Sunday, March 27, 2022

மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்

 

விழிபுணர்வு_பதிவு💞👇🙏🏻
*மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்*
*பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.*
*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*
*S, T, R* என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS
ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*
மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை
*S T R* அதாவது,
*SMILE (சிரிக்க சொல்வது 😄),*
*TALK (பேச சொல்வது😲),*
*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)*
இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!
உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.
இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
அதாவது, *அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*
அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், *ஜாதி, மத* பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!!
*பகிர்வு*
உபயோகமானது எனக் கருதும் நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்....

நிலக்கடலையில்

இதுவே இயற்கையின் நியதி!!!
நமது உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் நாம் சாதரணமாக நினைத்து வாங்காமல் செல்லும் விலை குறைவான பொருளில்தான் அதிகம் உள்ளது!!!
பள்ளி செல்லும் பிள்ளைகள் தினமும் 50 முதல் 100கிராம் வரை நிலகடலை சாப்பிட்டால் புரதசத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடும் அவர்களுக்கு வராது!!! நல்ல ஆரோக்கியமாக வாழ்வர்!!!
நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோஅன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன் சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலையில் பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இதே கால கட்டத்தில் மற்ற நாடுகளில் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பதே உண்மை.
100 கிராம் நிலக்கடலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:
கார்போஹைட்ரேட்- 21கி.
நார்சத்து- 9 கி.
கரையும் கொழுப்பு – 40 கி.
புரதம்- 26 கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்த நாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச் சத்து – 6.50 கிராம்.
எனவே நமது மரபு சார்ந்த நிலக்கடலை உணவு உண்பதை வழக்கத்திற்குக் கொண்டு வரலாமே!

ராவணனிடம் உயிர்

 



ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த

ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்.
லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்.
லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.
லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா?
நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே.
ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.
சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம்.
அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.
1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.
2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.
3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.
4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.
5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.
6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.
7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.
8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.
9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.
10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.
11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.
லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்

அப்பாவை அதிகம்

 *அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் -கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் !!*

உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன்.
வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.
உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.
முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய்.
இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.
*நேர்மையான நண்பன்*
தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.
*உலகை அறிமுகம் செய்தவர்*
பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.
*வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.
*காவலன்*
வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.
*நண்பன்*
காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.
*சூப்பர் ஹீரோ*
தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.
*எப்பொழுதும் மாறாதவர்கள்*
மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.
*உன்னத உறவு*
பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்

விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்!

விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்! ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால், 10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...! இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான். 1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...! ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான். ஆனால், 5 வருடங்களுக்குப் பின்பே தொழில் கிடைக்கிறது...! இன்னொருவன் 27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...! ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...! இன்னொருவர் 50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார். 90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...! நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன் முன்பே கணித்து வைத்தவை. எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...! அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில், உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக் கொண்டிருப்பான். உனக்கு விதிக்கப்பட்டது வேறு.. அவனக்கு விதிக்கப்பட்டது வேறு.. ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...! உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல, உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...! நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...! அந்த இறைவன் உனக்கென குறித்த நேரத்தில் நீ உனது பணியை செய்து கொண்டிருக்கின்றாய்! அவ்வளவே...! ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்...! இறைவா.! உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.! உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.. ஓம் சிவாய நமக..... திருச்சிற்றமபலம்............

நாய்களுக்கு உணவிடுவதும்

ஏன் “தெரு நாய்கள்” மட்டும் எங்கும் உள்ளது...? இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும். ஆடு,மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள புற்கள், இலை தழைகள் உள்ளன. ஆனால் இந்த நாய்கள் மட்டும் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது ஏன்...? உங்கள் வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிக் கொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றிச் சுற்றி ஏன் வருகிறது... வீட்டிற்குள் இருந்து யாராவது வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறுபங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..? சாலையோரக் கடையிலோ, தள்ளு வண்டிக் கடையிலோ நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது, கல்லைத் தவிர வேறெதாவதும் வந்து விழாதா என வெறித்து வெறித்து பார்த்து ஏன் இடையூறு செய்கிறது...? குறிஞ்சி, முல்லை என நகர்ந்து மருத நிலத்திற்கு மனிதகுலம் இடம் பெயருகிறது. மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்கி வேளாண்மை செய்து தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்கிறது. குகையில் வாழ்ந்து பழகியவன், வீடு கட்டி வாழப் பழகுகிறான். மனித நாகரீகம் பிறக்கிறது. காடுகளில் இருந்து வந்த மனிதன் இன்று நாகரீக, பொருளாதார, சிந்தனை, அறிவியல், குற்ற வளர்ச்சியில் உச்சத்தை எட்டி விட்டான். “தெரு நாய்களுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்” என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மூளையில் கசிந்திருக்கும்... தொடர்வோம்... ஆதிமனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி வரும் போதும் அவன் மட்டும் வரவில்லை. தனக்குப் பயன்படக்கூடிய, தன்னால் அடக்கி ஆளக்கூடிய காட்டு விலங்குகளான ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளையும் தன்னோடு அழைத்தே வந்தான். அவற்றுள் முதன்மையான விலங்கினம் “#நாய்”. "ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய் தான்”. நரி, ஓநாய், செந்நாய் குடும்ப வகையை சேர்ந்தது தான் நாயும். அவற்றைப் போல நாயும் ஒரு வேட்டையாடும் காட்டு விலங்கு தான். அவைகளுக்கு இருந்த எல்லாக் குணமும் நாய்க்கும் இருந்தது. ஒரு குணம் மட்டும் அதிகமாக இருந்தது. அது தான் நாயை இன்று தெருவில் அலைய விட்டிருக்கிறது. அது தான் *அன்பும் நன்றியுணர்வும்….* எலித் தொல்லைகள் நமக்கு இருக்கும் வரை பூனை பாக்கியசாலி தான். ஆனால், அன்பைத் தவிர வேறு எதையுமே கொடுக்க முடியாததால் கைவிடப்பட்டுத் தெருவில் அலையும் தகுதியை நாய் பெற்று விட்டது. வேளாண்மை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் முயல், காட்டுப் பூனை போன்றவற்றை மனிதன் வேட்டையாட, பொழுது போக்கிற்காக நாய் தேவைப்பட்டது. வீட்டைக் காவல் காக்கும் இடத்தை சி.சி.டிவிகள் நிரப்பியதால், வீட்டின் மதிப்பிற்கேற்ப சில வீடுகளில் நாய் வீட்டிற்கு உள்ளேயும், சில நாய் வீட்டிற்கு வெளியேயும் போனது. பல நாய்களுக்குத் தெருவே வீடாகிப் போனது. மனிதன் social animal (சமூக விலங்கு) என்றால் நாய் கிட்டத்தட்ட semi social animal ஆகி விட்டது. உங்களோடு அதற்குப் பேச மட்டும் தான் தெரியாது. உங்கள் மொழியைப் புரிந்து கொள்ளும்,. நீங்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளும். உங்கள் நண்பர் யார், பகைவர் யார் என அதற்குத் தெரியும். உங்கள் வண்டியின் சத்தத்தை ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே கணித்து வாலாட்டத் தெரியும். உங்கள் குழந்தை அழுதால் ஓடிவந்து சன்னல் ஓரத்தில் சிணுங்கத் தெரியும். உங்கள் வீட்டு வாண்டுகள் அடித்தால் திருப்பித் தாக்காமல் விளையாட்டுக் காட்டத் தெரியும். உங்கள் வீட்டில் அக்காவோ தங்கச்சியோ அவள் வரைந்த கோலத்தை மிதித்துவிட்டுத் திட்டு வாங்கியிருக்கும். ஆனால், அவள் திருமணமாகிச் சென்று விட்டால் மூலையில் படுத்துக் கவலைப்படும். வெளியூருக்குப் போய் வந்த நம் அப்பாவை பார்த்ததும் முன்னங் கால்களைத் தூக்கி மாரில் வைத்துத் தாடையை நக்கும். வாலை ஆட்டிக் கொண்டு மளிகைக் கடைக்கு அம்மாவோடு கூடவே போய்வரும். உங்களுக்கு யார் மூலமாவதும் தீங்கா?... ஒருகை பார்த்துவிடும். இவை அத்தனையையும் செய்ய அடைக்கலமாக ஒரு வீடு எல்லா நாய்களுக்கும் கிடைப்பதில்லை. அப்படியானால், வீடு இல்லாத நாய்களின் நிலை??? வீடு கிடைத்தவை செல்லப் பிராணியாகி விடுகிறது. வீடு கிடைக்காதவை சமூகத்தால் தொல்லை எனப் பார்க்கப்படுகிறது. பார்க்கும் இடமெல்லாம் கல்லடி படுகிறது. தெருநாய்கள் அடி வாங்குவதற்காகவும், வண்டியில் அடிபட்டுச் சாகவும் படைக்கப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது. பெரிய நாய் தெருவில் அடிபட்டுச் சாக, நாய்க்குட்டிகள் அதைத் தேடி அலைந்து கொண்டேயிருக்கும். தெருவில் அலைந்து அலைந்து வியர்வையை விட இரத்தமே அதன் உடம்பின் மீது வழிகிறது. உணவுக்கு வழியின்றி பசியில் ஏங்கி ஏங்கி எச்சிலே அதற்கு இரத்தமாக உடம்பில் ஓடுகிறது. இது அத்தனையும் நடந்து கொண்டிருக்கும் அதே தெருவில் காட்டிலிருந்து வரும்போது அது எந்த மனிதகுலத்தை நம்பி வந்ததோ, அந்த மனிதகுலம் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கும். அவர்களுக்கு ஏறெடுத்துப் பார்க்கக் கூட நேரமில்லை என்பதை விட ஏறெடுத்துப் பார்த்தாலும் அலட்சியமே மறுமொழியாக இருக்கும் என்பதை உணராத தெரு நாயின் நிலை என்னவாக இருக்கும்?... ஒரு விலங்கை வேறோடு இடம் பெயர்த்து, அடியோடு அதன் குணத்தை, உணவு முறையை மாற்றி வைத்தது யார் தவறு?... அதற்கும் மாட்டுப் பாலுக்கும் என்ன சம்மந்தம்? அதை அவைகளுக்கு உணவாகக் கொடுத்தது யார்??... தற்போது அவைகளுக்கு அதைத் தர மறுப்பது யார்?? ஆனால் பாருங்கள்... நன்றி கெட்ட நாய் என்ற சொல்லாடலை நாம் வைத்திருக்கிறோம். என்ன ஒரு நகைமுரண்? அவைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது யார் கடமை... சுற்றுலாவிற்குச் செல்லும் போது அங்குள்ள விலங்குகளுக்கு உணவு காெடுக்க வேண்டாம் எனச் சொல்வது இதற்காகத் தான். தெருநாய்களால் இன்று காட்டிற்குச் சென்று வாழவும் முடியாது. நாட்டிற்குள் வாழ ஆதரவும் கிடையாது. தனக்கான உணவை அடைந்து கொள்ளவும் தெரியாது. அதனால் தான் நீங்கள் சாப்பிடும் போது தெருவில் நின்று உங்கள் தட்டையே வெறித்துப் பார்த்து நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டிருக்கிறது. அதன் நாக்கில் இருந்து சொட்டச் சொட்ட வழிவது எச்சில் அல்ல. கைவிடப்பட்ட ஒரு விலங்கின் கண்ணீர். உங்கள் உணவைப் பரிமாறி அதைத் துடையுங்கள். #குறிப்பு; மூன்று ரூபாய் ஐந்து ரூபாய் என்று நிறைய பிஸ்கெட் கிடைக்கிறது. அதை எப்போதும் வண்டியில் வைத்து இருங்கள். நீங்கள் அன்றாடம் செல்லும் கோயில் அருகிலோ அல்லது டீக்கடை அருகிலோ இருக்கும் நாய்களுக்கு அவசியம் போடுங்கள்.... காக்கைக்கு உணவிடுவது மாதிரி தான் நாய்களுக்கு உணவிடுவதும் புண்ணியம்..

துளசி_மாடம்

துளசி_மாடம் விஷ்ணுவுக்கு உகந்தது #துளசி. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. பழங்காலத்திலிருந்தே துளசி மாடம் அமைத்து வழிபடும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. துளசியின் மகிமை அதிகாலை மூன்று மணிமுதல் ஐந்து மணிவரை பிரம்மமுர்த்தம். அந்த அதிகாலையில் குளித்து முடித்து துளசி மாடத்தைச் சுற்றி வந்தால் அநேக நன்மைகள் உண்டாகும். துளசி சிறந்த மூலிகைச் செடியாகும். துளசி என்பதற்கு ஒப்பில்லாதது என்று பொருள். துளசியின் நுனியில் பிரம்மதேவரும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை பட்ட நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவே தான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது. எந்த ஒரு பொருளை தானம் செய்யும் போதும் அந்தப் பொருளுடன், ஒன்றிரண்டு துளசி இலைகளையும் சேர்த்து தரும் போது தான் அந்த தானமானது முறையானதாகிறது என்று நம் தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. துளசியின் மகத்துவத்தைச் சொல்லும் ஒரு கிளைக்கதை கிருஷ்ணாவதாரத்தில் உண்டு. துளசியை பூஜை செய்வதால் கங்கா ஸ்நானத்திற்கு சமமான பலனை கொடுக்கும். மூதாதையர்களுக்கு திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும், துளசிச்செடியின் நிழல் படும் இடங்களில் செய்தாலும் பரிபூரணப் பலன் கிடைகிறது. எந்த இல்லத்தில் அதிக துளசி செடிகள் உள்ளதோ அங்கு துர்மரணம், துர்சம்பவங்கள் நிகழாது. துர்சக்திகள் நுழையாது. வீட்டில் பூசிக்கப்படும் துளசியை பறிக்கக் கூடாது. இதற்காக தனியே துளசியை வளர்த்து பயன்படுத்தவேண்டும். துளசி செடி காற்றை சுத்தபடுத்தி காற்றில் பரவக்கூடிய கிருமிகளை கட்டுபடுத்துகிறது. வீடு என்றால் துளசி மாடமும், விளக்கு மாடமும் கண்டிப்பாக இருக்கவேண்டும் அப்போதுதான் அந்த இல்லம் முழுமை பெரும். மாலையில் துளசிமாடத்தில் தீபம் ஏற்றி வைப்பது லட்சுமி கடாட்சத்தை இல்லத்தில் உண்டாக்கும். மகாவிஷ்ணு, மகாலட்சுமி, துளசி ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்வது நல்லது. சனிக்கிழமை, அமாவாசை, ஏகாதசி நாட்களில் துளசி இலையைப் பறிக்கக்கூடாது.

பதினெண் சித்தர்களை

சித்தர்கள் அவர்கள் மண்ணில் வாழும் வரை அவர்களை சாதாரண பரதேசிகளாய் தான் பார்க்கும் இவ்வுலகம் ! சித்தர்கள் உலகிற்கும், உலக மக்களுக்கும் எண்ணற்ற நன்மைகளை சுயநலமில்லாமல், யாரும் அறியா வண்ணம் செய்து கொண்டே இருப்பார்கள் ! சித்தர்கள் நினைத்தால் தங்கள் சித்தியால் மூலிகைகளை கொண்டு எத்தனை கிலோ தங்கத்தை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் ! உலகிலே மிக மதிப்புள்ள செல்வந்தர் ஆக முடியும் ! ஆனால் அதில் அவர்கள் பற்றில்லாதவர்கள் ! உண்மையான சிவத்தில் மட்டுமே பற்று கொண்டவர்கள் ! பணம்,பொருள் கொண்டு தனக்காய், சுயநலமாய், பகட்டாய் வாழ்பவர்களைத் தான் மதிக்கும் இவ்வுலகம் ! அவர்களால் உங்களுக்கு பயன் ஏதும் இல்லை ! பதினெண் சித்தர்களை வணங்க வாழ்வில் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகும் .

Saturday, March 26, 2022

*சந்திராஷ்டமம் வரும் நாளை கண்டு இனி பயப்பட வேண்டாம்

*சந்திராஷ்டமம் வரும் நாளை கண்டு இனி பயப்பட வேண்டாம். இதை மட்டும் செய்யுங்க போதும். சந்திராஷ்டமம் உங்களுக்கு நல்லதை மட்டுமே தரும்.*

நாளை நம்முடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் என்று காலண்டரில் பார்த்துவிட்டால் போதும். அவ்வளவு தான். அதை நினைத்தே சில பேர் சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் வேலையை சரியாக செய்ய மாட்டார்கள். சந்திராஷ்டமும் அவ்வளவு லேசுபட்ட விஷயமல்ல. மத்த நாட்களில் எல்லாம் சந்தோசமாக தான் இருப்போம். ஆனால் இந்த சந்திராஷ்டமம் வந்த நாளில் நம்மை அறியாமலேயே நம்முடைய மனது குழப்பமாகி விடும். தேவையல்லாத வாய்ச்சண்டை வம்பு தகராறில் போய் நாமே சிக்கிக் கொள்வோம். இந்த சந்திராஷ்டம நாளில் வரும் கஷ்டங்களில் இருந்து எப்படி தப்பிப்பது. சாஸ்திர ரீதியாக உங்களுக்காக சில குறிப்புகள் இதோ.

சந்திராஷ்டம நாள் என்று உங்களால் முடிந்த வரை ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். எந்த உதவியாக இருந்தாலும் சரி, ஒரே ஒரு ஊனமுற்றவர்களுக்கு அந்த உதவியை செய்து விடுங்கள். குறிப்பாக குஷ்டம் வியாதி உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை இந்த சந்திராஷ்டம நாளில் செய்வது நல்லது.

சந்திர பகவானுக்கு உரிய தானியம் நெல். இந்த நெல்லை சந்திராஷ்டம தினத்தில் யாருக்கேனும் தானமாக கொடுக்க வேண்டும். ஒரே ஒரு நெல் மணியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வலது கையில் அந்த நெல் மணியை வைத்து விட்டு, ஒரு டேப் போட்டு அப்படியே ஒட்டிக் கொள்ளுங்கள். அதாவது அந்த நெல்மணி உங்கள் உடம்புடன் உரசி இருக்க சந்திராஷ்டம தினத்தில் வீண் பிரச்சனைகள் வராது. (வெளி ஆட்களுக்கு தெரியாமல் ஆடையின் உள் பக்கத்தில் இதை ஒட்டி வைத்துக்கொள்ளலாம்.)

காலை எழுந்தவுடன் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு உங்களுடைய வலது கையை உச்சந்தலையில் வைத்துக் கொண்டு, முதலில் அம்பாளை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். எந்த அம்பாளாக இருந்தாலும் சரி, அம்மனை மனதார நினைத்து ‘ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ’ என்ற மந்திரத்தை உங்களால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உச்சரித்து விட்டு, அதன் பின்பு சந்திராஷ்டம நாளை தொடங்கினால் உங்களுக்கு பெரிய பிரச்சினைகள் எதுவும் வராது.

முடிந்தால் உங்கள் வீட்டின் அருகில் சிவன் கோவில் இருந்தால், அந்த கோவிலில் இருக்கும் அம்பாளை சந்திராஷ்டம நாளில் தரிசனம் செய்துவிட்டு வருவது சிறப்பு. குறிப்பாக சந்திராஷ்டம நாள் என்றால் அந்த நாளில் மருத்துவம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு அறுவை சிகிச்சையையும் நாம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது. யாருக்காவது உடல்நிலை சரியில்லை ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் அந்த நபருக்கு சந்திராஷ்டமம் உள்ள நாளன்று அறுவை சிகிச்சையை செய்யக்கூடாது.

அப்படி செய்தால் அது மீண்டும் மீண்டும் பிரச்சனையை கொடுத்துக்கொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. வேறு வழியே இல்லை டாக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்கிட்டாங்க. அன்று அந்த அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் எனும் பட்சத்தில் என்ன செய்வது.

அவர்களுடைய உறவினர்கள் யாராவது, உடல்நிலை சரியில்லாத அந்த நபரின் தலையில் கை வைத்து அம்பாளை நினைத்துக் கொண்டு ‘ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ’ என்ற மந்திரத்தை மனதார உச்சரித்தால் பெரிய பாதிப்புகள் எதுவும் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். (குறிப்பிட்ட அந்த நபரின் அம்மா அப்பா மகன் அல்லது மகள் மனைவி யார் வேண்டும் என்றாலும் இதை செய்யலாம்.) நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் அடையலாம். 

அற்புத பலனை தரும் தண்ணீர் சிகிச்சை

*அற்புத பலனை தரும் தண்ணீர் சிகிச்சை*

முதலில் தண்ணீர் சேமிக்க செப்புப் பாத்திரத்தை
(copper) எற்பாடு செய்து கொள்ளவும்.

முதல் நாள் இரவில் சுமார்
 1 ¼ லிட்டர் (If possible don't use mineral water) தண்ணீரை செப்புப் பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும். 

அதிகாலை 4 மணிக்கு எழுந்து பல் துலக்காமல் தண்ணீர் முழுவதையும் அல்லது முடிந்த அளவு அருந்தவும். 

கொஞ்ச கொஞ்சமாக அளவை அதிக்கப்படுத்தி 1 ¼ தினமும் குடித்து விடவும். தண்ணீர் குடித்து முடித்த பிறகு, ஒரு மணி நேரத்திற்கு வேறு ஏதும் பானமோ(drinks) உணவோ கூடாது.

காலை, மதியம், இரவு மூன்று வேளை உணவு முடித்த 1/2 மணி நேரம் பின்னரும், இரண்டு மணி நேரம் கழித்து தண்ணீர் அருந்தவும். படுக்கைக்குச் செல்கையில் நொறுக்குதீனி எதும் சாப்பிடக்கூடாது. 

மிகவும் நோய்வாய்ப் பட்டவர்கள், ஆரம்பத்திலேயே 1 ¼ லிட்டர் அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது. முதலில் கால் லிட்டர் தொடங்கி, கடைசியில் 1 ¼ லிட்டர் என்ற அளவிற்கு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*தண்ணீர் சிகிச்சை* *குணமாகும்*
*நோய்கள்*

1. உடல் பருமன், தொப்பை, கொழுப்பு நோய்கள்

2. தலைவலி, பக்கவாதம், இரத்த சோகை

3. இருமல், சளி, ஆஸ்துமா, காசநோய்

4. கல்லீரல் நோய்கள்

5. மலச்சிக்கல், மூலம், சர்க்கரை நோய்கள்

6. பெண் உறுப்பு கோளாறுகள், கருப்பை கோளாறுகள்.

தண்ணீர் சிகிச்சை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் கீழ்க்கண்ட கால அளவுகளில் நோய்கள் குணமாகிறது. 

1. இரத்த அழுத்தம் 1 மாதத்தில் குணமாகிறது.

2. உடல் பருமன், தொப்பை – 2 மாதத்தில் குணமாகிறது.

3. வாயுக் கோளாறுகள் – 10 நாளில் குணமாகிறது.

4. புற்றுநோய் - 6 மாதத்தில் குணமாகிறது.

5. சர்க்கரை வியாதி 1 மாதத்தில் குணமாகிறது.

6. மலச்சிக்கல் 10 நாளில் குணமாகிறது.

7. காசநோய் – 3 மாதத்தில் குணமாகிறது.

8. மூட்டு வலி – 7 நாளில் குணமாகிறது.

Friday, March 25, 2022

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர..

வியாழக்கிழமை இதை செய்தால் போதும்...!!
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர... 

பொதுவாகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீடு தேடி வர வேண்டும் என்பதற்காக நம் வீடு முழுவதையும் வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து விடுவோம். குறிப்பாக பூஜை அறையை சுத்தம் செய்து, வெள்ளிக்கிழமை பூஜைக்குத் தயாராக வைத்து இருப்போம். 

ஆனால் மகாலட்சுமி குடி கொண்டிருக்கும், அன்னலட்சுமி குடி கொண்டிருக்கும், அஷ்டலட்சுமிகளும் குடி கொண்டிருக்கும் சமையலறையை யாரும் கவனிப்பது கிடையாது. 

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மனநிறைவோடு நம் வீட்டிற்கு வருகை தர, வியாழக்கிழமை என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்...!

வியாழக்கிழமை அன்று இரவு மட்டும் அல்ல, தினந்தோறும் இரவு நேரத்தில் சமையலறையில் எச்சில் பாத்திரங்கள் கட்டாயம் இருக்கக்கூடாது. முடிந்தவரை எச்சில் பாத்திரத்தை சுத்தம் செய்துவிட்டு, அதன் பின்பு தூங்கச் செல்வது நம் வீட்டிற்கு நன்மையை தரும்.

குறிப்பாக வியாழக்கிழமை அன்று சமையலறை, சமையல் மேடை, அடுப்பை சுத்தம் செய்து சில இடங்களில் மஞ்சள், குங்கும பொட்டை வைத்திருக்க வேண்டும். 

எந்தெந்த இடங்கள்? 

அடுப்பு,உப்பு ஜாடி, அஞ்சறைப் பெட்டி, அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரம், 
அருவாமனை அல்லது கத்தி 

இந்த பொருட்களில் எல்லாம் கட்டாயம் மஞ்சள், குங்கும பொட்டு வைப்பது மிகவும் நல்லது. இதை தவிர்த்து உங்களுக்கு வேறு ஏதேனும் பொருட்களுக்கு மஞ்சள், குங்கும பொட்டு வைக்க வேண்டும் என்ற இஷ்டம் இருந்தால் நீங்கள் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். 

இதோடு சமையலறை மேடையில் கொஞ்சமாக பச்சரிசி மாவில் மஞ்சள் பொடியை கலந்து மஞ்சள் நிறத்தில் சிறிய கோலம் போட வேண்டும். வியாழக்கிழமை இரவு இதை செய்துவிடுங்கள். 

மறுநாள் காலை வெள்ளிக்கிழமை குளித்து முடித்துவிட்டு முதலில் மகாலட்சுமியை வேண்டிகொண்டு பாலைக் காய்ச்சுங்கள். அந்த பால் பொங்கி வழிவது போல உங்கள் இல்லமும் எப்போதும் சந்தோஷத்தில் பொங்கி வழியும். 

வாரம் ஒரு நாள் வியாழக்கிழமை அன்று சிரமம் பார்க்காமல் எந்த ஒரு வீட்டில், சமையலறையை இப்படி பராமரித்து வருகின்றார்களோ அந்த வீடு நிச்சயமாக சுபிட்சம் அடையும். 

மெழுகுவர்த்தி :

இதேபோல் தினந்தோறும் இரவு நேரத்தில் சமையல் அறையில் இருக்கக்கூடிய வேண்டாத எதிர்மறை ஆற்றல் அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்றால் சமையல் அறையில், ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்க வேண்டும். சிறிய அளவிலான மெழுகுவர்த்தியை ஏற்றினால் போதும். இரண்டு நிமிடங்கள் அந்த மெழுகுவர்த்தி எரிந்து உருகி அணைந்து போனாலும் சரி, உங்கள் சமையலறையில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் சமையலறையை விட்டு நீங்கிவிடும். 

சமையலறையில் எப்படி கெட்ட சக்தி குடிகொள்ளும்? 

சமையலறையில் சமைக்கும் பெண்கள் ஒரே மனநிலையில் சமைப்பது கிடையாது. சில சமயங்கள் சந்தோஷமாக சமைக்கும் தருணங்களும் உண்டு. சில சமயம் அடுத்தவர்களை திட்டிக்கொண்டு சமைக்கும் தருணங்களும் உண்டு. அடுத்தவர்களை திட்டும்போது கட்டாயமாக அந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல் செயல்பட தொடங்கிவிடும்.

இதோடு மட்டுமல்லாமல் சிலர் அசைவம் சமைக்கும் பழக்கத்தையும் வைத்திருப்பவர்கள். அதன் மூலம் ஏதேனும் தோஷங்கள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்வதற்கு ஒரு சிறிய மெழுகுவர்த்தி போதும்.

நன்றி வாழ்கவளமுடன்

Thursday, March 24, 2022

பகவான் இராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்..3

*இரவில் வானத்தில் ஏராளமான நட்சத்திரங்களைப் பார்க்கிறோம்.*

*சூரியன் உதயமானதும் நட்சத்திரங்கள் தெரிவதில்லை.*

*அதனால் பகற்பொழுதில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்ல முடியாது அல்லவா.*

*அதுபோல நாம் போதிய அறிவு பெறாமல் அறியாமையுடன் இருக்கும் பொழுது இறைவன் இருப்பதை உணர்ந்து அறியமுடியாமல் இருப்பதால் இறைவனே இல்லை என்று சாதிக்கக்கூடாது.*

-பகவான் இராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்-

காரைக்கால் அம்மையார்

பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

வரலாற்றில் காரைவனம் என்றழைக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில், வணிகர்களின் தலைவராக இருந்த தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு காரைக்கால் அம்மையார் என்கிற புனிதவதியார் மகளாகப் பிறந்தார். பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவரை, காரைக் காலை அடுத்த நாகைப்பட்டினத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் மகனான பரமதத்தர் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர். ஒரே மகள் என்பதால், காரைக்காலிலேயே வணிகம் செய்து, வசிக்க வழிவகை செய்தனர்.

சிவனடியார் வேடத்தில்...

ஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர், தனது வீட்டுத்தோட்டத்தில் காய்த்த இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து பரமத்தத்தரிடம் கொடுத்தார். அக்கனிகளை பெற்ற பரமதத்தர், அதனை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, அம்மையாரின் சிவபக்தியை சோதிக்கும் பொருட்டு, அம்மையாரின் வீட்டிற்கு சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் உணவுவேண்டி வந்தார்.

அவரை வரவேற்று தயிர்கலந்த அன்னம் படைத்து, அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். அதனை உண்ட சிவனடியார் அம்மையாரை வாழ்த்திச் சென்றார். பின்னர், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தருக்கு பல வகை பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.

மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தன் கொடுத்தனுப்பிய மற்றொரு மாங்கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தர். அம்மையார் செய்வதறியாது திகைத்து மற்றொரு அறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது, மேலிருந்து அம்மையார் கையில் ஒரு மாங்கனி வந்து தங்கியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவருக்கு அதனை படைத்தார்.

முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தர், இது ஏது? என்றார். அம்மையார் நடந்ததை கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தர் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினார். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி மேலிருந்து அம்மையார் கையில் வந்து தங்கி, பிறகு மறைந்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தர், நீ மனிதப்பிறவி இல்லை. தெய்வப்பெண், உன்னுடன் நான் இனி வாழ்தல் சரியாகாது என்று கூறி, அம்மையாரை விட்டு பிரிந்து, வாணிபம் செய்ய பாண்டிய நாடு சென்றார்.

பின்னர் பரமதத்தர் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்து வந்தார். சிலகாலம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரான புனிதவதியார் என்ற பெயரையே வைத்தார். பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாடு சென்றனர். அம்மையாரை கண்ட பரமதத்தர், அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். கணவர் தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத அம்மையார், தனது அழகுமேனி அழிந்து, பேய் வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டி பெற்றார்.

திருப்பதிகம்

தொடர்ந்து, அம்மையார் இறைவனைக் காண கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் அம்மையார் நடந்துச் சென்றார். இதனை பார்த்த சிவபெருமான், “அம்மையே வருக. அமர்க” என அழைத்து, “நீ வேண்டுவன கேள்” என்றார். அதற்கு அம்மையார் “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க” என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார். அங்கு சென்ற அம்மையார், 11 பாடல்கள் கொண்ட திருப்பதிகம் பாடி இறைவனின் நிழலின் கீழ் வீற்றிருக்கலானார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் 4 நாட்களும், தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் 26 நாட்களும் என ஒரு மாதக்காலம் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் அம்மையார்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக் கால் அம்மையார் மட்டுமே அமர்ந்த நிலையில் காட்சித்தருவார். காரணம், பிரிந்து சென்ற கணவரை பாண்டிய நாட்டுக்கு அம்மையார் தேடிச்செல்லும்போது, கணவர் குடும்பத்தோடு அம்மையார் காலில் விழுந்ததும், மனம் வெதும்பிய அம்மையார், தனக்கு இந்த அழகுமேனி வேண்டாம், பேய் உருவம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டியதும், இறைவன் அம்மையார் வேண்டியபடி செய்தார்.

பேய் உருவம் தாங்கிய அம்மையார், ‘அற்புத திருவந்தாதி’, ‘திருவிரட்டை மணிமாலை’ பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார். இறைவன் இருக்கும் இடம் என்பதால், கால் வைக்க மனம் ஒப்பாமல், தலையாலேயே அம்மையார் நடந்து மலை உச்சிக்கு சென்று இறைவனை அடைந்தார். அங்கு அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், அம்மையே அமர்க! என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.

மாங்கனியின் மகிமை

முக்கனிகளுள் ஒன்றான மாங்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா நடைபெறுவது உலகிலேயே காரைக்காலில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சாமிக்கு மாங்கனியுடன் பட்டுத்துணி சாத்தி வழிபடும் பக்தர்கள், சாமி வீதிஉலாவை தொடர்ந்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியில் மாங்கனிகளை வாரி இறைக்கின்றனர். முக்கியமாக இறைக்கப்படும் மாங்கனியை குழந்தைபேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அமுது படையலில் தயிர் சாதம்

உலகிலேயே சிவபெருமான் அமுது உண்ட ஒரே இடம் காரைக்கால் அம்மையார் எனும் புனிதவதியார் இல்லத்தில் மட்டுமே. சிறு வயது முதல் சிறந்த சிவ பக்தையாக விளங்கிய காரைக்கால் அம்மையாரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு, சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையாரின் இல்லத்திற்கு உணவு வேண்டி செல்வார். சிவபெருமானின் பசித்த நிலையைக் கண்ட புனிதவதியார், கணவர் கொடுத்தனுப்பிய 2 மாங்கனிகளில் ஒன்றை, தயிர் சாதத்துடன், சிவபெருமானுக்கு பறிமாறுவார். எனவேதான் மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில், பிச்சாண்டவர் வீதிஉலா முடிந்து, அமுதுபடையல் நிகழ்ச்சி நடைபெறும்போது, பிச்சாண்டவருக்கு, மாங்கனியுடன் தயிர்சாதத்தை அம்மையார் படைக்கும் நிகழ்வு நடைபெறும். பக்தர் கள் பலர் சாமி ஊர்வலத்தின் போது, மோர், தயிர்சாதத்தை அன்னதானமாக வழங்கி வருகின்றனர்.

Sunday, March 20, 2022

குளிகை கால மந்திர ஜபம்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
மதியம் 3 மணி முதல் மாலை 4.30 வரையிலான நேரத்தில் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே

*ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ*
என்று ஜபியுங்கள்;

இந்த ஒன்றரை மணி நேரமும் ஜபிக்க இயலாதவர்கள் மாலை 4 முதல் 4.30 வரையாவது ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஜபியுங்கள்;

இதன் மூலமாக நமது கர்மவினைகளை நம் சார்பாக கால பைரவப் பெருமான் ஏற்றுக் கொள்வார்;

நமது கர்மவினைகளை ஏற்றுக் கொண்டு நமக்கு முக்தி தரும் தெய்வங்களில் ஒருவர் கால பைரவர்!!

ராகு காலத்தை விடவும், குளிகை கால மந்திர ஜபம் கோடி மடங்கு சக்தி வாய்ந்தது;

ஓம் அகத்தீசாய நமஹ

ஒம் அருணாச்சலாய நமஹ

சங்கரன்கோயில் கோமதி அம்மன்

சங்கரன்கோயில் கோமதி அம்மன் 

அன்பின் திருவிடம் உமையவள் கோமதியின் தரிசனம்…

அன்பின் திருவிடம்;
பண்பின் உறைவிடம்;
சாந்தியின் இருப்பிடம்;
சந்தோஷத்தின் பிறப்பிடம்!

என்றால் உமையவள் கோமதிதான். தேவர்கள் மலர் தரும் விருட்சங்களாகவும், தேவமாதர்கள் ஆநிரைகளாகவும் தோன்றிய திருவிடமே சங்கரன்கோவில் என்னும் புண்ணியத்தலம்…! கோவிலுக்கு சென்றதும்125 அடி உயரத்தில் 9 நிலைகள் கொண்ட இராஜகோபுரம் அம்மையும், அப்பனும் அழைப்பது போன்று நம்மை வரவேற்கிறது. சில்லென்று வீசும் காற்றும், கலைநயமிக்க சிற்பங்கள் என கோவிலில் எங்கு சுற்றிலும் அழகு நிறம்பி இருக்கிறது. அழகுமட்டுமல்லை, அன்னை கோமதியின் அன்பும்தான்.

பள்ளியில் தமிழ் பாடங்கள் நடத்தும் போது ஆசிரியை சிவன், பார்வதையின் கதைகளை சொல்லும் போது உடல் சிலிர்க்கும். கோவிலுக்குள் சென்றும் அவை அனைத்தும் நம்முடைய மனதிற்குள் வந்து செல்லும். குழந்தையாகவே நம்மை நாம் உணரும் போது அன்னை உமையவள் கோமதி எங்கேயோ ஒழிந்து விளையாடுகிறாள் போன்றே தோன்றும். அவளைத் தேடி செல்கையில் துய மணிகளை கொண்ட கொலுசு சத்தமும், வளையல் சத்தமும், சிரிப்பு சத்தமும் மட்டுமே கேட்கும்.

சங்கரலிங்கம், சங்கரநாராயணரை தரிசனம் செய்யும் வகையில் உமையவளை எப்போது பார்ப்போம் என்றுதான் தேடிச்செல்லும் கண்கள். கோமதியை இறுதியாக பார்க்கையில் மனம் முழுவதையும் ஆட்கொண்டுவிடுவாள். அவள் முகம் மட்டும்தான் நெஞ்சமெல்லாம் நிறைந்து இருக்கும். நம் கைகளை பிடித்து வழிநடத்திச் செல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். கோவிலில் இருந்து திரும்புகையில் போய் வருகிறேன் என்று சொல்ல மனம் வராமல், உன்னுடனே இருக்கட்டுமா? என்கூட வருவாயா? என்றுதான் அவளை நோக்கி கேட்கத்தோனம். சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கும் கோமதியை தரிசனம் செய்ய சங்கரன்கோவிலுக்கு சென்று வருவோம்.

கோவில் அமைவிடம்

திருநெல்வேலியில் இருந்து வடமேற்கே 48 கிலோமீட்டர் தூரத்தில் சங்கரன்கோவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, மதுரை, விருதுநகரில் இருந்து பஸ் போக்குவரத்து இருக்கிறது. மதுரையில் இருந்து ரெயில் மூலமாக சங்கரன் கோவில் செல்லலாம். தென்காசியில் இருந்தும் ரெயிலில் செல்லலாம்.

திருக்கோவில் வரலாறு

தமிழகத்தில் உள்ள சிவத்தலங்களில் சங்கரநாராயண சுவாமி கோவில் பாண்டிய நாட்டின் நில தலமும் ஆகும். மதுரையை ஆண்ட உக்கிரமப்பாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில். மணிக்கிரீவன் என்ற காவலின் சொல் கேட்டு புன்னை வனத்தின் புற்றின் அருகே இருந்த புன்னை வனக்காட்டினை சீர் செய்து, கோவிலை கட்டியதுடன், கோவிலின் முன் மண்டபங்களையும் கட்டி சுற்றுச்சுவரையும் எழுப்பினார்.

அரியும் சிவனும் ஒன்றென உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன் கோவில். இக்கோவில் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளப்படுவதை தடுத்து நிறுத்தவும், நாட்டில் இந்து மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தவும், பாம்பரசர்களான சிவ பக்தன் சங்கனும், விஷ்ணு பக்தன் பதுமனும் சேர்ந்து திருக்கயிலை மலையில் அருந்தவம் மேற்கொண்டனர். பாம்பரசர்களின் அருந்தவத்தை கண்ட பார்வதி தேவியார் பாம்பரசர்கள் முன்பாகத் தோன்றி என்னவரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு அவர்கள் இருவரும் சிவன், விஷ்ணு இந்த இருவரில் உயர்ந்தவர்கள் யார் என்று வினா எழுப்பினார்கள்.

இதில் அம்பிகை யாரை உயர்ந்தவர் என்று கூற இயலும் தவித்தார். ஒருபுறம் கணவர் சிவபெருமான், மறுபுறம் சகோதரர் விஷ்ணு, இதற்கு தீர்வை அம்பிகை சிவபெருமானிடமே கேட்க, அதற்கு ஈசனோ பொதிகை மலைச் சாரலில் புன்னைவனத்தில் தவம் மேற்கொள் உன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று அம்பிகைக்கு அருளினார். அதன்படி உமையம்மை தமைசூழ்ந்த பசுக்களாகிய வேதமாதர்களுடன் பார்வதி தேவி கோமதியம்மை, ஆவுடையம்மை எனும் காரணப் பெயர்களை தாங்கி புன்னைவனத்தில் தவம் மேற்கொண்டார்.

அம்மையின் அருந்தவத்திற்கு இணங்கி சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராடம் நன்னாளில் அருள்தரும் கோமதி அம்பிகைக்கு அரியும், சிவனும் இணைந்த சங்கரநாராயணர் கோலத்தில் காட்சி கொடுத்து அருளினார். இந்த காட்சியைத்தான் ஆடித்தபசு திருவிழாவாக லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து இறையருள் பெற்று வருகின்றனர்.

சங்கர நாராயணர்

சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவி கோமதி அம்மனாகவும் வீற்றுள்ளார். புன்னை மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட இந்தக் கோவில் ஒன்பது ராஜ கோபுரங்களைக் கொண்டது. சங்கரரும், நாராயணரும் ஒருவரே என்னும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியருளிய இந்தக் கோயிலில் சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே சங்கரநாராயணர் சந்நிதி அமைந்துள்ளது.

சங்கர நாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன், திருவாசியில் நாகவடிவில் சங்கன் குடைபிடிக்கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடைபிடிக்கிறான். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படும்.

கோமதியம்மை

அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம் உள்ளது. மனநோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம். கோமதி அம்மன் சந்நிதி முன் உள்ள ஸ்ரீசக்கரத்தில் பிணியாளர்கள், செய்வினைகளால் பாதிக்கப்பட்டோர் அமர்ந்து அம்மனை நோக்கித் தவம் செய்தால் அவையும் நீங்கும். சந்நிதியில் விபூதிப் பிரசாதம், துளசி தீர்த்தம் உண்டு, வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு, இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் இங்கு உண்டு.

அம்பாளுக்கு திங்கட்கிழமைகளில் மலர் பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அணிவித்து அலங்காரம் செய்விக்கிறார்கள். அம்பாளுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை, புத்திரதோஷம், நாகதோஷம் முதலியவை அகலும் என்று கூறப்படுகிறது.

தபசுக் காட்சி

ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். ஆடித்தபசு அன்று காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார்.

தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

மீண்டும் தவம்

பின்பு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம்?. அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெருமானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது?. எனவேதான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டுகிறாள். இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி- அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.

நாகதோஷங்களை தீர்க்கும் ஸ்தலம்

தமிழ்நாட்டில் நாகதோஷங்களை தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குவதற்கு இக்கோவிலின் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் 6 அடி உயரத்தில் சர்ப்பத்தை கையில் பிடித்தபடி சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார்.

இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்தில் விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோயிலின் ஐதீகம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து அன்னை கோமதியின் அருள் பெற்று செல்கின்றனர்.

முக்கிய திருவிழாக்கள்

சித்திரைப் பெருந்திருவிழா – 48 நாட்கள்.
ஆடித்தபசு திருவிழா – 12 நாட்கள்.
நவராத்திரி லட்சார்ச்சனை – 9 நாட்கள்.
ஐப்பசி திருக்கல்யாணம் – 10 நாட்கள்.
கந்தசஷ்டி திருவிழா – 6 நாட்கள்.
திருவெம்பாவை திருவிழா – 10 நாட்கள்.
தை மாதம் கடைசி – ஆவுடைப்பொய்கை
வெள்ளி அன்று தெப்பத் தேரோட்டம்
ஸ்ரீநந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு – மாதம் 2 முறை.

புற்றுமண்தான் பிரசாதம்

சங்கரன்கோயில் பாம்புகள் (சங்கன், பதுமன்) வழிபட்ட கோவில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்துச் சாப்பிடுகின்றனர். மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்தப் பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. கோமதியின் அருள் பெறுவோம்.

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...