Tuesday, March 15, 2022

பாவமூட்டையை ஏத்தாதே

பாவமூட்டையை ஏத்தாதே!...

பெரியவாளை தர்ஶனம் பண்ண பெரிய க்யூ ! ஒரு பக்தரின் முறை வந்தது. கையில் வைத்திருந்த பூ, பழங்களை பெரியவா பக்கத்தில் இருந்த தட்டில் வைத்துவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்தார்.

"பாரு..... ஒம்பிள்ளேளுக்கும்...ஒன் குடும்பத்துக்கும் ரொம்ப நல்லது பண்றதா நெனைச்சிண்டு, மேல மேல பாபமூட்டையத்தான்.... அவா பேர்ல ஏத்திண்டே இருக்க!..."

பெரியவாளின் குரலில் கண்டிப்புத் தெரிந்தது...!

பக்தர் திடுக்கிட்டுப் போனார்.

"#பெரியவா என்ன சொல்றேள்? மனஸறிஞ்சு நா... எந்தத் தப்பும் பண்ணலியே!..."

"ப்ராஹ்மணனா பொறந்தவன்... அன்னத்தை விக்கப்படாதுன்னு ஶாஸ்த்ரத்ல சொல்லியிருக்கு! நீ... அத.... படிச்சதில்லியோ?....."

பக்தர் முழித்தார்...! ஏனென்றால்... அவர் ஹோட்டல் ஒன்று நடத்திக் கொண்டிருந்தார்.

எனவே...என்ன பதில் சொல்லுவார்?

"ஸெரி ....பொழைப்புக்காக அன்னத்தை விக்கற..ன்னு வெச்சிண்டாக்கூட, அதுக்கு மேலே இன்னொரு பெரிய பாபத்தையும்ன்னா பண்ணிண்டிருக்க!...."

பக்தர் குழம்போ குழம்பென்று.. குழம்பினார்.

"சேத்து வெச்சிருக்கற பணம் போறாதுன்னு... அத... வட்டிக்கு வேற விட்டு, அந்யாயமா பணத்தை வஸூல் பண்றியே! இது... நீ... ஒன்னோட அடுத்த தலைமுறைக்கும்.. சேத்து வெக்கற பாபம்ங்கறத... மறந்துடாத!..."

தான்... பணத்தை வட்டிக்கு விடுவது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? என்று அவர் யோஜனை பண்ணி முடிக்கும் முன், பெரியவா தொடர்ந்தார்....

"...நீ கேக்கற அந்யாய வட்டியை குடுக்க முடியாம, திக்கித் தெணறி ஒருவழியா அதத் திருப்பித் தரச்சே... அவாள்ளாம் வயறெரிஞ்சு ஒன்னையும், ஓங்குடும்பத்தையும் ஶபிக்க மாட்டாளா? சொல்லு...."

பெரியவா இதைச் சொன்னதும், அப்படி ஶாபம் வாங்கிய, பல ஸம்பவங்கள் பக்தரின் மனஸில் ஓடியது.

"இந்த... பாவமூட்டை, ஒன்னோட ஸந்ததிகளோட.. தலைமேலன்னா... ஏறி ஒக்காந்துக்கும்! அத... எப்டி எறக்கப் போற? நீ சேத்து வெச்ச பணம் போறாதா? எதுக்கு... மேல மேல ஆசைப்பட்டு ஒன் ஸந்ததிக்கி...பெரிய்ய... பாவமூட்டையை சேத்து வெக்கற?.." 

பெரியவா முடிக்கவில்லை, பக்தர் அப்படியே 'தடால்' என்று, நெடுஞ்சாண்கிடையாக பெரியவா பாதத்தில் விழுந்து அழுதார்.

"மன்னிச்சிடுங்கோ பெரியவா! இனிமே நா... என்ன பண்ணணும்..ன்னு சொல்லுங்கோ.."

கங்கையாகக் குளிர்ந்தார் பெரியவா....

"ரொம்ப ஸந்தோஷம். நீ இதுவரைக்கும் சேத்து வெச்ச பணம்... ஒன்னோட தலைமொறைக்கு போறும். மொதல்...ல நீ... நடத்தற ஹோட்டலை மூடு! "அன்னம்"ன்னு கேட்டுண்டு வரவாளுக்கு... ஒங்காத்ல ஸாப்பாடு போடு. வட்டிக்கு பணம் குடுத்து வாங்கறத... நிறுத்து!.."

"அப்டியே செய்யறேன் பெரியவா......"

"இரு.இரு. இன்னும் விஷயம் பாக்கி இருக்கே!...இதுவரைக்கும்... நீ வாங்கின வட்டிய....மொத்தமா கணக்கு போடு. எவ்ளோ..பணம் வருதோ....அத.. மொத்தமா எடுத்துண்டு போயி, அப்டியே திருப்பதி ஏழுமலையான் உண்டியல்ல போட்டுட்டு, அவர... கும்புட்டுட்டு வா!..."

"பெரியவா காமிச்ச வழிலேயே போறேன்... மன்னிச்சிடுங்கோ! .."

ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார்.

உண்மைதான்! பணத்தில் மட்டுமா வட்டிக்கான பாபம் வரும்? வார்த்தைகளால், மனஸால் எத்தனை பேருடைய மனங்களை காயப்படுத்தி, அதில் ஸந்தோஷத்தை காண்கிறோம்? இவற்றையெல்லாம் எங்கு கொண்டு போய் தொலைப்பது?

சிவாலய ஓட்டம்

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு, சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம் அர்ஜூனன் பெற்று வந்தாலும் அவன் அதை பயன்படுத்தாமலே யுத்தம் முடிந்தது

கண்ணன் அவர்களின் கண்கண்ட தெய்வமானான், சிவன் மேல் பெரும் அபிமானமெல்லாம் அவர்களுக்கு இல்லை, அது போக யுத்தம் முடிந்த வெற்றியில் இருந்தார்கள்

இதெல்லாம் மிகபெரிய பரம்பொருளின் நாடகம் என அவர்கள் எதையும் நினைக்கவில்லை, சிவனை அடியோடு மறந்திருந்தார்கள்

யுத்தத்தில் துரியனை அடித்து கொன்று அதை முடித்துவைத்தவன் என பீமனும் ஒரு கர்வத்தோடு அலைந்தான், காட்சிகளை கவனித்து கொண்டிருந்த கண்ணன் அவர்களின் மாயை அறுக்க ஒரு நாடகம் நடத்தினான்

யுத்தம் என்பது பாவங்களின் முடிவு, அதற்கு யாரும் தப்ப முடியாது, செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு யாகம் நடத்த நினைக்கும் தர்மனிடமும் அகங்காரம் மிகுந்தது, இதுவரை யாரும் கொடுக்காத பொருளை கொண்டு யாகம் நடத்த விரும்பினான்

அங்கேதான் தன் விளையாட்டை ஆரம்பித்தான் கண்ணன், அவனி விளையாட்டு அந்தணர்கள் உருவில் வந்தது

தர்மனிடம் யாகம் செய்ய வந்த அந்தணர்கள் யாரும் இதுவரை பயன்படுத்தாத யாக பொருள் புருஷ மிருகத்தின் பால் என்றார்கள், மானிட உருவும் சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகத்தின் பால் அபூர்வமானது என சொல்ல அதை கொண்டுவர விரும்பினான், ஆனால் அந்த கொடிய மிருகம் பற்றி தகவலேதும் அவனிடம் இல்லை

அதை தொடர்ந்து காட்சிக்கு வந்தான் கண்ணன்

அந்த புருஷா மிருகம் பற்றி தனக்கு தெரியும் என்றும் ஆனால் அது பொல்லாதது என்றும் கோபாலன் பெயரை சொன்னால் ஓடும் ஆனால் சிவன் பெயரை சொன்னால் அப்படியே உருகி நிற்கும், அந்நேரம் பாலை கறக்கலாம் ஆனால் சிறிது நேரத்தில் விரட்டும் என்றும் அதன் இயல்பை சொன்ன கண்ணன் ஒரு உத்தியும் சொன்னான்

12 ருத்திராட்சங்களை பீமனிடம் கொடுப்போம், அவன் நாழிக்கு ஒன்றாக இரவு முழுக்க அதை கொண்டு அந்த மிருகத்தை ஓடவைத்து நிறுத்தி பால்கறக்கட்டும் என 12 ருத்திராட்சங்களை கொடுத்து பீமனை அனுப்ப சொன்னான்

ஆம், அகபாவத்தில் இருந்த பீமனின் கர்வம் ஒழிக்க அவனையே கிளம்ப சொன்னான் கண்ணன்

அந்த ருத்திராட்சத்தை தரையில் வைத்தால் அது லிங்கமாகிவிடும், அதை கண்டு உருகும் மிருகம் அப்படியே பூஜை செய்யும் அப்பொழுது பால்கறக்கலாம் ஆனால் பூஜை முடியும் பொழுது லிங்கம் மிருகம் சீறும் என சொல்லியும் அனுப்பினான் கண்ணன்

அன்று மகா சிவராத்திரி நாளாய் இருந்தது, கண்ணனின் கணக்கு அதில் சரியாய் இருந்தது

பீமன் காட்டுக்குள் சென்று கோபாலா கோபாலா என்றதும் அந்த மிருகம் விரட்டியது பீமன் ஒரு ருத்திராட்சம் வைக்க அது லிங்கமாகும் கொஞ்சநேரம் மெய்மறக்கும் மிருகத்திடம் பீமன் பால் எடுப்பான் பின் அவன் கோபாலா கோபாலா என ஓட மிருகம் விரட்டும்

இப்படி 12 ருத்திராட்சங்களும் லிங்கமாகி பீமன் தப்பியபின்னும் மிருகம் அவனை விரட்டியது அடுத்து ருத்திராட்சம் இல்லா பீமன் யாகசாலையினை நெருங்கியிருந்தான், அது விடியும் பொழுதாய் இருந்தது காலை 6 மணி ஆகியிருந்தது

ஆனாலும் மிருகம் விரட்ட யாக சாலைக்குள் ஒரு காலை அவன் வைத்த நிலையில் இன்னொரு காலை மிருகம் பற்றியது

இப்பொழுது யாகசாலைக்குள் இருக்கும் கால் அவனுக்கு, வெளியில் தான் பிடித்த கால் தனக்கு என அது வாதிட்டது, அங்கு வந்தான் தர்மன்

ஏ மிருகமே 12 சிவலிங்கத்தை உனக்கு காட்ட ஓடிய புண்ணிய பாதத்தையா கடித்து விழுங்கபார்க்கின்றாய் என உருக்கமாக அவன் கேட்கவும் மிருகத்துக்கு தன் தவறு விளங்கிற்று

அய்யய்யோ ஆமாம், லிங்கத்தரிசனம் காட்டிய புண்ணிய காலையா கடித்தேன் என அவனை விடுவித்த மிருகம் பின் ஏன் அவன் கோபாலா கோபாலா என கத்தினான் என்பதை யோசித்து சொன்னது. கோபாலா கோபாலா என இவன் அழைத்து ஓடினாலும் அவன் ருத்திராட்சம் வைத்தவுடன் சிவலிங்கம் வந்ததென்றால் "ஹரியும் சிவனும் ஒன்றல்லவா"

அந்த வார்த்தை தர்மனுக்கும் பீமனுக்கும் சுட்டது, அதுவரை குழம்பியிருந்த அவர்கள் இரண்டும் ஒரே சக்தி என்பதை உணர்ந்து அகந்தை ஒழிந்து நின்றனர்

இரவெல்லாம் ஓடி அரியும் சிவனும் ஒன்று என பீமன் ஞானம் பெற்ற கதை இப்படி உண்டு, அதை நினைவு கூறும் விதமாக முன்பு சிவராத்திரியில் 12 சிவாலங்களுக்கு ஓடும் நிகழ்ச்சியும் இருந்தது

புராணகதை இப்படி இருந்தாலும் 12 லிங்கம் என்படு 12 ராசிகளை குறிப்பது என்றும், எல்லா ராசிகளின் அருளும் அந்நாளி கிடைக்க 12 லிங்கங்களை வணங்க வேண்டும் என்பதும் ஏற்பாடு என்பார்கள்

இன்னும் அழுத்தமாக சொன்னால் சிவராத்திரி இரவில் தூங்காமல் லிங்க தரிசனம் செய்ய இந்த ஏற்பாடு செய்யபட்டிருந்தது

அதில் ஹரியும் சிவனும் ஒன்று எனும் மாபெரும் தத்துவமும் இருந்தது

இதனை பாரதத்தின் பல பாகத்தில் வாழ்ந்த இந்துக்கள் ஒரு காலத்தில் செய்தனர், சிவராத்திரி அன்று "கோபாலா கோபாலா" என கத்திய படியே 12 லிங்கங்கள் இருக்கும் ஆலயத்துக்கு ஓடுவார்கள்

இதனை பல இனங்கள் பின்னாளில் கைவிட்டது, அதற்கு புத்தமத எழுச்சி பின் சமண மதம் அதை தாண்டிய ஆப்கானியர் ஐரோப்பியர் குழப்பம் என பல காரணம் உண்டென்றாலும் அந்நியர் ஆட்சியில் அதிகம் சிக்காத கன்னியாகுமரி பக்கம் இந்த ஓட்டம் உண்டு

சாலிய மகரிஷி வழிவந்தவர்கள் என தங்களை சொல்லும் சாலியர் இனம் எனும் நெசவாளர் இனம் அதனை தொடர்ந்தது

சிவராத்திரி அன்று இப்படி ஆதிகேசவ பெருமாள் கோவிலை சுற்றிய 12 சிவாலயங்களை இப்படி சிவராத்திரியன்று கோபாலா கோபாலா என சொல்லியபடியே ஓடி சுற்றுவார்கள்
இது சிவாலய ஓட்டம் என்றாயிற்று

இப்பொழுது சாலியர் தாண்டி எல்லா இந்துக்களும் பங்கெடுக்கும் நிகழ்வாக அது அமைந்திருக்கின்றது, ஆம் இந்தியா முழுக்க சிவராத்திரி கொண்டாடபடும் நேரம் கன்னியாகுமரி பக்கம் மட்டும் "கோபாலா கோபாலா" என கண்ணனை நினைத்தபடியே சிவராத்திரி அனுசரிக்கபடுவது அங்குதான்

தூங்காமல் விழித்திருந்து சிவனை தரிசிக்கவும் அதில் ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை புகுத்தவும் எவ்வளவு நுட்பமான வழிகளை எல்லாம் போதித்திருக்கின்றார்கள் அந்த முன்னோர்கள்

சிவராத்திரி முழுக்க இறைவனை அவன் நினைவிலே தேடு என்பதை இதைவிட எப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய முடியும்?

ஆம் அந்த சமூகம் பரிபூரண ஞானசமூகமாய் இருந்திருகின்றது, சிவாலய ஓட்டம் அதைத்தான் சொல்கின்றது

(யாளி போலவே புருஷா மிருகம் எனும் மனித தலையும் புலி உடலும் கொண்ட சிலைகள் இந்து ஆலயங்களில் உண்டு, சில இடங்களில் அவை கொண்டாடபடுவதும் உண்டு)

குன்றக்குடி திருத்தலம்.குமரனின் அருள் பெற்ற இத்திருத்தலம்


காரைக்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்றக்குடி திருத்தலம்.குமரனின் அருள் பெற்ற இத்திருத்தலம், பிரார்த்தனை தலங்களில் முதன்மையானது. 

திருமண வாழ்க்கை இனிக்கச் செய்யும் குன்றக்குடி முருகன் கோயில்.இக்கோயிலின் சிறப்பே இறைவன் சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த மலையே,மயில் உருவம் போன்று காட்சியளிப்பது தான்.

#தலச்சிறப்பு : குன்னகுடிக்கு காவடி எடுத்தால் நினைத்தது நடக்கும்.“குன்னகுடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது” என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்‌த‌வை கை கூடியே தீரும் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது.

#சுவாமி : சண்முகநாதர்

#அம்பாள் : வள்ளி, தெய்வானை

#தீர்த்தம் : தேனாறு

#தலவிருட்சம் : அரசமரம்

#தல #வரலாறு

முருகப்பெருமானின் வாகனமான மயில்,அவரின் சாபத்தால் மலையாகிப்போனதாக சொல்கிறது ஒரு புராண செய்தி. ஒரு முறை அசுரர்கள், முருகப்பெருமானின் மயிலிடம், “நான்முகனின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் நாங்கள்தான் மயிலை விட சக்தி படைத்தவர்கள்,மேலும் வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன” என்று பொய் கூறினர். இதைக் கேட்டு உண்மை என்று நம்பிய மயிலும், கண் மூடித்தனமாக கோபம் கொண்டு பிரம்மாண்ட உருவம் எடுத்து, கருடனையும், அன்னத்தையும் விழுங்கிவிட்டது.

பிரம்மனும், திருமாலும், முருகப்பெருமானிடம் இது குறித்து முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற முருகப்பெருமானும், மயிலிடம் இருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்தார். மேலும் மயிலின் கர்வத்தினை அடக்க மயிலை, மலையாக மாறிப்போகும்படி சாபமிட்டார்.

தன் தவறுக்கு வருந்திய மயிலும் குன்றக்குடி வந்து மலையாகிப்போனது. ஆறுமுகப் பெருமானைக் குறித்து மலையாக இருந்த படியே தவம் இருந்தது.மயிலின் தூய்மையான தவத்தில் மகிழ்ந்த முருகப்பெருமானும் , மயிலுக்கு சாபவிமோசனம் அளித்தார். மயில் உருவத்தில் இருந்த அந்த மலை மீதே எழுந்தருளி அருள்புரிந்தார் என்கிறது இத்திருக்கோயிலின் தல வரலாறு.

இந்த ஆலயத்தில் விசேஷமாக காவடி வழிபாட்டை சொல்லலாம். இது தவிர பால் குடம் எடுத்தல், அங்கபிரதட்சணம் செய்வது, அடிப் பிரதட்சணம் போன்றவை பக்தர்கள் தங்கள் எண்ணிய பிரார்த்தனை நிறைவேறியப் பின் செய்யும் நேர்த்திக்கடன்களாகும். இக்கோவில் வந்து வேண்டுதல் வைத்தால் தீராத தோல் வியாதிகள் கூட தீரும் என்பது நம்பிக்கை.வேண்டுதல் நிறைவேறியப் பின் உடல் உறுப்புகள் பொறிக்கப்பட்ட வெள்ளி தகட்டை உண்டியலில் சேர்ப்பிக்கின்றனர்.

மலையின் கீழ் பகுதியில் சுயம்புவாக தோன்றிய தேனாற்றுநாதர் கோவில் உள்ளது. இந்த சுயம்பு மூர்த்தியை அகத்திய முனிவர் வணங்கி வழிபாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தல அம்பாள் அருட்சக்தி என்ற திரு நாமத்துடன் அழகே வடிவாக எழுந்தருளியிருக்கிறார்.

#வரலாற்று #செய்தி..

சிவகங்கை மருதுபாண்டியருள் மூத்தவரான பெரிய மருதுவுக்கு ஒரு முறை முதுகில் ஏற்பட்டிருந்த ராஜ பிளவை என்னும் கட்டியை,குன்றக்குடி முருகப்பெருமானின் அருட்பிரசாதமான திருநீறு குணப்படுத்தியது என்கிற வரலாற்று செய்தி இந்த தலத்தில் உள்ள இறைவனின் பெருமையை நமக்கு பறைசாற்றும்.

வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பதால், இங்கு திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.  

#திருவிழா..
அருணகிரிநாதரின் பாடல் பெற்ற இந்த திருதலத்தில்,10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழாவும், 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் தைப்பூசத் திருநாளும் சிறப்பு வாய்ந்தது. இது தவிர முருகப் பெருமானுக்கே உரிய சித்திரை பால் பெருக்கு விழா, வைகாசி விசாகம், ஆனி மகாபிஷேகம், ஆடி திருப்படி பூஜை, ஐப்பசியில் கந்தசஷ்டி போன்றவையும் சிறப்பாக நடைபெறும்.

#நடைதிறப்பு : காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

வேலுண்டு வினை இல்லை 

மயிலுண்டு பயமில்லை.

ஓம் சண்முகா போற்றி போற்றி..

காரடையான் நோன்பு ஸ்பெஷல் !

காரடையான் நோன்பு ஸ்பெஷல் !

மல்லிகையும் மணமும் போல
மஞ்சளும் மங்கலமும் போல
கம்பனும் கவியும் போல
கண்ணனும் கீதையும் போல!

உமையும் மகேஸ்வரனும் போல
உண்மையும் நிம்மதியும் போல
காஞ்சியும் காமாட்சியும் போல
கருணையும் காஞ்சிகுருவையும் போல!

உருகும்மனமும் குருவருளும் போல
உருகாதவெண்ணையும் ஓரடையும் போல
பிரியாதவுறவும் பிரியமும் போல
தரவேணும் குருவே வரமதுபோல!

ஹரஹர சங்கர எனும் உயர் நாமம்
தினம் பாடியே இங்கு உயர்வோம் நாமும்!
ஜயஜய சங்கர என்று இனியேனும்
தினம் துதித்து வளர்வோம் மேன்மேலும்!!

 சுமங்கலிகள் தங்களின் கணவர்களின் நலனுக்காக அனுஷ்டிக்கும் காரடையான் நோன்பு நாளான இன்று மஹாபெரியவாளின் ஆசிகளும் அநுக்கிரமும் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

 ஹர ஹர சங்கர ! 
ஜெய ஜெய சங்கர !

ஸ்ரீ_ஆதிசங்கர_பகவத்பாதர்_அருளிச்செய்த_வில்வாஷ்டகம்_தமிழ்மொழியில்

🌿#ஸ்ரீ_ஆதிசங்கர_பகவத்பாதர்_அருளிச்செய்த_வில்வாஷ்டகம்_தமிழ்மொழியில்🌿

மூன்று தளம் மூன்று குணம் மூன்று விழி மூவாயுதம்
மூலமெனக் கோலம் தரும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

முப்பிறவி துயர் நீக்கும் முப்பிரிவாய் விளங்கிடுமே
புனிதமெலாம் அள்ளித் தரும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கோடி கோடி கல்யாணம் செய்து வைக்கும் இனிய பலன்
குறைகளின்றி தந்திடுமே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

காசி சேஷ்த்தரம் வசிப்பதனால் கால பைரவ தர்சனத்தால்
வரும் பலனை தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

பூச்சிகளால் வீணாகா அதிசயமாம் வில்வதளம்
மங்களமே தினம் அருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

திங்கள் எனும் இந்துவாரம் விரதமுடன் பூஜை செய்ய
ஏற்ற தளம் வில்வதளம்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

வாஜபேயம் சோமயாகம் வளர்க்கின்ற யாகபலன்
அத்தனையும் தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கயைபிரயாகை யாத்திரையை செய்வதனால் வரும் பலனை
தந்திடுமே வில்வதளம்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

சாளக்கிராமம் வணங்கும் பலன் சான்றோரை வணங்கும் பலன்
தந்தருளும் எந்நாளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கோடி யானை தான பலன், அஸ்வமேத யாக பலன்
ஆயிரமாய் தந்திடுமே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

காண்பதுவும் புண்ணியமே தொடுவதுவும் புண்ணியமே
கனிவருளும் நெஞ்சினிலே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

பாடசாலை ஆலயங்கள் பல ஆயிரம் அமைப்பதனால்
வருகின்ற பலன் அருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

அன்னதானம் ஆயிரமாய் செய்கின்ற ஜென்ம பலன்
அளித்திடுமோர் அர்ச்சனையே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

வில்வாஷ்டகம் தன்னை சிவனருகில் உரைப்போர்க்கு
செல்வமெலாம் கூடி வரும்
சிவனருளும் தினம் வரும்

🍃நமசிவாய🍃

Sunday, March 13, 2022

இராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகள் .2

தந்தையின் போட்டோ எப்படி அவர் மறைவுக்கு பின்னர் அவரை நமக்கு நினைவு கூறும் அது போல உருவவழிபடு செய்ய செய்ய இறைவனின் உண்மை உருவத்தை 
உணர்வாய்

Saturday, March 12, 2022

நல்லதே நடக்கும்

இன்பத்தையும் ,
துன்பத்தையும் யாரும் நமக்குத் தர வேண்டாம்..

விதை எதுவோ,
அது செடியாக தானே முளைக்கும்...

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

நல்லதை சிந்தியுங்கள்! நல்லதைச் செய்யுங்கள்!....

நல்லதே நடக்கும்.

உற்சாகமான காலை வணக்கம்🙏🏻

பகவான் இராமகிருஷ்ணரின் அருளுரை-1

*திருமணத்தை நடத்தி வைப்பவர் மணமகளை மணமகனோடு சேர்த்து வைப்பது போல சீடனை குரு இறைவனிடம் சேர்த்து வைக்கிறார்.*

-பகவான் இராமகிருஷ்ணரின் அருளுரை-

அர்ஜுனரின் 10 பெயர்களும் காண்டீப மஹிமையும்:

அர்ஜுனரின் 10 பெயர்களும் காண்டீப மஹிமையும்:

விராட பருவத்தில் நபும்ஸகனாக இருந்த அர்ஜுனருடன் உத்திரன் கவுரவ சேனையை எதிர்க்ககிளம்பி அவர்களின் பலம் கண்டு திகைத்து நிற்கையில் பேடியாக இருந்த அர்ஜுனர் உத்திரனை தேற்றி வன்னி மரத்தில் தங்கள் வைத்திருந்த ஆயுதங்களை எடுக்க சொன்னர்... அந்த ஆயுதங்களை எடுத்து பார்த்த உத்திரன் பயத்தினால் நடுங்க, அதுகண்ட அர்ஜுனர் தாங்கள் யார் என்பதை அவனுக்கு கூறினார். ஆனால் , உத்திரன் அர்ஜுனருக்கு மஹேந்திரரால் 10 பெயர்கள் உருவாயின என்றும் அதை சொன்னால் தான் நீங்கள் அர்ஜுனர் என்பதை நம்புவதாக கூற.... அர்ஜுனரும் தன்னுடைய 10 பெயரையும் அதன் காரணத்தையும் விளக்கி கூறினார்....

 அதன் சுருக்கம்...

1) எல்லா தேசங்களையும் ஜெயித்து எல்லாப்பக்கங்களிலிருந்தும் தனத்தை கொள்ளையடித்து கொண்டு வந்து அந்த தனத்தின் நடுவே நின்றதனால் தனஞ்செயன்.🦋🦋🦋

2) யுத்தத்தில் மதங்கொண்டவர்களை யுத்தத்தில் தான் வெல்லாமல் திரும்பாத காரணத்தால் விஜயன்.🦜🦜🦜

3) பகைவர்களுடன் போர்புரிகின்ற தேரில் வெள்ளைக்குதிரைகள் கட்டப்பட்டிருப்பதால் ஸ்வேதவாகனன்.🦢🦢🦢

4) யுத்ததில் மத்தியில் யாரலும் உடைக்கமுடியாததும் அருமையானதுமான சூர்யனுக்கும் அக்னிக்கும் ஒப்பானதுமான தேவேந்திரரால் கொடுக்கப்பட்ட கிரீடத்தை தரித்ததால் கிரீடி.🦌🦌🦌

5) போர்புரிகின்ற யான் ஒருகாலும் அருவருக்கதக்க செய்கையை செய்கின்றதில்லை ஆதலால் தேவர்களாலும் மனிதர்களலாலும் அழைக்கும் பெயர் பீபத்ஸு🦁🦁🦁

6) போரில் என் இருகைகள் காண்டீவத்தை இழுக்கும் விசயத்தில் ஒத்த செய்கையுடையனவாகவும் பகைவர்களின் படையை அழிப்பவைகளாகவும் இருக்கின்றன.அவ்விரண்டு கைகளில் இடக்கையானது வலக்கையை விட மேலாகியிருக்கிறது. அதனால் ஸவ்ஸயாசி.🐅🐅🐅

7) என்னுடைய நிறமானது கடல் சூழ்ந்த பூமியில் அடைவதற்கு அருமையானதும் இசைந்ததுமாக இருப்பதால் அர்ஜுனன்.💮💮💮

8) இமயமலையின் மேற்கு பக்கத்தில் பகலிம் உத்திரபல்குனி பூர்வபல்குனி நட்சத்திரங்களின் சந்தியில் பிறந்ததால் பல்குனன்.🦉🦉🦉

9) யுதிஷ்டிரருடைய தேகத்தில் எவன் காயத்தை உண்டு பண்ணுகின்றானே அவனுடன் போர்புரிந்து குலத்தை அவமதிப்பேன்.அவர்களேடனைவருடனும் போர் புரிவேன். இதனால் தேவர்களுள்ளும் மனிதருள்ளும் நான் ஜிஷ்ணு.🦅🦅🦅

10) என்னுடைய தாயானவள் ப்ருதை என்று அழைக்கப்படுவதால் அவளுடைய மகனான என்க்கு பார்த்தன் என்றும் பெயர்....🦚🦚🦚

மேலும் , காண்டவ வனத்தில் அக்னியை திருப்தி செய்யும் பொருட்டு கிருஷ்ணரோடு சேர்ந்து தேவராஜரை எதிர்த்து போர் செய்து நான் மூர்ச்சை அடைந்தேன். பின்னர் பிரம்மர்,மஹேஸ்வரரும் வந்ததால் எழுந்திருந்தேன். என்னுடைய வீர்யத்தினாலும் செய்கையாலும் மகிழ்ந்து அவர்களிருவரும் அப்போது எனக்கு 'க்ருஷ்ணன்' என்று பதினோராவது பெயரையும் வைத்து பல திவ்யாஸ்திரங்களை வழங்கினர்.

😇😇😇இந்த பெயர்களை தினமும் சொல்லுபவனை துஷ்ட பிராணிகள் அணுகமாட்டா.பகைவர்கள் துன்பம் செய்யமாட்டார்கள் என்று கூறினார்.🥰🥰🥰

காண்டீபத்தின் சிறப்பு :⚡⚡⚡🌈🔱🤴🎠

மஹாபலம் பொருந்திய காண்டீபமானது தெய்வ சம்பந்தம் பொருந்தியது.

 தர்பாக்கினி போல ஜ்வலிக்கின்றதும் காந்தியுள்ளதும் தங்கமயமானதும் 100 தாமரை புஷ்பங்கள் தனித்தனியாக உள்ளதும் நான்கு பக்கம் ரத்தினம் சேர்க்கப்பட்டதும் பின்னால் பொன்னால் அலங்கரிக்கப்பட்ட ஸுர்ய ப்ரபை சந்திர ப்ரபை பொற்றாமரை மலர்களுடன் கூடியதுமான இந்த வில்லுக்கு காண்டீபம் என்று பெயர்

இது லக்‌ஷம் ஆயுதங்களுக்கு சமமானது. தேவர்கள் அசுரர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பூஜிக்கப்பட்டது.

இதை ப்ரம்ம தேவர் 1000 வர்ஷகாலம் வைத்திருந்தார். பின்பு முறையே சிவபெருமான் 64 வர்ஷமும் இந்திரன் 85 வர்ஷமும் சந்திரன் 5000 வர்ஷமும் வருணன் 100 வர்ஷமும் வைத்திருந்தார்.

மங்களகரமான அந்த வில்லை அக்னியானவர் வருணரிடம் இருந்து வைத்திருக்கும் காலத்தில் அதை என்னிடம் குடுத்தார். 

அந்த காண்டீபத்தை நான் 65 வருஷகாலம் தரிக்க போகின்றேன் என்று உத்திரனுக்கு காண்டீப வரலாற்றை அர்ஜுனர் கூறினார்.

#மஹாபாரதம்
#காண்டீபம்
#அர்ஜுனர்
#அர்ஜுனரின்10பெயர்கள்

ராம ராம ராம

Friday, March 11, 2022

வேல் விருத்தம் : 04

வேல் விருத்தம் : 04

"அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல
   அங்கியும் உடன்சுழலவே
அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல
   அகிலதல முஞ்சுழலவே
மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர
   மாணப் பிறங்கியணியும்
மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
   வகைவகையி னிற்சுழலும் வேல்

தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
   சந்தமுட னும்பிறைகள்போல்
தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
   தன்புறம் வருஞ்சமனையான்
கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண
   கஞ்சம்உத வுங்கருணைவேள்
கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
   கணவன் அடல் கொண்ட வேலே."

அருணகிரியாரின் வேல் விருத்தத்தின் இந்த‌ நான்காம் பாடலின் வரிகளோடு அதன் பொருளை காணலாம்

"அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல
 அங்கியும் உடன்சுழலவே"

அதாவது "அண்டர் உலகம் சுழல" அண்டத்தில் இருக்கும் இந்த உலகம் சுழற்சி அடையவும், "எண் திசைகளும் சுழல" ... எட்டு திசைகளும் நிலை தடுமாறி சுற்றவும், "அங்கியும் உடன் சுழலவே" அதாவது எல்லாவற்றையும் பொசுக்கி சாம்பலாக்கும் அக்கினி தேவனும் சுற்றவும் என்பது பொருள்

மிக பெரிய இந்த உலகம் சுழல்கின்றது, அதனால் எட்டு திக்கையும் தாங்கும் அஷ்டதிக் பாலகர்கள் சுழலுகின்றார்கள், எல்லாவற்றையும் சாம்பலாக்கும் அக்னி தேவனும் சுழல்கின்றான்

"அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல
அகிலதல முஞ்சுழலவே"

அதாவது "அலை கடல்களும் சுழல" அலை கொண்ட கடல்களே சுழல்கின்றன, " அவுணர் உயிரும் சுழல" அசுரர்களே தங்கள் உயிர் பயத்தால் அலறி சுழல, "அகில தலமும் சுழலவே", அவர்கள் இருந்த எல்லா பிரபஞ்சமும் சுழல்கின்றன‌

"மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர
   மாணப் பிறங்கியணியும்"

"மண்டல நிறைந்த இரவி சத கோடி மதி" இரவி என்றால் சூரியன் மதி என்றால் சந்திரன், சதம் என்றால் நூறு, ஆக நூறுகோடி சூரியன்களும் சந்திரன்களும் உதிரும் அளவு போர்முரசு அறையும் வண்ணம்

"மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
   வகைவகையி னிற்சுழலும் வேல்"

முந்தைய வார்த்தையில் இருந்து அணியும் எனும்வார்த்தை இந்த வரியின் முதலாகி வரும், "அணியும் மணி ஒலி" தான் அணிந்திருக்கும் மணி ஒலியால்

"சகல தலமும் மருள" எலல்லா உலகங்களும் மருட்சி அடையவும், "சிரம வகை வகையினில் சுழலும் வேல்" ப. புரிந்து கொள்ளமுடியா பல வகைகளில் உலகையே மிரட்டும்படி வரும் வேல் யாருடையது என்றால்..

தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
   சந்தமுட னும்பிறைகள்போல்

"தண்டமுடனும்" பெரிய தண்டாயிதத்துடனும், "கொடிய பாசமுடனும்" உறுதியான பாசகயிற்றுடனும், "
"க‌ரிய சந்தமுடனும்" கருத்த நிறத்துடனும் "பிறைகள் போல" நிலவின் பிறைகள் போல 

"தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
தன்புறம் வருஞ்சமனையான்"

"தந்தமுடனுமும்" அதாவது சந்திர பிறை போல் வளைந்த கோரப் பற்களுடனும், "தழலும் வெங்கணுடனும்" நெருப்பை உமிழின்ற கண்களுடனும் , "பகடு தன் புறம்" எருமைக் கடாவில் ஏறி வரும் "சமனை" எமனை

"கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண
கஞ்சம்உத வுங்கருணைவேள்"

முந்தைய வரியின் யான் எனும் வார்த்தை சேந்து "யான் கண்டு குலையும் பொழுதில்" எமனை கண்டு நான் அஞ்சும்பொழுது, "அஞ்சேல் என". பயப்படாதே என்று, "மென் சரண கஞ்சம் உதவும் கருணைவேள்" த‌ன்னுடைய மிருதுவான தாமரை மலரன்ன திருவடித் தாமரையை தந்தருளும் கருணாமூர்த்தி

"கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
   கணவன் அடல் கொண்ட வேலே."

கந்தன் , முருகன், குமரன் என்பவனும் "வண்குறவர் தம் புதல்வி" காட்டு குறவர் பெற்ற மகளின் கணவணின்
வலிமையான கையில் விளங்கும் வேல் அது

ஆக பாடலின் பொருள் இதுதான்

அண்ட சராசரமெல்லாம் சுழல, எண் திசையும் அதன் அஷ்ட பாலகர்களோடு சுழல, எல்லாவற்றையும் பொசுக்கும் அக்னி பகவானே சுழல, அலையாடும் கடல் சுழல, அரக்கரும் தன் அழிவு வந்ததென சுழல, அவர்கள் ஆண்ட பிரபஞ்ச அகிலமும் சுழல, நூறு கோடி சூரியனும் சந்திரனும் உதிரும் வண்ணம் போர்முரசு கொட்டியபடி தன்னில் அணிந்த மணிகள் ஒலிக்கும்படி எல்லா உலகமும் (14 உலகமும் 1008 அண்டமும்) சுழலும் படி புரியா வகையில் வரும் வேல் யாருடையது?

அது தண்டாயுதமும், கொடிய பாசகயிறும், சந்திரன் பிறைபோல் வளைந்த பல்லும், நெருப்பை உமிழும் கண்களும், கரிய நிறத்துடனும் எருமைமேல் வரும் எமனை கண்டு நான் அலறும்பொழுது, அஞ்சாதே நான் இருக்கின்றேன் என சொல்லி வருவதும், கந்தன் முருகன் குமரன் என்பவனும், கானகத்து குறமகளின் கணவனுமான முருகனின் திருக்கையில் இருக்கும் வேல் என்பது பொருள்

இதன் ஞானமறைபொருள் என்ன?

ஒவ்வொருவனுக்கும் அவன் உடலில் உயிர் இருக்கும் வரைதான் வாழ்வு, அந்த வாழ்வினை முடித்து கொள்ள யாரும் தயாரில்லை. உலகிலே எல்லோருக்கும் இருக்கும் ஒரே பயம் மரண பயம்

எவ்வளவு பெரும் ஞானியென்றாலும் அவனும் வாழ்வை நீட்டிக்க விரும்புவானே ஒழிய இந்த உலகில் வாழ்வினை முடிக்க ஒருவரும் விரும்புவதில்லை

ஆனால் வாழ்வு முடியும் நேரம் உடலை விட்டு உயிர் நீங்கும் நேரம் மனம் கலங்கும், கண்கள் மங்கும் , காது கேட்கும் திறனை இழக்கும் இன்னும் உடல் கலங்கி உள்ளம் கலங்கி என்னென்ன சுழற்சிகளோ நடக்கும்

அதைத்தான் அருணகிரியார் இங்கு சொல்கின்றார், உலகம் கலங்கிற்று அண்டம் கலங்கிற்று கடல் கலங்கிற்று அக்னி தேவன் கலங்கினான் என்பதெல்லாம் கடைசி நேரத்தில் உடலும் மனமும் படும் அந்த கலங்கிய நிலை போராட்டத்தை கையறு நிலை போராட்டத்தை குறிப்பதே

இங்கு சூரிய சந்திரன் என்பது இரு நாசி மூச்சினை குறிப்பது, அக்னி என்பது உடல் சூட்டை குறிப்பது சூடற்ற உடல் பிணம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, அண்டம் என்பது எல்லையில்லா மனதை குறிப்பது, அசுரர்களின் அலறல் என்பது சாகும் நேரம் ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களை எண்ணி கலங்குவதை குறிப்பது

அந்நிலையில் எமன் வரும் நிலை என்பது சாவு நெருங்கும் நிலை, அந்நேரம் முருகனை நினைத்து சரணடைந்தால் அந்த பயம் நீங்கும் சாவை வெலலாம் என்பது இங்கு சொல்லபடும் மறைபொருள்

சாவை வெல்லலாம் என்றால் சாகாவரம் என்று பொருள் அல்ல, பிறந்த எல்லோரும் ஒரு நாள் இறப்பது விதி யாரும் தப்பமுடியாது, மாறாக முருகனை வழிபட்டால் ஞானம் பெருகும் அந்த ஞானம் மரணம் என்பது ஆன்மாவுகான விடுதலை, அந்த ஆன்மா இனி இறைபாதத்தில் நிம்மதியாகும் எனும் தெளிவு வரும்

அந்த தெளிவில் தைரியம் வரும் அந்த தைரியம் சாவையோ எமனின் வருகையினையோ பார்த்து புன்னகைக்க வைக்குமே தவிர அஞ்ச வைக்காது கதற வைக்காது அலறி ஓட வைக்காது

முருகனின் வேல் ஞானவடிவம், அதை சரணடைந்தோர் மரணத்துக்கு அஞ்சமாட்டார்கள், மரணத்துக்கு பின்னும் அவர்கள் வாழ்வும் புகழும் நிலைத்திருக்கும்

ஆம், உலகில் எல்லா மானிடரும் அஞ்சி ஒடுங்கும் மிகபெரிய பயம் மரண பயம். இந்த உலகத்தின் இயக்கமே மரணத்தை கண்டு மானிடன் ஓடும் ஓட்டத்திலும் சாவு வந்துவிட கூடாது என எடுக்கும் பெருமுயற்சியில்தான் இருக்கின்றது ஆனால் அதையும் தாண்டி அந்த பயம் ஒரு காலமும் மனதை விட்டு நீங்குவதே இல்லை

முருகனை வழிபட்டால் அவனின் ஞானவேல் அந்த பயத்தை அகற்றும், வாழ்வு ஒரு விளையாட்டு மைதானமாக தோன்றும், விளையாட்டை முடிக்கும்படி அவன் உத்தரவிட்டால் பாதுகாப்பாக செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முருகன் கூடவருவான் எனும் நம்பிக்கையினை கொடுக்கும்

மானிட வாழ்வு முடிவதை தவிர்க்க யாராலும் முடியாது எனும் பெரும் ஞானமும் அமைதியும் மனதில் கிட்டும் மரணத்துக்கு பின் ஆன்மா இறைபாதத்தில் அமைதிகொள்ளும் எனும் பெரும் நம்பிக்கை உருவாகும் அந்த அமைதியும் நம்பிக்கையும் காலனை நோக்கி புன்னகைக்க வைக்கும்

ஆம், முருகனை மனமார வழிபட்டால் மரணபயம் இல்லை, வராது என இந்த நான்காம் விருத்தத்தில் அழுத்தி சொல்கின்றார் அருணகிரிநாதர்

அப்படியே யோகம் என்பது சாதாரணம் அல்ல மனம் ஒருமிக்கும் யோகத்தின் பொழுது மனம் எனும் பெரும் உலகம் சுழலும் , பெரும் அலையடிக்கும் பெரும் பிரளயமே ஏற்படும், மனதை அடக்கி யோகத்தில் நிறுத்துதல் என்பது உலகையே சுழற்றி அடக்குவதற்கு சமம்

ஐம்புலன்களையும் கட்டுபடுத்துவது என்பதும் எட்டு வகை உணர்ச்சிகளையும் அடக்குதல் என்பதும் ஆசை அலைமோதும் மனதை அடக்குதல் என்பதும் சாமான்யம் அல்ல‌

மனம் என்பதும் எல்லையில்லாத பிரப்ஞ்சம் போன்றது, யோகம் என்பது தொடங்கும்பொழுது அது பிரளயமாகும் பெரும் குழப்பமெல்லாம் அடைந்துதான் தெளியும்

முருகபெருமானின் ஞானத்தால் அந்த மனம் முழு தெளிவடையும், எக்குழப்பம் வந்தாலும் அவரின் ஞானம் அதை அடக்கி மனதை அமைதியாக்கும், அந்த ஞானம் பெற்ற மனம் மரணத்தை விரட்டும், முழு ஞானம் அடைந்த யோகி அரூபியாய் நிலைப்பான், காலன் எனும் எமன் அவனிடம் தோற்பான் என்பதும் பொருளாகும்

gst for land purchase in tamilnadu

 GST is not applicable to the sale of land because it is neither treated as supply of goods nor the supply of services as per Schedule III of the CGST Act, 2017. Land is identified as immovable property, and so, it does not attract GST.

வீட்டில்_யாரேனும் #இறந்தால் ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " #இப்பழக்கம்_சரியா

#வீட்டில்_யாரேனும் #இறந்தால் ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " 

#இப்பழக்கம்_சரியா....????

#தவறான_வழக்கம் சந்ததிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி விடும் ...!
எவரேனும் இறந்துவிட்டால் அக்குடும்பத்தினர் ஒரு ...வருடத்திற்குக் கோலம் போட கூடாது , மலைத் தலத்திற்கும் போகக் கூடாது , பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்ற தவறான வழக்கங்கள் தற்போது நிலவி வருகின்றது . 

#இறப்பு_நேரிட்ட நாளிலேயே கூட அக்குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதிலும் ,வீட்டில் கோலம் இடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை , சாஸ்திர முரண்பாடும் கிடையாது . #இடைச்_செருகலாக வந்த இத்தவறான வழக்கமே பல குடும்பத்தவர்களை
ஒரு வருட காலம் கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுப்பதோடு 
,அக்குடும்பத்தினருக்கு
எவ்வித ஆலய வழிபாட்டுப் பலாபலன்களையும் வரவிடாது ஓராண்டிற்குத் தடுப்பதால் அக்குடும்பத்தின
ரின் பல துன்பங்களுக்கு நிவர்த்தி கிட்டாமல் போவதுடன் ஆன்மீகத் தற்காப்பு சக்தியும் குறைந்து பலத்த பிரச்சனைகளும் தோன்றி சந்ததிகளை அலைக்கழித்து விடும்
 இந்த ஒரு வருடத்திலும் பண்டிகைகள் கொண்டாடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை . 

#பண்டிகைகளினால் வரும் புண்ய சக்தி சேகரிப்பையும் இழத்தலும் தவிர்க்கப்படும் .
****அவ்வாறு துக்கத்தை ஒரு வருடகாலம் அனுஷ்ஷப்பதனால் டீ.வி , சினிமா , செய்தித்தாள் படித்தல் , புது ஆடைகள் , ஸ்வீட்டுகள் , காபி , டீ , ருசிகர உணவுகள் , கேளிக்கைகளை ஒரு வருட காலம் எவரேனும் ஒத்தி வைகிறார்களா ? இறைவனா ஓராண்டு தன்னைக் காணலாகாது என்று விதிப்பார் ??? இறைப் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் ! துன்பங்கள் மலை மலையாய்ப் பெருகும்.. 

#கலியுகத்தில் ,அதுவும் பல பூஜைகளும் , வேத சக்திகளும் வெகு வேகமாக மறைந்து வரும் கலியுகத்தில் , " ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " என்ற அறியாமையினால் தோன்றிய தவறான எண்ணத்தைக் கட்டாயம் சமுதாயத்தில் இருந்து அகற்றியே ஆக வேண்டும் .

#தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி


How to call to Tamilnadu from Karnataka in mobile number?

 codes 81,82,83,+ Numper 

Thursday, March 10, 2022

பிரசாதம் என்பது


*பிரசாதம் என்பது இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும் தூய்மையான பலவகையான உணவுப் பொருட்கள், 

பூக்கள், 

துளசி...

போன்ற இலைகளை பக்தர்களுக்கு விநியோகம் செய்வது ஆகும்.

*ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.

*பொதுவாக,

*சிவன் கோவில்களில் வில்வ தீர்த்தமும், 

*பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தமும் கொடுப்பார்கள்.

*தீர்த்தம் வாங்கும் போதும் வரிசையில் நின்று இடது கைக்கு மேல் வலது கையை வைத்து உள்ளங்கையில் தீர்த்தத்தை விடச் சொல்லி வாங்கிப் பருக வேண்டும்.

*ஒருவர் வாங்கிய தீர்த்த பிரசாதத்தை மற்றவரின் கைகளில் இடுவது தவறான செயலாகும்.

*அதே போல, 

*சர்க்கரைப்பொங்கல்,

*புளியோதரை... 

போன்ற பிரசாதங்களை வாங்கும்போது தன் கைகளில் உள்ள பிரசாதத்தை வாயினால் கடித்து சாப்பிடுவதை சிலர் வழக்கமாக்கி கொண்டிருக்கிறனர். 

அதுதான் மிகுந்த பாவமாகும்...

*விலங்குகள் தான் வாயினால் கடித்து சாப்பிடக்கூடியவை. 

ஏனென்றால், 

அவைகளுக்கு கைகளால் எடுத்து வாய்க்குள் வைத்துக் கொள்ள இயலாது.

*உள்ளங்கையில் அத்தனை தெய்வங்களும் குடியிருப்பதாக ஐதீகம்.

*நமக்கு இறைவன் இருகைகளைக் கொடுத்திருக்கிறான். 

அந்த இரண்டு கைகளால் இறைவனை நாம் வணங்கியதற்காக வழங்கப்படுகிற பிரசாதத்தை வலது கையால் வாங்கி இடது கையில் வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் வலது கையால் அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட வேண்டும்.

*அ வ்வாறு செய்யாதவர்கள் அடுத்த பிறவியில் விலங்காக பிறப்பர் என்று புராணங்கள் சொல்கின்றன...

MYSTRY.... கல் கருடன் நாச்சியார்கோவில்

சில புரியாத புதிர்கள்  
MYSTRY.... 

கல் கருடன் 
நாச்சியார்கோவில் 

புவியீர்ப்பு விசை பூமியை சுற்றி எங்கும் இருக்கிறது.
அது பொருட்களை பூமியை நோக்கி 
இழுக்கிறது.
தூரம் செல்ல செல்ல புவியீர்ப்பு சக்தி
குறைகிறது. 

பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒருவர் 400 km உயரத்தில் வானவெளியில் 63 கிலோ எடையுடன் இருப்பார். 

ஒரு பொருள் பூமியை விட்டு பறந்தால் அது தனது எடையை இழக்கிறது. 

கையில் உள்ள பொருளை எப்படி வீசினாலும் அது நிலத்தை அடையும் வரை எடையற்ற நிலையில் தான் இருக்கும். 

அது போல பூமியில் இருந்து அனுப்பப்படும் செயற்கை கோள்கள் 
நானூறு கிமீ. உயரத்திற்கு மேல் கொண்டு செல்லப் பட்டு, கிடை மட்டமாக [Horizontal direction ] மணிக்கு 27,700 கிமீ வேகத்தில் வீசி 
எரியப்படுகிறது. 

அது பூமியை அடையும் வரை எடையற்ற நிலையில் இருக்கும், அதில் உள்ளவர்களும் எடையற்றே இருப்பார்கள். செயற்கை கோளை அப்படியே விட்டு விட்டால், அது பூமியை நோக்கி விழும், புவியீர்ப்பு சக்தியால் அதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு குறைந்து கொண்டே வரும், 

எனவே, அது பூமியை நோக்கி விழுந்தாலும் அதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

விழனும் ஆனா விழக்கூடாது!! 

பூமி கோள வடிவில் இருப்பதால் அதன் மேற்பரப்பு சமதளமாக இருக்காது, 

ஒவ்வொரு எட்டு கி.மீ தொலைவு செல்லும்போதும் 
பூமி உருண்டை ஆதலால்
நேர்கோட்டில் இருந்து 5 மீட்டர் விலகி இருக்கும்.  

உயரத்தில் இருந்து எந்த ஒரு பொருளை விட்டாலும் முதல் வினாடியில் 5 மீ கீழே இறங்கியிருக்கும்.  

இவை இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு விஷயம் புலனாகிறது!!  

அது, ஒரு பொருளை பக்க வாட்டில் வினாடிக்கு எட்டு கிமீ வேகத்தில் எறிந்தால் அது ஒருபோதும் தரையைத் தொடாது!!    

பூமியை சுற்றிக்கொண்டே இன்னொறு நிலவாக செயல்படும். 

புவியீர்ப்பு கோளை பூமி நோக்கி
இழுத்துக்கொண்டே இருக்கும்.

நாம் நிற்பது, நடப்பது அனைத்து பொருட்களும் பூமியில் இருப்பது அனைத்திற்கும் காரணம் புவியீர்ப்பு 
சக்தியே. 

அந்த புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து
நிறுவப்பட்டதே கல் கருட பகவான். 

கோச்செங்கட்சோழன் முயற்சியால் உருவான கோவில்
ஸ்ரீனிவாசப் பெருமாள் நாச்சியார் கோயில் . 

மன்னர் கோச்செங்கட்சோழன்
தேவசேனாபதியாரிடம் 
தனது கோவிலில் சிலை செய்ய நல்ல 
சிற்பி வேண்டி வந்தார். 

மயூரசன்மன்
தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன். 

முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் அழகாக பாடமாக அறிந்தவன்.  
‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் 
நல்ல முறையில் கற்றவர். 

மன்னருக்கு மயூரசன்மனை அறிமுகம் செய்து வைத்து 
எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் என்றார். 

தேவசேனாபதி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறீர்கள்?" என்று கேட்டார். 

திருநறையூருக்கு" என்றார் மன்னர். 

‘ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. 

பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.  

மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செதுக்க வேண்டிய சிற்பம் எது?" என கேட்டார். 

இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்திவைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன். 

மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.  

மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்." 

மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். 

மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். 

மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம்வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன். 

சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன். 

மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.  

பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்" என்றான் மயூரசன்மன். 

செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன். 

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் இருந்து அருள்பாலிக்கிறார்.

மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. 

கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், 

மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், 

பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. 

அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!.. 

சுமார் மூன்று டன் எடைக்கு மேலே உள்ள கருட பகவானின் எடையை
பூமியிலேயே குறைத்தது எப்படி
படிப்படியாக அதிகரித்து வெளிவருவதில் 
வீதியுலா முடிந்து திரும்ப உள் செல்கையில் படிப்படியாக குறைவதும் 
புரியாத புதிரான விந்தைகள்தானே!

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...