Tuesday, June 13, 2023

Vadas foods for south india

 


What’s that doughnut-like thing doing on your South Indian breakfast thali (platter)? While a vada won’t cure your sugar cravings, it will satiate your desire for something deep fried, hot and crispy.

Made from a batter of black lentils, gently spiced with peppercorns, curry leaves, cumin, chilli and onion, this crunchy fritter tastes best when smeared generously with coconut chutney.

Idlis foods for south india




Soft, fluffy and ivory-coloured, idlis are what many South Indian families eat for breakfast. A fermented lentil-and rice-batter is steamed in little circular moulds, and the resulting spherical rice cakes are served with sambar and chutneys.

Idlis are light and mild tasting, an ideal snack for when you want to give your stomach a rest from fiery flavours.

Dosas foods for south india

 





1. Dosas: paper-thin crepes

A traditional breakfast food made of fermented rice-and-lentil batter, a dosa is much like a crispy thin crepe. It’s accompanied by sambar (a hot lentil soup) and coconut chutney.

Masala dosas are stuffed with a spicy mash of potato and onion; plain dosas are hollow; rava dosas are made from semolina; and some new-age variants get creative with fillings such as cottage cheese or mixed vegetables.

Whatever you choose (trust us and start with a masala dosa), the delightfully light dish is best eaten hot, when it’s fresh off the griddle.


Monday, June 12, 2023

10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை



தொழில் அதிபர் சையத் சமீர் உசேன் அவர்களின் பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையானது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை பொதுமக்கள் பார்வைக்காக காண்பித்தார்.

பெங்களூருவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வரும் பிரபல தொழில் அதிபரான சையத் சமீர் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை பொதுமக்கள் பார்வைக்காக காண்பித்தார். மேலும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்திரனின் வஜ்ராவையும் (ஆயுதம்) அவர் காட்டினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் பிலிப்பைன்ஸ் நாட்டில் தொழில்அதிபராக இருந்து வருகிறேன். கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இரும்பு தாது மற்றும் தங்கம் வெட்டி எடுக்கும் சுரங்க தொழிலை செய்து வருகிறேன். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு மே 5-ந் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள என்னுடைய சுரங்கத்தில் 200 அடி ஆழத்தில் சிவனின் திரிசூலமும், இந்திரனின் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. அது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது பற்றி அப்போது எனக்கு தெரியாது.

அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து டெல்லியில் உள்ள தொல்லியல் துறையிடம் ஆய்வுக்காக வழங்கி இருந்தேன். சம்பந்தப்பட்ட மத்திய மந்திரி துறையிடமும், இதற்கான அனுமதியை பெற்றேன். கடந்த 7 ஆண்டுகளாக தொல்லியல் துறை அந்த திரிசூலம் குறித்த ஆய்வை மேற்கொண்டு இருந்தது.

7 ஆண்டுகளாக நடந்த ஆய்வில் சிவனின் திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், இந்திரனின் வஜ்ரா ஆயுதம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்து காட்டும் திரிசூலம் ஆகும். 

தொல்லியல் துறை தவிர்த்து பல்வேறு இந்து அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும் திரிசூலம், சிலை பழமையானது என்பதை தெரிவித்துள்ளன.

இது இந்தியா மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நிருபர்களை சந்தித்து காண்பித்து பேட்டி தருவதாக கூறினார் 


Friday, June 9, 2023

Sri raghavendra swamy temple -guruji


he samadhi or final resting place of Guru Sri Raghavendra Swamy is known as Brindavana and is located at Mantralayam in Kurnool district of Andhra Pradesh. Guru Raghavendra Swamy spend his last eventful days at Mantralayam before entering the brindavana alive. Raghavendra Swamy entered brindavana on Virodhikruth Nama Samvatsara Shravan Krishna Paksha Dwitiya tithi (second day during the waning or dark phase of moon in Shravan month) in 1671 CE.

Sri Raghavendra Swamy spent his entire life popularizing Dwaita philosophy propounded by Sri Madhvacharya

Brindavana was constructed under his own supervision in a place chosen by him.

The reasons for choosing a spot in Manchala village (later known as Mantralayam) for erecting his brindavana were, according to the swami himself, that he had during his previous birth as Prahlada in the Satya Yuga performed a yagna there and the place was so divine as to offer success always as evidenced by the great fight put by Anusulya agains teh mighty Pandavas in the Dwapara Yuga. Also, he love do have his brindavana near the temple for Manchalamma, his tutelary deity in his previous birth of Prahlada.

A homa kunda (place where yajna was conducted) is said to have existed in ancient times at the spot the sage chose for his Brindavana. To make the place holy, he procured from neighboring Madhavaram village a slab from the rock on which Bhagavan Sri Rama had rested while searching for Mata Sita in the forest during his Dandakaranya period of exile in the Ramayana.

Raghavendra Swamy supervised the chiseling of the slab to the size and collection of other materials for his final resting place. A figure of Vayu Bhagavan was sculpted on the slab.

On the second day the dark phase of moon in Shravan month (Shravan Krishna Paksha Dwitiya tithi as per traditional Kannada and Telugu calendar), the sage went through his daily rituals and delivered his last discourse to a large gathering of devotees.

“I would be parting only my body but would be present physically to safeguard the welfare of all” was the last message Guru Sri Raghavendra Swamy gave before entering into the Brindavana.

He sang the famous soul-stirring song in Kannada ‘Indu Enage Govinda,’ before entering Brindavana.

After the stone slabs were placed all around him, Guru asked his followers to keep 1200 saligramam (s) over his head and close the top portion of the brindavana with soil.

Today millions of pilgrims, cutting across manmade religious and caste barriers, visit Brindavana seeking the blessing of Raghavendra Swamy.

A popular belief among devotees is that nobody would go empty-handed from his abode or nobody would go without their wishes fulfilled from the temple housing his brindavana.

Sunday, June 4, 2023

காட்டு யானைகள் தானே சிந்தித்து முடிவெடுக்கும் அறிவு கொண்டது.

வளர்ப்பு யானைகளுக்கு சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும். 

ஆனால், காட்டு யானைகள் தானே சிந்தித்து முடிவெடுக்கும் அறிவு கொண்டது.

வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களைச் சுற்றி, 'மெக்கர்' ன்னு சொல்லப்படும் மின்சாரவேலி போட்டிருப்பாங்க. 
சூரியஒளி மின்சார பேட்டரியில் இணைப்பு கொடுத்திருப்பார்கள்...
'கட் அவுட்' வெச்சு, சுழற்சி முறைல, 3 நொடிக்கு கரன்ட்சப்ளை இருக்கும், அடுத்த 5 நொடிக்கு சப்ளை வராது. 
லைன் சப்ளை வர்ற அந்த 3 நொடி மட்டும் மெல்லிசா, ஸ்ஸ்ஸ்... ன்னு ஒரு சத்தம்வரும். 

இப்போ, இந்த மெக்கர் லைன... காட்டு யானைகள் எப்படி டீல்பண்ணும் தெரியுமா ? 

முன்காலை தூக்கி தயாரா மெக்கர் போடப்பட்டிருக்குற இரும்பு போஸ்ட்டுக்கு முன்னாடி நிக்கும். கரன்ட் சப்ளை இருக்குற அந்த 3 நொடி ஸ்ஸ்ஸ்... சத்தத்த விட்டுட்டு, அந்த சத்தம் நிக்கும்போது சப்ளை வராத அந்த 5 நொடிய மட்டும் கரெக்ட்டா பயன்படுத்தி, போஸ்ட்டை ஒரே மிதிமிதிச்சு தாண்டி போயிடும். 

இல்லேன்னா... காய்ஞ்ச மரங்களை தூக்கி மெக்கர் மேலபோட்டு ஒடைச்சு, ஏறிமிதிச்சு தாண்டி போயிடும். வனத்துறை பல டெக்னாலஜிகளை கையாண்டும் கூட, காட்டு யானைங்க கிட்ட ஒன்னும் செல்லுபடியாகல. 

தோண்டி வெக்குற அகழியவெல்லாம் சர்வ சாதாரணமா மூடிட்டு, தாண்டி வந்துடும். 

ஓரளவுக்கு கை கொடுக்குறது... வேலியோர தேனி வளர்ப்பு & சுரைமுள் வேலி மட்டும்தான்.

காட்டு யானைகளுக்கு தலைமை தாங்குறது, வயதான பெண் யானைதான். கூட்டத்துல இருக்குற, ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு வேலைகளை ஒதுக்கி குடுக்கும். ஆபத்துன்னு... சின்ன பொறி தட்டினாலும், குட்டிங்கள பூரா நடுவுலவிட்டு, அத்தனை பெண் யானைகளும் சுத்தி அரண்அமைச்சு நிக்கும். 

அதே போல அங்க இங்க ஓடுற குட்டிகளை, அடிச்சு மிரட்டி கூட்டத்துக்குள்ள கொண்டு வர வேண்டியது, கொஞ்சம் வளர்ந்த குட்டிகளோட வேலை 
(LKG பசங்கள கவனிக்கிற வேலைய, அஞ்சாம் கிளாஸ் பசங்களுக்கு குடுத்தா... நல்லா 'சட்டாம்புள்ள' வேல பாப்பாங்க. அது மாதிரி...). 

யானைகளோட 'டேஞ்சர் சோன்' 30 மீட்டர்.  மற்ற விலங்குகளோ, மனிதர்களோ அந்த எல்லைக்குள்ள வர்றத யானைகள் அனுமதிக்காது. 
உடனே ஏறிவந்து, "நெருங்கி வராத" ன்னு, மிகக் கடுமையான எச்சரிக்கை கொடுக்கும்.

யானைகள், உணவு தேடலுக்காக ஒருநாளைக்கு 30 to 50 கி.மீ நடக்கும். 

அப்படி போகும்போது... வனப்பகுதிகளில் போடப்பட்டிருக்கும், வாகன போக்குவரத்துகள் இருக்கும் சாலைகள கடக்கும் சூழ்நிலை ஏற்படும். அப்போ, சடார்ன்னு எல்லாமுமா ஓடிப்போய் ரோட்டை கடந்துடாது. 

முதல்ல ஒரேஒரு ‘செக்யூரிட்டி’ கொம்பன் மட்டும் காட்டைவிட்டு வெளியவந்து, ரோட்டில் நின்னு தும்பிக்கைய தூக்கி சத்தம்போட்டு , வாகனங்களுக்கு எச்சரிக்கை செஞ்சு நிறுத்தும். 

ரெண்டு பக்கமும் வாகனங்கள் நின்னு, அமையானவுடன்... தன் கூட்டத்தை பார்த்து ஒருசத்தம் மூலமா, "வரலாம் வா..." ன்னு, சிக்னல் கொடுக்கும். அதுக்கு அப்புறம்தான் ஒன்னொன்னா வெளியவரும். 

நாமதான் வரிசைல போம்போது... தலைகள எண்ணினாக் கூட ரெண்டுமூணு பேர மறந்துடுவோம். ஆனா அது, ரோட்டை மட்டுமே ரெண்டு பக்கமும் பாத்துட்டு நிக்கும். ஆனா மிகச்சரியா... கடைசி யானை ரோட்டை தாண்டினதும், யோசிக்காம... சடார்னு அதுக்கு பின்னாடி போயிடும். 

அதே போல ஏதாவது ஒன்னு, வராம மிஸ்ஸானாலும் கூட, காட்டை பார்த்து சத்தம் குடுத்து, "ரெட் சிக்னல் விழப் போகுது. சீக்கிரமா வந்து தொல" ன்னு, அதட்டும். 

இந்த ரெண்டு பொறுப்பும், 'செக்யூரிட்டி கார்ட்ஸ்' ன்னு சொல்லப்படுற, ஓரளவுக்கு வளர்ந்த ஆண் யானைகள்ட்ட கொடுக்கப் பட்டிருக்கும்.

(ஒரு கட்டத்துக்கு மேல... முதல் மஸ்து நேரத்துல, வளர்ந்த கொம்பன்கள், தலைமை யானைக்கு கட்டுப்படாம... அடாவடி செய்ய ஆரம்பிக்கும். அப்போ, இந்த ஆண் யானைகள் கூட்டத்தவிட்டு, விலக்கப்படும். ஆனாலும், பாசத்துக்கு ஏங்கி... கிட்டத்தட்ட 48 நாட்கள் கூட்டத்த விட்டுப் போகாது. கூட்டம் எங்கெல்லாம் போகுதோ... இதுவும் கொஞ்சதூர இடைவெளில, பின் தொடர்ந்து போகும். கூட்டத்தின் மேலான பாசம் வடிஞ்சு, ஒரு கட்டத்துக்கு மேல பிரிஞ்சு போயிடும். இதுதான், ஆக்ரோஷமா சுத்துற ஒற்றை கொம்பன்கள்).

(கொம்பனை பற்றிய ஒரு கொசுறு தகவல்...

ஒரு கொம்பன் உங்கள விரட்டி பிடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா... நீங்க 'உசைன் போல்ட்' டாவே இருந்தாலும், தப்பிக்க முடியாது. 

உங்க வேகத்தை எட்டிப் பிடிக்க உங்களுக்கு 8 நொடிதேவை. 
ஆனா... யானை நாலே நொடில, உங்கள பிடிச்சிடும். 

அவ்ளோ பெரிய உருவம் உங்கள ஆக்ரோஷமா விரட்டுதுன்ற உணர்வே... உங்கள மிரட்டி, ஓடவிடாம செஞ்சுரும். 

அதனால, யானைங்க கிட்ட விளையாடாதீங்க. 

எல்லா யானைகளும் மனிதர்களை கொல்லாது. வெறும் மிரட்டல்தான். 

ஆனா... ஒற்றை தந்தத்துடனோ, தாறுமாறா வளர்ந்த தந்தத்தோடவோ, சூறை நாற்றத்துடன் சுத்துற யானையவோ கண்டா... தலை தெறிக்க ஓடிடுங்க. 
கொலைகார ராட்சஸன். 

இத்தனை வேலைகளையும் தலைமை பெண்யானைb துல்லியமா கண்காணிச்சுட்டே இருக்கும். இதுல எங்க தடங்கல் ஏற்பட்டாலும், குறிப்பிட்ட அந்த பொறுப்புல இருக்குற யானைக்கு அதட்டல் விடுக்கும். 

சிலநேரம் அடிவிழும். 

யானைகளுக்கு புளிப்பு, உப்பு, மஞ்சள், சுண்ணாம்பு, எலும்புகளுக்கு தேவையான கால்ஸியம் சத்துக்கள் அவசியமானது. வளர்ப்பு யானைகளுக்கு அடிக்கடி உணவுல வெச்சு குடுப்பாங்க. 

ஆனா... காட்டு யானைகளுக்கு இயற்கைதான் வைத்தியன். 

புளிப்பு சத்துள்ள விளாம் பழங்கள், காட்டுப் புளி எங்க கிடைக்கும், சுண்ணாம்பு, உப்பு மண் எங்க கிடைக்கும், மஞ்சளுக்கு இணையான மூலிகை வேர்கள் எங்க கிடைக்கும், கால்ஸியத்துக்கு தேவையான நெல்லிக்காய் எங்க கிடைக்கும் ? 

(சில தாவரங்களின் விதைகள், மரத்திலிருந்து நேரடியா பூமில விழுந்தா முளைக்காது. அந்த பழங்களை யானை சாப்பிட்டு, அந்த விதைகள்... யானையின் வயிற்றில் சுரக்கும் ஒருவித திரவத்தில் நொதிக்கப்பட்டு, சாணத்தின் வழியா வெளில வந்தால் மட்டுமே உயிர்ப்புடன் முளைக்கும்) 

கோடை காலத்துல, வழக்கமான நீரோடைகள், குட்டைகள் வற்றி வறண்டபிறகு... மான், காட்டெருமை போன்ற மற்ற விலங்குகள் நீருக்கு அலைமோதி இறக்க ஆரம்பிக்கும். தப்பிப் பிழைத்த விலங்குகள் மட்டும்... நீருக்காக யானைகளை பின்தொடரும். யானைகள் பெருசா அலட்டிக்காது. தலைமை யானை தன்கூட்டத்த கூட்டிட்டு, அதுவரைக்கும் போகாத ஒரு திசையில பயணிக்கும். அங்க போய்... ஒரு குறிப்பிட்ட மணல் பாங்கான இடத்துல, காலால உதைச்சு தோண்டும். மற்ற யானைகளையும் தோண்ட சொல்லும். நாலஞ்சு அடில, தண்ணீர் ஊற்று பெருக்கெடுக்கும். வேண்டிய மட்டும் குடிக்கும். 

இதுபோல தன்னோட வழித்தடங்கள்ல, பத்துக்கும் மேற்பட்ட ரகசிய இடங்கள வெச்சிருக்கும். இந்த ரகசியங்கள்... தலைமை பெண் யானைக்கு மட்டுமே தெரியும். அதோட மூதாதையர்கள் அதுக்கு சொல்லி குடுத்திருக்கும். எத்தனை காலங்கள் ஆனாலும் மறக்காது.

அதேபோல யானையின் பிரசவ காலங்களில், வயிற்றுப்புண் ஆற... பல கி.மீட்டர்கள் பயணித்து, ஒருவித விசேஷமான புற்கள், தாவரங்களை உண்ணும். 

இதுவும் தலைமுறை தலைமுறையா சொல்லி கொடுக்கப் பட்டிருக்கும். 

வயது முதிர்ச்சியின் காரணமா, ஒரு கட்டத்திற்கு மேல, தலைமை பதவியை... திறமையான இன்னொரு வயதும், அனுபவமும் முதிர்ந்த பெண்யானைக்கு மாற்றிக் கொடுத்துடும். 

தானை தலைவரை போல... தான் ஈன்ற குட்டிக்கு மட்டுமே கொடுக்கணும்னு நினைக்காது. திறமையுள்ள யானைக்கு மட்டுமே கொடுக்கும். 

அப்படி தலைமை மாறினால், முன்பு தலைமை பதவியில் இருந்த யானைகூட, புதிய தலைவிக்கு கட்டுப்பட்டே நடக்கும்.

ரொம்ப வயசான, நோய்வாய்ப்பட்ட, நடக்க முடியாத, இனி வாழ்வது கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட யானைகள்... தன் கூட்டத்திடம் பிரியாவிடை பெற்று பிரிந்து, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போய், உணவு உண்ணாமல் இருந்து தற்கொலை செய்து கொள்ளும். 

பிரியும்போது... கூட்டத்தின் மொத்த யானைகளும் அந்த தற்கொலை செய்யப்போகும் யானையை சுற்றிநின்று அழும். 

ஆப்பிரிக்க யானை ஆராய்ச்சியாளர்கள், ஆப்ரிக்க கண்டம் முழுவதும் இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில்... ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்கணக்கான யானைகளின் எலும்புக் கூடுகளை கண்டு பிடித்தார்கள். 

இது தற்கொலைதான் என்று உறுதியாக சொல்கிறார்கள். 

ஆப்பிரிக்காவின் சமவெளிக் காடுகள் போல் அல்லாமல், ஆசிய யானைகளின் வாழ்விடங்கள், பெரும்பாலும் மலைக் காடுகளை சார்ந்தே இருப்பதால்... காசிரங்கா, வியட்நாம் போன்ற ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே, இதுபோன்ற யானைகளின் எலும்புக் கூடுகளை கண்டார்கள்.

இந்தியாவில்... யானைகளுக்கான பாரம்பரிய வலசை பாதைகள்  88 இருக்கிறது. 
(இப்போ பெரும்பாலும், அந்த பாதைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கு). 

ஆறுமாச குட்டியா, அந்த வலசை பாதைல அதோட அம்மாகூட நடந்துபோன யானைகுட்டி, 70 வயசானாலும் மறக்காம ஞாபகம் வெச்சிருக்கும்.
 
யானை என்னைக்குமே, அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படாது. அதேபோல தன்னோட பரம்பரை சொத்தை விட்டுக் கொடுக்காது. 

தன்னோட பரம்பரை சொத்தான வலசை பாதைகளை மீட்டெடுக்கவே, 'மனித - விலங்கு மோதல்' ன்ற, இவ்வளவு பெரிய போராட்டங்களை செய்யுது.

அதுங்கள நிம்மதியா வாழவிடுங்க.
காடுகளில் மது பாட்டில்களை உடைத்து வீசி எரியாதீர்கள்.......

Wednesday, May 31, 2023

Ways to Improve Your Eyes

human eyes improve your vision .
daily mornig 5 am to 5.55 am directley view the sun ,40 days reqularley,improve your eye vision .indian tamil sidha medicion tretments.

Tuesday, May 30, 2023

கோடையில் உடல் வறட்சியை தடுக்கும் வெள்ளரிக்காய் சாலட்

கோடையில் உடல் வறட்சியை தவிர்க்க நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காயில் அதிகமான அளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் - 2 தக்காளி - 1 வெங்காயம் - 1 (வேண்டுமென்றால்) எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் சாட் மசாலா - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு கருப்பு உப்பு - தேவையான அளவு

 செய்முறை: 

வெள்ளரிக்காயை தோல் சீவி, பின் அதனை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ள வேண்டும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை துருவியது போல் நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் ஒரு பௌலில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, சாட் மசாலா, மிளகு தூள் மற்றும் கருப்பு உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்போது நொடியில் வெள்ளரிக்காய் சாலட் ரெடி!!!

நார்ச்சத்து நிறைந்த பேபி கார்ன் சூப்

பேபி கார்னில் கலோரிகள் குறைவாக உள்ளது. பேபி கார்னில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள் பேபி கார்ன் - 6 இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன் பூண்டு (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன் முட்டைக்கோஸ் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன் குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன் காளான் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 5 கப் எண்ணெய் - தேவைக்கு உப்பு - தேவைக்கு

 செய்முறை:

 பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்பு அதில் பேபி கார்ன், குடைமிளகாய், காளான், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி கலந்து நன்றாகக் கொதித்தவுடன் தீயைக் குறைக்கவும். சோளமாவை 1 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைக்கவும். அதை பேபி கார்ன் கலவையில் ஊற்றி, சூப் நன்றாகக் கொதித்து கெட்டியாகும் வரை கிளறவும். பின்னர் அதில் முட்டைக்கோஸைப் போட்டுக் கிளறி இறக்கவும். இப்போது சூடான பேபி கார்ன் சூப் தயார்.

பனானா பேரீச்சம் பழ மில்க் ஷேக்

குழந்தைகளுக்கு சத்தான பானங்களை வீட்டிலேயே செய்துகொடுக்கலாம். இந்த மில்க் ஷேக் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்

தேவையான பொருட்கள் 
வாழைப்பழம் - 2 பேரீச்சம் பழம் - 10 பாதாம் - 20 பிஸ்தா - சிறிதளவு முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர் சர்க்கரை - 2 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்) ஐஸ் கட்டிகள் குங்குமப்பூ - அலங்கரிக்க 
செய்முறை * 
தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * பேரீச்சம் பழத்தை விதை நீக்கி எடுத்துக்கொள்ளவும். * பாதாமை ஊறவைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ளவும். * பிஸ்தா, 8 பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும். * மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், பேரீச்சம் பழம், பாதாம் - 12, சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், ஐஸ் கட்டி, பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். * கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் குங்குமப்பூ தூவி அலங்கரித்து பரிமாறவும். * பனானா பேரீச்சம் பழ மில்க் ஷேக் தயார்.

இரும்புச்சத்து நிறைந்த கம்பு உப்புமா

வாரத்தில் 2 முறையாவது கம்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

தேவையான பொருட்கள்: 

கம்பு - ஒரு கப், வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 6, கடுகு - அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன், உப்பு - ஒன்றரை ஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து, எண்ணெய் - 6 ஸ்பூன். 

செய்முறை: * 

கம்பை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்க வேண்டும். பிறகு அதை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். * ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் சூடானதும் சலித்து வைத்த கம்பு மாவை சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும். * வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். * மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஒரு கப் கம்பிற்கு இரண்டு கப் தண்ணீர் என தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். * தண்ணீர் நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்துள்ள கம்பு, உப்பு சேர்த்து கலந்து விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும். * கம்பு வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டு இறக்கி பரிமாறவும். * இப்போது சூப்பரான கம்பு உப்புமா ரெடி.

முளைகட்டிய தானிய ஸ்டப்ஃடு பரோட்டா

முளைகட்டிய தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு இந்த பரோட்டா மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்

 பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை - ஒரு கப் கோதுமை மாவு - கால் கிலோ எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 செய்முறை *

 முதலில் தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும். * முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். * கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். * மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும். * தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும். * இப்போது சத்தான சுவையான முளைகட்டிய தானிய ஸ்டப்ஃடு பரோட்டா ரெடி.

சத்து நிறைந்த கேழ்வரகு பீட்ரூட் தோசை

தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு - 100 கிராம் அரிசி மாவு - ஒரு மேசைகரண்டி ரவை - ஒரு தேக்கரண்டி வெங்காயம் - 1 துருவிய பீட்ரூட் - 3 மேசைகரண்டி ப.மிளகாய் - ஒன்று கொத்தும்மல்லி - சிறிதளவு உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை *

 வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, ரவை, வெங்காயம், துருவிய பீட்ரூட், ப.மிளகாய், கொத்தும்மல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். * அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்துஎடுத்து பரிமாறவும். * இப்போது சூப்பரான கேழ்வரகு பீட்ரூட் தோசை ரெடி. * இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல் மற்றும் இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

கோதுமை ரவை இருந்தா போதும்... 15 நிமிசத்துல இந்த டிபன் செய்யலாம்...

டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த தோசையை சாப்பிடலாம். காலையில் குறைந்த நேரத்தில் சத்தான டிபன் செய்ய நினைப்பவர்கள் இதை செய்யலாம்.

தேவையான பொருட்கள்

 கோதுமை ரவை - கால் கிலோ அரிசி மாவு - கால் கப் சின்ன வெங்காயம் - 10 சீரகம் - அரை டீஸ்பூன் இஞ்சி - சிறிய துண்டு காய்ந்த மிளகாய் - 5 கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை

 கோதுமை ரவையை நன்றாக கழுவி கொள்ளவும். ஒரு மிக்சி ஜாரில் சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சி, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும். அடுத்து அதில் கழுவிய கோதுமை ரவையை போட்டு சற்று கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, பொடியாக நறுக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 15 நிமிடம் ஊற விடவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுத்து பரிமாறவும். சத்தான சுவையான டிபன் ரெடி.

10 நிமிடத்தில் செய்யலாம் முட்டை மிளகு பொடிமாஸ்

சப்பாத்தி, நாண், தோசையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.


தேவையான பொருட்கள்

முட்டை - 4 வெங்காயம் - 1 பெரியது தக்காளி - 2 சிறியது இஞ்சி பூண்டு விழுது இடித்தது - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி மிளகு தூள் - 3 1/2 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - 1 கைப்பிடி உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை

 வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கினால் போதும். அடுத்து அதில் இடித்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி சற்று வதங்கியதும், மஞ்சள் தூள், 3 தேக்கரண்டி மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும். முட்டை வெந்து உதிரியாக வரும் போது அரை தேக்கரண்டி மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கவும். இப்போது சூப்பரான முட்டை மிளகு பொடிமாஸ் ரெடி.

Featured Post

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. 🔴🟢🔴 சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூ...