Sunday, April 24, 2022

ராகு

 ஆளுமை, அரசன் (முதல்வர்/பிரதமர் போன்ற பதவிகள்), அதிகாரம், ஆட்சி போன்ற காரகங்கள் நவகிரகங்களில் சூரியனை குறிக்கும், புகழ், பிரம்மாண்டம், சொகுசு வாழ்க்கை, ஈர்ப்பு, போன்ற காரகங்கள் ராகுவை குறிக்கும், இவ்விரண்டும் ஒன்றிணைந்தால் தான் அந்த நபர் மிகப்பெரிய ஆளுமை கொண்ட அரசியல் பிரமுகர் எனும் அந்தஸ்த்தை பெற முடியும், இங்கே ராகுவுக்கு எதிர் கிரகம் சூரியன், சூரியனுக்கு ராகுவை கண்டால் ஆகாது ஏனெனில் அவரையே கிரகணம் செய்துவிடுவார், ராகு இல்லாத சூரியனை சனி எனும் மக்கள் ஏற்பதில்லை என்பதே இங்கே எதார்த்தம், அதாவது ஈர்ப்பில்லா (ராகு) ஆளுமையை (சூரியன்) மக்கள் (சனி) விரும்புவதில்லை இதற்கு பல உதாரணங்களை கூறலாம், அதே நேரத்தில் ஈர்ப்பும்+ஆளுமையும் ஒன்று சேர்ந்து ஆளும்போது அங்கே ஆசை எனும் ராகு ஆளுமையை (சூரியனை) தனக்கு ஏற்றபடி ஆட்டிவைத்து விழுங்க (கிரகணம்) பார்ப்பார், விழுங்கியதும் உண்டு, அப்படி விழுங்கும் போதெல்லாம் மக்கள் (சனியால்) ஆளுமை எனும் சூரியன் தூக்கி எரியப்படுகிறார், இதில் என்ன விந்தை என்றால் இரு எதிர் காரக கிரகங்கள் ஒன்றிணைத்தால் தான் ஆளுமையான அரசன் உருவாகிறான், அதே நேரத்தில் ஆளுமையான அரசன் (ஈர்ப்பு+அதிகாரம்) இரண்டிலும் சமநிலை தவறாமல் ஆட்சி செய்யும் போது நேர்மறையான அரசனாகிறார் அதே நேரத்தில் அவரது வாழ்நாள் (ஆட்சியின் ஆயுள்) சுருங்கிவிடுகிறது காரணம் ராகு, ஆக கிரகங்களின் பகையிலும் மனிதனுக்கு அத்தியாவசிய தேவையும் நன்மையும் உண்டு என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் அவசியமில்லை என்றெண்ணுகிறேன்,

ஜீவ சமாதி என்றால் என்ன?

 ஜீவ சமாதி

என்றால் என்ன?
ஜீவ சமாதி என்றால் என்னவோ
ஏதோ என்று நினைக்காதீர்கள்.
சில மகான்கள் தங்கள் உடல் கெடாதவாறு விந்துவை உடலிலேயே இருக்கும்படி செய்து, தன் அறிவை உணர்வுகளை பிரபஞ்சத்தோடு இணையும் படி செய்து, தங்கள் உடலைச் சுற்றி நல்ல ஒரு காந்த களத்தை உருவாக்கி விடுவார்கள்.
அந்த காந்த களத்தில் நாம் நுழையும் போது நம் ஜீவகாந்தம் அந்த மகானின் உயர் காந்த உணர்வுகளோடு கலக்கும் போது, நமது சிந்தனை தளம் உயர வாய்ப்புண்டு. வேண்டாத எண்ணங்கள் நீங்கி, நாம் வாழ்வில் உயர நாம் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நமக்கு கிட்டும்.
சுருக்கமாக, நமது குறைபாடுகளை நீக்கி நமக்கு வளமான வாழ்வை, நமது வினை பதிவுகளுக்கேற்ப, சீரமைக்க உதவும். அவ்வளவுதான்.
அங்கே போய் தியானம் செய்து அந்த உணர்வோடு கலந்து தன்னை மறக்கவேண்டும், தளம் மாற வேண்டும் என்று ஏதேதோ புரியாத வகையில் சொல்கிறார்களே? என்று சிலர் கூறுவார்கள்.
தியானம் என்றால் என்னவோ
ஏதோ என்று குழப்பிக் கொள்ளாதீர்கள்.
ஒரு செயலை முழுமனதுடன், சிந்தனை சிதறாமல் நீங்கள்செய்தால் அதுவே தியானம்தான்.
One thing at one will என்று மகரிஷி கூறுவார்.
ஜீவசமாதியில, உங்கள் கவனம் முழுவதும், அந்த மகானின் உயர் சிந்தனைகளோடு உங்கள் உணர்வுகளும் கலக்க வேண்டும் என்று இருந்தால் போதும்.
பிரபஞ்ச பேராற்றலும் உங்களோடு இணைந்து உங்களுக்குள்என்ன மாற்றம் தேவையோ அது இயல்பாக நடந்து விடும்.அவ்வளவுதான்.போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.
எந்த சிறப்பான கோயிலுக்கு போனாலும் சித்தர் பீடம் இருக்கும். விசாரித்து அங்கே போய்,அமைதியாக இயல்பாக உங்கள் கவனத்தை அங்கேயே நிலை நிறுத்துங்கள்.மற்றவை தானாக நடக்கும்.
இன்னும் ஒரு சிறு விளக்கம்,,,
ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம்+ஆதி.
அதாவது ஆதியாகிய இறைவனிடம் இருந்த வந்த ஜீவனை சமன் செய்தல் என்று பொருள்.
ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சாதுக்கள் போன்றவர்கள் சித்தம் என்னும் அறிவைக் கொண்டு மனதை வெல்வதற்கு வாழ்வில் கடுமையான ஒழுக்கங்களையும், உயர்ந்த தவநெறிமுறைகளையும் தனது இரு கண்களினும் மேலாக பின்பற்றி வருகின்றனர்.
உடலையும் உன்னத்தையும்
மாசின்றி பேணி காக்கின்றனர்.
அனலமோதும் ஜீவனை ஒரு நிலைப்படுத்தி தன்னையே உயர்ந்தவனாக ஆக்குவதே சித்தர் கலை.
தன்னை அறிய தனக்கொரு கேடில்லை என்கிறார் திருமூலர்.
கடவுளை காண முயன்று கொண்டிருப்பவர்கள் பக்தர்கள்.
ஆனால் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.
யோக் என்றால் சமஸ்கிருத்தில் வழி
என்று பொருள்.
இறைவனைக் காணும்
வழியைக் கண்டவனே யோகி.
இறைவனைப் பற்றிய சிந்தனையுடன் சின் அல்லது ஆதி போன்ற முத்திரையில் யோகி அமரும் ஆசிரமம்தான் "யோகாஸ்ரமம்" எனவும் கூறுகின்றனர்.
சமாதியடைவது என்பது முடிவு பெறும்
ஒரு நிலையே அல்ல.
ஞானிகள் தங்களுடைய ஆற்றலும் அருளும் என்றுமே இந்த அண்டத்தில் நிலைத்திருக்கச் செய்து விட்டு இறைவனோடு இரண்டறக் கலக்கின்றனர்.
சமாதிநிலையில் இருப்பதும் யோகநெறியின் உச்ச நிலை என உரைக்கப்படுகிறது.
இவர்களின் உடல் மன இயக்கம் மட்டுமே நின்று போயிருக்குமே தவிர உயர் உடலை விட்டு பிரிவதில்லை என்கிறார் திருமூலர்.
இதை பதிவாக எளிமையாக போடுவதற்கு காரணம
எந்த புகழ் பெற்ற கோவிலுக்கு சென்றாலும்
ஜீவசமாதி விசாரித்தறிந்து அங்கு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து நமது எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இந்த எண்ண உயர்வுக்கு நீங்கள் பெரிய தவ ஆற்றல் மிக்கவராகவோ, சித்தர்கள் போன்ற உணர்வுதளமோ தேவையில்லை.
Just relax,sit and concentrate.
கீழே உள்ள படம் கரூர் அருகேயுள்ள நெரூர் சதாசிவ பிரம்மரேந்திர சுவாமிகளின் ஜீவசமாதி.
இறையே குருவே சரணம்...
May be an image of outdoors


திப்பிலி அரிசி--மருக்கள்

 மருக்கள் மறைந்துவிடும்.


கழுத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு மிளகு சைஸ் மருக்கள் பாடாய் படுத்தின. டாக்டரிடம் போனேன்.. வேர் ஆழமா இருக்கு, அறுத்துடலாம்.. ஒரு லோக்கல் அனஸ்திஷியா கொடுத்து எடுத்துடலாம்னார்.

இல்ல டாக்டர், வீட்ல சொல்லிட்டு வரலை. நாளைக்கு காலைல வந்துரேன். மறுநாள் போனேன். வெயிட் பண்ண சொன்னார்கள். அருகில் இருந்த தமிழ் இந்துவை புரட்டினேன். மூடி வைத்து விட்டு டூட்டி நர்சிடம் ஒரு அவசர அழைப்பு. அப்புறம் வரேன். டாக்டர் கிட்ட சொல்லிடுங்க என்றதற்கு பிழைச்சுப்போங்க என்பது போல பார்த்தார்
நேராக ஒரு நாட்டு மருந்துக்கடை.100 கிராம் திப்பிலி அரிசி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து நைசாக அரைத்து, தேனில் குழைத்து மருவை சுற்றி திக் லேயராக தடவி 20 நிமிடம் கழித்து கழுவினேன். இப்படி நான்கே நாட்கள். மருக்கள் மறைந்துவிடும்.

மஹா வராஹி பூஜை

 தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று வாழ்ந்து வரும் பலர் தான் மாந்திரீக தாக்குதல்களால்

அவதிப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
அவர்கள் தினமும் இரவில் ஒரு முறை வராஹி மாலை ஜெபம் செய்து வர வேண்டும்.(கண்டிப்பாக அசைவம் மது தவிர்க்க வேண்டும்.)
4 ஆண்டுகள் தினமும் வராஹி மாலை ஜெபம் செய்து வருவதால் எல்லா விதமான பிரச்சினைகளும் மாந்திரீக பாதிப்புகளும் விலகி விடும்.
சீக்கிரம் எல்லா பிரச்னைகளும் மாந்திரீக பாதிப்புகளும் தீர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் தினமும் இரவில் ஐந்து முறை வராஹி மாலை ஜெபம் செய்து வர வேண்டும்.
தமிழ்நாட்டின் காவல் தெய்வம் மகா வராஹி அன்னையின் கருணையும் அருளும் தான் இதற்கு காரணம்!!!
சைவம் ,சாக்தம்,வைஷ்ணவம் என மூன்று வழிபாட்டு முறைகளிலும் முக்கிய தெய்வம் அன்னை மஹா வராஹி!!!
ராஜா ராஜா சோழன் இன்றைய ஆசிய கண்டம் ஆஸ்திரேலியா கண்டம் முழுவதையும் ஜெயித்து உலகத்தின் மிகப்பெரிய அரசை நிறுவியது மஹா வராஹி அம்மனின் அருளை பெற்ற பின்னர் தான்!!!
தமிழ்நாட்டில் சோழர்கள் 16,000 சிறு தானிய நெல் ரகங்களை கண்டு பிடித்ததும் மஹா வராஹியின் அருளால் தான்!!!
தேச துரோகிகள்
மொழி துரோகிகள்
இன துரோகிகள் இல்லாமல் பாரத நாட்டின் மக்கள் கடந்த 22,000 ஆண்டுகள் வாழ்ந்து வந்தது தினமும் மஹா வராஹி பூஜை மற்றும் ஜெபம் தினமும் வீட்டில் செய்து வந்ததால் தான்!!!
1800 வரை இமயம் முதல் இலங்கை வரை
குஜராத் முதல் தாய்லாந்து வரை
எல்லோரும் தினமும் வராஹி மாலை அல்லது வராஹி மந்திரங்களில் ஒன்றை இரவில் ஒரு மணி நேரம் வரை ஜெபம் செய்து வந்தார்கள் !!!
வராஹி வழிபாடு அருகி குறுகி போனதால் தான் இன்று ஊருக்கு ஒரு சில துரோகிகள் முளைத்து விட்டார்கள்.
நேர்மையாக உழைத்து வாழ்பவர்கள் பல்வேறு விதங்களில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
May be an image of 1 person and text that says 'ஓம்ஜம் க்லெௌம் சிவ பஞ்சமியை நமஹ இந்த மந்திரத்தை தினமும் இரவில் 108 முறை எழுதவும் அல்லது செபிக்கவும். 6 வருடம் வரை... (அசைவம், மது தவிர்க்கவும்)'

the great tamilnadu leaders kumaraswami kamaraj

 

The Great Kamaraj





*#காமராஜர் மறைவையொட்டி அப்பொழுதே துக்ளக் இதழில் ஆசிரியர் சோ அவர்கள் எழுதிய தலையங்க‌ம் !!*
(நாம் இப்போது நினைப்பதை அப்போது வெளிப்படுத்திய சோ)
பெருந்தலைவர் திரு. காமராஜர் மரணத்தின் போது அவர் எழுதிய இரங்கல் கட்டுரை இதோ!!!
''இனிமேல் என்ன இருக்கிறது?" என்ற கேள்விதான் மற்ற எல்லாக் கேள்விகளையும்விட முதலில் எழுந்தது . மீண்டும் மீண்டும் எழுகிறது.
◼யாராலும் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் தோன்றிவிட்டது என்ற எண்ணம்தான் மேலிடுகிறது...
◼மனம் சாய்ந்த பிறகுதான் சாய்ந்தது அந்த உடல். சந்தேகமில்லை. அந்த மனத்தைச் சாய்த்தவர்கள் பலரும் ஒன்றுகூடி சாய்ந்துபோன உடலுக்கு மரியாதை செலுத்தினோம். வாழும்போது அவர் மனத்துக்கு நாம் செய்த தவறுகளைப் பொறுத்துக்கொண்ட அந்த மனிதன், செத்த பிறகு அவர் உடலுக்கு நாம் செய்த மரியாதையையும் பொறுத்துக்கொண்டார் என்ற நினைப்புத்தான் நெஞ்சை அழுத்துகிறது.
◼ஒரு சரித்திரம் முடிந்தது" என்று சொல்வார்கள் .
◼ஒரு சகாப்தம் முடிந்தது" என்று சொல்வார்கள்.
◼ஒரு தியாக பரம்பரை முடிந்தது'' என்று சொல்வார்கள் . *எல்லாமே முடிந்துவிட்டது" என்று சொல்வதுதான் உண்மையோ* என்ற சஞ்சலம் வாட்டுகிறது.
◼மனவேதனை பெரிதாக இருக்கிறதென்றால் , வெட்கமும் அவமானமும் அதைவிடப் பெரிதாக இருக்கிறது. துக்கம் பெரிதாக இருக்கிறதென்றால் , விரக்தி அதைவிட அதிகமாக இருக்கிறது.
◼வருடத்திற்கு ஒருமுறை நாம் நினைத்துப் பார்க்கும் நல்லவர்கள் பட்டியலில் அவரும்
சேர்ந்தாகிவிட்டது. நாம் நினைத்துப்பார்க்கும் நம் வயிறுகள் மிஞ்சியிருக்கின்றன. கோடானுகோடி வயிறுகளின் நினைப்பையே தனது மனத்தில் நிறுத்தியிருந்த அந்த மனிதர் போய்ச்சேர்ந்துவிட்டார்.
◼மற்றவர்களையெல்லாம் வாழவைக்க நினைத்த அந்த மனிதனை , வாழவேண்டிய விதத்தில் வாழவைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து "வாழ்க'' என்ற கோஷம் வானதிரக்கிளப்பி , அவரை வானுலகிற்கு அனுப்பிவிட்டோம்.
◼நேர்மை விடைபெற்றுக் கொண்டுவிட்டது. பொதுப்பணி , சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டுவிட்டது. தியாகம், நமது நன்றி தேவையில்லை என்ற எண்ணத்தில் நம்மைவிட்டு எங்கோ மறைந்துவிட்டது.
◼திரு.காமராஜ் அவர்களின் மறைவு நம்மை ஒரு சூன்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. *இதை இப்போது நாம் உணரமாட்டோம். வருங்காலத்தில் "அவர்மட்டும் இப்போது இருந்திருந்தால்...!" என்ற வருத்தம் அடிக்கடி தோன்றத்தான் போகிறது. சந்தேகமில்லை.*
◼காலம் நமக்குப்புகட்டாத பாடத்தை , காலதேவன் நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டான். ''எடுத்துச் செல்கிறேன் இவரை அனுபவியுங்கள் இனி!" என்று சாபமிட்டிருக்கிறான் காலதேவன். செய்த தவறுகளுக்கெல்லாம் அனுபவிப்போம்.... *நமக்கு வேண்டியதுதான்.*
◼யாரும் , யாருக்கும் அனுதாபம் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை. சொல்லவேண்டிய அனுதாபங்களை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். அழவேண்டிய அழுகைகளை நமக்கு நாமே அழுதுகொள்வோம். அனுபவிக்கவேண்டிய தண்டனைகளை இனி நாம்தானே அனுபவிக்கப்போகிறோம்?
◼இனி நம்மால் அவரை வேதனைப்படுத்த முடியாது.
◼இனி நம்மால் அவரை அவமானப்படுத்த முடியாது. பட்டதுபோதும் என்று போய்விட்டார் அந்த நல்ல மனிதர்.... *படவேண்டியது இனி நாம்தான்...*

இது ஒரு Vedic maths என்று இன்று சொல்வார்கள்

 நாம் பார்த்தது பிடித்தது அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது பனையபுரம் கோயிலில் உள்ளது என பகிர்ந்துள்ளேன் !ஓம் நமசிவாய






இது எண்ணிக்கூட்டும் கூட்டுத்தொகை அல்ல...
பூமியின் இரு பெரும் சக்தி
2
சூரியன் சந்திரன்
3
முப்பெரும் தெய்வங்கள்
பிர.ஹரி.சிவன் ஆக்கல் காத்தல் அழித்தல்
4
நால்திசையும் அதனுள் அடக்கம்
நாலு சொன்ன வார்த்தைகளை பின்பற்று
7
ஏழ்பிறப்பும் இறைவன் படைப்பு
5 பஞ்சபூதங்கள் இன்று உலகம் இயங்காது
9
நம்மை உயர்த்துவது சோதிப்பதும் அண்டங்களிலுள்ள ஒன்பது கோள்கள்
6
கலியுககாலத்தில்
கவலை மாற்றி கருணை புரிய
சக்தியும் சிவனும் வேல் கொண்ட அய்யன்
ஆறுமுகன் அருளால் அனைவரும் சுபமே
8
என்திசையும் ஈசன் அருளால் கருணைக்கு
திசை எட்டு
1
சக்திகள் ஒன்றாகி சகல உலகிற்கு மூலமே ஆதி சக்தி. அவளே ஓம்சக்தி
இதன்குறிப்புதான் பெரியோர்கள் தருவது
இதை உணர்ந்தவர்களே
18
சித்தர்கள்
இது ஒரு Vedic maths என்று இன்று சொல்வார்கள் ஆனால் அந்த காலம் , அந்த சித்தர்கள் அவர்கள் படித்து உணர்ந்தது , இறைவன் அவர்களுக்கு குருவாக இருந்து கற்று கொடுத்தது !
எல்லாம் காரணமின்றி காவியங்கள் இருக்காது நல்லவர்களே

சர்வம் கிருஷ்ணார்பணம்

 

🌹 கிருஷ்ணார்பணம்!
”சர்வம் கிருஷ்ணார்பணம்” இந்த வாக்கியத்தை முதலில் கூறியது யார்?
சர்வம் கிருஷ்ணார்பணம் என்று சொன்னவன் கர்ணன்.
பரசுராம் என்ற பிரமணரின் சாபத்தால் பாரத போரில் தோற்ற கர்ணன்:
முன்னொருநாளில் அந்தணரால் கொடுக்கப்பட்ட சாபத்தால் போர் தருவாயில் கர்ணனின் தேர் சகதியில் சிக்கிக் கொள்கிறது.
பரசுராமரின் சாபத்தால் முக்கியமான தருணத்தில் அஸ்திரத்திற்கான மந்திரம் கர்ணனுக்கு மறந்து போகிறது.
கர்ணன் உடல் மீது அர்ஜுனனின் அம்புகள் தைத்தது. ஆனாலும் உயிர் பிரியவில்லை.
அந்தனராக வந்த கிருஷ்ண பகவான்:
பின்பு கிருஷ்ணபகவான் அந்தணர் வேடத்தில் கர்ணன் முன் தோன்றி தான் மலைகளில் தவம் பூண்டிருப்பதாகவும் கர்ணனின் கொடை குறித்து அறிந்ததால் கர்ணனிடன் யாசகம் பெற வேண்டி வந்ததாக உரைக்கிறார்.
இந்த இடத்தில் கிருஷ்ண பரமாத்மா பொய் உரைப்பதாக தோன்றும். ஆனால் அவ்வாரு அல்ல.
பகவான் அனைவர் மனதிலும் நித்தம் நித்தம் தவம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.
அதை நாம்தான் உணர மறுக்கிறோம்
சர்வம் கிருஷ்ணார்பனம்:
யாசகம் கேட்டு வந்திருப்பது அந்தனர் அல்ல கிருஷ்ணர்தான் என்றுணர்ந்த கர்ணன். என்னிடம் இல்லாததை கேட்டு என்னை இல்லை என்று சொல்ல வைத்துவிடாதே என்று அந்தனர் வேடம் பூண்ட கிருஷ்ண பரமாத்மாவை பணிகிறான்.
கிருஷ்ணரும் “நீர் செய்த புண்ணியத்தை கொடுப்பாயா” என்று வினவிகிறார்.
அதற்கு கர்ணன் “நான் செய்த, செய்யும், செய்யப் போகும் புண்ணியம் அனைத்தையும் உனக்கு தருகிறேன்” என்று இதயத்தில் தைத்த அம்பை எடுத்து தனது குருதியின் வாயிலாக தர்மம் செய்கிறான்.
அந்த சமயத்தில் கிருஷ்ணரை பார்த்து சர்வம் கிருஷ்ணார்பணம் என்று கூறுகிறான்.
யாசகத்தை பெற்றுக் கொண்டு தனது விஸ்வரூபத்தை கர்ணனுக்கு காட்டுகிறார்.
கர்ணன் பரவச நிலை அடைந்து “எனக்கு முக்தி வேண்டும் அப்படி முக்தி இல்லை என்றால் வரும் பிறப்புகளிலும் இல்லை என்று சொல்லா இதயம் வேண்டும் என்று வரம் கேட்கிறான்.
கிருஷ்ணரும் அருள்கிறார்.
இங்கே யாசகம் பெரும்போது கிருஷ்ணரின் கை தாழ்கிறது. கர்ணனின் கை உயருகிறது.
கர்ணனுக்கு ஒரு ஆசை உண்டு அது யாதெனில் எல்லாருக்கு யாசகம் செய்தாயிற்று, கிருஷ்ண பகவானுக்கு மட்டும் யாசகம் செய்யவில்லை என்பதுதான்.
பகவான் கிருஷ்ணன் தன் பக்தனுக்காக இங்கே தன்னை தாழ்த்திக் கொள்கிறார்.
நாமும் பக்தியுடன் பகவானிடம் வேண்டினால் கண்டிப்பாக நமது காலத்துக்குள் அதனை நமக்கு தந்து அருளுவான்.

வடிவேல்துணை கொள்வேன்

 


வந்து வழிபட்டேன்! வல்வினைகள் இனியில்லை!! வாராது ஒருதொல்லை!!!

நிந்தை விலகுற்றேன்! நிலைமை உயர்வுற்றேன்!! நின்பத பிடிபெற்றேன்!!!
சிந்தை ஏற்றிட்டேன்! சிவன்மகன் மனம்பெற்றேன் !! சீர்காணும் பேறுற்றேன்!!!
மந்தம் மறந்திட்டேன்! மலர்ச்சி யான்பெறுவேன்!! மனதால்குடி செய்வேன்!!!
நந்த வனமாவேன்! நாளும் அன்பூப் பூப்பேன்!! நாதன்தோள் சேர்வேன்!!!
வந்தபயன் அறிவேன்! வையம்பெயர் நிலைவேன்!! வடிவேல்துணை கொள்வேன்!!!
கந்தாதினம் சொல்வேன்! காலேகதி பெறுவேன் !!கருணைப் புகழாவேன்!!!
முந்தி அடியாராய்!! முதன்மை முழுபெறுவேன்!! முருகவொளி அமர்வேன்!!!

கேதுவை அறிவோம்

 



கேதுவை அறிவோம்..!

துறவறத்தை கேது என்போம், துறவரத்திலும் பற்றுண்டு, அதாவது துறக்க வேண்டும் என்கிற பற்றே துறவரத்தை மேற்கொள்ள செய்கிறது, ஆக இங்கே தனக்கென்ன வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து அதனை அடைய பயணிக்கிறார் கேது என்றே கூற முடியுமே தவிர கேது முற்றுமாக துறக்கிறார் என்று கூற முடியாது, ஆனால் கேது ஒரு புஜ்ஜியம் அதாவது எதனுடனும் கூட்ட முடியும் ஆனால் கழிக்க இயலாது, அதாவது எந்த காரகத்துடனும் கேதுவை இணைக்கலாம், ஆனால் எந்த காரகத்திலிருந்தும் கேதுவை பிரிக்க இயலாது என்கிறேன், கேதுவை துறவி/சித்தர் என்று ஒப்பிடுவதெல்லாம் ஒரு உவமைக்கே, கேது ஒரு புஜ்ஜியம் அதாவது ஒன்றுமில்லை என்பதே கேது, கேதுவுடன் இணைந்த கிரகங்கள் ஒன்றுமில்லா நிலைக்கே ஈர்க்கப்படும் அதன் காரணமாகவே துறவு எனும் பற்றற்ற நிலையை கொடுக்கிறார் கேது, ஆனாலும் பற்றற்று இருக்க வேண்டும் என்று எண்ணுவதே ஒரு பற்றாகும் என்பதை சாமர்த்தியமாக மறைக்கிறார் எனலாம், இப்படி தான் இருக்கும் கேதுவின் செயல்பாடும் எல்லாவற்றையும் துறந்துவிடு என்று ஏதோ ஒன்றை பிடித்துக்கொள்ள வைத்து விடுவார் கேது, அதுவும் சும்மா அல்ல அவரால் பிடித்துக்கொள்ளப்படும் காரகம் வாழ்நாள் முழுவதும் பின்தொடரும், ஆக கேதுவை சுயநலவாதி என்று கூறினால் பொறுத்தமாகவே இருக்கும், என் அனுபவத்தில் கேதுவுடன் ஒரே ராசியில் இணைந்த கிரக உயிர் காரக உறவுகள் சுயநலவாதிகளாகவே இருந்துள்ளனர், கேதுவின் பலமே துறவு துறவு என்று தனக்கான (கர்மம்) குறிக்கோளை (பலன்) அடைய கூட்டிசெல்வார், இதனை உணர்வதற்கு வழியே கிடையாது, சித்தர்கள் துவங்கி ஆசாமிவரை கேதுவை உணர முயற்சிக்கத்தான் முடியுமே தவிர, உணர்ந்துகொள்ள முடியாது ஆனால் கேது தன் பணியை முடித்த பின்னர் உணர்த்துவார் அதுவே கர்மமாகும், பொதுவாகவே கேது நின்ற வீட்டின் காரகங்களில் இந்த அனுபவத்தை ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்டே தான் இருப்போம், அதாவது ஜாதகத்தில் கேது நின்ற பாவத்தின் கேதுவுடன் இணைந்த கிரக காரகங்களை நாம் அணுக நினைக்கும்படி அணுகவே முடியாது, நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும் நடந்து முடிந்த பின்னர் தான் தெரியும் அது சாதக பலனா பாதக பலனா என்பதே, ஆக இனி கேதுவை கணிக்கும் போது நான் பதிவில் கூறிய காரகங்களை மனதில் வைத்து கணித்தால் 5% அவரை புரிந்துகொள்ள முடியும், கேது விருப்பப்பட்டால் இந்த பதிவை மேலும் சில பதிவுகளாக தொடர்வேன், கேதுவுக்கு எது விருப்பம் இந்த பதிவு பெரும்பான்மையானவருக்கு போய் சேர வேண்டும் என்பதே, ஆக ராகுவின் ஆசியால் அது நடக்கும், இப்படி தாங்க கேது உள்குத்து வைத்து வார்த்தையை விடவைக்கிறார் ஏனெனில் எனக்கு கேது+புதன் சேர்க்கை, மீண்டும் சந்திப்போம்..!

Friday, April 22, 2022

கழுகு போதிக்கும் போதனைகள்:

 வாழ்வில் வெற்றியடைய கழுகு போதிக்கும் போதனைகள்:

வானில் பறக்கும் கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே. அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும். ஆனால் மறுபுறம் கழுகோ, தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணடிக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும்.
கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து கொண்டு வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும். உயரம் கூட கூட காகம் சுவாசிக்க கடும் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து சுவாசிக்க முடியாமல் கீழே விழுந்து விடும்.
கழுகு எப்போதும் இறந்த உயிரினத்தின் மாமிசத்தை உண்ணாது.. மாறாக அவை தன் இரையை ஓரிரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து துல்லியமாக கணக்கிட கூரான பார்வை உடையது..
தன் இரையை உயிருடன் எடுத்து சென்று உண்ணும்..
கடும் புயல், தொடர் மழை, இடி, மின்னல் என எச்சுழலிலும் தன் வாழ்க்கை முறையை மாற்றி துணிவுடன் எதிர் நீச்சல் அடித்து வெல்லும்.
வியூகம் :
கழுகின் எதிரி பாம்பு தான்..
பாம்பிடம் நேரடியாக தரையில் போரிடமால், தன்னுடைய அலகால் பாம்பை தூக்கி க்கொண்டு மேலே உயரமான மேகக்கூட்டங்களுக்கு மேல் பறந்து சென்று, பாம்பிற்கு பயம் வரவைத்து, சோர்வு மற்றும் பலவீனப்படுத்தி மேலிருந்து கீழே பாம்பை போட்டுவிடும்..
கழுகுகள் சுமாராக எழுபது ஆண்டுகள் வாழக் கூடியவை. ஆனால், அவற்றிற்கு சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகும்போது உடலில் பலவித மாற்றங்க்கள் நிகழ்கின்றன.
நீண்ட கூரிய நகங்கள் பலமிழந்து போய், இரையைப் பிடித்துக் கொள்ள இயலாமல் போய்விடும்.
பலம் பொருந்திய அலகு, இரையைக் கிழித்து உண்ணும் திறனை இழந்து விடும். அதற்கும் மேலாகப், பரந்து விரிந்திருக்கும் இறக்கைகள் மிகவும் தடித்துப் போய், உடம்போடு ஒட்டிக்கொண்டு,
எங்கும் பறந்து போய் இரை தேட முடியாமல் போய்விடும்.
இப்போது கழுகிற்கு இருப்பது இரண்டு வழிகள்
ஒன்று, இந்த வேதனைகள் பொறுக்க முடியாமல் இறந்து போவது;
இரண்டாவது , முடிந்த வரையில் முயன்று பார்த்து, உடம்பின் மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு, வாழ்வதற்காகப் போராடுவது....
வாழ வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டதும், என்ன செய்யும் தெரியுமா?
உயர்ந்த மலைப் பகுதிக்குச் சென்று பாறையின் மீது தனது அலகை மோதி மோதி அதை மெதுவாக வெளியே இழுத்துப் போட்டுவிடும்.
பொறுமையுடன், புது அலகு வரும் வரையில் அங்கேயே காத்திருக்கும்.
பலம் பொருந்திய, புதிய அலகு வந்ததும் அதன் உதவி கொண்டு,
தனது கால் நகங்களைப் பிய்த்து எறியும். திரும்பவும் புது நகங்கள் முளைக்கும் வரையில் பொறுமையோடு காத்திருக்கும்.
அடுத்ததாக, புதிய, கூரிய, வளைந்த நகங்கள் வளர்ந்தவுடன், நகங்களாலும், அலகாலும் உடம்புடன் ஒட்டிக் கொண்ட இறகுகளைப் பிய்த்து எறியும்.
அடர்ந்த, கறுத்த, பெரிய இறக்கைகள் முளைக்கும் வரையில் திரும்பவும் பொறுமையோடு காத்திருக்கும்.
புது அலகு,
புது நகங்கள்,
புது இறக்கைகள் என்று மறுபிறவி எடுத்த கழுகு வாழும் உத்வேகம் உருவாகிய மகிழ்ச்சியில் மேலே உயரே, உயரே பறக்க ஆரம்பிக்கும்…
நீங்கள் துவர்ந்து விடாமல்,சோர்ந்து விடாமல் நிதானமாக உங்கள் மனநிலையை திடமாக்கி,
உங்களது அன்றாட சிறு சிறு வேலைகளை தொய்வில்லாமல் செய்து கொண்டே உங்கள் இலக்கை நோக்கி செயல்பட்டு வந்தால், உங்கள் பெரும் பிரச்சினைகள், சில நாட்கள் கழித்து உங்களுக்கு சிறியதாக தோன்றும்..
உங்கள் மனது ஒருமுகப்படுத்தப்பட்டு உங்கள் தன்னம்பிக்கை என்ற சிறகால் நீங்கள் வாழ்வில் உயரே பறந்து மற்றவர்களுக்கும்,உங்களை ஏளனமாக பேசியவர்களும் உங்களை ஒரு எடுத்துக்காட்டாக பேசுமளவிற்கு வாழ்வில் உயர்வீர்கள்...
இவையணைத்தும் கழுகிடமிருந்து
நாம் கற்ற வேண்டியவையாகும்..

கோபம் சார்ந்த உணர்வை எடுக்காதீர்கள்:

 கோபம் சார்ந்த உணர்வை எடுக்காதீர்கள்:

முருங்கை மரத்தை பாருங்கள். முருங்கை மரம் என்ன செய்தது அமைதியாக தான் இருந்தது. ஆனால் அதில் கம்பளி பூச்சிகள் ஏறி அந்த முருங்கை இலைகளையும் அந்த முருங்கை மரத்தையும் அழித்து விடுகிறது அல்லவா.
இதுவே நீங்கள் ரோஜா செடியை பாருங்கள் ரோஜா செடி ஒரு அன்பான நறுமண மணத்தை வெளிவிட்டுக் கொண்டே இருக்கிறது. அதில் உட்காரக்கூடிய பூச்சி இனத்தை பாருங்கள். ரோஜா செடி இனம் அவ்வளவு எளிதாக அழிந்து விடுவதில்லை.
இதுபோல நீங்கள் நல்ல குணம் கொண்ட மனிதர்களாக திகழ்ந்தாலும் கூட நீங்கள் ஒரு சில நேரத்தில் கோபப்பட்டு சண்டையிடும் பொழுதும், பொருந்தாத வார்த்தைகளை கூறி பேசிக்கொள்ளும் பொழுதும், உங்களது எதிரே இருக்கக்கூடிய நபரின் கோபம் சார்ந்த உணர்ச்சியை நீங்கள் சுவாசித்து அவரது மூச்சுக்காற்றுகுள் சிக்கிக்கொண்டு அந்த உணர்வுகளை சிறிது சிறிதாக உள்வாங்கி உள்வாங்கி உங்களுக்குள் கலக்கப்படுகிறது.
இது உங்களது இரத்தத்தில் கலந்து உங்களது உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குள் கலக்கிறது. இந்த அணுக்கள் விஷமாக மாறுகிறது. பிறகு நீங்கள் சண்டையிட்ட அந்த நபரை போன்ற கோபம் சார்ந்த மனிதனாக மாறி கொண்டு வருவீர்கள். அவருடைய உணர்வுகள் உங்களுக்குள் கலக்கப்படுகிறது. இது உங்களுடைய நல்ல குணத்தை சிறிது சிறிதாக நாளடைவில் சிதைத்து விடுகிறது. இந்த கோபம், இன்னும் பெரிதாக வளர்ந்து உங்களுடைய மற்ற நல்ல நல்ல குணங்களை எல்லாம் சிதைத்து விடுகிறது.
இந்த எதிர்மறை உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
இதுபோன்ற நேரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் எதிரே இருப்பவர் தவறு செய்தாலும் அந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும்தான்.
அவர் நல்ல குணத்தை பெற வேண்டும்.
அவர் நல்ல உணர்வை பெற வேண்டும்.
அவர்கள் இறைவனின் ஆசியை பெறவேண்டும்.
அவரது உடலில் இருக்கக்கூடிய வேதனை உணர்வுகள் அனைத்தும் நீங்க வேண்டும் இறைவா என்று உங்களது மனதில் ஏங்கி உணர்ந்து கூறிவிட்டு நீங்கள் கடந்து செல்லுங்கள்.
முருங்கை மரத்தின் உணர்வுகளின் தன்மைக்கு ஏற்ப தான் கம்பளி பூச்சிகள் வருகிறது. ஒரு ரோஜா செடியின் குணத்தின் தன்மைக்கேற்ப தான் அதற்கான பூச்சியினங்கள் வருகிறது. நீங்கள் எப்படி உங்களது குணத்தின் தன்மையை மாற்றுகிறீர்கள் அதற்கு ஏற்றார் போல் உங்களுக்கு பொருந்தாத நபர்கள் விலகிவிடுவார்கள். பொருந்தக்கூடிய நபர்கள் உங்களிடம் கலந்து விடுவார்கள்.
உணர்வுகளின் அடிப்படையில் தான் ஒவ்வொரு உயிரினங்களும் படைக்கப்படுகிறது. ஒவ்வொரு உயிரினங்களும் அழிக்கவும் படுகின்றன.
இப்படிப்பட்ட உணர்வுகளுக்குள் சிக்க கூடாது

ஒரு தனித்திறமை நிச்சயமாக இருக்கும்.

 தான் வெற்றி பெற்று விட்டேன் என்கிற கொண்டாட்டத்தில், பிறர் தோற்று விட்டதாக ஏளனமாக பேசுவது தவறானது.

யாருக்கு என்ன திறமை உள்ளது என்பது யாருக்கும் தெரியாது ஆனால், ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு உயிருக்கும் ஏதேனும் ஒரு தனித்திறமை நிச்சயமாக இருக்கும்...

கிரிவலம்

 



சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் வெளியூர் உள்ளூர் வெளிமாநில பக்தர்கள் அனைவரையும் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்
மேலும் கிரிவலம் செல்லும் போது கிரிவலப் பாதையிலும் திருவண்ணாமலையும் தூய்மையாக வைத்திருக்க அன்போடு வேண்டுகிறோம்.

கெட்ட நேரம் நல்ல நேரம் அப்படி ஒன்று இருக்கா

 கெட்ட நேரம் நல்ல நேரம் அப்படி ஒன்று இருக்கா

இருக்கு இல்லை என்று மறுப்பதற்கு இல்லை ஆனால் அதையே நம்பிக்கிட்டு இருந்தால், அதாவது எண்ணி கொண்டே இருந்தா நல்ல நேரமும் வீணாகி போய் விடும்.
அதாவது நமக்கு இருக்கிற நேரத்தை நாம் வீண்டித்து விடுவோம்.
என்ன செய்யலாம்.
நடப்பவை நல்லவிதமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தை நம்பிக்கை கொண்டு தீவிர படுத்தினால் கெட்ட நேரத்தில் ஒரு நல்ல நேரம் உதயமாகும்.
அதனால் இனி என்ன இருக்கு என்ற ஏக்கமோ விரக்தியோ வேண்டாம்.
எல்லாமே நலமாகும்.


தமோ + ரஜோ குணங்களே ஆசைக்கு காரணம்

 ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொல்லிவிட்டு சென்று விட்டார். எனவே, ஆசைகளை அகற்றுவதற்கு உங்களுக்கு வேறு ஒரு குரு தேவைப்படுகிறார்.*

*உடலும் மனமும் தானென எண்ணும், நமது தாத்தா பாட்டி அப்பா அம்மா இவர்களை ரோல் மாடலாக எண்ணியே நாமும், வாழ தொடங்குகிறோம். அவர்கள் பயணித்த இந்த தவறான பாதையில் தான் நாமும் நீண்ட தூரம் பயணித்து விட்டோம் !!! நீங்களே சொல்லுங்கள் !!!! தவறான பாதையில் நீண்ட தூரம் பயணிப்பவன் இறுதியில் காணாமல் போவானல்லவா? அவ்வாறு தான், நம்மில் நாமே தொலைத்து விட்டோம்.*
*நான் இந்த உடல் என்கிற தமோ குணமும், நானிந்த மனம் என்கிற ரஜோ குணமும், போன்ற தவறான குணங்கள், பசுமரத்தாணி போல நச்சென்று நம் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதன்காரணமாகவே சாத்வீக குணத்தில் நமக்கு பஞ்சம்/பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது*
*ஆக, இந்த தமோ + ரஜோ குணங்களே ஆசைக்கு காரணம் !!!*
*இவ்வுடலும் நானல்ல !!! இந்த மனமும் நானல்ல என்கிற அறியாமையில் வாழ்ந்ததெல்லாம் போதுமடா சாமி !!! ஆசைப்பட்டு ஆசைப்பட்டு அவதிப் பட்டதெல்லாம் போதுமடா சாமி !!!*
*உன்னுள் உயிர்ப்பாய் இருப்பதும், உடலை முறையாக இயக்கி, சீராக வளர்ப்பதும் இந்த உயிர் தானே !!! அந்த உயிர்தான் ஆத்மா !!! அந்த ஆத்மாவே நீ !!! THATS ALL.!!!*
*HERE, THE SOUL WISDOM BEGINS: தமோ ரஜோ குணங்களிலிருந்து விடுபட்ட ஒருவன் சாத்வீக குணத்தை அடைவதும் இங்கேதான் !!! ஆசைகளில் இருந்து விடுபட்டவன் ஆத்ம ஞானத்தை அடைவதும் இங்கே தான் !!!*
*உன்னுடைய உடல் உட்பட, இவ்வுலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ஐம்பூதங்களால் (நிலம்நீர் தீக்காற்றாகாயம்) அழிவு உண்டு !!! ஆனால், உயிர் எனப்படும் ஆன்மாவை கத்தியால் வெட்ட முடியாது !!! நீரால் மூழ்கடிக்க முடியாது !!! நெருப்பால் வேகவைக்க முடியாது !!! காற்றால் உலர வைக்க முடியாது என கீதை கூறுகிறது.*
*எனவே, அந்த ஆத்மாவையும் ஆத்மஞானியையும் எவராலும் வீழ்த்தவே முடியாது !!!*
*நீங்களே சொல்லுங்கள் !!! வீழ்த்தவே முடியாதவருக்கு (ஆத்மஞாணிக்கு= உனக்கு) எதிரிகள் எவ்வாறு இருக்க முடியும் ?*
*எதிரிகளே இல்லாத ஆத்மஞாணிக்கு பயம் எவ்வாறு இருக்கும்?*
*எதற்கும் பயப்படாத ஆத்மஞாணி எங்ஙனம் கவலை கொள்வான் ?*
*ஆம் !!! கவலையற்ற ஆத்மஞானி எப்போதும் மனம்-நிரைந்தவனாக தன்னில் சந்தோஷமாக இருப்பான்.*
*ஆக, 1. நான் உடலல்ல என்ற ஞானம் உடல்மீதுள்ள பற்றை குறைத்து கவலைகளை நீக்கும்.*
*நான் இந்த மனமல்ல என்ற ஞானம் நான், எனது போன்ற possessive ness தன்னலத்தைக் குறைத்து அகந்தையை அழிக்கின்றது !!!*
*3. நான் ஆத்மா என்ற ஞானம் நான் மரணமற்றவன் + நான் எதிரியற்றவன் + நான் பயமற்றவன் + நான் கவலையற்றவன் + நான் மரணகவலை இல்லாதவன் + நானர மனநிறைவு கொண்டவன் + நான் தன்னில் ஆனந்தமாக இருப்பவன் போன்ற நல்லுணர்வுகளை இந்த அந்த ஆத்ம ஞானம் தருகின்றன !!!*
*எந்தவொரு ஞானத்தை நீ பெற்றால், அதற்கும் மேலான சிறந்ததொரு ஞானத்தை நீ பெற வேண்டியதில்லை என்கிற பரிபூரண-மனநிறைவை உனக்கு தருகிறதோ அந்த ஞானமே ஆத்ம ஞானமாகும் !!!*
*எந்த ஒரு ஞானத்தை நீ பெறுவதால்*
*உன் மரணத்தின் போது கூட உன்மனம் சந்தோஷமாக இருக்குமோ* ... —> *ஆச்சர்யத்தைத் தரும் அந்த ஞானமே ஆத்மஞானமாகும் !!!*
*அந்த ஆத்மாவைப் பற்றிய ஞானம் தான் எது ? அதாவது, ... ஆத்மா என்றால் என்ன ? ஞானம் என்றால் என்ன ?*
*மொத்தத்தில், ஆத்மஞானம் என்றால் என்ன ? LET US LISTEN CAREFULLY THE 2 EQUATIONS !!!*
*ஆத்மா = உயிர் !!! (1)*
*ஞானம் =அறிவு !!! (2)*
--------------------------------
*Adding, (1) + (2) we get,*
*ஆத்மஞானம் = உயிரைப் பற்றிய அறிவு.*
--------------------------------
*Yes, It Remains To Learn About The Soul !!!*
*இப்போதிருக்கும் உனது இந்த உடலில் தங்கியிருக்கும் உயிர் எனப்படுவதும் ஆத்மாவே !!!*
*மனித-ஜீவன்களின் உடல்களிலும்*, ...
*அனைத்து விலங்கு உடல்களிலும், வாசம் செய்து கொண்டு இருப்பதும் உயிர் எனப்படுவதும் ஆத்மாவே !!!*
*பஹவான் ஸ்ரீகிருஷ்ணரின் பரமாத்மாவும் அஃதே !!!*
*அந்த ஆத்மாவே நான் !!! ஆக, ஒருவன் தன்னை அறிதலும், ஆத்மாவை அறிதலும் பரமனை அறிதலும் ஒன்றுதான் !!!*
*ஆம் !!! எனதருமை ஆன்மீக ஆன்மாக்களே !!! முதலில் தன்னை அறிய முயல்பவன் நானாத்மா என உணர்ந்து, இறுதியில் 'தானே' பராமாத்மாவின் ஒரு அங்கம் என உணர்கிறான்*
*ஆக ஒருவன்,பொருட்கள் மீது பற்றில்லாமல், எதன்மீதும் வெறுப்பின்றி, பிறருக்கு ஹிம்சை செய்யாமல், கருணையோடு உதவுகின்ற எண்ணங்களோடு தன் மனதை கட்டுப்படுத்தினால், நான் ஆன்மா என உணர்வதும் சாத்தியம் !!! அவன் இறைவனை அடைவதும் சத்தியம் !!!*
*இங்கு, நாமே, நம்முயிரைப் பற்றி கற்கும் ஞானம்தான் ஆத்ம ஞானம் !!!*
*ஆத்மாவுக்கு என்றும் அழிவில்லை* (3)
*நானே ஆத்மாவாக இருக்கின்றேன்(4) என இவ்விரண்டையும் 4 முறை சொல்லிப் பாருங்கள் !!!*
*அதாவது, எந்த ஆத்மாவுக்கு என்றுமே அழிவில்லையோ ... அந்த அழிவற்ற ஆத்மாவாகவே நான் இருக்கின்றேன் !!!*
*ஆனால், எல்லோரையும் போல, ... எப்போதும் போல பிடிவாதமாக, நானே உடல் என்கிறீர்களா ?*
*Wait A Minute Bro !!! "உடலை - நான்" என்பவனுக்கு நிச்சயம் மரணமுண்டு !!! மரண-பயமும் உண்டு !!! மரணக் கவலையும் உண்டு !!! உடல்மீது அதீத பற்றுதல் உள்ள காரணத்தால், அவனது மரணம் கொடுமையாகவும் இருக்கும் !!!*
*எனவே, மரண பயத்தை தவிர்க்க வேண்டுமா ? It Is Very Simple !!!*
*இத்தகைய சிக்கலான பிரச்சனைக்கும், ஆன்மீகத்தில் மிக எளிமையான தீர்வு உள்ளது !!! Such A Complicated Problem Also Has A Very Simple Solution In Spirituality !!!*
*இவ்வுடல் நானல்ல & நானிந்த மனமல்ல". என்கிற ஞானத்தை உடனே அப்பியாசம் செய்ய வேண்டும் !!!* (அடிக்கடி நினைவு கூர்ந்து அதை மனதில் நிலை நிறுத்துதல்)* *That's All.*
*எவ்வாறு செய்வது? ஆத்மா நிறமற்றவது !!! குணமற்றது என்ற நான் சென்னால், உடனே நீங்கள் அறிவு ஸ்வரூபமாக விளங்குகின்ற உயிர் எனப்படும் ஆன்மாவாகிய நானும்* ....
*1. நிறமுமற்றவன் !!!*
*2. குணமுமற்றவன் !!! என்று சொல்ல வேண்டும் !!!*
*ஆத்மா ஆணுமல்ல !!!* *பெண்ணுமல்ல !!! இரண்டும் அல்லாததும் அல்ல என்று நான் சென்னால், உடனே நீங்கள் அறிவு ஸ்வரூபமாக விளங்குகின்ற உயிர் எனப்படும் ஆன்மாவாகிய நானும்*....
*ஆணுமல்ல.*
*பெண்ணுமல்ல.*
*இரண்டும் அல்லாததும் அல்ல என்று சொல்ல வேண்டும்.*
3. *ஆத்மா சிவப்பானவனும் அல்ல கருப்பானவனும் அல்ல நெட்டையானவனும் அல்ல குட்டையான வனும் அல்ல, என்று சொன்னால், உடனே நீங்கள்* ... ... ... *என்று சொல்ல வேண்டும் !!!*
4. *இதைப் போலவே, நீங்கள் அறிவு ஸ்வரூபமாக விளங்குகின்ற உயிர் எனப்படும் ஆன்மாவாகிய நானும்* ....
*பொறாமை, ஹிம்சை செய்தல், சுயநலம், தற்பெருமை, கர்வம் என அனைத்து தீயகுணங்களும் இல்லாதவன் என்று சொல்ல வேண்டும் !!!*
*பொறாமை, ... , கர்வம் என அனைத்து தீயகுணங்களும் நம் மனதிற்கு தான் அவ்வப்போது தோன்றுவது உண்டு !!! ஆனால், ஆன்மா குணமற்றது !!! எனவே, ஆன்மாவாகிய நானும் எந்த குணமும் இல்லாதவன் !!!*
*ஒன்றும் இல்லாதவனாகிய ... அதே சமயத்தில், எங்கும் நிறைந்தவனாகிய ... எல்லாமுமாகிய* ... *ஆன்மாவாகிய நான் எதன்மீதும் எவர் மீதும் பற்று கொள்ளாதவன். அந்த ஆன்மாவாகிய நான் எவர்மீதும் விருப்பு வெறுப்பு கொள்ளாதவன் !!!*
*ஞானம் இருப்பது என்பது வேறு !!! ஞானம் நிலைப்பது என்பது வேறு !!!*
*எனவே, இந்த ஆத்ம ஞானத்தை அறிவதோடு நில்லாமல் ... இந்த ஞானத்தில் என்றும் நம் மனம் நிலைத்து நிற்குமேயானால் (அதற்கான பயிற்சியே நிதித்தியாசனம்) நான் என்கிற நீ ஒரு ஆத்மஞாணி ஆவாய் !!!*
*இவ்வாறாக, அத்மஞானத்தில் உன்மனம் நிலைபெற்று, எந்த கவலையுமில்லாமல் (இதுவே உயிரோடு இருக்கும் போதே மோட்சம் பெறுவது) "தன்னுள்" ஆனந்தமாக வாழ்வதே ஜீவன் முக்தி !!!*

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...