Saturday, March 8, 2025

கோடைக்கானல் – தென்னிந்தியாவின் மலர் மகளான அழகிய ஹில் ஸ்டேஷன்

 



கோடைக்கானல் – தென்னிந்தியாவின் மலர் மகளான அழகிய ஹில் ஸ்டேஷன்! 🌿🏞️
கோடைக்கானல் (Kodaikanal) என்பது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மலைப்பகுதி. இது கடல்மட்டத்திலிருந்து 7,200 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் இயற்கையின் அற்புதங்கள் நிறைந்த ஒரு சொர்க்கம்!
✨ எங்கே உள்ளது?
கோடைக்கானல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. மதுரை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற நகரங்களுக்கு அருகில் இருக்கிறது.
🏕️ பிரபலமான இடங்கள்
1️⃣ கோடைக்கானல் ஏரி – படகு சவாரிக்குப் புகழ்பெற்ற மிக அழகிய ஏரி.
2️⃣ குறிஞ்சி ஆண்டவர் கோவில் – ஆண்டுதோறும் பசுமை சூழலுடன் காணக்கிடைக்கும் ஆன்மீக தலம்.
3️⃣ கோக்கர் ஸ்வாலா (Coaker's Walk) – மெழுகு போல் மென்மையான நடைபாதை, அற்புதமான ஒளிவிலகல் காட்சி!
4️⃣ பைலர் பாயின்ட் (Pillar Rocks) – மூன்று உயரமான பாறை தூண்கள், புகைப்படத்திற்கேற்புடைய இடம்.
5️⃣ சில்வர் கேஸ்கேட் அருவி – கோடைக்கானல் செல்லும் வழியில் அழகிய அருவி.
6️⃣ பேரியாறு வனவிலங்கு சரணாலயம் – காட்டுயிர்கள் வாழும் பாதுகாப்பான இடம்.
7️⃣ குரிஞ்சி மலர் பூக்கும் நிலம் – ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நீல மலர்.
இவை அனைத்தும் கொடைக்கானல் நகரத்தை சுற்றி உள்ள பகுதிகள் கொடைக்கானல் நகரத்தை தாண்டி 20 கிலோமீட்டர் அப்பால் உள்ள பகுதிகள்...
பூம்பாறை மன்னவனூர் பூண்டி கூக்கல் கிளாவரை
🌤️ எப்போது செல்லலாம்?
கோடைக்கானல் சுற்றுலாவுக்கு ஏற்ற நேரம் மார்ச் முதல் ஜூன் மற்றும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை. கோடைக்காலம் சற்று குளிராக இருக்கும், ஆனால் மழைக்காலங்களில் அதிக வெண்மை மூடப்படும்
🌿 கோடைக்கானல் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு அழகிய இயற்கை பரிசு!
நான் 18 முறை சென்றுள்ளேன் இதுவரை நீங்கள் எத்தனை முறை சென்று பார்த்துள்ளீர்கள்? உங்களின் அனுபவங்களை கமெண்டில் பகிருங்கள்.

கும்பகோண மகாமகமும் தமிழரின் வானியலும்

 

🌺 கும்பகோண மகாமகமும் தமிழரின் வானியலும்! 🤔
மகாமகம் தொல் தமிழர்களின் வானியல் திருவிழா!!
இயற்கையை, வானியல்
கண்டுபிடிப்புகளை
திருவிழாவாகக் கொண்டாடும்
தமிழர்களின் அதி
சிறப்பு திருவிழா இது!
அப்படி என்ன மகாமகத்தில்
தமிழர்களின் அறிவியல்
கண்டுபிடிப்பு உள்ளது?
மகாமகம் 12 ஆண்டுகளுக்கு
ஒருமுறை கொண்டாடப்படுகிறது,
ஏன் ?
தமிழரின் வானியல் கண்டுபிடிப்பு தான்.
வியாழன் கிரகம்
ஒரு முறை சூரியனைச்சுற்றி வர எடுக்கும் காலம்
12 ஆண்டுகள்.
வியாழன், சூரியன், பூமி, நிலவு, மகம் என்ற நட்சத்திரக்கூட்டம்
என ஐந்தும் ஒரே
நேர்கோட்டில் வருவது
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை.
அதுவும் மகம் என்ற நட்சத்திரக்கூட்டம் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று இணைவது சிறப்பானது.
அதனால்தான் மாசிமகம் எனப்படுகிறது.
மகம் என்பது இந்திய வானியலில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரப் பிரிவுகளுள் 10 ஆவது
பிரிவு ஆகும்.
சிம்மராசியில் அமைந்துள்ள
இந்த நட்சத்திரக்கூட்டத்தின் அமைப்பு.
கும்பகோணத்தில் உள்ள மகாமக குளமும் இந்த சிங்க நட்சத்திர அமைப்பை ஒட்டியே கட்டப்பட்டிருப்பது சிறப்புக்குரியது.
நட்சத்திர சிங்கத்தின் உடல்,
வயிற்றுப்பகுதியை மையமாகக்கொண்டு மகாமக குளத்தை கட்டியிருக்கிறார்கள் தமிழர்கள்.
என்ன ஒரு விண்ணியல்
அறிவு அவர்களுக்கு.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றும் வியாழன் மக நட்சத்திரக்கூட்டத்தில் இருக்கும் போது சூரியன்
கும்ப நட்சத்திரக்கூட்டத்தில் இருப்பதால் இவ்வூர் கும்ப-கோணம் என்றே அழைக்கப்படுகிறது.
வட இந்தியாவிலும்
குறிப்பாக உத்திரப்பிரதேசம்
பிரயாக்ராஜில், அவர்கள்
கொண்டாடினாலும்
கும்ப நட்சத்திரம்
என்ற தமிழ்ப்பெயர்
இன்னும் மாறாமல் உள்ளது.

திருமணம் என்பது நீங்கள் பெரும்

 திருமணம் என்பது நீங்கள் பெரும் விலை கொடுக்க வேண்டிய ஒரு ஒப்பந்தம்.

🔺️ உங்களால் விட்டுக்கொடுக்க முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ உங்களால் மன்னிக்க முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ நீங்கள் விரும்பிய ஒன்றை பிறருக்காக தியாகம் செய்ய முடியாவிட்டால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ உங்கள் சுகம் மட்டும் தான் முக்கியம் என்று நீங்கள் கருதினால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ நீங்கள் உங்கள் இஷ்டப்படி மட்டும் தான் வாழ வேண்டும் என்று நினைத்தால் நீங்கள்
திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ நீங்கள் யாரிடமும் கலந்தாலோசிக்காமல்
கண்டபடி செலவழிப்பவராக இருந்தால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
🔺️ நீங்கள் நினைத்தது மாத்திரம் தான் நடக்க வேண்டுமென்ற கோட்பாட்டகல் நீங்கள் இருந்தால் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ உங்கள் தவறுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களாக இருந்தால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ உங்களுக்காக மாத்திரம் வாழ வேண்டும் என்ற சுயநலம் கொண்டவராக இருந்தால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்.
🔺️ திருமணம் என்பது நம் குணாதிசயங்கள் சோதிக்கப்படும் ஒரு பாசறையாகும்.
🔺️ திருமணம் என்பது, நாம் நமக்காக மட்டும் வாழும் வாழ்க்கையல்ல, நம்மோடு கை கோர்த்து வருவோருக்காகவும் வாழ்வதாகும்.
🔺️ திருமணம் என்பது பணிகளையும் அர்ப்பணிப்புக்களையும் பரிமாறிக் கொள்வதாகும்.
🔺️ தன் சுகத்தையும், தன் திருப்த்தியையும் மாத்திரம் பார்ப்பவர்கள் பயணத்தின் நடுவில் சோர்வடைந்து விடுவார்கள்.
🔺 ️திருமணம் என்பது ஒரு அழகான பந்தம் தான். ஆனால், யாரும் அது இலேசான பந்தம் என்று சொல்லவே இல்லை

அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி (செட்டியாபத்து) பெரிய சுவாமி குரு இருக்க பயமேன்

 

அருள்மிகு ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி

(செட்டியாபத்து)
🦚🙏🏼🦚 பெரிய சுவாமி 🐅🙏🏽🐅
🙏🏻குரு இருக்க பயமேன்🙏🏾
🪻🙏🪷 ஹரி ஓம் ராமானுஜா யா 🌹🙏🏿🌻

தமிழகத்தின் 'கடைசி கிராமம்' என்பது இந்த 'எல்லப்பெட்டி

 

கிளாசிக் எல்லப்பட்டி - சூரியன் இரண்டு மாநிலங்களில் உதிக்கும் இடம்
💚தமிழகத்தின் 'கடைசி கிராமம்' என்பது இந்த 'எல்லப்பெட்டி', மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் கேரளாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள எல்லையில் ஆமைந்துள்ளது
🌧️மூடுபனி மற்றும் மென்மையான சரால் குளிரால் மூடப்பட்டிருக்கும், யெல்லப்பட்டி மூணாரின் கிழக்கே, சற்று விலகி அமைந்துள்ளது. மலைகள் மற்றும் ஆச்சரியமான சூரிய உதயங்களின் தாயகம் இந்த இடம்,
💚மூணாறில் உள்ள புகழ்பெற்ற டாப் ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் யெல்லப்பெட்டி மலைகள் உள்ளன - மூணாறில் உள்ள மிக உயரமான பகுதி, மூணாறு-கொடைக்கானல் பாதையில். மலைகளுக்கு 35 கிலோமீட்டர் தூரத்தை தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குண்டலா மற்றும் மாட்டுப்பெட்டி அணைகளைக் கடந்து ஒரு மணி நேர பயணத்தில் கடக்க முடியும்.
💚எல்லப்பெட்டி கிராமம் பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் அழகிய எஸ்டேட் பகுதி ஆகும்.,
💛பாதை கேரளாவில் இருந்தாலும், டாப் ஸ்டேஷன் பகுதிகள் தமிழகத்தை சார்ந்தவையாகும்.,
🍓ஸ்ட்டாப்பேரி பழங்கள், அருவிகள், தேயிலை தோட்டங்கள், காடுகள், பசுமை மலைகள், முகாம்கள் ஆகியவை சூழ்ந்துள்ளது,
🚜அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை, மழை நேரங்களில் இன்னும் வசீகர அழகை பெற்றுவிடுகிறது இந்த எல்லபட்டி, டாப் ஸ்டேஷன் பகுதிகள்.,
🚌ஆச்சர்யங்களை நோக்கிய பயணங்கள் தொடரும்...

Dady-அப்பா

 




ஒரு நண்பனின் வாழ்வில்
மறக்க முடியாத நினைவுகள் 💐
அப்பாவின் அன்பையும் அக்கறையையும் நாம் உணர நீண்ட காலங்கள் எடுக்கின்றது.
82 வயதைக் கடந்து
எனக்காக காத்திருந்த என் அப்பா
நீ சாப்பிடுப்பா என்று மெல்லிய குரலில்
சொன்னது அப்பா..
நான் உன்னை பார்த்து விட்டேன்
இனிமேல் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை... என்று சொல்லும் போது
கண்களில் கண்ணீர்..😭😭😭😭
தங்கியிருந்த தாயின் கருவறை
புனிதமானது அதே போல நாம்
விழும் போது தாங்கிக் கொண்ட
அப்பாவின் தோள்களும்
புனிதமானது.
பலரது வாழ்வில் கடைசி
வரை விளங்கிக்கொள்ள
முடியாத புத்தகம் அப்பா..!
தாங்கிப் பிடிக்க
அம்மாவும் தூக்கி
நிறுத்த அப்பாவும்
இருக்கும் வரை யாரும்
வீழ்ந்தது இல்லை.
பிள்ளைகள் கேட்கும்
பொருளை வாங்கிக்
கொடுப்பதில் தான்
அப்பாவின் சந்தோசம்
நிறைந்திருக்கின்றது.
குழந்தையாக இருந்த
பொழுது உன்னை இறுக
கட்டியணைத்த படி உன்
அரவணைப்பிலும்
பாதுகாப்பிலும் வாழ்ந்த
நாட்கள் மீண்டும் வராத
என்று என் இதயம்
ஏங்குகிறது அப்பா.
தன் தலைக்கு மேலே
உட்கார வைத்து நம்மை
அழகு பார்க்கும் அப்பாவை
நாம் ஒரு போதும் தலை குனிய
வைத்து விடக் கூடாது.
என்னை தூக்கி அணைக்க
முடியாமல் நீ தவித்த
தவிப்பை உன் கண்கள்
எனக்கு காட்டிக்
கொடுக்கிறது அப்பா.
நான் ரசித்த அழகிய
இசை என் அப்பாவின்
இதயத்துடிப்பு.
தன் மூச்சு உள்ள வரை
எனக்காக நேசிப்பவர்…
எனக்காக தான்
சுவாசிப்பவர் என்
அப்பா மட்டும்..!
அப்பா நமக்கு
என்னவெல்லாம் செய்தார்
என்பதை நாம் உணர்வதற்கு
வாழ்க்கையில் பல
வருடங்களை கடக்க
வேண்டி இருக்கின்றது.
அப்பாவை தவிர நமக்கு
நல்ல நடத்தையை
வாழ்க்கையில் வேறு
எந்த ஆசானாலும்
கற்பிக்க முடியாது.
அன்பை வார்த்தையில்
வெளிப்படுத்தாமல் தன்
உழைப்பு மூலம்
உணர்த்தும் ஒரே உறவு
அப்பா மட்டும் தான்.
தாய் நமக்காக
கஷ்டப்படுவதை நம்மால்
கண்டு பிடித்து விட முடியும்.
ஆனால் தந்தை நமக்காக
கஷ்டப்பட்டதை மற்றவர்கள்
சொல்லித் தான் பிற்காலத்தில்
தெரிய வரும்.
உண்மையாக உழைத்து
சொந்த காலில் நிற்கும்
பொழுது தான் புரிகிறது.
இத்தனை நாள் தன்
தோளில் சுமப்பதற்கு
எவ்வளவு வலிகளை
கடந்திருப்பார்
என்று “அப்பா”.
அம்மாவின் அன்பு கடல்
அலை போல வெளிபட்டுக்
கொண்டே இருக்கும்..
ஆனால் அப்பாவின் அன்பு
நடுக்க கடல் போன்றது
வெளியே தெரியாது
ஆனால் ஆழம் அதிகம்.
அப்பாவின் அன்பை
விட சிறந்த அன்பு இந்த
உலகில் எதுவும் கிடையாது.
கடவுளுக்கும் அப்பாவிற்கும்
சிறு வேறுபாடு தான்
கண்ணுக்கு தெரியாதவர்
கடவுள்.. கண்ணுக்கு
தெரிந்தும் பலராலும்
கடவுள் என புரிந்து
கொள்ளப்படாதவர்
“அப்பா”.
செதுக்கப்பட்ட ஒவ்வொரு
சிலையும் கடவுள் என்றால்
எனக்கு அப்பாவும் கடவுள்
தான். அடித்தாலும் அன்பால்
அணைக்கும் கடவுள் அப்பா.
சில நேரம் பல வலிகளை
மறக்க அப்பாவின்
வார்த்தைகள் மட்டும்
போதுமாக இருக்கின்றது.
நாம் தவறான பாதையில்
சென்றால் ஓடி வந்து
நம்மை தடுக்கும் முதலாவது
உறவு அப்பாவாக தான்
இருக்க முடியும்…!
இன்னொரு ஜென்மம் ஒன்று இருந்தால்
உங்களுக்கு மகனான பிறக்க வேண்டும்
நீங்கள் உயிரோடு இருக்கும் போதே...
தங்களின் ஆசை நிறைவேற்ற வேண்டும்...
நான் முழுசா படிக்காத புத்தகம்
என் அப்பா ❤️

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...