Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Saturday, October 29, 2022
TN EB CUSTOMER CARE
திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல்.
கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்.
Friday, October 21, 2022
குலதெய்வத்தை நினைத்து
ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள்
Wednesday, October 5, 2022
Gravitational walls
"Gravitational walls" (புவி ஈர்ப்பு விசைச் சுவர்) பற்றி பாடம் எடுக்கு இந்தியக் கோவில் சுவர்கள். கட்டடக் கலையில் பொறியியலுக்கு நிகரான மெய்யியல்.
-------------------------------------------------------------------
என்ன பூகம்பம் வந்தாலும், புயல் வந்தாலும், வெள்ளம் வந்தாலும் கால காலமாக ஒரு சிறு கீறல்கள் கூட விழாமல் பண்டையக் கோவில்கள் கம்பீரமாக நிற்பது எப்படி? எப்படி அவைகளால் இப்படி ஒருத் தாக்குதலைச் சமாளிக்க முடிந்தது.
உதாரணமாக திருவாஞ்சியம்:
-----------------------------------------------------
இங்கே அடியேன் திருவாரூரில் அமைந்துள்ள திருவாஞ்சியம் கோவிலை உதாரணமாக எடுத்துள்ளேன். இது எம தர்ம ராஜாவே சிவபெருமானுக்கு வாகனமாய் செயல்படுகிறார். 1050 ஆண்டுகள் பழைமை வாய்ந்தத் திருத்தலம் ஆகும்.
மதிமயக்கும் மதில் சுவர்:
---------------------------------------------
இக்கோவிலைச் சுற்றியுள்ள மதில் சுவரானது ராஜ கம்பீரமாகக் காட்சியளிக்கக் கூடியது. இக்கோவிலில் உள்ளக் கல்வெட்டில் "இக்கோவிலானது பிரளைய காலத்தாலும் அழியாத வகையில் கட்டப்பட்டது" என்னும் வாசகத்தைக் காணலாம். அப்போ இக்கட்டுமானம் காலம் கடந்து உழைக்கனும் என்றத் தீர்மானத்தோடு பொறியியல் திட்டத்தோடு வடிவமைத்திருக்கிறார்கள் என்பதுத் திண்ணம்!
ஈர்ப்பு விசைச் சுவர்கள்:
------------------------------------------
பூமியில் இருந்து வரும் அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளும் வகையில் அடித்தளத்தை தடிமனாகவும் அதிக கனத்தோடும் அமைத்து பின் அடித்தளத்து மேலே உள்ளக் கட்டுமானத்தை அடித்தளத்தை விட கனம் குறைந்ததாகவும் தடிமன் குறைந்ததாகவும் அமைத்தனர். பின் மேல உள்ள தளத்தை அடித்தளத்தைப் போலவே தடிமன் அதிகமாகவும் கனம் அதிகமாகவும் உள்ளவாறு அமைத்தனர். அடித்தளத்தின் தடிமன் கனம் எந்த அளவு இருக்கிறதோ அதே அளவு மேல் தளத்தில் உள்ளவாறு பார்த்துக் கொண்டார்கள். இவ்வகையானக் கட்டுமானத்திற்கு ஆக்கிலத்தில் Gravitational wall என்றுப் பெயரிட்டனர்.
இக்கட்டுமானத்தின் சிறப்பு:
--------------------------------------------------
அடித்தளம் தடிமனாகவும் கனமாகவும் இருப்பதால் அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும். மேல்தனத்தின் கனம் கட்டுமானத்தைச் சிதைத்துவிடக் கூடாது என்பதற்காக மேல் தளத்தில் கனத்துக்குக் கீழாக வெற்றிடத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஷாக் அப்சர்பர்களை (Shock Obserbers) வடிவமைத்துள்ளனர். இவ்வகையானக் கட்டுமானம் சுவர்ற்றை மேலும் கிழுமாக அழுத்தமாகப் பிடித்துக் கொள்கிறது. எப்பேர்பட்ட இயற்கை சீற்றம் வந்தாலும் கட்டுமானத்தின் திடத்தன்மையை பாதுகாத்துவிடுகிறது. புவி ஈர்ப்பு விசைக்குச் சவாலாக இக்கட்டுமானம் அமைக்கப்படுள்ளது விந்தையிலும் விந்தை!
-------------------------------------------------------------------
உலகமே ஒன்று சேர்ந்தாலும் எம் பாட்டன் கட்டியக் கட்டமானத்திடம் பிச்சை எடுக்க வேண்டும். 19ஆம் நூற்றாண்டுக் கட்டிடக் கலையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னறே நம் முன்னோர்கள் வடிவமைத்துவிட்டனர்.
Sunday, September 25, 2022
பெருமாள் கோவிலில் தீர்த்தம்
அகால மரணம் ஏற்படக்கூடாது
என்று ஆசையா?
பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன?..
"யாருக்குமே அகால மரணம் ஏற்பட கூடாது"என்ற அக்கறை நம் ஹிந்து மதத்துக்கு எப்பொழுதுமே உண்டு.
'மோக்ஷம் அடையும் வரை, பிறந்து கொண்டே இருக்கிறான்' என்று மறுபிறவியை காட்டும் தர்மம், நம்முடைய ஹிந்து தர்மம்.
சில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அனுக்கிரஹம் செய்வார்கள், என்று பலனாக சொல்லப்படுகிறது.
உதாரணத்திற்கு, 'திருவெள்ளக்குளம்' என்றும் 'அண்ணன் பெருமாள் கோவில்' என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது' என்று பலன் சொல்லப்படுகிறது
வட இந்தியாவில், வெளி
நாட்டில், வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராட முடியாமல் போகலாம்.
'யாருமே அகால மரணம்
அடைய கூடாது' என்று வேதம் ஆசைபடுகிறது.
கோவிலுக்கு போக முடியாதவர்களுக்கும், அகால மரணம் ஏறபடாமலிருக்க ஒரு வழி சொல்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.
சீர்காழி அருகில் இருக்கும் திருவெள்ளக்குளம் சென்று பெருமாளை தரிசித்து, அங்குள்ள குளத்தில் நீராட முடியாதவர்கள், பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, சாளக்கிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, எடுத்து கொண்டால் கூட 'அகால மரணம் ஏற்படாது' என்று பலனை வேதமே சொல்கிறது.
இதனால் தான், பெருமாள் கோவிலில், தீர்த்தம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.
எத்தனை அற்புதமானது நம் ஹிந்து தர்மம்!!
'நமக்கு அகால மரணம் ஏற்பட கூடாது' என்று பெருமாள் ஆசைப்படுகிறார்.
'நீண்ட நாள் வாழ்ந்து கிருஷ்ண பக்தி இவன் செய்ய வேண்டும்' என்று பெருமாள் ஆசைப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளை அருளிகிறார்.
கோவிலுக்குள் வரும் நம் அனைவருக்கும், தீர்த்தம் கொடுத்து, கருணையை வர்ஷிக்கிறார்.
அவர் செய்யும் கருணையை நாம் சிறிது நேரமாவது, நினைத்து பார்க்க வேண்டும்.
.நம் வீட்டில் உள்ள ராம, கிருஷ்ண விக்ரஹங்களுக்கும், சாளக்கிராம மூர்த்திக்கும், உண்மையான பக்தியுடன் (அன்புடன்) அபிஷேகம் செய்து,அந்த அபிஷேக தீர்த்தத்தையும் நாம் மரியாதையோடு எடுத்து கொண்டால் கூட, அகால மரணம் ஏற்படாது.
தீர்க்க ஆயுசு பெருமாள் அருளால் கிடைக்கும்.
ஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் தெய்வ விக்ரஹங்கள் உண்டு. இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து வந்தனர். செய்து வருகின்றனர்.
அந்த அபிஷேக தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்து கொண்டனர்.
இதனால், ஹிந்துக்கள் மனதில் தெய்வ சிந்தனையும் வளர்ந்தது. அகால மரணம் ஏற்படாமல், தெய்வங்கள் அணுகிரஹத்தால், ஆரோக்கியமாக 90 வயது வரை ஆஸ்பத்திரி கால் வைக்காமல் வாழ்ந்தனர்.
கடந்த சில பத்தாண்டுகளாக தான், ஹிந்துக்கள் தடம் புரண்டு ஒடுகிறோம்.
ஒருவரும் தன் வீட்டில் அபிஷேகம் செய்து தெய்வ வழிபாடு செய்வதில்லை.
வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்கள் மரியாதை அற்று இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்களால், இன்று உள்ள ஹிந்துக்களுக்கு மனதில் தெய்வ சிந்தனையை விட, கீழ் தரமான சிந்தனைகள் பல எழும்புகிறது.
அகால மரணத்தை நோக்கி, பல நோய்கள் இளம் வயதிலேயே வருகிறது.
ஹிந்துக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தெய்வ பக்தி வளர நாம் முயற்சி செய்ய வேண்டும்.
அகால ம்ருத்யு ஹரணம்,
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்,
விஷ்ணு பாதோதகம் சுபம்
என்கிறது வேத வாக்கு.
விஷ்ணுவின் பாதத்தில் பட்ட தீர்த்தம்
அகால மரணத்தை நீக்க கூடியது,
அனைத்து வியாதியும் போக்க கூடியது,அனைத்து பாபத்தையும் போக்க கூடியது,
என்று வேதமே சொல்கிறது.
மஹா விஷ்ணுவின் கால் நகத்தில் பட்டு ஓடி வந்ததால் தான், கங்கை நதிக்கே 'புண்ணியநதி' என்று பெயர் கிடைத்தது என்றால்,
நாம் செய்யும் அபிஷேகம் தீர்த்தம்,
நாம் கோவிலில் பெறும் அபிஷேக தீர்த்தம்,எத்தனை மகத்துவம் வாய்ந்தது!! என்று புரிந்து கொள்ள வேண்டும்.
கோவிலில் பெருமாள் தீர்த்தத்தை வாங்கும் போது,
இடது கையில் துணியை வைத்துக்கொண்டு, அதன் மேல் வலது கையால், ஜாக்கிரதையாக அபிஷேக தீர்த்தத்தை வாங்கி கொள்ள வேண்டும்.
நம்முடைய காலிலேயே தீர்த்தம் சிந்தி விடாமல், பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.
பெருமாள் அபிஷேக தீர்த்தத்தை, கொடுப்பவரும் ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும்.
அகால மரணத்தை தடுக்கும் அருமருந்து என்ற ஞாபகத்துடன்,
கங்கை நதியே இவர் கால் நகம் பட்டதால் தான், புண்ணிய நதியாக ஒடுகிறாள் என்ற ஞானத்துடனும், அபிஷேக தீர்த்தத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவன் 'அல்ப ஆயுசாக போக மாட்டான்'.
"சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளி
டம் அன்பு)" இருந்தால், நீண்ட ஆயுசு உண்டாகும், எந்த நோயும் சரியாகும்.
'நோய்' வருவதற்கு காரணம் -
நாம் செய்த 'பாபங்களே',
'ஆயுள்' குறைவுக்கு காரணமும் -
நாம் செய்த 'பாபங்களே'.
'சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)' இருந்து, பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவனுக்கு,
அவனிடம் உள்ள பாபங்களும் பொசுங்கி போகும்
என்று வேதமே சொல்கிறது.
கோவிலில் நாம் பெற்றுக்கொள்ளும் பெருமாள் 'தீர்த்ததுக்கு' இத்தனை மகத்துவம் உண்டென்றால், பெருமாளிடம் சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு) வைக்க நமக்கு என்ன தடை இருக்க முடியும்?
பெருமாளின் பாத தீர்த்ததுக்கு அத்துனை பெருமை உண்டு என்று அறிந்து, "நம் பெருமாள்" என்று ஆசையுடன், நாம் அனைவரும் பக்தி செய்வோம்.
அதே சமயம் மரியாதையுடன் தெய்வ சந்நிதியில், பெருமாள் நம்மை பார்க்கிறார் என்ற கவனத்துடன் செயல்படுவோம்.
எனவே பெருமாள் கோவிலில் நாம் தீர்த்தம் பெற்றுக்கொள்ளும்போது
அகால ம்ருத்யு ஹரணம்
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்
விஷ்ணு பாதோதகம் சுபம்
என்ற ஸ்லோகத்தை மனதிற்குள.் சொல்லியபடி தீர்த்தத்தை சிந்தி விடாமல்,நமது அகால மரணத்தை தவிர்க்க கூடிய பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து
அருந்த வேண்டும்
பசுவை ஒரு முறை பிரதட்சணம்
* பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.
* பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
* பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும்.
இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ‘ஆவுரஞ்சுக்கல்’ அமைத்தனர்.
* பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.
* பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.
* மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.
எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.
* ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது.
பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
* உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும், அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும், பசுக்களை நாம் பேணிக் காக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
* கறவை நின்ற வயதான பசுக்களைக் கூட நாம் பேணிக் காக்க வேண்டும்.
* பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.
பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.
`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது!
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
தாணிப் பாறை
சதுரகிரி தாணிப் பாறை சர்வேஸ் வரர் தியான நிலையத்தில் கன்னிமூலையில் அபயஹஸ்த மகாவிநாயகர்சிரசில் பிறையுடன் உள்ளார். வலதுபுறம் உள்ளராகுவில் சிவலிங்கமும்,இடதுபுறமுள்ள கேதுவில் காளிங்க நர்த்தனகிருஷ்ணனும் உள்ளனர்.
அவருக்கு அடுத்தபடியாக வடக்குநோக்கி 18ம்படி கருப்பன் சைவமாக உள்ளார்.
அவரை தரிசித்து
விட்டு உள்ளே வர வாசலுக்கு வலதுபுறம் சர்வேஸ்வரரை நோக்கியபடி சண்டிகேஸ்வரர்தரிசனம் முடித்து வந்தால் இடதுபுறம் நவகிரகங்கள் தங்கள் மனைவியருடன் தங்கள் வாகனத்தில் உள்ளனர்.
வாசலைப் பார்த்தபடி சொர்ண ஆகர்சனபைரவர் தன்மனைவியுடன் உள்ளார்.
தரிசனம்செய்து திரும்பினால் படிக்கட்டுகள்.
வலது புறம் மேற்கு நோக்கிய படிக்கட்டை நெருங்கி சித்தி விநாயகர் தரிசனம் செய்தால் சிறிய இடைவெளி வழியாக சென்றால் படிக்கட்டின்கீழ் எட்டிப்பார்க்க சிவன்தலையில் கங்கையுடன் தெரிகிறார்.
உள்ளே செல்ல வலதுபக்கம் படிக்கட்டு இறங்கிச் சென்றால் இடதுபுறம் திரும்பி கீழே இறங்கி வலதுபுறம்திரும்ப நடுவில் சிவனுக்கு கீழே பாலாம்பிகை
இடது புறம் ஆறு சித்தர்கள் வடக்குப்பார்த்தும், ஆறு சித்தர்கள்கிழக்குப்பார்த்தும், ஆறு சித்தர்கள் தெற்குப்பார்த்தும் உள்ளனர்.நடுவில்
தெற்குப்பார்த்து யுகங்கள் கடந்த பகுளாதேவி சமேத காக புஜன்டர் இருவரும்18கரங்களுடன் ,நடுவில் மேற்குப்பார்த்து பிரம்மா (நான் முகன்),சிவன், விஷ்ணுவும், நடுவில் வடக்குப்பார்த்து நால்வர் பெருமக்கள் உள்ளனர்.18சித்தர்கள் பெயர், நட்சத்திரம், வாழ்ந்த காலம், அடங்கிய இடம் ஆகியவை குறிப்பு உள்ளது.
காகபுஜன்டர் அவரது மனைவி யுகங்கள் கடந்த வர்கள் எனவே காலங்கள் குறிக்கப் படவில்லை.
Thursday, September 22, 2022
தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்
வாழ்வு சிறப்பாக அமைய தெய்வீக ரகசியங்கள்!
Monday, September 19, 2022
எந்த நிலையிலும் இறைவனை நம்பு!இறைவன் சிலவற்றை தாமதமாக கொடுப்பான்
Saturday, September 10, 2022
கொலஸ்ட்ரால் காரணமாக
Friday, August 19, 2022
நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...!
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...!
அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள்
அவன் அருகில் வந்தார்...!
கடவுள் :
" வா மகனே...!
நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது...! "
மனிதன் :
" இப்பவேவா ?
இவ்வளவு சீக்கிரமாகவா ?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது ? "
கடவுள் :
" மன்னித்துவிடு மகனே...!
உன்னை கொண்டு
செல்வதற்கான நேரம் இது...! "
மனிதன் :" அந்தப் பெட்டியில் என்ன உள்ளது ? "
கடவுள் :" உன்னுடைய உடைமைகள்...! "
மனிதன் :" என்னுடைய உடைமைகளா...!
என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்
எல்லாமே இதில்தான்
இருக்கின்றனவா ? "
கடவுள் :" நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு தேவையானது...! "
மனிதன் :" அப்படியானால் என்னுடைய நினைவுகளா ? "
கடவுள் :" அவை காலத்தின் கோலம்...! "
மனிதன் :" என்னுடைய திறமைகளா ? "
கடவுள் :" அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...! "
மனிதன் :" அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா ? "
கடவுள் :" மன்னிக்கவும் !குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழிகள்...!"
மனிதன் :" அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா ? "
கடவுள் :" உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல...! அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்.! "
மனிதன் :" என் உடலா ? "
கடவுள் :"அதுவும் உனக்கு சொந்தமானதல்ல...!உடலும் குப்பையும் ஒன்று...! "
மனிதன் :" என் ஆன்மா ? "
கடவுள் :"அதுவும் உன்னுடையது அல்ல...! அது என்னுடையது...! "
🍂 மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன்
காலி பெட்டியை கண்டுஅதிர்ச்சியடைகிறான்...!
🍂 கண்ணில் நீர்
வழிய கடவுளிடம்" என்னுடையது என்று எதுவும் இல்லையா ? "என கேட்க...!
கடவுள் சொல்கிறார் :🍂 அதுதான் உண்மை !நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது...!வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்...!
🍂 ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்...!
எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே...!
🍂 ஒவ்வொரு நொடியும் வாழ்...! உன்னுடைய வாழ்க்கையை வாழ்...!
🍂 மகிழ்ச்சியாக வாழ்...! அது மட்டுமே நிரந்தரம்...!
🍂 உன் இறுதி காலத்தில்
நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...!
🍂 வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்..
இதை விட வேறு எவர் வாழ்க்கைப் பாடத்தை சொல்லித் தர முடியும்?
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை to மகிபாலன்பட்டி செல்லும்
சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஓன்று, இன்று
உலகம் முழுவதும்
உச்சரிக்கப்படுகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்....
இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது.
பாடலின்
எல்லா வரிகளும் வாழ்வின்
முழு தத்துவத்தைச்
சொல்கிறது.....
முழு பாடலும்... அதன் பொருளும்....
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....
சாதலும் புதுவது அன்றே;...
வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே;
மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்...
ஆதலின் மாட்சியின்
பெயோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
– கணியன் பூங்குன்றனார்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."
எல்லா ஊரும்
எனது ஊர்....
எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று
வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது............. சுகமானது......
"தீதும் நன்றும் பிறர் தர வாரா...."
தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......
எனும் உண்மையை,
உணர்ந்தால்,
சக மனிதர்களிடம்,
விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.....
"நோதலும் தணிதலும்
அவற்றோ ரன்ன...."
துன்பமும் ஆறுதலும்கூட
மற்றவர் தருவதில்லை....
மனம் பக்குவப்பட்டால்,
அமைதி அங்கேயே கிட்டும்...
"சாதல் புதுமை யில்லை.."
பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....
இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*
இறப்பு புதியதல்ல....அது
இயற்கையானது....
எல்லோருக்கும்*
*பொதுவானது....
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....
எதற்கும் அஞ்சாமல்,
வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......
"வாழ்தல்இனிது என மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னாது என்றலும் இலமே....."
இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்னாகும் என்று
எவர்க்கும் தெரியாது.....
இந்த வாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.....
அதனால், இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்...
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......
"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ....."
இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது....
நாம் வாழ
மழையையும்
தருகிறது.....இயற்கை வழியில் அது,அது
அதன் பணியைச் செய்கிறது....
ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டிச் செல்லும் படகு போல,
வாழ்க்கையும்,
சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்க்கொண்டு
இருக்கும்....
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...
"ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே...."
இந்தத் தெளிவு
பெற்றால்.....,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பார்த்து
மிகவும் வியந்து பாராட்டவும் வேண்டாம்...
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.....
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு.....
அவற்றில் அவர்,அவர்கள்
பெரியவர்கள்...
இதை விட வேறு எவர்
வாழ்க்கைப் பாடத்தை
சொல்லித் தர முடியும்?
Featured Post
தலையெழுத்தையே மாற்ற வல்லது.
தலையெழுத்தையே மாற்றவல்லது சிவபுண்ணியம் அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
korakkar siddhar space Prediction 1,Full moon show on everyday near earth , elephant head bones images show o...