Thursday, January 19, 2023

இடைக்காடர்

திருவண்ணாமலை கிரிவலத்தின்போது சாபம் பெறாமல், சித்தர்கள் முனிவர்களின் ஆசியை பெறுவது எப்படி?

திருவண்ணாமலை மலையில் ஏராளமான சித்தர்கள் இருந்தார்கள். இப்போதும் கூட அங்கு பல சித்தர்கள் இருக்கிறார்கள், ஆனால் நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்துள்ளார். திருவிடை மருதூர், இடைக்காட்டூர் உள்பட பல இடங்களில் இடைக்காடர் ஜீவ சமாதி உள்ள போதிலும் திருவண்ணாமலையில் தான் அவரது பரிபூரண அருள் உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை இவர் கோடி ஆண்டுகளுக்கு கண்டு தரிசனம் செய்துள்ளார். திருவண்ணாமலை தலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் போது அதை நேரில் கண்டு தரிசனம் செய்தாலே அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். கோடி தடவைக்கு மேல் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்த, இடைக்காடர் பற்றி நினைத்தால், திருவண்ணாமலை ஈசனின் மகிமையைத் தெரிந்தவர் இவர் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவர் திருவண்ணாமலை பற்றிய ரகசியங்களை முழுமையாக அறிந்தவர் என்று கூறப்படுகிறது. இன்றும் பவுர்ணமி தோறும் திருவண்ணாமலையில் இடைக்காடர் கிரிவலம் வருவதாக கூறப்படுகிறது. இடைக்காடர் மட்டுமல்ல, மேலும் பல சித்தர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டியில், பூண்டி சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது. அந்த சித்தர் பவுர்ணமி தோறும் திருவண்ணா மலையில் கிரிவலம் வருவதாக சொல்லப்படுகிறது. வாத்தியார் அய்யா ஸ்ரீமுத்து வடுகநாதர் சித்தர் என்று ஒரு சித்தர் உள்ளார். இவரது ஜீவசமாதி எங்கு இருக்கிறது என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீவராகி தீர்த்தத்துக்கு தினமும் இவர் வந்து வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது. சீரியா சிவம் பாக்கினி சித்தர் என்று ஒரு சித்தர் திருவண்ணாமலையில் வசித்தார். இவர் பெயரில் மலை ஒன்று அங்குள்ளது. அங்கு இந்த சித்தரின் அருள் இன்னமும் பரவி உள்ள தாக கூறப்படுகிறது. அதுபோல ஸ்ரீபெத்த நாராயண சித்தர் என்பவரும் பல நூற்றாண்டுகளாக திருவண்ணா மலையில் வாழ்கிறார். யார் கண்களுக்கும் அவர் தன்னைக் காட்டியது இல்லை. மேலும் வயிறு சார்ந்த நோய்கள் தீரும். திருவல்லத்தில் பிறந்தவர் பாம்பணையான் சித்தர், இவர் மற்ற சித்தர்கள் போல அரூபமாக கிரிவலம் வருவதில்லை. இவர் மனித வடிவம் எடுத்து கிரிவலம் வருகிறார். மார்கழி மாத பவுர்ணமியில் இவர் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள். இவரது பார்வை நம் மீது பட்டாலே போதும் விஷக் கடிகளால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும். ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் கிரிவலம் வருபவர்களுக்கு கணதங்கணான் சித்தர் அருளால் சகல நோய்களும் தீரும். மாத சிவராத்திரி கிரிவலத்தின் போது அர்த்தஜாம பூஜை நேரத்தில் குரு ஓரையில் இவரை பார்க்கும் தரிசனம் கிடைத்தால் நமது ஆத்மா தூய்மை அடையும். இவர்களைப் போல கணக்கற்ற சித்தர் பெருமக்கள் திருவண்ணாமலையில் தினம், தினம் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கிரிவலம் செல்லும் போது, இந்த சித்தர் பெருமக்களை நினைத்துக் கொண்டு நடந்தால், நிச்சயம் நல்லதே நடைபெறும். இதுபோன்று சித்தர்களும் முனிவர்களும் நிறைந்த இந்த சக்தி வாய்ந்த மலையை சுற்றும்போது, மிகவும் பய பக்தியுடன் செல்வது உகந்தது. வீணான அரட்டை, தெய்வ சிந்தனை யில்லாமல் செல்வது போன்றவற்றால் அருபமாக இருக்கும் சித்தர்களின் சாபமும் ஏற்படும் என்பதால்தால் மலையை சுற்றும்போது பேசாமல் சிவ மந்திரத்தையும், சிவ நாமத் தையும் ஜெபித்துக்கொண்டு செல்ல வலியுறுத்தப் படுகிறது.

Tuesday, January 10, 2023

தமிழர் தந்தை அகத்திய மாமுனியே போற்றி


தமிழகத்தின் பிதாமகனும், தமிழை வளர்த்தவனும் தமிழகத்துக்கு காவேரி முதல் பொருநை வரை கொடுத்தவனும், சிவபெருமானின் தூதனாக தென்னாட்டிற்கு வந்து சனாதன தர்மத்தினையும் தமிழையும் வளர்த்த சித்தர்கள் போற்றும் தலைவன் அகத்திய மாமுனியின் பிறந்தநாள் சித்த மருத்துவ தினமாக கொண்டாடபடும் என மத்திய( ஒன்றிய ?) அரசு அறிவித்துள்ளது
 இது மிகவும் நல்ல அறிவிப்பாகும்..

ஒவ்வொரு சித்தனும், ஒவ்வொரு தமிழனும் பெருமைபட வேண்டிய விஷயம் இது

அகத்திய மாமுனி சித்தர்களின் தலைமை குரு, எல்லா சித்தர்களும் அவரிடம் இருந்தே தீட்சை பெற்று சித்தபுருஷர்களாக உருவானார்கள், ஆன்மீகம், தமிழ், வாழ்வியல், மருத்துவம், வானியல், பிரபஞ்சம் என எல்லா போதனையும் அகத்தியரிடம் இருந்தே இங்கு கற்றுக்கொண்டனர்.

அவர் உண்டாகிய மருத்துவமே சித்த மருத்துவம் என்றானது, அவர் வழி சீடர்கள் அதனை இன்னும் வலுபடுத்தினர்....

அப்படிபட்ட அகத்திய மாமுனி மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தார், அது இந்த ஆண்டு ஜனவரி 9ம் நாள் வருகிறது 

அந்நாள் *தேசிய சித்த மருத்துவ தினம்* என இந்திய அரசு அறிவித்து அகத்தியர் பெயரால் அதனை கொண்டாட அறிக்கை வெளியிட்டுள்ளது

இதனை தமிழக சித்தமருத்துவ மருத்துவமனைகளும்  கொண்டாட வேண்டும், 

அகத்தியரின் பணி எக்காலமும் இங்கு உண்டு , சித்த மருத்துவத்தில் அன்று தொடங்கி இன்று "கபசுர குடிநீர்" எனும் கொரொனா தடுப்பு மருத்துவநீரும் அவர் கொடுத்த மூலமே

அப்படிப்பட்ட அகத்தியரை, சித்த மருத்துவப்  பிதாமகனாக மத்திய அரசு அறிவித்துள்ளது

இதனில் என்ன சுவாரஸ்யம் என்றால திருநீறு இல்லாமல் கமண்டலமும் தண்டமும் ருத்திராட்சமும் இல்லாமல் அகத்தியனை நிறுத்தமுடியாது

அகத்தியர் வேறு அகஸ்தியர் வேறு, அவர் வழிபட்ட சிவன் வேறு இவர் வழிபட்ட சிவன் வேறு என்றெல்லாம் குழப்பியடிக்கவும் முடியாது

அவரை தொட்டுபார்க்கவே இவர்களால் முடியாது, அகத்தியரின் சக்தி அப்படி

இதனால் பல்லை வாயை கடித்து கொண்டு நடப்பதை பார்த்து சுவரில் முட்டுவதை தவிர வேறொன்றும் அவர்களால் செய்யமுடியாது

சித்தர்கள் அழிவில்லாதவர்கள், எப்பொழுதெல்லாம் தர்மம் அழியுமோ அப்பொழுதெல்லாம் தங்கள் சக்தியால் தர்மத்தை தாங்குபவர்கள்.

அந்த சித்தர்களின் தலமை சித்தனை மத்திய அரசு கொண்டாட தொடங்கியிருப்பது வரவேற்க தக்கது, வரலாற்றிலே இந்தியா முழுக்க தமிழக பாபநாச சித்தர் அறியப்பட தொடங்கியிருக்கின்றார்.

ஜனவரி 9 அதாவது மார்கழி ஆயில்ய நட்சத்திரம் அன்று காவேரி கரை தொடங்கி, ஈரோட்ட்டு நட்டாறீஸ்வரர் கோவில் நெல்லை பாபநாசம் கோவில் என எல்லா இடமும் அகத்தியரை கொண்டாடி வழிபட வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமையாகின்றது

இந்துஸ்தானத்துக்கான அரசு எப்படி இருக்கவேண்டும் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டு, நல்ல அரசு ஏன் அவசியம் என்றால் இதற்காகத்தான்

"தமிழர் தந்தை" அகத்திய மாமுனியின் அவதார நாளை சிறப்பாக கொண்டாடுவோம், தமிழக தந்தை அவனேதான், அந்த மாமுனி மட்டும்தான்..

காசி துலங்க பாரதம் துலங்கும் என்பது இதுதான், இதோ துலங்கி கொண்டிருக்கின்றது

"தமிழர் தந்தை அகத்திய மாமுனியே போற்றி"

🙏🙏🙏🙏🙏

Sunday, January 8, 2023

சூதாட்டத்தில் இருந்த பகடையாய் சுழன்றவனே நான் தான்

பாண்டவர்களின் வனவாசத்தின் போது ஒரு மரத்தடியில் யாரும் அறியாதவாறு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான் யுதிஷ்டிரன். துரியோதனன் தன் தேசத்து அரசனானதும் அவனுக்கு முடிசூட்டு விழா நடத்தபட்டு தன் ராஜ்ஜியமெல்லாம் அவன் கொடி பறப்பதையும் அறிந்து தன்னை தானே நொந்து கொண்டான். வீட்டுக்கு மூத்தவன் உடன்பிறந்தோர் முன்னால் அழகூடாது எனும் தர்மத்தை அவன் அப்பொழுதும் காத்துக் கொண்டிருந்தான். இதனை அறிந்த கிருஷ்ணன் அவனை தேற்றும் பொருட்டு "யுதிஷ்டிரா இங்கே அமர்ந்து என்ன செய்து கொண்டிருக்கின்றாய்" என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டார். அதற்கு மேலும் பொறுக்கமுடியாத யுதிஷ்டிரன் சுற்றி யாருமில்லை என்பதை உணர்ந்து கிருஷ்ணனின் கைகளை பற்றி கதறினான். திரௌபதி இப்படி சிரமப்படவும் என் அன்னை வயதான காலத்தில் இப்படி அலையவும் என் தம்பிமார்கள் நாடோடி காட்டுவாசிகளாக திரியவும் நானே காரணமாகி விட்டேன் எனக்கு கிடைத்த தாயும் தம்பிகளும் மனைவியும் நல்லவர்கள். என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அவ்வகையில் நான் பாக்கியசாலி. ஆனால் இவர்கள் அனைவருக்கும் என்னால் தானே அனைத்து துன்பமும் வந்தது. துரியோதனன் அழைத்ததும் நான் சூதாடியிருக்க கூடாது. அதுவும் அவன் சகுனி துணையோடு ஆடும் பொழுது நான் உன்னை அல்லவா அழைத்திருக்க வேண்டும் நான் உன்னை அழைக்காமல் உனக்கு தெரியக் கைடாது என்றல்லவா சிந்தித்தேன் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன். அந்த நொடிப் பொழுது செய்த சிறிய தவறு இந்த மாபெரும் துன்பத்தை கொடுத்து விட்டது என கிருஷ்ணனிடம் கண்ணீர் விட்டவாறு கூறினான் யுதிஷ்டிரன்.

கிருஷ்ணர் பேச ஆரம்பித்தார். யுதிஷ்டிரா நீ அழைக்காமல் நான் வரமாட்டேன் என நினைத்தாயா? சூதாட்டத்தில் இருந்த பகடையாய் சுழன்றவனே நான் தான் யுதிஷ்டிரா. எப்பொழுது உன்னை துரியோதனன் அழிக்க நினைத்தானோ அப்பொழுதே அவன் அழிவு தொடங்கியது. இந்த நிலையில் எதிரி வாழவும் திருந்தவும் நீ வாய்ப்பளித்தாய் என்பதை உலகுக்கு சொல்லவதற்காகவே இந்த நிகழ்வை நடத்திக் காட்டினேன். யுதிஷ்டிரன் எப்பொழுதும் தர்மனாக நின்றான் என்பதை வரலாறு எழுதவே பகடையினை அவனுக்கு விழவைத்தேன். சகுனி என் நாடகத்தின் ஒரு கருவி அவ்வளவு தான். நாடகத்தை நடத்துபவன் நான் அதில் நீயும் ஒரு பாத்திரம் என்பதை நினைவில் கொள். உண்மையில் நீ உன் மிக உயந்த இயல்பில் நின்றாய். அதை புரிந்து கொள் தெளிவடைவாய் என்றார். அதற்கு யுதிஷ்டிரன் நான் சூதாடி தோற்றேன். என் இயல்பிலிருந்து மாறி சித்தம் கலங்கி சென்றேன். நானா தர்மவான் என்று சந்தேகத்தோடு கேட்டான். அதற்கு கிருஷ்ணர் யுதிஷ்டிரா இப்பொழுதும் நீதான் வென்றாய். சூதாட்டத்தில் நீ தோற்று உன்னை அழிக்க வந்தவர்களை சிறிது காலம் வாழ வழிசெய்திருக்கிறாய். யுதிஷ்டிரன் தன் ராஜ்ஜியத்தில் தன்னை அழிக்க நினைத்த பகைவர்வர்களுக்கும் சிறிது காலம் வாழ இடம் கொடுத்தான் என பெயர் பெற்றாய். நாட்டின் மீதும் அதிகாரத்தின் மீதும் பேராசை கொண்ட அவர்கள் ஆண்டு அனுபவித்து அதன் பிறகாவது திருந்த மாட்டார்களா என வாய்ப்பு கொடுத்த நீ உத்தமன். இது உன் அன்னைக்கு தெரியும். உன் மனைவிக்கு தெரியும். உன் சகோதரரகளுக்கும் தெரியும் அதனால் தான் அவர்கள் உன்னை ஒருவார்த்தை கூட சொல்லவில்லை பகைவனுக்கும் அருளிய நல்ல மனதுடையவன் என்று உன்னை மனதார வாழ்த்தி வணங்கி கொண்டிருக்கின்றார்கள். நீயோ இங்கு அழுது கொண்டிருக்கின்றாய் என்றார்.

கிருஷ்ணா இது போதும் என் மனபாரம் குறைந்ததது என் மனம் குளிர்ந்தது நான் கடைபிடிக்கும் தர்மத்தை காக்க நீ அருள்புரிந்திருக்கின்றாய். இல்லையேனில் சூதாடி வென்றான் யுதிஷ்டிரன் என்ற அவப்பெயர் எனக்கு வந்திருக்கும். சூதாடி வென்று தம்பியருக்கு ராஜ்யம் கொடுத்தான் அயோக்கியன் என்ற அவப்பெயர் காலத்துக்கும் நின்றிருக்கும். இதை என் குடும்பத்தர் எப்படி பொறுப்பார்கள். உலகம் என்னை எப்படி கருதியிருக்கும். நல்ல வேளையாக என்னை காப்பாற்றி இருக்கிறாய் என்று கிருஷ்ணரிடம் மகிழ்ச்சி அடைந்த யுதிஷ்டிரன் தன் கலக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தான். அதற்கு கிருஷ்ணர் நீ கடைபிடிக்கும் தர்மம் உன்னோடு எப்போதும் நிற்கும். அதற்கு ஏற்றபடி தர்மமும் நானும் உன்னை காப்போம். கௌரவர்கள் ஆடாத ஆட்டம் ஆடி அந்த அக்கிரமத்தால் அழிந்தும் போவார்கள். நீ உன் கடமையினை செய் உன் இயல்பிலே இரு குற்றவுணர்ச்சியோ கண்ணீரோ கொள்ளாதே. அவர்களை சிலகாலம் வாழ வழிவிட்டதை எண்ணி உன் புண்ணியம் பெருகியிருப்பதை உணர்ந்து கொள் அது ஒரு நாள் உனக்கு வெற்றியளிக்கும் என்பதை மனதில் கொள் என்றார் கிருஷ்ணர். நடந்து முடிந்த சூதாட்டத்தில் தனக்கு ஏற்பட்ட தோல்வியிலும் தனக்கு கிடைத்த பாடத்தை யுதிஷ்டிரன் புரிந்து கொண்டான். அவனையும் அறியாமல் ஒரு கம்பீரமும் உற்சாகமும் அவனுக்குள் வந்தது. சகோதரர்களை நோக்கி மனநிறைவோடு நடந்தான். அவனுக்கு தர்ம தேவதை புன்னகைத்தபடி குடைபிடித்து நடந்து கொண்டிருந்தாள்.... (கிருஷ்ணனுக்கு மட்டும் அது தெரிந்தது.)

சர்வம் கிருஷ்ணார்பணம்..!
ஓம் நமோ நாராயணா..!

பக்தனுக்காக சமையல்காரனாக மாறிய பாண்டுரங்கன்

பக்தனுக்காக சமையல்காரனாக மாறிய பாண்டுரங்கன்

அது கல்யாண வீடு என்பதற்கு வாசலில் இருந்த இரண்டு வாழை மரங்களே சாட்சியாக நின்றிருந்தன. வேறு எந்த ஆர்ப்பரிப்பும் அங்கு இல்லை. 

ஆடம்பரமாக திருமணத்தை நடத்த அது ஒன்றும் பணக்காரரின் வீடும் அல்ல, ஏதோ ஒரு தொழில் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து பிழைக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரின் வீடும் அல்ல.

தனக்கும், தன் மனைவி மற்றும் மகளுக்கும் தேவையான உணவை, தினமும் உஞ்ச விருத்தி எடுத்து சாப்பிட்டு வரும், பாண்டுரங்கனின் பரம பக்தன் நீளோபாவின் வீடு. பிம்பளம் என்ற அழகிய நகரத்தின் நடுவே அமைந்திருந்த நீளோபாவின் வீட்டில்தான் திருமண நிகழ்ச்சி.

திருமண ஏற்பாடு

அழகு இருந்தும், பணம் இல்லாததால் தன் மகளுக்கு திருமணம் நடைபெறுமா? என்ற கவலையில் தவித்து வந்தார் நீளோபாவின் மனைவி. 

ஆனால் ‘எல்லாம் இறைவனுக்குத் தெரியும். அவன் பார்த்துக் கொள்வான்’ என்று அவன்மேல் பாரத்தைப் போட்டு விட்டு, பகவானின் பதத்தை பணிவதிலேயே தன் காலத்தைக் கழித்து வந்தார் நீளோபா.

இந்த நிலையில் நீளோபா புதல்வியின் அழகில் மயங்கிய வாலிபன் ஒருவன், அவளை மணம் செய்து கொள்ள வலிய வந்தான்.

அவனும் ஏழைதான் என்றாலும், அழகிலும் வலிமையிலும் சிறந்தவனாக இருந்தான். திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டு, அந்த நாளும் நெருங்கி விட்டது.

நாளையப் பொழுதில் திருமணம். ஆனால் நீளோபாவின் வீடு உறவுகளின் கலகலப்பின்றி காணப்பட்டது. 

நீளோபாவின் வீட்டில் பணப் பஞ்சம் என்பதால், அவரது உறவினர்களின் மனதில் அன்புப் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. அதனால்தான் நீளோபாவின் வீடு வெறிச்சோடிப் போய் கிடந்தது. 

எங்கே திருமணம் வீட்டிற்கு முன்பாகவே சென்றால், பொருள் உதவி செய்ய வேண்டியிருக்குமோ என்ற எண்ணத்தில் எவரும் வந்து சேரவில்லை.

முதியவர் வருகை

இரக்க குணம் படைத்த பணக்காரர்கள் சிலர் கொடுத்த காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், இலை போன்றவை கொஞ்சம் இருந்தது. 

ஆனால் அவை திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்து வைக்க போதுமானதாக இருக்குமா? என்று நீளோபாவின் மனைவி கவலையில் ஆழ்ந்தாள்.

அப்போது வீட்டின் வாசலில் முதியவர் ஒருவர் வந்து நின்றார். வெளியே வந்த நீளோபாவிடம், ‘ஏன்பா! நீளோபா–ன்னா நீதானா. உன் மகளுக்கு கல்யாணமாமே?’ என்று கேட்டார் முதியவர்.

‘எல்லாம் இறைவனின் சித்தம். ஐயா! தாங்கள் யாரென்று தெரியவில்லையே? எந்த ஊர்?’ என்று பணிவாக கேட்டார் நீளோபா.

அதற்கு முதியவர், ‘எனக்கு ஏது ஊரு? எல்லா ஊரும் நம்ம ஊருதான். குருவாயூர், மதுரா, பிருந்தாவனம், கோகுலம், உடுப்பி.. இப்படி ஊர் ஊராய் போய் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கிறேன்’ என்று கூறிக் கொண்டே, தான் அணிந்திருந்த கந்தல் துணியில் போட்டிருந்த சிறு சிறு முடிச்சுகளை அவிழ்க்கத் தொடங்கினார். 

‘ஐயா! எனக்கு இப்போது அபார பசி. என்னிடம் இருக்கும் இந்த அரிசி, பருப்பு, காய்கறி, புளி, மிளகாய் போன்றவற்றை வாங்கிக்கொண்டு, கொஞ்சம் சாப்பாடு போட்டால் நல்லது’ என்றார் முதியவர்.

நீளோபா அவரைத் தடுத்து, ‘திருமண வீட்டில் சாப்பாட்டுக்கு பஞ்சமா?. உள்ளே போய் பசியார உணவருந்துங்கள். அரிசி, பருப்பு கொடுத்து தான் சாப்பிட வேண்டுமா?’ என்று கூறினார்.

சமையல் பொருட்கள்

‘நீளோபா! நாளை தான் கல்யாணம். அதற்கடுத்த நாள் வரை இந்த பொருட்களை காப்பாற்ற முடியாது. உனக்கு பிச்சைக்காரனிடம் வாங்குவதற்கு அவமானமாக இருக்கிறது போலும். நானும் மானம் உள்ளவன்தான். எனக்கு உன் வீட்டு சாப்பாடு வேண்டாம்’ என்று கூறி அங்கிருந்து புறப்படத் தயாரானார்.

பதறிப்போய் அவரை தடுத்தார் நீளோபா. ‘ஐயா! நில்லுங்கள். அந்த பொருட்களை தாருங்கள்’ என்று கூறியவர், தன் மனைவியை அழைத்து அதனை வாங்கிக் கொள்ளும்படி கூறினார்.

முதியவரிடம் இருந்து பொருட்களை நீளோபாவின் மனைவி பெற்றுக் கொண்டாள். அவளிடம், ‘தாயே! இதனை கல்யாண சமையலுக்கு வைத்திருக்கும் பொருட்களோடு சேர்க்க வேண்டும்’ என்றார் முதியவர். அவளும் அப்படியே செய்தாள். அதன்பிறகு முதியவருக்கு உணவு அளித்தனர். அதனை சாப்பிட்டு முடித்தார்.

அப்போது சமையல் அறையில் நீளோபாவின் மனைவியும், மகளும் கல்யாண சமையல் பொருட்களை தரம் பிரித்து வைத்துக் கொண்டிருப்பதை பார்த்தார்.

‘என்ன! அனைத்து வேலைகளையும் கல்யாண பொண்ணும், அம்மாவும் செய்து கொண்டிருக்கிறார்கள். வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளக் கூடாதா?’ என்று நீளோபாவிடம் கேட்டார் முதியவர்.

நீளோபா வருத்தம் தோய, ‘ஐயா! நானே உஞ்சவிருத்தி பெற்று சாப்பிடுபவன். நான் எப்படி வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ள முடியும்?’ என்றார்.

சமையல்காரனாக...

‘அப்படியானால் நாளைக்கு சமையல்?’ என்று முதியவர் கேட்க, ‘அதற்காகத்தானே நேரம் கழித்து முகூர்த்தம் பார்த்தது. சீக்கிரமே எழுந்து சமையலை முடிக்க வேண்டியதுதான். தாலி கட்டி முடிந்ததும் அப்பளம் தயார் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்’ என்றார் நீளோபா.

‘நன்றாக இருக்கிறது! தன்னுடைய கல்யாணத்திற்கே மணப்பெண்ணே சமைப்பதா?. நன்றாக இருக்கிறது!. நாளைக்கு அடுப்படிப் பக்கம் நீங்கள் யாருமே வரக்கூடாது. நான் நன்றாக சமைப்பேன்.

சிக்கனமாய், அதே நேரத்தில் சுவையாய், மணமாய், விதவிதமான சமையல் செய்வேன். திருமண விருந்திற்கு என்னென்ன வேண்டும்? என்பது எனக்குத் தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன். நாளை திருமணத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்று, விருந்துண்ண அனுப்ப வேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை’ என்று கூறிவிட்டார் முதியவர்.

அவரது வார்த்தையைக் கேட்டதும் மகிழ்ந்து போனார் நீளோபா. ‘அந்த பகவானே உங்களை அனுப்பி வைத்ததாக கருதுகிறேன். மிக்க மகிழ்ச்சி’ என்றார்.

விருந்தில் மயங்கினர்

அப்போது போய் அடுப்படியில் நுழைந்தவர்தான், அனைத்து பணிகளையும் பார்க்கத் தொடங்கிவிட்டார். இரவு நேரங்கழித்து தூங்கி, வெகு அதிகாலையிலேயே எழுந்து சமையல் பணியை முடித்துவிட்டார்.

திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் சமையலை ‘ஆஹா, ஓகோ’ என புகழ்ந்து தள்ளிவிட்டனர். அந்த வர்ணிப்பைக் கேட்டு நாக்கில் எச்சில் ஊற சாப்பிட வந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

‘என்ன நீளோபா.. திருமணத்திற்கு வீடு தேடி வந்து அழைத்தாய்.. வராவிட்டால் ஏழை என்று ஒதுக்கிவிட்டதாக நினைத்து கொள்வாய் என்றுதான், அவசர வேலைகளைக் கூட அப்படியே போட்டு விட்டு வந்தேன்’ என்று கூறியபடி வந்த உறவினர்கள் அனைவரும் திருமண விருந்தைக் கண்டு வாயடைத்து போய்விட்டார்கள்.

விருந்தில் அத்தனை பதார்த்தங்களை இதுவரை எவரும் பார்த்திருக்க மாட்டார்கள். லட்டு, முறுக்கு, அதிரசம் என்று கண்களை கவர்ந்தன. சமையலை வாசனை மூக்கைத் துளைத்தது, முந்திரியும், பாதாமும் முதல் பந்தியில் சாப்பிட்டவர்களை, அடுத்த பந்திக்கும் இழுத்தது.

பாண்டுரங்கன் விக்கிரகம்

விருந்தினர்களும், மாப்பிள்ளை வீட்டாரும், சம்பந்தியும் நீளோபாவை பாராட்டித் தள்ளினர். திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்கள் அனைவரும் சென்று விட்டனர். நீளோபா, தன்னை அனைவரும் பாராட்டியதற்கு காரணமான முதியவரைக் கண்டு அவருக்கு பட்டு வஸ்திரம் அணிவிப்பதற்காக மடப்பள்ளிக்கு சென்றார். 

ஆனால் முதியவரை காணவில்லை. அங்கே சமையல் பொருட்கள் குறையாமல் அப்படியே இருப்பது கண்டு திகைத்தார். வந்தவர் சாதாரணமானவர் அல்ல என்பது அவருக்கு தெரிந்தது.

அவரது எண்ணம் பொய்யில்லை என்பதை, மடப்பள்ளியில் சிலையாக நின்று கொண்டிருந்த பாண்டுரங்கனின் விக்கிரகம் மெய்ப்பித்தது.

இந்த மலர் இறைவன் திருமேனியை

ஓர் ஊரில் கந்தன் என்ற கோவில் அர்ச்சகர் இருந்தார். அவருடைய மனைவியின் பெயர் ஜானகி. ஜானகிக்கு தன் கணவன் மீது அன்பு உண்டு என்றாலும் மனக்குறைகள் நிறைய உண்டு.

 வெறும் கோவில் அர்ச்சகராக கந்தன் வாழ்க்கை நடத்துவதால் அவன் குடும்ப வாழ்க்கை மிகவும் வறுமையாகவே இருந்தது. நல்ல ருசியான உணவு வகைகளை சமைத்து சாப்பிடவும், உயர்ந்த ஆடை அணிகளை அணிந்து சுவைக்கவும் ஆசைப்பட்ட ஜானகிக்கு அவையெல்லாம் எட்டாத பழமாக இருந்தன.

 ஒரு நாள் ஜானகி தன் மனக்குறையை கணவனிடம் வாய் விட்டுச் சொன்னாள். நீங்கள் கோயில் அர்ச்சகராக இருப்பதால் நமது குடும்பம் எப்பொழுதும் வறுமையால் வாடிக் கொண்டிருக்கிறது. வேறு ஏதாவது உத்தியோகம் தேடினாலோ, வியாபாரம் செய்தாலோ அதிக பணம் கிடைக்கும் அல்லவா என்றாள்.

 ஜானகி மனத்தில் உள்ள கருத்தை கந்தன் தெளிவாகப் புரிந்து கொண்டான். அவளுக்கு தனது பணியின் உண்மை மதிப்பை உணர்த்த எண்ணினான .

ஒரு நாள் கந்தன் கோயிலில் சுவாமிக்கு சமர்ப்பணம் செய்த சிறிய மலர் ஒன்று எடுத்து மனைவியிடம் கொடுத்து இதை கொண்டு போய் நமது அரசரிடம் கொடுத்து இந்த மலருடைய எடைக்குச் சமமான பொன் வாங்கி வா என்றான்.

 ஜானகிக்கு கணவனுடைய எண்ணம் விளங்கவில்லை என்றாலும் கணவன் சொன்னதை நிறைவேற்ற அரண்மனைக்குச் சென்று அரசனை பார்க்க விரும்புவதாக காவலாளிகளிடம் தெரிவித்தாள்.தான் வந்த நோக்கத்தையும் காவலாளிகளிடம் சொன்னாள்.

 காவலாளிகள் ஜானகி சொன்ன தகவல்களை அரசரிடம் சென்று தெரிவித்தார்கள். குடும்பக் கஷ்டம் தீர ஜானகி பொருள் உதவி கூறி வந்திருப்பதாக நினைத்து அரசர் ஒரு பண முடிப்பை அளித்து அவளிடம் கொடுக்கும்படி சொன்னார்.

 ஜானகி பணம் முடிப்பை பெற்றுக் கொள்ளவில்லை . பூஜை மலரின் எடைக்குச் சமமான பொன்னைப் பெற்று வருமாறு தன் கணவன் உத்தரவிட்டிருப்பதால் அதை மீற தனக்கு உரிமை இல்லை என்று ஜானகி வாதாடினாள்.

 காவலாளிகள் அந்த தகவலை அரசனுக்கு தெரிவித்தார்கள். அந்த வினோதமான வேண்டுகோளை செவிமடுத்த அரசன் ஜானகியை தன் முன் வரச் சொன்னார். ஜானகி அரசனை வணங்கி நின்றாள்.

 அம்மா உன் கையில் இருக்கும் மலரின் எடைக்கு என்ன பொருள் கிடைக்க முடியும்? ஒரு குண்டுமணி எடை பொன் கூட இதற்கு சமமாகாதே என்றான் அரசன்.

 துளி அளவு பொன் கிடைப்பதாக இருந்தாலும் என் கணவன் சொன்னபடி தான் நான் நடக்க வேண்டி இருக்கிறது என்று ஜானகி பணிவுடன் சொன்னாள்.

 அரசன் ஒரு தராசை தருவித்தான். ஒரு தட்டில் பூஜை மலரை வைக்கச் சொன்னார். மற்றையதில் கொடுத்த பணமுடிப்பை வைக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம் பூஜை மலர் இருந்த தட்டு சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. மற்றொரு பண முடிப்பை தட்டில் வைக்குமாறு அரசன் கட்டளையிட்டார். பூஜை மலர் இருந்த தட்டு உயரவே இல்லை.

 அரசன் வியப்படைந்தான். அரண்மனை பொக்கிஷத்தை திறந்து ஒரு பெரிய தங்க கட்டி எடுத்து வர செய்து தராசு தட்டில் வைத்தான். மலர் இருந்த தட்டு அப்படியே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பொக்கிஷத் தங்கம் முழுவதையும் கொண்டு வரச் சொன்னார். மலர் இருந்த தட்டில் மாற்றமில்லை. தனக்குச் சொந்தமான விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கொண்டு வரச் செய்து அரசன் தராசில் வைத்தான்.

 ராணியின் நகைகள் கொண்டுவரப்பட்டன. மன்னனின் அணிகலன்கள் கழட்டி வைக்கப்பட்டன. ஆனால் மலர் இருக்கின்ற தராசு தட்டு மேலே எழவே இல்லை. மன்னன் திகைப்பும் திகிலும் அடைந்தான். இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்று அவனுக்கு விளங்கவில்லை.

கோவில் அர்ச்சகர் கந்தனை அழைத்து வருமாறு அரசன் தன் சொந்த பல்லக்கை அனுப்பி வைத்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் கந்தன் அரசனின் முன் வந்து வணங்கி நின்றான்.

அரசன் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து கந்தனை மரியாதை உடன் வரவேற்று தனக்கு சமமாக இருக்கை தந்து அமரச் செய்தான்.

 பிறகு சுவாமி முதலில் தங்களை ஒரு ஏழை அர்ச்சகர் என அலட்சியமாக நினைத்தேன். தங்களுடைய பெருமையும் மதிப்பும் இப்பொழுது தான் எனக்கு விளங்குகிறது என்றான்.

கந்தன் சிரித்துக்கொண்டு அரசே என்னுடைய தகுதியை பற்றி தாங்கள் அளவுக்கு மீறிப் புகழ்கிறீர்கள். என்னிடம் எந்த மகிமையும் இல்லை. இந்த மலர் இறைவன் திருமேனியை அலங்கரித்து அதன் மூலம் பெருமை பெற்றது. தகுதி எல்லாம் இந்த மலரிடம் தான் இருக்கிறது. தவிர என்னிடம் அல்ல என்றான்.

 இந்த மலரின் விலைக்கு சமமான பொருள் உலகத்தில் உண்டா? என்று எனக்கு தெரியவில்லை என்றான் அரசன் திகைப்புடன்.

 இருக்கிறது அரசே! தாங்கள் தயவுசெய்து குளித்து முழுகி பரிசுத்த நிலையில் இறைவனை ஒரு மலரை கொண்டு ஏகாக்கிரக சிந்தனையுடன் அர்ச்சித்து பிறகு அந்த மலரை கொண்டு வந்து அடுத்த தட்டில் வைத்துப் பாருங்கள் என்றான் கந்தன்.

 அரசன் தராசின் மறுதட்டில் இருந்த செல்வப் பொருட்களை அகற்றிவிட்டு கந்தன் சொன்னபடி பரிசுத்த நிலையில் இறைவனை மலர் கொண்டு அர்ச்சித்து அந்த மலரை கொண்டு வந்து தராசின் மறு தட்டில் வைத்தான். என்ன ஆச்சரியம் ஜானகி தந்த மலரின் தட்டு இப்பொழுது மேல் எழுந்து அரசன் மலர் வைத்த தட்டுக்கு சமமாக நின்றது.

 உலகத்தில் எவ்வளவு செல்வமும் பெருமையும் இருந்தாலும் அது இறைவனின் அருளைப் பெற்ற ஒரு மலரை விட எந்த விதத்திலும் உயர்ந்த நிலை அல்ல என்ற உண்மை கண்ணுக்கு மெய்யாக நிரூபிக்கப்பட்டது கண்டு அரசன் மட்டுமல்ல அர்ச்சகரின் மனைவி ஜானகியும் மனம் வருந்தினாள்.

 கடவுளின் அருளுக்கு பாத்திரமாக இருப்பதைவிட வேறு செல்வ நிலை உலகத்தில் எதுவும் கிடையாது. 🙏🙏🙏

பணம் " ஒரு குரங்கு

" பணம் " ஒரு குரங்கு
"""""""""""""""""""'"""""""""""""""""
பணம் இல்லாத போது ஹோட்டல்ல வேலை செஞ்சாலும் வீட்ல வந்து சாப்பிடுகிறான்.

பணம் இருக்கும் போது வீட்டுல சமச்சாலும் ஹோட்டல்ல போய் சாப்பிடுகிறான்.

பணம் இல்லாத போது வயத்தை நிரப்ப சைக்கிள்ல போறான்.

பணம் இருக்கும் போது வயத்தைக் குறைக்க சைக்கிள்ல போறான்.

பணம் இல்லாத போது சோத்துக்காக அலைகிறான்.

பணம் இருக்கும் போது சொத்துக்காக அலைகிறான்.

பணம் இல்லாதபோது பணக்காரனாக நடந்து கொள்கிறான்.

பணம் இருக்கும் போது ஏழையாக காட்டிக் கொள்கிறான்.'

நிம்மதியாக இருக்கும் போது பணத்தைத் தேடுகிறான்.

பணம் இருக்கும் போது நிம்மதியை தேடுகிறான்.

பிரகலாதன்

*மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்.*

*இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார்.* 

*அதிபயங்கர உருவம்.*
*சிங்க முகம்...*
*மனித உடல்...*

*இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு.*

*இதைப் பார்த்தார்களோ இல்லையோ...*

*இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.*

*தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார்.*

*குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார்.*

*இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர்.*

*அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர்.*
 
*பயனில்லை.* 

*மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்.*

*"என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை.*

*முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன்,'' என்றாள்.*

*அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது.* 

*தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர்.*

*பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை.*

*அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!*

*தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார்.*

*மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.*

*"பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?'' என்றார்.*

*அவனுக்கு தூக்கி வாரிபோட்டது.*

*"சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு* 
*பெரிய வார்த்தையைச்*
*சொல்லுகிறீர்கள்?'' என்றான்.*

*"உன்னை நான்* *அதிகமாகவே* 
*சோதித்து விட்டேன்*
*சிறுவனான நீ, என் மீது கொண்ட* *பக்தியில் உறுதியாய்* *நிற்பதற்காக* 
*பல கஷ்டங்களை* *அனுபவித்து விட்டாய்.*

*உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன்.* 

*அதற்காகத்தான் மன்னிப்பு,'' என்றார்.*

*இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.*

*"மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்,'' என்ற நரசிம்மரிடம்,* 

*பிரகலாதன்,"ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,'' என்றான்.*

*பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம்.*

*ஆனால், ஆசை வேண்டாம் என்றான் பிரகலாதன்.*

*குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல!* 

*பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு!* 

*பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது.* 

*பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான்.*

*இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.*

*"இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது!*
*ஆசை வேண்டாம் என்கிறானே!''*

*ஆனாலும், அவர் விடவில்லை.*

*விடாமல் அவனைக்  கேட்டார்.*

 *"இல்லையில்லை!*

*ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்,''.*

*பகவானே இப்படி சொல்கிறார் என்றால்,*
 *"தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்" என்று முடிவெடுத்த பிரகலாதன்,* 

*"இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார்.*

*அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள்,'' என்றான்.*

*நரசிம்மர் அவனிடம்,*

 *"பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல!*

*உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள்.*

*அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்,'' என்றார்.*

*நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை.*

*அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது.*

இருக்கன்குடி மாரியம்மன்

 


இருக்கன்குடி மாரியம்மன் இருக்கன்குடியில் அர்ஜுனா ஆறு, வைப்பாறு என்று இரண்டு ஆறுகளுக்கு இடையில் மாரியம்மன் அருள் பாவிப்பதால் இந்த இடத்திற்கு இருக்கன்குடி மாரியம்மன் என்ற பெயர் வந்தது. அர்ஜுனா ஆறு என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நதியானது, வத்திராயிருப்பு என்னும் இடத்தில் உள்ள மகாலிங்கம் மலையிலிருந்து உற்பத்தியாகிறது. மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்ற சமயத்தில் கரடுமுரடான பாதைகளில் நடந்து மகாலிங்க மலையடிவாரத்தை வந்து அடைந்தனர். அவர்களது உடல் களைப்பை போக்குவதற்கு நீராட வேண்டும் என்று விரும்பினார்கள். அருகில் எங்கேயும் நீராடுவதற்கு நதிகள் இல்லை என்பதால் அர்ஜுனன் பூமி மாதாவையும், கங்கை தேவியையும் வணங்கி தனது அம்பினை பூமியில் செலுத்தியதன் மூலம் உருவாக்கப்பட்டது தான் இந்த அர்ஜுன் ஆறு. இந்தக் கோவிலின் வடக்குப் பக்கத்தில் அர்ஜுனன் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தக் கோவிலுக்கு தெற்குப் பக்கமாக ஓடும் வைப்பாறு இராமபிரானினால் உருவாக்கப்பட்டது. இராவணனை வீழ்த்துவதற்காக தனது படைகளுடன் சென்ற இராமன் மேற்கு தொடர்ச்சி மலைக்கு வந்தடைந்தார். இவர்கள் கடந்து வந்த பாதையில், ஏற்பட்ட களைப்பினை நீக்கிக்கொள்ள நீராட வேண்டும் என்று நினைத்தபோது, உருவாக்கப்பட்டதுதான் இந்த வைப்பாறு. ராமனும் ராமனுடைய சேனைகளும் நீராடுவதற்காக அங்கு ஏதேனும் நதி உள்ளதா என்று தேடிப் பார்த்தார்கள். அந்த சமயம் வழிப்போக்கன் ஒருவர், அகத்திய முனிவரானவர் உலகில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் ஒரு குடத்தில் சேமித்து, இந்த இடத்தில் புதையலாக புதைத்து வைத்திருப்பதாக கூறினார். இதைக் கேட்ட இராமன், தன் ஞானதிருஷ்டியினால் குடம் புதைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்து, தனது பானத்தின் அம்பினை எய்து புண்ணிய தீர்த்தங்களை வெளிவரச் செய்தார். ‘பைப்பு’ என்றால் புதையல் என்ற அர்த்தத்தை குறிக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த ஆறுக்கு வைப்பாறு என்ற பெயர் வந்ததாகக் கூறுகிறது வரலாறு.

அர்ஜுனனாலும், ராமராலும் உருவாக்கப்பட்டதால், இந்த இரண்டு நதிகளும் கங்கைக்கு நிகரான புண்ணியத்தை பெற்றுள்ளது. இதனால் இந்த ஊருக்கு ‘இருகங்கை குடி’ என்ற பெயர் உருவானது. அந்தப் பெயரே காலப்போக்கில் மருவி தற்போது இருக்கன்குடி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

தல வரலாறு அம்பாளின் தரிசனம் வேண்டும் என்பதற்காக ஒரு முனிவர் நீண்ட நாட்களாக தவம் இருந்து வந்தார். அவரது தவத்தின் பலனால் அந்த சித்தருக்கு ஒரு அசரீதி குரல் கேட்டது. அந்தக் குரலானது ‘சித்தரை அர்ஜுன ஆறுக்கும், மற்றும் வைப்பாறுக்கும் இடையே உள்ள மேட்டுப் பகுதிக்கு வருமாறு கூறியது.

இதன் மூலம் அந்த மேட்டுப் பகுதியை அடைந்த சித்தருக்கு அம்பாள் காட்சி அளித்தாள். தன் கண்களால் கண்ட அம்பாளின் உருவத்தை சிலையாக வடிவமைத்து, பிரதிஷ்டை செய்தார் சித்தர். ஆனால் இந்த சிலை இயற்கை சீற்றத்தினால் ஆற்று மண்ணில் புதைந்து போனது. சில காலங்கள் கடந்த பிறகு, இந்த இடத்திற்கு ஒரு சிறுமி சாணம் சேகரிக்க தினம்தோறும் வருவாள். ஒரு நாள் அவள் தரையில் வைத்த சாணக் கூடையை தூக்க முடியவில்லை. அந்தக் கூடையை தூங்குவதற்காக ஊர் மக்களின் உதவியை நாடினாள் அந்த சிறுமி. ஊர் மக்கள் அனைவராலும் தூக்கப்பட்ட கூடையின் அடியில் காட்சி தந்தாள் அம்பாள். இவ்வாறு இருக்கன்குடி மாரியம்மனின் சிலையானது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்றளவும் மக்களுக்கு அருள் பாவித்து வருகின்றாள் அம்பாள்.

பலன்கள் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் இந்த அம்பாளை தரிசனம் செய்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. தீராத வயிற்று வலி, அம்மை உள்ளவர்கள் அம்பாளை மனதார தரிசனம் செய்தால் தாக்கங்கள் குறையும். செல்லும் வழி மதுரையிலிருந்து 73 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சாத்தூர் என்ற பகுதி. இங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தூரம் சென்றால் இருக்கன்குடியை அடைந்துவிடலாம்.

தரிசன நேரம்: காலை 05.30AM – 01.00PM மாலை 04.30PM – 08.00PM முகவரி: சாத்தூர், இருக்கன்குடி, தமிழ்நாடு 626202. தொலைபேசி எண் +91-4562 259 614.

Tuesday, December 20, 2022

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்

வைரம் #பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று #போகர் கூறினார்

உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!

*Pirandai thokku / Pirandai rice mix / Pirandai capsules/Pirandai juice- Available* 

---------------------------------------
இப்பொழுது கேப்சுயூல் வடிவில் கிடைக்கும்* 
---------------------------------------
*#முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......*

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்....
எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ......

பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(#கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......

பிரண்டை தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...... 

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

நல்ல பதிவுகளை பகிர்வோம்


Saturday, December 10, 2022

ஒருநாள் ராமகிருஷ்ணரை தேடி ஒருத்தர்

ஒருநாள் ராமகிருஷ்ணரை தேடி ஒருத்தர் வந்தார்.அவர் ஆயிரம் பொற்காசுகளை ராமகிருஷ்ணரிடம் கொடுத்து இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாக கேட்டார்.

 இது எனக்குத் தேவையில்லை. ஆனாலும் உன் மனதை புண்படுத்த விரும்பவில்லை. அதனால் வாங்கிக் கொள்கிறேன் என்றார் ராமகிருஷ்ணர்.

 பின்னர் இதோ பார் இது எல்லாம் என்னுடையது தானே என்றார்.

 ஆமாம் எல்லாம் உங்களுடையது தான் என்றான் வந்தவன்.

சரி இப்போது நீ எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டுமென்றார்.

 என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என்றான்.

 இந்த நாணயங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் கங்கை நதியில் எறிந்து விட்டு வா என்று சொன்னார்.

 இவனுக்கு அதிர்ச்சி என்ன செய்வது இனிமேல் அது முடியாது என்றும் சொல்ல முடியாது. நாணயங்களை எல்லாம் அவருக்கே கொடுத்தாகிவிட்டது. பேசாமல் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போனான் . அவன் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. ராமகிருஷ்ணனுக்கு சந்தேகம் என்ன ஆயிற்று இவனுக்கு காசுகளோடு கங்கையில் குதித்து விட்டானா? போகும் போதே ஒரு மாதிரியாகத்தான் போனான். போய் என்ன நடந்தது என்று பார்த்து விட்டு வா என்று அங்கிருந்த ஒருவரை அனுப்பினார்.

 அவர் போனார். பார்த்தார். திரும்பி வந்து விபரத்தைச் சொன்னார். அவன் கங்கைக் கரையில் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு நாணயமாக எண்ணி வீசிக் கொண்டிருக்கிறான். அவனைச் சுற்றி ஒரு கும்பல் நின்று கொண்டு அவனை தடுத்துக் கொண்டிருக்கிறது என்றார்.

இதைக் கேட்டதும் ராமகிருஷ்ணரை புறப்பட்டு அங்கே போனார். ஏன் இப்படி செய்து கொண்டிருக்கிறாய் நானும் உன்னை அந்த நாணயங்களை கங்கையில் வீசி எறியச் சொன்னேனே . நீ ஏன் எண்ணிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.

 அவனோ பழக்கம்தான் காரணம். நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக சேமித்து வைத்தேன். இன்றைக்கு என்னிடம் நிறைய இருக்கிறது .உங்களுக்கு ஆயிரம் நாணயங்களை கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று சொன்னான்.

 இப்போது ராமகிருஷ்ணன் சொன்னார். ஒரே நேரத்திலே உன்னிடம் இருக்கின்ற அனைத்து நாணயங்களையும் சம்பாதித்திருக்கிறாய் என்றால் நீ எண்ணுவது பொருத்தமாக இருக்கும்.

எல்லாத்தையும் இழக்கும்போது எண்ணிக்கொண்டு இழப்பது என்பது சரியான மூடத்தனம் ஒரே தடவையாக எல்லாத்தையும் தூக்கி எறிந்து விடு என்று சொன்னார்.

 இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஏதாவது ஒன்றை ஒருவருக்கு கொடுக்க விரும்பினால் அல்லது கொடுத்தால் அதை மனப்பூர்வமாக கொடுக்க வேண்டும். கொடுத்த பிறகு அது என்னுடையது அல்ல என்கிற எண்ணம் நம் மனதில் பதிய வேண்டும். கொடுத்ததையே நினைத்துக் கொண்டிருந்தால் இந்த நாணயத்தை எண்ணி எண்ணி ஒவ்வொன்றாக ஆற்றில் போடுபவன் கதிதான் நமக்கும்.


Friday, December 9, 2022

வேதம் - ஆகமம் - திருமுறை இவற்றின் சிறப்பு பற்றி கூற முடியுமா?*

*வேதம் - ஆகமம் - திருமுறை இவற்றின் சிறப்பு பற்றி கூற முடியுமா?* 

என்று சிவனடியார் அடியேனிடம் கேட்டார். அதற்கு பதில் உங்கள் முன்னால்..

*வேதம் பற்றி குறிப்பு*

வேதம் - சிவாகமம் - திருமுறை இவை மூன்றும் சிவபெருமானால் அருளபட்டவை.

1. ரிக் - யஜூர் - சாமம் - அதர்வணம் என நான்கும் வேதத்தில் இருக்கிறது.

2. வேதம் அறிவு நூல்.

3 தெய்வீகமான மந்திரங்களை தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருக்கிறது.

4. வேதம் குரு மூலம் வழியில் மட்டுமே கற்க முடியும். இதற்கு குரு பரம்பரை என்று அழைப்பர்.

5. வேதத்தில் மன்னன் - ரிஷி - இந்திரன் - அக்னி - பிரம்மனின் படைப்பு போன்ற செய்திகள் உள்ளன.

6. யாகங்கள் பற்றி நிறைய விசயங்கள் உள்ளடக்கியுள்ளது.

7. தானத்தின் சிறப்புகள் பலவற்றை கூறுகிறது.

8. ருத்ரம் , சூக்தங்கள், இதர தெய்வங்களுக்கு உண்டான மந்திரங்கள் நிறைய உள்ளன.

9. அமாவாசை , பௌர்ணமி பூஜைகள் பிதுர் தர்ப்பணம் போன்ற செய்திகள் வேதத்தில் உள்ளடக்கியுள்ளது.

10. வேதத்தை இசையாக பாடுவதற்கு சாம காணத்தில் காணலாம்.

11. வேதத்திற்கும் தமிழைப் போல் இலக்கணம் உண்டு.

12. அனுஷ்டானம் , கிரியை பூஜைகளும் என நிறைய விசயங்கள் உள்ளன.

13. வேதத்திற்கு ஒலியே ஆற்றல் தரும். 

14. வேதங்களை பிராமணர்கள் பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது.

15. 63 நாயன்மார்களில்

அப்பூதியார் - உருத்திர பசுபதியார் - கணநாதர் - குங்குலியக்கலயர் - சண்டேசுவரர் - சிறப்புலியார் - சோமாசி மாறர் - சம்பந்தர் - என்று சொல்லிக்கொண்டே போகலாம்

இவர்கள் அனைவரும் பிராமணர் அதாவது அந்தணர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் .

வேதத்தை பிரதானமாக கொண்டு ஓதி வழிபாடு செய்பவர்கள் எகா நிறைய உள்ளன.

16. திருமூலர் சித்தர் வேதச்சிறப்பு என்று பாடியுள்ளார்.

17. திருமுறைகளில் வேதம் பற்றி செய்திகள் குறிக்கப்படுகின்றன.

18. 18புராணங்களிலும் , இதிகாசங்களிலும் வேதங்கள் பற்றிய செய்திகள் நிறைய சொல்லியுள்ளது. 

இன்னும் வேதங்கள் பற்றிய நிறைய தகவல்கள் சொல்லிக் கொண்டே போகலாம் ... 

ஆகவே வேதம் இறைவன் அருளியது இதற்கு எழுதாக் கிளவி என்று அழைப்பர்.

திருப்பதி பயணம் திருப்தியாக இருக்க

திருப்பதி பயணம் திருப்தியாக இருக்க இந்த விஷயங்களையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க ஃபிரண்ட்ஸ். 

திருப்பதிக்குப் போகவேண்டும் என்ற ஆசை, நம் மனதில் எழும்போதெல்லாம், 'இடங்கள் தெரிந்த யாராவது நமக்குத் துணைக்கு வந்தால், நன்றாக இருக்குமே' என்று தோன்றும். 

இல்லாவிட்டால், `பாஷை தெரியாத ஊரில் நாம் எங்கு, எதை விசாரிப்பது' என்ற வழக்கமான குழப்பம் வருவது இயற்கை.

அந்தக் கவலை இனி வேண்டாம்.

திருமலைக்குச் செல்லும்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக... 

சி.ஆர்.ஓ ஆபீஸ் 

திருமலையில் (மேல்திருப்பதி) பஸ்-ஸ்டாண்டுக்கு எதிர்ப்புறம் சென்றால், 200 அடி தொலைவில் இருப்பதுதான் சி.ஆர்.ஓ ஆபீஸ். 

இந்த அலுவலகம் இங்குள்ள முக்கியமான மையம் என்று சொல்லலாம். 

இந்த அலுவலகத்தில் திருமலை பற்றிய சகல விவரங்களையும் நீங்கள் கேட்டு அறியலாம். 

ஆன்லைனில், அறைகள் முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு இங்குதான் அறைகள் ஒதுக்கப்படும்.

சி.ஆர்.ஓ ஆபீஸ் பின்புறம் எஸ்.எஸ்.டி எனப்படும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட தரிசனத்துக்கு உங்களின் ஆதார் கார்டை காண்பித்து முன்பதிவு செய்துகொள்ளலாம். 

லாக்கர் அறை !!

நீங்கள் கொண்டுவரும் பை, ஃப்ளாஸ்க், செல்போன் முதலிய பொருள்களைப் பத்திரமாக வைத்துப் பூட்டிவிட்டுச் செல்வதற்கு லாக்கர் அறைகள் உண்டு.

அவற்றை விசாரணை மையத்தில் தொடர்புகொண்டு அங்குச் சென்று வைத்துக்கொள்ளலாம். 

உங்கள் பெயர், தொலைபேசி எண், ஆதார் அட்டையைக் காண்பித்தால் உங்களுக்கு கோத்ரேஜ் பூட்டுடன் ஒரு லாக்கர் தருவார்கள். 

அதில் உங்கள் உடைமைகளை வைத்துவிட்டு திருமலையில் எங்கு வேண்டுமானாலும் சுற்றி வரலாம்.

மீண்டும் உங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு பூட்டையும், சாவியையும் ஒப்படைத்து விட வேண்டும். 

செல்போனுக்குத் தடை !!

சுவாமி தரிசனம் செய்யப் போகும்போது, செல்போனை `சைலன்ட் மோடி'ல் போட்டுவிட்டு லாக்கரில் வைத்து விட்டுச்செல்லுங்கள்.

சுவாமி தரிசனம் செய்யும்போது செல்போன் உங்களிடம் இருந்தால், அதைப் பாதுகாவலர்கள் கைப்பற்றி, செல்போன் பாதுகாக்கும் இடத்துக்கு அனுப்பிவிடுவார்கள். பிறகு, அதை வாங்குவதற்கு நீங்கள் அலைய வேண்டியிருக்கும். 

கல்யாண கட்டா!!

`கல்யாண கட்டா' முடிக்காணிக்கை செலுத்தும் இடம். 

திருப்பதி வேங்கடேசப் பெருமாளை தரிசிக்கச் செல்பவர்களில் பலரும் மொட்டை போட்டு முடிக்காணிக்கை செலுத்துவது வழக்கம்.

`கல்யாணகட்டா' என்னும் 5 அடுக்கு மாடிக்கட்டடம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்கு எதிரே மிகப்பெரிய அளவில் உள்ளது.

முடிக்காணிக்கையை இந்த இடத்தில்தான் செலுத்தவேண்டும் என்பதில்லை. 

பக்தர்கள் தங்கும் வராகசாமி கெஸ்ட் ஹவுஸ், மாதவ நிலையம், கருடாத்திரி கெஸ்ட் ஹவுஸுக்குப் பின்புறம் உள்ள பஸ் டெர்மினஸ் எனப் பல இடங்களில் முடியைக் காணிக்கையாகச் செலுத்தலாம். 

இதற்கு எந்தவிதக் கட்டணமோ, பணமோ எவருக்கும் தரத் தேவையில்லை.

சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டு !!

சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி எனும் ஆந்திர மாநிலப் பேருந்துகள் இந்த நிலையத்தைத்தான் வந்தடையும். 

இங்குள்ள முன்பதிவு அலுவலகத்தில் நாம் புறப்படும் வசதிக்கு ஏற்ப முன்பதிவும் செய்து கொள்ளலாம். 

இந்தப் பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் திருமலையில் இருக்கும் பாபநாச தீர்த்தம், ஆகாஷ் கங்கா, ஜபாலி ஆகிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் புறப்படும். 
பேருந்தில் ஏறும்போதே ரிட்டர்ன் டிக்கெட்டும் சேர்த்தே எடுத்துக்கொள்ளலாம்.

புஷ்கரணி, கோயில் திருக்குளம்!!

முடிக் காணிக்கை செய்ததும் அங்குள்ள குளியலறைகளில் நீங்கள் குளித்திருந்தாலும், சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக கோயிலுக்கு அருகில் இருக்கும் திருக்குளத்தில் ஒருமுறை நீராடி விட்டோ, தண்ணீரை அள்ளி தலையில் தெளித்துக் கொண்டோ சுவாமி தரிசனம் செய்வது நல்லது.

வராகசுவாமி கோயில்!!

திருக்குளத்தில் நீராடி முடித்ததும் அதன் கரையிலேயே இருக்கும் வராகசாமி கோயிலில் சுவாமியை வணங்க வேண்டும்.

அதன் பின்னரே வேங்கடேசப் பெருமாளை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

ஏனென்றால், திருமலையில் முதலில் எழுந்தருளியவர் வராக சுவாமிதான். 

அதன் பின்னர்தான் சீனிவாசன் எனும் வேங்கடேசப் பெருமாள் கோயில் கொண்டார். அதனால் முதல் வணக்கம் வராக சுவாமிக்குத்தான்.

வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் - 2 

300 ரூபாய் சிறப்புத் தரிசனம் தவிர, சர்வதரிசனம், திவ்ய தரிசனம் (மலைப்பாதை வழியாக நடந்து வந்து தரிசிப்பவர்கள்) நேர ஒதுக்கீட்டுத் தரிசனம் என அனைத்து வகையினரும் இந்த வழியாகத்தான் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

இந்த இடத்தை அடைய நாம் பெரிதாகச் சிரமப்படத்தேவையில்லை. 

மலை முழுவதும் வலம் வரும் `தர்மரதம்' என்னும் ஆரஞ்சு வண்ணப் பேருந்தில் நீங்கள் பயணித்தால், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் என்று சொல்லியே இறக்கி விடுவார்கள். 

பகல், இரவு பாராமல் இந்த பேருந்து 5 நிமிடங்களுக்கு ஒரு முறை புறப்படும்.     

ஆனந்த நிலையம்!!

வேங்கடேசப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் ஆனந்த நிலையம். இங்குதான், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், சிறப்பு தரிசனம் எனப் பல்வகையான வழிமுறைகளில் வரும் பக்தர்கள் ஒரு சேர தரிசனம் செய்வார்கள்.

தரிகொண்ட வெங்கமாம்பாள் அன்னதானக்கூடம் !!

சுவாமி தரிசனம் முடிந்ததும், கோயிலுக்கு இடதுபுறம் இருக்கிறது இந்த அன்னதானக்கூடம்.

இங்கு ஒரே சமயத்தில் 4 ஆயிரம்பேர் சாப்பிடும் விதமாக 1000 பேருக்கு ஒரு கூடம் என 4 கூடங்கள் உள்ளன. 

இங்குச் சுடச்சுட தலைவாழை இலையில் வேண்டுமளவு உணவு வழங்கப்படுகிறது.

பெருமாள் பிரசாதம் என்பதால் பக்தர்கள் பலரும் இங்கு வந்து சாப்பிட்டுச்செல்வார்கள்.

சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், துவையல் ஆகியவற்றுடன் உணவு வழங்கப்படும்.

லட்டு கவுன்டர்!!

அன்னதானக் கூடத்திலிருந்து கோயிலின் மதில்சுவரையொட்டி நடந்து சென்றால் வலதுபுறம் லட்டுகள் வழங்கும் மிகப்பெரிய கட்டடம் உள்ளது

இங்கு 50-க்கும் மேற்பட்ட கவுன்டர்களில் லட்டுகள் வழங்கப்படும். 

தரிசனத்துக்கு முன்பாகவே லட்டு டோக்கன் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

அந்த லட்டு டோக்கனைக் காண்பித்து நீங்கள் இங்கு உங்களுக்கு உரிய லட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஓம் நமோ வேங்கடேசாய நமஹ!!

பருவத மலையின் சிறப்பம்சம்

⛩️⛩️பருவத மலை⛩️⛩️⛩️

🪔🪔பருவத மலையின் சிறப்பம்சம்
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 4560 அடி உயரம் கொண்ட ஒரு மலை ஆகும்.

இந்த மலையில் மல்லிகார்ஜுனசாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள். வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.

வரலாற்று பதிவு
இந்த பருவத மலையின் அடிவாரத்திலேயே கரிகாற் சோழனின் வீர வரலாறு தொடங்குகிறது.கரிகாற் சோழன் ஆயிரம் யானைகளை தன் கண் அசைவுக்கு பழக்கியது இந்தக் காடுகளில்தான்.அந்த யானைகளை கொண்டு ஓர் அமாவாசை இரவில் கடலில் ஒர் நீர் மூழ்கி கப்பலைப்போல் மிதக்க வைத்து சென்று கடற் கொள்ளையர்களை நிர்மூலமாக்கினார்..இதை படிக்கும்போதே கரிகாற் சோழன் யானைகளை எப்படிப் பழக்கினார் என்பது புரியும்.

கோட்டை
இந்த மலையில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும்விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.

சிறப்புகள்
பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும்.

இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.
இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.
இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.
பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.

பின் குறிப்பு
மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.

போக்குவரத்து வசதி
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இந்த பருவத மலைக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது.அல்லது திருவண்ணாமலை சென்று பின் அங்கிருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
Distance between Parvathamalai and Tiruvannamalai is 30 kms or 18.6 miles or 16.2 nautical miles

Origin Parvathamalai, Tamil Nadu, India

Destination : Tiruvannamalai
Driving Distance : 30 kms or 18.6 miles or 16.2 nautical miles
Driving Time : 36 minutes
Bus details
1.Bus no 148 – Chennai koyambedu to polur
2. Polur to chengam
Stopping : THEN MATHI MANGALAM 🤲⛩️⛩️⛩️ நற்பவி 

Monday, November 28, 2022

காசி

 காசி

காசி என்பதை ஊராகப் பாக்காமல் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.

வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.

சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.

அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.*

நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468.
நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.
மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.
மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.
இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.

காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும்.

இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.

இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..?

468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும்.
இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.

இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.

அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.

இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.

இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.
இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.
அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.
அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.

இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.

இது ஒரு சக்தி உருவம்...

இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.

ஓம் நமசிவாய.

ஸ்ரீ குருவாயூரப்பன் திருவிளையாடல்

🪷ஸ்ரீ குருவாயூரப்பன் திருவிளையாடல் 

ஒரு ஏழைப் பெண்மணி தென்னை மட்டையிலிருந்து கயிறு பிரித்து வியாபாரம் செய்து வந்தாள். அவளுக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. மிகவும் வருந்திய அவள் குருவாயூரப்பனிடம் தனக்குக் குழந்தை உண்டானால் கயிற்றுப் பிரியால் துலாபாரம் செய்வதாய் வேண்டிக் கொண்டாள்.

சிறிது நாட்களிலேயே அவள் கருவடைந்தாள். வியாபாரமும் செழிக்கத் தொடங்கியது. குழந்தைக்கு ஆறு மாதமானதும் பிரார்த்தனையை நிறைவேற்ற குருவாயூர் சென்றாள். இப்போது வசதியாய் இருப்பதால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று முடிவு செய்தாள். குழந்தையைத் துலாபாரத் தட்டில் கிடத்தி, மற்றொரு தட்டில் கதலிப் பழத்தை வைத்தார்கள்.

குழந்தையின் எடையை விட பத்து மடங்கு கதலியை வைத்தும், தட்டு சமநிலையை அடையவில்லை. கோவில் சிப்பந்தி அவளிடம், “ஏதோ தப்பு நடந்திருக்கிறது, என்ன பிரார்த்தித்தாய்?” என்று கேட்டனர். 

அவளும், “ஏழையாய் இருக்கும் சமயம் கயிறு வேண்டிக் கொண்டேன், இப்போது அவன் அருளால் வசதி பெருகிவிட்டது, அதனால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று செய்தேன்” என்று கூறினாள்.

கோவில் சிப்பந்திகள்,“ உன்னிடம் எவ்வளவு கோடி இருந்தாலும், பிரார்த்தித்த வேண்டுதலையே அப்பன் ஏற்பான்” என்று கூறினார்கள். பழங்களை இறக்கிவிட்டு கயிற்றை ஏற்றினார்கள், என்ன ஆச்சர்யம்! 

தராசு கீழே இறங்கியது. அப்பன் பொருட்களில் உயர்வு, தாழ்வைப் பார்ப்பதில்லை, அன்புடன் சமர்ப்பிக்கும் எதையும் ஏற்பான் என்பதற்கு இந்த லீலை உதாரணம்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !


Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...