Wednesday, March 12, 2025

KSRTC- KERALA DOUBLE DUCKER BUS -MUNNAR KSRTC STAND STARTING POINT-TOURIST PLACES 3 HOURS TRIP

 KSRTC 

TOURIST PLACES 3 HOURS TRIP

1,SIGNAL POINT

2,LOCKHART VIEWPOINT

3,GAP ROAD

4,MALAYIL KALLAN CAVE

5,PERIYAKANAL WATERFALLS

6,ORANGE FARM VIEW

7,ANAYIRANGAL DAM VIEW


UPPER DESK SEATS :RUPEES 400 (INDIAN MONEY)

LOWER DESK SEATS :RUPEES 200 (INDIAN MONEY)


MORNING TIME : 9.00AM

AFTERNOON TIME :12.30 PM

EVENING TIME :12.30 PM

BOOKING WEBSITES --- www.ksrtc.in

Spice jet is back to Serve Tuticorin from 30-03-2025

*Spice jet is back to Serve Tuticorin from 30-03-2025*

*Spicejet opened the booking for 2 Chennai Flights and 1 Bangalore Flight from TCR*

*Chennai - Tuticorin*

06.00 AM ----> 07.40 AM
02.20 PM ----> 03.55 PM

*Tuticorin - Chennai*

12.10 PM ----> 01.45 PM
04.55 PM ----> 06.30 PM


*Tutocorin - Bangalore*

08.00 AM ----> 09.35 AM


*Bangalore - Tuticorin*

09.55 AM ----> 11.45 AM

Tuesday, March 11, 2025

சிம்பொனி என்றால் என்ன...?

சிம்பொனி என்றால் என்ன...?

ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான். 

உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது..
அதில் முக்கியமானவை:
1.சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra)
2.சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra).

16ம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாக கலந்தே இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்க முடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்டது.
அது தான் சிம்பொனி..
இதற்கு சரியான வடிவத்தைக் கொண்டுவந்து இதை புகழ் பெற வைத்தவர் Father of Symphony என்று அழைக்கப்படுகிற ஜோசப் ஹைடன் (1732-1809)..
மொசாட் மற்றும் பீத்தோவன் இருவருக்கும் இவர்தான் குருநாதர்.

மீண்டும் சிம்பொனிக்கு வருவோம்.
ஒரு இசை வடிவம் எப்பொழுது சிம்பொனி என்று அழைக்கப்படுகிறது?..
ஒரு சிம்பொனி எவ்வளவு நேரம் இசைக்கப்பட வேண்டும்?,
எத்தனை இசைக் கருவிகள் பயன்படுத்த வேண்டும்?,
எவ்வளவு இசைக் கலைஞர்கள் பங்குபெற வேண்டும்?..

ஒரு சிம்பொனி குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் இருக்க வேண்டும்..
18 முதல் 24 வகையான இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். 
80 முதல் 120 இசைக் கலைஞர்கள் வரை ஒரு அரங்கத்தில் இதை இசைக்க வேண்டும்..

இந்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்தால் கூட அது சிம்பொனி ஆர்கஸ்ட்ரா என்று அழைக்கப்படாது. மாறாக அது சேம்பர் ஆர்கஸ்ட்ரா என்றுதான் அழைக்கப்படும்.

ஏன் இதற்கு இவ்வளவு கட்டுபாடுகள?..
இதற்கு சிம்பொனி எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டால் இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்..

சிம்பொனி நான்கு பகுதிகளாக இசைக்கப்பட வேண்டும் என்பதை முதலில் பார்த்தோம்.
இப்போது அந்த நான்கு பகுதிகள் எவை?..
அது எப்படி இருக்க வேண்டும்?..

இதை விளக்குவதற்கு இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம்..
1. The Fast Movement:
காலையில் திருமண நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. இது துவக்க நிலை உறவினர்கள், நண்பர்கள், விஐபிகள் போன்றவர்கள் அங்கு வருகை தர ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் கோலாகலமாக இருக்கும். இதை குறிப்பதற்கு இசை துள்ளலாக, கொஞ்சம் அதிரடியாக இருக்க வேண்டும்.

2. The Slow Movement:
இப்போது அரண்மனைக்குள் அனைவரும் செட்டில் ஆகியிருப்பார்கள். மணமகன், மணமகள் அங்கு தோன்றுவார்கள்.‌ இப்போது துவக்க நிலை இசையை நன்றாக விரிவுபடுத்தி இசையின் ஆழத்திற்கு செல்ல வேண்டும். இந்த பகுதி அமைதியானதாக இருக்க வேண்டும். மெலடி டியூன்ஸ் இங்கு அதிகம் வாசிக்கப்படும்.

3. The Dance Number:
திருமணம் முடிந்து கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கிறது. இப்போது அந்த இடம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். இதை குறிக்கும் வகையில் இசை என்பது நடனம் ஆடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். 

4. An Impressive Fast Movement:
இப்போது அரண்மனைக்குள் தீ பிடித்து விடுகிறது. அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் பதட்டமாக இருக்கும். இதுதான் சிம்பொனியின் உச்சகட்டம். இங்கு இசையில் நிறைய பரிசோதனைகள் செய்து பார்க்கப்படும். இங்கு இசையமைப்பாளர் தன் முழு திறமையையும் காண்பித்து சிம்பொனியை நிறைவு செய்வார்.

இந்த நான்கு பகுதிகளையும் உருவாக்குவதற்கு தான் இருபது நிமிடங்களுக்கு மேல் இசை தேவைப்படுகிறது. இதற்குத்தான் எண்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.

மிக முக்கியமாக, சிம்பொனி இசையை ஸ்டுடியோவுக்கு உள்ளே உருவாக்கி பின்னர் அதை வெளியிடக் கூடாது. ஒரு பெரிய அரங்கத்தில் 80க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களோடு, ஒவ்வொரு இசையையும் இருபது நிமிடங்களுக்கு மேல் பார்வையாளர்களுக்கு முன்னிலையில் இசைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது சிம்பொனியாகக் கருதப்படும்..

இதுதான் பருவமழை கால மூணார்....

இதுதான் பருவமழை கால மூணார்....

ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் முடிய பருவ மழை கால மலைவாழ் இடங்கள் இப்படித்தான் இருக்கும் 

தமிழ்நாட்டில் ஊட்டி கொடைக்கானல் வால்பாறை மேகமலை கேரளாவின் மூணார் வாகமன் வயநாடு நெல்லியம்பதி உள்ளிட்டவை பருவ மழை காலங்களில் இது போல் தான் பச்சை பசேலென சில்லென்று இருக்கும்...

பிப்வரி தொடங்கி மே முடிய காய்ந்து போன மலையாக காட்சி தரும் அங்கேயும் வெயிலின் தாக்கம் கொஞ்சமாவது இருக்கும்...

குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விடுகிறார்கள் என்பதற்காக அனைவரும் சுற்றுலா சென்று கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்கிறார்கள்...

அவர்கள் எதிர்பார்க்கும் கிளைமேட்டும் அப்போது இருக்காது...

ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை சுற்றுலா செல்லுங்கள்....

இயற்கையோடு வாழ்ந்து விட்டு வாருங்கள்.

Saturday, March 8, 2025

Longest Train Routes In India

 



குறிப்பிடத்தக்க இந்தியாவில் முதல் 10 நீண்ட ரயில்கள்:

1. டிப்ருகர் - கன்யகுமாரி விவிவ்எக்ஸ்பிரஸ் (15906) அசாம் முதல் தமிழ்நாடு வரை 9 மாநிலங்களில் 4,233 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய இந்தியாவில் ** மிக நீளமான ரயில் பாதை.
2. அரோனாய் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12508) : சில்சார் (அசாம்) திருவனந்தபுரம் (கேரளா) உடன் இணைக்கிறது, இது கிட்டத்தட்ட 4,000 கி.மீ.
3. ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (16317) : கன்யகுமாரியில் இருந்து ஷ்ரிமாதவீஸ்நோடேவி கத்ரா வரை இயங்கும் மிகப் பழமையான நீண்ட தூர ரயில்களில் ஒன்று, 3,789 கி.மீ.
4. பத்து ஜம்மு எக்ஸ்பிரஸ் (22679) : டிருனெல்வெவ்லே (தமிழ்நாடு) ஜம்மு காஷ்மீருடன் இணைத்து, 3,621 கி.மீ.
5. புதிய டின்சுகியா - பெங்களூரு எக்ஸ்பிரஸ் (22502) : வடகிழக்கு இந்தியாவை கர்நாடகாவுடன் இணைக்கவும், 3,690 கி.மீ.
6. சில்சார் - கோயம்புத்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12516) : சில்சார் (அசாம்) முதல் கோயம்புத்தோர் (தமிழ்நாடு) வரை இயங்கும், 3,602 கி.மீ.
7. நேவம்புக் எக்ஸ்பிரஸ் (16687) : பெயர் "புதிய சகாப்தம்" என்று பொருள்படும், இது மங்களூரு (கர்நாடகா) இலிருந்து ஜம்மு & காஷ்மீருக்கு இந்தியாவை ஒன்றிணைப்பதில் ரயிலின் பங்கைக் குறிக்கிறது, இது 3,607 கி.மீ.
8. அசாம் எக்ஸ்பிரஸ் (15909) : திப்ருகர் (அசாம்) முதல் லல்கர் (ராஜஸ்தான்) வரை 3,505 கி.மீ.
9. கொச்சுவேலி - டெஹ்ராடூன் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22659) : கேரளாவை உத்தரகண்ட் உடன் இணைக்கிறது, 3,153 கி.மீ., இரண்டு தொலைதூர மாநிலங்களை வாராந்திர சேவையுடன் இணைக்கிறது.
10. : யோவந்த்பூர் (கர்நாடகா) முதல் காமக்யா (அசாம்) வரை 3,022 கி.மீ.

how to find unreserved coach in train visual images-India


இந்தியாவில் 1853-ம் ஆண்டு தான் ரயில்வே சேவை துவங்கப்பட்டது, பின்பு இந்த ரயில் சேவை 1951-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது.
அன்று முதல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அப்படி ஒருநாள் வந்த இந்த மாற்றம் தான் மஞ்சள் நிற கோடுகள்.
பொதுவாக ரயிலில் பயணித்திருப்பவர்களுக்குக் கூட ரயிலில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள், அல்லது குறியீடுகளை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும்.
அப்படியான ஒருவிஷயம்தான் ரயில் பெட்டிகளில் கடைசியில் ஜன்னலுக்கு மேல் உள்ள மஞ்சள் நிற கோடுகள், இந்த கோடுகள் எதைக் குறிக்கிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறலாம்.
இந்தியாவில் விரைவுவண்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளை கொண்டிருக்கும். பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக இருக்கும். ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளாக இருக்கும்.
இந்த நீலநிற பெட்டியில் உள்ள நான்கு முனைகளில் உள்ள கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கும்.
இந்த கோடுகள் இருந்தால் அந்த பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என அர்த்தம், முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்த கோடுகள் இருக்காது.
எனவே ரயில்வே நிலையத்தில் பயணிகள் முன்பதிவில்லாத பெட்டியை எளிதாக கண்டுபிடிக்கவே இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Ooty (ஊட்டி) TN

 Ooty (ஊட்டி) TN





கோடைக்கானல் – தென்னிந்தியாவின் மலர் மகளான அழகிய ஹில் ஸ்டேஷன்

 



கோடைக்கானல் – தென்னிந்தியாவின் மலர் மகளான அழகிய ஹில் ஸ்டேஷன்! 🌿🏞️
கோடைக்கானல் (Kodaikanal) என்பது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மலைப்பகுதி. இது கடல்மட்டத்திலிருந்து 7,200 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் இயற்கையின் அற்புதங்கள் நிறைந்த ஒரு சொர்க்கம்!
✨ எங்கே உள்ளது?
கோடைக்கானல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. மதுரை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற நகரங்களுக்கு அருகில் இருக்கிறது.
🏕️ பிரபலமான இடங்கள்
1️⃣ கோடைக்கானல் ஏரி – படகு சவாரிக்குப் புகழ்பெற்ற மிக அழகிய ஏரி.
2️⃣ குறிஞ்சி ஆண்டவர் கோவில் – ஆண்டுதோறும் பசுமை சூழலுடன் காணக்கிடைக்கும் ஆன்மீக தலம்.
3️⃣ கோக்கர் ஸ்வாலா (Coaker's Walk) – மெழுகு போல் மென்மையான நடைபாதை, அற்புதமான ஒளிவிலகல் காட்சி!
4️⃣ பைலர் பாயின்ட் (Pillar Rocks) – மூன்று உயரமான பாறை தூண்கள், புகைப்படத்திற்கேற்புடைய இடம்.
5️⃣ சில்வர் கேஸ்கேட் அருவி – கோடைக்கானல் செல்லும் வழியில் அழகிய அருவி.
6️⃣ பேரியாறு வனவிலங்கு சரணாலயம் – காட்டுயிர்கள் வாழும் பாதுகாப்பான இடம்.
7️⃣ குரிஞ்சி மலர் பூக்கும் நிலம் – ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நீல மலர்.
இவை அனைத்தும் கொடைக்கானல் நகரத்தை சுற்றி உள்ள பகுதிகள் கொடைக்கானல் நகரத்தை தாண்டி 20 கிலோமீட்டர் அப்பால் உள்ள பகுதிகள்...
பூம்பாறை மன்னவனூர் பூண்டி கூக்கல் கிளாவரை
🌤️ எப்போது செல்லலாம்?
கோடைக்கானல் சுற்றுலாவுக்கு ஏற்ற நேரம் மார்ச் முதல் ஜூன் மற்றும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை. கோடைக்காலம் சற்று குளிராக இருக்கும், ஆனால் மழைக்காலங்களில் அதிக வெண்மை மூடப்படும்
🌿 கோடைக்கானல் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு அழகிய இயற்கை பரிசு!
நான் 18 முறை சென்றுள்ளேன் இதுவரை நீங்கள் எத்தனை முறை சென்று பார்த்துள்ளீர்கள்? உங்களின் அனுபவங்களை கமெண்டில் பகிருங்கள்.

கும்பகோண மகாமகமும் தமிழரின் வானியலும்

 

🌺 கும்பகோண மகாமகமும் தமிழரின் வானியலும்! 🤔
மகாமகம் தொல் தமிழர்களின் வானியல் திருவிழா!!
இயற்கையை, வானியல்
கண்டுபிடிப்புகளை
திருவிழாவாகக் கொண்டாடும்
தமிழர்களின் அதி
சிறப்பு திருவிழா இது!
அப்படி என்ன மகாமகத்தில்
தமிழர்களின் அறிவியல்
கண்டுபிடிப்பு உள்ளது?
மகாமகம் 12 ஆண்டுகளுக்கு
ஒருமுறை கொண்டாடப்படுகிறது,
ஏன் ?
தமிழரின் வானியல் கண்டுபிடிப்பு தான்.
வியாழன் கிரகம்
ஒரு முறை சூரியனைச்சுற்றி வர எடுக்கும் காலம்
12 ஆண்டுகள்.
வியாழன், சூரியன், பூமி, நிலவு, மகம் என்ற நட்சத்திரக்கூட்டம்
என ஐந்தும் ஒரே
நேர்கோட்டில் வருவது
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை.
அதுவும் மகம் என்ற நட்சத்திரக்கூட்டம் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று இணைவது சிறப்பானது.
அதனால்தான் மாசிமகம் எனப்படுகிறது.
மகம் என்பது இந்திய வானியலில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரப் பிரிவுகளுள் 10 ஆவது
பிரிவு ஆகும்.
சிம்மராசியில் அமைந்துள்ள
இந்த நட்சத்திரக்கூட்டத்தின் அமைப்பு.
கும்பகோணத்தில் உள்ள மகாமக குளமும் இந்த சிங்க நட்சத்திர அமைப்பை ஒட்டியே கட்டப்பட்டிருப்பது சிறப்புக்குரியது.
நட்சத்திர சிங்கத்தின் உடல்,
வயிற்றுப்பகுதியை மையமாகக்கொண்டு மகாமக குளத்தை கட்டியிருக்கிறார்கள் தமிழர்கள்.
என்ன ஒரு விண்ணியல்
அறிவு அவர்களுக்கு.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றும் வியாழன் மக நட்சத்திரக்கூட்டத்தில் இருக்கும் போது சூரியன்
கும்ப நட்சத்திரக்கூட்டத்தில் இருப்பதால் இவ்வூர் கும்ப-கோணம் என்றே அழைக்கப்படுகிறது.
வட இந்தியாவிலும்
குறிப்பாக உத்திரப்பிரதேசம்
பிரயாக்ராஜில், அவர்கள்
கொண்டாடினாலும்
கும்ப நட்சத்திரம்
என்ற தமிழ்ப்பெயர்
இன்னும் மாறாமல் உள்ளது.

திருமணம் என்பது நீங்கள் பெரும்

 திருமணம் என்பது நீங்கள் பெரும் விலை கொடுக்க வேண்டிய ஒரு ஒப்பந்தம்.

🔺️ உங்களால் விட்டுக்கொடுக்க முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ உங்களால் மன்னிக்க முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ நீங்கள் விரும்பிய ஒன்றை பிறருக்காக தியாகம் செய்ய முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ உங்கள் சுகம் மட்டும் தான் முக்கியம் என்று நீங்கள் கருதினால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ நீங்கள் உங்கள் இஷ்டப்படி மட்டும் தான் வாழ வேண்டும் என்று நினைத்தால் நீங்கள்
திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ நீங்கள் யாரிடமும் கலந்தாலோசிக்காமல்
கண்டபடி செலவழிப்பவராக இருந்தால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
🔺️ நீங்கள் நினைத்தது மாத்திரம் தான் நடக்க வேண்டுமென்ற கோட்பாட்டகல் நீங்கள் இருந்தால் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ உங்கள் தவறுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களாக இருந்தால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ உங்களுக்காக மாத்திரம் வாழ வேண்டும் என்ற சுயநலம் கொண்டவராக இருந்தால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ திருமணம் என்பது நம் குணாதிசயங்கள் சோதிக்கப்படும் ஒரு பாசறையாகும்.
🔺️ திருமணம் என்பது, நாம் நமக்காக மட்டும் வாழும் வாழ்க்கையல்ல, நம்மோடு கை கோர்த்து வருவோருக்காகவும் வாழ்வதாகும்.
🔺️ திருமணம் என்பது பணிகளையும் அர்ப்பணிப்புக்களையும் பரிமாறிக் கொள்வதாகும்.
🔺️ தன் சுகத்தையும், தன் திருப்த்தியையும் மாத்திரம் பார்ப்பவர்கள் பயணத்தின் நடுவில் சோர்வடைந்து விடுவார்கள்.
🔺 ️திருமணம் என்பது ஒரு அழகான பந்தம் தான். ஆனால், யாரும் அது இலேசான பந்தம் என்று சொல்லவே இல்லை

அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி (செட்டியாபத்து) பெரிய சுவாமி குரு இருக்க பயமேன்

 

அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி

(செட்டியாபத்து)
🦚🙏🏼🦚 பெரிய சுவாமி 🐅🙏🏽🐅
🙏🏻குரு இருக்க பயமேன்🙏🏾
🪻🙏🪷 ஹரி ஓம் ராமானுஜா யா 🌹🙏🏿🌻

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...