Saturday, February 22, 2025

தமிழ்நாட்டு ரெசிபிஸ்-50 - வகையான சட்னி.

 50 - வகையான சட்னி....

1- தக்காளி சட்னி...
தேவையான பொருட்கள்:
தக்காளி விழுது (மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.) - 1 கப்
மிளகாய் தூள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
கடுகு - சிறிது
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 4 தேவையான அளவு
உப்பு - சிறிது
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும். கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
சுவையான சட்னி ரெடி.
🍁🍁🍁🍁🍁
2- கோங்குரா சட்னி
தேவையான பொருட்கள்:
புளிச்சக் கீரை - 2 கட்டு
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் வற்றல் - 6
பச்சை மிளகாய் - 6
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளிச்ச கீரையினை (கோங்குரா) இலைகளை மட்டும் தனியே எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
சுத்தம் செய்த இலைகளை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு (எண்ணெய் இல்லாமலும் வதக்கலாம்) 3 நிமிடங்கள் வதக்கி இறக்கி வைக்கவும்.
பிறகு வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து இறக்கி வைக்கவும்.
அதன் பின், கோங்குரா இலைகள், தாளித்த கலவை இவற்றுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
💥💥💥💥
3 - கார சட்னி
தேவையான பொருட்கள்:
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 2
மிளகாய் வற்றல் - 5
முழு பூண்டு - 1
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு
சீரகம்
உளுத்தம்பருப்பு
கடலை பருப்பு
கறிவேப்பிலை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
தாளிக்கும் பொருட்களை தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதில் அரைத்த விழுதை சேர்த்து கெட்டியாக கொதிக்கவிட்டால் சட்னி தயார்.
🔥🔥🔥
4 - பொட்டுக்களை தேங்காய் சட்னி.
தேவையான பொருட்கள்:
தேங்காய் - முக்கால் மூடி
பொட்டுக்கடலை - 1/2 கப்
பச்சைமிளகாய் - 6
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கருவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயை துருவிக் கொள்ளவும்.
மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, உப்பு போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டுத் தாளித்து இறக்கவும்.
பிறகு தாளித்தவற்றை அரைத்து வைத்த தேங்காய் கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
🍁🍁🍁
5- புதினா மல்லி சட்னி.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 2
தக்காளி - 2
தேங்காய் துருவியது - 1/4 கப்
கொத்தமல்லி - கால் கட்டு
புதினா - கால் கட்டு
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புதினா மற்றும் மல்லி தழைகளை சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும் .
தேவையான பொருட்கள் அனைத்தையும் வாணலியில் போட்டு நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் ஆற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். புதினா மல்லி சட்னி தயார்.
🔥🔥🔥
6- குடைமிளகாய் சட்னி..
தேவையான பொருட்கள்:
ரெட் காப்சிகம் - 1
வேர்கடலை - ஒரு கைப்பிடி
வர மிளகாய் - 2
புளி - ஒரு துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ரெட் கேப்சிகமை சிறு சிறுத் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் வேர்க்கடலையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையை ஆற வைத்து பின்னர் தோல் எடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கேப்சிகமை இரண்டு நிமிடம் வறுத்து இறக்கும் முன் புளி மற்றும் வர மிளகாய் சேர்த்து வதக்கி இறக்கி ஆற வைக்கவும்.
ஆற வைத்த கலவையுடன் வேர்க்கடலை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.( தண்ணீர் விடாமல்)
பின்பு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த கலவையில் கொட்டவும்.
சுவையான ரெட் கேப்சிகம் சட்னி தயார்.
🍁🍁🍁
7- பச்சை மிளகாய் கத்திரிக்காய் சட்னி
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 4
பச்சை மிளகாய் - 6
தேங்காய் துருவல் - கால் கப்
புளி - சிறிய உருண்டை
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காயை சுத்தமாக கழுவி காம்பை நீக்கி பாதியாக நறுக்கவும்.
வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.
தோலின் நிறம் மாறியவுடன் தனியாக ஒரு தட்டில் வைத்து ஆறவைக்கவும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், தேங்காய், புளி எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.
கத்திக்காய் ஆறிய பின் தோலை உரித்துக் கொள்ளவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
...
8- வெங்காய தேங்காய் சட்னி..
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 3
கறிவேப்பில்லை - 5 இலை
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க வேண்டியவை:
தேங்காய் - 1/2 மூடி
காய்ந்த மிளகாய் - 4
செய்முறை:
முதலில் வெங்காயத்தினை மிகவும் பொடியாக வெட்டி வைக்கவும்.
தேங்காய் மற்றும் காய்ந்த மிளகாயினை மிகவும் சிறிது தண்ணீருடன் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெட்டி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கிய உடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காயினை இதில் சேர்த்து கலக்கி இறக்கிவிடவும்.
இப்பொழுது சுவையான வெங்காயம் தேங்காய் சட்னி ரெடி.
🍁🍁🍁🍁🍁
9- வேர்க்கடலை சட்னி..
தேவையான பொருட்கள்:
வேர்கடலை - 1 கோப்பை
துருவிய தேங்காய் - 1/2 கோப்பை
புளி - கொட்டைப்பாக்களவு
பூண்டு - 2 பற்கள்
காய்ந்தமிளகாய் - 6
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 2
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்புத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
வேர்கடலையை சிவக்க வறுத்து ஆற வைத்து அதன் தோலை நீக்கிவிடவும்.
வேர்கடலையை வறுக்கும் பொழுதே காய்ந்தமிளகாயையும், ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பிறகு அரவை இயந்திரத்தில் முதலில் தேங்காய், காய்ந்தமிளகாய், புளி, பூண்டு, உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சிறிது நீரைச் சேர்த்து அரைக்கவும்.
பிறகு கடலையை கொட்டி மேலும் சிறிது நீரைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கோப்பையில் வழித்து வைத்துக் கொள்ளவும். தேவையான பதத்திற்கு நீரை ஊற்றி கலக்கிக் கொள்ளவும். சற்று கெட்டியாக இருந்தால் ருசி கூடுதலாக இருக்கும்.
ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை காய வைத்து தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து சட்னியின் மீது கொட்டவும்.
💥💥💥💥
10- புதினா, தேங்காய் சட்னி..
தேவையான பொருட்கள்:
புதினா – 1 கட்டு
கொத்தமல்லி – 1/4 கட்டு
எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
தேங்காய் – 1/4 முடி
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கருவேப்பில்லை – 5 இலை
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் கொத்தமல்லி மற்றும் புதினாவினை சுத்தம் செய்து கொள்ளவும்.
புதினா மற்றும் கொத்தமல்லியை ½ தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கடாயில் போட்டு வதக்கி கொள்ளவும்.
பின்னர் வதக்கிய புதினா, கொத்தமல்லியுடன் தேங்காய், பச்சை மிளகாய் ,இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பின் ஊளுத்தம் பருப்பு, பெருங்காயம் மற்றும் கருவேப்பில்லை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து கலக்கவும்.
இப்பொழுது சுவையான புதினா தேங்காய் சட்னி ரெடி.
💥💥💥💥
11- தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை முழுசாக தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
வெந்த தக்காளியுடன் சாம்பார் பொடி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்ததை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான சட்னி ரெடி.
...
12- இஞ்சி சட்னி..
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 4
தேங்காய் - 1 மூடி
பச்சைமிளகாய் - 4
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயை துருவிக் கொள்ளவும். இஞ்சியை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.
புளி விதைகளை நீக்கி புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்து வைக்கவும்.
மிக்ஸியில் துருவிய தேங்காய், இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள்பொடி, வெல்லம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதினையும் சேர்த்து, திட்டமாக தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். சிறிது கொதித்தவுடனே இறக்கி பரிமாறவும்.
...
13- சீரக சட்னி..
தேவையான பொருட்கள்:
சீரகம் - 50 கிராம்
வத்தல் - 5
பெரிய வெங்காயம் - 3
பூண்டு - 4
புளி - சிறிது
நல்லெண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சீரகம், வத்தல் புளி ஆகியவற்றை மை போல் அரைத்து கொள்ளவும்.
வெங்காயம் , பூண்டை ஒன்றிரண்டாக தட்டி அதோடு உப்பு மஞ்சள் கலந்து கொள்ளவும்.
பின்னர் அனைத்தையும் ஒன்றாக கலந்து தண்ணிர் சேர்த்து வைத்து கொள்ளவும்
எண்ணெயில் கடுகு போட்டு தளித்து அரைத்தவை அனைத்தையும் போட்டு கொதிக்கவிடவும்.
கொதித்தப்பின் இறக்கிவைக்கவும். சுவையான சட்னி ரெடி.
....
14- கொத்தமல்லி சட்னி
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1/2 மூடி
கொத்தமல்லி - 1/4 கட்டு
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
பொட்டுக்கடலை - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
கடைசியில் தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 5 இலை
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் தேங்காயினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
கொத்தமல்லியை சுத்தம் செய்து வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய், கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீருடன் நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்த்து கலக்கவும்.
சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி...
...
15- இஞ்சி பூண்டு சட்னி...
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 10 துண்டுகள் (பூண்டின் அளவு)
பூண்டு - 15
தேங்காய் - அரை மூடிக்கும் சிறிது
கறிவேப்பிலை - 6 இதழ்
வரமிளகாய் - 2
புளி - 1/2 இன்ச்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - சிறிது
சீரகம் - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
மல்லி விதை - 1 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - 2 கிள்ளு
நல்லெண்ணெய் - தாளிக்க
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். புளியை ஊற வைக்கவும்.
பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை ஒன்றாக போட்டு தாளிக்கவும்.
பின் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
ஆறியதும் தேங்காய், புளி, இஞ்சி மற்றும் பூண்டோடு சேர்த்து அரைக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
சுவையான சட்னி ரெடி.
.....
🍁🍁
வெங்காய-மிளகாய் சட்னி
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம்
காய்ந்த மிளகாய்
தேங்காய்
தக்காளி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
நல்லெண்ணெய்
உப்பு
செய்முறை
கடாயில், ஒரு கப் நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு தக்காளி, எட்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், 1/4 கப் துருவிய தேங்காய், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
ஆறிய பின், தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
💥🍁💥🙏💥🍁💥🙏💥🙏💥🙏💥🙏
புளி துவையல்
தேவையான பொருட்கள்
புளி
காய்ந்த மிளகாய்
தக்காளி
உப்பு
நல்லெண்ணெய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய், 1/4 கப் புளி, ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு தக்காளி, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
ஆறிய பின், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁
இஞ்சி துவையல்
தேவையான பொருட்கள்
இஞ்சி
காய்ந்த மிளகாய்
தக்காளி
புளி
உப்பு
நல்லெண்ணெய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய், 1/4 கப் தோல் நீக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி, ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு தக்காளி, சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு புளி சேர்த்து வதக்கவும்.
ஆறிய பின், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥😊
வெங்காயம் துவையல்
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம்
காய்ந்த மிளகாய்
தக்காளி
புளி
உப்பு
நல்லெண்ணெய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய், 1/4 கப் சின்ன வெங்காயம், ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு தக்காளி, சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு புளி சேர்த்து வதக்கவும்.
ஆறிய பின், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
💥🍁💥🍁💥🍁💥
புளி சட்னி
மட்டன் பிரியாணி
தேவையானவை: மட்டன் - அரை கிலோ, பாசுமதி அரிசி - இரண்டரை கப், பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 4, பச்சை மிளகாய் - 6, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - அரை கப், நெய் - கால் கப், புதினா - ஒரு கைப்பிடி, மல்லித்தழை - ஒரு கைப்பிடி, தயிர் - ஒரு கப், உப்பு - 2 டீஸ்பூன். இஞ்சி+பூண்டு விழுது - 4 டீஸ்பூன்.
அரைக்க: பட்டை - 2, ஏலக்காய் - 10, கிராம்பு - 2.
செய்முறை: அரிசியைக் கழுவி, தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவையுங்கள். பெரிய வெங்காயம், தக்காளியை நீளம், நீளமாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்தெடுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, நெய் விட்டு மட்டன், புதினா சேர்த்து தண்ணீர் சுண்ட சுண்ட வதக்குங்கள். பிறகு இஞ்சி, பூண்டு விழுதையும் அரைத்த மசாலாவையும் போட்டு, தக்காளி, தயிர், மிளகாய்தூள், உப்பு போட்டுக் கிளறி, மட்டன் வேகும் வரை வேகவிடுங்கள். மட்டன் நன்றாக வெந்தபிறகு வென்னீர் 2 டம்ளர் விட்டு, அது நன்றாக கொதிக்கும்போது அரிசியை போட்டுக் கிளறுங்கள். மேலே நிற்கும் தண்ணீர் வற்றி, சாதம் சேர்ந்தாற்போல (உப்புமா போல தளதளவென்ற பதத்தில்) வரும் சமயத்தில் தீயை ‘ஸிம்’மில் வைத்து பிரியாணி பாத்திரத்தை மூடுங்கள். அதன் மேலே வெயிட்டான பொருளைத் தூக்கி வைத்து ‘தம்’ போடுங்கள். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் வென்னீரை நிரப்பி, பிரியாணி பாத்திரத்தை மூடியிருக்கும் தட்டு மேலே வைத்தும் ‘தம்’ போடலாம்.
சிக்கன் பிரியாணி
தேவையானவை: சிக்கன் - அரை கிலோ, பாசுமதி அரிசி - இரண்டரை கப், தேங்காய்ப்பால் - 2 கப், தயிர் - அரை கப், எலுமிச்சம்பழம் - சிறியதாக ஒன்று (இதற்கு தக்காளி தேவையில்லை), இஞ்சி + பூண்டு விழுது - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6, மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன்.
செய்முறை: சிக்கனைக் கழுவி சுத்தம் செய்து, இஞ்சி, பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய், தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய புதினா, மல்லித்தழை ஆகியவற்றுடன் சேர்த்துப் பிசறி ஒரு மணிநேரம் ஊற விடுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்றாக வதக்குங்கள். பிறகு, நெய் விட்டு, பிசறிய கோழி கலவையை நன்றாக எண்ணெய் கசிந்து, தண்ணீர் சுண்டும் வரை வதக்கி தேங்காய்ப்பால் சேருங்கள். கொதிவந்தவுடன் அரிசியை போடுங்கள். எலுமிச்சம்பழச் சாறை அத்துடன் கலந்து, ஒரு கொதிவந்தவுடன் குக்கரை மூடி, வெயிட் போட்டு ஒரு விசில் வந்தவுடன் ‘ஸிம்’மில் 5 நிமிடம் வைத்து இறக்கி சுட சுட பரிமாறுங்கள்.
🍁🍁🍁
இஞ்சி சட்னி
தேவையானவை: இஞ்சி - 10 கிராம், காய்ந்த மிளகாய் - 8, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து சட்னியுடன் கலக்கவும். விருப்பப்பட்டால் சிறிது வெல்லம் சேர்க்கலாம். இது இட்லி, தோசை, வடை, பஜ்ஜிக்கு சுவையான ஜோடி!
🍁🍁
மூலிகை சட்னி
தேவையானவை: வல்லாரைக் கீரை - (ஆய்ந்தது), புதினா இலை - தலா ஒரு கப், கொத்தமல்லி இலை - அரை கப், கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 10, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப் பிலை, வல்லாரைக் கீரை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, ஆறிய வுடன் உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக் கவும்.
சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த சட்னி.
🍁🍁🍁
கோவக்காய் சட்னி
கோவக்காய் - 100 கிராம்
வெங்காயம் - பாதி
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 5
முழு தனியா - ஒரு மேசைக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
புளி - சிறிது
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீளவாக்கில் நான்காக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.
கோவக்காய் நன்கு வதங்கியதும், அடுப்பை நிறுத்திவிட்டு எல்லாவற்றையும் நன்கு ஆற வைக்கவும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது, கோவக்காய் தவிர மற்ற பொருட்கள் சேர்த்து நன்கு அரைத்து விட்டு, கடைசியில் கோவக்காய் சேர்த்து அரைக்கவும்.
கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவக்காய் சட்னி தயார். வழக்கமாக கோவைக்காயில் செய்யும் கூட்டு, சாம்பார், பொரியல் தவிர இந்த சட்னியும் செய்யலாம். இந்த கோவக்காய் சட்னி இட்லி, தோசைக்கு நன்கு பொருந்தும். சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்
பச்சை மிளகாயினால் உண்டாகும் சூட்டை தணிக்க, இதில் சிறிது வெந்தயம் சேர்க்கிறோம். சட்னியை அரைத்த பின்(தாளிக்கும் முன்) மீண்டும் நன்கு வதக்கி கொண்டால் 2 அல்லது 3 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். சுவையும் நன்றாக இருக்கும்.
🍁🍁🍁
பீர்க்கங்காய் சட்னி...
தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய் - 2
தக்காளி -4
வெங்காயம்-1
உப்பு -தேவையான அளவு
பெருங்காய தூள் -1 சிட்டிகை
மிளகாய் தூள் -2 மேஜை கரண்டி
தாளிக்க:
கடுகு - 1 மேஜை கரண்டி
உளுத்தம் பருப்பு -1 மேஜை கரண்டி
கறிவபில்லை- 6
செய்முறை
குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பீர்க்கங்காய், தக்காளி வதக்கவும்
பின் அதில் மிளகாய் தூள் ,உப்பு, பெருங்காய தூள் , தண்ணீர் சேர்த்து குக்கர் மூடி வெயிட் போட்டு 1 சத்தம் 5 நிமிடம் சிறு தியில் வைத்து நிறுத்தவும்
பின் குக்கரை திறந்து கடைந்து விட்டு கொதிக்கவைக்கவும்
சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் சேர்க்கவும்
🍁🍁🍁
கோவக்காய் சட்னி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கோவக்காய் கால் கிலோ
வெங்காயம்5
பூண்டு பல்4
காய்ந்த மிளகாய் 4
பச்சை மிளகாய்3
தனியா1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
கடுகு அரை டீஸ்பூன்
செய்முறை :
வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக நறுக்கி கொள்ளவும்.
கடுகு கறிவேப்பில்லை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவக்காய் சட்னி தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இட்லி, தோசைக்கு இது பொருத்தமாக இருக்கும். சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
🍁🍁🍁
வெள்ளரிக்காய் சட்னி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
வெள்ளரிக்காய் கால் கிலோ
இஞ்சி விழுது1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் அரை கப்
உப்பு தேவைக்கேற்ப
தக்காளி 1
காய்ந்த மிளகாய் 3
தாளிக்க
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
வெள்ளரிக்காயை தோலுடன் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, வெள்ளரிக்காய், தக்காளி, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உப்பு ஒவ்வொன்றாக போட்டு சிறிது நேரம் வதக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.
நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த கலவையில் கொட்டி கலக்கவும். இப்போது சுவையான வெள்ளரிக்காய் சட்னி தயாராகிவிட்டது.
குறிப்பு : வெள்ளரிக்காய் தோல் வெட்டும்போது கசப்பாக உள்ளதா என்பதை பார்த்த பின் வெட்டவும். தோல் கசப்பாக இருந்தால் தோலை நீக்கி விட வேண்டும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம் வைத்து சாப்பிடலாம்.
🍁🍁🍁
இஞ்சி சட்னி
தேவையான பொருட்கள் :
பொருள்அளவு
இஞ்சி 50 கிராம்
தேங்காய்த் துருவல் கால் கப்
புளி நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் 3
உளுத்தம் பருப்பு அரை டேபிள் டீஸ்பூன்
கடலைப் பருப்பு அரை டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் 3 சிட்டிகை
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
கடுகு கால் டீஸ்பூன்
செய்முறை :
இஞ்சியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை போட்டு நன்கு சிவக்க வதக்க வேண்டும்.
அதன் பிறகு அதை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு, பெருங்காயம், சேர்த்து அரைக்கவும்.
பின்பு சிறிது நீர் சேர்த்து நறுக்கிய இஞ்சி, தேங்காய்த் துருவல், புளி, சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
🍁🍁
பூண்டு சட்னி
தேவையான பொருட்கள் :
பொருள்அளவு
பூண்டு பல் 150 கிராம்
காய்ந்த மிளகாய் 10
தக்காளி 1
கறிவேப்பிலை 2 கொத்து
எண்ணெய் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும். பின்பு பாதி கறிவேப்பிலையை வதக்கிக் எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின்பு வாணலியில் தக்காளியை போட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றி தோல் பிரியும்வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
வறுத்த அனைத்தையும் நன்றாக ஆற வைக்க வேண்டும். ஆறியதும் உப்பு, மீதமுள்ள கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது புளி சேர்த்துக் கொள்ளலாம். சுவையான பூண்டு சட்னி தயார்
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
🍁🍁🍁
சுரைக்காய் சட்னி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
சுரைக்காய்1 கப் (நறுக்கியது)
வெங்காயம் 1
தேங்காய் துருவல்கால் கப்
புளி நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லித் தழை2 கைப்பிடி
பச்சை மிளகாய்4
கடுகு அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்புகால் டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சுரைக்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, பின் மிக்ஸில் வதக்கிய கலவை மற்றும் தேங்காய் துருவல், புளி சேர்த்து அரைக்கவும்.
இன்னொரு கடாயில் எண்ணெயில் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதில் சேர்க்கவும். இப்போது சுவை மிகுந்த சுரைக்காய் சட்னி தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :தோசை, இட்லி, உப்புமா இவைகளுடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.
🍁🍁🍁
கடலை பருப்பு சட்னி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கடலைப்பருப்பு அரை கப்
உளுந்து 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய்3
சின்ன வெங்காயம்10
தக்காளி 1
தேங்காய் துருவல்அரை கப்
இஞ்சி விழுது அரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை ஒரு கொத்து
மல்லித் தழை ஒரு கைப்பிடி
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
லேசாக சிவந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்துப் பிரட்டி ஆறவிட்டு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைக்கவும்.
.. 🔥🔥
வாழைக்காய் சட்னி செய்வது எப்படி..
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு
வாழைக்காய்1
பெரிய வெங்காயம்1
சின்ன வெங்காயம்10
பூண்டு பல்2
வரமிளகாய்5
தக்காளி2
சோம்பு1 டீஸ்பூன்
கடுகுஅரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்புஅரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய்தேவைகேற்ப
கொத்தமல்லி இலைஒரு கைப்பிடி
கறிவேப்பிலைஒரு கொத்து
புளிநெல்லிக்காய் அளவு
செய்முறை :
வாழைக்காயை வேக வைத்து தோலுரித்து கட்டியில்லாமல் பிசைந்துக் கொள்ளவும்.
வரமிளகாய், சோம்பு, புளி, பூண்டு ஆகியவற்றை ஒன்று சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பின் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் அரைத்த மசாலா விழுதையும், மசித்த வாழைக்காயையும் போட்டு வதக்கவும்.
பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி, எண்ணெய் தௌpந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இப்போது சுவையான வாழைக்காய் சட்னி ரெடி!
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த சட்னி இட்லி, தோசைக்கு ஏற்றதாக இருக்கும்.
❤️❤️❤️
முள்ளங்கி சட்னி செய்வது எப்படி....
தேவையான பொருட்கள் :
பொருள்அளவு
முள்ளங்கிகால் கிலோ
பெரிய வெங்காயம்1 (நறுக்கியது)
புளிபெரிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய்4
இஞ்சி பூண்டு விழுதுஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை1 கொத்து
கடுகுஅரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்புஅரை டீஸ்பூன்
எண்ணெய்தேவைக்கேற்ப
உப்புதேவைக்கேற்ப
சீரகம்அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல்கால் கப்
செய்முறை :
முள்ளங்கியை பொடியாகவும் வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய முள்ளங்கி போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதக்கியதும் வெங்காயத்தை போட்டு மேலும் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் சீரகத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு அதனுடன் தேங்காய் துருவல், புளி சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.
பிறகு அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைக்கவும்.
இறுதியாக கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அரைத்த சட்னியுடன் சேர்க்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
🍁🍁
புளி சட்னி செய்வது எப்படி...
செய்முறை :
அம்மியில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து அரைக்கவும். அதனுடன் புளி, உப்பை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். சுவையான புளி சட்னி ரெடி...
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை தோசை, இட்லி, தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
🍁🍁🍁
புதினா மல்லி சட்னி செய்வது எப்படி...
செய்முறை
புதினா மற்றும் மல்லி தழைகளை சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும்
தேவையான பொருட்கள் அனைத்தையும் வாணலியில் போட்டு நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் ஆற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
புதினா மல்லி சட்னி தயார். இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.
🍁🍁🍁
பச்சை தக்காளி சட்னி செய்வது எப்படி....
தேவையான பொருட்கள்
2 டீஸ்பூன் எண்ணெய்
2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 சிவப்பு மிளகாய்
1 பச்சை மிளகாய்
1 வெங்காயம் நறுக்கியது
4 பச்சை தக்காளி (நடுத்தர அளவு)
கொத்தமல்லி இலைகள் (முஷ்டி அளவு)
1/4 கப் வறுத்த வேர்க்கடலை
உப்பு தேவை
கறிவேப்பிலை (ஒரு தளிர்)
பருவத்திற்கு (விரும்பினால்)
1 தேக்கரண்டி எண்ணெய்
1 தேக்கரண்டி கடுகு விதைகள்
கறிவேப்பிலை (ஒரு தளிர்)
வழிமுறைகள்
தயார்படுத்தல்கள்
வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி தனியாக வைக்கவும்.
1/4 கப் வேர்க்கடலையை வறுத்து ஒதுக்கி வைக்கவும் அல்லது வறுத்த வேர்க்கடலையைப் பயன்படுத்தவும்.
முறை
2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 3 சிவப்பு மிளகாய் மற்றும் 1 பச்சை மிளகாய் சேர்க்கவும்.
பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பருப்பு பொன்னிறமாக மாறியதும், கடாயில் இருந்து அகற்றவும்.
அதே கடாயில், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் வெளிப்படையானதாக மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் வெளிப்படையானதாக மாறியதும், நறுக்கிய பச்சை தக்காளியைச் சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து தக்காளி மென்மையாக மாறும் வரை வதக்கவும்.
பச்சை தக்காளி நன்கு வதங்கியதும் ஒரு முஷ்டி கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். கடாயின் வெப்பத்தில் வதக்கவும். அதை குளிர்விக்க விடவும்.
முதலில் பருப்பை கரகரப்பாக அரைத்து தனியாக வைக்கவும்.
பின்னர் சமைத்த தக்காளி, வறுத்த வேர்க்கடலை மற்றும் பொடித்த பருப்பு சேர்த்து ஒரு கரடுமுரடான பேஸ்ட்டில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
எங்கள் பச்சை தக்காளி சட்னி தயார்.
🍁🍁❤️
புதினா மல்லி சட்னி....
தேவையான பொருள்கள்
புதினா - கைப்பிடி
கறிவேப்பிலை - 15 இதழ்
மல்லித் தழை - அரை கட்டு
பெரிய வெங்காயம் - பாதி
தக்காளி - ஒன்று
தேங்காய் - ஒரு பெரிய துண்டு
கடலை உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வேர்கடலை - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு
கடுகு - சிறிது
செய்முறை
ஒரு சிறிய வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் பருப்பு வகைகளை போட்டு சிவக்க வறுக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
தக்காளியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின் தேங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பின்னர் புதினா மற்றும் மல்லித் தழையை சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.
நன்கு ஆறியப் பின் இந்த கலவையை மிக்ஸியில் நீர் சேர்க்காமல் அரைக்கவும்.
நைஸாக அரைக்க வேண்டாம்.சுவையான, நல்ல வாசனையான சட்னி தயார்.
புதினா மற்றும் மல்லித் தழையை வதக்க கூடாது. சட்டியில் போட்டதும் கிளறி அடுப்பை அணைக்கவும்.
🍁🍁❤️
ஸ்பெசல் சட்னி......
தேவையான பொருட்கள்
தேங்காய்துருவல் -1 கப்
வர மிளகாய் - 2
இஞ்சி -1 சிறியதுண்டு
பூண்டு -3 பல்
பச்சைமிளகாய்-1
மல்லிதழை- சிறிதளவு
பொட்டுகடலை- 2 ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
தாளிக்க எண்ணெய்-1ஸ்பூன்
கடுகு -கால்ஸ்பூன்
உளுந்தம்பருப்பு- கால்ஸ்பூன்
வரமிளகாய் -1
கருவேப்பிலை- சிறிதளவு
சமையல் குறிப்புகள்
முதலில்வர மிளகாயைதண்ணீரில்10 நிமிடங்கள் போட்டுவைக்கவும்.நன்கு அரைபடும்.தேவையானபொருட்களை ரெடி பண்ணிக்கொள்ளவும்.பின் எல்லா பொருகளையும், உப்பும் சேர்த்து மிக்ஸி ஜாரில்போடவும்.
நன்கு அரைக்கவும்.பின் தாளித்து சட்னிமேல் ஊற்றவும்.ஸ்பெசல்சட்னி ரெடி
தோசை,இட்லிக்குரொம்ப அருமையாகஇருக்கும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
🍁🍁
புதினா சட்னி.....
தேவையான பொருட்கள்
10 நிமிடம்
3 பரிமாறுவது
1/2 ஸ்பூன் கடலை பருப்பு
1/2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
2 பச்சை மிளகாய்
2 வரமிளகாய்
2 பெரிய வெங்காயம்
1 தக்காளி
1 கட்டு புதினா தலை
சிறிதளவுபுளி
தேங்காய் துருவல்
தேவையானஅளவு உப்பு
சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும் புதினா தலையை இலையை மட்டும் எடுத்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து வதங்கிய பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும் அதுவும் வதங்கிய பின் பச்சை மிளகாயும் வரமிளகாயும் போட்டு வதக்கவும் பின் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும் பின் அதில் புளி சேர்த்து புதினா தலை சேர்த்து நன்றாக வதக்கவும்
அனைத்து நன்றாக வதங்கிய பின் உப்பு போட்டு ஆறியவுடன் எடுத்து மிக்ஸியில் அரைக்கவும் இது இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்
🍁🍁🍁
கொள்ளு சட்னி......
தேவையான பொருட்கள்
10 நிமிடம்
4 பரிமாறுவது
1/2 ஆளாக்கு கொள்ளு
1/2 ஸ்பூன் சீரகம், மிளகு, வரக்கொத்தமல்லி, கடலைப்பருப்பு உளுந்தம்
3 வரமிளகாய்
6 பல் பூண்டு
சிறிதளவுமஞ்சள் தூள்
தேவையானஅளவு உப்பு
10 சின்ன வெங்காயம்
சிறிதளவுகருவேப்பிலை
சமையல் குறிப்புகள்
மணலில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு வரக்கொத்தமல்லி, சீரகம், மிளகு அனைத்தையும் நன்றாக வதக்கவும் வதங்கிய பின் அதில் வரமிளகாயை
வரமிளகாய் நன்றாக வதங்கிய பின் சின்ன வெங்காயத்தை போடவும் அதில் தேவையான அளவு உப்பு
கொள்ளை வறுத்து குக்கரில் 5 லதாறு சத்தம் விட்டு வேகவைத்து எடுத்து
தாலித்ததை ஃபர்ஸ்ட் மிக்ஸியில் அரைத்து கொரகொரவென்று பின் கொள்ளையும் எடுத்து போட்டு அரைக்கவும் எடுக்கும் பொழுது பூண்டும் கருவேப்பிலையும் பச்சையாக போட்டு அரைக்கவும் கொள்ளு சட்னி ரெடி
🍁🍁🍁
புடலங்காய் சட்னி
தேவையான பொருள்கள்
புடலங்காய் - சிறிது
உளுந்து - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவைக்கு ஏற்ப
காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
செய்முறை
புடலங்காய் மற்றும் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பருப்பு, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பொன்னிறம் ஆனதும் வெங்காயம் மற்றும் புடலங்காய் சேர்த்து வதக்கி ஆற வைத்து, உப்பு சேர்த்து அரைக்கவும்பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்சட்னியில் தாளித்தவற்றை சேர்த்து பரிமாறவும்.🙏😊
வெங்காய கார சட்னி
தேவையான பொருள்கள்
சின்ன வெங்காயம் – கால் கிலோ
காய்ந்த மிளகாய் – 10
பூண்டு – 2 பல்,
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
புளி – சிறிதளவு
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 5 இலை
பெருங்காயம் – அரைத் தேக்கரண்டி
செய்முறை
வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
மற்ற அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயத்தினை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தினை சிறிது நேரம் ஆற வைக்கவும்
அதன் பிறகு மிக்ஸியில் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து அதில் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
இதனை அரைத்து வைத்துள்ள வெங்காயத்துடன் சேர்த்து கிளறி விடவும்.சுவையான வெங்காய கார சட்னி ரெடி.இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
🍁🍁🍁
நெல்லிக்காய் சட்னி
தேவையான பொருள்கள்
பெரிய நெல்லிக்காய் - 4
மிளகாய் வற்றல் - 5
உளுந்து - 6 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது [விரும்பினால்]
செய்முறை
நெல்லிக்காயை விதை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.இட்லி பாத்திரத்தில் விதை நீக்கின நெல்லிக்காயை வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, மிளகாய் வற்றல், விரும்பினால் சிறிது கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுக்கவும்
மிக்ஸியில் வறுத்தவற்றை போட்டு சிறிது தேங்காய், புளி, உப்பு, நெல்லிக்காய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியான சட்னியாக அரைத்து எடுக்கவும்.
சுவையான நெல்லிக்காய் சட்னி தயார். இதை இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.
விரும்பினால் தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் துவையலாகவும் சாப்பிடலாம்.
🔥🔥
வேர்க்கடலை சட்னி
தேவையான பொருள்கள்
வேர்க்கடலை - அரை கப்
வெங்காயம் - பாதி
காய்ந்த மிளகாய் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
கடுகு, கறிவேப்பிலை
எண்ணெய் - தாளிக்க
செய்முறை
வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.இப்போது எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.வேர்க்கடலை சட்னி தயார்.
இது இட்லி மற்றும் தோசைக்கு நல்ல காம்பினஷன். இது நல்ல சத்தானதும்.👍👍👍
புடலங்காய் சட்னி
தேவையான பொருள்கள்
புடலங்காய் - சிறிது
உளுந்து - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவைக்கு ஏற்ப
காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
செய்முறை
புடலங்காய் மற்றும் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பருப்பு, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பொன்னிறம் ஆனதும் வெங்காயம் மற்றும் புடலங்காய் சேர்த்து வதக்கி ஆற வைத்து, உப்பு சேர்த்து அரைக்கவும்பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்சட்னியில் தாளித்தவற்றை சேர்த்து பரிமாறவும்.
🍁🍁❤️
புதினா மல்லி சட்னி
தேவையான பொருள்கள்
வெங்காயம் - 2
தக்காளி - 2
தேங்காய் துருவியது - கால் கப்
கொத்தமல்லி - கால் கட்டு
புதினா - கால் கட்டு
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க
செய்முறை
புதினா மற்றும் மல்லி தழைகளை சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும்
தேவையான பொருட்கள் அனைத்தையும் வாணலியில் போட்டு நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் ஆற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
புதினா மல்லி சட்னி தயார். இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்...
🔥❤️🔥
வெங்காயம் தக்காளி சட்னி
தேவையான பொருள்கள்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 3
மிளகாய் தூள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைகேற்ப
தாளிக்க
கடுகு - சிறிது
உளுந்து - சிறிது
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - தாளிக்க
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் தக்காளியை போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்.
தக்காளியை தோல் உரித்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்தவுடன் உளுந்து போட்டு வறுக்கவும், பிறகு சிறிது பெருங்காயம் போடவும்
பிறகு பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.
அதனுடன் தக்காளி கரைசலை ஊற்றி மிளகாய் தூள், மஞ்சள் தூள், மீதி உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.பொடியாக நறுக்கின கொத்தமல்லி சேர்த்தால் சுவையான சட்னி தயார்.
🔥🔥🔥🔥
குடைமிளகாய் சட்னி
தேவையான பொருள்கள்
குடைமிளகாய் - பாதி
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - ஒரு பல்
கொத்தமல்லி தழை - கொஞ்சம்
பச்சைமிளகாய் - ஒன்று
செய்முறை
தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், வெங்காயம், குடைமிளகாய் சேர்க்கவும்.
பூண்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அதன் பின் தக்காளி, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
எல்லாம் நன்றாக வதங்கியதும் ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.
இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள குடைமிளகாய் சட்னி ரெடி.
🔥🔥🔥
பூண்டுச்சட்னி
தேவையான பொருள்கள்
பூண்டு - 150 கிராம்
வரமிளகாய் - 10-15 காரத்திற்கு ஏற்ப
புளி - கோலி அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை
பூண்டை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும்.
மற்றவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை நிறம் மாறாமல் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அடுத்து பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிக்ஸியில் மிளகாய், உப்பு, புளி மூன்றையும் நன்றாக பொடிக்கவும்.
பின் வதக்கிய பூண்டை சேர்த்து அரைத்தெடுக்கவும். நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
சுவையான பூண்டு சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு ஏற்ற காம்பினேஷன்.👍👍👍
இஞ்சி பூண்டு சட்னி
தேவையான பொருள்கள்
பூண்டு - 15
இஞ்சி - 10 துண்டுகள் (பூண்டின் அளவு)
தேங்காய் - அரை மூடிக்கும் சிறிது
கறிவேப்பிலை - 6 இதழ்
வரமிளகாய் - 2
புளி - அரை இன்ச்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
கடுகு - சிறிது
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
மல்லி விதை - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் - 2 கிள்ளு
நல்லெண்ணெய் - தாளிக்க
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
புளியை ஊற வைக்கவும்.பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை ஒன்றாக போட்டு தாளிக்கவும்.
பின் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
ஆறியதும் தேங்காய், புளி, இஞ்சி மற்றும் பூண்டோடு சேர்த்து அரைக்கவும்.
தேவையான உப்பு சேர்க்கவும்.
மிகவும் சுவையான சட்னி ரெடி.சுடு சாதத்திற்கு ஏற்றது.
வாயுவாலோ அல்லது வேறு காரணத்தாலோ வயறு தொல்லை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
பசியின்மை, வாந்தியின் அறிகுறி, நீண்ட பயணம் மற்றும் நீண்ட நேரம் இரவில் விழிப்பதால் வயிற்றிலும், வாயிலும் ஏற்படும் ஒருவித ஒவ்வாமைக்கு இந்த சட்னியின் வாசனையே சாப்பிட தூண்டும்.
உடலுக்கு மிகவும் நல்லது.🔥
🔥🔥
முள்ளங்கி சட்னி
தேவையான பொருள்கள்
முள்ளங்கி - ஒன்று
பெரிய வெங்காயம் - பாதி
தேங்காய் துருவல் - ஒரு கப்
புளி - ஒரு பூண்டின் அளவு
இஞ்சி - ஒரு வில்லை
பூண்டு - 4 பல்
தாளிக்க
எண்ணெய் - தேவைக்கு
கடலை
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 3
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கடுகு - சிறிது
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும், முள்ளங்கியையும் நறுக்கிக் கொள்ளவும்.வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிறிது உப்பு சேர்த்து முள்ளங்கியை வதக்கவும்
பின் தாளிக்க கொடுத்தவற்றை ஒன்றன் பின் ஓன்றாக போட்டு தாளிக்கவும்.பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து ஒன்று சேர வதக்கவும்.
ஆறியதும் தேங்காய், இஞ்சி, பூண்டு மற்றும் புளி சேர்த்து சிறிது நீர் விட்டு அரைக்கவும்.கடைசியாக சட்னியில், கடுகு மற்றும் கறிவேப்பிலையை நல்லெண்ணெயில் தாளித்து ஊற்றவும்.
உப்பை சரி பார்த்துக் கொள்ளவும்.சுவையான முள்ளங்கி சட்னி ரெடி. சுடு சாதத்திற்கு எல்லாவகையான வறுவலுடனும் ஏற்றது.
👍👍👍👍
# தமிழ்நாட்டு ரெசிபிஸ்

ஊட்டி வந்துவிட்டோம்

 

ஊட்டி வந்துவிட்டோம். கீழே உள்ள அதே வெயில் தான்.

ஆனாலும் ஜில்லுனு காத்துக்கும் வெயிலுக்கும் கார விட்டு இறங்குனதும் அவ்வளவு அருமையாக உள்ளது

வாழை ரகங்கள்

 

வாழை ரகங்கள்:

1.செவ்வாழை
2.பச்சை நாடன்
3.கதளி
4.கற்பூரவள்ளி (தேன் வாழை)
5.நேந்திரன்
6.மொந்தன் (சக்கை)
7.பேயன்
8.ரஸ்தாளி
9.படத்தி
10.ஏலக்கி (நெய் பூவன்)
11அம்ருத பாணி
12.காவேரி
13.நவரை
14.மன்னன்
15.சிங்கன்
16.மட்டி
17.செம்மட்டி
18.சிறுமலை
19.விருபாச்சி
20. பூவன்
21. செனாலி
22. Blue Java (Indonesian variety)
23.குதிரை வால் சிங்கன்
24. பூம் பொதியன்
25.ஆட்டுக்கொம்பன்
26. Budidha Bondha
27. Neer Bondha
28. Kasuri Bondha
29.Padachala Bayallu Bondha
30. Naredhu Madhu Bodha
31. கரு வாழை
32. பூலா செண்டு
33.அயிரம் காய்ச்சி
34. பாதிரி
35. கிளிச்சுண்டன்
36. துளுவன்
🌼மாம்பழ வகைகள்:
1.அல்போன்சா
2 இம்மாம்பசந்த்
3.மல்கோவா
4. பங்கனப் பள்ளி
5.மல்லிகா
6 காலாப்பாடு
7.அமரப்பள்ளி
8. கேசர்
9.ஹிம்சாகர்
10. சுவர்னரேகா
11. மூவாண்டன்
12. நீலம்
13.தாசரி
14. நடு சோலை
15. செந்தூரா
16. ரூமினி
17. பெங்களுரா(கிளி முக்கு)
18. பஞ்சவர்ணம்
19. சக்கரை கட்டி
20.லங்கரா
21. பைரி
22. தோத்தா பூரி
23. கோட்டூர் கொன்னம்
24. காசாலட்டு
25.
*இதைத் தவிர உங்களுக்கு தெரிந்த வேறு ஏதேனும் ரகங்கள் இருந்தால் தெரியபடுத்துங்க, மிக்க நன்றிங்க.

Kaliyakkavilai To Velenkanni Tnstc Bus Booking app

 

குமரி மாவட்ட மக்களே, வேளாங்கண்ணி , சாயல்குடி , ராமநாதபுரம் செல்ல இந்த பேருந்தை பயன்படுத்துங்கள். வேகத்தில் சிறுத்தை தான்.

TNSTC app download பண்ணி booking பண்ணிட்டாலே போதும்.
ECR 👑 King 👑
#Kaliyakkavilai
To
#Velenkanni
Via,
Marthandam, karungal , colachal, mandaikadu
Manavaalakurzhi, nagercoil, valliyur,
Thirunelveli, thuttukudi, saayalkudi, Ervadi, Ramanathapuram, Thondi, Mimisal, kattumaavadi, mutthupettai,Thiruthuraipoondi,
Kaliyakkavilai : 03: 25 pm
Nagercoil : 05:30 pm
Velankanni. : 03 :30am
Velenkanni. : 05:00pm
Kaliyakkavilai : 05:00am
Total distance : 530 km
12 hrs running time
Ticket : ₹397.
Booking : TNSTC App ஐ பயன்படுத்துங்கள்.

காற்றும் நம்மை அடிமை என்று விலகவில்லையே

 

காற்றும் நம்மை அடிமை என்று விலகவில்லையே

கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே ?
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே ?
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே ?
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் !
தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே ,
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே ?
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே ?
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் !
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை ,
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை !
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் !
- கவியரசு கண்ணதாசன் .

கற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்

 கற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்*

கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது.
தெய்வீக மூலிகை, இடிதாங்கியாக செயல் படுவதினால் தமிழர்கள் வீடுதோறும் வளர்த்தனர்.சாதாரண துளசி செடி போலவே கருந்துளசி இருக்கும். ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும். சித்தர்களால் உண்டாக்கப்பட்ட மூலிகை.
பெண்களுக்கு வயிற்றில் இறந்த குழந்தை வெளியேற கருந்துளசி கொண்டுவந்து ஆய்ந்து உரலில் போட்டு இடித்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து ஒரு குவளை சாறுடன் நான்கு தேக்கரண்டி அளவு எள் எண்ணெய் விட்டு கலக்கி உள்ளே கொடுத்துவிட்டால் கால் மணி நேரத்தில் இறந்த குழந்தை வெளியேறிவிடும்.
மிளகுடன் 10 துளசி இலைகளை பறித்து மென்று விழுங்கினால் தொண்டையில் உள்ள சளி முற்றிலுமாக நீங்கிவிடும்.
காலையில் எழுந்தவுடன் பல்லைக் கொப்பளித்துவிட்டு 5 இலைகளை உட்கொண்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று உபாதைகள் நீங்கிவிடும்.
வாய் துர்நாற்றத்தைப் போக்க கருந்துளசி இலைகளை பறித்து வாயில் மென்றால் பற்களில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். வாயும் துளசி மணம் கமழும்.
ஒரு செடி வைத்து வளர்த்தால் அதன் விதைப்பட்டு பல செடிகள் அதன் அருகே வந்துவிடும். வறட்சியைத் தாங்கக்கூடியது. அதில் வேதிப்பொருட்கள் நிறைய இருக்கின்றது.
இரவில் செம்பு (அ) பஞ்ச உலோகப்பாத்திரத்தில் 10 துளசி இலைகளை நசுக்கிப் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து விடவும். பின் காலையில் வெறும் வயிற்றில் பல்லைக் கொப்பளித்துவிட்டு அந்த தண்ணீரினைப் பருக வேண்டும். உடலில் உள்ள அனைத்து தாதுப்பிரச்னைகளும் தீர்ந்துவிடும். தேகம் மிளிரும். புற்றுநோய்கூட உடனே கரைந்து போய்விடும் கண்புரை ஏற்பட்டாலும் சரிசெய்துவிடும்.
கருந்துளசியானது சுற்றுப்புறச்சூழலுக்கு மிகுந்த நண்பனாக இருக்கின்றது. ஓசோன் படலத்தில் உள்ள பாதிப்பை சரி செய்கின்றது.
தினமும் கருந்துளசியை தவறாமல் எடுத்து வந்தால் 48 நாட்களில் சளி மற்றும் கபநோய்களிடம் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம்.
கருந்துளசியை சளித்தொல்லைக்கு ஒரு சிறந்த மருந்துச் செடியாக குறிப்பிடலாம். ‘ஆசிமம் டெனியபுளோரம் டைப்பிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடிகளின் இலைகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.
சிறிது கருந்துளசி இலைகளை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கருந்துளசியை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லைகளால் ஏற்பட்ட சளி நீங்கும்.
அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க 5 அல்லது 10 கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊற வைத்து, அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிடவேண்டும்.
தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 5, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

சேலம் - நாமக்கல் - கரூர் - திருச்சி இடையே இயங்கும் முன்பதிவில்லா ரயில்களின்

 சேலம் - நாமக்கல் - கரூர் - திருச்சி இடையே இயங்கும் முன்பதிவில்லா ரயில்களின் விவரம்:-

📌 நாமக்கலில் இருந்து திருச்சிக்கு இந்த ரயில்களின் புறப்படும் நேரம்:-
◾காலை 6:20 மணிக்கு 76821/76810 சேலம் - கரூர் - திருச்சி பயணிகள் ரயில் (ஞாயிறு தவிர)
◾மதியம் 2:55 மணிக்கு 16812 சேலம் - மயிலாடுதுறை ரயில் (தினசரி)
◾மாலை 6:50 மணிக்கு 76823/06116 சேலம் - கரூர் - திருச்சி பயணிகள் ரயில் (ஞாயிறு தவிர)
📌 திருச்சியில் இருந்து நாமக்கலுக்கு இந்த பயணிகள் ரயில்களின் நேரம்:-
◾காலை 5:25 மணிக்கு 06115/76822 திருச்சி- கரூர் - சேலம் பயணிகள் ரயில் (ஞாயிறு தவிர)
◾காலை 9:40 மணிக்கு 16811 மயிலாடுதுறை - சேலம் ரயில் (தினசரி)
◾மாலை 6:00 மணிக்கு 76809/76824 திருச்சி - கரூர் - சேலம் பயணிகள் ரயில் (சனி தவிர)
✨ இதில் சேலம் - கரூர் - திருச்சி இடையே காலை மற்றும் மாலை வேளைகளில் இயங்கும் பயணிகள் ரயில்கள் சேலம் - கரூர் இடையே ஒரு எண்ணிலும், கரூர் - திருச்சி இடையே ஒரு எண்ணிலும் இயங்கினாலும் சேலம் - கரூர் - திருச்சி இடையே ஒரே பெட்டிகளை கொண்டு ஒரே ரயில் போன்றே சேலம் - திருச்சி - சேலம் இடையே இயங்கும். எனவே நாமக்கல் மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளவும்.
👍 தொழில் மற்றும் கல்வி தேவைகளுக்காக நாமக்கலில் இருந்து திருச்சிக்கு அடிக்கடி சென்று வருவோர் இந்த பயணிகள் ரயிலை பயன்படுத்தி குறித்த செலவில் விரிவாக சென்று வரலாம். மேலும் மாதாந்திர பாஸ் முறையும் உள்ளதால் மேலும் குறைந்த செலவில் பாஸ் எடுத்து மாதம் முழுவதும் பயணம் செய்யவும் முடியும். எனவே நாமக்கல் பகுதி மக்கள் இந்த ரயில்களை அதிகம் பயன்படுத்தி பயனடைய கேட்டுக்கொள்கிறோம்.

செய்யாறு மக்களுக்கு சென்னையை காட்டியது இந்த பேருந்து தான்

செய்யாறு மக்களுக்கு #சென்னையை காட்டியது இந்த #பேருந்து தான்.

கடந்த 75 ஆண்டுகளாக இந்த பேருந்து நிறுவனம் ஒரே நிறம் (color) கொண்டு இயங்குகிறது, இதன்னுடைய தலைமை அலுவலகம்
வேலூர் TN 23
சென்னை காஞ்சிபுரம் செய்யார் வழியாக வந்தவாசி‌ செல்லும்.காலைபிராட்வேயில் இருந்து 8.30 மணிக்கு புறப்படும்.
உண்மையில் இந்த மாடல் பேருந்தில் பயணம் செய்தது ஒரு தனி சுகம் , பேருந்தும் தனி கெத்து, இந்த பேருந்தை super deluxe என்று அழைப்பார்கள்.
All ramajayam bus Number ending in 35 in Till date
இந்த ராமஜெயம் பஸ் திருமங்கலம் உசிலம்பட்டி வத்தலகுண்டு வழியாக செம்பட்டி வரை செல்லும் 1981 ஆண்டில் வத்தலகுண்டில் இருந்து செம்பட்டி வரை அனைத்து இடங்களிலும் அன்று நின்று செல்லும் இன்று அதே பேருந்து எண் கே வி என்று பெயரில் ஓடிக்கொண்டிருக்கிறது முதலில் செம்பட்டி வரையில்தான் இருந்தது இப்பொழுது திண்டுக்கல் வரையிலும் செல்கின்றது.

ரிஷிகள் யார்

*ஸ்ரீராமஜயம்*

*ரிஷிகள் யார்*🍀
*உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது.*
“மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.
யாஸ்கர் எழுதிய நிருக்தம் போன்ற நூல்களில் சொற்பிறப்பியல் அடிப்படையில் ரிஷி என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படுகிறது:
சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி — ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’ என்பது இதன் மூலம். அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.
இந்து மதம் தவிர, உலகிலுள்ள எல்லா மத நூல்களும் ஒரு மதத் தலைவர் சொன்னதை அடிப்படையாகக் கொண்டவை. உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரு மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. இந்துக்களின் வேதமோ, இந்து மதமோ மனிதனால் தோற்றுவிக்கப் படவில்லை. அது சநாதனமாக – தோற்றமோ முடிவோ இல்லாத ஒன்றாக— இருந்து வருகிறது. வேத மந்திர ஒலிகளும் இப்படித்தான்.
நாம் ரேடியோவில் ஒரு நிலையத்தைக் கேட்க வேண்டுமானல் ஒரு அலை வரிசயைத் தேர்ந்தெடுக்கிறோம். அது போல ரிஷிகள் மனதை ஒரு முகப்படுத்தி மந்திரங்களைக் கேட்கிறார்கள். எப்படி ஆயிரக் கணக்கான நிலயங்களின் ரேடியோ அலைகள் நம்மைச் சுற்றி இருக்கிறதோ அது போல பிரபஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கான மந்திர ஒலிகளும் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்று இந்துக்கள் நம்புவர்.
ரிஷிகள் முக்காலம் உணர்ந்த “த்ரிகால” ஞானிகளும் ஆவர். எப்படி நாம் ஒரு வீடியோ “டேப்”பைப் பார்க்கையில் REWIND ரீவைண்டு, FAST FORWARD பாஸ்ட் பார்வர்ட் என்று முன் பின்னால் உள்ளதைப் பார்க்கிறோமோ அது போல ரிஷிகளும் செய்கின்றனர். மஹாபாரத யுத்தக் காட்சியை கண்ணன் — விஸ்வரூப தரிசனத்தில் — அர்ஜுனனுக்கு பாஸ்ட் பார்வர்ட் செய்து காட்டுவதைப் படிக்கிறோம்.
இதே போல த்ரிகரண சுத்தி என்பதும் ரிஷிகளிடத்தில் உள்ளது. ஆதி சங்கரர் ஒரு துதியைப் (கனக தாரா ஸ்தோத்திரம்) பாடும்போது தங்க நெல்லிக்காய் மழை பெய்தது. முத்து சுவாமி தீட்சிதர் ஒரு ராகத்தைப் (அமிர்தவர்ஷனி) பாடும்போது மழை கொட்டியது. நாம் அதையே துதிக்கும் பொழுதும், பாடும்பொழுதும் ஏன் அப்படி நடப்பதில்லை?
rishi shishya
1.அவர்களைப் போல சொல், செயல், சிந்தனை மூன்றிலும் தூய்மை இருக்க வேண்டும்.
2.அவர்களைப் போல தீவிரம் (Intensity ஈடுபாடு) மற்றும் நேரம், காலம், சூழ்நிலை அணுசரனையாக இருக்க வேண்டும். நேரம், காலம், சூழ்நிலை பற்றி அவர்கள் ஞானக் கண்ணால் அறிய முடியும்.
“ரிஷிர் தர்சனாத் ஸ்டோமன் ததர்ச இதி ஔவமன்யவ:” — என்பதை யாஸ்கர் மேற்கோள் காட்டுவார்.
அவர்கள் “சூத்ர த்ருஷ்டா” என்றும் “சூத்ர கர்தா” இல்லை என்றும் சொல்லுவர்.
சதபத ப்ராஹ்மணம் ரிஷி என்பதற்கு “அதிகம் பாடுபடுபவர், கஷ்டப்படுபவர்” — என்று பொருள் சொல்லும். அதாவது தீவிரத் தவம் புரிவோர்.
தைத்ரீய ஆரண்யகம் , “முன்னேறிச் செல், தோன்று” என்று பொருள் காணும்.
தான் மட்டுமின்றி மனித குலத்தையும் முன்னேற்ற விரும்பியதால்தான் அவர்கள் காயத்ரி மந்திரம், மிருத்யுஞ்சய மந்திரம் போன்ற அரிய பெரிய மந்திரங்களை நமக்கு அளிததனர்.
ராஜ ரிஷிக்களும் சப்த ரிஷிக்களும்
ஜனகன், புத்தன், ராமன், கிருஷ்ணன் இவர்களை ராஜ ரிஷிகள் என்பர். கண்ணனும் ராஜரிஷி பற்றி கீதையில் (4-2) சொல்கிறான். இன்னும் ஒரு ஸ்லோகத்தில் (10—6) சப்த ரிஷிக்கள் , நான்கு மானச புத்ரர்கள், 14 மனுக்கள் பற்றி கிருஷ்ணன் சொல்லுவான்.
இதற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் அண்ணா அவர்கள் எழுதிய உரை மிகவும் அருமையானது. அவர் சொல்வதாவது:–
முன்னவர்களான ஏழு மகரிஷிக்கள்:
1.நீண்ட ஆயுள்
2.மந்திரங்களை காணும் சக்தி
3.ஈசுவரத்தன்மை
4.தெய்வீகப்பார்வை
5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு
6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்
7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்
இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.
இவர்களில் முக்கியமானவர்கள் ஏழு மகரிஷிகள்; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இவர்கள் வெவ்வேறாவர். இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரத்தில் தோன்றிய ஸப்தரிஷிகள்:–
மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், க்ரது, வசிஷ்டர்.
இப்போது நடக்கும் வைவஸ்வத மன்வந்தரத்துக்கு உரிய ஸப்தரிஷிகள்:
அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியபர்
நால்வர்: ஸனகர் ஸநந்தனர் ஸனாதனர் ஸனத் குமாரர்.
shankarasiva
இதுதவிர ரிஷிக்களை வேறு பல வகைகளிலும் பிரிப்பர்:
ராஜ ரிஷி:
க்ஷத்திய குல அரசர்கள் – ரிஷிகளின் தன்மை பெற்றவர்கள்
பிரம்ம ரிஷி:
பிராமண குலத்தை சேர்ந்த ரிஷி முனிவர்
ஜன ரிஷி:
மக்களிடையே இருந்து ரிஷிகளின் நிலைக்கு உயர்ந்தோர்.
காண்ட ரிஷி:
வேதங்களின் காண்டங்களுக்குப் பொறுபான ரிஷிக்கள்
மஹரிஷி:
ரிஷிகளுக்குள் உயர் நிலை அடைந்தவர். நாம் தலைவர், பெருந்தலைவர் என்று சொல்வது போல
பரம ரிஷி:
மிக உயர்ந்த நிலையிலுள்ள ரிஷி
ச்ருத ரிஷி:
வேத ஒலியைக் கேட்போர்
தவ ரிஷி:
தவத்தில் சிறந்தவர்
சத்ய ரிஷி:
சத்யத்தில் நிலைபெற்றவர்.
தேவ ரிஷி
தெய்வீக நிலைக்கு உயர்ந்தோர்.
பதஞ்சலி பிரிவினை
பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் உலகமே வியக்கும் சம்ஸ்கிருத இலக்கண நூலுக்கு மஹாபாஷ்யம் என்ற அளவிலும் தரத்திலும் பெரிய விளக்கவுரை (பாஷ்யம்) செய்ஹ பதஞ்சலி என்ற ரிஷி. வேறி இரண்டு விளக்கம் தருவார்:
மந்திரத்தைக் கண்டவர்கள் ஒரு வகை. கல்ப சூத்ரம் போன்ற பெரிய நூலகளை எழுதியோர் மற்றொரு வகை. ஆன்மீக எழுத்தாளர்களையும் ரிஷி வகையில் சேர்த்துவிட்டார் பதஞ்சலி.
மஹாபாரதமோ எனில் வேறு வகையில் ரிஷிக்களைப் பிரித்துரைக்கும்:
கிருஹஸ்தாஸ்ரமி: இல்லறம் நடத்தும் ரிஷிமார்கள்.
ரிஷிக்களில் இந்த வகைதான் அதிகம். பெரிய ரிஷிக்கள் அனைவரும் இல்லறத்தை நடத்தியே பெரும் புகழை எய்தினர். வசிட்டர், விசுவா மித்திரர், அகத்தியர் ஆகிய அனைவரும் மனைவியுடன் வாழ்ந்தவர்
ஊர்த்வரேதஸ்: — பிரம்மசர்யம் அனுட்டித்த ரிஷிக்கள்
ஆஸ்ரமவாசிகள்:– கானகம் முதலிய இயற்கைச் சூழ்நிலையில் ஆஸ்ரமம் அமைத்து எளிமையான வாழ்வு வாழ்ந்தோர்.
யாயவரஸ்: நாடோடி ரிஷிக்கள். நாடு விட்டு நாடு சென்று பலருக்கும் உதவியவர்கள்
புரோகித வ்ருத்திகா: — புரோகிதம் செய்த ரிஷிக்கள்
சாதரண வ்ருத்திகா: — சாதாரண வாழ்க்கை நடத்திய ரிஷிக்கள்
சஸ்த்ர அத்யாபகா :– ஆயுதப் (சஸ்த்ரம்) பயிற்சி அளித்த ரிஷிகள்
சாஸ்த்ர அத்யாபகா: — சாத்திரப் பயிற்சி அளித்த ரிஷிகள்
உக்ர தபஸ்வீ: — இவர்கள் சூப்பர் பாஸ்ட் ரயில் போல உக்ரமான தவம் செய்து விரவில் பலன் பெற முயன்றோர்.
சாதரண தபஸ்வீ: இவர்கள் சாதாரண வேகத்தில் செல்லும் ரயில் போல தவம் செய்தோர்.
இந்தப் பிரிவினைகள் அவர்களை வருணிக்கப் பயன்படுத்திய சொற்கள். ஒருவர், ஒரு பிரிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல.
( உதவிய நூல்கள்:— பழங்கால இந்தியாவில் ரிஷிமார்கள் – சி.பி. பாண்டே எழுதிய நூல் —- ப்ருகு வம்சம் – ஒரு ஆய்வு, ஜயந்தி பண்டா எழுதிய நூல்—பகவத் கீதை, அண்ணா உரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை).
கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோரே சப்த ரிஷிகள்! (மற்றொரு விதமாகவும் சொல்வதுண்டு).
கச்யபர்: தேவர் குலம் மற்றும் அசுரர் குலம் இரண்டுமே கச்யபரிடம் இருந்து தோன்றின. அவரில் இருந்து வந்த மனுவிடம் இருந்து தோன்றியதே மனித குலம்!
அத்ரி: இவரிடமிருந்து தோன்றியவன் சந்திரன். தத்தாத்ரேயரும், அத்ரி தம்பதியிடம் இருந்து உருப்பெற்றார். மருத்துவத்தில் சிறந்த ஆத்ரேயரும் அத்ரியிடம் இருந்து தோன்றியவரே! அத்ரி-அனசூயை தம்பதிபோல் தாம்பத்தியம் சிறக்க வாழ வேண்டும் என்று புதுமணத் தம்பதியை வாழ்த்துகிறது ரிக்வேதம்.
பரத்வாஜர்: இந்த மகரிஷி தமது மூன்று முழு ஆயுளையும் வேதம் பயிலுவதற்குப் பயன்படுத்தியவர். இவரும் மருத்துவ ஆய்வில் சிறந்தவர் என்கிறது வேதம். இன்றைக்கும் பரத்வாஜ கோத்திரத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்.
விஸ்வாமித்திரர்: இந்தப் பெயருக்கு, உலகத்துக்கு உற்ற நண்பன் என்று அர்த்தம். இந்திரனுடன் மோதி, புது உலகைப் படைக்க முயன்றவர் இவர். விஸ்வாமித்திர சிருஷ்டி எனச் சிலவற்றைக் குறிப்பிடுவர். சிங்கமும் புலியும் இறைவனின் படைப்புகள். அந்த இனத்துடன் தொடர்பு கொண்ட நாயும் பூனையும் விஸ்வாமித்திர சிருஷ்டிகள்! நாம் பயன்படுத்தும் தர்ப்பைப் புல்லிலும் விஸ்வாமித்திரம் எனும் பிரிவு உண்டு.
கவுதமர்: அகல்யையின் கணவர். இவர் இயற்றிய தர்ம சூத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அறம் காக்க அனைவருக்கும் அறைகூவல் விடுத்து போதித்தவர்.
ஜமதக்னி: துஷ்டர்களை அடக்க அவதாரம் இஏற்ற ஸ்ரீமந் நாராயணனுக்கு (ஸ்ரீபரசுராமருக்கு) தகப்பனாக இருந்து அறம் காத்தவர்.
வசிஷ்டர்: இவரின் ஆன்மிகத் தகவல்கள் இன்றும் பயனுள்ளவையாகப் போற்றப்படுகின்றன. அருந்ததியின் கணவர் இவர். இருவரும் ஆதர்ச தம்பதி. இவரிடம் பாராட்டு பெறுவது கடினம். மிகச் சிறந்ததையே இவர் பாராட்டுவார். எனவேதான், வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி என்னும் சொல்வழக்கு உருவானது. பெண்மைக்கு உயர்வளித்துப் போற்றுபவர்கள் இவர்கள். இவர்களை பெண்ணினம் வழிபடும் நாளே ரிஷி பஞ்சமி! ஆவணி மாத வளர்பிறை 5- நாளில் இவர்களை வழிபட, மறுபிறவியே இல்லாத பேரின்ப நிலையில் இணைவார்கள் என்கிறது புராணம்.🌹

வண்டி எண் 06890 திருச்சிராப்பள்ளி இருந்து திருப்பதிரிபுலியூர் பயணிகள் ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 06890 திருச்சிராப்பள்ளி இருந்து திருப்பதிரிபுலியூர் சாதாரண பயணிகள் ரயில் சேவை தினசரி உள்ளது திருச்சிராப்பள்ளி:3:45pm

பொன்மலை:3:53pm
திருச்சிராப்பள்ளி டவுன் :4:01pm
ஸ்ரீரங்கம்:4:08pm
உத்தமர் கோவில் :4:15pm
பிச்சாண்டார்கோயில்:4:21pm
வாளாடி:4:27pm
லால்குடி :4:37pm காட்டூர்:4:44pm
புள்ளம்பாடி:4:52pm
கல்லக்குடி பழங்காநத்தம்:5:00pm
கலகம்:5:10pm
சில்லக்குடி:5:22pm
அரியலூர்:5:30pm
ஒட்டக்கோயில்:5:42pm
வெள்ளூர்:5:48pm
செந்துறை:5:55pm
மாத்தூர்:6:05pm
இச்சங்காடு halt:6:11pm
இச்சங்காடு :6:16pm
பெண்ணாடம் :6:21pm தாழநல்லூர்:6:31pm
விருத்தாசலம் டவுன்:6:40pm
விருத்தாசலம் :6:58pm
ஊத்தங்கல்மங்கலம்:7:16pm
நெய்வேலி:7:25pm வடலூர் :7:35pm
குறிஞ்சிப்பாடி:7:44pm
கடலூர் துறைமுகம்:8:03pm
திருப்பதிரிபுலியூர்:8:35pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...