Monday, February 7, 2022

செல்வம் தரும் சிவ பெயர்ச்சி

*(7-2-2022) செல்வம் தரும் சிவ பெயர்ச்சி*!

சனிப்பெயர்ச்சி ,குரு பெயர்ச்சி , ராகு கேது பெயர்ச்சி கேள்விபட்டிருப்பீர்கள்!

சிவ பெயர்ச்சி கேள்வி பட்டுள்ளீர்களா?

ஆம் சிவன் ஆலகால விஷத்தை உண்டு ருத்ர தாண்டவம் ஆடியபோது பிரளயம் உண்டாகியது

ருத்ர மூர்த்தியாக சிவன் கோபம் கொண்டு ஆடியதை கண்ட பார்வதி மனமுருகி ஸ்வாமியை வேண்டி கோபத்தை குறைத்து சாந்த ஸ்வரூபனாக பகவான் சகல உயிர்களையும் காக்க வேண்டும் என வேண்டினாள்

பகவான் அம்பாளின் வேண்டுதலை ஏற்று கோபமார 

ருத்ர ரூபத்திலிருந்து சாத்வீகமான சதாசிவ ரூபத்திற்கு மாறிய தினமே "சிவப்பெயர்ச்சி"

ஒவ்வொரு வருடமும் தை மாதம் கடைசி திங்கட்கிழமை நாளில் வருவதே இந்த சிவப்பெயர்ச்சி!

இந்த சிவப்பெயர்ச்சி தினத்தில் பகவானின் அருள் என்பது மிகப்பெரிய தடைகளை விலக்கும்

இன்றைய கலியுகத்தில் கடன் வியாபாரம் என பல வித மன அழுத்தத்தால் மனித குலம் அதீத கோபத்திற்கு ஆளாகிறது.

அப்படிபட்ட கோபத்தை அழித்து சாந்தம் அன்பு கருணை குணம் மாறக்கூடிய தினமே சிவப்பெயர்ச்சி.

ஏழரை சனி அஷ்டமசனி,ஜென்ம குரு ,ராகு,கேது தீவினைகள் என எல்லாவித கிரக தோஷங்களையும் விலக்கும் ஒரே தினம் தை மாதத்தில் வரும் கடைசி திங்கட்கிழமையே

அனைத்து ராசியினரும் சிவப்பெயர்ச்சி அன்று சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் கடன்,நோய், விலகும் 

சொல் வாக்கு செல்வாக்கு திரும்ப கிடைக்கும். 

மனம் அமைதி பெறும்.கோபம் குறையும் , வீட்டில் அமைதி தங்கும்

நாளை பிப்ரவரி 
7 ம்தேதி 2022 (தை25)தை மாதத்தில் வரும் கடைசி திங்கட் கிழமையன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்யுங்கள்.

சிவப்பெயர்ச்சிக்கான  
விஷேச ஸ்தலம் எங்கு உள்ளது தெரியுமா?

மயிலாடுதுறை அருகில் உள்ள முட்டம் குளத்தங்கரை கிராமத்தில் உள்ள " ஸ்ரீமஹாபலீஸ்வரர்" 
சிவன் கோவிலே சிவப்பெயர்ச்சிக்கான  
விஷேச ஸ்தலம் ஆகும்.

இது மஹாபலிச்சக்கரவர்த்தி தான் இழந்த செல்வம் புகழ் சொல்வாக்கு என அனைத்தையும் மீட்டெடுத்த தலமாகும்.

பல ஆயிரம் வருட பழமையான சிதிலமடைந்த சிவஸ்தலம்.

பெரும்பான்மை மக்களுக்கு தெரியாது.

பெண்புலியை மான்‌கன்றுக்குப்‌ பால்‌ கொடுக்கும்படி செய்த படலம்

பெண்புலியை மான்‌கன்றுக்குப்‌ பால்‌ கொடுக்கும்படி செய்த படலம் - திருவாசகம்..!!

பாண்டி நாட்டிலிருந்த #கடம்பவனத்தில்‌ புலிகள்‌ 
மிகுதியாயிருந்தன. ஆதலின்‌ மானினம்‌ அருகி வந்தது. இறுதியில்‌ பெண்மான்‌ ஒன்று கன்றுபோட்டு, அதனை ஒரு புதரில்‌ மறைத்து வைத்துவிட்டுத்‌ தண்ணீர்‌ பருக ஒரு குளக்கரை சென்றது. அப்பொழுது ஒரு #வேட்டுவன்‌, அதனை அம்பெய்து கொன்று வீழ்த்தினான்‌. அது கீழே விழும்போது தன்‌ கன்றை நினைந்து உயிர்‌ விட்டது. அதனையறிந்த அருட்‌ கடலாகிய #ஆலவாயண்ணல்‌, அக்‌ காட்டில்‌ வேறு பெண்மான்‌ இல்லாமையால்‌ ஒரு #பெண்‌_புலியை அதற்குப்‌ பாலூட்டி. வளர்க்குமாறு அதன்‌ உள்ளத்தில்‌ கடுமை களைந்து கருணையைப்‌ பெருகச்‌ செய்தார். பெண்புலி #மான்‌_கன்றுக்கு முலைப்‌ பாலூட்டி வளர்த்தது. 

அமைவிடம்: #திருப்பரங்குன்றம்_சுப்பிரமணிய_சுவாமி திருக்கோயில்.

திருமலை அமிர்தகலச பிரசாதம்!

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தி..!

உடனே, குழந்தைப்பேறு கிடைக்கவும், பிறக்கும் குழந்தையினால் பெற்றோருக்கு சிறப்பினை உண்டாக்கும் திருமலை அமிர்தகலச பிரசாதம்!

ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும், திருமலை திருப்பதியில பெருமாளுக்கு அமிர்தகலசம் அப்படிங்கிற ஒரு பிரசாதம் நைவேத்யம் செய்யறாங்க.

இது அரிசிமாவு, மிளகு,வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படும் ஒரு பிரசாதம்.

சாமிக்கு நைவேத்யம் செய்துவிட்டு, அடுத்து கருடாழ்வாருக்கு நைவேத்யம் செஞ்சபிறகு, இந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்யறாங்க.

இதோட சிறப்பு என்னன்னா, அமிர்தகலசம் சாப்பிடும் தம்பதிகளுக்கு உடனே, குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதுதான்..,

அதுமட்டுமில்லாம,இந்த அமிர்தகலசம் பிரசாதம் எடுத்துக்கொண்ட தம்பதிகளுக்குப் பிறக்கும் அந்த குழந்தையினால் அந்தத் தம்பதிகளுக்கு சிறப்பு உண்டாகும் என்றும் ஆகம சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அளவிற்கு விசேஷ சக்தி கொண்ட பிரசாதம்தான் அமிர்தகலசம்..!

இந்த அமிர்தகலசம் ஞாயிறு காலை மட்டுமே திருமலை திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

குழந்தை இல்லை அப்படிங்கிற மனக்குறையோட தவிச்சிட்ட இருக்கற தம்பதிகள், இந்த அமிர்தகலசம் பிரசாதத்த வாங்கி சாப்பிட்டு, பெருமாளோட அருளால, உங்க குறைய போக்கிக்கலாம்.

அது மட்டுமில்லாம,பெருமாளோட பரிபூரண ஆசியோட பிறக்கும் அந்தக் குழந்தையால, உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் பெருமை கிடைக்கும் அப்படிங்கறதும், எத்தனை பெரிய ஆசீர்வாதம்..!

அதனால, குழந்தை இல்லாத தம்பதிங்க திருப்பதி கோயில்ல, இந்த அமிர்தகலசம் பிரசாதம் வாங்கிச்சாப்பிட்டு, உங்க குறை தீர, எல்லாம் வல்ல அந்த வேங்கடவன் அருளவேண்டும்னு, பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

அமிர்தகலசம் எனும் இந்தப் பிரசாதத்தை வாங்கறதுக்கு வார,வாரம் ஞாயித்துக்கிழமைகள்ல குழந்தை இல்லாத தம்பதிகள் மத்தியில கடும் போட்டி இருப்பதா சொல்றாரு டாக்டர் ரமண தீட்சிதர்.

சம்மோஹன கிருஷ்ணரை

#அர்த்தநாரீஸ்வரர்_போல 

ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோஹன கிருஷ்ணரை பற்றி உங்களுக்கு தெரியுமா?

நம்மில் அந்நேகம்பேர் சிவன் பார்வதி இணைந்த அர்த்தநாரீஸ்வரர் 
வடிவம் பற்றியும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் பற்றியும் தெரிந்திருப்போம்.

ஆனால் அதே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோஹனூரில் 
ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான
சம்மோஹன கிருஷ்ணர் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயிலை பற்றி அதிகம்பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சரி,இந்த ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான
சம்மோஹன கிருஷ்ணரின் சிறப்புகள் என்ன?அவரை வழிபடுவதால் என்ன பலன்?
அ/மி கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயிலை பற்றிய சிறப்புகள் என்ன? ஆகிய விரங்களை அறிந்து கொள்ளவே இந்த பதிவு.

பூரணஅலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து ரத்ன கிரீடமும் மயிற்பீலியும் தரித்து கருணை மழைபொழியும் 
கண்களோடு  அருள் பொழியும் கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வ கோலமானசம்மோஹன கிருஷ்ணர்திருகோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும். 

சகல சௌபாக்யங்களும்  வந்து சேரும். கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும்.அனைத்து சம்பத்துக்களும் சேரும்.

இத் திருக்கோலத்தை உபாசித்தால் குபேர வாழ்வு பெறலாம்.

இந்த கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வ கோலமானசம்மோஹன கிருஷ்ணர்திருக்கோலம் எங்குள்ளது தெரியுமா?  

நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில் அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில்  
மகா மண்டபத்தின் வலதுபுற விளிம்பில் தனிச்சன்னதியில்
அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான கோபால சுந்தரி எனும் சம்மோகன கிருஷ்ணன் அருள்பாலித்து வருகின்றார்.

இந்த சம்மோகன கிருஷ்ணரையும்
அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணரையும் தரிசிக்க மோஹனூர் செல்வோமா?

அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில்   

மூலவர்:கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர் 
உற்சவர்:சீனிவாசர் 
அம்மன்/தாயார்:பத்மாவதி 
தல விருட்சம்:வில்வம் 
தீர்த்தம்:காவிரி ஆகமம்
பூஜை:வைகானஸம் 
பழமை:500 வருடங்களுக்குள் 
புராண பெயர்:மோகினியூர் 
ஊர்:மோகனூர் 
மாவட்டம்:நாமக்கல் 
மாநிலம்:தமிழ்நாடு 

தல சிறப்பு:காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இங்கு நீராடி சுவாமியை வழிபடுவது சிறப்பு.

அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலத்தை தரிசிப்பது தனிச்சிறப்பு. 

இத்தல இறைவன் கல்யாண
பிரசன்ன வெங்கட்ரமணர் 
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.

காவிரியம்மனுக்கும் தனிசன்னதி இருக்கிறது. ஆடிப்பெருக்கு மற்றும் ஐப்பசி மாதத்தில் இவளுக்கு காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் நடக்கிறது.

சன்னதியின் மேல் விதானத்தில் நவகிரக மரச் சிற்பங்கள். அந்தந்த கிரகங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு.

தலபெருமை:

திருப்பதியில் ஓர் நாள்:

இத்தல சுவாமி கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர் வேதஸ்ருகங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.

திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் கோயில் உருவாக்கப்பட்டதால், நவராத்திரியின்போது வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் "திருப்பதியில் ஓர் நாள்' என்னும் உற்சவம் நடக்கிறது. 

அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடக்கும் முறையிலேயே செய்யப்படுகிறது.

திருப்பதியில் வெங்கடாஜபதிக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே, அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். 

இங்குள்ள உற்சவரும் விசேஷமானவர். பொதுவாக உற்சவமூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்படடிருக்கும். 

ஆனால், இங்குள்ள உற்சவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும், அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் உள்ளது.

தன்வந்திரி சன்னதி:சுவாமி சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கிறது. எதிரே கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். இவர்களை வழிபட்டால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

தன்வந்திரிக்கு, மூலிகைகள் கலந்த சூர்ணம் பிரதான நைவேத்யமாக படைக்கப்பட்டு, சுக்குப்பொடி, நாட்டுச்சர்க்கரை, நல்லெண்ணெய் மற்றும் மூலிகைள் சேர்ந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர்.

ஒவ்வொரு திருவோணத்தின்போதும் மாலையில் சத்யநாராயண பூஜை நடக்கிறது. அப்போது சுவாமிக்கு மட்டைத்தேங்காய் படைத்து வழிபடுகிறார்கள். 

பூஜை முடிந்தபின்பு தேங்காயை வீட்டு பூஜையறையில் வைத்து பூஜிக்க ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

குரு, சிஷ்யை தரிசனம்:சுவாமி கோஷ்டத்தில் லட்சுமி ஹயக்ரீவர் இருக்கிறார். இவருக்கு எதிரே மேதா சரஸ்வதி காட்சி தருகிறாள். இவளிடம் வீணை கிடையாது. பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மாணவர்கள் ஹயக்ரீவருக்கு தேனபிஷேகம் செய்து வணங்கி, சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.

எத்தனையோ கோயில்களில், என்னென்ன காரணங்களுக்காகவோ லட்சார்ச்சனை, யாகங்கள் மற்றும் விழாக்கள் நடத்தப்படுவதுண்டு. ஆனால், இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் ஆண்டிறுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இத்தலத்து பெருமாளுக்கு லட்சார்ச்சனை நடத்தப்படுவது விசேஷம்.

கோவில் அமைப்பு:

கோயில் முன் மண்டபத்தில் நவநீதகிருஷ்ணர் இரு கரங்களிலும் வெண்ணெய் வைத்தபடி காட்சி தருகிறார். உடன் பாமா, ருக்மணி உள்ளனர். 

ஆண்டாள், சக்கரத்தாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. 

தலவிருட்சம் வில்வம். கோயில் வளாகத்தில் வன்னி மரத்தடியில் விநாயகரும், ஆஞ்சநேயரும் இருக்கின்றனர். ஒரு செயலை துவங்குவது விநாயகரிடம், முடிவது ஆஞ்சநேயரிடம் என்பார்கள். இவ்விருவரையும் வழிபட்டு துவங்கும் வேலை, சிறப்பாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. கோயிலுக்கு எதிரே ஆஞ்சநேயருக்கு மற்றொரு சன்னதி இருக்கிறது.

கருடாழ்வார் அமைந்திருக்கும் சோபன மண்டபத்தின் வடபுறம் பரமபத வாசல். அதன் நேர் எதிரே திருப்பதி வேங்கடவனின் சுதைச் சிற்ப உருவம் தாங்கிய உற்சவர் அலங்கார மண்டபம். உற்சவ காலங்களில் சுவாமி அலங்காரம், கருட சேவை சாதிப்பது எல்லாமே இங்குதான். 

அடுத்து மகா மண்டபம், நுழைவாயிலின் இருபுறமும் துவார பாலகர்கள். வலதுபுறம் ஆண்டாளின் சிறு சன்னதி, இடதுபுறம் பாமா ருக்மிணி சமேத நவநீத கிருஷ்ணனின் சிறு சன்னதி.

மகா மண்டபத்தின் இடதுபுற விளிம்பில், லட்சுமி நரசிம்மர் மற்றும் உற்சவர்களின் தனிச் சன்னதி.

 வலதுபுற விளிம்பில் அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணருக்கு தனிச் சன்னதி. 

மகா மண்டப துவார பாலகர்களைக் கடந்து உள்ளே சென்றால், அர்த்த மண்டபம். அங்கு உற்சவர் சீனிவாசர்.

கருவறையில் மூலவராக கல்யாண பிரசன்ன வெங்கடரமண பெருமாள். வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூமாதேவி. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு மூவருமே நின்ற நிலையில் காட்சி அருளிக் கொண்டிருக்கின்றனர். 

கோயிலின் அக்னி மூலையில் கிழக்கு நோக்கி பதினாறு திருக்கரங்களுடன் ஸ்ரீசக்கரத்தாழ்வார். இவருக்கு வெட்டி வேர் மாலை வெகு விசேஷம். பின்புறம் யோக நரசிம்மர். 

தெற்கு மூலையில் பத்மாவதி தாயார், கருவறையின் பின்புறம் தன்வந்தரி என தனிச் சன்னதிகள்.

தன்வந்தரி பெருமாள் சன்னதியின் சுற்றுப்பாதையின் மூன்று புறங்களிலும் தரையில் கூழாங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

வண்ண விளக்குகளுடன் கூடிய கண்ணாடி அறை. 

உற்சவ காலங்களில் ஏகாந்த சேவை இங்குதான். பெருமாளும் கொடுத்து வைத்தவர். அதைக் காண நேரும் பக்தர்களும் கொடுத்து வைத்தவர்கள். 

முதல் பிராகார மண்டபத் தூண்களில் ஆழ்வார்களின் உருவங்கள் சுதைச் சிற்ப வடிவில். 

அதன் கீழே அவரவர் பாடிய பாசுரங்களில் நான்கு வரிகள்.

பிரார்த்தனை:கல்வியில் சிறப்பிடம் பெறவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கவும் , நோய் தீரவும் இங்கு மூலவரான கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணரை வேண்டிக்கொள்கின்றனர்.   

நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசிமாலை, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.    

செல்வ வளம் பெருக,சகல சௌபாக்யங்களும் வந்து சேர
கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்க,அனைத்து சம்பத்துக்களும் சேர,குபேர வாழ்வு பெற அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான கோபால சுந்தரி எனும் சம்மோகன கிருஷ்ணனனை கீழ்க்கண்ட சம்மோஹன கிருஷ்ணர் ஸ்துதி மற்றும் கோபால சுந்தரி காயத்ரியை கூறி வேண்டிக்கொள்கின்றனர்.

சம்மோஹன கிருஷ்ணர் ஸ்துதி  (கோபால சுந்தரி)

ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்

த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்

பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா

சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்

இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை

ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்

ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே!

பொருள்: வலப்புறம் புருஷ உருவமும், இடப்புறம் ஸ்த்ரீ உருவமும் கொண்டு, சங்கம், சக்ரம், அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், வெண்சந்தனம் பூசி மனதை மயக்கும் மிக அழகிய திருவுருவத்தைக் கொண்ட ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரை எனது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் பொருட்டு வழிபடுகிறேன்.

கோபால சுந்தரி காயத்ரி:

ஓம் லலிதாயை வித்மஹே
கோபாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்!

தல வரலாறு:இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவருக்கு வாதநோய் ஏற்பட்டதால், திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர், காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக்கரையை அடைந்தார். அப்போது, கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. என்ன காரணத்தாலோ, பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய திருமால், பாம்பு வெளிப்பட்ட  புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார்.பக்தர் மிகுந்த சந்தோஷப்பட்டார். புற்றை உடைத்து பார்த்த போது, உள்ளே சுவாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு, "கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர்' என்று பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர, பத்மாவதி தாயாருக்கு தனிசன்னதி கட்டப்பட்டது.    

திருவிழா: புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளுகிறார்.    

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Thursday, February 3, 2022

விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில்

விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் வரும் சில வார்த்தைகள் முடிந்த போதெல்லாம் கூறுங்கள் நன் மை அடையுங்கள்

ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)

*படிப்பில் வல்லவனாக*
வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி

*வயிற்று வலி நீங்க*
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா
ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ

*உற்சாகம் ஏற்பட*
அதீந்த்ரியோ மஹாமாயோ
மஹோத்ஸாஹோ மஹாபல

*ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட*
மஹா புத்திர் மகாவீர்யோ
மகாசக்திர் மஹாத்யுதி

*கண்பார்வை தெளிவுபெற*
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்

*பெருமதிப்பு ஏற்பட*
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
ஜஹ்நுர் நாராயணோநர

*எண்ணிய காரியம் நிறைவேற*
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன

*கல்யாணம் நடக்க*
காமஹா காமக்ருத் காந்த:
காம: காமப்ரத: ப்ரபு

*உயர்ந்த பதவி ஏற்பட*
வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:
ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ

*மரண பயம் நீங்க*
வைகுண்ட: புருஷ: ப்ராண:
ப்ராணத: ப்ரணவ: ப்ருது:

*அழியாச் செல்வம் ஏற்பட*
அர்த்தோநர்த்தோ மஹாகோசோ
மஹாபோகோ மஹாதந

*நல்ல புத்தி ஏற்பட*
ஸர்வதர்சீ விமுக்தாத்மா
ஸர்வஜ்ஞோ ஜ்ஞான முத்தமம்

*சுகம் உண்டாக*
ஆநந்தோ நந்தநோ நந்த:
ஸத்யதர்மா த்ரிவிக்ரம

*க்ஷேமம் உண்டாக*
அனிவர்த்தி நிவ்ருத்தாத்மா
ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ

*துன்பங்கள் தொலைய*
பூசயோ பூஷணோ பூதிர்
விசோக: சோகநாசன

*வியாதிகள் நீங்க*
பூர்ண: பூரயிதா புண்ய:
புண்யகீர்த்தி ரநாமய

*மோக்ஷமடைய*
சத்கதி: சத்க்ருதி: ஸத்தா
ஸத்பூதி: ஸத்பராயண

*சத்ருவை ஜெயிக்க*
ஸுலப: ஸுவ்ருத: ஸித்த:
சத்ருஜிச் சத்ருதாபன

*ஆபத்து விலக*
அமூர்த்திரநகோ சிந்த்யோ
பயக்ருத் பயநாசந

*மங்களம் பெருக*
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி
ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண

*துர்சொப்பனம் நீங்க*
உத்தாரணோ துஷ்க்ருதிஹா
புண்யோ துஸ்ஸ்வப்நநாசந

*பாபங்கள் நீங்க*
தேவகீ நந்தந: ஸ்ரஷ்டா
க்ஷிதீச: பாபநாசந:

தைப்பூச பெருவிழா பழனி முருகன் கோவிலில் , palani,

தைப்பூச பெருவிழா பழனி முருகன் கோவிலில் 


தைப்பூச பெருவிழா பழனி முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தைப்பூச திருவிழா நடந்த களைப்பில் இருக்கும் பழனி தண்டாயுதபாணிக்கு எடப்பாடியில் வசிக்கும் பருவதராஜ குல மக்கள் ஆயிரக்கணக்கான காவடிகளுடன் வந்து பல டன் பஞ்சாமிர்தம் செய்து குளிர குளிர அபிஷேகம் செய்து மருமகனை குளிர்வித்துள்ளனர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமான் எப்படி மருமகன் அக முடியும் என்று கேட்கிறீர்களா? திருச்செந்தூர் முருகன் மீனவப்பெருமக்களுக்கு மாப்பிள்ளை சாமி, அதே போலத்தான் எடப்பாடி மக்களுக்கு முருகப்பெருமான் மருமகன் சாமி. வள்ளியை மணம் முடித்த முருகனை மருமகனாக கொண்டாடுகின்றனர் எடப்பாடி மக்கள்.

மருமகனுக்காகவே 300 ஆண்டுகளுக்கும் மேலாக காவடி சுமந்து கொண்டு பாதை யாத்திரையாக வந்து 20 டன் பஞ்சாமிர்தம் தயாரித்து அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்தாக கொண்டுள்ளனர்.

360 ஆண்டு கால பாரம்பரியம் 
பருவத ராஜகுல காவடி குழுவினர்

தைப்பூசத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுவினர் சார்பில், சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தருவது வழக்கம். 

கடந்த 360 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக வரும் எடப்பாடியை‌ சேர்ந்த பருவத ராஜகுல காவடி குழுவினர் பழனிகோவிலுக்கு வந்து இரவு நேரமும் பழனி மலைக்கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட செப்புப்பட்டயம் வழங்கப்பட்டுள்ளது.

ஆட்டம் பாட்டம் 
பய பக்தியோடு விரதம்
பழனி மலை முருகனை தரிசிக்க செல்பவர்கள் மாலையில் கீழிறங்கி விட வேண்டும். ஆனால் எடப்பாடி பருவதராஜ குல மக்கள் மட்டும்தான் விடிய விடிய தங்கியிருந்து பல ஆயிரம் கிலோ பஞ்சாமிருதம் தயாரித்து வழிபடுகின்றனர். மலையை பல டன் மலர்களால் அலங்கரித்து ஆட்டம் பாட்டம் என பழனியை அதிர வைத்து விடுவார்கள்.
பழனி மலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டதும் எடப்பாடி கிராம மக்கள் பாதயாத்திரைக்கான காப்பு கட்டி, விரதத்தைத் தொடங்கிவிடுவார்கள். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஒட்டுமொத்த கிராமமே விரதமிருப்பர்

கொண்டாட்டமாக வந்த பக்தர்கள்
பழனி ஆண்டவரைத் தரிசித்து, வீடு வந்து சேர்ந்ததும் படையல் போட்டப் பிறகுதான் அவர்களின் விரதம் நிறைவு பெறும். அந்தளவுக்குப் பக்தியுடன் விரதம் இருந்து தன் மருமகனை வழிபடுகிறார்கள் எடப்பாடி மக்கள்.
இந்த ஆண்டும் பழனி தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுவினர் காங்கேயம், வட்ட மலை, தாராபுரம் வழியாக நேற்று பழனியை வந்தடைந்தனர். ஆயிரக்கணக்கான எடப்பாடி மக்கள் சர்க்கரைக் காவடி, கரும்புக் காவடி, இளநீர்க் காவடி, தீர்த்தக் காவடி என்று விதவிதமான காவடியெடுத்து பெருங்கொண்டாட்டத்துடன் பழனியில் குவிந்தனர்.

படி பூஜை 
படிகளுக்கு பூஜை
மலைக் கோவிலில் படி பூஜை செய்து வழிபட்டனர். மலையில் தங்கியிருந்த மக்கள் ஓம் சரவண பவ என்று மலர்களால் அலங்காரம் செய்தனர். விபூதி படையல் போட்டு அரோகரா என்று முழக்கமிட்டனர். அந்த முழக்கம் மலை முழுவதும் எதிரொலித்தது. எடப்பாடி காவடிக் குழுவில் அன்னதான குழு, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குழு என பல்வேறு குழுக்கள் உள்ளன. எடப்பாடி பஞ்சாமிர்தம் தயாரிப்பு குழுவினர் பழனி மலைக்கோவிலுக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரித்தனர்.

எடப்பாடி பக்தர்கள்
இதற்காக 10 டன் வாழைப் பழங்கள், 5 டன் சர்க்கரை, இரண்டரை டன் பேரீச்சம் பழம், 1 டன் கற்கண்டு, 250 கிலோ தேன், 250 கிலோ நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை பயன்படுத்தி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டது. ராட்சத அண்டாக்களில் வாழைப்பழம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கலந்து தயாரிக்கப்பட்ட இந்த பஞ்சாமிர்தம் பழனியாண்டவருக்கு படைத்து, பின்னர் எடப்பாடி பக்தர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள்.

மருமகனுக்கு அபிஷேகம் 
நோய் தீர்க்கும் திருநீறு
வள்ளியை மணம் முடித்த முருகனை மருமகனாக கொண்டாடுகின்றனர் எடப்பாடி மக்கள். நோய் தீர்க்கும் பிரசாதமாக பழனி மலை விபூதியை கொண்டாடுகின்றனர். உடல் நிலை பிரச்சினை ஏற்பட்டால் முருகனை நினைத்து திருநீறு பூசினால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. முருகப்பெருமான்தான் இவர்களுக்கு குல தெய்வம். தெய்வமாக பார்ப்பதை விட மருமகனாக பார்ப்பதுதான் இவர்களுக்கு பிடித்திருக்கிறது. அந்த பாசத்துடன்தான் தைப்பூசம் முடிந்து சீர் கொண்டு வந்ததோடு பல ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரித்து அபிஷேகம் செய்து வழிபட்டு வீடு திரும்புகின்றனர்.

மீனாட்சி அம்மன், madurai Meenakshi Amman

மீனாட்சி அம்மன்:

"அம்மாடி!! மீனாக்ஷி!! ராஜ உத்தரவு!! மடப்பள்ளில நிறைய நைவேத்யம் பண்ணனும்!! முடியல்லே!! சித்த தூங்கிக்கறேன்!! மறக்காத நேரத்துக்கு எழுப்பிடுடீ!! மறந்துடாதே" மீனலோசனையின் மீதுள்ள அதீதமான உரிமையால் ஶ்ரீநிவாஸர் தேவிக்கே உத்தரவிட்டு, மடப்பள்ளியை உள்பக்கமாய் தாழ் போட்டுக்கொண்டு உறங்கிப்போனார்.

தடதடவென சத்தம்!! "யார் மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது!!" கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் ராஜ ஸேவகர்கள்!!

"என்னங்கானும்!! நீர் கதவை அடைச்சுண்டு உள்ள என்ன பண்றீர்!! காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா!! குருக்கள் காத்துண்ட்ருக்கார்!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ!!" ராஜ ஸேவகர்களோடு வந்த பட்டரின் குரல்.

"ஐயோ!! மீனாக்ஷி!! கைவிட்டுட்டியேடீ!! எழுப்பி விடுன்னு சொன்னேனே!! ஒரு நைவேத்யமும் தயாராகலையே!! நான் என்ன பண்ணுவேன்!! அம்மா!! ராஜ தண்டனை தான் எனக்கு இன்னிக்கு!!" பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார் ஶ்ரீநிவாஸர்.

"நகருங்காணும்!!" பட்டரொடு நான்கைந்து பேர் நுழைந்தனர் உள்ளே!!

"ஆஹா!! சக்கரைப் பொங்கல்!! தேங்காய் சாதம்!! புளியஞ்சாதம்!! எலுமிச்சை சாதம்!! போளி!! வடை!! பால் பாயசம்!! ஒன்னு பாக்கியில்லையே ஓய்!! இத்தனையும் தனியாவா பண்ணேள்!! ஒன் சிஷ்யாள்ல்லாம் அண்ணா கதவை சாத்திண்டார்!! எப்படி திறக்கறதுன்னு தெரியல்லேன்னு புலம்பிண்ட்ருந்தாளே!! " சொன்னவரின் கண்கள் சர்க்கரை பொங்கலிலும், போளியிலுமே இருந்தது.

மீனாக்ஷிக்கு நைவேத்யம் ஆனதும் ஸோமசுந்தரன் இதை சாப்டறானோ இல்லையோ, நாம சாப்டுடனும் அவர் மனது துடித்துக் கொண்டிருந்தது.

ஶ்ரீநிவாஸருக்கு ஒரே குழப்பம்!! "என்னதிது!! நாம தான் எழுந்துக்கவே இல்லையே!! யார் இதெல்லாம் பண்ணிருப்பா!!" நிகழ்வின் ப்ரமிப்பில் ஶ்ரீநிவாஸர் விலகவில்லை.

"உம் கைக்கு தங்க மோதரம் போடனும் ஒய்!! வாரும்!! மீனாக்ஷிக்கு தீபாராதனை ஆகப்போறது!! பார்ப்போம்!!" எல்லோரும் சிவராஜமாதங்கியின் ஸந்நிதிக்கு விரைந்தனர்.

குருக்கள் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பின் தீபாராதனைக்கு திரையை விலக்கினார்.

"ஐயோ!! மாணிக்க மூக்குத்தி காணுமே!! அம்மா!! மீனாக்ஷி!! என்னடி சோதனை இது!!" குருக்களின் கதறல் மீனாக்ஷி கோவிலுக்கு வெளி வரை எதிரொலித்தது.

மீனலோசனையின் அழகையே மெருகூட்டும் மூக்குத்தி தொலைந்த துக்கம் ராஜாவிற்கும், மற்ற அனைவருக்கும்!! ஶ்ரீநிவாஸருக்கோ நடப்பதைக் கண்டு பயம்!! அபசாரம் நிகழ்ந்ததோ என்று!!

அசரீரி கேட்டது  
"அஞ்சற்க!! என் பிள்ளை ஶ்ரீநிவாஸன் சரீர களைப்பால் என்னை எழுப்பிவிடச் சொல்லி உறங்கிப்போனான்!! காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன்!! அயர்ந்து அவன் உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன். துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப்பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து, அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன்!! குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ!! அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது!! மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள் !! மூக்குத்தி இருக்கும்!!" சட்டென நின்றது அசரீரீ

நடப்பது கனவா நினைவா என யோசிப்பதற்க்குள் மீனாக்ஷி மூக்குத்தி மடப்பள்ளியிலிருந்து வந்தது.

"அம்மா!! மீனாக்ஷி!!" ஶ்ரீநிவாஸர் கண்களில் ஜலம் பெருக கதறி மீனாம்பாளின் பாதத்தில் விழுந்தார். "அம்மா!! அம்மா!!ன்னு ஸதா கூப்பிட்டதற்கு நீயே எனக்காக நைவேத்யம் சமைச்சிருக்கியே!! தாயே!! நான் என்ன பாக்யம் பண்ணேன்!!" கண்ணீர் கண்களை மறைக்க கதறினார் ஶ்ரீநிவாஸர்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம்

பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியாதவர்கள், இதை செய்யுங்கள். பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றிய பலனை நம்மால் பெற முடியும்.

அதிகாலை விடியும் பொழுதில் சுத்தமான காற்று வீசிக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்த பிரபஞ்சம் நேர்மறை ஆற்றலை பூமிக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் மனதார நினைக்கும் எந்த ஒரு காரியமும் நிச்சயமாக நடந்தே தீரும். இறை ஆற்றல் நிரம்பி வழியும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வது நன்மை தரும் என்பது சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விஷயம்.

ஆனால் நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து பூஜையறையில் தீபம் ஏற்றுவது என்பது இயலாத காரியமாக இருக்கிறது. சில பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் சுத்தமாக இருக்கும் சமயத்தில் முகம் கை கால்களை அலம்பி விட்டு பூஜையறையில் தீபம் ஏற்றலாம் என்று.

ஆனால் சில பேருக்கு குளிக்காமல் பூஜை அறைக்குள் செல்வது பிடிக்காது. குளிக்காமல் தீபம் ஏற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு வேறு ஏதாவது ஒரு வழி உள்ளதா. பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பலனைப் பெற வேறு ஒரு வழி உள்ளது.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு இனிப்புப் பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம், இதில் உங்கள் வீட்டில் எது இருந்தாலும் சரி. அதில் சிறிதளவை எடுத்துக் கொண்டு போய் வீட்டு வாசலுக்கு வெளியே, நீங்கள் கோலம் போடும் இடத்தில் ஒரு ஓரமாக போட்டு விடுங்கள்.

பிரம்ம முகூர்த்தத்தில் அன்னதானம் செய்த புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும். அதாவது அந்த நேரத்தில், ஓரறிவு கொண்ட புழு பூச்சிகள், எறும்புகள், வண்டுகள் தூங்காமல் தனக்கான இரை தேடிக் கொண்டுதான் இருக்கும். அந்த சிறுசிறு பூச்சிகளுக்கு நீங்கள் போடும் இந்த இனிப்பு பொருள் உணவாக அமையும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் பசியோடு இரை தேடிக் கொண்டிருக்கும் அந்த ஜீவன்கள், நீங்கள் போட்ட உணவை பிரம்ம முகூர்த்தத்தில் சாப்பிட்டு, உங்களை வாழ்த்த, அந்த வாழ்த்து முழுமையாக உங்களை வந்து சேரும். இதனால் உங்களுடைய வாழ்க்கையில் கோடான கோடி புண்ணியத்தை நீங்கள் அடையலாம்.

எறும்புகளுக்கு இறை போட்டு விட்டு, வீட்டிற்குள் வந்து பத்து நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். மனதார உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு என்ன தேவையோ அதை நேர்மறையாக நினைத்து தியானம் செய்ய வேண்டும். அதன் பின்பு நீங்கள் மீண்டும் உறங்கச் செல்லலாம். குறிப்பாக இந்த வேலைகளை அதிகாலை 3.00 மணியிலிருந்து 5.00 மணிக்குள் செய்து முடித்திருக்க வேண்டும். இந்த இரண்டு மணி நேரத்தில் நீங்கள் செலவழிக்கப் போகும் 15 நிமிடம் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்களை உண்டு பண்ணும்.

இதை செய்வதற்கு 15 நிமிடத்திற்கு மேல் எடுக்காது. வெறும் 48 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றத்தை நீங்களே உணரலாம். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் சிறப்புப்பதிவு.

மகாதீபக் கொப்பரைக்கும் ஒரு வரலாறு........

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு மஹா தீபம் ஏற்றப் படவுள்ள ௨௫௦[250] கிலோ எடை கொண்ட கொப்பரை , கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபக்கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சிக்கு இன்று எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்த ஆண்டு புதிய தீபக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.௨௫௦ கிலோ எடை கொண்ட பஞ்சலோகக் கொப்பரை கோயம்பத்தூரைச் சேர்ந்த ஓர் அன்பரால் காணிக்கையாக வழங்கப்பட்டதாகும்.

நாளை , அதிகாலை, நான்கு மணிக்கு, கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள், ‘ஏகன், அனேகன்’ என்பதை விளக்கும் பரணி தீபமும், மாலை, ஆறு மணிக்கு, ௨௬௬௮ [ 2668 ] அடி உயர மலை உச்சியில், ‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இதையொட்டி,அண்ணாமலையார் திருக்கோயிலின் சிறிய நந்தியார் சந்நிதி முன்பு இன்று அதிகாலை பருவதராஜகுல மரபைச்சார்ந்த அன்பர் வேல்முருகன் அவர்களின் தலைமையில் மகா தீபக் கொப்பரைக்கு அலங்கார தீபாராதனை நிகழ்த்தப் பெற்று பதினைந்து ஊழியர்கள் மூலமாக "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற முழக்கத்துடன் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது.சென்ற ஆண்டின் பழைய கொப்பரையை விட நூறு கிலோ எடை கொண்ட தீபக்கொப்பரையைக் கொட்டும் மழையிலும் பத்திரமாகக் கொண்டு சென்றனர்.
 
இதில், ஏற்றப்படும் மஹா தீபத்தை, ௪௦ கி.மீ., வரை பார்க்க முடியும்.கொப்பரை, வெப்பத்தால் சேதமாகாமல் இருக்க, மேல்பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவும், ௨௫௦ [250] கிலோ எடையில், கால் அங்குலம் தடிமன் கொண்டதாகவும், ௨௦ வளையங்களுடன் கூடிய செப்புத் தகட்டில் செய்யப்பட்டுள்ளது.

கொப்பரைக்குக், காவி வர்ணம் பூசப்பட்டு, ‘'சிவ சிவ’' என்ற வாசகம் எழுதப்பட்டு, விபூதிப் பட்டையுடன் கூடிய லிங்கம், , தீப விளக்கு எரிவது போலவும் அதன்கீழ் மகாதீபம் என்ற சொற்களுடன் படம் வரையப்பட்டுள்ளது.

முன்னதாக,இந்த கொப்பரை நேற்று கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன .

பழைய கொப்பரையும் பழுது பார்க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

 திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை ௨ ,௬௬௮ [ 2668 ] அடி உயரம் கொண்டது.[ தற்போது தமிழக அரசு இதன் உயரம் ௨௭௪௮ [ 2787 ] அடிகள் என அறிவித்துள்ளது.] இதன் உச்சியில் பிரம்மாண்டமான கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்.

 பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த தீப உற்சவம். மலைமேல் மகாதீபம் என்ற பெருமை இங்கு மட்டுமே உள்ளது. பின்னாட்களில் திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றும் வழக்கம் உண்டானது.

 மகாதீபம் ஏற்றும் உரிமை செம்படவர் எனப்படும் மீனவர் இனத்தவருக்கு உரியது. மீனவர் தலைவரான பர்வதராஜன் என்பவனின் மகளாகப் பார்வதி தேவி பிறந்தார் . மீன் போன்ற அழகிய விழிகளை உடையவள் என்ற பொருளில் '' கயல் கண்ணி '' என்று பெயரிட்டனர். பலரும் '' கயல் கன்னி '' என்று குறிப்பிடுகின்றனர்; இது தவறு. '' கயல் கண்ணி '' என்பதே சரி. மீனாட்சி அம்மனுக்கு அங்கயற்கண்ணி, அதாவது அம் + கயல் + கண்ணி என்று ஒரு பெயர் உண்டு. இந்த கயல் கண்ணியினைச் சிவபெருமான், மீனவ இளைஞனாக வந்து, மணந்து, தேவியின் சாபம் நீக்கி, இருவரும் சிவ பார்வதியாக பருவதராஜனுக்குத் தரிசனம் தந்தனர். இதனால் மீனவர்களுக்குப் பருவதராஜகுலத்தார் என்று பெயர் ஏற்பட்டது.செம்படவர் என்ற பெயரும் இதே பொருளில்தான். படகுகளில் செல்வதால் படவர்; சிவன் + படவர் என்பதே செம்படவர் என்று ஆனது.
 இந்த பருவதராஜகுலத்தார் தான் தலைமுறை தலைமுறையாக மகாதீபம் ஏற்றும் உரிமைகளை உடையவர்கள். 

தீபத் திருவிழாவின் பத்தாம் நாள் மாலையில் மலைமேல் ஏற்றுவதற்காக தீபக் கொப்பரை, மலைமீது முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டிருக்கும்.

 தீபத் திருவிழாவில் தீபம் ஏற்றும் கொப்பரை பற்றியும் வரலாறு உண்டு. 

ஆதி காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் செய்து கொடுத்துள்ளனர். அது பற்றி தகவல் திரட்ட படவில்லை. புதுயுகம் ௧௬௬௮ [1668 ] ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட ௩௫௦ ஆண்டுகள் முன்பு வேங்கடபதி என்பவர் நாலரைபாகம் எடைகொண்ட[ இது எந்தவகை எடை என்று தெரியவில்லை ] வெண்கலத்தால் செய்யப்பட்ட கொப்பரை செய்து அளித்துள்ளார்., கோயிலில் இது பற்றிய குறிப்பு பதிவாகி உள்ளது.இது, தொடர்ந்து நெடுங்காலம் பயன்படுத்தப்பட்டதால் சேதமடைந்தது.

 இதையடுத்து, இப்போது உள்ள கொப்பரையின் வடிவமைப்பு உருவானது.இது ௧௯௯0 [1990 ]ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ௯௨ [ 92 ] கிலோ செம்பு ௧௧௦ [ 110 ]கிலோ இரும்புச் சட்டங்களால் வடிவமைக்கப்பட்டது.கொப்பரையில் அடிப்பாகம் ௨௭ [ 27 ] அங்குல விட்டமும் மேற்புறம் ௩௭ [ 37 ] அங்குல விட்டமும் உடையது. மொத்த உயரம் ௫௭ [57 ] அங்குலம்.
இந்தக் கொப்பரையைத் தயார் செய்து தரும் பணியைப் பக்திபூர்வமாக செய்து வருபவர் சுமார் ௭௦ [70 ] வயதான மண்ணு நாட்டார் என்ற பருவதராஜகுலப் பெரியவர்.  

அவருடைய மகன் பாஸ்கர், இவ்வாறு கூறுகிறார்=

''கார்த்திகை தீபத் திருவிழாவின் சிறப்பே 'மகா தீபம்' தான். இந்த 'மகா தீபம்' ௨ ,௬௬௮ [ 2,668 ]அடி உயரம் உள்ள மலை உச்சியில் ௩௦ [ 30] ஆம் தேதி மாலை ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றும் உன்னதமான இந்தப் பணியை, 'நாட்டார்கள்' என்று அழைக்கப்படும் பர்வதராஜ குலத்தைச் சேர்ந்தவர்களான நாங்கள், தலைமுறை தலைமுறையாகச் செய்து வருகிறோம். மகா தீபத்துக்கான பிரம்மாண்டமான கொப்பரை தயாரிப்பதில் இருந்து, மலை மீது ஜோதியை ஏற்றுவது வரையிலான இறைப்பணியைச் செய்வது எங்கள் குல வம்சத்தினர்தான்.

இதில் நாங்கள், கடந்த ௧௯௯௦[ 1990] -ஆம் ஆண்டில் இருந்து கொப்பரையைச் செய்வது மற்றும் வருடம்தோறும் பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்யும் வாய்ப்பை அண்ணாமலையார் அருளால் பெற்றிருக்கிறோம்.

மலை மீது ஏற்றப்படும் ஜோதி பிரகாசமாக சுடர்விட முக்கிய காரணம் அதன் கொப்பரையே. கடந்தமுறை கொப்பரை தாமிரத்துடன் இரும்பு கலந்து தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை முழுக்க முழுக்க தூய தாமிரத்தகட்டினால் (செம்புத்தகடு) தயாரிக்கப்பட்ட கொப்பரையையே 'மகா தீபம்' ஏற்ற பயன்படுத்துகிறோம். ஆகம விதிகளின்படி மகா தீபக் கொப்பரை, மொத்த உயரம் ௫௭ [57 ] அங்குலம். அதன் வாய் ௩௭ [ 37 ] அங்குல விட்டமும் கொண்டதாக வடிவமைக்கப்படும்.

 மகா தீபத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கொப்பரை பழுதானதால் ௨௦௧௬ [2016] ஆம் ஆண்டு ஆண்டு புதிய கொப்பரை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை என் தந்தை மண்ணு நாட்டார் தயாரித்துத் தந்துள்ளார். அவர் தயாரித்துத் தரும் மூன்றாவது கொப்பரை இது.

சுமார் இரண்டு இலட்சம் மதிப்பில், மொத்த உயரம் ௫௭ [57 ] அங்குல உயரத்தில், கீழ்வட்ட சுற்றளவு ௨௭ [27 ] அங்குலம், மேல்வட்ட சுற்றளவு ௩௭ [ 37 ]அங்குலம், ௨௦௦ [ 200 ] கிலோ எடையில் கொப்பரை செய்யப்பட்டுள்ளது.''இவ்வாறு அவர் மகன் பாஸ்கர் கூறினார்.இந்த கொப்பரை மீண்டும் செப்பனிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்து என்பது குறிப்பிடத்தக்கது. 


வில்வம்

வில்வம் !மகாவில்வம் !
நமக்கு நாமே வைத்தியம் மூலிகை மருத்துவம் 9
            யாவர்க்குமாம் இறைவனுக்கு ஓர் பச்சிலை என திருமூலர் அருளிய ஒரு வாசகம் இறைவனுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும்.
              இறை வழிபாடு செய்ய பூ பணியார பலகாரம் தேவையில்லை ஒரு பச்சிலை போதும் இறைக்கும் இரைக்கும்!
           வில்வம் மூன்று இலைகள் கொண்டது சிவனுக்கும் மகாலக்ஷ்மி பூஜைக்கும் வில்வமே பிரதானமானது கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பில்வாஷ்டகம் சொல்லி வில்வ பூஜை உண்டு தற்போது நிறைய சிவன் கோவிலில் வில்வம் என்று நொச்சி இலையை தான் அர்ச்சித்து வருகின்றனர். சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் வைத்தீஸ்வரன் கோவிலிலும் இந்த நிலை உண்டு .
   வில்வத்தில் 3,5,7,9, 11, 12, என்று இலைகள் இணைந்த தொகுப்பு உண்டு இதில் சில இடங்களில் 13 இலைகள் கொண்டது மகாவில்வம் .
            திதிகளில் பிரதமை துவிதியை என்று கணக்கிட்டில் 13 திதி சிவனுக்கு உகந்த திதி பிரதோஷ நாள் இந்த 13 இலை கொண்ட மகாவில்வாச்சனை செய்வது சிறப்பானது 13 இலை கொண்ட மகாவில்வத்தை கொண்டு சிவபூஜை செய்து இன்னும் சிறப்பானது 
          10, 13 முகம் கொண்ட ருத்ராட்சம் மனிதர்கள் அணிய கூடாது என்று சொல்வதுண்டு அதற்கு காரணம் அதை அணியும் தகுதி சிவனுக்கு மட்டுமே உள்ளது.
       பத்து இலை கொண்ட வில்வத்தை கொண்டு பத்து தலை ராவணன் சிவபூஜை செய்து சாகாவரம் பெற்றார். தசாவதாரம் பத்து என்று பத்தையும் பற்றியதால் பத்து முகம் ருத்ராட்சமும் மனிதர்கள் அணிய கூடாது. தற்போது கிடைப்பதும் மிக அரிது அதிக அளவில் மூன்று ஐந்து முகம் கொண்ட மரங்கள் தான் உள்ளது முன்பு ஒரு முகம் முதல் பல முகம் கொண்ட ருத்ராட்சம் இந்தியாவில் இருந்தது இந்த மரத்தின் அடர்வு காரணமாக ஆங்கிலேயர் இரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகளும் பயன்படுத்தியதால் பல அரிதான ருத்ராட்சம் மரங்கள் அ அழிந்து விட்டது. 
            இந்த 13 என்ற எண்ணை கண்டால் ஆங்கிலேயர்கள் கூட அலறி ஓடுவார்கள் இதற்கு பின்னால் இருப்பது இந்திய இலை ரகசியம் தான்! 
       உலகில் குள்ளமான சீனர்கள் எல்லாவற்றையும் குறைக்க முயற்சி செய்வார்கள் எல்லா நாட்டையும் குறைந்து மதிப்பிடுவார்கள் 13 னை 1+3=4 என்று குறைத்து 4 ஆம் எண்ணை பேய் எண் என்று சொல்லி பேய்யை கண்டது போல் பேய் போல் ஓடுவார்கள்.
         கோனேரி ராஜபுரம் உமாமகேசுவர் கோவிலில் தல விருட்சமாக இருப்பது இந்த 13 இலைகள் கொண்ட மகாவில்வமாகும் !
🌿மருத்துவ பலன்கள்:
 வில்வம் துவர்ப்பு சுவையுள்ள தழை ! துவர்ப்பு சுவையுள்ள பொருட்கள் அனைத்தும் இரத்ததை சுத்தம் செய்யும் துவர்ப்பு சுவை அதிகம் உண்ணும் போது உடலில் தேவையற்ற சக்கரை அளவை சரிசெய்யும் ஆற்றல் வில்வத்திற்கு உண்டு.
              ஆதிமூலனுக்கு உகந்த இந்த இலை மனித உடலில் மூலத்தை சரிசெய்யும்.
   🌿தினமும் மூன்று வேளை ஐந்து இலையுடன் சிறிது ஜிரகத்தை வைத்து சாப்பிட்டால் மூல நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
🌿 ஜூரம் தீர ஐந்து வில்வ இலைகளை மென்று சாப்பிட்டால் ஜூரம் தீரும் குழந்தைகளுக்கு இலையை அரைத்து வடிகட்டி ஒரு சங்கு அளவு கொடுத்தால் ஜூரம் தீரும்.
🌿 பெண்களுக்கு ஏற்படும் அதிக படியான உதிரப்போக்கை கட்டுபடுத்த வில்வ இலைகளை அரைத்து ஒரு அரை நெல்லிக்காய் அளவு மூன்று வேலையும் சாப்பிட்டால் மூன்று தினங்களில் நிற்கும்.
🌿 தோல் வியாதிகளுக்கு வில்வ இலை சிறிது ஜிரகம் பத்து மிளகு இவைகளை அரைத்து பசும் மோரில் கலந்து மூன்று மாதங்கள் குடித்து வந்தால் ஆண்டு கணக்கில் இருந்த தோல் நோயாக இருந்தாலும் சரியாகும்.
🌿 கண்பார்வை குறைபாடு கண் எரிச்சல் இருந்தால் வில்வ இலைகளை விளக்கெண்ணெய் அல்லது வெண்ணெய் போட்டு வதைக்கி கண்மீது வைத்து கட்டினால் கண் நோய் தீரும்.
🌿 வில்வ இலைகளை அரைத்து இளநீரில் கலந்து குடித்தால் இளைஞர்கள் உடல் நோய் தீரும்.
🌿 வில்வ பட்டைகளை சந்தனம் போல் இழைத்து முகத்தில் போட்டால் விளக்கு போல் ஜொலிக்கும்.
🌿 வில்வ இலைகளை நிழலில் காய வைத்து சித்தரெத்தை அதிமதுரம் மிளகு வெள்ளெருக்கு பூ இதழ்களை நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து வைத்து இரண்டு கிராம் எடையளவு தேனில் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா அடியோடு தீரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
🌿 சித்தமேறி பித்து பிடித்து பிடித்தவர்களுக்கு இரு மண்டலம் வில்வம் இலைகளை அரைத்து விழுங்க வைத்தால் சித்தம் தனியும். 
🌿 வயிற்றில் புண் வந்தால் அல்சர் நோய் இதை சரிசெய்ய வில்வம் இலைகள் மட்டுமே தினமும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து குடித்தால் போதும் இலைகள் கிடைப்பது அரிது என்றல் வில்வாதி லேகியம் என்று கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி சாப்பிடலாம் எல்லா வகையான இரைப்பை குடல் நோய் தீர வில்வாதி லேகியம் காலை மாலை சாப்பிடலாம் வயிற்றில் புண் வந்தால் நாக்கில் மாவு படியும் வயிற்று புண் வந்தால் முதலில் நாக்கில் மாவு படரும் அதை அலோபதி மருத்துவத்தில் டைப்ஃபாயிடு மீனவர் என்று சொல்வார்கள் நாம் உடனே மருத்துவர் பரிந்துரைத்த டோலோ 650-1000 வரை வீட்டமீன் மாத்திரை இல்லாமல் இஷ்டப்படி போட்டு ஏற்கெனவே புண்ணாகி போன இரப்பையை மேலும் ரணபடுத்தி விடுவோம் அடுத்து வயிறு எல்லாம் எரியுது பத்து நாட்கள் கழித்து கதறுவது வழக்கம் உடனே மருத்துவர் ஒரு இண்டோஸ்கோப் செய்து பார்த்து விடலாம் பார்த்து பெப்டிக் அல்சர் என ஒரு முழம் நீளத்திற்கு மருத்துகளை எழுதி தருவார்கள் இதை ஈஸியாக சரி செய்ய வில்வாதி லேகியம் காலை மாலை அரை நெல்லிக்காய் அளவு எடுத்து கொண்டால் போதும். 
            சித்த வைத்தியம் தற்போது செயல் படாமல் இருக்க காரணம் அந்த காலத்தில் நோய் வந்து வைத்தியரிடம் சென்றால் முதலில் பேதி மருந்து கொடுத்து முதல் நாள் உணவில் உள்ள உப்பு புளியை உடலை விட்டு விலக வைத்து மறுநாள் மருந்துகளை உப்பு புளி இல்லாமல் பத்தியம் இருக்க சொல்லி மருந்துகளை கொடுப்பார் விருந்து மருந்தும் மூன்று நாட்கள் ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் மருந்து உண்ண விரைவில் பலன் கிடைத்தது புளியை சேர்த்தால் தழைகளில் உள்ள மருத்துவ குணங்கள் முறிந்து விடும் வீட்டில் உடலுக்கு நல்லது என்று கருவேப்பிலை கொத்தமல்லி புதினா சட்னி அரைப்பது உண்டு அதில் சுவைக்கு புளியை சேர்த்து விடுவார்கள் ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி தயிர் போல் பலனை முறிந்து விடும் அதற்கு பதிலாக தற்போது நெல்லிக்காய் எல்லா நேரத்திலும் கிடைக்கிறது அதை அதேஅளவு அல்லது சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம் இலைகளில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
 வில்வ பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும் ஆனால் அதை சாப்பிடுவது கஷ்டம் பழத்தை தலைக்கு தேய்த்து குளித்தால் முடி உதிர்வது நிற்கும் அதுவே ஜெல் போல் இருக்கும்.
    வில்வ பூ வாசம் தாமரை பூ வாசம் போல் இருக்கும் மிகவும் ரம்மியமாக இருக்கும்.
 வில்வ இலை கொண்டு மகாலக்ஷ்மியை வழிபட்டால் மகா லக்ஷ்மி மனம் மகிழ்ந்து நமக்கு வேண்டியதை வேண்டிய படி அருள்வார் 

பகவத்கீதை

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை. 

43 அறிவுரைகள்! இதற்கு மேல் 
எவரும் அறிவுரை கூற இயலாது.

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 
13. அவ்வப்போது பரிசுகள் அளி. 
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே. 
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே! 
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு. 
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ 

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.

பசு.god

பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர்என்று தெரியுமா..?
தலை - சிவபெருமான் 
நெற்றி - சிவசக்தி 
வலது கொம்பு - கங்கை 
இடது கொம்பு - யமுனை 
கொம்புகளின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள். 
கொம்பின் அடியில் - பிரம்மன், திருமால் 
மூக்கின் நுனி - முருகன் 
மூக்கின் உள்ளே - வித்யாதரர்கள் 
இரு காதுகளின் நடுவில் - அஸ்வினி தேவர் 
இரு கண்கள் - சூரியன், சந்திரன் 
வாய் - சர்ப்பாசுரர்கள் 
பற்கள் - வாயுதேவர் 
நாக்கு - வருணதேவர் 
நெஞ்சு - கலைமகள் 
கழுத்து - இந்திரன் 
மணித்தலம் - எமன் 
உதடு - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
கொண்டை - பன்னிரு ஆதித்யர்கள் 
மார்பு - சாத்திய தேவர்கள் 
வயிறு - பூமிதேவி 
கால்கள் - வாயு தேவன் 
முழந்தாள் - மருத்து தேவர் 
குளம்பு - தேவர்கள் 
குளம்பின் நுனி - நாகர்கள் 
குளம்பின் நடுவில் - கந்தர்வர்கள் 
குளம்பின் மேல்பகுதி - அரம்பெயர்கள் 
முதுகு - ருத்திரர் 
யோனி - சப்த மாதர் (ஏழு கன்னியர்) 
குதம் - லட்சுமி 
முன் கால் - பிரம்மா 
பின் கால் - ருத்திரன் தன் பரிவாரங்களுடன்
பால் மடி - ஏழு கடல்கள் 
சந்திகள் - அஷ்ட வசுக்கள் 
அரைப் பரப்பில் - பித்ரு தேவதை 
வால் முடி - ஆத்திகன் 
உடல்முடி - மகா முனிவர்கள் 
எல்லா அவயங்கள் - கற்புடைய மங்கையர் 
சிறுநீர் - ஆகாய கங்கை 
சாணம் - யமுனை 
சடதாக்கினி - காருக பத்தியம் 
வாயில் - சர்ப்பரசர்கள் 
இதயம் - ஆகவணியம் 
முகம் - தட்சரைக் கினியம் 
எலும்பு, சுக்கிலம் - யாகத் தொழில்
அனைத்தும் பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.
ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள்.
அப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள்.
எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.
கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது’ என்று சொன்னது.
லட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.
லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள்.
அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.
ஓம் காமாதேனுவே போற்றி!

சாளக்கிராம_பூஜை


சாளக்கிராம_பூஜை


#செய்வதன்_பலன்கள் *

1. சாளக்கிராம பூஜை செய்பவன் 
    சித்தம் சுத்தமாகும்.

2. சாளக்கிராம பூஜை செய்பவன் 
    விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான்.

3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம்
   கொலை செய்தவனின் 
   பாபத்தையும் போக்கும்.

4. சாளக்கிராமத்தை நினைத்தாலும்,
    தரிசித்தாலும், பூஜை செய்தாலும்,
    சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள்
    தெறித்து ஓடுவதுபோல.
    பாபங்கள்கழன்றுஓடும்.

5. இதனை பக்தியுடனோ அல்லது 
    பக்தியேஇல்லாது அல்லது 
    எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய
    நேர்ந்தாலும்முக்திஉண்டு.

6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு 
   எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம்,
    நைவேத்தியம்
    இப்பூஜையினை_செய்பவர்கள்
    விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம்
    வாழ்வார்கள்.

8. சாளக்கிராமத்தை
    பக்தியுடன்_நமஸ்கரித்தவன்
    தேவனாகிறான்...! 
    அவன் சாதாரண மனிதன் 
    அல்லன்...!

9. சாளக்கிராமம்- பகவான் இருக்குமிடம். 
     சர்வ பாபங்களையும நாசம்_
     செய்யவல்லது.

10. பாபங்கள் செய்தவர்கள் கூட
      சாளக்கிராம பூஜையினால் பரகதி
     அடைகிறார்கள். பக்தியோடு 
     செய்பவர்கள் முக்தியடைகிறார்கள்.

11. அரணி கட்டையில் அக்னி
      உண்டாவதுபோல, சாளக்கிராமத்தில் 
      ஹரி இருக்கின்றார். லஷ்மி மற்றும்
      வைகுண்டத்தில் இருப்பதைவிட 
      ஹரி சாளக்கிராமத்தில் மிகவும்
      பிரசன்னமாகவே உள்ளார்.

12. சாளக்கிராமத்தை பூஜை செய்தால்  
     அக்னிஹோத்தரமும் பூதானமும் 
     செய்த பலன்.

13. இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும்,
     ஒரு நாள் சாளக்கிராமத்தை பூஜை 
      செய்த பலனுக்கு ஈடாகாது.

14. பன்னிரெண்டு சாளக்கிராமம் 
      கொண்டு பூஜை செய்தால் 
      பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை 
      பன்னிரெண்டு கல்பகாலம் 
      பூஜை செய்தபலன் 
      ஒரே நாளில் கிடைக்கும்.

15. காமக்குரோதம் உள்ள மனிதன்கூட
      சாளக்கிராம பூஜையினால் 
     முக்திபெறுவான்.

16.தீர்த்த யாத்திரையோ, யாகமோ
     செய்யாமலே சாளக்கிராம
      பூஜையினால் முக்தியடைவான்.

17. சாளக்கிராம தீர்த்தத்தாலே சர்வ 
      புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த
      பலனும், 
      சர்வ யக்ஞம் செய்த பலனும்
       கிடைத்துவிடும்.

18. பல புண்ணிய தீர்த்த தேவதைகள்
       சாளக்கிராமத்தில் சூட்சுமாமயிருந்து
       அருள்பாலிக்கின்றனர்.

19. விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம்
       செய்துகொண்டே சாளக்கிராம பூஜை
       செய்பவன் விஷ்ணுபதம் அடைகிறான்.

20. சாளக்கிராமம் இருக்குமிடத்தில் 
       சமஸ்த லோகங்களும், 
       சமஸ்த தேவதைகளும் இருப்பதாக 
       ஐதீகம்.

21.சாளக்கிராம தீர்த்தமே போதுமே நம்உள்ளும் புறமும் 
      சுத்தமாகுமே.

22. ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம்
       சாப்பிட்டாலே போதுமே, மீண்டும்
       பிறவாநிலை கிடைத்துவிடும்.

ஓம் நமோ நாராயணா

ஸ்ரீ குருவாயூரப்பன், guruvayoor, kerala

 கேரள மாநிலம், குருவாயூரிலுள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயத்தில், காலை 3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனம் காண பக்தர்கள் காத்துக் கிடப்பார்கள்.
ஆலயக் கதவு திறந்தவுடன் பக்தர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு, "அம்மே நாராயணா!' கிருஷ்ணா! குருவாயூரப்பா!' என்று அழைத்துக் கொண்டு திருச்சந்நிதி நோக்கி ஓடுவார்கள்.
அங்கு ஸ்ரீ குருவாயூரப்பன் முதல் நாள் இரவு சார்த்தப்பட்ட சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்களுடன் குழந்தைக் கண்ணனாகக் காட்சி தந்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைப்பான்.
ஓரிரு நிமிடங்களில் அவனது அலங்காரம் களையப்பட்டு, உடனடியாக தைலாபிஷேகம் நடைபெறும்.
தைலாபிஷேகம் செய்தவுடன் வாகை மரத்தின் பட்டையை இடித்துத் தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகை சார்த்து என்கிறார்கள்.
அதன்பின் தங்கக் குடத்திலிருக்கும் புனித நீரால் திருமுழுக்காட்டுகின்றனர்.
அதன்பின் அலங்காரம் செய்யப்படுகிறது.
திருமுடியில் மயில்பீலி அணிந்து, கையில் வெண்ணெய் ஏந்தி, சிறிய சிவப்புநிற கோவணம் (கௌபீனம்) தரித்து, புல்லாங்குழலுடன் பாலகோபாலனாக ஸ்ரீ குருவாயூரப்பன் பக்தர்களுக் குத் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறான்.
இந்த அபிஷேகத் தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த வாகை சார்த்து வழிபாடு பற்றி ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு காலத்தில், தாய்- தந்தை யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த காஷு என்ற பத்து வயது சிறுவன் தொடர்ந்தாற்போல் மூன்று தினங்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டதாம்.
பசியின் கொடுமையைத் தாங்கவியலாத அவன் அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி தன்னை மாய்த்துக் கொள்ள நினைத்தான்.
அப்போது நாரத முனிவர் அவன்முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த அட்சய பாத்திரத்திலிருந்து உணவு கிட்டும் என்று கூறினாராம்.
அவனும் அதிலிருந்து தேவையானபோதெல்லாம் உணவை வரவழைத் துச் சாப்பிட்டு பசியாறிக் கொண்டிருந்தான்.
இந்நிலையில் ஒருநாள் காஷுவுக்குப் பேராசை ஏற்பட்டது. மீண்டும் தான் தண்ணீரில் மூழ்குவதுபோல நடித்து, நாரத முனிவரை வரவழைத்து வீடு, செல்வம் போன்றவற்றை அடையலாம் என்று நினைத்தான்.
அதன்படி நதியில் சென்று அவன் மூழ்கியபோது நாரத முனிவரும் வரவில்லை; அட்சய பாத்திரத்தையும் காணவில்லை.
பேராசையால் தனக்கு நேர்ந்த துயரத்தை எண்ணிய காஷு, இறைவனின் புனிதப் பெயர்களை உச்சரித்து அவன் தியானத்திலேயே தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான்.
அவனது நிலையைக் கண்டு வருந்திய லட்சுமிதேவி, உடனடியாக அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்ட, அவரும் அதற்கு இணங்கினார்.
சுயநினைவை இழந்து மயங்கிக் கிடந்த காஷுவுக்கு பகவான் காட்சி கொடுக்க, அவன் எழுந்து நின்று தன்னை அவரது திருவடிகளில் ஆட்கொள்ளுமாறு வேண்டினான்.
திருமாலும் அதை ஏற்றுக் கொண்டு, ""கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது நான் குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனாகக் காட்சி தருவேன்.
ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் முடிந்தவுடன் என்னை வாகைத் தூளினால் தேய்த்து தூய்மை செய்வார்கள்.
அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய்.
இந்த வாகை சார்த்து நல்லெண்ணெய், வாகைப் பொடி அபிஷேகத் தீர்த்தம் மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர் களின் தோல் நோய்களும் தீரும்'' என்று கூறி சிறுவன் காஷுவையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.
இவ்வாறுதான் குருவாயூர் திருத்தலத்தில் குருவாயூரப்பனுக்கு "வாகை சார்த்து' வழக்கம் ஏற்பட்டதாம்

திருநீறு

ஓம் நம சிவாய
கோயிலில் திருநீறு கொடுப்பது ஏன், அது மந்திரமா தந்திரமா? - குளிக்காமல் திருநீறு பூசலாமா?

திருநீறு எனப்படுவது மறைமுக மந்திர மருந்தாகப் பார்க்கப்படுகிறது. திருநீறு பல்வேறு நோய்களை போக்கக்கூடியதாக உள்ளது.திருநீறு எப்படி உருவாகிறது?அறுகம்புல்லை உண்ணும் பசுமாடு போடும் சாணத்தை உருண்டையாக்கி அதனை காயவைத்து எடுக்க வேண்டும். அதனை உமியில் மூடி வைத்து புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது அந்த சாணம் வெந்து திருநீறு எனும் அருமருந்து தயாராகி விடும். இப்படி தயாராவதே உண்மையான திருநீறாகும்.
    

திருநீறு எனப்படுவது மறைமுக மந்திர மருந்தாகப் பார்க்கப்படுகிறது. திருநீறு பல்வேறு நோய்களை போக்கக்கூடியதாக உள்ளது.

திருநீறு எப்படி உருவாகிறது?
அறுகம்புல்லை உண்ணும் பசுமாடு போடும் சாணத்தை உருண்டையாக்கி அதனை காயவைத்து எடுக்க வேண்டும். அதனை உமியில் மூடி வைத்து புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது அந்த சாணம் வெந்து திருநீறு எனும் அருமருந்து தயாராகி விடும். இப்படி தயாராவதே உண்மையான திருநீறாகும்.
​திருநீறு நன்மைகள்

நம்மை சுற்றி நல்லது கெட்டது என பல்வேறு அதிர்வுகள் இருக்கின்றன. நம்மை அறியாமல் நம் உடலுக்குள் அந்த எல்லா அதிர்வுகளும் சென்று வருகின்றன.

அருகம் புல் திருநீறு நம்மை சுற்றி இருக்கும் நல்ல கதிர்களையும், அதிர்வுகளை மட்டுமே உள்வாங்கும் திறனைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக நம் உடலில் பல்வேறு இடங்களில் திருநீறு இட்டுக் கொள்வதன் மூலம் அந்த நல்ல அதிர்வுகள் நம் உடல் ஏற்றுக் கொள்கின்றது.

திருநீறு உடலின் சில பாகங்களிலாவது அணிய வேண்டும் என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக நம் உடலில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வுகளை கொண்டுள்ள நெற்றியில் அணிவது மிகவும் அவசியம். நம் உடலிலேயே நெற்றி மிக அதிகமாக வெப்பத்தை உள் வாங்குவதும், வெளியிடும் பாகங்களாக இருக்கின்றன. இதன் காரணமாக நாம் நெற்றியில் திருநீறு அணிவது மிகவும் அவசியம். நெற்றி முழுவதும் நாம் திருநீறு அணியலாம். அல்லது நெற்றி பொட்டில் நாம் அணிவது அவசியம்.

அப்படி திருநீறு பூசும்போது சூரியக் கதிர்களின் சக்தியை நம் உடலினுள் இழுக்க பயன்படுகிறது. இதனால் நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களை தீர்க்கக் கூடிய அறுமருந்தாக மாறுகிறது.

​திருநீறு எப்படி மருந்தாகிறது?

பசு மாட்டுச் சாணத்தை எரிப்பதால் திருநீறு உருவாகும். அதாவது மாடு அறுகம் புல் உள்ளிட்ட புல் வகைகளை உண்ணுகிறது. அதனை தன் உடலினுள் தேற்றி வைத்து பின் சாணம் போடும். அந்த சாணம் தீயிட்டு எரிக்கும் போது உருவாகும் சில ரசாயன மாற்றங்கள் நம் உடலுக்கு தேவையான நன்மையை கொடுக்க வல்லது.

நெற்றி பகுதி மிக நுண்ணிய நரம்பு அதிர்வுகளை கொண்டுள்ளதால் அதை வைத்து சில மனோ வசியம் செய்ய முடியும். அப்படி மன வசியத்தை தடுக்கும் ஆற்றல் திருநீறு, சந்தனத்திற்க்கு உண்டு.

திருநீறு பயன்கள்

திருநீறு இடும்போது நல்ல கதிர்களை ஈர்த்து உடலுக்கு கொடுப்பதைப் போல, சந்தனம் நம் உடலிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை நீக்குகிறது. அதே வெளியிலிருந்து வரும் வெப்பத்தையும் தடுக்கிறது. இதனால் வெப்ப மிகுதியால் ஏற்படக்கூடிய மூளை சோர்வு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

நாம் நம் விரலை நெற்றி பொட்டில் பட்டும் படாமல் சிறிது நேரம் வைக்க நம் மனம் ஒருநிலைப்படுவதை உணரலாம். அப்படிப்பட்ட மன ஒருநிலைப்பாட்டை அதிக நேரம் நீடிக்க வைக்கும் வல்லமை திருநீறுக்கு உண்டு. இதனால் தியானம் செய்த மன ஒருநிலைப்பாடு, பயன், சிந்தனைத் தெளிவு ஏற்படும்.

​திருநீறு சித்தாந்தம்:

திருநீறு சித்தாந்தம்:

திருநீறின் பயன்பாட்டை சரியாக சொல்லி புரிய வைக்க முடியாது, அதை அனைத்து தலைமுறையினரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான், நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை அணியும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, மனிதம் மிகவும் நம்பக்கூடிய கடவுள் நம்பிக்கையுடன் இணைத்தான்.

மதத்தை காட்டி விஞ்ஞானத்தை அதில் வைத்ததினால் இன்றும் நாம் திருநீறு அணியும் நல்ல பழக்கத்தை வைத்துள்ளோம்.

திருநீறு பூசும் இடங்களும் பயன்களும்:

புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) - ஞானத்தை ஈர்க்க வல்லது.

தொண்டைக்குழியில் பூசுதல் (விசுத்தி சக்கரம்) - நம் சக்தி அதிகமாகும்.

நெஞ்சுக்கூட்டின் மத்தியில் திருநீறு தரித்தால் நம் உடல் தெய்வீக அமைப்பை பெறும்.

​எப்படி அணியலாம்:

எப்படி அணியலாம்:

திருநீறு மோதிர விரலாம் எடுத்து பூச வேண்டும். மோதிர விரல் நம் உடலின் பவித்திரமான பாகமாக பார்க்கப்படுகிறது.

திருநீறு நாம் குளித்த பின்னர் பூசுவது தான் மிக சரியான முறை. சில விதிவிலக்காக வயோதிகம், உடல்நலக்குறைவு, ஆபத்து காலத்தில் குளிக்காமல் பூசுவது தவறில்லை. நம் உடல் தூய்மையை விட உள்ளத்தூய்மை மிக முக்கியமானது.

இருப்பினும் சோம்பலின் காரணமாக அதையே வாடிக்கையாக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

திருநீறு அருமருந்து என்பதை உணர்ந்து இனியேனும் நாம் அன்றாட திருநீறு அணிவதை பழக்கமாக மாற்றிக்கொள்வோம்.. 

ஓம்நம சிவாய

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...