Tuesday, May 30, 2023

முட்டை வெள்ளை கரு வெஜிடபிள் ஆம்லெட்

தேவையான பொருட்கள்

 முட்டை வெள்ளை கரு - 4 வெங்காயம் - 1 பூண்டு - 3 பற்கள் ப.மிளகாய் - 1 பச்சை குடைமிளகாய் - பாதி சிவப்பு குடைமிளகாய் - பாதி காளான் - 7 எண்ணெய், உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லி, வெங்காயத்தாள் - சிறிதளவு

 செய்முறை: * 

வெங்காயம், ப.மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். * காளான், குடை மிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிகொள்ளவும். * முட்டை வெள்ளை கருவில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும் . * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். * பின்பு நறுக்கிய காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். * அடுத்து அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து 5 நிமிடம் வதக்கி இறக்கி வைக்கவும். * ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து அடித்த வைத்துள்ள முட்டையை ஊற்றி கடாயை மூடவும். * பிறகு வேகவைத்த காய்கறிகளை முட்டையின் மீது பரப்பிவிட்டு பின்பு கடாயை மூடி வேகவிடவும். * இப்போது முட்டை வெள்ளை கரு வெஜிடபிள் ஆம்லெட் தயார்! * உங்களுக்கு விருப்பமான காய்கறிகளையும் இதில் சேர்த்து செய்யலாம்.

சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி

தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய் - ஒரு கப், தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள், பச்சை மிளகாய் - 2, கடுகு - கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் ஊற்றி கலந்து பரிமாறவும். இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.

சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் டென்டெர்ஸ்

சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

 குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம் பிரெட் - 1 துண்டு இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி வால்நட் - 1/2 கப் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி சீரக தூள் - 1 தேக்கரண்டி இட்டாலியன் சீசனிங் - 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழத்தின் சாறு சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி சோளமாவு - 1/4 கப் மைதா - 1/4 கப் தண்ணீர் உப்பு - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு செய்முறை: * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். * பிரெட்டை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரக தூள், இட்டாலியன் சீசனிங், எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும். * மிக்ஸியில் நறுக்கிய பிரெட் துண்டு, வால்நட், சில்லி பிளேக்ஸ், உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். * ஒரு கிண்ணத்தில் மைதா, சோளமாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். * ஊற வைத்த சிக்கனை மாவில் தோய்த்து பிறகு வால்நட் பிரெட் தூளில் பிரட்டி வைத்து கொள்ளவும். இவ்வாறு அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்து வைக்கவும். * கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். * சூப்பரான சிக்கன் டென்டெர்ஸ் தயார்.

காய்கறி மசாலா செய்ய

தேவையான பொருட்கள் 

வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 கேரட் - 1 பீன்ஸ் - 10 பட்டாணி - 1/2 கப் உருளைக்கிழங்கு - 4 பன்னீர் - 100 கிராம் காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி சீரக தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி ஆம்சூர் தூள் - 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை நறுக்கியது எண்ணெய் - தேவையான அளவு சோள மாவு கலவை செய்ய சோள மாவு - 1 மேசைக்கரண்டி மைதா - 2 மேசைக்கரண்டி உப்பு - 1/4 தேக்கரண்டி மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி தண்ணீர் கார்ன் பிளேக்ஸ் செய்முறை: * வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். * பன்னீரை துருவிக்கொள்ளவும். * பட்டாணியை வேகவைத்து கொள்ளவும். * ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் பாதி வதங்கியதும் காய்கறிகளைச் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும். * காய்கறிகள் வெந்த பிறகு வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும். * பின்பு காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள்,கரம் மசாலா தூள், உப்பு, ஆம்சூர் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். * பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலந்து விட்டு, மசித்து கொள்ளவும். * அடுத்து அடுப்பை அணைத்து விட்டு துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். * ஒரு தட்டில் எண்ணெய் தடவி, மசாலாவை பரப்பி ஆறவிட்டு, 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும். * கார்ன் பிளேக்ஸை பொடியாக்கி கொள்ளவும். * சோள மாவு கலவை செய்ய, சோள மாவு, மைதா, உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து கட்டியின்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.. * பிரிட்ஜில் வைத்த மசாலாவை எடுத்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டவும். * பின்பு அதை சோள மாவு கலவையில் முக்கி கார்ன் பிளக்ஸில் பிரட்டி எடுத்து 5 நிமிடம் பிரீஸரில் வைக்கவும். * கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த நக்கெட்ஸை சூடான எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். * இப்போது சூப்பரான வெஜிடபிள் நக்கெட்ஸ் ரெடி. * கெட்சப் அல்லது மயோனைஸ் உடன் சூடாக பரிமாறவும்.

ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி

 ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. தமிழக முதல்வர் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம் 30 மே 2023  ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Thursday, April 27, 2023

எண்ணங்களின் சக்தி


🌻☘️_*எண்ணங்களின் சக்தி*_ ☘️🌻

ஜப்பானியர்களின் ஆச்சரியமான ஆராய்ச்சி ...

 1. *அமிலத்தன்மை* உணவினால் மட்டும் உருவாவதில்லை , *மாறாக மன அழுத்தம்* காரணமாக உடலில் அதிக அமிலத்தண்மைஆதிக்கம் உருவாகிறது.

 2. *உயர் இரத்த அழுத்தம்* உப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்ல, முக்கியமாக *எதிர் மறை உணர்ச்சிகளை மனம் அதிகம் சிந்திப்பதால்* .

 3. *கொழுப்பு* கொழுப்பு நிறைந்த உணவுகளால் மட்டுமல்ல, *அதிகப்படியான சோம்பல்* அல்லது உட்கார்ந்த வாழ்க்கை முறையும் அதிக காரணம்.

 4. *ஆஸ்துமா* நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் இடையூறு ஏற்படுவதால் மட்டுமல்லாமல், பெரும்பாலும் *சோகமான உணர்வுகள்* நுரையீரலை நிலையற்றதாக ஆக்குகின்றன.

 5. *நீரிழிவு நோய்* குளுக்கோஸை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்ல, *பிடிவாதமான அணுகுமுறை* கணையத்தின் செயல்பாட்டை சீர்குலைக்கிறது.

 6. *சிறுநீரக கற்கள் *:. கால்சியம் ஆக்ஸலேட் வைப்பு மட்டும் இல்லை, ஆனால் * உணர்ச்சிகளையும் வெறுப்பையும்* மனதின் ஆழத்தில் வைத்திருப்பதாலும் ஏற்படுகிறது.

 7. *ஸ்பான்டைலிடிஸ் *: எல் 4 எல் 5 அல்லது கர்ப்பப்பை கோளாறு மட்டுமல்ல; நடப்பு காலாத்தில் உள்ள சுமையும்* எதிர்காலத்தைப் பற்றிய அதிக கவலையும் * காரணமாக அமைகின்றன.

 நாம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் முதலில்
 1) *உங்கள் மனதை சரிசெய்யவும்*
 2) வழக்கமான *உடற்பயிற்சிகளை* செய்யுங்கள்,
 2) *நகரத்தை* சுற்றி வாருங்கள்,
 3) *தியானம்* செய்யுங்கள்
 4) *மனதார சிரிக்கவும்* மற்றவர்களையும் சிரிக்க வைக்கவும்.
 5) *நல்ல நண்பர்களை உருவாக்குங்கள்*

 இந்த நடவடிக்கைகள் உங்கள் ஆன்மா, மனம் மற்றும் உடலை வலுப்படுத்த உதவும் ...

 *ஆரோக்கியமாக இருங்கள், உங்கள் வாழ்க்கையை அனுபவிக்கவும்.*
 *உயர்வை உயர்த்துங்கள்*

 ஆன்மீக ரீதியில் "சக்தி யோகிகள்" மேற்கூறியவற்றை நன்றாகவே புரிந்து கொள்வார்கள்: ஏனெனில் சக்தி வர்மம் பயிற்ச்சியில் உடலுக்கும் உணர்வுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு நன்றாகவே விளக்கப்பட்டுள்ளது.

 கோவிட் வைரஸ் 5.5 ஹெர்ட்ஸ் அதிர்வுகளைக் கொண்டுள்ளது மற்றும் 25.5 ஹெர்ட்ஸுக்கு மேல் இறக்கிறது.

 அதிக அதிர்வு கொண்ட மனிதர்களுக்கு, தொற்று என்பது ஒரு சிறிய எரிச்சலாகும், அது விரைவில் அகற்றப்படும்!

 குறைந்த அதிர்வு இருப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:
  பயம், சந்தேகம். துக்கம்,
 கவலை, மன அழுத்தம், பதற்றம்.
 பொறாமை, கோபம், ஆத்திரம்
 வெறுப்பு, பேராசை மற்றும் வலி

 *அதனால் ...... நம் உடலிலும் மனதிலும் அதிக அதிர்வுகளை ஏற்படுத்த நாம் முயற்ச்சி செய்ய வேண்டும், இதனால் குறைந்த அதிர்வெண் கொண்ட வைரஸ்கள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தாது.*

 இன்று பூமியின் அதிர்வெண் 27.4 ஹெர்ட்ஸ். ஆனால் இதுபோன்ற அதிர்வுறும் இடங்கள் உள்ளன:
 மருத்துவமனைகள்
 உதவி மையங்கள்.சிறைகள்
நிலத்தடி போன்றவை. இங்கு அதிர்வு 20 ஹெர்ட்ஸ் அல்லது அதற்கும் குறைவாக குறைகிறது.
 குறைந்த அதிர்வு கொண்ட மனிதர்களுக்கு, வைரஸ் ஆபத்தானது.
 வலி 0.1 முதல் 2 ஹெர்ட்ஸ் வரை.
 பயம் 0.2 முதல் 2.2 ஹெர்ட்ஸ் வரை.
 எரிச்சல் 0.9 முதல் 6.8 ஹெர்ட்ஸ் வரை.
 சத்தம் 0.6 முதல் 2.2 ஹெர்ட்ஸ்.
 பெருமை 0.8 ஹெர்ட்ஸ்.
 மேன்மை 1.9 ஹெர்ட்ஸ்.

 மறுபுறம் அதிக அதிர்வு என்பது பின்வரும் நடத்தையின் விளைவுவாக ஏற்படுகிறது: -

 தாராள மனப்பான்மை 95 ஹெர்ட்ஸ்
 நன்றியுணர்வு 150 ஹெர்ட்ஸ்
 இரக்கம் 150 ஹெர்ட்ஸ் அல்லது அதற்கு மேற்பட்டது.

 அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு மற்றும் இரக்கத்தின் அதிர்வெண் 150 ஹெர்ட்ஸ் மற்றும் அதற்கு மேற்பட்டது. 205hz இலிருந்து நிபந்தனையற்ற மற்றும் உலகளாவிய காதல் ..

அப்படியானால் போகலாம் வாருங்கள் ... *உயர் அதிர்வு பெறுவதற்கு !!!*

உயர் அதிர்வை பெற நமக்கு எதெல்லாம் உதவுகிறது?

 🌹 அன்பு ❤️, புன்னகை :-), ஆசீர்வாதம், நன்றி, விளையாடுவது, ஓவியம், பாடுவது, நடனம், யோகா, தியானம், சூரியனில் நடப்பது, உடற்பயிற்சி செய்வது, இயற்கையை ரசிப்பது போன்றவை.
  பூமி நமக்கு அளிக்கும் உணவுகள்: விதைகள்-தானியங்கள்-தானியங்கள்-பருப்பு வகைகள்-பழங்கள் மற்றும் காய்கறிகள்-குடிநீர்: ஆகவே உயர்ந்த அதிர்வை இவ்வையகம் பெற உதவுங்கள் ..... !!!

 *பிரார்த்தனையின் அதிர்வு மட்டும் 120 முதல் 350 ஹெர்ட்ஸ் வரை செல்லும்*

 எனவே பாடுங்கள், சிரிக்கவும், நேசிக்கவும், தியானிக்கவும், விளையாடுங்கள், நன்றி சொல்லுங்கள், வாழ்க!
 _ *அதிகமாக அதிர்வுறுவோம் ... !!!* _


Tuesday, April 18, 2023

பிரேசிலில் நூற்றுக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கின

 

பிரேசிலில் நூற்றுக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கின: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி..!!




பிரேசில் நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பது சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் உள்ள கடற்கரையில் பெரிய அளவிலான திருக்கை மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கின. நூற்றுக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ரியோடி ஜெனிரோ மாகாணநிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். 

கடலில் நிகழ்த்த சம்பவம் தொடர்பாக சுற்றுச்சுழல் அதிகாரிகள் கடல் தண்ணீரின் மாதிரியை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே கடல் தண்ணீரில் வழக்கத்தை விட ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தும் திருக்கை மீன்கள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து சுற்றுசூழல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு துணை நிற்போம்

 

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு துணை நிற்போம்: அமெரிக்கா அறிவிப்பு

ரஷியாவுக்கு எதிரான போரில் எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு துணை நிற்போம் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து ஓராண்டுக்கும் மேலான நிலையில், போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து, நீடித்து வருகிறது. பலரை பலி வாங்கிய இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. ரஷியாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு வேண்டிய நிதி, ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன. எனினும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் பலனற்று காணப்படுகின்றன. 

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  அந்தோணி பிளிங்கன், உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதுபற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், ஐரோப்பிய பகுதிகளில் அமைதியும், பாதுகாப்பும் நிலவ உக்ரைனின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது என பிளிங்கள் சுட்டி காட்டியுள்ளார். அதனால், போரில் எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம் என மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

அடுத்து வரவுள்ள காலங்களில் உக்ரைனின் அதிரடி தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராவது பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். அவற்றில், உக்ரைனின் பாதுகாப்பு சார்ந்த உதவிக்கான, கூட்டணி நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் உறுதிமொழி உள்ளிட்டவை பற்றியும் விவாதிக்கப்பட்டன என அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனையே உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் தனது டுவிட்டரில் "எங்களது பேச்சில், இரும்பு கவசத்துடன் கூடிய அமெரிக்காவின் ஆதரவை பிளிங்கன் மீண்டும் உறுதிப்படுத்தினார். போரில் வெற்றி பெறுவதில் உக்ரைனின் திறமையில் சந்தேகம் கொள்ளும் எந்த முயற்சிகளையும் அவர் நிராகரித்து உள்ளார். உக்ரைனின் நம்பிக்கைக்கு உரிய கூட்டாளராக அமெரிக்கா நீடிக்கிறது. வெற்றியை நோக்கிய எங்களது முன்னேற்ற பயணத்திலும், அமைதியை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புகை குண்டு

 

ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புகை குண்டு எறியப்பட்டதால் பதற்றம்!



ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புகை குண்டு எறியப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் புகை குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.

ஜப்பான் வக்காயமாவில் சிக்காசாக்கி துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திறந்த மேடையில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒரு மர்மப் பொருள் பாய்ந்து வந்தது. அது சற்று முன்னரே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. கிஷிடா நல்வாய்ப்பாக தப்பித்துக் கொண்டார். துரிதமாக செயல்பட்டு தன்னைத் தற்காத்துக் கொண்ட பிரதமர் கிஷிடாவை மெய்க்காவலர்கள் பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர். 

இந்த நிகழ்வில் பிரதமருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. மர்மப் பொருள் வீசிய நபரை பாதுகாப்புக் குழுவினர் மடக்கிப் பிடித்தனர். அவர் வீசியது ஸ்மோக் பாம்ப் எனப்படும் புகையை எழுப்பும் குண்டாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவ இடத்தில் இருந்த செய்தி ஊடகங்கள் பதிவு செய்த காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி ஜப்பானின் மேல்சபைக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தெற்கு நகரமான நாராவில் அபே பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின் போதுதான் ஜப்பான் கடற்படையின் தற்காப்புப் பிரிவு முன்னாள் உறுப்பினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் கொல்லப்பட்டார். ஷின்சோ அபேவின் மரணம் ஜப்பான் மக்களிடம் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த சம்பவம் நடந்து 9 மாதங்கள் ஆன நிலையில் இன்று பிரதமர் ஃபுமியோ கிஷிடா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மர்மப் பொருள் வீசப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய மாணவர்கள் தகுதி தேர்வு எழுத உக்ரைன் அரசு அனுமதி

 

இந்திய மாணவர்கள் தகுதி தேர்வு எழுத உக்ரைன் அரசு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு.!


உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட மற்ற வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தங்கள் நாடுகளில் தகுதித்தேர்வினை எழுதுவதற்கு உக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இந்தியாவிற்கு வந்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் இதற்கு ஒப்புதல் வழங்கியதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயா போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கியது. இன்னும் முழுதாக முடிந்தது என்று கூற முடியாத அளவுக்கு போர் நடவடிக்கைகள் நடந்து தான் வருகிறது. போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் அங்கு பயின்று வந்த வெளிநாட்டு மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

வெளிநாட்டு மாணவர்களை அந்தந்த நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு, உடனடியாக தங்கள் நாட்டுக்கு அழைத்துக் கொண்டது. இதில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் அந்தந்த நாட்டில் தங்கள் மருத்துவம் படிப்பை தொடர தற்போது உக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. 4 நாள் பயணமாக உக்ரைன் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் எமின் தபரோவா இந்தியா வந்துள்ளார். அவர் தான் இந்த தகவலை கூறியுள்ளார். வெளிநாட்டு மாணவர்கள் அவரவர் நாடுகளில் தங்கள் மருத்துவ படிப்பை தொடரலாம் என உக்ரைன் அரசு அனுமதி அளித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி

 

ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும்: தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர்மோடி



"உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும்" என தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

மத்திய இணை அமைச்சர் முருகனின் டெல்லி இல்லத்தில், தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றது.  பிரதமர் மோடி, ஆளுநர்கள் தமிழிசை மற்றும் சிபி ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக எம்எல்ஏ நயினார் நாகரேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார். 

"இந்தியா உலகின் பழமையான ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயும்கூட. இதற்குப் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. ஒரு முக்கியமான குறிப்பு தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட் 1,100-1,200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நாட்டின் ஜனநாயக மதிப்பீடுகள் குறித்த அம்சங்களை வெளிப்படுத்துகின்றன.

அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கிராம சபைக்கான உள்ளூர் அரசியலமைப்பு போன்றது. இதில் பேரவையை எப்படி நடத்த வேண்டும், உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறை எப்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த காலகட்டத்தில், ஒரு உறுப்பினர் எப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று சமீபத்தில் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை குறிப்பிடும் விதமாக பேசினார்.

தொடர்ந்து, "ஒரு நாடாக, இந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது நமது பொறுப்பு, ஆனால் இதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும், இப்போது எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், "உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும். சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலத்தில் இருந்து சிங்கப்பூர் வரை என உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழர்களை காணலாம். எந்த நாடுகளுக்குச் சென்றாலும், தமிழர்கள் தங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களையும் எடுத்துச் செல்கிறார்கள். அதனால்தான் பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், தமிழ் பண்டிகைகள் உலகம் முழுவதும் கொண்டாப்படுகின்றன.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பலமுறை பல சாதனை செய்த தமிழர்களை பற்றி பேசி இருக்கிறேன். ஐ.நா. சபையில் தமிழ் மொழியைப் பற்றிக் குறிப்பிட்டேன். தமிழ் இலக்கியமும் அதிகமாக மதிக்கப்படுகிறது. தமிழரின் பண்பு குறித்து தமிழ்த் திரையுலகம் நமக்கு பல படைப்புகளை வழங்கி உள்ளது.

இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த முதல் இந்திய பிரதமர் நான்தான். இலங்கையில் உள்ள தமிழர்கள் உதவிக்காகக் காத்திருந்தனர், எங்கள் அரசாங்கம் அவர்களுக்காக நிறைய செய்தது. நான் யாழ்ப்பாணம் சென்றபோது, அங்கு தமிழர்களுக்காக இந்திய அரசால் கட்டப்பட்ட வீடுகளை ஒப்படைக்கபட்டன. வீட்டில் நுழையும் முன் பால் காய்ச்சும் பாரம்பரிய சடங்கு, அதில் நானும் கலந்துகொண்டேன். அதன் வீடியோக்கள் தமிழ்நாட்டில் வெளியானபோது தமிழ் மக்களிடம் இருந்து நான் நிறைய அன்பை பெற்றேன்.

எனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற "காசி-தமிழ் சங்கமம்” வெற்றிகரமாக நடத்தப்பட்டது. காசிக்கும் தமிழகத்துக்கும் பழமையான வரலாற்று தொடர்புகள் உள்ளன. காசி நகரத்தில் உள்ள எந்தப் படகோட்டியிடம் பேசினாலும், அவருக்கு பல தமிழ் வாக்கியங்கள் தெரியும். காசி தமிழ் சங்கமத்தில், ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தமிழ் புத்தகங்கள் வாங்கப்பட்டதும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை நிறுவப்பட்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தமிழகம் மற்றும் தமிழர்கள் குறித்தும் பிரதமர் மோடி நெகிழ்ந்து பேசினார்.

தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்

 

தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (19.04.2023) மற்றும் நாளை (20.04.2023) ஆகிய 2 நாட்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 14 முதல் 17 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும்,18 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24-மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 40.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை

 

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை: நாளை முதல் துவக்கம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) மாணவா் சோ்க்கை நாளை (ஏப்.17) திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமாா் 53 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) இறுதி வேலை நாள் ஏப்.28-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்த நிலையில், தனியாா் பள்ளிகளைப் போல் அரசுப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும். அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளின் மாணவா் சோ்க்கை ஆண்டுதோறும் தாமதமாக நடைபெறுவது தனியாா் பள்ளிகளுக்கு சாதகமாகி வருகிறது. இந்த தாமதம் பெற்றோா்களிடம் எளிதில் மன மாற்றத்தை ஏற்படுத்திவிடும். இந்த நடைமுறை வருங்காலங்களில் தொடரும்பட்சத்தில் அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கை குறைவதைத் தடுக்க முடியாது என தலைமை ஆசிரியா்கள், கல்வியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2023-24) அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கை ஓரிரு நாள்களில் தொடங்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரபூா்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை முன்கூட்டியே தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வுப் பேரணி ஏப்.17 முதல் 28-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ளது.

இந்தப் பேரணிக்காக தயாரிக்கப்படும் பிரத்யேக வாகனத்தில் பள்ளிக் கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறும். இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியா்களும் பங்கேற்கவுள்ளனா். மாணவா் சோ்க்கை கொண்டாட்டத்துக்கான செலவுத் தொகை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும்.

1 முதல் 9- ஆம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளைச் சோ்க்க விரும்பும் பெற்றோா் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாள்களில் வழங்கப்படும் என்றனா்.

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது

 

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது: பேரவையில் முன்வடிவுநிறைவேறியது!

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது.

சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது: 2001-ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் இதனால் நீதி துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த சட்டத்திருத்தத்தில் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது. இதே போல, நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைதாள் கட்டணம் ஐந்து லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத்தாள் கட்டணம் 500 ரூபாயும், நிறுவனங்களுக்கான ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா பேரவையில் நிறைவேறியவுடன் அமலுக்கு வர உள்ளது.

குமரியில் கோடை விடுமுறை சீசன் தொடங்கியது

 

குமரியில் கோடை விடுமுறை சீசன் தொடங்கியது: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!

உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

தமிழ் புத்தாண்டை முன்னிட் டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டியும் கன்னியாகுமரியில் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான இறுதி ஆண்டு பொதுத்தேர்வு முடிவடைத் துள்ளதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த வண்ண மாக உள்ளனர்.

முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். அவர்கள் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். அதன் பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறை யில் நீண்ட வரிசையில் காத்தி ருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மாலை நேரங்களில் கடற்க ரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்க ரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ண மாக உள்ளனர். இதில் ஏராள மான சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இத னால் விடுமுறை நாளானஇன்று சுற்றுலா தலங்கள் களை கட்டிஉள் ளது. இந்த சுற்றுலா தலங் களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரைப் பகுதி யில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்புகுழும போலீ சாரும் தீவிர கண் காணிப்பு பணியில்ஈடுபட்டு வந்தனர்.

Featured Post

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. 🔴🟢🔴 சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூ...