Saturday, January 25, 2025

அடுக்கம் வழியாக ஒரு முறை கொடைக்கானல்

 

அடுக்கம் வழியாக ஒரு முறை கொடைக்கானல் சென்று பாருங்கள்.

அற்புதமான, அழகான, ஆபத்தான பாதை. கவனமாக சென்றால் சொர்க்கம் போல இருக்கும் இந்த பாதையில் செல்லும் அனுபவம்

முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி

 தவளை கத்தினால் மழை.

🌝 அந்தி ஈசல் பூத்தால்
அடை மழைக்கு அச்சாராம்.
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.
🌝 தை மழை நெய் மழை.
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
🌝 வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்.
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு.
🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்.
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்.
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ.
🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல் .
🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு.
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
🌝 ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்.
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்.
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
🌝 தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்.
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்.
🌝 விதை பாதி வேலை பாதி.
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை.
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
🌝 கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது.
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்.
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.
#உழவே_தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.
கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட
முடியாது என்பது!!
ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.
நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...
#முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..
அனைவரும் அறிந்துகொள்ள #பகிருங்கள்...❣️

Thursday, January 23, 2025

Thursday, January 16, 2025

நிலக்கடலை சக்கரையை கொல்லும்

 



May be an image of baked beans




















நிலக்கடலை

சக்கரையை கொல்லும்
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.
நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.
கொழுப்பை குறைக்கும்:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

ஒச்சாப்பு கல்லு எனும் பண்டைய நாகர் குடியிருப்பு

 

ஒச்சாப்பு கல்லு எனும் பண்டைய நாகர் குடியிருப்பு, இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் நாகர்

அனுராதபுரம் மாவட்டத்தில் ஒச்சாப்பு கல்லு எனும் இடம் அமைந்துள்ளது. வில்பத்து எனும் அடர்ந்த காட்டின் மத்தியில் ஒச்சாப்பு கல்லு அமைந்துள்ளது. வில்பத்து காட்டின் மத்தியில் ஓடும் மோதரகம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிலாமடு தேக்கம் எனும் சிறிய அணைக் கட்டின் தெற்குப்பக்கத்தில் சுமார் 3 கி.மீ தூரத்தில் இவ்விடம் காணப்படுகிறது.
வில்பத்து இலங்கையின் முதலாவது மிகப்பெரிய வனவிலங்குகள் சரணாலயமாகும். இது 1317 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட அடர்ந்த வனமாகும். இலங்கையில் அதிகளவில் சிறுத்தைப் புலிகள் இங்குதான் வாழ்கின்றன. பல புராதன வழிபாட்டிடங்கள் அமைந்துள்ள இவ்வனம் 1905 ஆண்டு ஆங்கிலேயரால் வனவிலங்குகள் சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வனம் 1938 ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது பெருங்கற்கால மையம் என அழைக்கப்படும் பொம்பரிப்பு என்னுமிடம் இவ்வனத்தில் தான் அமைந்துள்ளது. இவ்வனத்தில் மொத்தமாக பண்டைய வழிபாட்டுப் பாரம்பரியமிக்க 32 இடங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று தான் ஒச்சாப்பு கல்லு என்னுமிடமாகும். இங்கு மொத்தமாக 106 வில்லுக் குளங்கள் அமைந்துள்ளன. இதனால் தான் இப்பிரதேசம் வில்பற்று அல்லது வில்பத்து எனப் பெயர் பெற்றது. இவற்றில் பிரதான வில்லுக் குளங்கள் மற்றும் இடங்கள் ஆகியன தூய தமிழ்ப் பெயர்களைக் கொண்டவையாகும்.
அவையாவன: இலவன் குளம், மாக்கிளான் மடு, நடு நாவல், மூலைக் கண்டல் வெளி, பொன்பரப்பி, கருவாட்டுக் குடா, இலந்தை மோட்டை, தலை வில்லு, கொம்பன் சாய்ந்த வில்லு, உடும்பு வில்லு, செங்கட்படு வில்லு, பணிக்கர் வில்லு, ஆலம் வில்லு, வீரக்குட்டி வில்லு, ஆத்தாள் வில்லு, மறிக்கரம் வில்லு, காஞ்சுரம் வில்லு, கட்டெறும்பு வில்லு, கொக்காரி வில்லு, நல்ல தண்ணி வில்லு, சின்ன உப்பு வில்லு, பெரிய உப்பு வில்லு, பெரிய நாகவில்லு, சின்ன நாகவில்லு, வண்ணாத்தி வில்லு, மகிழம் வில்லு, இரணை வில்லு, தம்மனா வில்லு, நமதா வில்லு, குமுட்டு வில்லு, குருத்துப் பாண்டி வில்லு, பெரிய வில்லு, காளி வில்லு, மரை வில்லு, மண வில்லு, மயில் வில்லு, காய மோட்டை வில்லு, அமுதவல்லி வில்லு, தங்க வில்லு, குமிழ வில்லு, கார வில்லு, பொருப்பன் வில்லு, நாவலடி ஊற்று, மாணிக்கப்பளை ஊற்று, பட்சி ஓடை, மதுர ஓடை, பலகைத் துறை, மட்டி மடு, மாவலங்கை மோட்டை, கொக்கு மோட்டை, கட்டக் கண்டல் குளம், பட்டி வெளிக் குளம், குதிரை மலை, குதிரை மலை முனை, ஒரு சாய்ப்புக் கல் ஆகிய இடங்களாகும்.
இவற்றைத் தவிர நெலும் வில்லு, தெமட்ட வில்லு, லுமா வில்லு, திம்பிரி வில்லு, கும்புக் வில்லு, குடா பெதஸ்ஸ வில்லு, மஹா பெதஸ்ஸ வில்லு ஆகிய வில்லுக் குளங்களும் இங்கு உள்ளன. இப்பெயர்களில் பொன்பரப்பி என்பது பொம்பரிப்பு எனவும், ஒரு சாய்ப்புக் கல்லு ஒச்சாப்பு கல்லு எனவும் திரிபடைந்துள்ளன. இங்குள்ள கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ள முக்கியமான பாறை ஒரு பக்கமாகச் சாய்ந்து காணப்படுவதால் இப்பெயர் உருவாகியிருக்கலாம். ஒச்சாப்பு கல்லு வில்பத்து காட்டின் மத்தியில் அமைந்துள்ளதால் இங்கு செல்வதற்கு குறிப்பிட்ட நிரந்தரமான, சீரான பாதை எதுவும் கிடையாது. ஆனால் ஐந்து வழிகளின் ஊடாக இவ்விடத்திற்குச் செல்லலாம்.
புத்தளம் நகரில் இருந்து வடக்கு நோக்கி வில்பத்து காட்டின் ஊடாக மன்னாருக்குச் செல்லும் வீதியில், கலா ஓயா, பொம்பரிப்பு ஆறு, பொம்பரிப்பு, பெரிய உப்பு வில்லு, பெரிய வில்லு, பெரிய நாக வில்லு, மலை வில்லு ஆகியவற்றைக் கடந்து வில்பத்து காட்டின் வட எல்லையில் ஓடும் உப்பாறு எனும் மோதரகம் ஆற்றையும் கடந்து, சிறிது தூரம் சென்றதும் வலது பக்கமாகச் செல்லும் காட்டுப் பாதையில் வேப்பம் வில்லுக்குச் செல்லும் பாதை வழியாக சுமார் 8 கி.மீ பயணம் செய்து, கொக்குமோட்டை என்னுமிடத்தில் மோதரகம் ஆற்றைக் கடந்து தெற்குப் பக்கமாக 3 கி.மீ தூரம் சென்றால், ஒச்சாப்பு கல்லை அடையலாம்.
இரண்டாவது பாதை : மன்னாரில் இருந்து தெற்கு நோக்கி நானாட்டான், அரிப்பு, சிலாவத்துறை, முள்ளிக்குளம் ஊடாக மறிச்சுக்கட்டி பழைய பள்ளிவாசலைக் கடந்ததும் இடது பக்கமாகச் செல்லும் காட்டுப் பாதை வழியாக மேலே குறிப்பிட்ட வேப்பம் வில்லு ஊடாக 8 கி.மீ பயணம் செய்து கொக்குமோட்டையில் மோதரகம் ஆற்றைக் கடந்து தெற்குப் பக்கமாக 3 கி.மீ தூரம் சென்றால் ஒச்சாப்பு கல்லை அடையலாம்.
மூன்றாவது பாதை : புத்தளத்தில் இருந்து அனுராதபுரத்துக்குச் செல்லும் வீதியில் உள்ள பஹல மஹரகஹ வெவ என்னுமிடத்தில் உள்ள வில்பத்து சந்தியில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் உள்ள ஹுனுவிலகம என்னுமிடத்தை அடைந்து, அங்கிருந்து வில்பத்து காட்டுக்குள் நுழைந்து, வீரன் சோலை, மரதன் மடு, உப்பு வில்லு ஆகிய இடங்களைக் கடந்து, அங்கிருந்து வடக்கு நோக்கி சுமார் 6 கி.மீ பயணம் செய்து ஒச்சாப்பு கல்லை அடையலாம்.
நான்காவது பாதை : அனுராதபுரத்தில் இருந்து வடமேற்கு நோக்கி அரிப்புக்குச் செல்லும் வீதியில் உள்ள ஒயா மடு, பேய் மடு, மகாவிலச்சி ஆகிய இடங்களைக் கடந்து வில்பத்து காட்டுக்குள் புகுந்து சின்னடியா வில்லு ஊடாக மகாவெவ ஆறு, மொறகொல்ல ஆறு ஆகியவற்றைக் கடந்து ஒச்சாப்பு கல்லை அடையலாம்.
ஐந்தாவது பாதை : மேலே குறிப்பிட்டுள்ள அரிப்பு பாதை வழியாக பேய் மடுவைக் கடந்து மகா விலச்சி வாயில் ஊடாக வில்பத்து காட்டுக்குள் புகுந்து, அரிப்பு வீதியில் 21 ஆவது மைல் கல் அருகில் மேற்குப் பக்கமாகச் செல்லும் காட்டுப் பாதை வழியாக தேக்கம் அணைக்கட்டை அடைந்து அங்கிருந்து மோதரகம் ஆற்றைக் கடந்து தெற்குப் பக்கமாக சுமார் 2 கி.மீ பயணம் செய்து ஒச்சாப்பு கல்லை அடையலாம்.
இத்தனை பாதைகள் இருந்தாலும் இவை அனைத்தும் சீரான, இலகுவான பாதைகள் அல்ல. மிகவும் கடினமாக, ஒரு வழிகாட்டியின் துணையுடனேயே இப்பாதைகள் ஊடாக பயணம் செய்து ஒச்சாப்பு கல்லை அடைய முடியும்.
ஒச்சாப்பு கல்லு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகர் குடியிருப்புகளில் ஒன்றாகும். இதே காலப்பகுதியில் இங்கு பொறிக்கப்பட்டுள்ள நாகர் தொடர்பான பிராமிக் கல்வெட்டுகள் இதற்குச் சான்றுகளாக அமைகின்றன. இலங்கையின் மேற்குக் கரையில் தான் பண்டைய நாக இராச்சியங்களான மாந்தை, குதிரை மலை, கல்யாணி ஆகியவை அமைந்திருந்தன. இவற்றில் குதிரைமலை இராச்சியத்திற்குட்பட்ட பகுதியில் ஒச்சாப்பு கல்லு காணப்படுகிறது.
ஒச்சாப்பு கல்லு தட்டையான பாறைகள் நிறைந்த காட்டுப் பகுதியாகும். இங்குள்ள மூன்று தட்டையான பாறைகளின் மீது வழிபாட்டுத் தலங்கள் இருந்தமைக்கான கட்டடச் சிதைவுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ள பிரதான கற்குகையின் பின்பக்கம் செவ்வக வடிவில் இருந்த ஒரு கட்டடத்தின் கருங்கல் அத்திவாரமும், அதில் சில கற்தூண்களும், இதன் அருகில் குழிக்கற்கள் சிலவும் காணப்படுகின்றன. புராதன கால செங்கட்டிகள் பரவலாகச் சிதறிக் கிடக்கின்றன.
ஒச்சாப்பு கல்லு பகுதியில் சுமார் 15 இற்கும் மேற்பட்ட இயற்கையான கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றில் பல குகைகளில் கற்புருவங்கள் வெட்டப்பட்டுள்ளன. கற்புருவங்கள் வெட்டப்பட்டுள்ள கற்குகைகளில் பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட 6 முற்கால பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேலும் இங்கு பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டில் பாறையில் எழுதப்பட்ட பிற்கால பிராமிக் கல்வெட்டு ஒன்றுமாக மொத்தம் 7 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் இரு பிராமிக் கல்வெட்டுகளில் நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னன் மற்றும் இளவரசன் கண்ணன் அல்லது கணேசன் பற்றிக் கூறும் கல்வெட்டு
ஒச்சாப்பு கல்லில் காணப்படும் முற்கால பிராமிக் கல்வெட்டு ஒன்றில் மிக முக்கியமான விடயம் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கண்ணன் அல்லது கணேசன் பற்றியதாகும்.
இக்கல்வெட்டில் “ரஜ கணச புத ரஜபுத கணச லேனே அகட்ட அனகட சட்டுதிச சகச” என எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள கணச எனும் சொல்லை ‘கண்ண’ என பேராசிரியர் எஸ். பரணவிதான கூறியுள்ளார். அதேசமயம் இதை ‘கணேச’ எனவும் பொருள் கொள்ளலாம். இதன்படி இவ்வாக்கியத்தின் பொருள் “அரசன் கண்ணன் அல்லது கணேசனின், அரச புதல்வன் கண்ணன் அல்லது அரச புதல்வன் கணேசனின் குகை” என்பதாகும். இக்கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட பிரதி கிடைக்கவில்லை.
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விபரத்தின்படி கண்ணன் அல்லது கணேசன் எனும் பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்துள்ளான் என்பதும், அவனுக்கு கண்ணன் அல்லது கணேசன் என இதே பெயரைக் கொண்ட மகனும் இருந்துள்ளான் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் மகாவம்சம் கூறும் இலங்கை மன்னர்களின் பட்டியலில் கண்ணன் அல்லது கணேசன் எனும் பெயரில் மன்னர்கள் யாரும் குறிப்பிடப்படவில்லை. எனவே கல்வெட்டுக் குறிப்பிடும் கண்ணன் அல்லது கணேசன் என்பவன் இப்பிரதேசத்தின் சிற்றரசனாக இருக்கவேண்டும். எனவே, வில்பத்து எனும் காடுகள் நிறைந்த வடமேற்கு இலங்கைப் பிரதேசத்தை 2300 ஆண்டுகளுக்கு முன் கண்ணன் அல்லது கணேசன் எனும் பெயர் கொண்ட தமிழ்ச் சிற்றரசன் ஆட்சி செய்துள்ளான் என்பதே இக்கல்வெட்டுக் கூறும் செய்தி மூலம் நாம் தெரிந்து கொள்ளும் உண்மையாகும்.
நாகனின் குகை பற்றிய கல்வெட்டு
ஒச்சாப்பு கல்லு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகளில் இரண்டு நாகர் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுகளாகும். இவ்விரண்டில் ஒன்று மட்டுமே முற்கால பிராமிக் கல்வெட்டாகும். அக்கல்வெட்டில் மொத்தமாக 5 எழுத்துகள் மட்டுமே காணப்படுகின்றன. அதன் விவரங்கள் பின்வருமாறு:
“நாகஹ லேனே”
இதன் பொருள், “நாகனின் குகை” என்பதாகும். ஆங்கிலத்தில் இது “The cave of Naga” எனப் பொருள்படும். இக்கல்வெட்டுக் காணப்படும் கற்குகை சங்கத்தார்க்கு தானமாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட பிரதியும் கிடைக்கவில்லை.
நாக மகாராஜன் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு
ஒச்சாப்புகல்லில் நாகர் பற்றிக் குறிப்பிடும் இரண்டாவது கல்வெட்டு பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட பிற்கால பிராமிக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு பொ.ஆ. 167 முதல் 186 வரையான காலப்பகுதியில் அநுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆட்சி செய்த கனிட்ட தீசன் எனும் மன்னன் காலத்தில் பொறிக்கப்பட்டதாகும்.
எட்வர்ட் முல்லர் 1883 இல் இக்கல்வெட்டுப் பற்றி முதன்முதலாக தனது நூலில் குறிப்பிட்டார். அவருக்குப்பின் ஹென்றி பார்க்கர் 1909 ஆம் ஆண்டு இக்கல்வெட்டு பற்றிய விவரங்களையும், கல்வெட்டின் பிரதியையும் தனது நூலில் பதிவு செய்தார். அதன் பின்பு கொட்ரிங்டன் இக்கல்வெட்டுப் பற்றி தனது ஆய்வுக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். 1941 ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களம் இக்கல்வெட்டைப் படி எடுத்து பதிவு செய்தது.
இக்கல்வெட்டு பிரதான கற்குகையின் பின்பக்கம் உள்ள கற்பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. பாறையில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ள பகுதி 7 அடி 8 அங்குல நீளமும், 2 அடி 6 அங்குல அகலமும் கொண்டதாகும். 5 வரிகளில் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டின் விவரங்கள் பின்வருமாறு:
சித்தம் நாக மஹாரஜஹ புத மலி திச ம
ஹாரஜக மகன-நகரயஹி வவளவி மிதயஹ சுடதக வாவிய க
ஜபோ அவியிக மதக அவியிக தலவன அவியிக மே எதக வவியி
போஜியபதி கர கடய குப விஹரகெஹி ப[க] செடஹிதெல ஹுட முல கட[முத] வெடி
ய ஜின படி சதரிய கொடு தினி
கல்வெட்டில் உள்ள வாசகங்களின் பொருள், “மகாராஜா நாகனின் மகனான மகாராஜா கனிட்ட தீசன், மகன நகரத்தில் வாழும் வவளவி மித்தயனின் குடதக்க வாவி, ஜபோ வாவி, மதக்க வாவி, தலவன வாவி ஆகிய குளங்களின் மூலம் கிடைக்கும் மேலதிகமான வருமானத்தில் செலுத்தவேண்டிய தொகையை, குபே விகாரையில் உள்ள ஐந்து தூபிகளுக்கும் தேவையான எண்ணெய் மற்றும் ஏனைய செலவீனங்களுக்காகவும், தூபிகளின் உச்சியில் உள்ள சத்ர கல்லுக்கு கம்பளம் வாங்கி விரிப்பதற்காகவும் வழங்க வேண்டும் என்பதாகும்.

விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்

 *விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்: முழு பட்டியல் இதோ.*

சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் அதிகரித்து வருகின்றன.
ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டில், சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 80 வது இடத்தில் உள்ளது.
62 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
*அந்த நாடுகள்*
அங்கோலா
பார்படாஸ்
பூடான்
பொலிவியா
பிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள்
புரூண்டி
கம்போடியா
கேப் வெர்டே தீவுகள்
கொமோரோ தீவுகள்
கூக் தீவுகள்
டிஜிபவுட்டி
டொமினிகா
எல் சால்வடார்
எத்தியோப்பியா
பிஜி
கபோன்
கிரீனடா
கினியா பிசாவு
ஹைதி
இந்தோனேஷியா
ஈரான்
ஜமைக்கா
ஜோர்டான்
கஜகஸ்தான்
கென்யா
கிரிபாட்டி
லாவோஸ்
மகாவோ
மடகாஸ்கர்
மலேஷியா
மாலத்தீவுகள்
மார்ஷல் தீவுகள்
மொரிஷியானா
மொரிஷியஸ்
மான்ட்செரட்
மொசம்பிக்
மியான்மர்
நேபாளம்
நையூ
ஓமன்
பலாவு தீவுகள்
கத்தார்
ருவாண்டா
சமோவா
செனகல்
சீசெல்ஸ்
சியாரா லியோன்
சோமாலியா
இலங்கை
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
செயின்ட்லூசியா
செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினடின்ஸ்
தான்சானியா
தாய்லாந்து
தைமூர்
டோகோ
டிரினாட் மற்றும் டோபாகோ
துனிஷியா
துவாலு
வனுடு
ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும்.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...