Monday, August 8, 2022

Bus in Tamil Nadu which zone

The zones


Zone I Coimbatore, The Nilgiris, Erode, Tiruppur, Karur, Salem and Namakkal


Zone II Dharmapuri, Vellore, Tirupattur, Ranipet and Krishnagiri


Zone III Villupuram, Tiruvannamalai, Cuddalore and Kallakurichi


Zone IV Nagapattinam, Tiruvarur, Thanjavur, Tiruchi, Ariyalur, Perambalur and Pudukkottai


Zone V Dindigul, Madurai, Theni, Virudhunagar, Sivaganga and Ramanathapuram


Zone VI Thoothukudi, Tirunelveli, Kanyakumari and Tenkasi


Zone VII Kancheepuram, Tiruvallur and Chengalpattu


Zone VIII Areas under Greater Chennai Police limits

Best quality leaf springs available in Tamil Nadu market

Leaf Springs in Coimbatore and chennai 

நமது திருமந்திர நகரில்.

 






சிவாய நம


நமது திருமந்திர நகரில். (தூத்துக்குடி) அமைந்துள்ள.


ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்

இந்த சாஸ்திரமே போதுமானது.

 எந்த சாஸ்திரம் முடிவானது 


மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12 வருட வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள்.


 உறவையும், நட்பையும், அமைதியையும் பெரிதும் விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற, பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜதூதனாக அனுப்ப விரும்பினான். 


அவன் அறிவுக்கு எட்டியவரையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு எவரும் இதற்குத் தகுதியுடையவர்களாகப்படவில்லை. எனவே, ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து தன் கருத்தைச் சொன்னான்.


''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.


 எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும் அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள்


. ஆனால் நானோ, அமைதியையும் சமாதானத்தையும்தான் விரும்புகிறேன். துரியோதனனிடம் பாண்டவர் தூதுவனாக நீ செல். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தைக் கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், நமக்கென ஐந்து சிறிய நாடுகள் கேள். 


அதுவும் இல்லை யென்றால், ஐந்து ஊர்களைக் கேள். அதையும் அவர்கள் தர மறுத்தால், ஐந்து இல்லங்களையாவது கேள். எப்படியும் அதையாவது கேட்டு வாங்கி, போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டு'' என்றான் தர்மன்.


''யுதிஷ்டிரா, நிச்சயம் தர்மத்தை நிலைநாட்ட என்னால் ஆனதைச் செய்கிறேன். உங்களுக்காகத் தூது போய், நீ கூறியபடி, ஐந்து வீடுகளாவது யாசகம் கேட்டுப் பார்க்கிறேன். 


எதற்கும் தம்பிகளிடமும் திரௌபதியிடமும் கலந்தாலோசித்து, அவர்கள் அபிப்ராயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விடைபெற்றுச் செல்கிறேன்'' என்று கூறி, பீமார்ஜுனர்களைக் காணப் புறப்பட்டான் கண்ணன்.


பீமன், ராஜ்ஜியத்தை யாசகம் கேட்டுப் பெறுவதை விரும்பவில்லை. சூதாட்ட மண்டபத்தில் தான் செய்த சபதம் நிறைவேற, போர் வந்தே ஆக வேண்டும் என அவன் கர்ஜித்தான். 


அதே கருத்தை கண்ணனிடம் அடக்கமாகத் தெரிவித்தான் அர்ஜுனன். அதன்பின் திரௌபதியையும் நகுலனையும் சந்தித்தான் கண்ணன்.


''அண்ணா, நீ தூது போவது தர்மமா? அதுவும் ஐந்து வீடுகள் யாசகமாகக் கேட்கப் போகிறாயாமே! அதை அவர்கள் தர சம்மதித்துவிட்டால், அவிழ்ந்த என் கூந்தல் முடிவது எப்போது? உன் மீது ஆணையாக நாங்கள் செய்த சபதங்கள் என்னாவது?'' எனக் கண்ணீர் வடித்தாள் திரௌபதி. நகுலனும் தர்மனின் எண்ணத்துக்கு உடன்படவில்லை.


''பாஞ்சாலி, நீங்கள் அனைவரும் என் மீது ஆணையிட்டுத்தான் சபதங்கள் செய்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்று வதில் உங்களைவிட என் பொறுப்புதான் அதிகம். அவை நிச்சயம் நிறைவேறும். எப்படி என்று மட்டும் இப்போது கேட்காதே!


 நம்பிக்கையோடு பொறுத்திரு. நான் ஸஹதேவனைக் கண்டுவிட்டு, நாளை ஹஸ்தினாபுரம் புறப்படுகிறேன்.'' எனக் கூறி, ஸஹதேவன் குடில் நோக்கிப் புறப்பட்டான் கண்ணன்.


அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த ஸஹதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து, வரவேற்றான்.


''ஸஹதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். அதற்காக எல்லா உபாயங்களையும் கையாளப் போகிறேன். 


நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன். போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்... அதையும் முயன்று பார்க்கிறேன்'' என்றான் கண்ண பிரான். ஸஹதேவன் சிரித்தான். 


''போர் வராமல் தடுக்கத்தானே உபாயம் தேடுகிறாய்! நல்லதொரு உபாயம் உண்டு. சொல்கிறேன். செய்ய முடியுமா, பார்?'' என்று ஆரம்பித்தான் ஸஹதேவன்.


தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது. அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.


''கண்ணா, கேள்... பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு,


 எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்'' என்றான் ஸஹதேவன்.


கண்ணன் உரக்கச் சிரித்தான். ''என்னைக் கட்டுவதா? எப்படி முடியும் ஸஹதேவா?'' என்றான். ''ஏன் முடியாது?'' என்று எதிர் சவால் விட்டான் ஸஹதேவன். 


அந்தக் கணமே, பல்லாயிரம் கண்ணனாக வடிவெடுத்து மண்டபம் எங்கும் வியாபித்தான் ஸ்ரீகிருஷ்ணன். பார்த்த பரவெளியெல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது. இத்தனைப் பரிமாணங்களையும் எப்படிக் கட்டுவது?


ஸஹதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான். கண்களை மூடினான். பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ரூப, குண, நாமங்களை மனதில் தீவிரமாகத் தியானித்தான். பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது. அப்போது பிறந்தது ஸஹதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்.


'ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதவே

விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோ நமஹ

நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே

கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ!’


என்பதே அந்த மந்திரம். ஸஹதேவன் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க, கண்ணன் எடுத்த வடிவங்கள் ஒவ்வொன்றாய்க் கலந்து, ஒன்றோடொன்று இணைந்து ஒரே கண்ணனாகி, அவனும் ஸஹதேவனின் இதயத்துக்குள்ளே கட்டுண்டான்.


 ''ஸஹதேவா, நீ வென்றுவிட்டாய்! என் தாய் என்னை உரலில் கட்டினாள். பிருந்தாவன கோபியர், கட்டுத்தறியில் கட்டினார்கள். நீயோ இதயத்தில் கட்டிவிட்டாய்.


 பக்தியினால் கடவுளையும் கட்ட முடியும் என்று காட்டிவிட்டாய். போதும்! என் கட்டுக்களை அவிழ்த்து, என்னைப் போக விடு!'' என்று கூறினான் கண்ணன்.


இப்போது ஸஹதேவன் பேரம் பேசினான். ''கட்டுக்களை அவிழ்த்துவிடுவதானால், எனக்கு ஒரு வரம் கொடு'' என்றான். ''கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன். ''பாரதப் போரில் குந்தி புத்திரர்களான எங்கள் ஐவரையும் காப்பாற்றுவதாக வரம் கொடு'' என்றான் ஸஹதேவன்.


கண்ணன் மீண்டும் உரக்கச் சிரித்தான். ''ஸஹ தேவா! சற்று அவகாசம் தருகிறேன். ஏதாவது விட்டுப் போயிருந்தால், அதையும் வரத்தில் சேர்த்துக் கொண்டு வாசகங்களைச் சரியாக அமைத்து வரத்தை மீண்டும் கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன்.


''இல்லை கிருஷ்ணா! நீ என்னைக் குழப்பப் பார்க்கிறாய். நான் கேட்டது கேட்டதுதான். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் எங்கள் ஐவரையும் எப்படியாவது காப்பாற்றிவிடு!'' என்றான். ''நல்லது ஸஹதேவா. வரம் மட்டுமல்ல. வாக்கும் அளிக்கிறேன். 


பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் உங்கள் ஐவரையும் காப்பாற்றுகிறேன். என்னைக் கட்டவிழ்த்து விடு'' என்றான் கண்ணன். ஸஹதேவன் தியான நிலையைக் கலைத்து கண்ணனைக் கட்டவிழ்த்தான்.


கர்ணனோடு சேர்ந்து குந்திக்கு ஆறு புதல்வர்கள் என்பதை அறியாமல், 'குந்தி புத்திரர்கள் ஐவரை மட்டும் காப்பாற்று’ என வரம் கேட்டுவிட்டானே ஸஹதேவன்.


 பாவம், கர்ணனைக் காப்பாற்ற இவனும் தவறிவிட்டானே! விதி யாரை விட்டது!'' என்று எண்ணிக் கொண்டே கண்ணன் ஹஸ்தினாபுரப் பயணத்தை தொடங்கினான்.


கண்ணன் சங்கல்பப்படி, குருக்ஷேத்திரப் போர் தொடங்கியது. போரின் கடைசி நாட்களில் கர்ணனின் மரணம் நிகழ்ந்தது.


 அப்போது அவனுக்குக் கொடுத்த வாக்கின்படி யுத்த பூமியில் வந்து, தன் மகன் கர்ணனை மடி மீது கிடத்தி, ''மகனே'' என்று கதறி அழுதாள் குந்தி. 


அப்போதுதான் பாண்டவர்களுக்கு, கர்ணன் தங்கள் சகோதரன் என்பது தெரிந்தது. அனைவரும் கதறினர். ஸஹதேவனின் நினைவலைகள் பின்னே சுழன்றன. 


கட்டுண்ட கண்ணனிடம் தான் கேட்ட வரமும், அப்போது அவன் தந்த வாய்ப்பும், தன் அறியாமையால் அந்த வாய்ப்பை இழந்து, ஐவரை மட்டுமே காப்பாற்ற தான் கேட்ட வரமும், அவன் நினைவுக்கு வந்தன. தான் கற்ற சாஸ்திர அறிவு தன்னைக் காப்பாற்றவில்லை என்பதை ஒரு கணம் உணர்ந்தான்.


''ஊருக்கெல்லாம் ஜோசியமும் ஆருடமும் சொல்ல உதவிய சாஸ்திரம், எனக்குக் கூடப் பிறந்த சகோதரன் இன்னொருவன் இருக்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டவில்லையே? இதனை நான் கணிக்கத் தவறிவிட்டேனே... இது மாயை. கண்ணன் காட்டும் வழி ஒன்றே மெய். அதுவே உயர்ந்த சாஸ்திரம். 


இனி எந்த சாஸ்திரமும் வேண்டாம்'' 

பகவான் கிருஷ்ணர் கூறிய சாஸ்திரமான பகவத்கீதையும் ஸ்ரீமத் பாகவதம் போதுமே


இந்த சாஸ்திரமே போதுமானது.


ஹரே கிருஷ்ண பிரபுபாத் கீ ஜெய்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.
அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில
அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

Friday, August 5, 2022

காமாட்சி_விருத்தம்_படித்ததுண்டா

#மிகவும்_அருமையான_பதிவு

#காமாட்சி_விருத்தம்_படித்ததுண்டா? 

அவர் எவ்வளவு உரிமை எடுத்துக்கொண்டு அன்னையிடம் வாதாடுகிறார் பாருங்கள்.

எனக்கு நீ வரம் தர இருவரும் மடிபிடித்துத் தெருவினில் நிற்கவேண்டுமா தாயே?

என்ன ஒரு அதட்டல்?

எத்தனை நேசம்? 

அடேங்கப்பா !!

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகளைச் சொல்லவில்லையோ?

பேய்ப் பிள்ளையானாலும் தான் பெற்ற பிள்ளையைப் பிரியமாய் வளர்க்கவில்லையோ?

கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விட்டுக் கதறி நான் அழுத குரலில்
கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும் உன் காதினில் நுழைந்ததில்லையோ?

இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா? 

இனி விடுவதில்லை 

சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும் இது தருமம் இல்லையம்மா

எல்லோரும் உன்னையே சொல்லியே ஏசுவார் 

இது நீதி அல்லவம்மா

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கஜேந்திரன் விருப்பம் 999 நிறைவுபெற்றது.

ஆயிரம் மலர்களை அர்ச்சிக்க வேண்டும் என்பது கஜேந்திரன் விருப்பம் 999 நிறைவுபெற்றது.

ஆயிரமாவது மலரை பறிக்க மிகவும் ஆவலோடு சென்றது கஜேந்திரன் தடாகம் சலன மின்றி இருந்தது தன்னுடை பரந்த பாதத்தை நீரில் வைத்தது உடனே தடாகம் அதிர்ந்தது எங்கிருந்தோ வந்த முதலை அதன் கால்களை பற்றி கொண்டது ஆனைக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை உடனே காலை உதறிவிட்டு செல்லாம் என முயன்ற போதுதான் முதலையின் பலத்தை உணர்ந்தது உடனே யானை கரைக்கு இழுக்க முதலை நீருக்கு இழுக்க இப்படியே பல ஆண்டுகள் ஓடியது யானைக்கு புத்தி வந்தது இனி நம் பலத்தை நம்பி பயன் இல்லை என்று கூக்குரல் இட்டது.

சகல தேவர்களையும் படைத்து அவர்களை பரிபாலனம் செய்வது எதுவோ சகல லோகங்களிலும் அனுவில் இருந்து அண்டம் முழுவதும் நிறைந்தது எதுவோ என்றுமே அழிவற்று சாச்வதமாக இருப்பது எதுவோ அனைத்தையும் தாங்கி நிற்கும் பிரமாண்டம் எதுவோ தமக்கு மேல் ஒருவரும் இல்லாத ஆதி மூலம் எதுவோ அது எம்மை காக்கட்டும் என ஹே ஆதி மூலமே என்று அலறியது.

இந்திரலோகம், ப்ரம்மலோகம் கைலாயத்தில் இருந்து பார்த்தவர் யாம் இல்லை யாம் இல்லை என்று அமர்ந்தனர். ஸீ ஹரி கருடா என்று அலறினான் தன்னை அலங்காரம் செய்து கருடன் புறப்படும் முன்னே சண்டமாருதம் போல் நொடிக்குள் வந்தான் கருடனை விட்டு விட்டு எடுத்தான் சக்ராயுதத்தை விடுத்தான் முதலையை நோக்கி உடனே கஜேந்திரனுக்கு முதலையிடம் இருந்து விமோசனம் கஜேந்திரனோ தேவாதி தேவா தங்களை அடியேன் அழைத்தது இந்த அற்ப உயிரை காக்க அலல இந்த தாமரையை தங்கள் திருவடியில் சமர்பிக்கவே என்று ஆனந்த கண்ணீர் விட்டது கருணாகர மூர்த்தியான பரம் பொருள் இதை கேட்டதும் தண்ணீரை காட்டிலும் இலகுவான அவன் மனது சும்மா இருக்குமா என்ன கஜேந்திரன் பாதத்தை தன் மடியில் கிடத்தி முதலை பல் பட்டு இரத்தம் வந்த இடத்தில் தன் பட்டு பீதாம்பரத்தை எடுத்து தன் வாயினுள் எச்சிலை தொட்டு அதற்கு ஒத்தடம் கொடுத்து தன்னை தாயிலும் மிக்க தயாபரன் என்று நிருபிக்கிறான்.

ஆஹா ஆஹா ஹரி ஹரி உம்மை மிஞ்சியவர் எவர்!

ஈடும் எடுப்பும் இல் ஈசன் அல்லவா நீ

நாமமே பலம் நாமமே சாதனம்

இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி

மனக்கவலை

*ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.*
     *அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.*
     *மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.*
     *பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாக சுற்றிக் கொண்டது.*
     *விஷப் பல்லைக் காட்டி சீறியது .குரங்குக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது.*
     *கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.*
     *தன் கூட்டத்தில் ஏதாவது உதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டது !!!*
     *ஆனாலும் எந்த குரங்கும் அந்த குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.*

     *"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு"*
     *"இது கொத்துனா உடனே மரணந்தான்"
     "குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும்"*
     *இவன் தப்பிக்கவே முடியாது"*
     —> *என்றெல்லாம் மற்றகுரங்குகள், குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன.*
     *தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையில் அந்த குட்டிக் கரங்கிற்கு வேதனை சூழ்ந்துகொன்டது !!!*
     *எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பைப் பார்க்கப் பார்க்க பயம்தான் அதிகரித்தது !!!*
     *மரணபயம் குரங்கின் முகத்துக்கு முன்னால் விசுவரூபமாக காட்சியளித்தது !!!*

     *"ஐயோ. புத்தி கெட்டுப் போய்நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே" !!!*
     *குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது !!!*
     *ஆனாலும் எந்த பயனும் நிகழவில்லை !!!*

     *நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.*
     *உணவும், நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.*
     *கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.*
     *அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.*
     *குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார்.*
     *குரங்கை நெருங்கி வந்தார்.சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில்,*
     *தன்னை நோக்கி மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.*
     *அவர் நெருங்கி வந்து சொன்னார், "எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற?*
     *அதைக் கீழே போடு" என்றார்.*
     *உடனே அந்த குட்டிக் குரங்கு, "ஐயய்யோ, பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும்" என்றது.*
     *அவர் மீண்டும் சொன்னார், "பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு.*
     *அதைக் கீழே போட்டுவிடு".*
     *அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.*
     *அட !!! நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது.*
     *அப்பாடா. குரங்குக்கு உயிர் வந்தது. அவரை நன்றியுடன் பார்த்தது.*
     *"இனிமேலாவது, இந்த முட்டாள் தனத்தைப் பண்ணாதே" என்றபடி ஞானி கடந்து போனார்.*

     *ஆம் !!! சகோதர சகோதரிகளே !!! கிட்டத்தட்ட நாம் அனைவருமே, "மனக்கவலை" என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு ... விடவும் முடியாமல், பிடித்திருக்கவும் முடியாமல் மனதிற்குள் கதறிக் கொண்டிருக்கிறோம்.*
     *வெளி வேஷத்திற்கு, மகிழ்ச்சியாக இருப்பது போல், சிரித்தபடி காட்டிக் கொண்டு, உள்ளுக்குள் கதரிக் கொண்டிருக்கும் !!!*
     *ஆம் !!! நண்பர்களே !!! நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம் !!! அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும் ?*
     *எவ்விதமான நிகழ்வுகள் எல்லாம் அடிக்கடி நினைவுக்கு வந்து உங்களுக்கு தொல்லையை கொடுக்கிறதோ அவற்றை மறக்க முயற்சி செய்யுங்கள் !!!*
     *எவ்விதமான நிகழ்வுகள் எல்லாம் உங்கள் மனதுக்கு நிம்மதியை தருகிறதோ, அவற்றை அடிக்கடி நினைத்துப் பாருங்கள் !!!*
     *கவலைகள் தானாக விளங்குவதையும் மகிழ்ச்சிகள் தானாக நெருங்குவதை உணர்வீர்கள் !!!*

Friday, July 29, 2022

100 ஆண்டுகள் வாழும் ரகசியம்

100 ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரை கடைபிடியுங்கள்

🏆அதிகாலையில் எழுபவன்
🏆 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்
🏆 முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்
🏆 மண்பானைச் சமையலை உண்பவன்
🏆 உணவை நன்கு மென்று உண்பவன்!
🏆 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்
🏆 வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்
🏆கோலா, கலர்பானங்களை உபயோகிக்காதவன்
🏆 மலச்சிக்கல் இல்லாதவன்
🏆 கவலைப்படாத மனிதன்
🏆 நாவடக்கம் உடையவன்
🏆 படுத்தவுடன் தூங்குகிறவன்
🏆எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்
🏆 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்
🏆 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்
🏆 கற்பு நெறி தவறாது வாழ்பவன்
🏆 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்
🏆 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்
🏆 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்
🏆 இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்
🏆தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்
🏆 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்
🏆 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்
🏆 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்

மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் வாழமுடியும்

நமது பாரத நாட்டின். உலகிலேயே.முதன்.முதலில் சதுரங்கம் விளையாடியது


 நமது பாரத நாட்டின். உலகிலேயே.முதன்.முதலில் சதுரங்கம் விளையாடியது சிவபெருமானும்.பார்வதியும்தான்.நடந்த.இடம்.திருப்பூவனூர்...இறைவன்நாமம் ஸ்ரீ.சதுரங்கவல்லபேஷ்வரர்.🙏

பிரம்மாவுக்கு ஒரு நாள்!

திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அறிந்து கொள்ள சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமி முழுவதும் பரப்பியவருமான அகத்திய மகரிஷி விரும்பினார்;

எனவே,அவர் திருக்கையிலாய மலையில் இருக்கும் நந்தி பகவானிடம் சென்று கேட்டார்;

திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை கூற இயலுமா? என்று கேட்கின்றார்;

இந்த கேள்வியை கேட்டதும் நந்திபகவானுக்கு கண்ணீர் வருகின்றது;அழுகின்றார்;அழுகின்றார்; அழுதுகொண்டே இருக்கின்றார்;எவ்வளவு காலம் தெரியுமா?

2000 கோடி பிரம்மாக்களுடைய ஆயுள் காலம் வரை! மற்றும் 3000 கோடி நாராயணர்களின் ஆயுள் காலம் வரை!!!

பூமியில் 432 கோடி ஆண்டுகள் ஆனால்,அது பிரம்மாவுக்கு ஒரு நாள்! அப்படி 100 வருடங்கள் ஆகி விட்டால் ஒரு பிரம்ம பதவி நிறைவடைந்துவிடும்;இன்னொருவர் பிரம்மா பதவிக்கு வந்துவிடுவார்;ஒரு பிரம்மாவின் ஆயுள் முடிந்தால் அது ஒரு நாராயணரின் வாழ்நாளில் ஒரு நாளுக்குச் சமம் ஆகும்;

இப்படி 2000  
 கோடி பிரம்மாக்களின் ஆயுள் காலம் வரை நந்தி பகவான் அழுகின்றார்;அது ஆனந்த கண்ணீர்!

அகத்திய மகரிஷிக்கு வருத்தமாகிவிட்டது;ஏதும் தெரியாமல் கேட்டுவிட்டோமோ? என்று மனம் வருத்தப்பட்டுவிட்டார்;

அப்புறம் தான் தெரிகின்றது;

திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அதுவரை யாருமே கேட்கவில்லை;அகத்திய மகரிஷி முதன் முதலில் கேட்டதால் உண்டான பூரிப்பால் அத்தனை காலம் நந்தி பகவான் அழுதிருக்கின்றார் என்று;

குருவி மூளை கொண்ட நம்மால் இச்சம்பவத்தை ஓரளவுக்கு மேல் ஜீரணிக்க முடியுமா? ஓவர் பில்ட் அப் என்றுதான் எண்ணுவோம்;ஆனால்,நாம் இயல்பாக யாராவது ஒரு ஆன்மீக உண்மையை சொன்னால் பின்பற்றுகின்றோமா?

அதன் பிறகு,நந்திபகவான் அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அகத்திய மகரிஷியிடம் சொல்ல ஆரம்பிக்கின்றார்;இன்று வரையிலும் பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன;இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்;அவரது உபதேசத்தை அகத்திய மகரிஷி கேட்டுக் கொண்டே இருக்கின்றார்;அதுதான் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் படம்!!!

பிரபஞ்சத்தின் ஆன்மீக மையமாக இருப்பது அண்ணாமலை!

யார் ஒரே பிறவியில் அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் நிறைவு செய்கின்றார்களோ,அவர்களுடய அனைத்து முற்பிறப்பு கர்மவினைகளும் முழுமையாக அழிக்கப்படுகின்றன;அதனால், அவர்களுடைய சத்குருவை நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கின்றது;அதன் பிறகு,மீண்டும் இந்த பூமியில் பிறவாத வரம் அண்ணாமலையாரால் கிடைக்கின்றது;

இந்த பிறவியிலேயே அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் வரவே பிறவி எடுத்திருக்கின்றோம்;நமது 7 வது வயது நிறைவடையும் வரை மட்டுமே இந்த ஆன்மீக லட்சியம் நினைவில் இருக்கின்றது;அதன் பிறகு,இதை மட்டும் மறந்துவிடுகின்றோம்;

இன்றைய கால கட்டத்தில் யாரெல்லாம் அகில இந்திய அளவில் ஆன்மீக அமைப்புகளை நடத்திவருகின்றார்களோ,அவர்கள் அனைவருமே தமது 20 அல்லது 30 வது வயதிற்குள் அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் வந்தவர்கள் தான்!

இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவராலும் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும்;வாரம் ஒரு நாள் அல்லது 15 நாட்கள் ஒருமுறை என்று அண்ணாமலையாரை கிரிவலம் வர திட்டமிடவேண்டும்;இந்த 5 ஆண்டுகள் வரை அசைவம்,மது இரண்டை மட்டும் தவிர்த்தால் போதும்;வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது;

அப்படி 1008 முறை அண்ணாமலையை கிரிவலம் வந்துவிட்டால்,நமது ஜன்ம நட்சத்திர சற்குருவின் தரிசனம் கிடைக்கும்;அவரது அருளால்,அடுத்த மூன்று உலகங்களிலும் அவரது ஆன்மீக வழிகாட்டுதல் கிடைக்கும்;

ஒரே ஒருமுறை "அண்ணாமலை" என்றோ "அருணாச்சலம்" என்றோ "சோணாச்சலம்" என்றோ சொன்னால் 3 கோடி முறை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தமைக்குச் சமம் என்று அருணாச்சலேஸ்வரர் நமக்கு உபதேசமாக தெரிவித்திருக்கின்றார்;

கடந்த 30 ஆண்டுகளாகத்தான் அண்ணாமலையில் "பவுர்ணமி கிரிவலம்" பிரபலம் ஆகியிருக்கின்றது;

பவுர்ணமி அன்று மட்டும் தான் அண்ணாமலை கிரிவலம் செல்வார்கள் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்;இது தவறு;

ஒவ்வொரு தமிழ் மாதம் 1 ஆம் தேதி அன்றும் கிரிவலம் செல்வது சைவர்களின் வழக்கமாக இருக்கின்றது;

முதன் முதலில் அண்ணாமலையை கிரிவலமாக வலம் வந்தது நம் அனைவருக்கும் தாயாக இருக்கும் பார்வதி தேவி;தேய்பிறை சிவராத்திரி திதி அன்றுதான் அன்னை கிரிவலம் வந்தாள்;நமது அன்னைக்கு பக்கபலமாக வந்தது நம் அனைவருக்கும் முதல் குருவாக இருக்கும் அகத்திய மகரிஷி தான் கிரிவலம் வந்தார்;

காஷ்மீர் முதல் கண்டி வரையிலும்,குஜராத் முதல் வியட்னாம் வரையிலும் வாழ்ந்து வரும் ஒவ்வொரு இந்துக்குடும்பத்திலும் திருமணம் ஆன தம்பதியர்கள் மணமான மறுநாளே குடும்பமாக வாழ மாட்டார்கள்;

மணமான ஓராண்டுக்குள் மணமகனின் பெற்றோர்+உடன் பிறந்தோரும்;மணமகளின் பெற்றோர்+உடன் பிறந்தோரும் அண்ணாமலைக்கு வருவர்;வந்து தம்பதியாக கிரிவலம் வருவார்கள்;கிரிவலம் நிறைவடைந்த பிறகு,அண்ணாமலையாரையும்,
உண்ணாமுலையையும் வழிபட்டுவிட்டு அவர்களுடைய ஊருக்கு திரும்புவர்;அதன் பிறகுதான் வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பார்கள்!!! இந்த நடைமுறையை இன்றும் சில சமுதாய மக்கள் மட்டும் விடாப்பிடியாக செயல்படுத்தி வருகின்றார்கள்;

கணபதி லோகம், இந்திர லோகம்,எம லோகம்,பைரவ லோகம்,ஸ்ரீசக்கர லோகம், ஸ்ரீவைகுண்டம்,சத்திய லோகம்,
  கந்தர்வ லோகம்,நாக லோகம்,வாயு லோகம்,அக்நி லோகம்,முனி லோகம் என்று ஏராளமான உலகங்கள் இருக்கின்றன;இங்கே வாழ்பவர்களுக்கு அண்ணாமலை கிரிவலம் பற்றி நிறைய்ய்ய்ய்ய தெரியும்;ஆனால்,அங்கே இருந்து அண்ணாமலை கிரிவலம் செல்ல அவ்வளவு சுலபமாக அனுமதி கிடைக்காது;

நமக்கோ நினைக்கும் போதெல்லாம் அண்ணாமலை கிரிவலம் செல்லும் சந்தர்ப்பம் அமைகின்றது;சரியாக பயன்படுத்திக் கொள்வோம்;

விண்ணுலகங்களில் பித்ருக்கள் உலகம் என்ற ஒன்று இருக்கின்றது;அங்கே நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் பல லட்சம் ஆண்டுகள் தவம் இருந்தால்,இங்கே அவர்களுடைய பேரன்/பேத்தியாகிய நமக்கு ஒரே ஒரு முறை அண்ணாமலை கிரிவலம் செல்லும் பாக்கியம் கிட்டும் என்று நாடிக்கிரந்தங்கள் தெரிவிக்கின்றன;

கிரிவலம் செல்லும் முறைகள் மட்டும் 1,00,008 விதங்கள் இருக்கின்றன;

ஒவ்வொரு சதுர்த்தி திதி அன்றும் கணபதி கிரிவலம் வருகின்றார்;கண்பதியின் அருளைப் பெற ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் நாம் கிரிவலம் வரலாம்;

ஒவ்வொரு பஞ்சமி அன்றும் வராகி அன்னை கிரிவலம் வருகின்றாள்;

ஒவ்வொரு அஷ்டமி அன்றும் பைரவர் கிரிவலம் வருகின்றார்;பைரவ சித்தர்களும் கிரிவலம் வருகின்றார்கள்;கடுமையான கஷ்டங்கள் உள்ளவர்கள் ஒவ்வொரு அஷ்டமி அன்றும் கிரிவலம் வர நிம்மதியான வாழ்க்கையைப் பெறுவார்கள்;

ஒவ்வொரு திருவாதிரை அன்றும் முனி கிரிவலம் வருகின்றார்;முனி கணங்கள் கிரிவலம் வருகின்றன;

ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரி அன்றும் ஈசனின் துணைவியும்,நம் அனைவருக்கும் அன்னையாக இருக்கும் பார்வதி தேவி கிரிவலம் வருகின்றாள்;

அருணாச்சலேஸ்வரரின் அருளைப் பெறுவோம்;

கீழே தாங்கள் பார்ப்பது நந்தி பகவான்,அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை அகத்திய மகரிஷிக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கின்றார்;

அண்ணாமலைக்கு அருகில் (விழுப்புரம், திண்டிவனம்,செங்கல்பட்டு,கிருஷ்ணகிரி,
 பாண்டிச்சேரி,கடலூர்,விருத்தாச்சலம்,கள்ளக்குறிச்சி,திருக்கோவிலூர்,உளுந்தூர்பேட்டை மற்றும் பல ஊர்களில்) வாழ்ந்து வரும் சிவ பக்தர்கள் இந்த பொன்னான வாயப்பினை பயன்படுத்தி இப்பிறவியிலேயே முக்திக்கு முயற்சி செய்யலாம்;

அடுத்த 5 ஆண்டுகள் எல்லாவிதமான பொழுதுபோக்குகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய முயற்சி செய்யலாம்;

இந்த ஊர்களில் வசிப்பவர்களுக்கு மிகக் குறைந்த நேரத்தில் அண்ணாமலையைச் சென்றடையும் வாய்ப்பு இயல்பாகவே கிட்டியிருக்கின்றது;

மற்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு கொஞ்சம் பணம்+நேரம் அதிகமாக தேவைப்படும்; 

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ 
ஹரி சிவனடியார் திருமடாலயம் இராமேசுவரம்

இயற்கையோடு நாம் பேசலாம்

முதலில் இதை நான் நம்பவில்லை. 
என் முக நூல் தோழி ஒருவரின் வாழ்வில் நடந்த உண்மைக் கதை இது.
இந்தப் பெண் கணவனோடு சென்னையில் வசிப்பவள்.
கல்யாணமாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாதவள்.
வழக்கம் போல கணவன் வீட்டின் ஏச்சும் பேச்சும். குறிப்பாக மாமியாரின் குத்தலும்.
ஒருமுறை கணவனின் சொந்த ஊருக்கு கணவனோடு போய் இருக்கிறாள். மதுரை அருகே ஒரு சின்னஞ்சிறு கிராமம். அவர்கள் வீட்டுக்கு பின்னால் ஒரு சில மாமரங்கள். அதில் ஒரு மரம் பல வருஷ காலமாக காய்க்கவில்லை.
ஒரு நாள் மாலை. மாமியார் தன் மகனிடம், இவள் கணவனிடம் சொல்லி இருக்கிறாள்:
“ஏம்பா, அடுத்த மாசம் இந்த மரத்தை வெட்ட சொல்லி விடலாம்பா.”
“ஏம்மா ?”
“பின்னே என்னப்பா ? இது கூட சேர்ந்த மரங்கள் எல்லாம் காய்ச்சு தள்ளுது. இது மட்டும் ஒரு காயும் காய்க்கலை. அதனாலே ஆளை வரச் சொல்லி வெட்டிடலாம்னு இருக்கேன்.”
கணவன் இதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாலும் இந்தப் பெண்ணுக்கு மனம் பொறுக்கவில்லை. உடனேயே அந்த மாமரத்தை தேடிப் போய் இருக்கிறாள். கண்ணீரோடு அந்த மாமரத்தை கட்டிப் பிடித்திருக்கிறாள். கண்களில் நீர் வழிய அந்தப் பெண் இப்படி சொல்லி இருக்கிறாள் : “அட மாமரமே, நான்தான் காய்க்காத மரம். பிள்ளை பெறாத மலடி. என்னைத்தான் எல்லோரும் திட்டுகிறார்கள். நீயும் ஏன் என்னைப் போல் காய்க்காமல் இப்படி நிற்கிறாய் ? என்னையாவது திட்டுகிறார்கள். உன்னை வெட்டப் போகிறார்கள். தயவு செய்து நீயாவது காய்த்து விடு. நீயும் என்னைப் போல் மலட்டுப் பட்டம் வாங்காதே...” என்று கேவி கேவி அழுதிருக்கிறாள்.
அப்புறம் இவள் கணவனோடு சென்னை புறப்பட்டு வந்து விட்டாள். ஆனால் ஒவ்வொரு நாளும் மனசுக்குள் அந்த மரத்தை வெட்டும் காட்சி தெரிய தனியாக போய் உட்கார்ந்து அழுது தீர்த்திருக்கிறாள்.
ஆனால் இதற்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியம்.
அத்தனை வருட காலம் காய்க்காத அந்த மாமரம் , அதற்குப் பின் பூத்து காய்த்து , இப்போது மற்ற மாமரங்களைப் போல செழிப்பாக நிற்கிறதாம். மரத்தை வெட்ட வேண்டாம் என மாமியார் முடிவு செய்து விட்டாராம்.
முதலில் நான் இதை நம்பாவிட்டாலும் விஞ்ஞானபூர்வமாக சில விஷயங்கள் விளங்கிய பிறகு இப்போது அதை முழுமையாக நம்புகிறேன்.
ஆம். இயற்கையோடு நாம் பேசலாம். மனிதர்களை விட மரங்கள் நம்மை புரிந்து கொள்ளும். 
நம்மாழ்வார் வாழ்விலும் கூட இதைப் போல ஒரு விஷயம் நடந்திருக்கிறது.
விழுப்புரத்தில் உள்ள சிறு கிராமத்தில், ஒரு விவசாயியின் தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார் நம்மாழ்வார். அந்த விவசாயி, "ஐயா, இந்த பலா மரம் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக இருக்கு. ஆனால் இது நாள் வரை ஒரு பழம் கூட தரல. இந்த மரத்தின் நிழலால், மற்ற பயிர்களும் வளர்வதில்லை. அதான், வெட்டிடலாம்னு இருக்கேன்" என்கிறார்.
“பறவையெல்லால் கூடு கட்டி இருக்கே ?”என்று உடைந்த குரலில் கேட்கிறார் நம்மாழ்வார்.
“இல்லைங்கய்யா. நமக்கு இந்த மரத்தால எந்த பயனும்
இல்லை.” 
இதை கேட்டவுடன் ஓடி சென்று, நம்மாழ்வார் மரத்தை கட்டிப்பிடித்து கொள்கிறார். ஓவென்று அழுகிறார். பின்பு மரத்திடம்,“உன்னை பிரயோஜனம் இல்லாதவன்னு சொல்றானே. அவனுக்கு நீ ஏன் பழம் தர மாட்டேங்கிற ?” என்று மரத்துடன் உணர்வுப்பூர்வமான, ஒரு நீண்ட உரையாடல் நடத்துகிறார். இதை பார்த்த விவசாயியின் மனம் மாறுகிறது. மரத்தை வெட்ட வேண்டாம் என்று முடிவு செய்கிறார். 
ஆனால் இத்துடன் இது முடியவில்லை. ஓராண்டுக்கு பிறகு, அந்த விவசாயி ஒரு பெரிய பலாப்பழத்துடன் திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் இருந்த நம்மாழ்வாரை சந்திக்க வருகிறார். “அய்யா,அந்த மரத்துல காய்ச்ச பழம்யா...” என்று உச்சகட்ட சந்தோஷத்தில் அழுது கொண்டே பழத்தை கொடுக்கிறார்.
(இது விகடனில் வெளிவந்தது )
ஆம். இயற்கை நம்மோடு இணைந்து வாழவே விரும்புகிறது.
இயற்கையோடு நாம் பேசலாம். மனிதர்களை விட மரங்கள் நம்மை புரிந்து கொள்ளும்.

சிவனைத்_தவிர_வேறு_எதையும்_கேட்காத_பக்தி

#சிவனைத்_தவிர_வேறு_எதையும்_கேட்காத_பக்தி

ஒரு அரசன் தன்னுடைய நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான் அவன் தன்னுடைய மக்களுக்கு தேவையானதை, அவர்கள் கேட்கும் தருணத்தில் ‘இல்லை’ என்று கூறாமல் கொடுத்து வந்தான் அதனால் அவன் மீது மக்களுக்கு அதிக அன்பு உண்டு மன்னனுக்கும் மக்களின் மீது பெரும் பாசம் இருந்தது.

ஒரு நாள் மன்னனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது எது ஒன்று வேண்டும் என்றாலும் மக்கள் என்னை சந்தித்துதான் பெற்றுச் செல்கின்றனர் அப்படி அவர்கள் என்னை சந்திந்து, அதற்கான விளக்கத்தை அளித்து அந்தப் பொருட்களை பெற்றுச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை எனவே தலைநகரில் ஒரு பொருட்காட்சியை அமைத்து, அதில் எல்லா பொருட்களையும் வைத்துவிடுவது, யாருக்கு எந்த பொருள் வேண்டுமோ அதை மக்கள் இலவசமாக அவர்களின் தேவைக்கு எடுத்துச் செல்லலாம் என்று நினைத்தான்.

தனக்கு தோன்றிய அந்த யோசனையை தன்னுடைய அமைச்சர்களிடம் பேசி கருத்து கேட்டான் அவர்களும் மனம் மகிழ்ந்து ஒப்புக்கொண்டனர் இதை அடுத்து தலைநகரில் பிரமாண்டமான ஒரு பொருட்காட்சி மையம் உருவாக்கப்பட்டது அதில் உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் மன்னன் ஏற்பாடு செய்திருந்தான் அதுவும் அனைவருக்கும் போதும் என்னும் அளவுக்கு அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் மக்களுக்கு இதுபற்றி முரசறைந்து சொல்லப்பட்டது பின் நல்லதொரு நாளில் அந்த பொருட்காட்சியை மன்னன் திறந்து வைத்தான். அந்த நாட்டு மக்கள் அனைவரும் வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை, தேவைக்கு ஏற்றபடி எடுத்துச் சென்றனர் சிலர் பொன், சிலர் உடை, சிலர் வீட்டு உபயோகப் பொருட்கள், சிலர் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்கான தேவைக்குரியவற்றை கொண்டு சென்றனர்.

அந்த பொருட்காட்சிக்கு ஒரு மூதாட்டியும் வந்திருந்தார் அவர் அங்கு வந்து சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர எந்தப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளவில்லை அங்கிருந்த அரண்மனை அதிகாரிகள், அந்த மூதாட்டியிடம் வந்து அம்மா.. உங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் ஏன் தயங்கி நிற்கிறீர்கள் மன்னனை நேரில் சந்தித்து நீங்கள் கேட்க தயங்குவீர்கள் என்பதால்தான் மன்னன் இதுபோன்ற ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார் எனவே தயக்கம் இன்றி உங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றனர்.

அதற்கு அந்த மூதாட்டி இங்கிருக்கும் எந்தப் பொருளும் எனக்குத் தேவையில்லை. ஆனால் எனக்கு அரசனைப் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.

அரண்மனை அதிகாரிகள் மூதாட்டியின் விருப்பத்தை அமைச்சர்களிடம் கூறினர் அவர்கள் வந்து மூதாட்டியிடம் பேசியும் கூட, அவர் எனக்கு எந்தப் பொருட்களும் வேண்டாம் அரசனைத்தான் பார்க்க வேண்டும்” என்று கூறிவிட்டார் இதைஅடுத்து அந்தத் தகவல் மன்னனுக்கு சொல்லப்பட்டது அவர் தன்னுடைய யானையின் மீது ஏறி அந்த இடத்திற்கு வந்தார்.

யானையின் மீது அமர்ந்தபடியே பாட்டியிடம், “தாயே.. உங்களுக்கு என்ன வேண்டும் நான் வந்து விட்டேன் வேண்டியதைக் கேளுங்கள் என்றார்.

அதற்கு அந்த மூதாட்டி, “மன்னா.. எனக்கு நீதான் வேண்டும்” என்றாள்.

மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை. “தாயே.. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.. அதை தெளிவாகக் கூறுங்கள்” என்றான்.

 மன்னா.. எனக்கு இந்தப் பொருட்காட்சியில் இருந்து எந்தப் பொருளும் தேவையில்லை எனக்கு நீதான் வேண்டும். நான் உனது தாய் உன்னை என் மகனாக அடைந்தால் நான் இந்த நாட்டையே அடைந்தவளாக ஆகிவிடுவேன் என்றாள்.

அதைக் கேட்ட மன்னன் அந்த மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று அவளை தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான் அவளது கடைசி காலம் வரை அவளை எந்தக் குறையும் இல்லாமல் பாதுகாப்பாக கவனித்துக் கொண்டான்.

இந்தக் கதை நமக்கு ஒரு உண்மையை உரக்கச் சொல்கிறது இது ஒரு ஆன்மிகம் சார்ந்த கதை. ஆம்.. இங்கே அரசன் என்பவன் இறைவன் அவன் இந்த உலக மக்களுக்காக இந்த உலகத்தில் ஏராளமான பொருட்களையும் பணம் பதவி போன்றவற்றையும் படைத்து வைத்திருக்கிறான் பலரும் இறைவன் படைத்த இந்த உலகத்தையும், அதில் உள்ள பொருட்களையும் கண்டு மயங்குகின்றனர் ஆனால் வெகு சிலரே இந்த உலகத்தைப் படைத்த இறைவன் யார் என்று ஆராய்கின்றனர் அவனை அடைய வழி தேடுகின்றனர் அப்படிப்பட்ட பக்திக்கு ‘அனன்ய பக்தி’ என்று பெயர் அது இறைவனைத் தவிர வேறு எதையும் கேட்காத பக்தியாகும்.

#திருச்சிற்றம்பலம்

Monday, July 25, 2022

தமிழர்களின் சிறப்பு மிக்க மாதம் ஆடி மாதம்.

தமிழர்களின் சிறப்பு மிக்க மாதம் ஆடி மாதம்.

சூரியன் கடக ராசியில் உட்புகுந்து அதிலிருந்து வெளியேறும் வரையிலான 31 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே ஆடி மாத மாகும்.

முன்முற்காலத்தில் நம் தமிழர் ஆடிப்பிறப்பைச் மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.

ஆடி மாதத்தில் வரும் புதுநிலவு மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதி கொடுக்கும் ஆடி அமாவாசை மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளாக ஆடி மாத பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு என இம்மாதம் முழுதும் கொண்டாடப்படுகின்றது.

மேலும் ஆடி மாதம் தட்சிணாயனம் அதாவது தென்திசையேகல் ஆரம்பமாகிறது.

தமிழ் ஆண்டினை இரண்டு அயனங்களாக (கதிர் நகர்வு) பிரித்து ஆடி முதல் மார்கழி வரையிலான காலம் தட்சிணாயனமும், தை முதல் ஆனி வரை உள்ள காலம் உத்திராயனமும் (வடதிசை நகர்தல்) என்பதாகும்.

அதிகாலை வேளையில் கதிரவன் வடகிழக்கு நோக்கி நகர்தலை விட்டு விட்டு தென்கிழக்கு திசை நோக்கி நகரும்.

நமது இந்து தொன்மயான இயலில் இது சூரியனின் தேர் திசை திரும்புவதாக அறிப்பிடப்படுகிறது.

ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.

கோடி நன்மை தரும் ‘ஆடி வெள்ளி’ ஆன்மிக ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது.

கிழமைகளில் ‘சுக்ர வாரம்’ என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமை தான் இதன் சிறப்பு.

அள்ளிக் கொடுக்கும் சுக்ரனுக்குரிய வெள்ளிக்கிழமை அன்று, துள்ளித் திரியும் சிங்கத்தின் மேல் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.

சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம், இறைவியை நாடிச் சென்றவர்களுக்கு எல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் பெருகும் மாதமாகும்.

இந்த மாதத்தில் தான் ஈஸ்வரனின் சக்தி அன்னை லோக நாயகியின் சக்திக்குள் ஐக்கியமாகி விடுகிறது. இம்மாதத்தில் அம்மானை வழிபடுதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் எல்லா ஊர்களிலும் கூழ் ஊற்றுதல், தீ மிதித்தல், அம்மனுக்கு திருவிழா என பல வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
பொதுவாகவே சித்திரை வருடப் பிறப்பு முடிந்ததும் எந்தப் பண்டிகையும் வராது. ஆவணியில்தான் கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி என்று வரிசையாக பண்டிகைகளின் அணிவகுப்புத் துவங்கும். அதனால் ஆடி மாதத்தை பண்டிகைகளை அழைக்கும் மாதம் என்பர். இந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டில் மனதைச் செலுத்த வேண்டும் என்பதாலேயே பிற விசேஷங்களை செய்யக்கூடாது என்றார்கள். உதாரணமாக கல்யாணம், காது குத்து, புதுமனை புகுதல் போன்றவை இம்மாதத்தில் செய்ய மாட்டார்கள்.

மஞ்சள் பூசினால் மங்களம்!
அம்மனுக்கு உகந்த நாட்கள் செவ்வாயும், வெள்ளியும். அதோடு ஆடி மாதமும் சேர்ந்து விட்டால் இவ்விரண்டு நாட்களுக்கும் சிறப்புத் தன்மை அதிகமாகிவிடுகிறது. சாதாரண நாட்களில் இருக்கும் விரதத்தைப் போல பல மடங்கு பலன் தருகிறது, ஆடி மாத செவ்வாய்கிழமை விரதம், ஆடிச் செவ்வாய் தேடி குளி, அரைத்த மஞ்சளை பூசிக் குளி என்பது பழமொழி. அதாவது ஆடி செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து விரதமிருந்தால் அன்னை உமையவள் கேட்ட வரம் தருவாள் என்பது ஐதிகம். இந்த விரதம் இருந்தால் வீட்டில் அமைதி என்றும் நிலவும்.
ஆடி வெள்ளியும் விசேஷமானதுதான். அன்றும் எண்ணெய் தேய்த்துக் குளித்து அம்மனை நினைத்து கூழ் ஊற்றி, தானும் அந்தக் கூழையே குடித்தால் அம்மன், செல்வம், ஆரோக்கியம் நல்ல குழந்தைகள் என வரம் அருளுவாள்.

ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பி லைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறும்.

திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள். மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

கருடன் பிறந்த ஆடிச் சுவாதி!

பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வ தாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.

ஆடிக்குருவி

காவிரி தீரத்தில் வாழும் ஒருவகை பறவைகளை அக்கோ குருவிகள் என்று அழைப்பார்கள். இந்தப் பெயருக்குப் பின்னணியாக சுவாரஸ்ய கதையொன்று உண்டு!

காவிரிக்கரையோரம் சகோதரிகளான இரண்டு குருவிகள் வசித்தன. காவிரி வறண்டு காணப்பட்ட ஒருநாள், மணற்பரப்பில் உலர்த்தி இருந்த பொருட்களை தின்றுகொண்டு இருந்தபோது, காவிரியில் வெள்ளம் திடீரென வந்தது. தங்கைக்குருவி உடனடியாக பறந்து மரத்தில் அமர்ந்துவிட்டது. அக்காள் குருவி கவனிக்காததால், வெள்ளத்தோடு அடித்து சென்று விட்டது. அதைக் கண்ட தங்கைக்குருவி, ‘அக்கோ, அக்கோ’ என கதறி அழுதது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போதெல்லாம் அக்காள் குருவி திரும்ப வந்து விடும் என்ற நம்பிக்கையில் காவிரி கரை ஓரத்தில் மறத்தில் அமர்ந்து கொண்டு, அக்கோ.... அக்கோ.... என்று குரல் எழுப்பி, அக்காள் குருவியை தேடுமாம். இப்போதும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும் தருணங்களில் அந்தக் குருவியின் குரலைக் கேட்கலாம் என்கிறார்கள் அந்தப் பகுதியில் வாழும் பெரியவர்கள்!

’ஆடி வேல்' வைபவம்!

இலங்கையில் மிகவும் கோலாகலமாக கொண் டாடப்படும் விழா ஆடிவேல் வைபவம். ஆடி மாதத்தில் வேல் எடுத்து கொண்டாடப்படுவதால் ஆடிவேல் என அழைக்கிறார்கள்.

கதிர்காமத்தில் இவ்விழாவை கண்டுகளிக்க பக்த பெருமக்கள் பெருந்திரளாக வருவார்கள். இந்த ஆடிவேல் திருவிழா நான்கு தினங்கள் நடைபெறும்.

அழகன் முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை!

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

தீமித்துக்கும் வழக்கும் வந்தது எப்படி?
ஆடியில் தேய்பிறையின் போது வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி என்றும், வளர்பிறையில் வரும் ஏகாதசி சயனி ஏகாதசி என்றும் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் குபேரனிடம் ஹேம மாலி என்பவன் வேலை பார்த்து வந்தான். அவன் தனது மனைவியின் அழகில் மயங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்ததால் அவனால் வேலையைச் சரியாக செய்ய முடியவில்லை. கோபம் கொண்ட குபேரன் அவனை பெரு நோயாளி ஆகும்படி சபித்தான்.
வேதனைப்பட்ட அவனுக்கு சாப விமோசனத்துக்கு வழி சொன்னார் ரோமச முனிவர். ஆடி மாதம் தேய்பிறை ஏகாதசியின் போது விரதமிருந்து தீமிதித்து அம்மனை வழிபட்டால் நோய் நீங்கி எழில் உருவம் கிடைக்கும் என்றார். அவனும் அதுபோல செய்து சாபம் நீங்கி நல்ல உருவம் பெற்றான். அதனால் ஆடி மாத தேய்பிறை ஏகாதசி யோகினி ஏகாதசி என்று அழைக்கப்பட்டது. அப்போது முதலே ஆடி மாதம் தீமிதி விழாவும் ஆரம்பமானது.
திருவிக்ரமனாக விஸ்வரூபம் எடுத்து மகாபலியை பாதாள உலகத்துக்கு அனுப்பிய மகாவிஷ்ணு மீண்டும் பாம்பணையில் சயனித்தது ஆடி மாத வளர்பிறை ஏகாதசி நாளில்தான். அவருக்கு களைப்பு நீங்கும்படி சேவை புரிந்தவள் ஏகாதசி தேவதையே. அதனால் அதற்கு சயனி ஏகாதசி என்று பெயர் வந்தது. இவ்விரு நாட்களிலும் விரதமிருந்து அம்மனை பூஜித்து வழிபட்டால் எல்லா நோய்களும் நீங்கும்; அம்மனருள் வாழ்வில் நிறைந்திருக்கும்.

பூர்வ புண்ணியம்!
ஆடி மாதம் என்பது தேவர்களுடைய மாலை நேரம் ஆகும். அதுவே நாம் நமது முன்னோருக்கு பித்ருக் காரியங்கள் அதாவது திதி முதலியவை கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்த ஏற்ற தருணம். ஆடி மாதம் எந்த நாளில் வேண்டுமானாலும் திதி கொடுக்கலாம். அதிலும் ஆடி அமாவாசை அன்று கொடுக்கப்படும் திதிக்கும் பலன் மிக அதிகம்.
சிலருக்கு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் மிகவும் பலவீனமாக இருக்கும். அப்படி இருந்தால் செய்யும் செயல்களுக்குரிய முழுமையான பலன்கள் கிடைக்காது. எந்தச் சிறு செயலையும் மிகவும் போராடித்தான் செய்ய வேண்டி இருக்கும். அப்படியும் அது வெற்றிகரமாக முடியும் என்று சொல்ல முடியாது. அதை சரி செய்ய முன்னோரின் ஆசியும், சந்தோஷமும் முக்கியம். அதனால்தான் சிரார்த்தம், திதி முதலியவற்றைக் கொடுக்கிறோம். அதனை ஆடி அமாவாசை அன்று செய்தல் கூடுதல் நன்மை பயக்கும்.
அன்று திதி கொடுத்தால் நூறு வருடங்கள் திதி கொடுத்து முன்னோரை திருபதிப்படுத்திய சந்தோஷம் அவர்களுக்குக் கிடைக்கும்.

கர்ப்பிணி அம்மன்
ஆடி மாதத்தின் போது அம்மன் கர்ப்பமாக இருப்பதாக ஐதிகம். அப்போது முளைப்பயிறை வயிற்றில் கட்டிக் கொண்டு அம்மனை வழிபட்டால் குழந்தைப்பேறு கிட்டும். அம்மனுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளான வளைகாப்பு, பூச்சூட்டல் போன்றவை ஆடிப்பூரத்தில் செய்யப்படுகின்றன. அப்போது வேண்டுதல் செய்து கொண்டு வளையல்களை வாங்கி கொடுக்க வேண்டும். பின்னர் கோயிலில் பிரசாதமாகத் தரும் வளையல்களை அணிந்து கொண்டால் மாங்கல்யம் நிலைத்து நிற்கும்; நன்மக்கட்பேறு வாய்க்கும்.
பூமாதேவி பெரியாழ்வார் திருமகளாக கோதை நாச்சியாராக துளசிச் செடியின் கீழ் அவதரித்தது ஆடிப்பூர நாளில் தான். அன்றைய தினம் கன்னிப் பெண்கள் ஆண்டாளை வழிபட்டு அவளது பூ பிரசாதத்தை சூடிக் கொண்டால் மனதுக்கினிய கணவர் வருவார் என்பது ஐதிகம்.

அம்பிகை தவம்!
நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் ஆடித்தபசு மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. ஒரு முறை தேவி ஈசனிடம் நீங்கள் சங்கர நாராயணராகக் காட்சி கொடுக்க வேண்டும். அப்போதுதான் சிவ்ன பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற சண்டை இருக்காது. எல்லாமே தாங்கள்தான் என்ற உண்மையை மக்களுக்குத் தெரிய வரும் என்று வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு மனம் இரங்கிய சிவபெருமான், "தென் தமிழகத்தில் புன்னை வனத்திற்குச் சென்று தவமியற்று. நான் சங்கர நாராயணனாகக் காட்சி கொடுத்து உன்னையும் ஆட்கொள்ளுவேன்' என்று கூறினார்.
பெம்மானின் வார்த்தையை கேட்ட அன்னை அவ்வாறே புன்னை வனம் வந்தாள். சுற்றிலும் அக்கினி சூழ ஊசி முனையில் நின்று தவமியற்றினாள். அவளது தவத்தின் உக்கிரம் அனைவரையும் வாட்டியது. உடனே சங்கரன் பாதி, நாராயணன் பாதி என சங்கர நாராயணனாகக் காட்சி கொடுத்தார் சிவபெருமான். நிலவு போல முகம் படைத்தவள் என்ற பொருளில் அம்மனுக்கு கோமதி என்ற பெயரையும் அளித்தார். இன்றும் கூட இந்த விழா கோமதியம்மன் அருளும் சங்கரன் கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தபசுக் காட்சியைக் கண்டால் எல்லா துன்பங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

காவிரிக்கரையில் கலந்த சாதம்!
எண்களில் 18 என்ற எண் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகாபாரத யுத்தம் நடந்த நாட்கள் 18, பதினெட்டுப் புராணங்கள், ஐயப்பன் கோயிலின் படிகள் 18, இப்படி நிறைய உண்டு. அதனாலேயே ஆடி 18 சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் நதிகளில் பூரணப் பிரவாகம் பொங்கியிருக்கும். புது வெள்ளம் வந்து பழைய அழுக்குகளை நீக்கிவிடும். வேளாண் பெருமக்கள் ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப விதை தெளிக்கும் பணிகளில் ஈடுபடுவர்.
பூமித்தாய் கண் திறந்து நிறைய மகசூலை அள்ளித்தர வேண்டும் அதற்கு ஆறுகள் துணை புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கொண்டாடப்படுவதே ஆடிப் பெருக்கு பண்டிகையாகும். காவிரி பாயும் இடங்களில் இது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காவிரியை அம்மனாக பாவிக்கிறார்கள். ஆடி மாதம் அன்னையின் கர்ப்பகாலம். ஆதலால் காவிரிக்கு, மசக்கையில் இருக்கும் பெண்கள் மிகவும் விரும்பும் உணவு வகைகளான புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சர்க்கரை பொங்கல் என்று படைத்து வழிபடுகிறார்கள்.
அதோடு வருடம் முழுவதும் மங்களம் தங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூ, காதோலை, கருகமணி, மஞ்சள் கயிறு முதலியவற்றை ஆற்றில் சமர்ப்பிக்கிறார்கள். பல குடும்பங்கள் தாலி மாற்றும் சடங்கும் நடைபெறுகிறது. அவ்வாறு செய்தால் கணவன் நீண்ட ஆயுளும், மனைவியின் மேல் மாறாத அன்பும் கொண்டிருப்பான் என்பது மக்களின் நம்பிக்கை.
ஆடி மாதம் முழுவதுமே அன்னை உமையவளின் வழிபாட்டுக்குரிய மாதமாக இருந்து வருகிறது. நாமும் ஆடி மாத பூஜைகள், ஆராதனைகளில் கலந்து கொண்டு கூழ் வார்த்து, பாவம் நீங்கி நீண்ட ஆயுளும், பெருமைக்குரிய குழந்தைகளும் பெற்று நிறைவுடன் வாழ்வோம்.

நம்முடைய கடன்களை தீர்க்கும்

வாசுதேவநல்லூர்..!!
ஸ்ரீ அக்னி பைரவர்..!!

விண்ணப்ப மனு மூலமாக நம்முடைய கடன்களை தீர்க்கும் தாருகாபுரம்  ஸ்ரீ அக்னி பைரவர்!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் வாசுதேவநல்லூர் என்ற ஊர் அமைந்திருக்கிறது. 

வாசுதேவ நல்லூருக்கும்,  புளியங்குடி க்கும் நடுவில்  பிரதான சாலையில் இருந்து (NEXT OF SUBRAMANIYA PURAM..LEFT SIDE CUTTING..NAME BOARD IS THERE..)  சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளடங்கிய பகுதியில் அமைந்திருப்பது தாருகாபுரம் ஆகும்.

 இங்கே இருக்கும் அருள்மிகு மத்தியஸ்த நாதர் திருக்கோயில் வளாகத்தில, ஸ்ரீஅக்னி பைரவர் அருளாட்சி புரிந்துகொண்டிருக்கிறார். இந்த ஆலயம் 
தட்சிண பஞ்சபூதத் தலங்களில் நீர் தலமாக போற்றப்படுகிறது.

ஒவ்வொரு 
தேய்பிறை அஷ்டமி திதி அன்றும் இங்கே நிறைய கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் மனு எழுதித் தருகிறார்கள்.

அனுப்புனர் முகவரியில் தன்னுடைய முகவரியையும்,

 பெறுநர் முகவரியில் அருள்மிகு அக்னி  பைரவர், அருள்மிகு மத்தியஸ்த நாதர் திருக்கோயில், தாருகாபுரம் என்று எழுதி

 பொருள் :-கடன் தீர்ப்பது தொடர்பாக என்று குறிப்பிட்டு...

ஐயா வணக்கம்..!!

 கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு படிப்படியாக கடன் உருவாகி இப்பொழுது ரூபாய் ஒரு கோடி கடன் வந்துவிட்டது. நானும் என் குடும்பத்தாரும் சம்பாதிக்கும் வருமானம் வட்டி கொடுப்பதற்கே போதவில்லை. அருள்மிகு ஸ்ரீ  அக்னி பைரவர் ஆகிய தாங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் என்னுடைய  கடன் அனைத்தும் முழுமையாக தீர அருள்புரியும் பாடி தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு எனது பெயர்
................

என கோயில் பூசாரியிடம் முறைப்படி இந்த மனுவை ஒப்படைக்க வேண்டும்.

 கண்டிப்பாக தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு வருடத்திற்குள் கடன் தீர்ந்த பிறகு மறக்காமல் நேரில் வந்து ஸ்ரீ அக்னி பைரவர்  பெருமானுக்கும், அருள்மிகு மத்தியஸ்த நாதர் பெருமானுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து அன்னதானம் செய்ய வேண்டும்.

பல நூற்றாண்டுகளாக இந்த அருள்மிகு மத்தியஸ்த நாதர் ஆலயத்தில் கடன் தீர இவ்வாறு மனு எழுதித்தரும் பழக்கம் இருக்கிறது..!!..

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...