Tuesday, March 1, 2022

சிவராத்திரியில் ஈசனுக்கு அபிஷேகம்

*மஹா சிவராத்திரியில் எந்தெந்த ராசியினர் எந்த பொருட்களால் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்*

மஹாசிவராத்திரி தினத்தில் விரதம், வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பது மிக முக்கியமானதாகும்.

இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் அவர்களுக்கு என ஒரு சில குறிப்பட்ட விஷேச அபிஷேகம் செய்ய அவர்களுக்கு தேவையான கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஈசனுக்குரிய மஹாசிவராத்திரி நன்னாளில் சிவனை நினைத்து, விரதமிருந்து இரவில் அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்வது நல்லது.

மஹாசிவராத்திரி் வழிபாடு நம் முன் வினைகள், ஜென்ம பாவங்கள் நீக்கி நல்லருள் கிடைக்கச் செய்யும்.

நாம் ஈசனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யலாம், இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் இங்கு குறிப்பிட்டுள்ள அபிஷேகம் செய்வது மேலும் நன்மையை தரும்.

மேஷ ராசி
_____________
மஹாசிவராத்திரி தினத்தில் வெல்லம் கலந்த நீரை ஈசனுக்கு அபிஷேகம் செய்து, படைத்து, சிவ பஞ்சாக்‌ஷர மந்த்ரத்தைச் சொல்ல வேண்டும். இதனால் நாம் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

ரிஷப ராசி
________________
ரிஷப ராசியினர், தயிர் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய, வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மிதுன ராசி
__________________
மிதுன ராசியினர் ஈசனுக்கு கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்ய உங்கள் மனதில் இருக்கும் பல்வேறு ஆசைகள் நிறைவேறும்.

கடக ராசி
_______________
கடக ராசியினர் சர்க்கரை கலந்த பால் கொண்டு அபிஷேகம் செய்யவும். பின்னர் மந்தாரைப் பூவால் அலங்காரம் செய்ய நினைத்தது விரைவில் நடக்கும்.

சிம்ம ராசி
______________
சிம்ம ராசியினர் சிவப்பு சந்தனம் கலந்த பால் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய, உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

கன்னி ராசி
________________
கன்னி ராசியினர் பால் மற்றும் நீரால் அபிஷேகம் செய்யவும். இதனால் உங்களின் ஆரோக்யம் மேம்படும்.

துலாம் ராசி
________________
துலாம் ராசியினர், பசும்பாலால் அபிஷேகம் செய்ய செல்வச் செழிப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

விருச்சிக ராசி
___________________
விருச்சிக ராசியினர் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரைக் கொண்டு ஈசனுக்கு அபிஷேகம் செய்தல் நல்லது.

தனுசு ராசி
_______________
தனுசு ராசியினர் குங்குமப்பூ கலந்த பாலால் ஈசனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்‌ஷர மந்திரத்தை படித்தல் வேண்டும். இதனால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் நீங்கும்.

மகர ராசி
_____________
மகர ராசியினர் நல்லெண்ணெய் கொண்டு ஈசனுக்கு அபிஷேகம் செய்து, வில்வப் பழத்தை படைத்தல் வேண்டும். இதனால் வாழ்வில் எதிலும் வெற்றி கிடைக்கும்.

கும்ப ராசி
_______________
கும்ப ராசியினர் இளநீர் அல்லது கடுகு எண்ணெய்யால் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய உங்களுக்கு நிதி வருவாயில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும்.

மீன ராசி
_____________
மீன ராசியினர் குங்குமப்பூ கலந்த பாலால் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய, வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...