Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Tuesday, March 5, 2024
வணிகர் என்றால் என்ன ???
Saturday, March 2, 2024
300 வருடங்களுக்குப் பிறகு; அபூர்வ மகா சிவராத்திரி
Thursday, February 22, 2024
வெள்ளியங்கிரி மலை பிப்ரவரி மாதம் 1 தேதி முதல்'மே மாதம் 31ம் தேதி வரை
தென் கைலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை சிவ அடியார்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 12-2-2024 திங்கள் கிழமை மாலை 3 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக வெள்ளியங்கிரி மலை நடை திறக்கப்பட்டது வெள்ளியங்கிரி மலை பூண்டி கோவில் பெரிய பூசாரி சிவ நாகராஜ் ஐயா அவர்களின் முயற்சியால்.சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம். வனத்துறைக்கு கண்டிப்புடன் கோவில் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது.பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். (பிப்ரவரி மாதம் 1 தேதி முதல்'மே மாதம் 31ம் தேதி வரை) பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
உள்ளங்கை ரகசியம் என்ன?
உள்ளங்கை ரகசியம் என்ன?
கொடுக்கப்பட்ட சக்திகளும். வேண்டி பெறப்பட்ட சக்திகளும். பூமியில் தோன்றுகிற அனைத்தும் இந்த பூமிக்கே சொந்தம் . அன்னை பூமாதேவி அனைத்தையும் ஆளக்கூடியவர், தாங்கக்கூடியவர், எந்த சக்தியையும் இழக்கக்கூடியவரும் இவரே . அழியும் எதுவும் மண்ணுக்கே போகும், மண்ணில் விளைந்ததை உண்டு வாழும் மனிதனாயினும் மண்ணுக்கே சொந்தம், ஆத்மா என்னும் நாராயணன் உள்ள வரை பூமாதேவி மனிதனை தின்னாமல் விட்டு வைப்பார் , (ஆத்மா பிரிந்த பின் உடல் எரிந்தாலும் சாம்பல் மண்ணில்தான் புதைய வேண்டும்) அதுசரி அன்னை பூமாதேவியை பற்றி இங்கு கூற காரணம் என்ன என்று கேட்கத் தோன்றும் அல்லவா அறியுங்கள் - அன்னை பூமாதேவி சத்தியத்திற்கு கட்டுப்பட்டவள் எதையும் நாம் கொடுக்காமல் எடுக்கமாட்டாள்,
வாண சக்தியை மட்டும் நாமறியாமலேயே எடுத்துக்கொள்வார், (அதனால் தான் பிரபஞ்ச ஆற்றலை பெற்றவர்கள் பாத அணி இல்லாமல் நடக்க மாட்டார்கள்) அன்னை பூமாதேவிக்கு நாமாகக் கொடுக்கக்கூடியதாக ஒருமுறை உண்டு அது நம் இரு உள்ளங்கையையும் நன்கு பதியும்படி பூமியில் வைத்து அழுத்தினாலே நம்மிடம் உள்ள சக்திகளை எடுத்துக் கொள்வார், அது பாவ சக்தியானாலும் சரி. தர்ம சக்தி ஆனாலம் சரி, ஞான சக்தி ஆனாலும் சரி எடுத்துக் கொள்வார், ஒட்டு மொத்தமாக எடுக்காமல் கொஞ்ச கொஞ்சமாக தர்மத்திற்கு கட்டுப்பட்டவர் போல் எடுத்துக்கொள்வார், பாவத்தினால் அதிகமாக சிரமப்படுவர்கள் ஆலயத்தில் இரு உள்ளங்கையையும் வைத்து தன் பாவத்தை இறக்கி கொள்ள ஒரு கல் பூமியோடு பதித்து வைத்திருப்பார்கள், அதற்கு பலிபீடம் என்று பெயர், (இன்றைக்கு இந்த பலிபீடத்திற்கு ஏதேதோ விளக்கம் கூறுகிறார்கள், நம் கர்ம வினை பாவத்தையெல்லாம் பலி செய்யும் இடமாகும், மனதால் விடமுடியாத பாவங்களை தன் உள்ளங்கையால் விடமுடியும், மனதால் தாங்க முடியாத துன்பத்தை தன் உள்ளங்கையால் பூமிக்கு கொடுத்து ஆறுதல் தேட முடியும், எனவே ஆலயங்களில் இந்த
பலிபீடம் முக்கியம் வாய்ந்ததாகும், அதே போல் சாப்பிடும்போது நம் கையை குறிப்பாக உள்ளங்கையை பூமியில் ஊன்றி சாப்பிட்டால் நம் சத்து முழுக்க பூமியில் உறிஞ்சப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும், அதே போல் சாமி கும்பிட்டபின் விழுந்து கும்பிட்டபின் இரு உள்ளங்கையையும் பூமியில் ஊன்றி எழுந்தால் அந்த ஆலயத்தில் பெற்ற சக்திகள் அனைத்து பூமியால் உறிஞ்சப்பட்டு வெறும் ஆளாய் வீட்டிற்கு வருவோம், ( விழுந்து கும்பிடும்போதும். இரு உள்ளங்கையும் ஒன்றோடு ஒன்று ஒட்டினார்போல் கை வைத்து வணங்கி பின் கால் பலத்தால் எழலாம் அல்லது கை விரல்களின் பின்முட்டியால் ஊனி எழலாம்) பலரும் பல புண்ணிய ஆலயம் சென்று வந்தாலும் பலனில்லாமல் போவதற்கு காரணம் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு விழுந்து வணங்கி எழும்போது உள்ளங்கை ஊனி சக்தியை பூமிக்கு தாரை வார்த்து கொடுப்பதே அதற்கு காரணமாகும், ஆலயம் சென்றவுடன் பலிபீடத்தில் உள்ளங்கை வைத்து பாவத்தை இறக்கிவிட்டால் மீண்டும் ஆலயம் விட்டு திரும்பும்போது எங்கும் கை வைக்கக்கூடாது, உள்ளங்கையில் அவ்வளவு சக்தி நிறைந்துள்ளது .
மங்களவன் என்னும் செவ்வாயின் இடம் இந்த உள்ளங்கை தான் . அதில் எதை செய்தாலும் பெருகும், ஆலயத்தில் பிரசாதம். தீர்த்தம். விபூதி குங்குமம் அனைத்தும் உள்ளங்கையால் வாங்கியே சாப்பிடுகிறோம், ( நுனி விரலாம் சாப்பிடமாட்டோம் அது தவறு ) விபூதியாய் இருந்தாலும் விரலால் எடுத்து இட்டுக் கொள்ளாமல் அப்படியே எடுத்து பூசிக் கொள்ளும் பழக்கம் அப்போதைக்கு உண்டு .
இன்றைய காலத்தில் அலங்கார முகத்தில் விபூதி பூசினால் அழகு போய்விடும், விரலால் விபூதி வைத்து உள்ளங்கை சக்தியை பெற தவறுகின்றனர், தீர்த்தம் மட்டும் தான் உள்ளங்கையால் சாப்பிடுகிறார்கள், ஆக உள்ளங்கை மூலம் அன்னை பூமாதேவி சக்தியை உறிஞ்சி விடுவாள், அநாவசியமாக சத்தியம் பூமியில் அடித்து செய்யக்கூடாது என்பார்கள், அதுவும் இதற்குத்தான், இந்த பூமிக்கும் நமக்கும் சம்மந்தப்பட்ட உடல் பாகம் நம்முடைய மோதிர விரல்தான் (மற்ற பாகங்கள் உள்ளே மறைந்துள்ளன), நம் முன்னோர்கள் ஒரு உபாயத்தை கண்டுணர்ந்தனர், மோதிர விரலில் ஒரு கட்டு இருந்தால் நம் உள்ளங்கை பூமியில் பட்டாலும் சக்தி விரையமாகாது என்பதை கண்டுணர்ந்தனர், அதன்படி மோதிரம் அணியும் முறை வந்தது . இந்த விரலில் கட்டு இல்லாமல் ஆகாய சக்திக்கு நாம் எதையும் கொடுக்க முடியாது . அதனால் தான் நம் பித்ருக்களுக்கு புண்ணியதானம் கொடுக்கும்போது தர்பையால் பவித்ரம் (மோதிரம்) மோதிர விரலில் அணியும் முறையும் கூடுதலாக கையாளப்பட்டது . கை மணிக்கட்டில் கட்டுப் போட்டாலும் பூமி நம் சக்தியை உறிஞ்சாது . பூமி நம் சக்தியை உறிஞ்சுவதால் பாவம் மட்டும் போனால் பரவாயில்லை, புண்ணியமும் சேர்ந்து போய்விடும், இதுதான் பிரச்சனை, எனவே தான் பெரியவர்கள் மோதிர விரலில் ஒரு வளையமாவது இருக்க வேண்டும் என்றார்கள், சக்திகளை தூண்டக்கூடியதும் வெளியேற விடாமல் தடுக்கக் கூடியதும் மோதிர விரலே . அது நிலம் என்றும் சூரியன் என்றும் பெயர் உண்டு,
பெண்களுக்கும் ஆண்களுக்கும் மெட்டி கால் மோதிர விரலில் அணியும் பழக்கமும் இந்த கை மோதிர விரல் பழக்கத்தால் வந்ததே, எனினும் உள்ளங்கால் பூமியில் பதிவதால் சக்தி ஆன்மிக சக்தி பெற்றவருக்குத்தான் உறிஞ்சும், சாமான்யருக்கு உறிஞ்சாது . அப்படி இருந்தும் ஏதாவது ஒரு காலில் கருப்பு கயிறு. கால் மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள், சாமான்யர்கள் மெட்டி போட்டுக் கொள்வார்கள் அல்லது இருக்கப்பட்டவர்கள் கையில் மோதிரம் அணிந்து கொள்வார்கள், இப்பழக்கமெல்லாம் இன்று நாகரிக விஷயமாக பலமாற்றங்கள் உண்டானாலும் பூமி தன் சக்தியை குறிப்பாக சுப சக்தியை உறிஞ்சாமல் பாதுகாக்க பயன்கொள்ளப்பட்டதே ஆகும் .
இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க ஆலயத்தில் பலபீடம் மூலம் பாவத்தை போக்க எத்தனித்தாலும். சத்தியம் செய்வதானாலும். மாந்திரிக சக்தி வேலை செய்ய வேண்டுமானாலும் கை. கால். மணிக்கட்டுகளில் எந்த மோதிரமும் இருக்கக் கூடாது இல்லையேல் பலன் அளிக்காது , பெண்கள் மெட்டியை கழட்ட அஞ்சுவார்கள், அதனால் அக்காலத்தில் புது மெட்டி மாற்றும் தருவாயில் பலிபீட பிராத்தனை செய்து வணங்கி பின் புது மெட்டியை அணிந்து கொள்வார்கள், யாவரும் இந்த முறையை கடைபிடிக்கலாம், கைகளில் சூரிய விரலில் மோதிரம் இருந்தால் எதிரியின் மாந்திரிக சக்தி கூட அவ்வளவு எளிதில் வேலை செய்யாது , மணிக்கட்டில் செம்பினால் ஆன ஒரு வளையம் அணிந்திருந்தால் ஒருவர் சாபம் கூட எளிதில் அண்டாது , இது ஆண்களுக்கு பொருந்தும், பெண்களுக்கு காலில் தண்டை அல்லது கொலுசு அணிவதால் தடுக்கலாம், அக்காலத்தில் ஒரு காலிலாவது வசதிக்கேற்றவாறு தண்டை அணியும் பழக்கம் இருந்தது , இந்த பழம் பெரும் தகவலை உங்களுக்கு கூற காரணம் இந்த முறையில் பலர் தான் பெற்ற சுப சக்திகளை விரையம் செய்கின்றனர், அதற்காகவே இந்த எச்சரிக்கை .
உள்ளங்கை ஒரு வசிய பீடம் போன்றது , ஒருவரோடு ஒருவர் கை குலுக்கினால் கூட சக்தி பரிமாற்றம் உண்டாகும், கோபமாக கை குலுக்கினால் வக்ர குணம் உண்டாகும், அன்பாய் குலுக்கினால் நட்பு வசியமாகும், அதே போல் தூங்கும்போது கன்னத்திலோ. தலையிலோ உள்ளங்கை வைத்தால் மூதேவி நம்மிடம் குடிகொள்ளும், அதுவே யோசனை செய்யும்போது உள்ளங்கை தலையில் வைத்தால் ஞானம் பெருகும், சூரியனுக்கு நேராக நம் உள்ளங்கையை காண்பித்து பின் உச்சந்தலையில் வைத்தால் ஆற்றல் சக்தி உண்டாகும், உள்ளங்கையில் தண்ணீர் ஊற்றி ஆசீர்வதித்தாலும் பலிக்கும், சாபம் கொடுத்தாலும் பலிக்கும், ஏன் இந்த உள்ளங்கைக்கு மட்டும் இத்தனை சக்தியெனின் முப்பெரும் தேவியரும் சங்கமிக்கும் இடம் இவ்விடமே, இந்த மூவருக்கும் பூமாதேவியுடன் இணையும்போது உடல் சக்தி உறிஞ்சப்படும் இதன் மூலமாகவும் சுப சக்தியான மகாலட்சுமியை இழக்கக்கூடும் கவனம் .
புராணத்தில் கூட ஸ்ரீ மகாவிஷ்ணு மோதிரத்தை பூமியில் வைத்து வைகையை உற்பத்தி செய்ததாக புராணம் கூறுகிறது, ஏனெனில் மோதிர விரல் பூமியுடன் தொடர்பு உள்ளதை சுட்டிக்காட்டுகிறது, உள்ளங்கை யார் தலையில் படுகிறதோ அது தீட்சையாகும், அதனால்தான் அநாவசியமாக யார் தலையிலும் கை வைக்கவோ. விடவோ கூடாது என்பார்கள், உள்ளங்கையில் விட்டு குடிக்கும் நீர் கூட நோயை போக்கும் சக்தியை கொடுக்கும் மந்திர நீர் ஆகும், தர்மம் கூட உள்ளங்கையில் இட்டால் கொடுத்தவரை விட வாங்கியவருக்கு சக்தி போய்விடும், அதனால் தான் பாத்திரத்தில் தான் பிச்சை இட வேண்டும், கையில் தரக்கூடாது என்பார்கள், ஒரு தாயின் கையால் நம் உள்ளங்கையால் அன்னம் வாங்கி சாப்பிட்டாலோ. பணம் பெற்றாலோ சக்தி பன்மடங்காக பெருகும் என்பதால் தாயின் கையால் சாப்பிடுவார்கள், காரணம் சக்தி கூடும் என்பதால் தான் (இந்த ரகசியத்தை அறிந்த காலத்தில் வெறும் கையாலே அன்னமிடும் பழக்கம் இருந்தது,
அன்னவெட்டியெல்லாம் அன்னியருக்குத்தான், இன்று மகத்துவம் புரியாமல் எல்லாமே ஸ்பூனாகி போனது), எவர் கையால் நாம் உணவு வாங்கி சாப்பிட்டாலும் நாம் அவருக்கு துரோகம் செய்தால் நாம் அழிந்து போவோம், காரணம் உள்ளங்கை சத்தியத்திற்குரியது , அதனால் அன்னம் இடும்போது அந்த உள்ளங்கையால் எடுத்த அன்னத்தில் சத்தியம் கலந்திருக்கும் நாம் இட்டவருக்கு கட்டுப்பட்டவராவோம், அதனால் அவர் இடும் சாபமோ நாம் அவருக்கு செய்யும் துரோகமோ நமக்கு துன்பத்தை தருகிறது. அக்காலத்தில் இதற்காக பாடல்களே கூட பாடப்பட்டது . அன்னமிட்ட வீட்டில் கண்ணக்கோள் சாட்டினாள். மண்ணோடு மண்ணாக போவாய் என உரைத்தனர். இந்த சக்தி தாய்க்கு அதிகம் இருக்க காரணம் தன்பிள்ளைகளுக்கு அதிகமாக அன்னம் படைக்கும் வாய்ப்பும், தலையில் கை வைக்கும் வாய்ப்பும் அதிகமாக ஒரு தாய்க்கே கிடைக்கிறது . அதனால் தான் தாய் மகனை சபித்தாள். அப்படியே பலிக்கிறது . இவ்வளவு மகத்துவம் மிக்க உள்ளங்கை பூமியில் பட்டால் மட்டும் அனைத்தும் பறிபோய்விடும். ஏன் தெறியுமா இந்த உடல் வளர்ந்தது இந்த பூமியால்தான். நம்மை சுமப்பதும் இந்த பூமிதான். எனவே நம் சக்தியை உறிஞ்சும் அத்தனை உரிமையையும், பூமாதேவிக்கு உண்டு.
எனவே இந்த சக்தியை கொடுப்பதும் தக்க வைத்துக் கொள்வதும் நம்மிடம்தான் உள்ளது . பூமியில் உள்ளங்கை பதியும் போது (ஆலய பலிபீடம் தவிர்த்து மற்ற இடங்களில்) முதலில் நம்மிடம் இருந்து வெளியேறும் சக்தி மங்களகரமான சக்திகளே. காரணம் பூமாதேவிக்கும் மங்களசக்தி மகாலக்ஷ்மிக்கும் நெருங்கிய உறவு உண்டு. அதுவே காரணமாகும். இந்த விரிவான அத்தியாயம் ஏனெனில் இந்த முறையிலும் நீங்கள் செல்வத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே கூறியுள்ளேன். வளம் பெறுவீராக
Sunday, February 18, 2024
தமிழ் அறிவோம் -1
Thursday, February 15, 2024
ஆதி தீ யக வந்தவனே ஆத்தியப்பா
ஆதி தீ யக வந்தவனே ஆத்தியப்பா
3000 திவ்யபிரபந்த வரலாற்று ஆய்வு பயணம்
அய்யா !!
கங்கையில் நீராடுவது என்பது நிச்சயமாக அனைவராலும் முடியாது
துரோணர் செய்த தவறு
பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய "ஸ்ரீவாஞ்சியம்
Monday, February 12, 2024
everything is God in Hindu mythology
Saturday, February 10, 2024
2000 வருடங்களுக்கு முன்பாக உண்டு உறைவிட பள்ளி இருக்கிறதா?
Thursday, February 8, 2024
தை பூசம் - 25.01.2024
தைப் பூச தாண்டவம்
ஆனந்த நடனம் காண்போம் ! ஆனந்தம் அடைவோம் !!
(சிதம்பரம் சித்ஸபையில் நடராஜர் நடனமாடிய நாள் - தை பூசம் - 25.01.2024)
ஓம் க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதி வாமபாகம்
சதாசிவம் ருத்ரம் அனந்த ரூபம் சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி ||
எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி
எங்குஞ் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாயிருத்தலால் எங்கெங்குந்
தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.
- திருமந்திரம்
பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் பெரும் தவம் செய்து வேண்டியதற்கு இணங்க, சிதம்பரத்தில் தை மாதம், பூச நட்சத்திரம், பெளர்ணமி, பகல் நேரம் கூடிய நன்னேரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் கொண்டருளினார்.சிதம்பரம் - மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் - இம்மூன்றினாலும் சிறப்புற்ற ஸ்தலம்.
தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம்.
சிதம்பர க்ஷேத்ரத்தின் தச (10) தீர்த்தங்களுள் முக்கியமானது. காசியில் உள்ள கங்கையை விட மேலானது. மிகவும் புனிதம் வாய்ந்தது. சிவசக்தி ரூபங்கள் இணைந்தது. ஸ்ரீ நடராஜப் பெருமானின் தங்க மேனியில் தவழ்ந்த அபிஷேக தீர்த்தம் சேரும் இடமாதலால், சிவகங்கையே பொற்குளம் போல் காட்சியளிக்கின்றது. இங்கு ஸ்நானம் செய்வதால் பொன்னார் மேனியனின் திருவருளால் தேகம் புனிதமடைகின்றது. கெளடதேசத்து சிம்மவர்மன் உடல் குறை நீங்க இங்கு ஸ்நானம் செய்து தங்க மேனியனாக ஹிரண்யவர்மனாக மாறினான்.
இக்குளத்தின் வருண (மேற்கு) திசை வாயிலில், ஸ்வாமி தீர்த்தம் கொடுப்பதே தைப் பூச தினத்தின் மிக முக்கிய நிகழ்வு.ஸ்தலம் : சிதம்பரம்.
சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த ஸ்தலம். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது. சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம்.
மூர்த்தி : ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.
வேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள் போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.
புராண விளக்கம் :
ஒரு சமயம், மஹா விஷ்ணு யோக நித்திரையிலிருந்து பரவசத்துடன் எழ, அவரைத் தாங்கிய ஆதிசேஷன், திடீர் மகிழ்விற்கான காரணம் கேட்க, விஷ்ணு, சிவபெருமானின் ஆனந்தக் கூத்தினை அனுபூதியாக விளக்க, தானும் அக்காட்சியைக் கண்டுணர வேண்டும் என வரம் கேட்க, விஷ்ணு அருள்பாலிக்க, ஆதிசேஷன், அத்ரி ரிஷியின் பத்னியாகிய அநசூயயின் குவிந்த கைகளில் (அஞ்சலி -குவிந்த கரம்) நாகமாக வந்து, பாதங்களில் விழுந்ததால் பதஞ்சலி என பெயர் பெற்று, தில்லை ஸ்ரீ மூலநாதரை, மத்யந்தின மகரிஷியின் மகனாகிய ஸ்ரீ வியாக்ரபாதர் என்ற புலிக்கால் உடைய முனிவருடன் வழிபாடாற்றி வந்தார்.
தேவர்கள், ரிஷிகள், கணங்கள் வேண்டியதற்கு இணங்க, முன்னர் வரம் அளித்தபடி, சிவபெருமான் ஆனந்த நடனக் காட்சி நல்க பூலோகம் வரும் நேரம் வந்தது.தை மாதம் - மகிழ்ச்சி பொங்கும் மாதம். சூரியன் தனது அயனத்தை (பாதையை) மாற்றும் மாதம். யோக குருவான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு உரிய நக்ஷத்திரம் பூசம். ஆடுவதும் (dynamic) அவரே, அமைதியும் அவரே (static) என்றுணர்த்தவே, ஆட்டமாடி ஆட்டுவிக்க, ஆடாமல் ஆட்டுவிக்கும் யோக தக்ஷிணாமூர்த்திக்குரிய நாள், நக்ஷத்திரம், பகல் நேரம் என உத்தமமான வேளை வந்தது.தில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க, ஸகல தேவர்களும், அனைத்து கணங்களும் உடன் வர, இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னக பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவது பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.ஆனந்த நடனமாடிய அம்பலவாணர், தவம் செய்த பதஞ்சலியை நோக்கி என்ன வரம் வேண்டும் என வினவ, பதஞ்சலியோ தாம் கண்ட இத்திருக்காட்சியை எதிர்காலத்தில் அனைவரும் காண வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில், நடராஜ ராஜர் பொன்னம்பலத்தின் எப்பொழுதும் பதஞ்சலியாமல் (பாதம் சலிப்படையாமல்) ஆடவேண்டும் என பெருவரம் கேட்டார். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றௌ உடன் அருளும் குஞ்சிதபாதர், பதஞ்சலிக்கு அவ்வண்ணமே அருள்பாலித்தார்.
நடராஜராஜரின் அற்புத ஆனந்த நடனம் இன்றும் என்றும் நடக்கிறது.
அண்டத்தின் அசைவைக் காட்டுவது ஆனந்த நடனம். இந்நடனத்தை வேதாந்த சித்தாந்தங்கள் மிக அற்புதமாக விளக்குகின்றன. உருவம் (ஸ்ரீ நடராஜர்), அருவம் (சிதம்பர ரகசியம்), அருவுருவம் (ஸ்படிக லிங்கம்) என மூன்று வடிவங்களிலும் அமைந்து, மும்மலங்களை (ஆணவம், கண்மம், மாயை) அகற்ற காட்சி தருகின்றார். அசைவதும், அசையாததும், இரவும், பகலும், ஒலியும், ஒளியும், வெம்மையும், குளிரும் அனைத்தும் அவரே.அணுவுக்குள்ளும், அண்டசராசரமெங்கும் நடமிடுபவரும் அவரே. பக்தர்களின் வேண்டுதல்களை செவி கொடுத்துக் கேட்டு வரமருளும் தோடுடைய செவியன். எவரும் விரும்பாத ஊமத்தம்பூ, பாதி வளர்ந்த சந்திரன் போன்ற குறைகள் கொண்ட அனைத்தையும் தாம் ஏற்றுக் கொண்டு, தம்மை தரிசிப்பவர்களுக்கு அருளை நிரம்ப வாரி வழங்குபவர்.தைப் பூச தினத்தில் பஞ்ச மூர்த்தி வீதியுலா வந்து, பகல் நேரத்தில், சிவகங்கைக் குளத்தின் மேற்கு வாசலில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி அருகிருக்க, ஸ்வாமி தீர்த்தவாரி (அனைவருக்கும் அருளுதல்) நடைபெறும். மதிய வேளையில் கனகசபையில் தரை முழுவதும் அன்னம் நிரப்பி, ஸ்ரீ நடராஜ ராஜருக்கு நிவேதனம் செய்து, அனைவருக்குமான அன்னதான நிகழ்ச்சி நடைபெறும்.
தைப்பூச அன்னதான பாவாடை ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகின்றது. எதிரிலிச் சோழன் குலோத்துங்கன் சிவபாதசேகரன் எனும் சோழ மன்னன் தைப்பூச அன்னப்பாவாடையை நிகழ்த்தினான் என்று பழங்கால செப்பேடு தெரிவிக்கின்றது.தைப்பூச தினத்தில் சிவகங்கையில் ஸ்நானம் செய்வதால், பாபங்கள் அனைத்தும் நீங்கி, பெரும் செல்வம் மற்றும் வேண்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
தைப்பூச நன்னாளில் சிவகங்கையில் நீராடி, ஆனந்த நடனமிடக் காரணமாகிய ஸ்ரீ மூலநாதரையும், பொன்னம்பலத்தில் விளங்கும் ஸ்ரீ நடராஜ ராஜரையும் தரிசித்து பேரின்பப் பயன்பெறுவோம்.
ஶ்ரீவானமாமலை திவ்ய சேத்திரத்தில் உள்ள எண்ணை கிணறு
கீழே படத்தில் நீங்கள் காண்பது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா ஶ்ரீவானமாமலை திவ்ய சேத்திரத்தில் உள்ள எண்ணை கிணறு
ஆகா இது நீங்கள் நினைப்பது போல் அரபுநாட்டு எண்ணை கிணறல்ல
வானமாமலை திவ்யதேச பகவானுக்கு தினமும் சாற்றுபடி (அபிஷேகம்) ஆகும் தைலகாப்பு ( நல்லெண்ணை அபிஷேகம்) தேக்கி வைக்கபடும் கிணறு போன்ற ஒன்று
அதாவது பகவான் ஶ்ரீவானமாமலை தெய்வநாயக பெருமாள் ஜீயர்ஊற்றில் (சேற்று தாமரை என்னும் குளத்தில் உள்ள ஒரு இடம்) ஸ்வமாயாக தோன்ற திருவுள்ளம் கொண்டு பகவானே கருடன் மூலம் காட்டி கொடுத்த (ஸ்வயம்வக்த சேத்ரம் மொத்தம் 8 அந்த எட்டில் முதன்மையான ஸ்தலம் நம் வானமாமலை) இடத்தை தோண்டும் போது தவறுதலாக தோண்ட உபயோகித்த ஆயுதம் பகவான் தலையில் பட்டு அதன் காரணமாக பகவான் தலையில் இருந்து வடிந்த திரவத்தை தடுக்க எண்ணி அவருக்கு சிறப்பு தைலம் சாற்ற
அன்றுமுதல் இன்றை வரை பகவானுக்கு தினமும் சாற்றுபடி ஆகும் தைலம் மற்றும் பால் இளநீர் போன்ற இதர அபிஷேக தீர்தங்கள் கோயில் கருவரை கோமுகி வழியாக உட்பிராகரத்தில் இருக்கும் ஶ்ரீராமர் சன்னதி அருகே வந்து சேரும் அந்த தைலத்தை தகர டப்பாக்களில் பிடித்து இந்த கிணற்றில் (கிணறு போன்ற இடத்தில்) கொட்டி வைத்து காலம் காலமாக பாதுகாக்க படுகிறது இதனையே இவ்வூரில் எண்ணைகிணறு என பழங்காலத்தில் இருந்தே அழைக்கின்றனர்
இந்த பகவானுக்கு அபிஷேகம் செய்து சேர்த்து வைக்கும் எண்ணை கிணற்றுக்கு சில வருடம் முன்பு வரை மேற்கூரை கிடையாது ஆகையால் வெயில் மழை என இதன் மேல் பட்டு பட்டு இந்த எண்ணை காலப்போக்கில் இயற்கையாகவே மேலும் மேலும் பக்குவமடைவதால் சிறந்த மருத்துவ தைலமாக மாறி விடுகிறது இதனை சஞ்சீவினி தைலம் ( எண்ணை) என்பர்
அதாவது இந்த எண்ணையை ஒருமண்டலம் உடலில் நன்கு தெப்ப தெப்ப தேய்த்து உடலை நன்கு ஊரவைத்து நீராடிவர உடலில் உள்ள பல நேரடி மற்றும் மறைமுக வியாதிகள் குணமாவதாக அதீத நம்பிக்கை மற்றும் பலரது அனுபவமும் கூட
இந்த தைலத்தை தினமும் ஒருசிறு அளவில் உள்ளுக்கு உட்கொண்டு வர உடலின் உள்ளே ஏற்பட்ட பல தீராத உடல் வியாதிகள் தீருகிறது என்பது நம்பிக்கை பலர் அனுபவத்திலும் கண்டு உள்ளனர்
கோயிலிலேயே இந்த தைலம் சிறு சிறு பாட்டிலில் கிடைக்கிறது (விலை ₹25/- என நினைக்கிறேன் முன்பு ₹15 ஆக இருந்து)
தற்போது இந்த எண்ணை கிணற்றுக்கு மேல் வெளிச்சம் படுமாறு வெள்ளை நிற கூரை வேய்ந்து உள்ளதால் மழைஜெலம் விழுவதில்லை சூரிய கதிரும் முன்புபோல் விழுவதில்லை
பகவான் அபிஷேக தைலம் கோமுகியில் இருந்து மோட்டார் மூலம் கிணற்றுக்கு செல்கிறது
ஆனாலும் இதன் மருத்துவகுணம் இன்றும் மாறவில்லை
பகவானுக்கு அனுதினமும் நடக்கும் (21/2 லிட்டர் தைலம் கொண்டு) தைல காப்போடு அன்றைய தினம் ஏதாவது அபிமானிகள் பக்தர்கள் தங்களது பிறந்தநாள் திருமணநாள் அல்லது உறவினர் நண்பர் மற்றும் தங்களது குழந்தைகளின் நட்சத்திரம் போன்ற வைபவத்துக்காக பிரார்தனை செய்து காணிக்கையாக தரும் எண்ணையை (கோவிலில் பணம் கட்டிவிட்டால் அவர்களே நல்ல செக்கில் உருவாக்கபட்ட நல்எண்ணையை வாங்கி ஸ்டாக் வைத்துள்ளனர் அதில் இருந்து தேவைக்கு எடுத்து கொள்வர்) கொண்டும் தைல காப்பு நடைபெறும்
இது போக வருடத்துக்கு தற்காலத்தில் சில வருடங்களாக 6 முறை ஒருகோட்டை (256 லிட்டர்) எண்ணையால் அபிஷேகம் நடைபெறும் இதனை ஒருகோட்டை எண்ணை காப்பு என்பர்
இந்த வருடம் இந்த தை மாதம் அமாவாசை (01/2/2022 திங்கட்கிழமை) அன்று இவ்வூர் அதாவது வானமாமலை திவ்யதேச அபிமானிகள் சிஷ்யர்களால் இன்றைக்கு சுமார் 43 ஆண்டுக்கு முன் வானமாமலை மடம் /திருவல்லிகேணி வானமாமலை மடம் ஆகிய இடங்களில் அப்போதைய ஶ்ரீமடத்தின் ஆச்சாரியரான ஶ்ரீவானமாமலை மடம் 27வது பட்டம் ஸ்வாமி ஶ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீசின்ன ராமானுஜ ஜீயர் ஸ்வாமி வழிகாட்டுதல் படி கூடி பேசி வானமாமலை வித்வான்கள் பெரியோர்கள் அன்றய இளைஞர்களால் ஏற்படுத்தபட்ட ஶ்ரீவானமாமலை ஶ்ரீவரமங்கை நாச்சியார் பக்த சபா மூலம் இவ்வருடம் தொடர்ச்சியான 43வது வருட ஒருகோட்டை எண்ணை காப்பு வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது
(01/2/2022) இரண்டு வருடங்களுக்கு முன் திங்கட்கிழமை பல்வ வருட தைமாத ( சேஷம்)அமாவாசை திருவோண நட்சத்திரத்தில் அன்று காலை 8.45 மணி அளவில் வானமாமலை ஶ்ரீமடத்தின் வர்த்தமான ஜீயரான(31வது பட்டம்) ஶ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் முனலனிலையில் நடைபெற தொடங்கும் தைலகாப்பு சுமார் 9.15 மணி அளவில் நிறைவடையும் அதை தொடர்ந்து பால் இளநீர் சந்தனம் திருமஞ்சனதிரவியம் வெள்ளி தங்க குடதீர்தம் என அபிஷேகம் 9.45 வரை நடைபெறும் தொடர்ந்து பகவத்அலங்காரம் அர்ச்சனை தூபதீப ஆராதனை சேவகாலகோஷ்டி ஆசாரியர் மரியாதை ஆசாரியர் மற்றும் கோஷ்டி பகதர்கள் என முறையே தீர்தம் சடகோபம் திருத்துழாய் ஜீரான்னபிரசாத விநியோகம் என வரிசையாக சுமார் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்
அன்றய தினம் ஶ்ரீமடத்தின் ஆச்சாரியரான ஶ்ரீவானமாமலை மடம் 27வது பட்டம் ஸ்வாமி ஶ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீசின்ன ராமானுஜ ஜீயர் ஸ்வாமி தீர்தம் நாள் (ஸ்வாமி பரம்பதித்த திதி) எனவே அன்று ஶ்ரீமடத்தில் விசேஷ சேவகாலம் கோஷ்டி தீர்தம் சடகோபம் மற்றும் அபிமானிகள் பக்தர்களுக்கு விசேஷ ததியாராதனை {தினமும் ததியாராதனை உண்டு ( ஜீயர் மடத்தில் எழுந்தருளி உள்ள காலங்களில்)} என நடைபெறும் (ததியாராதனை அநேகமாக மதியம் 2.30 மணி அளவில் நடைபெறும்)
அன்றய தினம் வானமாமலை ஊரே கோலகாலமாக இருக்கும்
மாலை கோவிலில் ஶ்ரீமடத்தில் அல்லது முன் மண்டபத்தில் விசேஷ உபன்யாசம் மற்றும் ஆடல் பாடல் விசேஷ வாத்யம் மற்றும் இரவு ஶ்ரீதோதாத்ரி ஸ்வாமி கருடவாகனத்திலும் தாயார்கள் முறையே அன்னவாகனம் கிளிவாகனம் என விசேஷபுறப்பாடு கண்டருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்
அனைத்து வைபவங்களும் முடிய மறுநாள் அதிகாலை 2.00 மணி ஆகிவிடும்
முடிந்தால் அன்பர்கள் வந்தருளி கண்டு பகவத் க்ருபைக்கும் ஆசாரியன் க்ருபைக்கும் ஒருமுறையாவது பாத்திரமாகும் படி கேட்டு கொள்கிறோம்
ஜெய் ஶ்ரீராம்!
Featured Post
உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.
நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
korakkar siddhar space Prediction 1,Full moon show on everyday near earth , elephant head bones images show o...