Friday, April 22, 2022

உள்நோக்குப் பயணம்

 c

0 
. *அண்டத்தில் இருந்து உருவான பிண்டமே👨இந்தமனித உடல்👨 !!! நிலம் நீர், தீக்காற்றாகாயம் என ஐந்து பூதங்களும் உருவாக்கிய *நம்முடலை இறுதியில், ஐம்பூதங்களே உண்ணுகின்றன !!!*
*ஏக்கர் கணக்கில், மண்ணை வளைத்துபோடுகிறான் 👨மனிதன்👨. *முடிவில், வெறும் 6 அடி மண்ணே 👨அவனை👨 அடக்கி மண்ணாக்கி விடுகின்றது.*

*மண்ணை விரும்பிய 👨மனிதனை👨, அந்த மண்ணே இறுதியில், தின்றுவிடுகின்றது !!! ஹஹ்ஹஹா இதிலென்ன வேடிக்கை தெரியுமா?* *இதையெல்லாம்👨நாம்👨" புரியாமல் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதுதான்* !!! *இந்த ஞானம் 👨நம்👨எல்லோர்க்கும் தெரியாமலில்லை !!!* *அது, நம்மனதில் நிலைக்க வில்லை* என்பதே உண்மை !!!
*வெட்டவெளியிலுள்ள விளக்கினை அனைப்பதற்கு, காற்று எத்திசையில் இருந்தும் வந்திடலாம்* !!! அதைப் போலவே,* *இறுமாப்போடு புலன் இன்பங்களில் மயங்கித் 👨திரிபவனுக்கு👨, எமன் எத்திசையில் இருந்தும் வந்திடலாம் !!!*
*ஆரோக்கியம், இளமை, வசதி, பாதுகாப்பு என நான்கும் *ஆனவமாக மாறி, 👨மனிதனது👨 அறிவுக்கண்ணை மறைக்கின்றன !!!*
*உன்னுடலை உன்னால் (காலனிடம் இருந்து) முழுவதுமாக, காப்பாற்ற முடியாது. எப்போதும் 👨உன்👨 மனதில் நிலைக்க வேண்டிய ஞானமிது*
*"நடைபாதை நடப்பதற்கே" என்று ஏன் சொல்ல வேண்டும்? ஏனெனில், அதை, நடப்பதற்குத் தவிர மற்ற எல்லா காரியங்களுக்கும் நாம் பயன்படுத்துவதால்தானே?*
*அதைப்போலவே, *வாழ்க்கை வாழ்வதற்கே* என்று ஏன் சொல்ல வேண்டும் ? ஏனெனில், *👨மனிதன்👨 எந்த நோக்கத்திற்காக படைக்கப் பட்டானோ ... *அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்து கொண்டு இருக்கின்றான்.*
*விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைத்தவிர, *உலகில் 700 கோடி 👨மனிதர்களும்👨, மனித நோக்கத்தை (பிறவிப்பயனை) அடையாமலேயே இறந்து விடுகின்றனர்.*
*யார் 👨இவர்கள்👨 ? உண்டு உறங்கி உடல் வளர்த்து, *வாழ்ந்தும் வாழாமல் மறைகின்ற* இவர்கள், *பிறந்தும் பிறவாததற்கு சமம் !!!*
*கோவப் படாதீர்கள் !!! *இப்போது 👨உங்களுக்கு👨 வர வேண்டியது கோபம் அல்ல - சிந்தனை !!!
*அடுத்த கசப்பான உண்மையை சொல்லட்டுமா? 👨நீ👨 செய்யும் எல்லா தவறுகளுக்கும் காரணம், உன்மனதை நீ அதன்போக்கில் ஓட விடுவது தான்" !!! 👨உனக்கு👨 எதிரியே உன் மனம்தான்.*
*மனதை ஆள்பவனுக்கும் மனதால் ஆளப்படுபவனுக்கும்* ஒரு சிறிய வித்தியாசம் தான் !!!
*பேயோட்டுபவனுக்கும், 👿பேய்👿 பிடித்துக் கொண்டவனுக்கும்* உள்ள வித்தியாசம்தான் அது !!!*
ஆக, *👨நம்மில்👨 நிறைய பேருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறீர்களா? ஒப்புக் கொள்ளாதவர்களே இங்கு அதிகம்* !!!
மனதை அதன் போக்கில் அனுமதிக்கும் இவர்களுக்கு *மிகமோசமான இன்னலைத் தரும் முக்கியமான 5 எதிரிகள்* உள்ளனர் !!!*
*காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம்* என்னும் ஐவரே அந்த எதிரிகள் !!! உன்மனதிற்கே தெரியதவாறு *உன்மனதினுள் நுழைவார்கள்.* இவர்கள் ரகசியமாக உன்னிடமுள்ள *ஞானத்தை திருடிக் கொள்வார்கள்.* உடனே, *நீ முட்டாளாகி, இன்னல்களைத் தேடிக் கொண்டு*, முடிவில் *உனக்கு மட்டும் தான் அதிகமான துன்பமென கடவுளை நொந்து கொள்வாய் !!!*
பிறர்மீதுள்ள *"பொறாமையும் கோவமும் கூட *திறமையாக உன்மனதினுள் நுழைவார்கள்.* உன்னைத்தான் *அதிகமாக தண்டிப்பார்கள்"* இதைப் புரிந்து கொண்டால், அதுவே உயர்ந்த ஞானம். *அதுவே, பொறாமை கோவம் என்கிற இரு மனநோய்களுக்கும் சிறந்த மருந்து*
அடுத்தபடியாக, நாக்கை அடக்கினால், *பிறர் வெறுப்புக்கு பலியாகாமல் இருக்கலாம்*
போறாத குறைக்கு பொன்னம்மா குறை என்பார்கள் !!! 👨நம்👨 மனதில் உள்ள 😏வெறுப்பு😏. *ஆம் !!! 👨நமது👨மனமும் சிலர்மீது வெறுப்பை வாரி உமிழ்கின்றது*
ஆனால், "👨 அவர்கள்👨 அவ்வாறு வாழ்வதற்குதான் படைக்கப் பட்டு இருக்கின்றார்கள் They are created to live their own way. *இந்த ஞானமே நம்மனதில் உள்ள வெறுப்புக்கு மருந்து*
*எல்லாவற்றையும் சொன்ன பின்பு எது பிறவிப்பயன்? எது உண்மையான வாழ்க்கைப் பாதை? என்று சொல்லா விட்டால், இப்பதிவு நிறைவடையாது !!!*
சாஸ்த்திரங்கள் மனிதனுக்கு கூறும் இரண்டு அறிவுரைகள்.
1. *வாழு*
2. *வாழவிடு*
*Live And Let Live*
*மொத்தமுள்ள 70 லட்சம் உயிரினங்களில், 👨மனிதன்👨 இதுவரை கண்டுபிடித்துள்ள 15 லட்சம் விலங்கு உயிர்களுக்கும் *எந்த ஹிம்சையும் செய்யாதிருத்தலே* "வாழவிடு" என்ற சொல்லுக்கு பொருளாகும்.*
*ஒரு பேரனாக, மகனாக, நண்பனாக, கணவனாக, அப்பாவாக, தாத்தாவாக வாழ்ந்த ஆண்களும், ஒரு பேத்தியாக, மகளாக, தோழியாக, மனைவியாக, அம்மாவாக, பாட்டியாக வாழ்ந்த பெண்களும், *58வரை பிறருக்காக வாழ்கிறார்கள்* !!!
ஆனால், *அவன் வாழ்ந்து முடிச்சுட்டானப்பா* என்றல்லவா *இளைஞர்கள் எண்ணுகிறார்கள் ?*
ஆனால் உண்மை என்ன தெரியுமா? *அவர் இப்பொழுதுதான் தனக்காக வாழ ஆரம்பிக்கின்றார்*!!! அதாவது *இனிமேல் தான் அவர் தனது பிறவி நோக்கத்தை அடைய முற்படுகின்றார் !!!*
*அப்படியானால், 58 வயது வரை பிறருக்காக வாழ்கின்ற வாழ்க்கை உண்மையான வாழ்க்கை இல்லையா*?
*உன் அப்பாவும் அம்மாவும் உனக்காக வாழ்ந்த குடும்ப வாழ்க்கையை தவிர்த்து இருந்தால், நீ பிறந்திருக்கவே மாட்டாய் !!! எனவே, பிறருக்காக வாழ்கின்ற குடும்ப வாழ்க்கை மனிதனுக்கு அவசியமே !!! இருப்பினும் அதைக் காட்டிலும் அவசியமானது அவர்கள் தன்னை உணர வாழும் வாழ்க்கை !!!*
*வேதங்களிலும், இதிகாசங்களிலும், குறிப்பிட்டுள்ள முறையில் மனதை உள்முகமாக செலுத்தி அதன்படி வாழ்தலே, "வாழு" என்ற சொல்லின் பொருளாகும்*!!!
*இனி, சாஸ்திரங்கள் சுட்டிக் காட்டுகின்ற அந்த "வாழு" என்கிற வாழ்க்கையை 👨நாம்👨 உணர்ந்து விட்டால், இப்பதிவு நிறைவு பெற்றுவிடும் !!!*
அதற்கு இரண்டு மார்க்கங்கள் உள்ளன !!!
1. *வைராக்கியம். 2. கர்மயோகம்*
*👨நீ👨 உயிர் வாழ்வதற்கான குறைந்தபட்ச அத்தியாவசிய தேவைகளோடு வாழுகின்ற தவ வாழ்க்கையை* (வைராக்கியம்) பின்பற்று !!!
*அதற்காக கார்-பங்களா, பணம்-பதவி, சொத்து-உறவு என்றெல்லாம் அனைத்தையும் விட்டுவிடு என்கிறாயா?*
*"ஆம் !!!" என்று உண்மையைச் சொன்னால்* என்னை முட்டாள் என்று சொல்லி விடுவீர்கள்.* உண்மைதானே?
ஏனெனில், ஒரு பொருளை பெருவதற்கு எவ்வளவு சிரமப் பட்டீர்களோ ... *இழக்கும்போது அதைவிட நீங்கள் சிரமப்படுவீர்கள்* !!!எனவே, அந்த உண்மையை வேறு சொற்களால், *மாற்றி சொல்லுகிறேன்.*
*எல்லாம் இருந்தும், மனதளவில் எதுவும் இல்லாதவனாக வாழ்ந்துவிடு* !!!
*இந்த வைராக்கிய வாழ்க்கையானது உனது மனதில் நற்குணங்களை நிலைக்கச் செய்து, தீய குணங்களில் இருந்து விடுதலை தரும் !!!*இதுவே, வைராக்கியத்தின் மூலம் பெறும் சித்த சுத்தி* !!! அப்படி வாழ்வது கடினமாக சிலருக்கு தோன்றினால், அவர்கள் *கர்ம யோகத்தின் மூலம், இந்த சித்த சுத்தியை பெறலாம்.*
கர்மயோகம் : *கீழே குறிப்பிட்ட எண்ணங்களை மனதில் முன்நிறுத்தி,செயல்களை செய்வதே, கர்மயோகம். மற்றவை கர்மம் எனப்படுகின்றன.*
*1. செயலுக்கு முன் 😘
*(a). எண்ணமும், சொல்லும், செயலும், ஒன்றாக இருத்தல்*
*(b). பொது நல நோக்கத்தோடு இருத்தல்,*
*(c). தர்ம காரியங்களில் மட்டுமே ஈடுபடுதல்*
*2. செயலின்போது 😘
*(a) பலன் நோக்கு இன்றி இருத்தல், அதாவது, தோள்வி பயமின்றியும், வெற்றிமோகம் இன்றியும் இருத்தல்.*
*(b). முழு முயற்சியுடனும் ஈடுபடுதல்.*
*3. செயலுக்குப் பின்*
*வெற்றி அல்லது தோள்வி ஆகிய விளைவுகள் எதுவாயினும், அதை இறைவனின் பிரசாதமாக விருப்பமுடன் ஏற்றுக் கொள்ளுதல்*
அதாவது, செயலுக்குமுன், *பலன் நோக்கமின்றியும்*, செயலின்போது *முழு முயற்சியோடும்*, செயலுக்குப்பின், *விளைவுகள் எதுவாயினும், விறுப்பு வெறுப்பின்றி, அவற்றை இறைவனின் பிரசாதமாக, ஏற்பதும்* என இவ்விதமான *நோக்கங்களோடு (ATTITUDE) செயலைச் செய்வது தான் கர்மயோகம் !!!*
வைராக்கியம், மற்றும் கர்மயோகம் மூலம், ஏன் சித்தத்தை சுத்தமாக்க வேண்டும்?
*உன் மனதை உள்முகமாக திசைதிருப்பி அதை சரியான பாதையில் பயணிக்கச் செய்வதற்கு சித்த சுத்தி என்கிற இந்த பயிற்சியே *அடிப்படைத் தகுதியாகும்*!!!
*இந்த அடிப்படைத் தகுதியை அடைந்த பின்பு நமது உள்நோக்குப் பயணம் மிகவும் சுலபமாகிவிடும் !!!*
*சுலபம் என்று குறிப்பிட்ட அந்த உள்நோக்கு பயணம் வெற்றி பெற்றால் அதன் பின் 🌏உலகமே🌏, உன் காலடியில் தான்*

வலி நிராகரிப்பு வேதனை துன்பம்

 வலி நிராகரிப்பு வேதனை துன்பம்

ஏமாற்றம் கவலை என துயரப்பட
வைக்கும் இவை எல்லாம் #வாழ்க்கையின் இறுதிக் கட்டமல்ல வாழ்க்கையை புரிந்துக்கொண்டு பயணிப்பதற்கான #பயிற்சிக் கட்டங்கள் யுகங்கள் தாண்டி வாழ்ந்து விட்டதாய் தோன்றும் தருணங்களை பரிசளித்து விட்டது
பலரது நேசம் மனிதம் மறந்த #மனிதர்கள் மத்தியில் மனிதனாய் வாழ முயற்சி
செய் அனைத்து உயிர்களைப் போல மனிதனும் அன்பிற்கு அடிமை
வாழ்க்கையில் பணம் கூட சில இடங்களில் தான் தேவைப்படுகிறது ஆனால்
#பொறுமை எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறது

வாழ்க்கையின் வெற்றிக்கு சில சிந்தனைகள்...

வாழ்க்கையின் வெற்றிக்கு
சில சிந்தனைகள்...
1) எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.
2)அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
3)தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
4)விட்டுக் கொடுங்கள்.
5)சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
6)நீங்கள் சொன்னதே சரி, செய்வதே சரி, என்று கடைசி வரை வாதாடாதீர்கள்
7)குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
8)மற்றவர்களை விட உங்களையே எப்போதும் தாழ்த்தி அல்லது உயர்த்தி நினைத்து கவலைப்படாதிர்கள்.
9) அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதிர்கள்.
10) எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உணடோ இல்லையோ,அதை சொல்லி கொண்டிருக்காதிர்கள்.
11) கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.
12) உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
13) மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதிர்கள்.
14) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.
15) பேச்சிலும், நடத்தையிலும், திமிர்த் தனத்தையும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
16) அவ்வப் போது நண்பர்கள் உறவினர்களை நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
17) பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
18) தேவையான இடங்களில் நன்றியும், பாராட்டையும் சொல்ல மறவாதிர்கள்.
19) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும், அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

குடும்ப பாசம்


🤗குடும்ப பாசம்
ஒரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.
முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.
இப்படிதான் ஒருநாள்.
ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான்.
இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.
வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கணவனின் நன்பருக்கும் Phone செய்கிறாள். கணவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புலம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்
இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கணவனின் நண்பன் Car எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கணவனை அனைத்துக்கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறான். அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கணவன்.
மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். மனைவியின் உறவினர்கள் வருகின்றனர். அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு... என்கிறார்
மருத்துவர்...உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்...
அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவன் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக என்கிறான்.
தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.
காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்.
இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். #கணவன்_மனைவி #வாழ்க்கையின் நோக்கமே மகிழ்ச்சிதான்

வாழ்க்கையின் யதார்த்தம்*

 

#வாழ்க்கையின் #யதார்த்தம்*
1. எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...
2. தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்.
3. உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...
4. குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.
5. வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.
6. ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது " ஊமையாய் " இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது " செவிடனாய்" இருங்கள்...! எளிதில் வெற்றி பெறுவீர்கள்.
7. சங்கடங்கள் வரும் போது "தடுமாற்றம் " அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது " தடம் " மாறாதீர்கள்.
8. வளமுடன் (பணமுடன்) வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி " நீங்கள் " நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
9. ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு " நீங்கள் " மட்டுமே காரணம்.
10. நீ சிரித்துப் பார்..! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.
11. அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.
12. வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்.
13. எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.
14. நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை " முட்டாள் " என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு " நம்பிக்கையையே " ஆகும்.
15. அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் " திறமை " படைத்தவன் என்பதே அர்த்தம்.
16. மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!
🌷🌷வாழ்க வளமுடன்

உனக்கு வறுமை வராதவாறு

 அன்னை பள்ளூர்வாராஹி துணை

#வாழ்க்கையின் மீது பிடிப்பு என்பது வேறு
#வாழ்க்கையின் மீது வெறுப்பு என்பது வேறு
#வாழ்க்கையின் மீது உணர்தல் என்பது வேறு
இந்த மூன்று நிலைகளில் நீ எந்த நிலைகளில் வாழ்ந்தாலும்
உன் வயோதிக காலத்தில் உனக்கு வறுமை வராதவாறு உன் வாலிப காலத்திலேயே சேர்க்க
வேண்டிடதை சேர்த்து வை
No photo description available.

நிழலருமை

 ஓம் நமசிவாய :-

நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்
ஈசன் கழலருமை வெவ்வினையிற் காண்மின்.
- ஔவையார்🙏.
விளக்கம் :-
நிழலின் அருமை வெயிலை உணர்ந்த பிறகு தெரியும்.
ஈசனின் அன்பு வினையின் காரணமாக ஆன்மா துன்பம் படும் போது புரியும்.
- திருநீலகண்டம்.🙏.

மரகத லிங்கம்!

 


மரகத லிங்கம்!

நவகிரகத்தில் இளவரசன் என அழைக்கப்படுவது புதன் பகவான். புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதத்தால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை நாம் வழிபாடு செய்வதால் நாம் கேட்ட வரம் தருவார் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.
சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷன் சக்தி உண்டு. அப்படி புதனுக்கு உகந்த மரகத லிங்கத்தை நாம் வணங்கி வர நம் மனக்குறைகள் நீங்கி நாம் நினைத்த வரத்தைப் பெறலாம்.
மரக லிங்கத்தை வழிபட்டு வர ஆரோக்கியம், கல்வி, பெரிய பதவி, அரசருக்கு அடுத்த பதவியைத் தரக்கூடிய யோகத்தைப் பெறலாம்.
அதோடு நம்முடைய தொழில், வியாபாரம் விருத்தி அடையவும், உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த உயரத்தை அடையலாம்.
அத்துடன் நம்முடைய சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெறலாம். மேலும் இந்த மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது நம்பிக்கை.
மரகதலிங்கம் என்பது மரகதம் எனும் கனிமத்தால் செய்யப்பட்ட சிவலிங்கமாகும். இந்த சிவலிங்கம் மரகதத்தின் தன்மையால் பச்சை நிறமுடையதாக இருக்கின்றது. இந்த மரகத லிங்கத்தினை தமிழகத்திலுள்ள எண்ணற்ற சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்து வாழிபாடு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்மூர்த்திகளில் ஒருவராக சிவபெருமானுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல சிவாலயங்கள் உள்ளன. பழமை வாய்ந்த ஒவ்வொரு சிவன் கோயிலும் ஒவ்வொரு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றன. விலை உயர்ந்த ரத்தினங்களில் மரகதம் ஒன்று. அப்படிப்பட்ட மரகத கல்லினால் செய்யப்பட்ட சிவ லிங்கம் உள்ள சில கோயில்கள் உள்ளன.
🙏7 மரகத லிங்கம் அமைந்துள்ள திருக்கோயில்கள் :..
சோழ சக்கரவர்த்தி முசுகுந்தா (12 ஆம் நூற்றாண்டு) கடும் தவம் செய்து ஏழு மரகத சிவலிங்கங்களை, தேவர்களின் அரசன் இந்திரனிடமிருந்து பெற்றான். அந்த விலைமதிக்க முடியாத மரகதலிங்கங்களை வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் மக்கள் வழிபாட்டிற்காக சிவ ஆலயங்களில் (சப்த விடங்க தலங்கள்) அமைத்து திருக்கோயில் எழுப்பினார்.
🙏மரகத லிங்க அபிஷேக பலன்கள்:...
மரகத லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து அதனை அருந்தினால் மிகச்சிறந்த மருத்துவ சக்தியாக இருக்கும். அதே போல மரகத லிங்கத்தின் மேல் சாற்றப்படும் சந்தனத்தைப் பூசிக்கொள்வதால் நல்ல மருத்துவ பலனைத் தரும் என்று கூறப்படுகிறது.
சிவாய நம...

சரணம் சண்முகா



சோம்பல் சொந்தம் கொண்டாட
சோகம் மனசுருக்கி சுவைக்க
வீம்பாம் விரக்தி விளையாட
வெற்றி வெகுதொலை வெகுண்டோட
தேம்பியே மனது தெளியாதிருக்க
தேகமும் மெலிந்து பின்வாட
சாம்பலாம் உம்நீறை சாற்றிநான்
"சரணம் சண்முகா" என்றேகூற
தீம்பட்ட தூசுபோல் தீமைகள்
தீய்ந்து கருகி மாய்ந்திட
மேம்பட வைப்பாய் எம்வாழ்வை
மேதினில் மேன்மை உறுதி!!
தாம்பத தருநிழல் எமக்கும்
தயவுடன் இருந்திட உண்டு!!= சிவ
காம்பே!! கந்தா!! கடைக்கண்
கருணைப் பார்வை எமைக்காணே!!!

நீயும் ஒரு பிரஞபஞ்சத்தின் கருவி

 உனை நீயே கொண்டாடு...

1)உனை தினம் நீ ரசி...
2)நீ மகிழ்ந்த தருணங்களை உன்னிடம் பேசு...
3)உன் பலங்களை உன்னிடமே கூறு
4)நீ ரசித்தவற்றை மீண்டும் எண்ணி ரசி...
5)உனக்கு உதவியவர்களை எண்ணி பிரஞ்சத்தின் உன் மீதான பெருங்கருணையை நினைவிற் கொள்...
6)நீயும் ஒரு பிரஞபஞ்சத்தின் கருவி ஆகவே இயன்ற உதவி செய்...
சிறுபறவைக்கு ... சில தானியம்...

பிரபஞ்ச கட்டளைவிதி-016

 பிரபஞ்ச கட்டளைவிதி-016



பொஸிட்டிவ் சூழலை உருவாக்க...
🐴 #ஏழு_குதிரைப்படம் பற்றிய வாஸ்து டிப்ஸ்:
🐴ஏழு குதிரைப்படத்தை நிறைய நபர்கள் வீட்டில் மாட்டி இருப்பதை பார்த்திருப்போம். அவை #நன்மையா? #தீமையா? என்று பார்த்தால், அந்தப்படம் எந்த அமைப்பில் உள்ளது என்பதைப் பொருத்து நன்மை தீமைகள் தீர்மானிக்கப்படும்.
🐴 இந்த ஏழு குதிரைகள் படத்தை சரியான அமைப்பில் வீட்டில் மாட்டிக் கொள்ளும் போது, உங்களின் மனதில் உத்வேகம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை தூண்டி உங்களை வாழ்க்கையில் #வெற்றியாளராக மாற்றும்.
🐴 அந்த ஏழு குதிரைகளும் #பின்னோக்கிச் செல்வது போன்றோ அல்லது நின்றிருப்பது போன்றோ இருக்கக் கூடாது. மாறாக உத்வேகத்துடன் ஓடுவது போன்ற அமைப்பில் இருக்க வேண்டும்.
🐴#கடிவாளம் கட்டியிருப்பது போன்றும் இருக்கக்கூடாது.
🐴 #ஏழு என்ற எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும் மாறாக வேறு எந்த எண்ணிக்கையிலும் இருக்க கூடாது...
🐴#வெண்மை நிற குதிரைகளாக இருந்தால் கூடுதல் சிறப்பு.
🐴உங்கள் #வீட்டிலோ அல்லது அலுவலங்களிலோ இந்த ஏழு குதிரை படத்தை மாட்டிக் கொள்ளலாம்.
🐴 இந்த ஏழு குதிரைகளுக்கு பின்னாடி #சூரியன் உதயமாவது போன்று இருக்க வேண்டும்.
🐴 #வீட்டு_வாசலை நோக்கி வைத்திருக்கக் கூடாது .இது குதிரைகள் நம்மை விட்டு பிரிவதற்கு சமமாக கருதப்படும்.
🐴 நம் வீட்டின் தெற்கு அல்லது கிழக்கு சுவரில் மாட்டிக்கொள்ளலாம். ஆனால், குதிரைகள் நம் வீட்டை விட்டு செல்வது போன்ற திசையில் வைக்க கூடாது. மாறாக #உள்_நுழைவது போன்ற அமைப்பில் இருக்கவேண்டும்.
🐴ஏழு குதிரைகளின் முகமும் #அமைதியும் சாந்தமும் உடையதாக இருக்க வேண்டும் . மாறாக ஆக்ரோஷம் நிறைந்து காணப்படக்கூடாது.
🐴இந்த படத்தை பூஜை அறையிலோ அல்லது படுக்கை அறையிலோ #மாட்டக்கூடாது.
🐴நான் மேலே சொன்ன அமைப்புகள் போன்று வைத்துக்கொண்டால் உங்களுக்கு வாழ்க்கையில் #வெற்றி மேல் வெற்றி தரும் வகையில் அமையும்...

பஞ்சமி தாய் பள்ளூர்வாராஹி

 























#பஞ்சமி தாய் பள்ளூர்வாராஹி

#நீ அன்னைக்கு எத்தனை #விளக்கு ஏற்றி வணங்கினாலும்

#பெற்ற தாயை மறந்தவன் #சொத்திற்க்காக உடன் பிறந்தவர்களை ஏமாற்றி வாழ்பவர்களும்
#கணவனை துன்புறுத்தும் மனைவியும்
No photo description available.
#மனைவியை துன்புறுத்தும் கணவரும் #மாமியாரை தாயாக பார்க்காத மருமகளும் #மருமகளை மகளாக பார்க்காத மாமியாரும் #தர்மம் செய்யாத மனிதர்களும்
இவர்கள் அனைவரும் நிலை கெட்டு போவார்கள். உங்கள் வக்கிர #ஆணவத்தை அகற்றி விடுங்கள் இல்லையேல் வாராஹி தன் தர்ம செயல்பாட்டை
நடத்திவிடுவாள்
#தர்மத்தின் வழி நடப்பவர்கள் மட்டுமே அன்னையின் ஆலயத்திற்கு செல்லுங்கள்
நல்லது நடக்கும்
#அதர்மம் செய்பவர்களுக்கு பரிகாரம் செய்ய சொல்லும் சாமியார்கள் இருக்கும் இடம்

Thursday, April 21, 2022

வாழைகிழங்கு_குடிநீரை_பயன்படுத்தும்_முறை

#வாழைகிழங்கு_குடிநீரை_பயன்படுத்தும்_முறை"

உயிர் ஆற்றலை அதிகரிக்கும்
உன்னத குடிநீர் "#வாழைக்கிழங்கு_குடிநீர்"
குலை விட்டு வெட்டிய நாட்டு வாழை மரத்தின் கிழங்கு பகுதியை வீணாக்காமல் தரையிலிருந்து அரை அடிக்கு மேல் சமமாக அறுத்து சுத்தம் செய்து அரை அடி ஆழம்வரை தண்டுப் பகுதியை குடைந்து எடுத்துவிட்டு பத்திரமாக மூடி வைத்தால் மறுநாள் காலையிலிருந்து ஊறிவரும் வாழை கிழங்கு குடிநீரை ஊறஊற எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும். மீண்டும் மாலைப் பொழுதில் குடைந்த பகுதியை நீக்கி சமமாக அறுத்துவிட்டு கிழங்கின் தோல் பகுதியில் ஒரு அங்குலம் விட்டு மீண்டும் குடைந்து எடுத்துவிடவும். மீண்டும், மீண்டும் ஊற்றெடுக்கும் குடிநீரை சேமித்து முன்பு பத்திரப்படுத்திய தண்ணீருடன் சேர்த்து கை பொறுக்கும் அளவிற்கு இளம் தீயில் சூடேற்றி ஆற வைத்து பத்திரப்படுத்தினால் குறைந்தது ஆறு மாதங்கள் கெடாமல் பயன்படுத்தி வரலாம். மேலும் மீதமான குடிநீரை வண்டல் நீங்க இறுக வடித்து மீண்டும் இளம் தீயில் சூடேற்றி பத்திரப்படுத்தி வர மீண்டும் ஆறு மாதங்கள் சிறப்பாக பயன்படுத்தி வரலாம் என்பதை நினைவில் கொள்க.
சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் 50 மில்லி வாழைக்கிழங்கு குடிநீரில் அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து ஊறவைத்து தொடர்ந்து ஏழு நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர சிறுநீரகக் கற்கள் உடைந்து வெளியேறிவிடும். உடன் 4, 5 மிளகுடன் ஒரு ரணகள்ளி இலையை சேர்த்து நன்றாக மென்று தின்று வருவது கூடுதல் சிறப்பு. அதேபோல வாழைக்கிழங்கு சாறுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து பருகலாம். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இணைந்து சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வாழைக்கிழங்கு உடலில் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. உடல் எடையை குறைக்கிறது. வயிற்றுக் கழிச்சலையும், சீதபேதியையும் தடுத்து நிறுத்துகிறது. குடல் புண்களை விரைவில் ஆற்றும் தன்மையும் வாழைக்கிழங்கு சாற்றுக்கு உண்டு. எலும்புருக்கி நோயை குணமடையச் செய்கிறது. சிறுநீர் கழிப்பதில் வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்ற எண்ணம், மாதவிலக்குக் கோளாறுகள் ஆகியவற்றை வாழைக்கிழங்கு குணமாக்கும். அடிபட்ட வீக்கங்களுக்கு வாழைக் கிழங்கை இடித்து அதிலுள்ள சாறைப் பிழிந்து எடுத்துவிட்டுத் திப்பியை அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்துக் கட்டுவதால் விரைவில் வீக்கமும், வலியும் குறையும். வாழைக்கிழங்கு உணவில் எடுத்துகொள்ளும்போது சருமம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது. சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது. ரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள், உடல் பருமன் உள்ளவர்களும் வாரத்தில் மூன்று, நான்கு நாட்களுக்கு வாழைக்கிழங்கினை குடிநீராகவோ, உணவாகவோ எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகவே, அனைவரும் துணை உணவாக எடுத்து கொள்வது நலம்.

#வாழைகிழங்கு_குடிநீரின்_நன்மைகள்:
1. சிறுநீரக கற்களை நீக்க உதவுகிறது.
2. சிறுநீரக செயல்பாடுகளை சீராக்குகிறது.
3. உடல் வெப்பநிலையை சமப்படுத்த உதவுகிறது.
4. இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
5. நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
6. முழங்கால் மூட்டு வலியைக் குறைக்கிறது.
7. வயிற்றை சுத்தப்படுத்துகிறது.
8. வாயு பிரச்சினைகளை குறைக்கிறது.
9. வயிற்றுக்கழிவுகளை அகற்றுகிறது.
10. இது கண் பார்வையை மேம்படுத்துகிறது.
11. வயிற்று புண்ணை குணப்படுத்துகிறது.
12. இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.
13. சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துகிறது.

கறிவேப்பிலை இல்லாத பிரசாதம்

கறிவேப்பிலை இல்லாத பிரசாதம்
 Interesting read....short story....படித்ததில் பிடித்தது......

கறிவேப்பிலை இல்லாத பிரசாதம்

நாம் கறிவேப்பிலையை சர்வசாதாரணமாக சாப்பாட்டிலிருந்து எடுத்து தனியே வைத்துவிடுகிறோம். 

ஆனால் இந்த கறிவேப்பிலை தான் ஏழுமலையானையும், பத்மாவதி தாயாரையும் தனித்தனியாக திருமலையிலும், திருச்சானூரிலும் பிரித்து வைத்துள்ளது என்று சொன்னால் நம்ப முடியவில்லை அல்லவா?

ஆகாச ராஜன் தன் மகளான பத்மாவதி தாயாரை ஏழுமலையானுக்கு திருமணம் செய்து கொடுத்தான். இந்த திருமண நிகழ்ச்சி சித்தூர் மாவட்டம் நாராயணவனத்தில் முக்கோடி தேவர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 

பின்னர் திருமாலும் பத்மாவதி தாயாரும் திருமலை நோக்கிச்சென்றனர். அங்கு ஸ்ரீனிவாசமங்காபுரம் என்னும் ஊரில் கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் சிறிது காலம் தங்கினார்.

இந்த நிலையில் பத்மாவதி தாயார் தனது தாய் வீட்டு சீதனத்தில் உலகில் உள்ள அனைத்து பொருட்களும் பெருமாளுக்கு கொடுத்து உள்ளதாகவும், ஏதேனும் குறைகள் இருந்தால் கூறும்படியாகவும் திருமாலிடம் வேண்டினார். இதற்கு திருமால் கறிவேப்பிலை தவிர அனைத்து பொருட்களும் சீதனமாக வந்திருப்பதாகக் கூறினார்.

இதனால் பத்மாவதி தனது தாய் வீட்டிற்கு சென்று கறிவேப்பிலை எடுத்து வருவதாக திருமாலிடம் தெரிவித்தார். 

அதற்கு திருமால் சூரிய உதயத்திற்கு முன் திரும்பி வருமாறும் இல்லையேல் தான் தனியாக திருமலை சென்று விடுவதாகவும் கூறினார்.

தாய் வீட்டிற்குச் சென்ற பத்மாவதித்தாயார் கருவேப்பிலை எடுத்து வருமுன் சூரிய உதயம் தொடங்கிவிட்டது.

சூரிய உதயத்தைக் கண்ட பத்மாவதி தாயார் திருச்சானூர் அருகே தனியே நின்று விட்டார். பத்மாவதி சூரிய உதயத்திற்குள் வராததால் ஸ்ரீனிவாசனும் தன்னந்தனியே திருமலைக்குச் சென்று தங்கி விட்டார். 

இதன் காரணமாக இன்றுவரை ஏழுமலையானின் நைவேத்தியத்தில் கறிவேப்பிலை சேர்ப்பதில்லை...

படித்ததில் பிடித்தது......

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...