Appams are like thin crepes, made from a batter of fermented rice flour and coconut milk. Soft, light and fluffy, they go best with ishtu – a fresh coconut milk-infused stew of veggies, shallots, mild spices and meat of your choice. Mutton, chicken and vegetable stews are the common options.
Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Wednesday, July 5, 2023
Malabar parotta with Kerala-style beef: flat bread and spicy beef
Tiring of vegetarian fare? Indulge in some fiery Keralan meats. Parottas are flaky, layered flatbreads made of flour. Eat these with a Kerala-style dry beef fry (erachi varattiyathu) – an incredibly spicy and delicious dish of beef chunks cooked with ground spices, black pepper, coconut and chillies.
Banana chips: crisps with a twist
Roadside stalls frying up and selling packs of bright yellow crispy banana slices are a common sight. Banana chips are a popular snack in South India. Thin circular slivers of banana are deep-fried, usually in coconut oil. Sometimes they’re coated in jaggery. Salty with a mild coconut flavour, these crisps are a good teatime snack.
உள்நாட்டு புரட்சி தோல்வியில் தான் முடியும்: அதிபர் புடின் எச்சரிக்கை
டைட்டன் நீா்முழ்கி பாகங்கள் கரைக்கு கொண்டு வர முடிவு : விசாரணைக்கும் உத்தரவு!
பிரான்ஸ் கலவரம்; காவல் துறையில் இனப் பாகுபாடு : ஐ.நா. சபை கவலை!
மெக்சிகோ நாட்டில் கடும் வெப்ப நிலை : 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
மெக்சிகோ நாட்டில் கடும் வெப்ப நிலை காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்: ஆப்பிரிக்க சிறுவனின் குடும்பத்தினர்
பிரான்ஸில் நடக்கும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க சிறுவனின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அபாயம் இல்லை
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.4 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
அமெரிக்காவில் இந்திய தூதரத்திற்கு தீ வைப்பு: காலிஸ்தான் அட்டகாசம்!
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய துணை தூதரகத்திற்கு தீ வைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆப்கனில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை - தலிபான் அரசு உத்தரவு
ஆப்கானிஸ்தானில் பெண்கள் நடத்தும் அழகு நிலையங்களுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
Sunday, July 2, 2023
உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்
Wednesday, June 28, 2023
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டத்துக்கு
இஸ்ரோ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் விண்வெளி வீரர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட தனது லட்சிய ககன்யான் ஏவுகணைத் திட்டத்துக்கான பணியைத் தொடங்க இஸ்ரோ தயாராகி வருகிறது.
குறிப்பாக நமது கிரகத்துக்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்களுக்குப் பயணத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். அந்த வகையில் விண்வெளி வீரர்களின் உயிர் காக்கும் பொருள்களில் ஒன்றான அவர்களின் உணவு முறை குறித்த விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
சமீபத்தில் இது குறித்து பேசியுள்ள இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், விண்வெளி வீரர்களின் பயணத்தின்போது அவர்களுக்கு இந்திய உணவுகளே வழங்கப்படும். இந்த அசாதாரண பயணத்துக்கான சிறப்பு உணவுப் பொருள்கள் மற்றும் மெனுக்களை உருவாக்கப் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாகக் குறைந்த நாட்கள் மட்டுமே பயணம் போன்ற பணிகளில் இட்லி, சாம்பார் போன்றவை மெனுவில் இருக்காது. அதற்குப் பதிலாக விண்வெளி வீரர்கள் பதப்படுத்தப்பட்டது போன்ற உணவுகளை உட்கொள்வார்கள். பின்பு நீண்டகால பயணம் மற்றும் அங்கேயே தங்கியிருந்து செய்யும் பணிகளுக்கு கோழிக்கறி உள்பட பலவகையான உணவுகள் வீரர்களுக்குக் கிடைக்கும். மேலும் உணவின் தன்மை பூமியில் நாம் உட்கொள்வதைப் போலவே இருக்கும்" என்று பகிர்ந்துள்ள அவர், இந்திய விண்வெளி வீரர்களுக்கான தேர்வு முறைகள் பற்றியும் விரிவாகப் பேசியுள்ளார். அதாவது இந்திய விமானப்படை விண்வெளி வீரர்களுக்கு முதன்மை ஆதாரமாக உள்ளது. காரணம் என்னவென்றால், அவர்கள் விமானப் பயணம் மற்றும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்கள்.
குறிப்பாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டத்துக்கு விமானப் படையில் இருந்து நான்கு விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள், விண்வெளி வீரர் பயிற்சியாளர்களாகச் சேர்ந்துள்ளனர். மேலும் இந்தத் திட்டத்தை வெற்றிக்கரமாகச் செயல்படுத்த, முன்பு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளின் உதவியையும் நாடியுள்ளோம்.
இந்த ககன்யான் திட்டத்துக்கான இறுதித் தேதியை இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்தையும் தயார்படுத்துவதே தற்போது எங்கள் நோக்கம் என்று கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்.
அதேபோல் நிலவை ஆய்வு செய்வதற்குக் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இந்த விண்கலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக லேண்டர் கலனை நிலவில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தகவல் வெளிவந்துள்ளது.
சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள தியாங்காங் விண்வெளி
சீனாவின் விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான 6 மாத காலப் பயணத்தை முடித்துவிட்டு, 3 சீன விண்வெளி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை 'Shenzhou-15' ஆளில்லா விண்கலம் மூலம் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர். பெய்ஜிங் நேரப்படி காலை 6.33 மணியளவில், உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ள டோங்ஃபெங்கில், ஷென்சோ-15 விணகலத்தில் பயணம் விண்வெளி வீரர்களான ஃபீ ஜுன்லாங், டெங் கிங்மிங் மற்றும் ஜாங் லு தரையிறங்கியதாக சீன மனிதர்கள் கொண்ட விண்வெளி நிறுவனம் (சிஎம்எஸ்ஏ) தெரிவித்துள்ளது. ஜுன்லாங், கிங்மிங் மற்றும் லு ஆகிய விண்வெளி வீரர்கள், சீன விண்வெளி நிலையத்தில், 6 மாத கால விண்வெளி ஆய்வுப் பயணத்தை நிறைவு செய்துள்ளதாக சீனர்களை கொண்ட விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த மே 30ம் தேதி, சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களை தனது ஷென்ஷூ-16 விண்கலம் மூலம் அந்த நாடு செவ்வாய்க்கிழமை அனுப்பியது. சீனாவின் கல்லூரி பேராசியரும், ஆய்வாளருமான குய் ஹாய்சாவ், விண்கல தலைவா் ஜிங் ஹைபெங், விண்வெளி பொறியாளா் ஷூ யங்ஷூ ஆகிய மூவரும் அந்த விண்கலத்தின் மூலம் தியாங்காங் விண்வெளி நிலையம் சென்றனா். விண்வெளி நிலையத்தில் 6 மாத கால விண்வெளி ஆய்வுப் பயணத்தை நிறைவு செய்வார்கள் சீனர்கள் கொண்ட விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்வெளி துறையில் அமெரிக்காவுடன் கை கோர்க்கும் இந்தியா
விண்வெளி துறையில் அமெரிக்காவுடன் கை கோர்க்கும் இந்தியா
வாஷிங்டன்:
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்தியா அமெரிக்கா இணைந்து 2024ஆம் ஆண்டில் ஒரு கூட்டு விண்வெளி பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இதற்கு முன்பு பல முறை அமெரிக்கா சென்றிருந்தாலும், அரசு முறை பயணமாக அமெரிக்கா
பிரதமரின் இந்த பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இரு நாடுகளும் விண்வெளி துறையில் இணைந்து செயல்பட உள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
விண்வெளி துறை: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இதில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜெட் இன்ஜின், டிரோன்கள் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என முன்கூட்டியே தகவல் வெளியானது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இரு நாடுகளும் விண்வெளி துறையில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தியா ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இணைய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது விண்வெளி துறையில் முக்கிய உடன்பாடாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும், அமெரிக்காவின் நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோ ஆகியவை இணைந்து 2024ஆம் ஆண்டில் ஒரு கூட்டு விண்வெளி பயணத்திற்கு ஒப்புக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் மோடி இன்னும் சில மணி வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனை சந்திக்கவுள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மனிதக்குல நலனுக்காக விண்வெளி ஆய்வுக்கான பொதுவான திட்டத்தை முன்வைக்கும் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
அதென்ன ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை: 1967ஆம் ஆண்டின் அவுடர் ஸ்பேஸ் ஒப்பந்தத்தை (OST) அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை. விண்வெளியின் ஆய்வு மற்றும் பயன்பாட்டை நிர்வாகம் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை இது கொண்டிருக்கிறது. பொதுவாக சர்வதேச விண்வெளி ஆய்வுகளில் இதுதான் ரோட் மேப்பாக இருக்கும். ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை படி 2025ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு எளிதாக மனிதர்களை அனுப்பும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த ஆர்டெமிஸ் உடன்படிக்கையில் தான் இந்தியா கையெழுத்திட உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முக்கியமானதாக இருக்கும்.
Featured Post
தலையெழுத்தையே மாற்ற வல்லது.
தலையெழுத்தையே மாற்றவல்லது சிவபுண்ணியம் அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
korakkar siddhar space Prediction 1,Full moon show on everyday near earth , elephant head bones images show o...