
இதில் பாண்டியர்கள் மீன் தவிர மற்ற உணவை உண்பர்.
அயல் தேசத்தினர் வந்தால் கொழுத்த பன்றியை நெய்யில் பொரித்து இளந்திரையன் தொண்டைமான் பரிமாறியதாகவும் அறியப்படுகிறது.
சோழ நாட்டு மக்கள் தேனையும் கிழங்கையும் அதிகம் உண்டனர்.
பிற நிலத்தார்க்கு இதனை தந்து
மீன், நறவை, நெய் இவற்றை பண்டமாற்றில் வாங்கிச் செல்வர்.
நன்னன் என்கிற குறுநில மன்னன் ஆண்ட சவ்வாது மலைப் பகுதியில் அடிவாரத்தில் வாழ்ந்த மக்கள் நெய்யில் வெந்த இறைச்சியுடன் தினையினை உண்டதாக குறிப்புகள் கிடைக்கின்றன.
இவை மட்டுமின்றி
உடும்பின் இறைச்சி, பன்றி இறைச்சி, மான் இறைச்சியையும் உண்டனர்.
நெல்லில் சமைத்த கள்ளையும், மூங்கில் குழையினுள் முற்றிய கள்ளையும் பருகினர்.
மூங்கில் அரிசிச் சோற்றுடன் பலாக் கொட்டை, மா, புளிநீர், மோர் கொண்டு தயாரித்த குழம்பையும் உண்டதாக அறிகிறோம்.
நிறைய மக்கள் வீட்டில் சமைக்காமல் மன்னர்கள் கோவில்களில் வழங்கும் அன்னதான உணவு வகைகளை உண்டதாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் உண்பதை பிறர் காண இயலாத வண்ணம் திரைச்சீலைகளால் மறைக்கும் வழக்கமும் இருந்தது.
காலை வேளையில் தோட்ட வேலைக்குப் போகக்கூடிய தமிழர்கள் வெந்தயக் களி, உளுத்தங்களி, கேழ்வரகுக் களி, சோளக்களி , கம்புக்களி உண்டு வந்தனர். களி என்பது திடப்பொருள் உணவாகும். இந்த மாதிரியான களியை உட்கொண்டு தோட்டத்திற்கு செல்லும்போது அவர்களால் கடுமையான வேலைகளைக் கூட செய்ய முடிந்தது.
போர் வீரர்களுக்கும் இதுவே உணவு.
மதிய வேளைகளில்
முழு உணவு உண்டனர்.
அப்போதும்
அரிசி சோறு கிடையாது.
பொங்கல், ஆடி பண்டிகைகளின் போது தான்
அரிசி சமையல்.
மற்றபடி வருடம் முழுவதும்
சிறுதானியம் எனப்படும் அருந்தானியங்களையும்
காய்கறிகள், இறைச்சிகள் கொண்ட உணவு வகைகளை சமைத்தனர்.
இலங்கையில் இன்னும் பல பகுதிகள்ல
அரிசி என்பதே ஆடம்பர உணவாவும், பண்டிகை கால உணவாவும் இருக்கறதா முந்தி படிச்சேன்.
பழங்கால தமிழர்கள் உணவு முறை ஆராயறப்ப
நாமும் அரிசி உணவை தவிர்ப்பது நல்லது.
இடியாப்பம், குழி பணியாரம், புட்டு(இட்லி), தோசை எல்லாமே சாப்ட்ருக்காங்க. ஆனா
அரிசில பண்ணல, கம்பு, தினை, சாமை, கேழ்வரகுல பண்ணிருக்காங்க.
எப்டி அரிசி சோறு பண்டிகை கால உணவா இருந்து தினசரி உணவா மாறுச்சோ அந்த மாதிரி
30 வருசம் முன்ன பண்டிகை கால உணவா இருந்த பிரியாணி இப்ப பலருக்கு தினசரி உணவா அல்லது வாரம் 3 முறை உணவா மாறிட்டு வருது.
நாமே கவனிச்சிருப்போம்.
பத்து பதினஞ்சு வருசம் முன்ன இவ்ளோ பிரியாணி கடைகள் இல்ல.
இப்ப தெருவுக்கு ஒண்ணு ரெண்டு பிரியாணி கடை வந்துருச்சு.
அப்ரம்
பழங்கால தமிழர்கள்
நெய், நல்லெண்ணை மட்டுமே சமையலுக்கு பயன் படுத்தி இருக்காங்க.
நாம சன்ப்ளவர் ஆயில், பாமாயில்னு உடம்பை கெடுத்துட்டு் இருக்கோம்.
வெறும் அரிசி சோறா தின்னுட்டு,
சுகர் வந்திச்சி
பிகர் போயிருச்சுனு
புலம்பிட்டு இருக்கோம்.
உணவு முறைல முடிஞ்ச அளவு
மாற்றம் பண்ணுங்க.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...