Monday, May 20, 2024

தலையெழுத்தையே மாற்ற வல்லது.

தலையெழுத்தையே மாற்றவல்லது சிவபுண்ணியம்

அவர் ஒரு பிரபல ஜோதிடர்.
அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை
சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. 
அந்தளவு
ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர்.

எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்து கொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள்
வருவார்கள்.

தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.

“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். 
கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. 
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. 
அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று
தெரியவில்லை. 
நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா?
என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.

ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத்
தொடங்கினார். 
சோழிகளை உருட்டிப் போட்டார். கட்டங்களாய்
ஆராய்ந்தார். 
ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.

பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும்
முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று
விரிவாக ஆராய வேண்டி இருக்கிறது.

எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை
இதே நேரத்திற்கு வாருங்கள். 
நான் உங்களுக்கு அனைத்தையும்
சொல்லிவிடுகிறேன்” என்றார்.

“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு
எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும் போது கொடுங்க போதும்…”

“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”
தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அங்கு வந்த ஜோதிடரின் மூத்த மகள், “அப்பா, ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க?
இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. 
முழுக்க முழுக்க
வர்றவங்களுக்கு ஜாதகம்தான் பார்த்து பலன் சொல்லப் போறேன்னு
சொன்னீங்க?” 
என்று கேட்டாள்.

அதற்கு ஜோதிடர், “அம்மா, அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்
போகிறது. 
அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத்தான். 
மேலும் சோழி உருட்டி கூட பார்த்து விட்டேன். 
பரிகாரம் செய்வதற்கு கூட
அவருக்கு அவகாசம் இல்லை. 
இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை.
அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்
பாவம்” என்றார்.

இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரை நோக்கி வயல்
வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. 
சிறிது
நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை
கொட்டியது.

வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த
தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். 
சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை
நோக்கி ஓடினான் தொழிலாளி.

அது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி. 
மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். 

“ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று
சிதிலமடைந்து காணப்படுகிறதே. 
நான் மட்டும் ஏழையாக இல்லாமல்
பண வசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம்
செய்து விடுவேன்’ என்று நினைத்துக் கொண்டார்.

அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான்
புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக் கொண்டார். 
கோபுரம்,ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். 
கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து
கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை
வணங்குவது போல் தனது சிந்தனையை ஓட விட்டார்.

அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்த
போது, அங்கே அவரது தலைக்கு மேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து
அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.

இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து
அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது.
அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். 
நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

அப்போது சரியாக இரவு ஏழரை மணி. வீட்டுக்கு சென்று தன் மனைவி
மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.

மறுநாள் மாலை வழக்கம் போல ஜோதிடரை சந்திக்க சென்றார்.
தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
அவரை வரவேற்று அமர வைத்து விட்டு ஒரு வேளை தான் சரியாக பலன்
கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின்
ஜாதகத்தை ஆராய்ந்தார்.

ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். 
அவர்
கணக்கு சரியாகவே இருந்தது. 
பின் அவர் எப்படி பிழைத்தார்?

இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்க வேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம்
குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இவரோ பரம ஏழை. 
அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும்
அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடியும்? 
அதுவும் ஒரு இரவுக்குள்? 
இப்படி பலவாறு சிந்தித்த படி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம்
கேட்டார்.

ஜோதிடர் தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு
ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.

மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர்
அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும்,
பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான்
கருதியதாகவும் கூறினார்.

ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. 
இந்த தொழிலாளி
மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே
அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்து கொண்டார்.

“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். 
இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை
வழியனுப்பி வைத்தார்.

ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது
விதியை மாற்ற வல்லவை. 
எனவே எப்போதும் நல்லதையே நினைக்க வேண்டும்.
அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும்
இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி
அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.

நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும்.

சிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது.
ஆனால், தலையெழுத்தையே மாற்ற வல்லது. 
அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடைய வேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த சிவபுண்ணியம் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றி விட்டது.

இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும்
என்ற விதியை மாற்றுவது. 

தலைக்கு வருவதை தலைப் பாகையோடு போகச் செய்யும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு.
🙏#சிவமேசெல்வம்🙏

Wednesday, May 15, 2024

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

 நாம ஏன் சோணகிரியா இருக்கோம்?

தொத்த பாடியா இருக்கோம்?
பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது?
உணவு முறையும் ஒரு காரணம்.
சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளின் உணவு பழக்கம்!
மன்னர்கள் குடிமக்களின் உணவுகளில் வித்தியாசம் இல்லை.
சோளம், கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி அரிசி உணவுகளைத் தான் உண்டிருக்கிறார்கள்.
இவையே முதன்மையான உணவு.
இன்று நாம் சிறுதானியம் என சொல்லும் பயிறு வகைகள் அருந்தானியம் என்றழைத்தனர். அதிகம் அதனையே உண்டனர்.
செய்முறை விளக்கம் தெரியவில்லை.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவையே ஐந்திணைகள். இதில் வாழ்ந்த மக்கள் அந்த இடத்தின் தன்மைக்கேற்ப உணவு முறைகளை பின்பற்றி வந்தனர். குறிஞ்சியில் உள்ள மக்கள் தேன், திணை போன்ற உணவுகளை உண்டனர்.
முல்லை மக்கள் இறைச்சி, பச்சை காய்கறிகள் போன்றவற்றையே உணவாக பயன்படுத்தினர்.
மருத நில மக்கள் அரிசி, கேழ்வரகு, திணை, கம்பு, சோளம் போன்றவற்றை உண்டு களித்தனர்.
நெய்தலில் உள்ள மக்கள் அதிக கடல் உணவுகளையே சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.
பாலை நிலத்தினர் இறைச்சி, மீன், போன்றவற்றையே பிரதான உணவாக உண்டார்கள்.
இட்லியும் தோசையும் அப்போதே இருந்திருக்கிறது.
இது போக கோதுமை ரொட்டி உண்டிருக்கிறார்கள்.
கறி வகைகளில்
ஆடு, கோழி, மீன், பன்றியும் உண்டிருக்கிறார்கள்.
இதில் பாண்டியர்கள் மீன் தவிர மற்ற உணவை உண்பர்.
அயல் தேசத்தினர் வந்தால் கொழுத்த பன்றியை நெய்யில் பொரித்து இளந்திரையன் தொண்டைமான் பரிமாறியதாகவும் அறியப்படுகிறது.
சோழ நாட்டு மக்கள் தேனையும் கிழங்கையும் அதிகம் உண்டனர்.
பிற நிலத்தார்க்கு இதனை தந்து
மீன், நறவை, நெய் இவற்றை பண்டமாற்றில் வாங்கிச் செல்வர்.
நன்னன் என்கிற குறுநில மன்னன் ஆண்ட சவ்வாது மலைப் பகுதியில் அடிவாரத்தில் வாழ்ந்த மக்கள் நெய்யில் வெந்த இறைச்சியுடன் தினையினை உண்டதாக குறிப்புகள் கிடைக்கின்றன.
இவை மட்டுமின்றி
உடும்பின் இறைச்சி, பன்றி இறைச்சி, மான் இறைச்சியையும் உண்டனர்.
நெல்லில் சமைத்த கள்ளையும், மூங்கில் குழையினுள் முற்றிய கள்ளையும் பருகினர்.
மூங்கில் அரிசிச் சோற்றுடன் பலாக் கொட்டை, மா, புளிநீர், மோர் கொண்டு தயாரித்த குழம்பையும் உண்டதாக அறிகிறோம்.
நிறைய மக்கள் வீட்டில் சமைக்காமல் மன்னர்கள் கோவில்களில் வழங்கும் அன்னதான உணவு வகைகளை உண்டதாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் உண்பதை பிறர் காண இயலாத வண்ணம் திரைச்சீலைகளால் மறைக்கும் வழக்கமும் இருந்தது.
காலை வேளையில் தோட்ட வேலைக்குப் போகக்கூடிய தமிழர்கள் வெந்தயக் களி, உளுத்தங்களி, கேழ்வரகுக் களி, சோளக்களி , கம்புக்களி உண்டு வந்தனர். களி என்பது திடப்பொருள் உணவாகும். இந்த மாதிரியான களியை உட்கொண்டு தோட்டத்திற்கு செல்லும்போது அவர்களால் கடுமையான வேலைகளைக் கூட செய்ய முடிந்தது.
போர் வீரர்களுக்கும் இதுவே உணவு.
மதிய வேளைகளில்
முழு உணவு உண்டனர்.
அப்போதும்
அரிசி சோறு கிடையாது.
பொங்கல், ஆடி பண்டிகைகளின் போது தான்
அரிசி சமையல்.
மற்றபடி வருடம் முழுவதும்
சிறுதானியம் எனப்படும் அருந்தானியங்களையும்
காய்கறிகள், இறைச்சிகள் கொண்ட உணவு வகைகளை சமைத்தனர்.
இலங்கையில் இன்னும் பல பகுதிகள்ல
அரிசி என்பதே ஆடம்பர உணவாவும், பண்டிகை கால உணவாவும் இருக்கறதா முந்தி படிச்சேன்.
பழங்கால தமிழர்கள் உணவு முறை ஆராயறப்ப
நாமும் அரிசி உணவை தவிர்ப்பது நல்லது.
இடியாப்பம், குழி பணியாரம், புட்டு(இட்லி), தோசை எல்லாமே சாப்ட்ருக்காங்க. ஆனா
அரிசில பண்ணல, கம்பு, தினை, சாமை, கேழ்வரகுல பண்ணிருக்காங்க.
எப்டி அரிசி சோறு பண்டிகை கால உணவா இருந்து தினசரி உணவா மாறுச்சோ அந்த மாதிரி
30 வருசம் முன்ன பண்டிகை கால உணவா இருந்த பிரியாணி இப்ப பலருக்கு தினசரி உணவா அல்லது வாரம் 3 முறை உணவா மாறிட்டு வருது.
நாமே கவனிச்சிருப்போம்.
பத்து பதினஞ்சு வருசம் முன்ன இவ்ளோ பிரியாணி கடைகள் இல்ல.
இப்ப தெருவுக்கு ஒண்ணு ரெண்டு பிரியாணி கடை வந்துருச்சு.
அப்ரம்
பழங்கால தமிழர்கள்
நெய், நல்லெண்ணை மட்டுமே சமையலுக்கு பயன் படுத்தி இருக்காங்க.
நாம சன்ப்ளவர் ஆயில், பாமாயில்னு உடம்பை கெடுத்துட்டு் இருக்கோம்.
வெறும் அரிசி சோறா தின்னுட்டு,
சுகர் வந்திச்சி
பிகர் போயிருச்சுனு
புலம்பிட்டு இருக்கோம்.
உணவு முறைல முடிஞ்ச அளவு
மாற்றம் பண்ணுங்க.

Wednesday, April 24, 2024

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை...

ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​
சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர் நன்றாக உடையணிந்திருப்பதைக் கவனித்தார்.  

இந்த மனிதன் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும், நான் அவரிடம் கேட்டால் அவர் நிச்சயமாக நல்ல பணம் தருவார் என்று அவர் நினைத்தார்.  எனவே அவர் சென்று அந்த மனிதரிடம் பிச்சை கேட்டார்.

அந்த மனிதர் பிச்சைக்காரனைப் பார்த்து, நீங்கள் எப்பொழுதும் பிச்சையெடுத்துக் கொண்டே இருப்பீர்கள், யாரிடமாவது ஏதாவது கொடுக்கிறீர்களா?"

பிச்சைக்காரன், "ஐயா, நான் ஒரு பிச்சைக்காரன், நான் மக்களிடம் பணம் மட்டுமே கேட்க முடியும், நான் எப்படி யாருக்கும் எதையும் கொடுக்க முடியும்?"

அந்த மனிதர் பதிலளித்தார், "நீங்கள் யாருக்கும் எதையும் கொடுக்க முடியாதபோது, ​​​​அப்படி கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நான் ஒரு தொழிலதிபர் மற்றும் பரிவர்த்தனைகளை மட்டுமே நம்புகிறேன் - என்னிடம் கொடுக்க ஏதாவது இருந்தால், என்னால் கூட முடியும்.  பதிலுக்கு ஏதாவது கொடுங்கள்."

அப்போது, ​​ரயில் ஒரு ஸ்டேஷனுக்கு வந்தது, தொழிலதிபர் இறங்கிக் கிளம்பினார்.

பிச்சைக்காரன் அந்த மனிதன் சொன்னதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.  அவனுடைய வார்த்தைகள் எப்படியோ பிச்சைக்காரனின் இதயத்தை எட்டின.

நான் யாருக்கும் எதையும் கொடுக்க முடியாததால், பிச்சையில் எனக்கு அதிக பணம் கிடைக்காது என்று அவர் நினைக்கத் தொடங்கினார்.  ஆனால் நான் ஒரு பிச்சைக்காரன், நான் யாருக்கும் எதையும் கொடுக்க கூட தகுதியற்றவன்.  ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் எதையும் கொடுக்காமல் மக்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பேன்.

ஆழ்ந்து யோசித்த பிச்சைக்காரன், தனக்கு பிச்சை எடுக்கும் போது ஏதாவது கிடைத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒன்றை கண்டிப்பாக கொடுப்பேன் என்று முடிவு செய்தான்.

ஆனால் இப்போது கேள்வி என்ன 
என்றால், அவர் பிச்சை எடுப்பதற்கு ஈடாக மற்றவர்களுக்கு என்ன கொடுக்க முடியும்?

நாள் முழுவதும் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தது, ஆனால் அவரது கேள்விக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை.

மறுநாள் ஸ்டேஷன் அருகே அமர்ந்திருந்தபோது, ​​ஸ்டேஷனைச் சுற்றியிருந்த செடிகளில் பூத்திருந்த சில பூக்களில் அவன் பார்வை பட்டது.  பிச்சைக்கு ஈடாக சில பூக்களை மக்களுக்கு ஏன் கொடுக்கக்கூடாது என்று அவர் நினைத்தார்.

அவர் இந்த யோசனையை விரும்பினார் மற்றும் அங்கிருந்து சில பூக்களை பறித்துக்கொண்டு ரயிலில் பிச்சை 
எடுக்க சென்றார்.

யாராவது அவருக்கு தானம் செய்யும் போதெல்லாம், அவர் அவர்களுக்கு சில பூக்களைக் கொடுப்பார்.  அந்த மலர்களை மக்கள் தங்களிடம் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டனர்.

இப்போது பிச்சைக்காரன் தினமும் பூக்களைப் பறித்து அந்த பூக்களை பிச்சைக்கு ஈடாக மக்களுக்கு 
விநியோகம் செய்கிறான்.

இப்போது நிறைய பேர் அவருக்கு தானம் செய்ய ஆரம்பித்து விட்டனர் என்பதை சில நாட்களிலேயே உணர்ந்தார்.  

ஸ்டேஷன் அருகே உள்ள பூக்களை எல்லாம் பறித்து வந்தார்.  அவரிடம் பூக்கள் இருக்கும் வரை பலர் அவருக்கு தானம் செய்து வந்தனர்.  

ஆனால் அவனிடம் இன்னும் பூக்கள் இல்லாதபோது, ​​அவனுக்கு அதிகம் கிடைக்காது.  மேலும் இது ஒவ்வொரு 
நாளும் தொடர்ந்தது.

ஒரு நாள் அவர் பிச்சை எடுத்தபோது, ​​அதே தொழிலதிபர் ரயிலில் அமர்ந்திருப்பதைக் கண்டார், அதன் காரணமாக அவர் பூக்களை விநியோகிக்கத் தூண்டப்பட்டார்.

பிச்சைக்காரன் உடனே அவனிடம் கை நீட்டி, இன்று உனக்கு தானமாக கொடுக்க என்னிடம் சில பூக்கள் உள்ளன" என்றார்.

அந்த மனிதன் அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தான், பிச்சைக்காரன் அவனுக்கு சில பூக்களை கொடுத்தான்.  அந்த நபர் அவரது யோசனையை மிகவும் விரும்பினார் மற்றும் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

அடடா! இன்று நீயும் என்னைப் போல் வியாபாரி ஆகிவிட்டாய்" என்றார்.  பிச்சைக்காரனிடம் பூக்களை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனில் இறங்கினான்.

ஆனால் மீண்டும் ஒருமுறை, அவன் வார்த்தைகள் பிச்சைக்காரனின் இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.  

அந்த மனிதர் சொன்னதையே 
திரும்பத் திரும்ப நினைத்துக் 
கொண்டு சந்தோஷப்பட ஆரம்பித்தார்.

அவரது கண்கள் இப்போது பிரகாசிக்கத் தொடங்கின, அவர் தனது வாழ்க்கையை மாற்றக்கூடிய வெற்றிக்கான திறவுகோல் இப்போது கிடைத்திருப்பதாக உணர்ந்தார்.

உடனே ரயிலில் இருந்து இறங்கி உற்சாகமாக வானத்தைப் பார்த்து, மிகவும் உரத்த குரலில், “இனி நான் பிச்சைக்காரன் இல்லை, நான் இப்போது தொழிலதிபர், 
அந்த மனிதரைப் போல நானும் ஆகலாம், பணக்காரனாகவும் ஆகலாம்.  ”

அவரைப் பார்த்ததும், இந்த பிச்சைக்காரனுக்கு பைத்தியம் பிடித்திருக்கலாம் என்று நினைத்தார்கள்.

மறுநாள் முதல் அந்த பிச்சைக்காரன் அந்த நிலையத்தில் மீண்டும் தோன்றவே இல்லை.......

 நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஸ்டேஷனில் இருந்து சூட் அணிந்த இரண்டு ஆண்கள் பயணம் செய்தனர்.  

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபோது, ​​ஒருவரை ஒருவர் கைகூப்பி வணங்கி, "என்னை அடையாளம் தெரிகிறதா?"

மற்றவர், "இல்லை! ஒருவேளை நாம் முதல்முறையாகச் சந்திக்கலாம்" என்று பதிலளித்தார்.

முதலாமவர் மறுபடியும் சொன்னார், 
சார், நினைச்சுப் பாருங்க, நாம முதல் தடவையல்ல, மூணாவது தடவை சந்திக்கிறோம்".

இரண்டாவது நபர், "சரி, எனக்கு நினைவில்லை. இதற்கு முன் எப்போது சந்தித்தோம்?"

இப்போது முதல் நபர் சிரித்துக்கொண்டே, இதற்கு முன்பு ஒரே ரயிலில் இரண்டு முறை சந்தித்திருக்கிறோம், வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று முதல் சந்திப்பில் சொன்ன அதே பிச்சைக்காரன் நான், இரண்டாவது சந்திப்பில் நான் யார் என்று சொன்னீர்கள்.  நான்."

இதன் விளைவாக, இன்று நான் மிகப் பெரிய பூ வியாபாரி, அதே வியாபாரம் தொடர்பாக வேறு ஊருக்குச் செல்கிறேன்."

முதல் சந்திப்பிலேயே இயற்கையின் விதியைச் சொன்னீர்கள்.அதன் படி நாம் ஒன்றைக் கொடுத்தால்தான் நமக்கு ஒன்று கிடைக்கும்.

இந்த பரிவர்த்தனை விதி உண்மையில் வேலை செய்கிறது, நான் அதை நன்றாக உணர்ந்தேன்.

ஆனால் நான் எப்போதும் என்னை ஒரு பிச்சைக்காரனாகவே நினைத்துக் கொண்டேன், அதற்கு மேல் உயர நினைத்ததில்லை.

நான் உங்களை இரண்டாவது முறை சந்தித்தபோது, ​​நான் ஒரு தொழிலதிபராக மாறிவிட்டேன் என்று சொன்னீர்கள்.  உங்களுக்கு நன்றி, அன்று முதல், எனது பார்வை மாறி, இப்போது நான் ஒரு தொழிலதிபராக மாறிவிட்டேன்.

நான் இனி பிச்சைக்காரன் அல்ல.
தன்னை அறிதல் என்ன ? என்பதை
உணர்ந்து கொண்டவன்.

பிச்சைக்காரன் தன்னைப் பிச்சைக்காரனாகக் கருதும் வரை, 
அவன் பிச்சைக்காரனாகவே இருந்தான், அவன் தன்னை ஒரு வணிகனாகக் கருதிய போது, ​​அவன் ஒரு வணிகனாகவே மாறினான்.

நாம் எதை நம்புகிறோமோ 
அதுவாக மாறுவோம்..

Sunday, April 21, 2024

துத்தப் பிரதோஷம்


*20. துத்தப் பிரதோஷம்*

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்

நவக்கிரகப் பிரதோஷம்



*19. நவக்கிரகப் பிரதோஷம்*

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்

அஷ்ட திக் பிரதோஷம்


*18. அஷ்ட திக் பிரதோஷம்*

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்

சட்ஜ பிரபா பிரதோஷம்


*17. சட்ஜ பிரபா பிரதோஷம்*

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்

கந்தப் பிரதோஷம்



*16. கந்தப் பிரதோஷம்*

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்

அட்சரப் பிரதோஷம்


*15. அட்சரப் பிரதோஷம்*

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்

பிரம்மப் பிரதோஷம்


*14. பிரம்மப் பிரதோஷம்*

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்

திரிகரண பிரதோஷம்


*13. திரிகரண பிரதோஷம்*

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது

அர்த்தநாரி பிரதோஷம்



*12. அர்த்தநாரி பிரதோஷம்*

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்

ஏகாட்சர பிரதோஷம்


*11. ஏகாட்சர பிரதோஷம்*

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

உத்தம மகா பிரதோஷம்


*10. உத்தம மகா பிரதோஷம்*

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்

மகா பிரதோஷம்



மகா பிரதோஷம்*

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...