Wednesday, July 5, 2023

உள்நாட்டு புரட்சி தோல்வியில் தான் முடியும்: அதிபர் புடின் எச்சரிக்கை

 












ரஷ்யாவில் உள்நாட்டு புரட்சி ஏற்பட்டால், அது தோல்வியில் தான் முடியும் என அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமான யேவ்கெனி பிரிகோஷின், வாக்னெர் என்ற தனியார் ராணுவத்தை நடத்தி வருகிறார். புடினுக்காக, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரில், இந்த தனியார் படையும் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் பிரிகோஷின் கிளர்ச்சியில் ஈடுபட்டார். ரஷ்யாவின் முக்கிய நகரான ரோட்ஸ்வான் டானை அவரது படைகள் கைப்பற்றின.

தலைநகர் மாஸ்கோ நோக்கி முன்னேறும்படி தன் படைக்கு அவர் உத்தரவிட்டுஇருந்தார். ஆனால், சில மணி நேரங்களிலேயே, இந்த உத்தரவை அவர் திரும்பப் பெற்றார். அண்டை நாடான பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் நடந்த பேச்சுக்குப் பின், ரஷ்ய அரசுக்கு எதிரான போராட்டத்தை அவர் கைவிட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பிரிகோஷின் உடன் ரஷ்ய அரசு சமரசம் செய்ததாக கூறப்படுகிறது.

இதன்படி, ரஷ்யாவில் இருந்து பிரிகோஷின் வெளியேறி, பெலாரசில் தஞ்சமடைவார் என்றும், அவர் மற்றும் அவரது தனியார் ராணுவ அமைப்பின் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புரட்சி முறியடிக்கப்பட்டதை அடுத்து, ரஷ்ய அதிபர் புடின் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: ரஷ்ய ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாக வேண்டும் என மேற்கு நாடுகள் விரும்புகின்றன. ரஷ்யாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவாகினால், அது தோல்வியில் தான் முடியும். வேக்னர் படை ரஷ்ய ராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டிற்கு செல்லலாம். இவ்வாறு அவர் பேசினார்.

டைட்டன் நீா்முழ்கி பாகங்கள் கரைக்கு கொண்டு வர முடிவு : விசாரணைக்கும் உத்தரவு!

 


டைட்டன் நீா்மூழ்கி விபத்துக்கான காரணம் குறித்து நடைபெற்று வரும் சா்வதேச விசாரணைக்கு இந்த பாகங்கள் உறுதுணையாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 1912-ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் தற்போது அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவிலுள்ள கடல்படுகையில் உள்ளது. அதனைப் பாா்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியாா் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட டைட்டன் நீா்மூழ்கி நீா்மூழ்கி கடந்த 18-ஆம் தேதி இறக்கிவிடப்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் அது வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில், டைட்டானிக் கப்பலைப் பாா்வையிடுவதற்காக நீா்மூழ்கியில் சென்ற பாகிஸ்தான் தொழிலதிபா் ஷேஸாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகியோரும், ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனா் ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டன் தொழிலதிபா் ஹமீஷ் ஹாா்டிங், பிரான்ஸ் கடற்படை முன்னாள் கமாண்டோ பால்-ஹென்றி நாா்கியோலே ஆகியோரும் உயிரிழந்தனா்.

பிரான்ஸ் கலவரம்; காவல் துறையில் இனப் பாகுபாடு : ஐ.நா. சபை கவலை!


பிரான்ஸ் தனது காவல் துறையில் வேரூன்றியுள்ள இனப் பாகுபாடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது.

பிரான்ஸின் நான்டெரி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த நயில் என்ற 17 வயது இளைஞர் காவல் துறையின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்ததில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது. 

இந்தக் கலவரத்தில் இதுவரை 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமான போலீஸார் காயமடைந்துள்ளனர். இது குறித்து பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே கூறும்போது ”போராட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதே முன்னுரிமை. சட்டம் - ஒழுங்கை மீட்டெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். கலவரம் குறித்து பாரிஸ் வாசியான மவ்னா கூறும்போது, "நான் 22 வருடங்களாக இங்கு வசித்து வருகிறேன். இம்மாதிரியான வன்முறையை நான் பார்த்ததே இல்லை. கலவரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். இளைஞர்காள் மற்றும் போலீஸாருக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது” என்றார்.

பிரான்ஸ் கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா. சபை, "பிரான்ஸ் தனது காவல் துறையில் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். 17 வயது வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞன் பிரான்ஸில் காவல் துறையினரால் கொல்லப்பட்டது எங்களை கவலையடையச் செய்துள்ளது. பிரான்ஸ் இனவெறி மற்றும் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளை தீவிரமாகக் கையாள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

மெக்சிகோ நாட்டில் கடும் வெப்ப நிலை : 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!


 மெக்சிகோ நாட்டில் கடும் வெப்ப நிலை காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


மெக்சிகோவின் வடமேற்கில் உள்ள சோனோராவில் அதிகளவாக 120 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அந்நாட்டில் வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மருத்துவமனைகளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 104 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீட்ஸ்ட்ரோக், நீரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் நேரிட்டதாக மெக்சிகோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்: ஆப்பிரிக்க சிறுவனின் குடும்பத்தினர்

 பிரான்ஸில் நடக்கும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க சிறுவனின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடந்த செவ்வாய்க்கிழமை நாந்தேரி என்ற இடத்தில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் வந்த17 வயதுடைய நஹெல் என்ற சிறுவன் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி செல்ல முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டார். இனவெறியின் காரணமாக அரங்கேறியதாக நம்பப்படும் இந்தச் சம்பவம் பிரான்சில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுமக்கள், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த 45,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இருப்பினும், ஏராளமான பொதுச் சொத்துகளுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டது. வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. கலவரம் தொடர்பாக இதுவரையில் 2,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நஹெலின் இறுதி நிகழ்வு பேரணியில் கும்பத்தினர், நண்பர்களுடன் போராட்டக்காரர்கள் சிலரும் பங்கேற்றனர். பேரணியின்போது நஹெலுக்கு நீதி வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பினர். ஆனால், நஹெலின் இறுதிச் சடங்குகளுக்கு பின்னரும் பிரான்ஸில் வன்முறைகள் நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பிரான்ஸில் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று நஹெலின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். கொல்லப்பட்ட நஹெயின் பாட்டி நாடியா கூறும்போது, "இந்த வன்முறைகள் எங்கள் குடும்பத்தாரை பாதித்துள்ளது. பிரான்ஸில் நிகழும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பள்ளிகளும், பேருந்துகளும் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, பிரான்ஸில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 2,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் பலர் 17 வயதினர் என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அபாயம் இல்லை


 இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.4 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. 


இந்தோனேசியா நாட்டின் பப்புவா தலைநகா் ஜெயபுராவில் உள்ள அபேபுரா மாவட்டத்திலிருந்து 135 கி.மீ. தொலைவில் 13 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என இந்தோனேசிய வானிலை, காலநிலை, புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும், நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிா்வுகள் இருக்கக்கூடும் என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பப்புவா மாகாணத்தில் 10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். இந்தோனேசியாவின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணங்களில் பப்புவாவும் ஒன்று. இந்தோனேசியாவில் நிலஅதிா்வுகள், எரிமலை வெடிப்புகள், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. கடந்த நவம்பரில் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் (5.6 அலகுகள்) 602 போ் உயிரிழந்தனா். 2021, ஜனவரியில் மேற்கு சுலாவெசி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் (6.2 அலகுகள்) 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அங்கு கடந்த 2004-ஆம் ஆண்டு கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி உருவாகி இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் சுமாா் 2.30 லட்சம் போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

அமெரிக்காவில் இந்திய தூதரத்திற்கு தீ வைப்பு: காலிஸ்தான் அட்டகாசம்!

 




அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய துணை தூதரகத்திற்கு தீ வைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


அமெரிக்காவின் சான்-பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்திற்கு கடந்த 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலிஸ்தான் ஆதரவாளரகள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீவைப்பு சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் துணை தூதரகத்தை எரிபொருளை ஊற்றி எரித்துள்ளார். இதனால், அப்பகுதி முழுக்க கொழுந்துவிட்டு எரிந்த தீயால் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதன் பின்னர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழப்புகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. காலிஸ்தானி ஆதரவாளர்களால் கடந்த 5 மாதங்களில் இந்திய தூதரகம் மீதான இரண்டாவது தாக்குதல் என கூறப்படுகிறது. இந்திய தூதரகத்திற்கு எதிராக அறிவிக்கப்பட்ட நாசவேலை மற்றும் தீவைப்பு முயற்சியை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஆப்கனில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை - தலிபான் அரசு உத்தரவு

 


ஆப்கானிஸ்தானில் பெண்கள் நடத்தும் அழகு நிலையங்களுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.


ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து அங்கு பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. பெண்கள் பொதுவெளிக்கு வருவதை தடுக்கும் நடவடிக்கைகளை தலிபான் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்கா, ஜிம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் பெண்களுக்கு அனுமதி இல்லை. அரசு வேலைகளிலிருந்து பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். பெண்கள் பொதுவெளியில் முகத்தை மறைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அழகு நிலையங்களை மூட தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஆப்கானிஸ்தானில் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், "காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும் அனைத்து அழகு நிலையங்களும் உடனடியாக தடை செய்யப்படுகிறது. அனைவரும் எங்கள் உத்தரவைப் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனில் பெண்களின் நிலை குறித்து ஐநா மனித உரிமைப் பிரிவின் துணை உயர் ஆணையர் நாடா அல் நஷீப் கூறும்போது, "கடந்த 22 மாதங்களாக, ஆப்கனிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை முடக்கப்பட்டு வருகிறது. அனைத்து தளங்களிலும் பெண்களுக்கு எதிராக தீவிர பாகுபாடு காட்டப்படுகிறது” என்றார்.

Sunday, July 2, 2023

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்


🛞புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.
சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.

மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது.

திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.

 இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது.

உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.

ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.
“வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.

கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!

உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறினான் அரசன்.

அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.

இது ஆறாவது சிலை.
ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.
உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.

 இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள்.
“அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.
சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னிடம் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.
“அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.
அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொன்னான்.

மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விடுவேன் என்று தோன்றுகிறது. எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றான்.

“நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?

கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று பதட்டத்தோடு சொல்ல.

“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்” என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்..

சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.

ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.
கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை.

உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!

வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.
ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.

நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.

ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான்.

”உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்” என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.

சிற்பி இல்லை என்று தலையாட்டினார், “என்ன சொல்ல வருகிறாய்?” மன்னன் மறுபடியும் சீறினான்.

”இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்,” என்று சொல்ல….
“இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே” என்று மறுபடியும் சீறினான்.

”இல்லை அரசே .இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல,” என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.

உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது! தரையை நனைத்தது.

மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.
இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.

வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.
கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர் திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும்.

உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!

 கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான்.

அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!

 தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.

தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.

இறைவி பெயர் தேகசௌந்தரி,
ஸ்தலமரம் அரசு,
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.

கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும்.

குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம்.
 எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள்!

கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்களேன்!

திருநல்லம் ஒரு முறையேனும் சென்று வாருங்கள். சிவ அழகில் சொக்கிப் போய் வருவது கண்கூடான உண்மை. 🙏

Wednesday, June 28, 2023

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டத்துக்கு

இஸ்ரோ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் விண்வெளி வீரர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட தனது லட்சிய ககன்யான் ஏவுகணைத் திட்டத்துக்கான பணியைத் தொடங்க இஸ்ரோ தயாராகி வருகிறது.

குறிப்பாக நமது கிரகத்துக்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்களுக்குப் பயணத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். அந்த வகையில் விண்வெளி வீரர்களின் உயிர் காக்கும் பொருள்களில் ஒன்றான அவர்களின் உணவு முறை குறித்த விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

சமீபத்தில் இது குறித்து பேசியுள்ள இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், விண்வெளி வீரர்களின் பயணத்தின்போது அவர்களுக்கு இந்திய உணவுகளே வழங்கப்படும். இந்த அசாதாரண பயணத்துக்கான சிறப்பு உணவுப் பொருள்கள் மற்றும் மெனுக்களை உருவாக்கப் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாகக் குறைந்த நாட்கள் மட்டுமே பயணம் போன்ற பணிகளில் இட்லி, சாம்பார் போன்றவை மெனுவில் இருக்காது. அதற்குப் பதிலாக விண்வெளி வீரர்கள் பதப்படுத்தப்பட்டது போன்ற உணவுகளை உட்கொள்வார்கள். பின்பு நீண்டகால பயணம் மற்றும் அங்கேயே தங்கியிருந்து செய்யும் பணிகளுக்கு கோழிக்கறி உள்பட பலவகையான உணவுகள் வீரர்களுக்குக் கிடைக்கும். மேலும் உணவின் தன்மை பூமியில் நாம் உட்கொள்வதைப் போலவே இருக்கும்" என்று பகிர்ந்துள்ள அவர், இந்திய விண்வெளி வீரர்களுக்கான தேர்வு முறைகள் பற்றியும் விரிவாகப் பேசியுள்ளார். அதாவது இந்திய விமானப்படை விண்வெளி வீரர்களுக்கு முதன்மை ஆதாரமாக உள்ளது. காரணம் என்னவென்றால், அவர்கள் விமானப் பயணம் மற்றும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்கள்.

குறிப்பாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டத்துக்கு விமானப் படையில் இருந்து நான்கு விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள், விண்வெளி வீரர் பயிற்சியாளர்களாகச் சேர்ந்துள்ளனர். மேலும் இந்தத் திட்டத்தை வெற்றிக்கரமாகச் செயல்படுத்த, முன்பு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளின் உதவியையும் நாடியுள்ளோம்.

இந்த ககன்யான் திட்டத்துக்கான இறுதித் தேதியை இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்தையும் தயார்படுத்துவதே தற்போது எங்கள் நோக்கம் என்று கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்.

அதேபோல் நிலவை ஆய்வு செய்வதற்குக் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இந்த விண்கலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக லேண்டர் கலனை நிலவில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தகவல் வெளிவந்துள்ளது.

சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள தியாங்காங் விண்வெளி

சீனாவின் விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான 6 மாத காலப் பயணத்தை முடித்துவிட்டு, 3 சீன விண்வெளி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை 'Shenzhou-15' ஆளில்லா விண்கலம் மூலம் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர். பெய்ஜிங் நேரப்படி காலை 6.33 மணியளவில், உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ள டோங்ஃபெங்கில், ஷென்சோ-15 விணகலத்தில் பயணம் விண்வெளி வீரர்களான ஃபீ ஜுன்லாங், டெங் கிங்மிங் மற்றும் ஜாங் லு தரையிறங்கியதாக சீன மனிதர்கள் கொண்ட விண்வெளி நிறுவனம் (சிஎம்எஸ்ஏ) தெரிவித்துள்ளது. ஜுன்லாங், கிங்மிங் மற்றும் லு ஆகிய விண்வெளி வீரர்கள், சீன விண்வெளி நிலையத்தில், 6 மாத கால விண்வெளி ஆய்வுப் பயணத்தை நிறைவு செய்துள்ளதாக சீனர்களை கொண்ட விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த மே 30ம் தேதி, சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களை தனது ஷென்ஷூ-16 விண்கலம் மூலம் அந்த நாடு செவ்வாய்க்கிழமை அனுப்பியது.  சீனாவின் கல்லூரி பேராசியரும், ஆய்வாளருமான குய் ஹாய்சாவ், விண்கல தலைவா் ஜிங் ஹைபெங், விண்வெளி பொறியாளா் ஷூ யங்ஷூ ஆகிய மூவரும் அந்த விண்கலத்தின் மூலம் தியாங்காங் விண்வெளி நிலையம் சென்றனா். விண்வெளி நிலையத்தில் 6 மாத கால விண்வெளி ஆய்வுப் பயணத்தை நிறைவு செய்வார்கள் சீனர்கள் கொண்ட விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்வெளி துறையில் அமெரிக்காவுடன் கை கோர்க்கும் இந்தியா

 விண்வெளி துறையில் அமெரிக்காவுடன் கை கோர்க்கும் இந்தியா

வாஷிங்டன்:

 பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்தியா அமெரிக்கா இணைந்து 2024ஆம் ஆண்டில் ஒரு கூட்டு விண்வெளி பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இதற்கு முன்பு பல முறை அமெரிக்கா சென்றிருந்தாலும், அரசு முறை பயணமாக அமெரிக்கா

பிரதமரின் இந்த பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இரு நாடுகளும் விண்வெளி துறையில் இணைந்து செயல்பட உள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

விண்வெளி துறை: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இதில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜெட் இன்ஜின், டிரோன்கள் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என முன்கூட்டியே தகவல் வெளியானது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இரு நாடுகளும் விண்வெளி துறையில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தியா ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இணைய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது விண்வெளி துறையில் முக்கிய உடன்பாடாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும், அமெரிக்காவின் நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோ ஆகியவை இணைந்து 2024ஆம் ஆண்டில் ஒரு கூட்டு விண்வெளி பயணத்திற்கு ஒப்புக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி இன்னும் சில மணி வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனை சந்திக்கவுள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மனிதக்குல நலனுக்காக விண்வெளி ஆய்வுக்கான பொதுவான திட்டத்தை முன்வைக்கும் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

அதென்ன ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை: 1967ஆம் ஆண்டின் அவுடர் ஸ்பேஸ் ஒப்பந்தத்தை (OST) அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை. விண்வெளியின் ஆய்வு மற்றும் பயன்பாட்டை நிர்வாகம் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை இது கொண்டிருக்கிறது. பொதுவாக சர்வதேச விண்வெளி ஆய்வுகளில் இதுதான் ரோட் மேப்பாக இருக்கும். ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை படி 2025ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு எளிதாக மனிதர்களை அனுப்பும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த ஆர்டெமிஸ் உடன்படிக்கையில் தான் இந்தியா கையெழுத்திட உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முக்கியமானதாக இருக்கும்.

Monday, June 26, 2023

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில்

 ஐந்துவீட்டு சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடன்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள செட்டியாபத்து என்ற ஊரில் குடிகொண்டுள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்.

ஐந்து வீட்டு சுவாமி கோவில், தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 8 நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு. அன்னமுத்திரி பிரசாதம் வாங்கிச் செல்வது இக்கோவிலின் சிறப்பு ஆகும். ஐந்துவீட்டு சுவாமி கோயிலுக்கும் வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம்.

ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் வழிபடும் இந்த கோயிலை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், கோவிலுக்கான செலவுகளை பஞ்சபாண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில் செய்யப்படும் அன்னதானமானது மீனவர்கள், அங்காடியில் வியாபாரம் செய்பவர்கள், வெற்றிலை விற்கும் நாடார்கள், ஆடு மாடுகளை வளர்த்துவந்த கோணார்கள், நெசவாளர்கள் இப்படி ஜாதி மத வேறுபாடின்றி இவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட சன்மானத்தில் இந்த ஆலயமானது பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. பெரிய சுவாமி திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றைப் போக்கும் தலமாகவும், மாந்திரீக பிரச்னை களுக்கும், மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசுவாமி சன்னிதியின் எதிர் புறம் ஆஞ்சநேயர் சன்னிதி அமைக்கப்பட்டு ள்ளது. சிறப்பு மிக்க பிரார்த்தனை தலமான இந்த ஆலயத்தில் வினை மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட வர்கள், தீராத பணிகளால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து தங்கள் குறைகள் நீங்கப்பெறுகின்றனர்.

இத்தலத்தில் விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத வியாதிகள் தீரும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மக்கள் செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. வேண்டுவோருக்கு வேண்டுபவை எல்லாம் கிடைக்கும் அற்புதத் தலம் இதுவாகும். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர்

புராண வரலாறு அனைத்து ஜாதி மக்களும் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலுக்கு வந்து வணங்கினாலும், அவரவர் மனதுக்குள் ஜாதி வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் இருந்தது. ஜாதி ஏற்றத்தாழ்வு அதிகமாக பார்க்கும் அந்த காலகட்டத்தில் ஒரு துப்புரவு தொழிலாளி இறைவனுக்கு பிரசாதத்தை படைத்து வழிபட்டான். ஆனால் அந்த பிரசாதத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, யாரும் அந்த பிரசாதத்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணம், அவன் செய்யும் துப்புரவு தொழிலும் அவன் ஜாதியில் குறைந்த அந்தஸ்தை உடையவன் என்பதும் தான். அவன் அந்த கோவிலில் அழுது புலம்பி தவித்து சோர்ந்து கோவில் வாசலிலேயே உறங்கிவிட்டான். அந்த சமயத்தில் தொழிலாளியின் கனவில் வந்த பெரியசாமிகள், 'அந்த பிரசாதத்தை ஓரிடத்தில் புதைத்து வைத்துவிட்டு அடுத்த வருடம் வந்து அதை திறந்து பார்க்க சொல்' என கூறிவிட்டு மறைந்து விட்டனர். திடுக்கிட்டு விழித்த அந்தத் தொழிலாளி அந்த கோவிலுக்கு தெற்குப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் பிரசாதத்தை ஒரு வாழை இலை கொண்டு மூடி, அதை பானையோடு புதைத்து வைத்தான்.

மறுவருடம் அந்த கோவிலுக்கு வந்த துப்புரவு தொழிலாளி பெரியசாமியை வணங்கிவிட்டு, அவன் புதைத்து வைத்திருந்த அந்த பிரசாதத்தை தோண்டி எடுத்து பார்த்தான். அந்த பிரசாதமானது அப்பொழுதுதான் புதியதாக செய்ததைப் போன்று ஆவி பறக்க இருந்தது. இதை பார்த்த பக்தர்கள் அந்தத் தொழிலாளியின் பிரசாதத்தின் மகிமை கண்டு, அந்த பிரசாதம் தங்களுக்கும் வேண்டுமென்று அனைவரும் கேட்டு கேட்டு வாங்கிச் சென்றனர். அந்த துப்புரவு தொழிலாளிக்கு இறைவன் கொடுத்த ஆசிர்வாதம் தான் இது. அந்த நாளில் இருந்து யாரும் இந்த கோவிலில் ஜாதி மதத்தினை மனதளவில் கூட பார்ப்பதில்லை.

 கோயில் அமைப்பு சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒரே வளாகத்தில், 5 தனித்தனி சன்னநிதிகளில் சுவாமிகள் வீற்றிருப்பதால், இந்தக் கோவில் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் என்று பெயர் பெற்றது. 4 ஏக்கர்களைக் கொண்ட இந்த கோவிலானது நான்கு திசைகளிலும், நான்கு வாசல்களை கொண்டுள்ளது. இதில் வடக்கு வாசல் வழியாக உள்ளே செல்லும் போது முதலில் ஸ்ரீ பெரியசாமி சன்னதி அமைந்திருக்கிறது. அடுத்ததாக ஸ்ரீ வைணவ பெருமாள் சன்னதியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அனந்தம்மாள் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ ஆத்தி சுவாமி சன்னதியும், அதனையடுத்து ஸ்ரீ திருப்புளி ஆழ்வார் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ பெரியபிராட்டி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே கோவிலுக்குள் 6 தெய்வங்கள், ஐந்து சன்னதிக்குள் அமைந்திருப்பதால் இந்த கோவிலுக்கு ஐந்து வீட்டு சுவாமிகள் கோவில் என்று பெயர் வந்தது. பலன்கள் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் மந்திரமாக ஹரி ஓம் ராமானுஜாய உச்சரிக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு சென்று இந்த மந்திரத்தை உச்சரித்து அந்த இறைவனிடம் வேண்டினால், திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். நவக்கிரகங்களின் தோஷங்கள் நீங்கும். மனோதைரியம், நிம்மதி, எடுத்த காரியத்தில் வெற்றி, இவைகளை பெற்று வளமாக வாழலாம். இங்குள்ள ஐந்து வீட்டு சுவாமிகளை மனமுருக தரிசித்தால், நினைத்த காரியம் நிறைவேறும், அற்புதங்கள் நிகழும் என்பது இந்த கோவிலின் பக்தர்களின் அசராத நம்பிக்கை 

திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18–ந் தேதி தொடங்கி 6 நாட்கள் வரை சித்திரை திருவிழாவும், தை மாதம் 5–ந் தேதி தொடங்கி 3 நாட்கள் தைத் திருவிழாவும் இங்கு சிறப்பாக நடைபெறும். மேலும் அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. சித்திரைத் திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது. இந்த பிரசாதத்தை நமது வீட்டில் அரிசி வைத்திருக்கும் பானை அல்லது பாத்திரத்தில் போட்டு வைத்தால், ஒருபோதும் அன்னத்துக்கு குறைவிருக்காது என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கை. இதுமட்டுமின்றி, மாதாந்திர வெள்ளியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் மதிய வேளையில் மாபெரும் அன்னதானம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, அய்யாவின் பேரருளால் உணவருந்தி, மன நிம்மதியுடன் செல்வர். மேலும், அமாவாசை, பவுர்ணமி பூஜைகளும் சிறப்பானது. அன்னதானம் சாதி மத பேதமின்றி, இந்த கோவில் நடத்தப்படும் அன்னதானம்" என்ற சமபந்தி விருந்து ஆலயத் தின் "தனிச்சிறப்பு" . இங்கு நடைபெறும் அன்னதானத்தில் அனைவரும் கல்ந்துகொண்டு உணவருந்தி மகிழ்வர். ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்குவதால், பிரிவினையை தவிர்க்கும் மனித ஒற்றுமையின் சிறப்பிடமாக இந்த தலம் விளங்குகிறது. திருமணிக்கட்டி சிறப்புகள் சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவருக்கும், பூஜை முடிந்ததும், மூலஸ்தானத்தில், திருமணிக்கட்டி பொட்டு வைத்து, தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆலயத்தில் வழங்கப்படும், திருமணிக்கட்டி பிரசாதத்தை, கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்குப் பதிலாக திருமணிக்கட்டியை பூசிக் கொள்வது வழக்கம். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் நோய் குணமாவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள். புருவ மத்தியில் வெளிச்சத்தை கண்டதற்கு அடையாளமாகத்தான் இந்த வெண்பொட்டு இட்டுக்கொள்ளப் படுகிறது. இந்த பொட்டு வைத்திருப்பவர்களை கண்டாலே, அவர்கள் ஐந்துவீட்டு சுவாமி கோவிலின் பக்தர்கள் என்பது எளிதில் அடையாளம் காணமுடியும். திருமணி நெற்றியில் இட்டவர்க்கு மோட்ச பிராப்தி உண்டாகும் என்பது ஐதிகம். இவ்வாலயம் வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும். இந்தக் கோவிலில் வேப்பமரம், ஆத்தி மரம் போன்ற மூலிகை விருட்சங்கள் இருக்கின்றன. ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடிப்பது பக்தர்களிடையே தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கமாகும். இதனால், தீராத நோய்களும் தீர்ந்து வருகிறது. கோவில் திருவிழாக்காலங்களில் பூசாரியானவர், அனைத்து சன்னிதிகளிலும் அஷ்டாட்சரம் என்னும் எட்டு எழுத்தை திருமணி கொண்டு இயந்திரம் போட்டு வைத்துவிட்டு வந்து விடுவார். திருவிழா முடியும் வரை அந்தந்த சன்னிதிகளில் ஜாதி பேதமின்றி நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் பூஜை செய்து கொள்வார்கள். ஆலய திருவிழாவின் போது ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு, ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்பட்டு படையல் போடப்படும். 

பூஜை கால அட்டவனை ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு கால பூஜையின்போது, கோவிலில் சங்கநாதம் ஒலிக்கப்படுகிறது. இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப்படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள். வழிபாட்டு நேரம் தரிசன நேரம்: காலை 7-8.30 மணி வரை மதியம் 11-12 மணி வரை மாலை 5.30- 7 மணி வரை.

Sunday, June 18, 2023

Muthulakshmi Reddi’s 133rd Birthday

 Today’s Doodle, illustrated by Bangalore-based guest artist Archana Sreenivasan, celebrates the Indian educator, lawmaker, surgeon, and reformer Muthulakshmi Reddi. Constantly breaking down barriers throughout her life, Reddi was a trailblazer who devoted herself to public health and the battle against gender inequality, transforming the lives of countless people—especially young girls.

Born on this day in 1883 in the southern state of Tamil Nadu, Reddi became the first female student admitted to prestigious Indian institutions, the first woman to work as a surgeon in a government hospital, and the first female legislator in the history of British India.

As a young girl, Reddi resisted her parents’ plan for an early arranged marriage, convincing them she deserved an education. After passing her exams, she attended Maharaja College, formerly an all-boys school. Despite threats of students pulling out from the school, she won a scholarship, graduated with honors, and went on to be the first female student at Madras Medical College.

Reddi later gave up her medical practice to join the Madras Legislative Council, where she worked to raise the legal age of marriage and combatted exploitation of girls.

In 1914, she married a doctor named Sundara Reddi on the understanding that he treat her as an equal. Working for the upliftment of women and battling gender inequality, she supported Gandhi’s efforts for Indian independence.

After losing a sister to cancer, she launched the Adayar Cancer Institute in 1954. One of the most respected oncology centers in the world, it treats some 80,000 patients each year. In recognition of her service to her country, in 1956, Reddi was awarded the Padma Bhushan by the Government of India.

Happy birthday, Dr. Kamala Sohonie! , 112th Birthday

 Today’s Doodle celebrates the 112th birthday of Indian biochemist Dr. Kamala Sohonie. She was the first Indian woman to achieve a Ph.D in a scientific field during a time when Indian women were conspicuously underrepresented in scientific disciplines. By breaking barriers and proving her doubters wrong, Dr. Sohonie not only did pioneering work in her field of biochemistry but helped forge a path for future Indian women to overcome gender bias and pursue their dreams.

Per family historical records, Dr. Sohonie was born in Indore, Madhya Pradesh on this day in 1911 to parents who were respected chemists. Wanting to follow in her father’s and uncle’s footsteps, she studied chemistry and physics at Bombay University and graduated at the top of her class in 1933. She became the first woman to be inducted into the Indian Institute of Science (IISc) but was imposed with stringent conditions during her first year — all because its director doubted the capabilities of women in science.

Dr. Sohonie proved her competence and was granted permission to continue her research. In fact, she impressed the director so much that the IISc began accepting more women into their program. For the next few years, Sohonie studied the various proteins found in legumes and concluded they boosted nutrition in children. In 1936, she published her thesis on this subject and obtained her master’s degree.

One year later, she earned a research scholarship at Cambridge University. Dr. Sohonie discovered Cytochrome C, an enzyme important to energy generation, and found that it was present in all plant cells. In just 14 months, she completed her thesis about this finding and acquired her Ph.D. When she returned to India, Dr. Sohonie continued studying the benefits of certain foods and helped develop an affordable dietary supplement made from palm nectar. This nutritious drink, called Neera, is a good source of Vitamin C and has been proven to improve the health of malnourished children and pregnant women.

Dr. Sohonie was awarded the Rashtrapati Award for her work on Neera. She also became the first female director of the Royal Institute of Science in Bombay.

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...