Monday, February 14, 2022

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் உப்பு கரிப்பது ஏன்?:

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் உப்பு கரிப்பது ஏன்?: 12 கி.மீ., தூரம் வரை கடல் நீர் உட்புகுந்தது கண்டுபிடிப்பு துாத்துக்குடியில், 12 கி.மீ., துாரம் வரை கடல் நீர் ஊடுருவியுள்ளதே, அங்கு நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு முக்கியமான காரணம்,'' என, வ.உ.சிதம்பரம் கல்லுாரியின் நிலத்தியல் துறை உதவிப் பேராசிரியர் சே.செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1985 முதல் நடைபெற்று வந்த பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், இந்தக் கருத்தை, இவர் தெரிவித்துள்ளார். பெருநிறுவனங்கள் வெளியிடும் நீர் கழிவுகளாலேயே, துாத்துக்குடியின் நிலத்தடி நீர் மாசுபட்டது என்று முன்பு கூறப்பட்டது. பேராசிரியர் செல்வம் கூறியதாவது:கடல்நீர் அருகில் உள்ள நிலத்தில் ஊடுவுவது என்பது, கடலோரப் பகுதிகள் அனைத்திலும் காணப்படும் பிரச்னை தான். துாத்துக்குடியிலும் இதுதான் நடைபெற்றுள்ளது.

1985 முதல் நடைபெற்று வந்த பல்வேறு நிலவியல் ஆய்வு முடிவுகள், இதற்கு ஆதாரமாக விளங்குகின்றன. கடந்த 2010 முதல் நானே இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன். இதில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.துாத்துக்குடியின் நிலத்தடி நீர் உப்பு கரிக்கிறது, அதனைக் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியவில்லை என்ற குறைபாடு சொல்லப்படுகிறது.

இதற்கு முதன்மையான காரணம், கடல்நீர் படிப்படியாக துாத்துக்குடி நிலத்தில் ஊடுருவுவது தான். பத்தடி தோண்டினாலேயே உப்பு நீர் தான் கிடைக்கும் வெல்லப்பட்டி, புதுார் பாண்டியாபுரம், முள்ளக்காடு, தாளமுத்து நகர், முத்தையாபுரம் போன்ற பகுதிகள், கடலுக்கு அருகே இருப்பதால், இங்கேயெல்லாம் நிலத்தடி நீர் இன்னும் உப்பாக இருக்கும். கடல் நீர் ஊடுருவல் படிப்படியாக நடந்திருக்கிறது. 1993ல் கடலில் இருந்து 1.5 கி.மீ., துாரம் வரை ஊடுருவிய கடல் நீர், 2007ல், 5 கி.மீ., வரை;- 2011ல், 6 கி.மீ., வரை; 2014ல் 8 கி.மீ., துாரத்திற்கு

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...