Saturday, November 12, 2022

உணர்ச்சி’ உள்ள மனிதர்களையும், அன்பான மனிதர்களையும்,

 நியாயங்கள் உங்கள் பக்கம் இருந்தாலும் 

புரிந்து கொள்ளாதவர்களோடு வாதிட முடியாதபோது அமைதியாக இருப்பதே சிறந்தது....


சோப்பு உற்பத்திக்கு எண்ணெய் தேவை. 

எண்ணெயைப் போக்குவதற்கு சோப்பு தேவை.

வாழ்க்கையின் இரட்டை நிலைப்பாடு இதுதான்!


மற்றவர் தவறுகளை கவனித்துக்

கொண்டே இருப்பவர்கள்.....!!

தன் தவறுகளை வளர்த்துக்

கொண்டே இருக்கிறார்கள்......!!

.வாழ்க்கையில் வெற்றி அடைய *ஆயிரம் வழிகள் உண்டு..,


ஆனால் .., அதற்குள்தான் ஆயிரம் வலிகளும் உண்டு..!

யாரைப் போல இல்லாமல் ...

இது தான் நான் ... என்று தன் இயல்பு மாறாமல் வாழ்வதும்...

ஒரு வகையில் சாதனை தான் ...

சொன்னபடி செய்ய ஆள் இல்லாத உலகில், 

கண்டபடி சொல்ல ஆள் இருக்கிறார்கள்.


அறிவாளியை விலை

கொடுத்து வாங்கி விடலாம்.


உணர்ச்சி’ உள்ள 

 மனிதர்களையும்,

 அன்பான மனிதர்களையும்,


விலை கொடுத்து 

வாங்க முடியாது....



சோகங்களே இங்கு அதிகம்

 அடுத்தவரிடம் சொல்ல

கூடாதெனும் சோகங்களை விட


அடுத்தவரிடம் 

சொல்ல முடியாத

சோகங்களே இங்கு அதிகம்...

பணத்தோடு இருக்கும் வரை தான்

 மரத்தோடு இருக்கும் வரை தான் இலைக்கு மதிப்பு......


பணத்தோடு இருக்கும் வரை தான் மனிதனுக்கு மதிப்பு.........!!


வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தவருக்கு

 வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தவருக்கு விட்டுக் கொடுத்ததை தவிர. எல்லாம் கிடைக்கும்.

தட்டிப் பறித்தவருக்கு தட்டிப் பறித்ததை தவிர. எதுவும் கிடைக்காது இது தான் இறைவன் நியதி.

மகிழ்வை தருபவரல்ல இறைவன்கவலைகளை தாங்க மன தைரியம் தருபவரே இறைவன்.

நன்றி மறந்தவரை விட்டு விடுங்கள், நமக்கு நலம் பயப்பவரை வணங்குங்கள். தீய எண்ணம் உடையவருக்கு, எந்த தெய்வசக்தியும் துணை நிற்காது.

இறைவா நீயே கதி என்றிருப்பவர்களுக்கு ஏதோ ஒரு வடிவில் துணையாக இருப்பார் இறைவன்.

Thursday, November 10, 2022

வழிபடும் லிங்கங்கள்

 வழிபடும் லிங்கங்கள்

பிரம்மா வழிபடுவது ஸ்வர்ண லிங்கம்

ஸ்ரீ கிருஷ்ணர் வழிபடுவது கருங்கல்லிலான லிங்கம்

சப்த ரிஷிகள் வழிபடுவது தர்பையிலான லிங்கம்

ஓம் சிவஓம் அகத்தியர் வழிபடுவது நெல்லில் ஆன லிங்கம்

சரஸ்வதி வெண்முத்திலான லிங்கம்

ஸ்ரீராமர் நீலக்கல்லிலான லிங்கம்

வருணன் ஸ்படிக லிங்கம்

சித்தர்கள் மானச லிங்கம்

புதன் சங்கு லிங்கம்

கணேசர் கோதுமை லிங்கம்

கருடர் அன்ன லிங்கம்

அஸ்வினி தேவர் களிமண் லிங்கம்

காமதேவர் வெல்லத்திலான லிங்கம்

விபீஷணன் குப்பையிலிருக்கு மண்ணிலான லிங்கம்

போகர் மரகத லிங்கம்

இராவணன் சாமலி எனும் மலரின் மரப்பட்டையிலான லிங்கம்

ராகு பெருங்காயத்திலான லிங்கம்

நாரதர் ஆகாச லிங்கம்

செவ்வாய் வெண்னையிலான லிங்கம்

நட்சத்திரங்கள் தங்கள் ஒளிக்கொண்டு வழிப்படும்

பிரம்ம ராக்ஷசர்கள் எலும்பிலான லிங்கம்

ஊர்வசி குங்குமப்பூவிலான லிங்கம்

டாகினிகள் மாமிசத்திலான லிங்கம்

மேகங்கள் நீருள்ள மேக லிங்கம்

பரசுராமர் சோளத்திலான லிங்கம்

பசுக்கள் பால்நிறைந்த மடியிலுள்ள லிங்கம்

பறவைகள் ஆகாச லிங்கம்

வாசுகி விஷ லிங்கம்

கடல்வாழ் மீன்கள் வ்ரிஷகபி எனும் லிங்கம்

குருவின் குரு சுப்பிரமணியர் வழிபடும் லிங்கம் பாஷாணத்திலான லிங்கம்

தினம் ஒர் சித்தர் வரலாறு . பெயர்: காக புஜண்டர்

 தினம் ஒர் சித்தர் வரலாறு


 பெயர்: காக புஜண்டர்


வரலாறு சுருக்கம்:

பக்திலோகத்தில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் இருந்தனர். அந்த நடனத்தை சக்திலோகத்தில் இருந்த அன்னப்பறவைகளும் ரசித்துப் பார்த்து, அவையும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடின. சிவனும் பார்வதியும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்த வேளையில், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலை ஒன்று காகமாக வடிவெடுத்தது. அந்த காகம் அங்கிருந்த அன்னப்பறவைகளின் அழகில் லயித்தது. ஏதாவது, ஒரு அன்னத்துடன் உறவு வைத்துக் கொண்டால் என்ன என்று எண்ணியது, நினைத்தது போலவே ஒரு அன்னத்தை அழைக்க, அதுவும் காகத்துடன் உறவு கொண்டது. அந்த அன்னம் அப்போதே கர்ப்பமடைந்து 21 முட்டைகளை இட்டது. அதில் இருந்து 20 அன்னங்களும், ஒரு காகமும் உருவாயின. அந்த காகமே மனித ரூபம் பெற்று காக புஜண்டர் என்னும் சித்தராக மாறியது. நினைத்த நேரத்தில் காகமாக மாறிவிடும் சக்தியும் இந்த சித்தருக்கு இருந்தது.வாரிஷி என்னும் முனிவர் மீது, கணவனை இழந்த பெண் ஒருத்தி காதல் கொண்டாள்.முனிவர் அவளைச் சபித்து விட்டார். கணவனை இழந்த நிலையில் இன்னொருவன் மீது நாட்டம் கொண்டதால் உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறப்பதாக! என சொல்லி விட்டார். இதன்படி அந்தப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அந்த குழந்தை சந்திர வம்சத்தை சேர்ந்தது. அதுவே காகபுஜண்டர் என்னும் சித்தராக மாறியது என்றும் புஜண்டரின் பிறப்பு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. உஜ்ஜயினியில் உள்ள மகாகாலர் (சிவன்) கோயிலுக்கு காகபுஜண்டர் தினமும் செல்வார். ஓம் நமசிவாய என்னும் திருநாமத்தை ஒரு லட்சம் முறை ஓதுவார். சிறந்த பக்தரான இவரது பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த நினைத்த சிவன், திருமாலின் வாகனமான கருடனை அழைத்தார்.கருடனே! இப்பூவுலகில் பிறந்திருக்கும் காகபுஜண்டன் அழிவே இல்லாதவனாக இருப்பான். உலகம் அழிந்தால் தேவர்களும், மனிதர்களும், பூதங்களும் அந்த கல்பத்திற்குரிய பிரம்மனும்கூட அழிந்துவிடுவார்கள் என்பது உலக நியதி. ஆனால், இந்த காகபுஜண்டனுக்கு உலகம் அழிந்தால்கூட, அழிவு வராது. அந்தளவிற்கு அவன் எனது சிறந்த பக்தனாக விளங்குகிறான், என்றார். கருடன் ஆச்சரியத்துடன் பறந்து சென்றான். காகபுஜண்டருக்கோ சிவன் மீதுதான் பக்தி அதிகமே தவிர, திருமால் கோயில்களுக்கு செல்ல மாட்டார். போதாக்குறைக்கு திருமாலின் பக்தர்களையும் மதிக்க மாட்டார். காகபுஜண்டரின் குரு, இதற்காக புஜண்டரைக் கண்டித்தார். எந்த தெய்வமாயினும் சமமே என்பதை எடுத்துச் சொன்னார். ஆனால், காகபுஜண்டரோ இதைக் கண்டுகொள்ளவேயில்லை. பொறுமைமிக்க குரு, திரும்பத்திரும்ப அனைத்து தெய்வங்களும் சமமே என்பதை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.ஒருமுறை காகபுஜண்டர் மகாகாலர் ஆலயத்தில் சிவனை வணங்கிக்கொண்டிருந்தபோது, அவரது குரு வந்தார். காகபுஜண்டர் குரு வருவதை அறிந்தும்கூட, அவர் மீது கொண்ட கோபத்தால் எழக்கூட இல்லை. திருமாலை வணங்கச்சொல்கிறாரே என்ற கோபம் தான் அது. குருவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிவபெருமானுக்கு கோபம் வந்துவிட்டது. தனது அன்பிற்குரிய பக்தன் என்றுகூட பார்க்காமல், காகபுஜண்டா! குருவுக்கு மரியாதை செய்யாதவன், எனது பக்தனாக இருக்க தகுதியில்லாதவன். நீ இதுவரை ஜபித்த மந்திரங்களின் பலனை இழந்து விட்டாய். திருமாலை மதிக்கும்படி குரு சொன்னதை நீ ஏற்றிருக்க வேண்டும். மேலும் கோபத்தின் காரணமாக குருவிற்கு மரியாதைகூட செலுத்த தவறிவிட்டாய். குருவிற்கு மரியாதை செலுத்தாத நீ பலகாலம் இந்த பூமி யில் பத்தாயிரம் பிறவிகளுக்கு குறையாமல் பிறப்பாய். நரக வேதனை அனுபவிப்பாய், என்றார். அசரீரியாக ஒலித்த இந்த குரல் கேட்டு காகபுஜண்டர் நடுங்கி விட்டார். குருவிடம் மன்னிப்பு கேட்டார். குருவும் புஜண்டர் மீது அன்பு கொண்டு சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் தரும்படி கேட்டார். குருவின் மனிதாபிமானம் கண்டு மகிழ்ந்த சிவன், பத்தாயிரம் பிறவிகளை ஆயிரம் பிறவிகளாக குறைத்தார். பிறவிகளை எடுத்தாலும் பிறவிக்குரிய துன்பங்கள் எதுவும் அணுகாது என்றும், தான் ஏற்கனவே வாக்கு கொடுத்ததைப் போல உலகமே அழிந்தாலும் காகபுஜண்டன் அழிய மாட்டான் என்றும் வாக்களித்தார். இப்படி 999 பிறவிகளை எடுத்து முடித்த காகபுஜண்டர், கடைசியாக ஒரு அந்தணரின் வீட்டில் பிறந்தார். அந்த பிறவியில் தன் முந்தைய பாவத்திற்கு பரிகாரமாக ராமபக்தராக மாறினார். ராமனைக் காண தவம் செய்தார். காக வடிவெடுத்து ராமனை பல உலகங்களிலும் தேடி அழைந்தார். அவர் சென்ற உலகங் களில் எல்லாம் பல அற்புதங்களை நிகழ்த்தினார். சதுரகிரி மலைக்குச் சென்ற காகபுஜண்டர், போகரின் சீடர்கள் சிலரை தனது சீடர்களாக்கிக் கொண்டார். சூரசேனன் என்ற சீடன், காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு விஷக்கனியை தவறுதலாக சாப்பிட்டு இறந்தான். அவனை, நாக தாலி என்ற மூலிகையைக் கொண்டு உயிர்பெறச் செய்தார். இப்படி பல அற்புதங்களைச் செய்தார்.உலகம் பலமுறை அழிந்தபோது அதை உச்சியில் இருந்து பார்த்தவர் காகபுஜண்டர். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்கும் விதத்தையும், தட்பவெப்ப நிலை மாறுதல் களையும் பற்றி அவர் சில நூல்களில் சொல்லியிருக்கிறார்.நட்சத்திரங்களில் அவிட்டத்திற்கு சொந்தக்காரர் காகபுஜண்டர். ஒருசிலர் காகபுஜண்டரே, சிவனருளால் அவிட்ட நட்சத்திரமாக மாறினார் என்றும் சொல்கின்றனர். தனது கடைசிக் காலத்தை காகபுஜண்டர் திருச்சியிலுள்ள உறையூரில் கழித்ததாகவும், அங்கேயே சமாதியானதாகவும் சொல்கிறார்கள். தியானச் செய்யுள்: காலச்சக்கரம் மேல்

ஞானச்சக்கரம் ஏந்திய

மகா ஞானியே

யுகங்களைக் கணங்களாக்கி

கவனித்திடும் காக்கை ஸ்வாமியே

மும்மூர்த்திகள் போற்றும்- புஜண்டரே உமது

கால் பற்றிய எம்மைக் காப்பாய்

காக புஜண்ட சுவாமியே.

தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள் : 10-11-2022

தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள் :

10-11-2022

தமிழ் ஆண்டு, தேதி - சுபகிருது, ஐப்பசி 24 

நாள் - மேல் நோக்கு நாள்

பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ துவிதியை   - Nov 09 05:17 PM – Nov 10 06:33 PM

கிருஷ்ண பக்ஷ திருதியை   - Nov 10 06:33 PM – Nov 11 08:17 PM

நட்சத்திரம்

ரோஹிணி - Nov 10 03:09 AM – Nov 11 05:08 AM

மிருகசீரிடம் - Nov 11 05:08 AM – Nov 12 07:33 AM

கரணம்

கரசை - Nov 10 05:51 AM – Nov 10 06:33 PM

வனசை - Nov 10 06:33 PM – Nov 11 07:22 AM

யோகம்

பரீகம் - Nov 09 09:17 PM – Nov 10 09:12 PM

சிவம் - Nov 10 09:12 PM – Nov 11 09:29 PM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:13 AM

சூரியஸ்தமம் - 5:53 PM

சந்திரௌதயம் - Nov 10 7:29 PM

சந்திராஸ்தமனம் - Nov 11 8:26 AM

அசுபமான காலம்

இராகு - 1:31 PM – 2:58 PM

எமகண்டம் - 6:13 AM – 7:41 AM

குளிகை - 9:08 AM – 10:36 AM

துரமுஹுர்த்தம் - 10:07 AM – 10:53 AM, 02:46 PM – 03:33 PM

தியாஜ்யம் - 11:18 AM – 01:03 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 11:40 AM – 12:27 PM

அமிர்த காலம் - 01:40 AM – 03:24 AM

பிரம்மா முகூர்த்தம் - 04:37 AM – 05:25 AM

ஆனந்ததி யோகம்

உற்பாதம் Upto - 05:08 AM

மிருத்யு

வாரசூலை

சூலம் - South

பரிகாரம் - தைலம்

__________

வியாழன் ஹோரை

காலை

06:00 - 07:00   -   குரு   -  சுபம்

07:00 - 08:00   -   செவ் -  அசுபம்

08:00 - 09:00   -   சூரி   -  அசுபம்

09:00 - 10:00   -   சுக்    -  சுபம்

10:00 - 11:00   -   புத    -  சுபம்

11:00 - 12:00   -   சந்     -  சுபம்

                                                                                                                                                                                                            பிற்பகல்

                                                                                                                                                                                                            12:00 - 01:00   -   சனி    -  அசுபம்

01:00 - 02:00   -   குரு    -  சுபம்

02:00 - 03:00   -   செவ்   - அசுபம்        

மாலை 

03:00 - 04:00  -   சூரி   -   அசுபம்

04:00 - 05:00  -   சுக்     -  சுபம்

05:00 - 06:00  -   புத     -   சுபம்

06:00 - 07:00  -   சந்     -   சுபம்        

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.__________

ராசிபலன்

10-11-2022

மேஷம்

நவம்பர் 10, 2022

பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத சில அறிமுகத்தின் மூலம் லாபம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பரணி : ஆர்வம் உண்டாகும். 

கிருத்திகை : லாபம் கிடைக்கும்.

---------------------------------------ரிஷபம்

நவம்பர் 10, 2022

சிக்கனத்துடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் நினைத்த தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிபுரியும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

கிருத்திகை : தேவைகள் பூர்த்தியாகும். 

ரோகிணி : மதிப்பு அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : கவலைகள் நீங்கும்.

---------------------------------------மிதுனம்

நவம்பர் 10, 2022

வியாபாரத்தில் பொருளாதார சிக்கல்கள் குறையும். ஆடம்பர பொருட்களால் சேமிப்பு குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் விரயம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு  

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.

திருவாதிரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.

புனர்பூசம் : விரயம் உண்டாகும்.

---------------------------------------கடகம்

நவம்பர் 10, 2022

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் புதுவிதமான சூழல் அமையும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : மாற்றம் உண்டாகும். 

பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

ஆயில்யம் : சுறுசுறுப்பான நாள்.

---------------------------------------

சிம்மம்

நவம்பர் 10, 2022

புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் அமையும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

மகம் : ஆர்வம் உண்டாகும்.

பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.

உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------

கன்னி

நவம்பர் 10, 2022

வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வாகனங்களால் வீண் செலவுகள் நேரிடலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.  மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் அமையும். 

அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சித்திரை : முயற்சிகள் கைகூடும். 

---------------------------------------துலாம்

நவம்பர் 10, 2022

எதிலும் அவசரமின்றி விவேகத்துடன் செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வேளாண்மை சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : விவேகத்துடன் செயல்படவும். 

சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும். 

விசாகம் : பொறுமையுடன் செயல்படவும். 

---------------------------------------

விருச்சிகம்

நவம்பர் 10, 2022

ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.  செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

விசாகம் : முடிவு கிடைக்கும்.

அனுஷம் : அனுபவம் உண்டாகும். 

கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------

தனுசு

நவம்பர் 10, 2022

நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுத்து செல்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வு தோன்றி மறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

பூராடம் : ஆதாயகரமான நாள்.

உத்திராடம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.

---------------------------------------மகரம்

நவம்பர் 10, 2022

வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நிறைவான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்குஅதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திராடம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்

அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------கும்பம்

நவம்பர் 10, 2022

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். புதுமையான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.

சதயம் : பொறுப்புகள் கிடைக்கும். 

பூரட்டாதி : முயற்சிகள் சாதகமாகும்.

---------------------------------------

மீனம்

நவம்பர் 10, 2022

உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை விட அறிவுப்பூர்வமாக செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இழுபறியான சில பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : மேன்மையான நாள்.உத்திரட்டாதி : முடிவு கிடைக்கும்.ரேவதி : இழுபறிகள் குறையும்.


கடவுள், உயிர்கள், மற்றும் உலகம் பற்றி நம் தமிழகத்தில் தோன்றிய ஞானிகளின் கருத்து.

 கடவுள், உயிர்கள், மற்றும் உலகம் பற்றி நம் தமிழகத்தில் தோன்றிய ஞானிகளின் கருத்து.

 உலகில் மூன்று பொருட்கள் உள்ளன. 

1) இறைவன் 

2) உயிர்கள் 

3) மாயை 

பிரபஞ்சம் முழுவதற்கும் இருப்பது ஒரே இறைவன் தான்.

உயிர்களில் 84 லட்சம் வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகையிலும் எண்ண முடியாத அளவு உயிர்களின் எண்ணிக்கைகள் இருக்கின்றன. இந்த 84 லட்சம் உயிர் வகைகளை ஏழு பெரும் பிரிவுகளாகவும்  பிரிக்கலாம்.

1 தேவர் 

2) மனிதர் 

3) மிருகங்கள்

4) பறவைகள்

5) ஊர்வன 

6) நீர் வாழ்வன

 7)தாவரங்கள் 

மாயை என்னும் பொருள் ஒன்றுதான்.

 அதை இறைவன், தான் விரும்பும் வண்ணம் ஆக்க முடியும்.  அண்ட சராசரங்களில் உள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்தும் ஒரே பொருளான மாயையில் இருந்து இறைவன் உருவாக்கியது தான். இறைவன், உயிர்களுக்கு அவரவர் அடைந்துள்ள பக்குவ நிலைக்கு ஏற்ப உடலைத் தருகிறான். அந்த உடலை வைத்து தன் ஆயுட்காலத்தில் அவை வினையாற்றுகின்றன. அதனால் அவை அனுபவம் பெற்று பக்குவம் அடைந்து முன்னேறுகின்றன. அவைகள் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு ஏற்ப அடுத்த பிறவியில் அவற்றிற்கு உடலை இறைவன் வழங்குகிறான். ஒவ்வொரு பிறவியிலும் அனுபவம் பெற்று முன்னேறி இறுதியில்  இறைவனுடன் ஒன்றியிருக்கின்றன. இவ்வாறு உயிர்கள் முன்னேறி இறைவனுடன் ஒன்ற வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம் ஆக இருக்கிறது.  ஆனால், உயிர்கள் தன் புலன் உணர்வால் கிடைக்கும் இன்பங்களில் மயங்கி அதிலேயே மூழ்கி முன்னேற்ற பாதையில் செல்லாமல் பின்தங்கி விடுகின்றன. அவைகள் இறைவடி சேரும்   வரை அவற்றிற்கு இறைவன் மீண்டும் பிறவிகளையும் அந்தந்தப் பிறவிக்கு ஏற்ப உடலையும் வழங்குகிறான். மனிதர்கள்  இந்தப் பிறவிச்சுழல் என்ற கடலில் இருந்து மீள முடியாமல் மூழ்கிக் கிடக்கிறார்கள்.அவர்கள் கடைத்தேறுவதற்கான  வழியைத்தான் திருவள்ளுவர் தம் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்தாவது பாடலில் கூறுகிறார்.

 பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

 நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

இறைவனுடைய திருவடிகளை நினைந்து போற்றிக் கொண்டு இருப்பவர்கள் பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பார்கள்;

மற்றவர்கள் கடக்க முடியாது.


அன்புச் சொந்தங்களே,


இந்தக் கருத்துக்கள் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் ஆகும்.

உலகில் எந்த சமயத்திலும் சொல்லப்படாதது.

சென்னையில் திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் என்ற ஒரு பழமையான சிவாலயம் இருக்கிறது.அங்கே, வருடத்தில் 365 நாட்களும் சைவ அதாவது சிவ வழிபாடு பற்றிய சொற்பொழிவு நடைபெறுகிறது.நான் சென்னையில் இருக்கும் போது மன அமைதிக்காக அவ்வப்போது இந்த சொற்பொழிவுகளைக்  கேட்கப் போவது உண்டு.அவ்வாறு கேட்கும்போது கிடைத்த ஞானத்தை வைத்துத்தான் இந்த கருத்துக்களை பதிவு செய்திருக்கிறேன்.இது ஒரு ஜனரஞ்சகமான விஷயம் அல்ல.எல்லாராலும் பொறுமையாகப் படிக்க முடியாது.ஆனாலும் இதை நீக்காமல் வைத்திருந்து சிலநாட்கள் திரும்பத்திரும்பப் படியுங்கள்.


உயிர்களும் உலகமும் டார்வின் கூறியபடி தானாகப் பரிமாண

வளர்ச்சியால் தோன்றவில்லை.

Monday, November 7, 2022

இந்துக்களின் காலக்கணக்கு Hindus year

🕉️ மகாபாரத வருடம் 
இந்துக்களின் காலக்கணக்கு,
உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்...
கி.பி.1947 - பாரத சுதந்திரம்
கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்
கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்
கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்
கி.பி 58 - சாலி வாகன சக வருசம்
கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்
கி.மு 509 - புத்தர் தோற்றம்
கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்
கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்
கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்
கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்
கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்
கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்
கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம்
கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம்
கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம்
கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம்
கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு
கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!
குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...
அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!
*உண்மை இதுதான்*
 
ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது சுத்த மடத்தனம்... ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்...

நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்..

*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,
காிகாலனின் கல்லணை கட்டமுடியுமா?

சிதம்பரம் நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்
பாா்க்கும்படி வைத்து
மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி 
தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்..

இன்னும் இது 
போன்ற எத்தனையோ கட்டிடகலை..

தொியாமல் கட்ட முடியாது.!

*Marine Engineering* தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.

*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.

*Mathematical* தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.

*Explosive Engineering* தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.

*Metal Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.

*Anatomy* தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.

*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.

*Psychology* தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.

*Bachelor/ Master of Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.

*Business Administration* தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது. 

*Chartered Accounts* தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.

*Anomaly Scan / Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை எப்படியிருக்கும் என்று பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.

இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ, அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் நம் தமிழர்கள். நம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறியச் செய்யுங்கள்.. நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்..

இன்னும் சொல்ல வேண்டுமானால்,

ஒட்டுமொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் ஒரேயொரு மந்திரம் போதும்...

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் Blood Test கிடையாது.

லேப் டெக்னிஸ்யன் (LAB technicient ) படிப்பு
கிடையாது.

ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில் மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அப்படி பல மில்லியன் உயிர் அணுக்கள் போராடி அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று உயிா் உண்டாகிறது.

இதை இப்போது 21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்..

ஆனால், இதை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,

*திருமூலா் பெருமகனார்* அற்புதமாக தன் ஞானத்தினால்,

*லட்சமாக உருவெடுத்து* *ஆயிரம் ஆகி*
*நுாறாகி பத்தாகி பிறகு ஒன்றாகி உள்ளே சென்று உயிரெடுத்தது தான் உயிா்*

என்று சொல்லியிருக்கிறார்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது தமிழர் மரபும், கலாச்சாரமும், ஞானமும்.

- இதைப் பகிர பெருமை கொள்கிறேன். 

Sunday, November 6, 2022

சிருவாபுரி முருக பெருமானை தரிசனம் செய்து

வள்ளி பிராட்டி அவர்கள் மேல் முருகன் காட்டிய அன்பு என்பது, எப்படிப்பட்டது என்றால்,  இந்திரலோகம் மீட்கப்பட்டு , இந்திரன் மீண்டும் இந்திரபதவி அடைந்த பின், ஒரு முறை முருக பெருமானை தேடி,சிருவாபுரி என்ற ஸ்தலத்திற்கு வருகின்றார். அங்கு முருக பெருமானை தரிசனம் செய்து  ,முருகா இந்திரலோகம் மீட்க பட்டாலும், அது களை இழந்து காணப்படுகிறது, முன்பு போல் ஒளி வீச வில்லை.நீ தான் அதை பழைய நிலைக்கு திருத்தி அமைக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ள,முருக பெருமான் ,ஒளி கொடுக்க கூடிய சூரிய சந்திரர்களை அழைக்க வில்லை, மும்மூர்த்திகள் யாரையும் வேண்டிக்கொள்ள வில்லை. முப்பது முக்கோடி தேவர்களிலும் யாரையும் அலைக்கா த முருகன் தன் அருகில் இருக்கும் வள்ளி பிராட்டி யை பார்த்து (எங்கும் வள்ளி தெய்வயனையுடன் காட்சி தரும் முருகன், இந்த ஒரு ஸ்தலத்தில் தான் வள்ளி யோ டு மண கோலத்தில் காட்சி தரும் அற்புதமான காட்சியை காணலாம். அந்த கோவிலின் சிறப்புகளை பின்பு பார்ப்போம்) , உன் அன்பு பார்வையால் அந்த தேவ லோகத்தை பார் என்று கூற வள்ளி பிராட்டியார் முருகனை வணங்கி தேவலோகத்தில் பார்வையை செலுத்த , தேவ லோகம் முன் பை விடவும் ஒளி வீசி தெய்வமாக காட்சி அளித்தது என்று சொல்லப்பட்டுள்ளது.முருகப்பெருமான் வள்ளி பிராட்டியின் மேல் காட்டிய அன்பை , கருணையை காண முடிகிறது. நாம் அறிந்து கொள்வது முருக கடவுளின் அன்பை பெறுவதற்கு  ஜாதி மதம் தேவைல்லை, பணம், வசதி தேவை இல்லை, சாஸ்திர sambarathaayam
தேவை இல்லை. அவனை தேடி எங்கும் போக வேண்டாம்.இருந்த இடத்தில் இருந்து "முருகா" என்று ஒருமுறை கூறினால் போதும் , ஓடோடி வந்து  கருணை புரிவான்.அந்த "முருகா" நாமத்திற்கு அவ்வளவு சக்தியா,அந்த நாமத்தின் மகிமையை நாளை பேசி மகிழ்வோம்.

Saturday, October 29, 2022

TN EB CUSTOMER CARE

உங்களது வீடுகளிலோ, கடைகளிலோ இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் பீஸ் போய் விடும்...
அல்லது மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும்....
அல்லது மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும்....
அல்லது உங்கள் ஏரியாவே இருண்டு விடும். இது போன்ற தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்....?

பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வரவேண்டும். அவர்கள் சாவகாசமாக வந்து சரி செய்துவிட்டு செல்வார்கள்....
அல்லது லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும்..... அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், பொழுது இறங்கிய பிறகே வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்...

இப்பொழுது மின்சார வாரிய ஊழியர்களிடம் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. வேலையும் உடனே ஆகணும். அதுக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்....
 
தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் *9498794987* என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின் இணைப்பு எண்ணையும் தெரிவித்து உங்களுக்கு என்ன  புகாரோ அதை தெரிவித்தால் போதும்.....

தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள். அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சார வாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் அழைத்துப் பேசுகிறார்.....

அரை மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடிந்து விடும்.. அனைத்து வேலையும் முடிந்த பிறகு மீண்டும் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து சேவை மைய ஊழியர் அழைத்து மின்சார வாரிய ஊழியர் நம்மிடம் செய்த வேலைகள் குறித்து தகவல் கேட்ட பிறகே புகாரை முடித்து வைக்கிறார்கள்..... 

இந்த மின்சார வாரிய சேவை மைய தொடர்பு எண், மின் இணைப்பை சரி செய்வதற்கு மட்டுமல்ல, வீடுகளின் மேல் செல்லும் லைனை மாற்றி போடுதல் மற்றும் கம்பத்தை மாற்றி போடுதல், பழுதடைந்த கம்பம், புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு உட்பட அனைத்து மின்சார வாரிய சேவைகளை பெறலாம்.... இந்த சேவை மையத்தின் மூலமாக சேவைகளை பெற்றாலே யாரும் பணம் கேட்பதும் இல்லை....

இது போன்று எளிதாக காரியத்தை சாதிக்க உங்கள் நெருங்கிய வட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் கூட இது போன்ற தகவலை உங்களுக்கு தெரிவிப்பதில்லை....

மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண் : *TN EB CUSTOMER CARE : 9498794987*
( படித்தால் மட்டும் போதாது உங்கள் நண்பர்களுக்கும், உறவினருக்கும்
பகிரவும், உபயோகமாக இருக்கும் )
நன்றி !
நன்றி

திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல்.

திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல்.

கருவறையைவிட இந்த வாசல் அதிகமான உயரத்தில் இருப்பதால், கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரே ஒரு நாளைத் தவிர மற்ற நாட்களில் இந்த வாசல் மூடப்பட்டுதான் இருக்கும்.

ராஜ கோபுரத்தின் வாசல் மட்டுமல்ல, கோயிலின் மிக அருகே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடலின் மட்டமும் கருவறையைவிட அதிகமான உயரத்தில்தான் இருக்கிறது. இருந்தாலும் கோயிலினுள் ஒரு துளி கடல்நீர் கசிவை பார்க்க முடியாது.
அந்த அளவுக்கு மேலுள்ள மிருதுவான மணல் பாறைகள் அனைத்தையும் முழுமையாக தோண்டி எடுத்து அதனுள் கடினப்பாறைகளை பதித்து கோயிலை கட்டியுள்ளார்கள்.

1649ல் திருசெந்தூர் கோயிலை சிலகாலம் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த டச்சு வீரர்கள், கோயிலைவிட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் வந்தபோது, கோயிலுக்கு தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் கோயிலை முற்றிலும் தகர்பதர்க்காக பீரங்கிகள் கொண்டு தொடர்ந்து தாக்கினார்கள்.
இருப்பினும் சிறிதளவுகூட சேதம் கோயிலுக்கு ஏற்படவில்லை. அந்த அளவுக்கு கோயிலின் கட்டுமானம் உறுதியாக இருந்திருக்கிறது.
அதிர்ந்துபோன டச்சுகாரர்கள் கோயிலிலுள்ள இரண்டு சிலைகளை மட்டும் எடுத்துகொண்டு ஓடிவிட்டார்கள்.

இந்த நிகழ்வு நடந்தபோது அங்கு இருந்த டச்சு வீரர் ஒருவர் தன்னிடம் இதை கூறியதாக 
"A Description Historical and Geographical of India (1785)" என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் ரெனில் (M Rennel) குறிப்பிட்டுள்ளார்.

டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி குடியேறிய இடங்களில் அவர்களால் அழிக்கமுடியாமல் விட்டுப்போன ஒரே கோயில் திருச்செந்தூர் முருகன் கோயில் மட்டும்தான் என்பது மற்றுமொரு கூடுதல் தகவல்..

ஓம் முருகாசரணம்

நன்றி; திருவாசகம்

கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்  கவனத்திற்கு....

கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்..!!

 காடாம்புழா  பகவதி கோயில்
 காலை : 5am ➖ 11am
 மாலை : 3:30Pm ➖ 7pm

 குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்
 காலை : 3 மணி ➖ 1 மணி
 மாலை 1 மணி ➖ இரவு 9 மணி

 திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்

 காலை : 4.30AM ➖ 12pm
 மாலை : 4.30Pm ➖ 8:30pm

 கொடுங்களூர் பகவதி கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை : 4.30Pm ➖ 8pm

 சோட்டானிக்கரை பகவதி கோயில்
 காலை : 3:30AM ➖ 12pm
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 கீழ்க்காவு குருதி
 இரவு: 8.30 மணி

 வைக்கம் மகாதேவர் கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கட்டுருத்தி மகாதேவர் கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 மல்லியூர் கணபதிகோயில்
 காலை : 4.30AM ➖ 12:30pm
 மாலை : 4.30Pm ➖ 8pm

 ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கிடங்கூர் சுப்ரமணியகோயில்
 காலை : 5AM ➖ 11:30am
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கடப்பட்டூர் மகாதேவகோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 நிலக்கல் மகாதேவர் கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 பம்பா கணபதிகோயில்
 காலை : 3 மணி ➖ 1 மணி
 மாலை 4 மணி ➖ 11 மணி

 சபரிமலை சன்னிதானம்
 நெய்யபிஷேகம் : 3.20Am ➖ 11.30am
 ஹரிவராசனம் : இரவு 10.50

 நிலக்கல் பம்பை KSRTC கட்டணம்
 ஆர்டினரி - ரூ40
 ஏசி லோஃப்ளோர் - ரூ90
 பேட்டரி - ரூ100

 வெர்ச்சுவல் க்யு வெரிஃபிகேஷன் பம்பை  ஹனுமான் கோயிலுக்கு முன்னால் செயல்படுகிறது.

ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை..  

 பிளாஸ்டிக் அதிகபட்சம் தவிர்த்து
 புண்ணியம் பூங்காவனம் தூய்மையை காக்கவும்

 மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்..

 உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி
 வரை மட்டும் அனுமதிக்ககப்படும்

 எல்லாக் கோயில்களிலும்
 பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும் சந்நிதானத்தில் மாளிகப்புரம்கோயில்க்குப் பின்னால் பெரிய (TDB)அன்னதானமண்டபம் உள்ளது.  

 நல்ல தீர்த்தாடன கால வாழ்த்துக்கள்...

#ஓம்_சுவாமியே… #சரணம்_ஐயப்பா 🙏🙏

Friday, October 21, 2022

குலதெய்வத்தை நினைத்து

குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு இலுப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும்.

குலதெய்வத்தை ஆசீர்வாதம் கிடைக்க உதவும் இலுப்ப எண்ணெய் தீபம்

நம் வீட்டில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைக்கும் மூல காரணமாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பெரும்பாலானோருக்கு பணமாகத்தான் இருக்கும். அந்தப் பணம் நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்திருக்க வேண்டும். அனேகமானவர்களின் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை மறந்துவிடுகிறார்கள்.

அதாவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது வேறு. தினம்தோறும் நம் வீட்டில் அந்த குலதெய்வத்தை நினைத்து வழிபடுகின்றோமா, என்றால் பலரின் பதில் இல்லை என்றுதான் வரும். குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும். அது என்ன தீபம் என்பதை தெரிந்து கொள்வோம்.

 

மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கில், ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு, இலுப்பை எண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து திரித்து, கிழக்கு பக்கம் நோக்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தை ஏற்றும்போது உங்கள் குலதெய்வத்தின் பெயரை உங்கள் மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே ஏற்றுவது அவசியமாகும். இந்த தீபமானது உங்கள் குலதெய்வத்திற்க்கு மட்டும் என்ற எண்ணத்தோடு ஏற்றவேண்டும். இந்த தீபத்தை உங்களால் முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.00 மணியிலிருந்து 5.30 மணிக்குள் ஏற்றுவது இன்னும் சிறந்தது. முடியாதபட்சத்தில் காலை ஏழு மணிக்குள்ளாவது இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள்.

இலுப்பை எண்ணெய்க்கு அனைத்து தெய்வங்களின் சக்தியையும் ஈர்க்கும் தன்மை உடையது. சிவன் கோவில்களில் பெரும்பாலும் இலுப்பை எண்ணெயின் மூலம் தான் விளக்கினை ஏற்றி வந்தார்கள். குத்து விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி வெள்ளைதிரி போட்டு வெள்ளிக்கிழமையன்று பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினால் அஷ்டலட்சுமி அருள் கிடைக்கும். இதே போல் மஞ்சள் திரையிட்டால் குபேரன் அருள் கிடைக்கும். சிகப்பு திரையிட்டால் நம் கடன் தொல்லை தீரும். இப்படியாக இலுப்ப எண்ணெயில் முறையாக தீபத்தை ஏற்றும்போது நம்மால் நல்ல பலனை அடைய முடியும்.

எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும் சரி, வழிபடவில்லை என்றாலும் சரி உங்கள் வீட்டு குலதெய்வத்தை மறந்தும்கூட தயவுசெய்து மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நம் குலத்திற்கு எந்த விதமான கஷ்டங்களும் ஏற்படாமல் பாதுகாத்து வர வேண்டும் என்று, நம் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வம் தான் குலதெய்வம். இப்படிப்பட்ட குல தெய்வத்தை மறப்பது என்பது நம் குடும்பத்திற்கு நல்லது அல்ல.

ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள்

ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள் :*

ஆஞ்சநேயர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.

1. அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு.

2. மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு.

3. மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன.

ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு.

4. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு.

5. ஆஞ்சநேயரது மிகவும் சிறப்பு பெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன. அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம்.

ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை.  "ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள். ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.

6. ஆலவாயன் சிவனின் அம்சம் ஆறாவது சிறப்பு. ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர்.

எனவே தான் அனுமரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும், சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

7. ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு.  
ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள் பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.

8. எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு. ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது. ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது. அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களைன் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம்.

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...