Thursday, March 31, 2022

மடிச்சங்கு

 மடிச்சங்கு

சங்குகள் பலவகைப்படும்; அவற்றுள் வலம்புரிச்சங்கு உயர்ந்ததாகும்; அதனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது '' மடிச்சங்கு ''. இச் சங்கின் மேற்புறம் விரல் போன்ற நீண்ட நாளம் என்ற அமைப்புகள் இருக்கும்.
இவற்றில் நீண்ட குழல் போன்ற துவாரங்களும் இருக்கும். இச்சங்கில் பாலை ஊற்றினால், அது மழை போன்று மெல்லிய தாரையாக நாளத்தின் வழியே வெளிப்படும். அப்போது அந்தச் சங்கு, பார்ப்பதற்கு பசுவின் மடி தோன்றும், அதன் மேலுள்ள நாளங்கள் பசுவின் மடிக்காம்புகள் போன்றும் காட்சியளிக்கும்.
இச்சங்கை சிவலிங்கத்தின் திருமுடி மேல் பிடித்துக் கொண்டு அதில் பாலை வார்த்து அபிஷேகம் செய்வார்கள். இப்படி அபிஷேகம் செய்யும் காட்சி, பசு தானே இறைவன் மீது பாலைப் பொழிவது போல இருக்கும் ! அப்போது அமிர்தவர்ஷிணி ராகம் இசைப்பர் ; பசுபதி திருவிருத்தம் ஓதுவர்; இச்சங்கை '' கோமடிச்சங்கு '' என்றும் கூறுவர் ; இதைக் கொண்டு இறைவனை முழுக்காட்டுவது, கோடி மடங்கு நன்மை தரும் என்பர் ;
வலம்புரிச் சங்கினை திருமகளாக போற்றுவதைப் போல , மடிச்சங்கினை பார்வதி தேவியாக போற்றுகின்றனர் !
No photo description available.


இன்று வரை உயிரியல் ரீதியாக அழியாத (immortal) ஒரே உயிரினம்:

 இன்று வரை உயிரியல் ரீதியாக அழியாத (immortal) ஒரே உயிரினம்:

ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர் அரக்க சகோதரர்கள். இவர்கள் மூவரும் தங்களுக்கென தனித்தன்மையான வரத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கில் பிரம்ம தேவரை நினைத்து கடுமையான தவம் இருக்க முடிவு செய்தனர்.
உங்களின் தவத்தால் என்னை மகிழ்ச்சி அடையச்செய்த உங்களுக்கு வரம் தர பிரம்மா வந்துள்ளேன். கண்களைத் திறக்கவும் என்றார்.
இதில் ராவணன் “எனக்கு மரணமில்லாத, அழியாத வரம் வேண்டும் ஐயனே” என்றான்.
அதற்கு பிரம்மா, “மகனே நீ விரும்பும் எத்தனை வரங்கள் வேண்டுமானாலும் என்னால் தர முடியும் ஆனால் சாகா வரம் மட்டும் தன்னால் அளிக்க முடியாது. அதற்கு பதிலாக வேறு ஏதேனும் வரத்தைக் கேள்” என்றார்.
பிரம்மன் கூட அளிக்க முடியாத வரத்தை இங்கு பூமியில் உள்ள ஒரு உயிரினம் பெற்றிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் உள்ளது "Turritopsis dohrnii"
அது எப்படி சாத்தியம் என்று உங்களுக்கு தோன்றலாம்
வயதாகிவிடும் எண்ணத்தை யாரும் விரும்புவதில்லை. வயதான செயல்முறையிலிருந்து தப்பிக்க அல்லது தாமதப்படுத்த நமது பல மனித முயற்சிகள் இருந்தபோதிலும், இது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகத் தெரிகிறது.இருப்பினும், ஒரு சில இனங்கள் வயதான செயல்முறையிலிருந்து முற்றிலும் தப்பிக்க முடியும்.
செல்லுலார் அளவில் , செல்கள் பிளவுபடுவதை நிறுத்தி இறுதியில் அவை இறந்துவிடுகின்றன.
இந்த வயது மூப்பு என்பது ஒரு உயிரினத்துக்கு அல்ல தோல் தசை போன்ற செல்களால் ஆன அனைத்திற்கும் பொருந்தும்.
நீங்கள் நினைப்பது போல் சாகாம் வரம் பெறவில்லை மாறாக உயிரியல் ரீதியாக
இந்த உயிரினத்துக்கு இறப்பு என்பது கிடையாது.
இந்த சிறிய, தெளிவாகத் தோற்றத்தை கொண்ட இந்த ஜெல்லி பிஷ் Turritopsis dohrnii வகைதான் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் உயிரினம் உலகெங்கிலும் உள்ள கடல்களில் காணப்படுகிறது , மேலும் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியின் முந்தைய கட்டத்திற்கு திரும்புவதன் மூலம் எல்லையற்ற முறை வாழ்வை திருப்ப முடியும்.
ஒரு புதிய ஜெல்லிமீன் வாழ்க்கை கருவுற்ற முட்டையுடன் தொடங்குகிறது, இது ஒரு பிளானுலா எனப்படும் லார்வா கட்டமாக வளர்கிறது. விரைவான நீச்சலுக்குப் பிறகு, பிளானுலா ஒரு மேற்பரப்பில் (ஒரு பாறை, அல்லது கடல் தளம், அல்லது ஒரு படகின் ஹல் போன்றவை) ஒட்டிக்கொள்கிறது, அங்கு அது ஒரு பாலிபாக உருவாகிறது: ஒரு முனையில் ஒரு வாயுடன் ஒரு குழாய் வடிவ அமைப்பு மற்றும் ஒரு வகையான கால் கொண்டுள்ளது மறுபுறம். இது சில நேரம் இடத்தில் சிக்கிக் கொள்கிறது , பாலிப்களின் ஒருவருக்கொருவர் உணவுக் குழாய்களைப் பகிர்ந்து கொள்ளும் சிறிய காலனியாக வளர்கிறது.
இறுதியில், ஜெல்லிமீன் இனங்களைப் பொறுத்து, இந்த பாலிப்களில் ‘மொட்டு’ என்று அழைக்கப்படும் ஒரு வளர்ச்சியை உருவாக்கும், அல்லது அது ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள தனித்தனி பிரிவுகளை உருவாக்கிக்கொள்ளும், பின்னர் அவை காலனியின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிந்து செல்லக்கூடும். இந்த செயல்முறை ஜெல்லிமீன் வாழ்க்கைச் சுழற்சியின் அடுத்த கட்டங்களுக்கு காரணமாக அமைகிறது.எபிரா (ஒரு சிறிய ஜெல்லிமீன்) மற்றும் மெடுசா, இது பாலியல் இனப்பெருக்கம் செய்யக்கூடிய முழுமையான வயதுவந்த நிலை பெற்றிருக்கும்.
மற்ற ஜல்லி மீன்களுக்கு இதுவே கடைசி ஆகும்.
ஆனால் நமது உயிரினத்துக்கு அப்படி கிடையாது.
இது பட்டினி அல்லது காயம் போன்ற ஒருவித சுற்றுச்சூழல் அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது, ​​இதன் திசுக்களின் ஒரு சிறிய குமிழியாக மாறக்கூடும், பின்னர் அது வாழ்க்கையின் முதிர்ச்சியடையாத பாலிப் கட்டமாக மாறுகிறது. இது ஒரு பட்டாம்பூச்சி மீண்டும் ஒரு கம்பளிப்பூச்சியாக மாறுவது போன்றது.
இதன் வாழ்க்கை சுழற்சி முறை பதிவில் உள்ள படத்தில் இணைத்துள்ளேன்
அவை இன்னும் வேட்டையாடுபவர்களால் இறையாக அல்லது வேறு வழிகளால் கொல்லப்படலாம். இருப்பினும், சுற்றுச்சூழல் அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக வாழ்க்கை நிலைகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக மாறுவதற்கான அவைகளின் திறன், கோட்பாட்டில் என்றென்றும் வாழ முடியும் என்பதாகும்.

ஆண்டி சுனையின் மகிமையையும் ...அதில் ஏன் குளிக்க வேண்டாம்

 அன்பு ஆன்மீக உடன் பிறப்புக்களுக்கு வணக்கம்

🙏...நான் ஈசன் மகன் சிம்பு...நான் கூறியவாறு வெள்ளியங்கிரி ஆண்டி சுனையின் மகிமையையும் ...அதில் ஏன் குளிக்க வேண்டாம் எனவும் விளக்கியுள்ளேன்...இது இப்படியே தொடருமாயின்...என் என்னப்படி வரும் சித்ரா பௌர்ணிமியன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேறுவர் அவர்கள் தாகத்தால் தவிக்கும் நிலை ஏற்படின்...அதன் விளைவு யாரை சாறும்...எனவே ஆண்டி சுனையை தாகசாந்திக்காக பயன்படுத்துவோம்...மலையை பாதுகாப்போம் தூய்மையாக வைத்திருப்போம்...நீரின்றி அமையாது உலகு...
சிவாய நம...
அதிகம் பகிருங்கள்...🙏



Monday, March 28, 2022

இறைவனை வணங்கும்போது

 இறைவனை வணங்கும்போது சிலர் கைகளை தலைக்குமேல் தூக்கி வணங்குகிறார்கள். சிலர் கைகளைக் குவித்து முகத்திற்கு அருகில் வைத்து வணங்குகிறார்கள். எது சரியானது?

இவை இரண்டு முறை மட்டுமல்லாது இன்னும் சிலர் நெஞ்சுக்கு நேராகக் கைகளைக் குவித்து வணங்குவர். இவை அனைத்துமே சரியானதுதான்.
கைகளை தலைக்குமேல் தூக்கி வணங்குவது என்பது உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமில்லை, நீ ஒருவனே எனக்குத் துணை என்று இறைவனைச் சரண் அடைவதன் வெளிப்பாடு. திரௌபதி கண்ணனைச் சரணடைந்தாளே அப்படி.
முகத்திற்கு அருகில் கைகளை குவித்து தலை குனிந்து வணங்குவது என்பது அடக்கத்தின் வெளிப்பாடு. உனக்குக் கீழ்தான் உலகமே இயங்குகிறது என்ற பொருளில் சாதாரணமாக எல்லோரும் வணங்குகின்ற முறை.
நெஞ்சிற்கு நேராக கைகளைக் குவித்து வணங்குவது என்பது இறைவா உன்னை என் நெஞ்சிற்குள்ளேயே வைத்திருக்கிறேன், எப்பொழுதும் என்னுடனேயே இருந்து என்னைக் காப்பாய் என்ற எண்ணத்தினைக் குறிக்கும்.
இவ்வாறாக அவரவர் எண்ணத்திற்குத் தக்கவாறு வணங்கும் முறையானது வேறுபடுகிறது.
May be an image of 1 person and text




கேது தரும் தொழில்களும்

 கேது தசாவும்

✈கேது தரும் தொழில்களும்
நவகிரகங்களில் மிகமிக வலிமையான கிரகம் கேதுவாகும்.
கேதுவுக்கு சொந்த வீடு இல்லாததால் அமர்ந்த இடம்,இணைந்த கிரகம், பார்வை செய்த கிரகம் ஆகியவற்றை கொண்டு பலன் அறிய வேண்டும்.
எல்லாம் அவன் செயல் என்று பற்று இல்லா நிலையையும்
ஆன்மீக எண்ணத்தையும் வாரி வழங்கும் கேது பகவான்
7 வருடங்கள் சுபத்துவமாக இருந்தால் நல்ல பலனையும்
பாவத்துவமாக இருந்தால்
விரக்தி, பைத்தியம்,வறுமை
தற்கொலை,தொழுநோய்,
நாய்கடி,பாம்புகடி மணமுறிவு
போன்ற கெடுபலனையும் வழங்குவார்.
கேது என்றால் சிதைத்தல் என்று பொருள் கொள்ளலாம் அதாவது எந்த பாவத்தில் உள்ளாரோ அந்த பாவக பலனை குறைக்கும்.
💢கேது எங்கு எப்படி அமர்ந்தால் யோகம்:
🌹லக்னத்துக்கு 3,6,11 ஆம் இடங்களில் கேது அமர்தல்
🌹கன்னி,விருட்சிகம்,கும்பத்தில் கேது அமர்தல்
🌹மேஷம்,கடகம்,சிம்மம்,விருட்சிகம்
தனுசு,மீனத்தை லக்னமாக கெண்டவர்களுக்கு பெரிய பாதகம் இருக்காது.
🌹கேதுவுக்கு இடம் கொடுத்த கிரகம் வலிமை அடைய வேண்டும்
🌹இயற்கை சுபர்களான குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன் (கெடாமல்) கேதுவை பார்வை செய்தல்
💢கேது தரும் தொழில் அமைப்பு
ஒருவருடைய லக்னத்துக்கு
🌷 10மிடத்தில் கேது இருந்தாலோ (அ)
🌷பத்தாமிட அதிபதியுடன் இணைந்து இருந்தாலோ(அ)
🌷பத்தாம் அதிபதி கேதுவை பார்த்தாலோ
கீழ்கண்ட தொழில் செய்தால் வெற்றி பெறலாம்.
வேறு கிரகங்களின் தொடர்பு இருந்தால் சிறிது மாறுபடும்.
இதில் ஆன்மீகம் என்றால் ஆன்மீக சம்மந்தமான அனைத்து விஷயங்கள் அதாவது
யோகிகள்,அருளாளர்கள்,ஆன்மிக பொருள் விற்பனையாளர், கடவுள் சிலை வடித்தல், கோவில் திருப்பணி செய்யும் ஸ்தபதியார்,பூசகர்,பக்தி பாடல் பாடும் பாடகர்... என்று அனைத்து விஷயங்களையும் விரிவாக்கி கொள்ள வேண்டும்.
🌺ஆன்மீகம்
🌺வெளிநாடு
🌺தலை முடி
🌺மருத்துவம்
🌺எலக்டிரிகல்
🌺புலனாய்வு துறை
🌺சன்னியாசம்
🌺போதைப்பொருள்
🌺நூற்பாலை
🌺மாந்தீரிகம்
🌺ஐல்லி
🌺சட்ட விரோத தொழில்
🌺வெடி மருந்து
🌺போதைப் பொருள்
அடிமைத் தொழிலா,சுயதொழிலா என்று கண்டறிந்து செயல்பட்டால் முன்னேற்றம் அடையலாம்.
கேது தசாவால் துன்ப படுபவர்கள் கேதுவின் அதிதேவதையான வினாயகரின் காயத்திரி மந்திரத்தை பாராயணம் செய்தால் கெடுபலன் குறையும்.
மயிலாடுதுறை அருகில் உள்ள கீழ்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் பரிகாரம் செய்து பலன் பெறலாம்.
நன்றி.

இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா?

 இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா?

தெரிந்து கொள்வோம்
33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில்
திருவாரூரில் அமைந்துள்ள,
தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின்
மிகப் பெரிய கோயிலாகும்!
🏵️ 9 ராஜ கோபுரங்கள்,
🏵️ 80 விமானங்கள்,
🏵️ 12 பெரிய மதில்கள்,
🏵 13 மிகப்பெரிய மண்டபங்கள்,
🏵️ 15 தீர்த்தக்கிணறுகள்,
🏵️ 3 நந்தவனங்கள்,
🏵️3 பெரிய பிரகாரங்கள்,
🏵️ 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),
🏵️ 100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,
🏵️ 86 விநாயகர் சிலைகள்,
🏵️ 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.
*திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.*
தெற்கு வடக்காக 656 அடி அகலமும்,
கிழக்கு மேற்காக 846 அடி நீளமும்,
சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை
நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.❗
நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
ஸ்வாமியின் நடனம் அஜபா நடனம்.
ஸ்வாமி திருமேனி தரிசனம் கிடையாது. மார்கழி திருவாதிரை ஒரு பாதமும், பங்குனி உத்திரம் மற்றொறு பாதமும் தரிசனம் கிடைக்கும்.🙏
திருமேனியை யாரும் பார்த்தது கிடையாது. பார்த்தால் கண் குருடாகிவிடும் என்பதால் யாருக்கும் தரிசனமும் கிடையாது❗
அர்ச்சகர்களும் பார்த்தது கிடையாது.
கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
*கோயில் ஐந்து வேலி,*
*குளம் ஐந்து வேலி,*
*செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி*
என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).
கோவிலின் மொத்த பரப்பளவு 33 ஏக்கர் ஆகும். அதாவது பதினாலு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து நானுற்று என்பது
(1437480 ) சதுர அடியாகும்
இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.
*சிவாயநம திருச்சிற்றம்பலம்.*

பல் வலியை நொடியில் போக்க

தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்!
நம்மில் சிலருக்கும் திடீரென அடிக்கடி பல்வலி வருவதுண்டு
நம் பற்களின் இரண்டு பாதுகாக்கும் கவசங்கள் இனாமல், டென்டின் உள்ளது. இரண்டையும் தாண்டி சொத்தை ஆழமாக பரவும் போது வலி ஏற்படுகின்றது. இதனை எளிதில் சரி செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
• மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.
• ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில் தடவி, இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும்.
• பல் வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று தின்னவும்.
• பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி பல் தேய்க்க, பல் ஆட்டம், பல் சொத்தை, பல் கறை, பல்லில் இரத்தம் வடிதல் எல்லாமே தீரும்.
• ஆலமரப் பாலை பற்கள் மீது தடவினால் பல் ஆட்டம் நிற்கும்.ஆயில் புல்லிங் தினம் செய்ய பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா தொற்றிலிருந்து விடுபடலாம்.
• கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட பல் பலப்படும். நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பவும்.ஒமத்தை நீர்விட்டு அரைத்து களி போல் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப்போடவும்.
• ஒரு பல் பூண்டை நசுக்கி, வலி உள்ள இடத்தில் வைக்கலாம். இதுபோல் கிராம்பை நசுக்கியும் வைக்கலாம்.)
• வாகை மரப் பட்டையை எரித்துப் பொடித்து பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல் வலி குணமாகும்.கருவேலம் பட்டைப் பொடியால் பல் துலக்கவும்.
• மாசிக்காயைத் தூளாக்கி, நீரில் கொதிக்க வைத்து கொப்பளிக்க ஈறு பலமடையும்.அசோக மரப் பட்டைப் பொடியுடன் உப்பு சேர்த்து விளக்கவும்.
• கடுகை பொடி செய்து வலிக்கும் இடத்தில் பற்று போடவும். வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவவும்.
நன்றிகளும்
பிரியங்களும்.

நாளை தேய்பிறை பிரதோஷம் 29.03.2022

 நாளை தேய்பிறை பிரதோஷம் 29.03.2022

செவ்வாய் பிரதோஷம்
செவ்வாய் கிழமை செய்யும் பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும்... செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருணம் அதாவது கடன் தொல்லைகள் மற்றும் ரணத்தை அதாவது உடல் பிணிகள் நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு இதனால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு மற்றும் சகோதர தோஷமும் விலகும்.
சந்திரன் காரகத்துவமான ஜலத்தில் கடகத்தில் செவ்வாய் நீசம் செவ்வாய் பிரதோஷத்தன்று ஜல பொருட்களான பால் பன்னீர் கொண்டு நந்தி தேவருக்கும் சிவபெருமானுக்கும் அபிஷேகம் செய்திட பகைவர்கள் விலகுவர் சகோதர ஒற்றுமை மேலோங்கும் கடன் தொல்லைகள் நீங்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும் நில மனை சேர்க்கைகள் உண்டாகும்.

கர்ம வினை

 *கர்ம வினை !*

உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு.
ஆனால் எதோ ஒரு *குறிப்பிட்ட* நபர் நமக்கு *துணைவராக* அல்லது *துணைவியாக*
*அமைவது* ஏன் ?
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும்
ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.
அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.
சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.
சிலருக்கு நல்லது செய்கிறோம்.
பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக
நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம்.
இந்த கொடுக்கல் வாங்கலே *"ருண பந்தம்"*
எனப்படுகிறது.
*சிலருடைய* உறவுகள் *ஆனந்தத்தைக்* கொடுக்கிறது.
சிலருடைய வருகை மட்டற்ற *மகிழ்ச்சியை* ஏற்படுத்துகிறது.
சிலர் கூடவே இருந்து *தொல்லைப் படுத்துகிறார்கள்.*
சிலரின் வருகை *துக்கத்தை* ஏற்படுத்துகிறது.
பல சமயங்களில் இது *ஏன்* நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் *பல நிகழ்ச்சிகள்* நடக்கின்றன.
கனவில் கூட காண முடியாத பல *ஆச்சர்யங்கள்* நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது.
*இதற்கெல்லாம்* என்ன *காரணம் ?*
ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?
*நாமே* நம் தாயை, *தந்தையை,*
*சகோதர* சகோதரிகளை, *நண்பர்களை,* *மனைவியை,* *கணவனை,* *பிள்ளைகளை,* *தேர்ந்தெடுப்பதில்லை.*
நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும்
*தானே* நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது.
முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? .
ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய் விடுவர்.
அது இறப்பால் மட்டும் அல்ல , பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில்
#வேறு_பார்வையில் தோன்றுவர்.
எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது.
அது என்ன ?
*சமன்* செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும்
*கர்ம* கதிகளின்
*எச்சங்களே* அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ?
இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய *"கர்ம வினை"* தான் .
இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம்.
அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம்.
அந்தக் கூட்டின் பெயரே *"சஞ்சித கர்மா"* எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே *'பிராரப்தக் கர்மா'* எனப்படுகிறது.
இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல்
நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.
நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.
இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம்
ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக்கொடுக்கிறோம்.
இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.
இது தவிர *'ஆகாம்ய கர்மா'* என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது.
யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது.
அவரவர்கள் செய்வினையின்
பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும்
வாழ்க்கை அமையும் .
துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே.
இதைத் தான் _"தீதும் நன்றும் பிறர் தர வாரா"_
என நம் மதம் போதிக்கிறது.
நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு
நாம் மட்டுமே பொறுப்பு.
அப்படி என்றால்
*ஆகாமி கர்மா* நம்முடைய கையிலேயே இருக்கிறது.
இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது.
நீ செய்யும் நற்செயல்களையும், வினைச் செயல்களையும் நீ மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால்,
நீ என்ன செய்யப் போகிறாய் ?
எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ?
எது போன்ற வாழ்க்கைத் தடத்தை
ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது
உனக்குப் புலப்படும்.
இதை போதிப்பது தான் *"ஆன்மீகம்"*
பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.
பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும்
தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது.
ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்.
அதேபோல பெரும் பணக்காரர்களையும் *'துக்கங்கள்*' விடுவதில்லை.
சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic-
ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை
உண்ண முடியாது.
பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனதுகால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.
'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்'
'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'

நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச்
செய்வது மட்டுமே. _பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்._
நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் _துன்பத்தையும் சோகத்தையுமே_ பலனாகப் பெறுகிறோம்.
_எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை._
_நமக்கு நடக்கும் நடக்கப்போகும்_ *நல்லதை* யாராலும் *கெடுக்க* முடியாது. அதேபோல் *தீமையையும்*
*கொடுக்க* முடியாது

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...