Saturday, February 22, 2025

வண்டி எண் 17315 வாஸ்கோடகாமா இருந்து வேளாங்கண்ணி

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 17315 வாஸ்கோடகாமா இருந்து வேளாங்கண்ணி திங்கள் கிழமையில் அன்று வாராந்திர ரயில் உள்ளது வாஸ்கோடகாமா :9:00Am மட்காவ்:9:30Am சன்வெருடம் சர்ச் :9:49Am குலேம்:10:15Am கேஸ்டில் ராக் :11:30Am லோண்டா சந்திப்பு :12:10pm தார்வாடு:1:38pm ஹூப்ளி:2:20pm ஆவேரி:3:58pm ரனேபென்னுரு:4:29pm தாவண்கரே:5:03pm பிரூர்:6:30pm அர்சிகெரே:7:20pm திபடூர்:7:46pm தும்கூர்:9:18pm சிக்கபானவாரா:10:13pm பனஸ்வடி:11:11pm SMVT பெங்களூரு :11:15pm கிருஷ்ணராஜபுரம்:11:36pm பங்காரப்பேட்டை:12:33Am சேலம் :4:02Am ஈரோடு :5:20Am கரூர் :6:28Am திருச்சிராப்பள்ளி :8:10Am தஞ்சாவூர் :9:28Am திருவாரூர் :10:23Am நாகப்பட்டினம் :11:40Am வேளாங்கண்ணி :12:25pm குறிப்பு (ஏப்ரல் இரண்டாம் வரை வேளாங்கண்ணி - வாஸ்கோ - வேளாங்கண்ணி ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்.

ரயில் எண் 17315 வாஸ்கோ டா காமா - வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ், 14.04.2025 வரை மட்காவ் ஜங்ஷன் - ஈரோடு ஜங்ஷன் இடையே மங்களூரு ஜங்ஷன் - ஷோரணூர் வழியாக திருப்பிவிடப்படும். இதனால் இந்த ரயில் சான்வோர்டெம், குலெம், காஸ்ட்ல் ராக், லோண்டா, தார்வார், ஹுப்பள்ளி, ஹாவேரி, ராணிபென்னூர், தாவணகெரே, பிருர், அர்சிக்கேரே, டிப்டூர், தும்கூர், சிக்கபனவரா, பனஸ்வாடி, எஸ்எம்வி.டி. பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்கரபேட்டை மற்றும் சேலம் ரயில் நிலையங்களை தவிர்க்கும்.)
தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஜாதிக்காய் பொடியை

 ஜாதிக்காய் பொடியை அரை கிராம் அளவாக பாலில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளையாக சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு, நிணக்கழிச்சல் ஆகியவை தீரும் விந்திறுகும் உடல் வெப்பகற்றும் இரைப்பை ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும் மன மகிழ்ச்சியை அளிக்கும் நடுக்கம், பக்கவாதம் ,ஒக்காளம் ஆகியவற்றை போக்கும் .சிறு அளவில் உண்டு வர செரிமான திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும். அதிக அளவில் உண்டால் மயக்கம்தரும்.

சாதிக்காய் சுக்கு வகைக்கு 20 கிராம் சீரகம் 50 கிராம் இவற்றை மென்மையாக பொடித்து அரை கிராம் கொடியில் சிறிது சர்க்கரை கலந்து உணவுக்கு முன் சாப்பிட்டு வர வயிற்று வாயு அகன்று செரிமானத் திறன் மிகும். .

நாத பொடி-முழுமையான தீர்வு

 நாத பொடி-முழுமையான தீர்வு : மூலிகை கலவையில் உள்ள மூலிகைகள்

தண்ணீர்விட்டான் கிழங்கு ,மகா வில்வம் ,முருகை பூ ,வெண்தாமரை ,ஓரிதழ்,சிறிய நங்கை ,கீழாநெல்லி ,சம அளவு நிழலில் காயவைத்து தனித்தனியாக பொடித்து ஒன்றாக கலந்து செய்யலாம்.
இந்த மூலிகை கலவையை காலை ,மாலை என தொடர்ந்து 48 நாட்கள் பாலில் கலந்து அருந்தினால் நீங்கள் இழந்த சக்திகளை பெற்றுவிடலாம்
இந்த மூலிகை கலவை உடல் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து ,விந்து உற்பத்தியை அதிகமாகிறது மேலும் நீர்த்து போன விந்தை கெட்டியாக்குகிறது,அதுமட்டுமல்லாமல் தரமான விந்தணுக்களை உருவாக்கும். உடல் எடை அதிகரிக்க வழி வகுக்கும்,உடல் பொன்நிறமாக மாற்றம் அடையும் ,ஆண் குறியை வழுவாக்கும்,விந்து அதிக அளவில் வீணாவதால் உடல் மெலிந்து கன்னங்களின் சதை நலிவுற்ற நிலையில் ஒடுங்கி சிலருக்கு காணப்படும் இவர்களுக்கு இந்த கலவை ஒரு வர பிரசாதம்.திருமணம் செய்ய இருக்கும் ஆண்கள் 48 நாட்கள் இந்த கலவையை எடுத்து கொண்டால் உடல் உரமாகி பலம் பெறலாம்.
வெறும் விந்தணுக்கள் பிரச்சனையை மட்டும்மல்லாது காய்ச்சல் ,சோகை, பசியின்மை,இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றி சுத்தமக்குகிறது.
கல்லிரல் சம்பதமான அனைத்து நோய்களையும் வராமல் தடுக்கும்.
சில மூட நம்பிக்கை தற்போது உள்ள ஆண்களிடம் காணாப்படுகிறது அதாவது
ஆண் குறி அளவில் பெரியதாக இருந்தால் தான் நல்லது,இல்லை என்றால் ஆண்மை குறைவு என்ற எண்ணம் வந்துவிடுகிறது இது மிகவும் தவறு ,இறைவன் படைப்பில் ஒவ்வொரு ஆணுக்கும் அளவுகள் மாறுபடும்,உங்களுக்கு விறைப்பு தன்மை இருந்தால்போதுமானது,
இளம்வயதினர் இடையே தூக்கத்தில் விந்து வெளியேறுதல்,என்பது அவர்களுக்கு பெரிய பயமாகவும் ஆண்மை குறையாகவும் கருதுகின்றனர் இது மிகவும் தவறான கருத்தாகும்,மாதத்தில் அதிகப்பட்சசமாக 1 to 4 வரை வெளியேறுவது தவறில்லை ,திருமணம் ஆனவர்களுக்கு இது பொருந்தாது,பத்திரத்தில் நீரை ஊற்றும் போது அதன் கொள்ளளவு முடிந்தவுடன் தரையில் சிந்துவது இயல்பே அதுபோலதான் விந்து உற்பத்தி அதிகமாக இருந்து ,விந்து பை கொள்ளளவு கடந்தவுடன் ,எதாவது ஒரு வகையில் விந்து வெளியேறிவிடும்,இது படைப்பின் அதிசயமே,ஆனால் சரியான முறையில் சத்தான உணவு பொருள்கள் உண்ணாமல் ,அதிகப்படியான விந்து வெளியேற்றம் இருந்தால் தான் தவறு,
இது போலவே நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடவில்லை என்றாலும் ,விரைவில் விந்தணுவெளியேறினாலும் ஆண்மை குறைவு என்ற எண்ணம் உள்ளது ,இது தவறான கருத்தாகும்,சராசரியாக உடலுறவில் ஈடுபட்ட 5 நிமிடதிற்குள்ளாகவே விந்து வெளியேறிவிடும்,இது அறிவியல் ரீதியான உண்மை ,
எனவே தவறான நம்பிக்கைகளை மனதில் பதியவிடாமலும்,சத்தான சரிவிகித உணவை உண்டு வளமாக வாழுங்கள்,சத்தான உணவு என்றால் பாதம் ,பிஸ்தா ,முந்திரி இன்னும் பல விலை உயர்ந்த பொருள்கள் அல்ல,நம் முன்னோர்கள் இந்த பொருள்களை உண்டுதான் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்?
அவர்கள் உண்டது கம்பு ,சோளம் ,ராகி போன்றவற்றை களியாகவும்,கூழாகவும்,சிலர் சாமை,திணை,வரகு ,குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும் தான் எடுத்து கொண்டனர்,அந்த காலத்தில் அரிசிலேயே 1008 ரகம் இருந்ததாக கூறுவர்கள்(ஆதாரம் இல்லை )ஆனால் நாம் பட்டை தீட்டிய அரிசி மற்றும் வெள்ளை கோழி ,ரசாயனம் மிகுந்த துரித உணவுகளே விரும்பி உண்ணுகிறோம்.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் ..
அங்காடியில் உள்ள பொருள்கள் தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751
சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு
பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....
Telegram:

கிச்சனுக்கு ரோபோட் விற்பனைக்கு வந்தாச்சி

 




கிச்சனுக்கு ரோபோட் விற்பனைக்கு வந்தாச்சி*

ஒன்டர்செப் நிறுவனத்தின் தயாரிப்பான இது, கிச்சன் ரோபோட்டாக செயல்படுகிறது.
மிக்ஸி மற்றும் குக்கர் இவ்விரு அமைப்புகளுடன், தொடு திரை பேனலுடன் தயாராகி இருக்கும் இந்த ரோபோவிடம், நீங்கள் ஒரு உணவை சமைக்க சொன்னால் சமைத்து கொடுக் கும். பிரியாணி தொடங்கி இயல்பான ரவா உப்புமா வரை... பல நூறு ரெசிபிக்களை இதில் சமைக்க முடியும். ஒரு ரெசிபியை சமைக்க விரும்பினால், அதை தொடுதிரையில் உள்ளீடாக கொடுத்து, சமையல் ரோபோ கேட்கும் பொருட்களை உட்செலுத்தினால், உணவு தயாராகும் விதத்தில் இந்த சமையல் ரோபோவை வடிவமைத்துள்ளனர்.
அரைத்தல், வதக்குதல், பிசைதல், வேக வைத்தல்... என எல்லா வேலைகளையும் செய்ய இந்த அமைப்பே போதுமானதாக இருக்கும். வை-பை மற்றும் மொபைல் ஆப்புடன் இணை யக்கூடிய இந்த ரோபோவில், சமையல் கலைஞர் சஞ்சீப் கபூரின் சமையல் குறிப்புகள் உள்ளீ டாக கொடுக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.39,999. flipkart-ல் விற்பனைக்கு உள்ளது

அது இளிச்சவாயா இருக்கும்.

 ஒவ்வொரு குடும்பத்துலயும் ஒரு நல்ல பிள்ளை ஒன்னு இருக்கும்.

அது இளிச்சவாயா இருக்கும்.
அது எல்லாத்துக்கும் எல்லாத்தையும் குடுத்துரும்.
கொடுக்கலைன்னாலும் கொடுக்க வச்சிருவாங்க.
அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி எல்லாரும் நல்லா இருக்கட்டும்னு நினைக்கும்.
But அந்த ஒரு ஜீவன் மட்டும் அப்போதைக்கு நல்லாவே வாழாது.
அதுகிட்ட இருந்து எடுத்துக்கிட்டவங்க யாரும் திருப்பி எதுவும் செய்ய மாட்டாங்க.
பொழைக்க தெரிலனு comment வேற செய்வாங்க.
அதெல்லாம் அது எதையும் கண்டுக்காது.
கண்டிப்பா கஷ்டம் தான் படும்.
ஆனாலும் திரும்ப திரும்ப நல்லது தான் செய்யும்.
அது வாங்கற அடி யாராலும் வாங்கியிருக்க முடியாது.
அவ்வளவு அடி மேலே அடி வாங்கிட்டு திரும்ப வந்து செஞ்சிட்டே இருக்கும் அந்த இளிச்ச வாய் ஜீவன் ‌‌.
பிகு.
*இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன்
அது கெட்டு போகாது,
அமோகமாக வாழும்*

குதிரைவாலி வறட்சியை தாங்கி வளர்வதால் மானாவாரியாக

 

குதிரைவாலி வறட்சியை தாங்கி வளர்வதால் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. அதேநேரத்தில் நீர் தேங்கும் நிலைகளை தாங்கும் திறன் கொண்டது.

இப்பயிர் உலகளவில் 1.46 லட்சம் எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் 1.45 லட்சம் எக்டேர் இந்தியாவில் சாகுபடியாகிறது. 400 முதல் 500 மி.மீ., மழை போதுமானது. இந்தியாவில் உத்தரகாண்ட், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், தமிழகத்தில் அதிகளவு பயிரிடப்படுகிறது. மனிதர்களுக்கு உணவாகவும், ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது.
மிக உயரமான கடல் மட்டத்திலிருந்து 2700 மீட்டர் உயரத்தில் கூட வளரும் தன்மை கொண்டது. நீர்ப்பாசன வசதியுடன் கூடிய நிலத்தில் நல்ல முறையில் களைகள் இன்றி பராமரித்து பூச்சி நோய் தாக்குதலின்றி விதைகள் உற்பத்தி செய்யலாம். சான்று பெற்ற அல்லது ஆதார விதைகளை வேளாண்மைத்துறை மூலம் வாங்கி உற்பத்தி செய்யலாம். தன் மகரந்தசேர்க்கை கொண்ட பயிர் என்பதால் போதிய இடைவெளி இருக்கவேண்டும். சான்று பெற்ற விதை மற்றும் ஆதார விதைகளுக்கு ரகத்திற்கு 3 மீட்டர் இடைவெளி விடவேண்டும்.
பருவங்களும் ரகங்களும்
குதிரைவாலி ஓரளவு வளமான மண்ணில் பயிரிடப்படுகிறது. தாழ்வான நிலங்கள் மற்றும் நீர் தேங்கி நிற்கும் மண்ணிலும் வளர்க்கலாம். காரிப் ( ஜூன், ஜூலை), ரபி (செப்., அக்.,), கோடை (ஜன., பிப்.,), பாசனப் பயிராக (பிப்., மார்ச்) பயிரிடப்படுகிறது. கோ 1, 1, கே 1, 2, மதுரை 1 , வி.எல்.மதிரா 181, டி.எச்.பி.எம். 93 - 3, சி.பி.ஒய்.எம்.வி.1 ரகங்கள் பயிரிட ஏற்றது. சராசரியாக 95 முதல் நுாறு நாட்கள் வயதுடையது.
ஜூலை முதல் 15 நாட்களில் பருவமழை தொடங்கும் போது விதைக்கலாம். எக்டேருக்கு 8 முதல் 10 கிலோ அளவில் விதைகளை 3 முதல் 4 செ.மீ., ஆழத்தில் விதைக்கலாம். சிலஇடங்களில் நாற்று நடவும் செய்யப்படுகிறது. வரிசைக்கு வரிசை 30 செ.மீ., இடைவெளியும், செடிக்கு செடி 10 செ.மீ., இடைவெளியும் தேவை.
உரம், நீர் மேலாண்மை
ஒரு எக்டேருக்கு 5 முதல் 10 டன் மட்கிய தொழுஉரம் இடவேண்டும். 40 கிலோ தழைச்சத்து, 30 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல்சத்து இடவேண்டும். விதைப்பு நேரத்தில் அனைத்து உரங்களையும் மண்ணில் சேர்க்கவேண்டும். நீர்ப்பாசன வசதிகள் இருந்தால் விதைத்த 25 முதல் 30 நாட்களுக்கு பிறகு தழைச்சத்தில் பாதியை பிரித்து இடலாம். பொதுவாக பாசனம் தேவையில்லை
என்றாலும் நீண்ட காலத்திற்கு வறண்ட காலநிலை ஏற்பட்டால் பூ பூக்கும் நேரத்தில் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். கனமழையின் போது அதிகப்படியான தண்ணீரை வயலில் இருந்து வெளியேற்றுவது எப்போதும் நல்லது.
நோய், களைக்கட்டுப்பாடு
விதைத்த 25 முதல் 30 நாட்கள் வரை வயலில் களைகள் இருக்கக்கூடாது. களைகளைக் கட்டுப்படுத்த இரண்டு களையெடுத்தல் போதுமானது. பூஞ்சைக்காளான் நோய் தாக்கினால் ஆரம்பத்தில் இலைகளில் வெளிர் மஞ்சள் பட்டைகள் தென்படும். பின் வெண்மையாக மாறி இலைகள் உலரும். சிலநேரங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழிக்க வேண்டும்.
நோய் பாதிக்கப்படாத செடிகளிலிருந்து மட்டுமே விதைகளை பயன்படுத்த வேண்டும். 'ஸ்மட்' என்பது விதை மூலம் பரவும் நோய். ஒரு கிலோ விதைக்கு 2.5 கிராம் என்ற விகிதத்தில் 'விட்டாவாக்ஸ்' அல்லது 'செரசன்' கொண்டு விதைநேர்த்தி செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
வளர்ச்சி பருவத்தில் 'சைப்பர்மெத்திலின்' 0.2 சதவீத மருந்தை தெளிக்க வேண்டும். துரு என்பது இலைகளில் கரும்புள்ளிகள் கோடுகளாக காணப்படும். தானிய விளைச்சலில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது. தண்டு துளைப்பானைத் தடுக்க ஒரு எக்டேருக்கு 'தையமெத்தாக்சம்' லிட்டருக்கு 3 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்யலாம்.
பயிர் பழுத்தவுடன் சரியான நேரத்தில் அறுவடை செய்யவில்லை எனில் அறுவடையில் 10 சதவீத மகசூல் இழப்பு ஏற்படும். எக்டேருக்கு சராசரியாக 2300 முதல் 2650 கிலோ தானியம், 1200 கிலோ தீவனம் அல்லது வைக்கோல் அறுவடை செய்யலாம்.
-வாசுகி
விதை ஆய்வு துணை இயக்குநர், விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத்துறை மதுரை, 80722 45412

தன் உடலை காக்காதவன்

 உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னைத் தேடு..!
ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று..!
ஊர் உனக்கு மகுடம் சூட்டி உத்தமன் என பட்டம் தந்தாலும்!— at Kolathur Sivan Temple கொளத்தூர் சிவன் கோவில்.
உடல் உன்னை கை விட்டால் உன் பட்டமும் உன் பதவியும்
பிடி சாம்பலாகி விடும்..!
புறத்தில் உன் குடும்பத்தை நேசித்தாய்....அது உன் குடும்பம் என கண்டும் கொண்டாய்...!
ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்றாய்..!
ஆனால் உனக்கு காவல் தெய்வமாக, உன் உயிருக்கு காக்கும் கடவுளாக,
இருப்பது உன் உடலே...!
அக குடும்பத்தை மறந்து விடாதே. உன் அக குடும்பம் உன் உடலே..!
உன் அக குடும்பம் சரியில்லை என்றால்
சூரிய குடும்பத்தில் நீ இருக்க இயலுவதில்லை..!
உன் உள் குடும்பம் உன் உடலே!
அதை மறந்தால் உன் வெளி குடும்பம் கதறினாலும்
உன்னை காக்கவும் யாரால் முடியும்..!
மற்ற உயிர்களுக்கு ஒருவன் செய்யும் பாவத்திற்கு
விமோசனம் உண்டு..!
ஒருவன் அவன் உடலுக்கே செய்யும் பாவத்திற்கு
விமோசனம் இல்லை...!
காரணம் அந்த உடல் அவன் உயிருக்காகவே
சிறப்பு மிக்க வரமாக கொடுக்கப்பட்டதால்..!
உடலுக்கு ஒருவன் செய்யும் தொண்டே பூஜை..!
உடலுக்கு உள் சென்று உனக்காக உழைக்கும்
உறுப்புகளை வணங்குவதே ஆலயம் சென்று
வணங்குவதை விட உயர்வானது..!
உடல் அனுமதித்தால் தான் ஒருவன் சித்தனும் ஆக முடியும்..!
ஒருவன் எப்படி பட்டவன் ஆக வேண்டும் என்று தீர்மானிப்பது அவனின் எண்ணங்களே..!
ஆனால் அந்த எண்ணங்களை தீர்மானிப்பது உடலே..!
ஒருவன் எதுவாக ஆக விரும்புகிறானோ
அதை தீர்மாணிப்பதும் உடலே...!
ஒருவன் உண்ணும் உணவும் பேணி காக்கும் உடலும் அழைத்து செல்லும் அதன் அதன் தன்மைக்கு ஏற்ப..!
ஒருவன் அவன் உள் குடும்பமான உடலை கவனித்தால்..!
அந்த உள் குடும்பமே உன் வெளி குடும்பத்தை காக்கும்..!
பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் குலத்தின் குலதெய்வம் அவரின் உடலே..!
உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!
தியானம் நம் மனதோடு பேச செய்யும்.
ஆசனம் நம் உடலோடு பேச செய்யும்.
அதை தேடு...!!
இந்த தத்துவத்தை திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் தெள்ளத்தெளிவாக சொல்லுகிறார்...
"தன் உடலை காக்காதவன் புழுவாய் புழு புழுத்து இறப்பார்" என்று கூறியுள்ளார்..

குருவருளோடு இறைவனை நாடு குருவே சரணம்

 உடலை உறுதி செய் அதை உள்ளத்தில் இறைவனை நிறுத்தி தியானம் செய்வோம் குருவருளோடு இறைவனை நாடு குருவே சரணம்



திருநெல்வேலியிலிருந்து தாதர் வரை செல்லும் அதிவிரைவு ரயில்

 பயணிகளின் கனிவான கவனத்திற்கு திருநெல்வேலியிலிருந்து தாதர் வரை செல்லும் அதிவிரைவு ரயில்....

ரயில் நேரம் 👇 🛑
Tirunelveli
DEP 07:15
Kovilpatti
ARR 08:09 DEP 08:10
Virudunagar Jn
ARR 09:03 DEP 09:05
Madurai Jn
ARR 09:50 DEP 09:55
Dindigul Jn
ARR 11:05 DEP 11:10
Karur
ARR 12:18 DEP 12:20
Erode Jn
ARR 13:20 DEP 13:30
Tiruppur
ARR 14:13 DEP 14:15
Coimbatore Jn
ARR 15:07 DEP 15:10
Palakkad Jn
ARR 16:17 DEP 16:20
Shoranur Jn
ARR 17:05 DEP 17:10
Kozhikkode
ARR 18:22 DEP 18:25
Kannur
ARR 19:52 DEP 19:55
Mangaluru Jn
ARR 22:00 DEP 22:10
Udupi
ARR 23:41 DEP 23:42
Honnavar
ARR 01:31 DEP 01:32
Karwar
ARR 02:43 DEP 02:44
Madgaon
ARR 04:05 DEP 04:15
Thivim
ARR 05:01 DEP 05:02
Kankavali
ARR 06:41 DEP 06:42
Ratnagiri
ARR 09:00 DEP 09:05
Chiplun
ARR 11:01 DEP 11:02
Roha
ARR 13:35 DEP 13:40
Panvel
ARR 14:59 DEP 15:00
Thane
ARR 15:54 DEP 15:55
Dadar
ARR 16:40 End

சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா?

 

சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா?

✨பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகரானவர் சனி பகவானே ஆவார்.
✨பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.
✨நவகிரகங்களில் மிகவும் முக்கியமான பாவகிரகமாக சனி கருதப்படுகிறார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட சனிபகவானின் பார்வையை, சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. அதனால் சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடக்கூடாது. கோவில்களில் இரண்டு பக்கங்களில் நின்று தான் வழிபட வேண்டும்.
✨சனிபகவான் என்று மட்டும் இல்லை, கோயிலில் உள்ள எந்த தெய்வத்தையும் நேருக்கு நேர் நின்று தரிசிக்கக்கூடாது.
✨தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தி நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற தெய்வ வாகனங்களுக்கு மட்டுமே உண்டு.
✨நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. இதை ஸ்தான பலம், ஸம்யோக பலம், திருஷ்டி பலம் என்று கூறுவர்.
✨சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனி பகவானுக்கு பிடித்தமான ஒன்றாகும். எனவே இந்த வழிபாடு மேற்கொள்பவர்கள் சனியின் பார்வையிலிருந்து தப்பலாம்.
✨சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனிக்கிழமையில் வரும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்கள் ஏதேனும் ஒன்றில் சனி பகவானுக்கு விரதம் தொடங்கி 21 சனிக்கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
✨இயற்கையிலேயே அசுப கிரகமான சனி கிரகத்தின் 3, 7, 10ம் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், சனீஸ்வரரை நேருக்கு நேர் நின்று தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள்.
சனிபகவான் புராணக்கதை :
✨நவகிரகங்களை தனது கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்தான் இலங்கை வேந்தன் ராவணன். இவன் சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில் படுக்கவைத்து, அவர்களின் மார்பின் மீது கால்களை வைத்து மிதித்துக்கொண்டு அரியணை ஏறும், இறங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.
✨இதற்காக நவகிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளில் வரிசையாக மேல்நோக்கி படுக்கவைக்கப்பட்டிருந்தது. ஆனால், சனி கிரகம் மட்டும், தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால் மேல் நோக்கிப் பார்க்காமல், கீழ் நோக்கி குப்புறப் படுத்திருந்தது.
✨ராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட நினைத்த நாரதர், ராவணன் சபைக்கு வந்தார். அங்கே ராவணன் நவக்கிரகங்களை தனது காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், "ராவணா, உனது கட்டளையை மதித்து இந்த நவகிரகங்கள் அனைவரும் மேல்நோக்கி படிகளில் படுத்திருக்கிறார்கள். ஆனால், சனி கிரகம் மட்டும் உன்னை அவமதிக்கும் வகையில் கீழ் நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா?" என்று கூற, ராவணனும் சனி கிரகத்தை மேல் நோக்கிப் படுக்கச் சொன்னான்.
✨தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்காததால், சனி கிரகமும் படிக்கட்டில் மேல் நோக்கியபடி திரும்பிப் படுத்தது. ராவணன் தனது காலால் சனி கிரகத்தை மார்பில் மிதித்து ஏறுகையில், சனி கிரகத்தின் குரூரமான பார்வை ராவணனின் மீது விழுந்தது. அப்போது முதல் ராவணனுக்கு ஏழரை ஆரம்பித்தது. அதன்பின், சில காலங்களிலேயே இராமனின் கையால் வீழ்த்தப்பட்டு மடிந்தான் இராவணன்.
✨நாரதரும் தான் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் அங்கிருந்துப் புறப்பட்டார். புராணத்தில் கூறப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பதே சிறந்தது என்பதை அறியலாம்.
✨சனிக்கிழமை தோறும் நவக்கிரகம் சுற்றும் பழக்கம் உள்ளவர்கள், சனீஸ்வரனை நேருக்கு நேர் நின்று வழிபடாமல் சன்னதிகளின் இரு பக்கங்களில் நின்று வழிபடலாம். இவ்வாறு வழிபட்டால் சனிபகவானின் கெடு பார்வையால் நமக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது.
✨மேலும், ஏழரை சனி, பாதச் சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி நடைபெறும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் சனிபகவானுக்கு 27 தடவை சுற்றி வந்து எள் விளக்கு ஏற்றி வந்தால் சனீஷ்வரனின் தாக்கம் குறைந்து, ஆபத்துகள் விலகும் என்பது ஐதீகம்.

Friday, February 21, 2025

Human life layers -பிரம்மண்டம்ம்

 


பாலக்காடு 1 ~ Nelliyampathy hills view point

 பாலக்காடு 6 ~ Nelliyampathy hills view point

பல மலைகள் குட்டி குட்டி நீர் ஓடைகள்
"பாலக்காட்டின் ராணி" என்று அழைக்கப்படும் நெல்லியம்பதியின் மலை உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறோம் , வளைவான மலைப்பாதை...
காடுகள் மரங்களுக்கு நடுவே பாதைகள் தொலைந்து போனது போல் தெரிந்தாலும், பயணத்தில் சில இடங்கள் உங்களை விழித்தெழ வைக்கும்.
பப்பாளியை உப்பு நீரில் ஊற வைத்திருப்பதையோ கட்டஞ்சாயா கிடைக்கும் கடையென்றாலோ
ரவி எல்லாரையும் விழித்தெழ வைத்திடுவான், நல்லவேளை பொத்துண்டி அணைக்கட்டிற்குப் பிறகு எங்கும் கடைகள் இல்லை..
நகரத்தின் கூச்சலையும் , புறச்சூழலில் ஏற்படுகின்ற மனஅழுத்தத்தையும் மறந்து, மலைக்குப் பயணம் செல்வது ஒரு தெய்வீக உண்ர்வுதான்,
காரில் பயணிக்கும்போது சட்டென்று கண்ணாடியை இறக்கும்போது காதுகளுக்குள் நுழையும் குளிராய் , இதயத்தை சில்லிட வைக்கும் மெல்லிய பனியோடுடனான காற்றின் வாசனையில், மலையில் மிதப்பதாய் உணரவைத்தது...
வழியில் எங்களை அழைத்துச் செல்லும் ITL டிராவலின் ரெஸ்ட்ராரெண்டில் ஒரு தேநீர் அருந்திவிட்டு மலை மேலேறிச் சென்றோம்,
வீவ் பாயிண்ட் செல்ல சிறிய நடக்க வேண்டும், முதியவர்கள் தவிர்த்துக் கொள்ளுதல் நலம்..
மேலே செல்லச் செல்ல எல்லாம் தொலைந்து போய்க்கொண்டே இருக்கிறது , செல்போன் சிக்னல் உட்பட எல்லாமும் துண்டிக்கப்பட்டு விட்டது , கீழிருந்து சுமந்து வந்த பாரங்கள் கூட,
மரங்கள் சிலிர்த்து எங்கள் முடி கலைத்து வரவேற்றது.. நடந்தே மலை உச்சியில் உள்ள view point க்கு சென்றோம்.
அங்கிருந்து கீழே பார்த்தவுடன் கொல்லங்கோடு முழுவதும் எங்கள் கண்களுக்கு தெரியத் தொடங்கியது, ஒவ்வொரு வீடும், பசுமை நிலங்கள், தூரத்தில் தண்ணீர் விழாத அருவி, எல்லாம் ஒரு பெரிய ஓவியத்தைப் போல்!
மலையில் கொஞ்சம் உலவிவிட்டதால் மனசு இலகுவாயிற்று, அமைதியான ஒரு அனுபவம்.
மலை இறங்கி வந்து அங்குள்ள கடையில் ஜிஞ்சர் க்ரஷ் ஒன்று குடித்தோம் , அங்குள்ள கிராமங்களிலேயே தயாரிப்பார்கள் போல் நல்ல சுவை. ஒருவேளை மலை,பசுமை, காற்று, நிலம்—இவை கலந்தால் இப்படித்தான் சுவையாக இருக்குமோ?
மொபைல் தொடர்புக்கு அப்பால் சென்றாலே இயற்கை நம்மோடு இணைய ஆரம்பிக்கிறது
ஜுன் ஜூலையில் இந்த நெல்லியம்பதி மலைப்பாதையில் வந்து பாருங்கள், வாழ்க்கையின் அழகை முழுமையாய் உணரலாம்!

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...