Saturday, March 12, 2022

நல்லதே நடக்கும்

இன்பத்தையும் ,
துன்பத்தையும் யாரும் நமக்குத் தர வேண்டாம்..

விதை எதுவோ,
அது செடியாக தானே முளைக்கும்...

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

நல்லதை சிந்தியுங்கள்! நல்லதைச் செய்யுங்கள்!....

நல்லதே நடக்கும்.

உற்சாகமான காலை வணக்கம்🙏🏻

பகவான் இராமகிருஷ்ணரின் அருளுரை-1

*திருமணத்தை நடத்தி வைப்பவர் மணமகளை மணமகனோடு சேர்த்து வைப்பது போல சீடனை குரு இறைவனிடம் சேர்த்து வைக்கிறார்.*

-பகவான் இராமகிருஷ்ணரின் அருளுரை-

அர்ஜுனரின் 10 பெயர்களும் காண்டீப மஹிமையும்:

அர்ஜுனரின் 10 பெயர்களும் காண்டீப மஹிமையும்:

விராட பருவத்தில் நபும்ஸகனாக இருந்த அர்ஜுனருடன் உத்திரன் கவுரவ சேனையை எதிர்க்ககிளம்பி அவர்களின் பலம் கண்டு திகைத்து நிற்கையில் பேடியாக இருந்த அர்ஜுனர் உத்திரனை தேற்றி வன்னி மரத்தில் தங்கள் வைத்திருந்த ஆயுதங்களை எடுக்க சொன்னர்... அந்த ஆயுதங்களை எடுத்து பார்த்த உத்திரன் பயத்தினால் நடுங்க, அதுகண்ட அர்ஜுனர் தாங்கள் யார் என்பதை அவனுக்கு கூறினார். ஆனால் , உத்திரன் அர்ஜுனருக்கு மஹேந்திரரால் 10 பெயர்கள் உருவாயின என்றும் அதை சொன்னால் தான் நீங்கள் அர்ஜுனர் என்பதை நம்புவதாக கூற.... அர்ஜுனரும் தன்னுடைய 10 பெயரையும் அதன் காரணத்தையும் விளக்கி கூறினார்....

 அதன் சுருக்கம்...

1) எல்லா தேசங்களையும் ஜெயித்து எல்லாப்பக்கங்களிலிருந்தும் தனத்தை கொள்ளையடித்து கொண்டு வந்து அந்த தனத்தின் நடுவே நின்றதனால் தனஞ்செயன்.🦋🦋🦋

2) யுத்தத்தில் மதங்கொண்டவர்களை யுத்தத்தில் தான் வெல்லாமல் திரும்பாத காரணத்தால் விஜயன்.🦜🦜🦜

3) பகைவர்களுடன் போர்புரிகின்ற தேரில் வெள்ளைக்குதிரைகள் கட்டப்பட்டிருப்பதால் ஸ்வேதவாகனன்.🦢🦢🦢

4) யுத்ததில் மத்தியில் யாரலும் உடைக்கமுடியாததும் அருமையானதுமான சூர்யனுக்கும் அக்னிக்கும் ஒப்பானதுமான தேவேந்திரரால் கொடுக்கப்பட்ட கிரீடத்தை தரித்ததால் கிரீடி.🦌🦌🦌

5) போர்புரிகின்ற யான் ஒருகாலும் அருவருக்கதக்க செய்கையை செய்கின்றதில்லை ஆதலால் தேவர்களாலும் மனிதர்களலாலும் அழைக்கும் பெயர் பீபத்ஸு🦁🦁🦁

6) போரில் என் இருகைகள் காண்டீவத்தை இழுக்கும் விசயத்தில் ஒத்த செய்கையுடையனவாகவும் பகைவர்களின் படையை அழிப்பவைகளாகவும் இருக்கின்றன.அவ்விரண்டு கைகளில் இடக்கையானது வலக்கையை விட மேலாகியிருக்கிறது. அதனால் ஸவ்ஸயாசி.🐅🐅🐅

7) என்னுடைய நிறமானது கடல் சூழ்ந்த பூமியில் அடைவதற்கு அருமையானதும் இசைந்ததுமாக இருப்பதால் அர்ஜுனன்.💮💮💮

8) இமயமலையின் மேற்கு பக்கத்தில் பகலிம் உத்திரபல்குனி பூர்வபல்குனி நட்சத்திரங்களின் சந்தியில் பிறந்ததால் பல்குனன்.🦉🦉🦉

9) யுதிஷ்டிரருடைய தேகத்தில் எவன் காயத்தை உண்டு பண்ணுகின்றானே அவனுடன் போர்புரிந்து குலத்தை அவமதிப்பேன்.அவர்களேடனைவருடனும் போர் புரிவேன். இதனால் தேவர்களுள்ளும் மனிதருள்ளும் நான் ஜிஷ்ணு.🦅🦅🦅

10) என்னுடைய தாயானவள் ப்ருதை என்று அழைக்கப்படுவதால் அவளுடைய மகனான என்க்கு பார்த்தன் என்றும் பெயர்....🦚🦚🦚

மேலும் , காண்டவ வனத்தில் அக்னியை திருப்தி செய்யும் பொருட்டு கிருஷ்ணரோடு சேர்ந்து தேவராஜரை எதிர்த்து போர் செய்து நான் மூர்ச்சை அடைந்தேன். பின்னர் பிரம்மர்,மஹேஸ்வரரும் வந்ததால் எழுந்திருந்தேன். என்னுடைய வீர்யத்தினாலும் செய்கையாலும் மகிழ்ந்து அவர்களிருவரும் அப்போது எனக்கு 'க்ருஷ்ணன்' என்று பதினோராவது பெயரையும் வைத்து பல திவ்யாஸ்திரங்களை வழங்கினர்.

😇😇😇இந்த பெயர்களை தினமும் சொல்லுபவனை துஷ்ட பிராணிகள் அணுகமாட்டா.பகைவர்கள் துன்பம் செய்யமாட்டார்கள் என்று கூறினார்.🥰🥰🥰

காண்டீபத்தின் சிறப்பு :⚡⚡⚡🌈🔱🤴🎠

மஹாபலம் பொருந்திய காண்டீபமானது தெய்வ சம்பந்தம் பொருந்தியது.

 தர்பாக்கினி போல ஜ்வலிக்கின்றதும் காந்தியுள்ளதும் தங்கமயமானதும் 100 தாமரை புஷ்பங்கள் தனித்தனியாக உள்ளதும் நான்கு பக்கம் ரத்தினம் சேர்க்கப்பட்டதும் பின்னால் பொன்னால் அலங்கரிக்கப்பட்ட ஸுர்ய ப்ரபை சந்திர ப்ரபை பொற்றாமரை மலர்களுடன் கூடியதுமான இந்த வில்லுக்கு காண்டீபம் என்று பெயர்

இது லக்‌ஷம் ஆயுதங்களுக்கு சமமானது. தேவர்கள் அசுரர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பூஜிக்கப்பட்டது.

இதை ப்ரம்ம தேவர் 1000 வர்ஷகாலம் வைத்திருந்தார். பின்பு முறையே சிவபெருமான் 64 வர்ஷமும் இந்திரன் 85 வர்ஷமும் சந்திரன் 5000 வர்ஷமும் வருணன் 100 வர்ஷமும் வைத்திருந்தார்.

மங்களகரமான அந்த வில்லை அக்னியானவர் வருணரிடம் இருந்து வைத்திருக்கும் காலத்தில் அதை என்னிடம் குடுத்தார். 

அந்த காண்டீபத்தை நான் 65 வருஷகாலம் தரிக்க போகின்றேன் என்று உத்திரனுக்கு காண்டீப வரலாற்றை அர்ஜுனர் கூறினார்.

#மஹாபாரதம்
#காண்டீபம்
#அர்ஜுனர்
#அர்ஜுனரின்10பெயர்கள்

ராம ராம ராம

Friday, March 11, 2022

வேல் விருத்தம் : 04

வேல் விருத்தம் : 04

"அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல
   அங்கியும் உடன்சுழலவே
அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல
   அகிலதல முஞ்சுழலவே
மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர
   மாணப் பிறங்கியணியும்
மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
   வகைவகையி னிற்சுழலும் வேல்

தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
   சந்தமுட னும்பிறைகள்போல்
தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
   தன்புறம் வருஞ்சமனையான்
கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண
   கஞ்சம்உத வுங்கருணைவேள்
கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
   கணவன் அடல் கொண்ட வேலே."

அருணகிரியாரின் வேல் விருத்தத்தின் இந்த‌ நான்காம் பாடலின் வரிகளோடு அதன் பொருளை காணலாம்

"அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல
 அங்கியும் உடன்சுழலவே"

அதாவது "அண்டர் உலகம் சுழல" அண்டத்தில் இருக்கும் இந்த உலகம் சுழற்சி அடையவும், "எண் திசைகளும் சுழல" ... எட்டு திசைகளும் நிலை தடுமாறி சுற்றவும், "அங்கியும் உடன் சுழலவே" அதாவது எல்லாவற்றையும் பொசுக்கி சாம்பலாக்கும் அக்கினி தேவனும் சுற்றவும் என்பது பொருள்

மிக பெரிய இந்த உலகம் சுழல்கின்றது, அதனால் எட்டு திக்கையும் தாங்கும் அஷ்டதிக் பாலகர்கள் சுழலுகின்றார்கள், எல்லாவற்றையும் சாம்பலாக்கும் அக்னி தேவனும் சுழல்கின்றான்

"அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல
அகிலதல முஞ்சுழலவே"

அதாவது "அலை கடல்களும் சுழல" அலை கொண்ட கடல்களே சுழல்கின்றன, " அவுணர் உயிரும் சுழல" அசுரர்களே தங்கள் உயிர் பயத்தால் அலறி சுழல, "அகில தலமும் சுழலவே", அவர்கள் இருந்த எல்லா பிரபஞ்சமும் சுழல்கின்றன‌

"மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர
   மாணப் பிறங்கியணியும்"

"மண்டல நிறைந்த இரவி சத கோடி மதி" இரவி என்றால் சூரியன் மதி என்றால் சந்திரன், சதம் என்றால் நூறு, ஆக நூறுகோடி சூரியன்களும் சந்திரன்களும் உதிரும் அளவு போர்முரசு அறையும் வண்ணம்

"மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
   வகைவகையி னிற்சுழலும் வேல்"

முந்தைய வார்த்தையில் இருந்து அணியும் எனும்வார்த்தை இந்த வரியின் முதலாகி வரும், "அணியும் மணி ஒலி" தான் அணிந்திருக்கும் மணி ஒலியால்

"சகல தலமும் மருள" எலல்லா உலகங்களும் மருட்சி அடையவும், "சிரம வகை வகையினில் சுழலும் வேல்" ப. புரிந்து கொள்ளமுடியா பல வகைகளில் உலகையே மிரட்டும்படி வரும் வேல் யாருடையது என்றால்..

தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
   சந்தமுட னும்பிறைகள்போல்

"தண்டமுடனும்" பெரிய தண்டாயிதத்துடனும், "கொடிய பாசமுடனும்" உறுதியான பாசகயிற்றுடனும், "
"க‌ரிய சந்தமுடனும்" கருத்த நிறத்துடனும் "பிறைகள் போல" நிலவின் பிறைகள் போல 

"தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
தன்புறம் வருஞ்சமனையான்"

"தந்தமுடனுமும்" அதாவது சந்திர பிறை போல் வளைந்த கோரப் பற்களுடனும், "தழலும் வெங்கணுடனும்" நெருப்பை உமிழின்ற கண்களுடனும் , "பகடு தன் புறம்" எருமைக் கடாவில் ஏறி வரும் "சமனை" எமனை

"கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண
கஞ்சம்உத வுங்கருணைவேள்"

முந்தைய வரியின் யான் எனும் வார்த்தை சேந்து "யான் கண்டு குலையும் பொழுதில்" எமனை கண்டு நான் அஞ்சும்பொழுது, "அஞ்சேல் என". பயப்படாதே என்று, "மென் சரண கஞ்சம் உதவும் கருணைவேள்" த‌ன்னுடைய மிருதுவான தாமரை மலரன்ன திருவடித் தாமரையை தந்தருளும் கருணாமூர்த்தி

"கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
   கணவன் அடல் கொண்ட வேலே."

கந்தன் , முருகன், குமரன் என்பவனும் "வண்குறவர் தம் புதல்வி" காட்டு குறவர் பெற்ற மகளின் கணவணின்
வலிமையான கையில் விளங்கும் வேல் அது

ஆக பாடலின் பொருள் இதுதான்

அண்ட சராசரமெல்லாம் சுழல, எண் திசையும் அதன் அஷ்ட பாலகர்களோடு சுழல, எல்லாவற்றையும் பொசுக்கும் அக்னி பகவானே சுழல, அலையாடும் கடல் சுழல, அரக்கரும் தன் அழிவு வந்ததென சுழல, அவர்கள் ஆண்ட பிரபஞ்ச அகிலமும் சுழல, நூறு கோடி சூரியனும் சந்திரனும் உதிரும் வண்ணம் போர்முரசு கொட்டியபடி தன்னில் அணிந்த மணிகள் ஒலிக்கும்படி எல்லா உலகமும் (14 உலகமும் 1008 அண்டமும்) சுழலும் படி புரியா வகையில் வரும் வேல் யாருடையது?

அது தண்டாயுதமும், கொடிய பாசகயிறும், சந்திரன் பிறைபோல் வளைந்த பல்லும், நெருப்பை உமிழும் கண்களும், கரிய நிறத்துடனும் எருமைமேல் வரும் எமனை கண்டு நான் அலறும்பொழுது, அஞ்சாதே நான் இருக்கின்றேன் என சொல்லி வருவதும், கந்தன் முருகன் குமரன் என்பவனும், கானகத்து குறமகளின் கணவனுமான முருகனின் திருக்கையில் இருக்கும் வேல் என்பது பொருள்

இதன் ஞானமறைபொருள் என்ன?

ஒவ்வொருவனுக்கும் அவன் உடலில் உயிர் இருக்கும் வரைதான் வாழ்வு, அந்த வாழ்வினை முடித்து கொள்ள யாரும் தயாரில்லை. உலகிலே எல்லோருக்கும் இருக்கும் ஒரே பயம் மரண பயம்

எவ்வளவு பெரும் ஞானியென்றாலும் அவனும் வாழ்வை நீட்டிக்க விரும்புவானே ஒழிய இந்த உலகில் வாழ்வினை முடிக்க ஒருவரும் விரும்புவதில்லை

ஆனால் வாழ்வு முடியும் நேரம் உடலை விட்டு உயிர் நீங்கும் நேரம் மனம் கலங்கும், கண்கள் மங்கும் , காது கேட்கும் திறனை இழக்கும் இன்னும் உடல் கலங்கி உள்ளம் கலங்கி என்னென்ன சுழற்சிகளோ நடக்கும்

அதைத்தான் அருணகிரியார் இங்கு சொல்கின்றார், உலகம் கலங்கிற்று அண்டம் கலங்கிற்று கடல் கலங்கிற்று அக்னி தேவன் கலங்கினான் என்பதெல்லாம் கடைசி நேரத்தில் உடலும் மனமும் படும் அந்த கலங்கிய நிலை போராட்டத்தை கையறு நிலை போராட்டத்தை குறிப்பதே

இங்கு சூரிய சந்திரன் என்பது இரு நாசி மூச்சினை குறிப்பது, அக்னி என்பது உடல் சூட்டை குறிப்பது சூடற்ற உடல் பிணம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, அண்டம் என்பது எல்லையில்லா மனதை குறிப்பது, அசுரர்களின் அலறல் என்பது சாகும் நேரம் ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களை எண்ணி கலங்குவதை குறிப்பது

அந்நிலையில் எமன் வரும் நிலை என்பது சாவு நெருங்கும் நிலை, அந்நேரம் முருகனை நினைத்து சரணடைந்தால் அந்த பயம் நீங்கும் சாவை வெலலாம் என்பது இங்கு சொல்லபடும் மறைபொருள்

சாவை வெல்லலாம் என்றால் சாகாவரம் என்று பொருள் அல்ல, பிறந்த எல்லோரும் ஒரு நாள் இறப்பது விதி யாரும் தப்பமுடியாது, மாறாக முருகனை வழிபட்டால் ஞானம் பெருகும் அந்த ஞானம் மரணம் என்பது ஆன்மாவுகான விடுதலை, அந்த ஆன்மா இனி இறைபாதத்தில் நிம்மதியாகும் எனும் தெளிவு வரும்

அந்த தெளிவில் தைரியம் வரும் அந்த தைரியம் சாவையோ எமனின் வருகையினையோ பார்த்து புன்னகைக்க வைக்குமே தவிர அஞ்ச வைக்காது கதற வைக்காது அலறி ஓட வைக்காது

முருகனின் வேல் ஞானவடிவம், அதை சரணடைந்தோர் மரணத்துக்கு அஞ்சமாட்டார்கள், மரணத்துக்கு பின்னும் அவர்கள் வாழ்வும் புகழும் நிலைத்திருக்கும்

ஆம், உலகில் எல்லா மானிடரும் அஞ்சி ஒடுங்கும் மிகபெரிய பயம் மரண பயம். இந்த உலகத்தின் இயக்கமே மரணத்தை கண்டு மானிடன் ஓடும் ஓட்டத்திலும் சாவு வந்துவிட கூடாது என எடுக்கும் பெருமுயற்சியில்தான் இருக்கின்றது ஆனால் அதையும் தாண்டி அந்த பயம் ஒரு காலமும் மனதை விட்டு நீங்குவதே இல்லை

முருகனை வழிபட்டால் அவனின் ஞானவேல் அந்த பயத்தை அகற்றும், வாழ்வு ஒரு விளையாட்டு மைதானமாக தோன்றும், விளையாட்டை முடிக்கும்படி அவன் உத்தரவிட்டால் பாதுகாப்பாக செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முருகன் கூடவருவான் எனும் நம்பிக்கையினை கொடுக்கும்

மானிட வாழ்வு முடிவதை தவிர்க்க யாராலும் முடியாது எனும் பெரும் ஞானமும் அமைதியும் மனதில் கிட்டும் மரணத்துக்கு பின் ஆன்மா இறைபாதத்தில் அமைதிகொள்ளும் எனும் பெரும் நம்பிக்கை உருவாகும் அந்த அமைதியும் நம்பிக்கையும் காலனை நோக்கி புன்னகைக்க வைக்கும்

ஆம், முருகனை மனமார வழிபட்டால் மரணபயம் இல்லை, வராது என இந்த நான்காம் விருத்தத்தில் அழுத்தி சொல்கின்றார் அருணகிரிநாதர்

அப்படியே யோகம் என்பது சாதாரணம் அல்ல மனம் ஒருமிக்கும் யோகத்தின் பொழுது மனம் எனும் பெரும் உலகம் சுழலும் , பெரும் அலையடிக்கும் பெரும் பிரளயமே ஏற்படும், மனதை அடக்கி யோகத்தில் நிறுத்துதல் என்பது உலகையே சுழற்றி அடக்குவதற்கு சமம்

ஐம்புலன்களையும் கட்டுபடுத்துவது என்பதும் எட்டு வகை உணர்ச்சிகளையும் அடக்குதல் என்பதும் ஆசை அலைமோதும் மனதை அடக்குதல் என்பதும் சாமான்யம் அல்ல‌

மனம் என்பதும் எல்லையில்லாத பிரப்ஞ்சம் போன்றது, யோகம் என்பது தொடங்கும்பொழுது அது பிரளயமாகும் பெரும் குழப்பமெல்லாம் அடைந்துதான் தெளியும்

முருகபெருமானின் ஞானத்தால் அந்த மனம் முழு தெளிவடையும், எக்குழப்பம் வந்தாலும் அவரின் ஞானம் அதை அடக்கி மனதை அமைதியாக்கும், அந்த ஞானம் பெற்ற மனம் மரணத்தை விரட்டும், முழு ஞானம் அடைந்த யோகி அரூபியாய் நிலைப்பான், காலன் எனும் எமன் அவனிடம் தோற்பான் என்பதும் பொருளாகும்

gst for land purchase in tamilnadu

 GST is not applicable to the sale of land because it is neither treated as supply of goods nor the supply of services as per Schedule III of the CGST Act, 2017. Land is identified as immovable property, and so, it does not attract GST.

வீட்டில்_யாரேனும் #இறந்தால் ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " #இப்பழக்கம்_சரியா

#வீட்டில்_யாரேனும் #இறந்தால் ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " 

#இப்பழக்கம்_சரியா....????

#தவறான_வழக்கம் சந்ததிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி விடும் ...!
எவரேனும் இறந்துவிட்டால் அக்குடும்பத்தினர் ஒரு ...வருடத்திற்குக் கோலம் போட கூடாது , மலைத் தலத்திற்கும் போகக் கூடாது , பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்ற தவறான வழக்கங்கள் தற்போது நிலவி வருகின்றது . 

#இறப்பு_நேரிட்ட நாளிலேயே கூட அக்குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதிலும் ,வீட்டில் கோலம் இடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை , சாஸ்திர முரண்பாடும் கிடையாது . #இடைச்_செருகலாக வந்த இத்தவறான வழக்கமே பல குடும்பத்தவர்களை
ஒரு வருட காலம் கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுப்பதோடு 
,அக்குடும்பத்தினருக்கு
எவ்வித ஆலய வழிபாட்டுப் பலாபலன்களையும் வரவிடாது ஓராண்டிற்குத் தடுப்பதால் அக்குடும்பத்தின
ரின் பல துன்பங்களுக்கு நிவர்த்தி கிட்டாமல் போவதுடன் ஆன்மீகத் தற்காப்பு சக்தியும் குறைந்து பலத்த பிரச்சனைகளும் தோன்றி சந்ததிகளை அலைக்கழித்து விடும்
 இந்த ஒரு வருடத்திலும் பண்டிகைகள் கொண்டாடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை . 

#பண்டிகைகளினால் வரும் புண்ய சக்தி சேகரிப்பையும் இழத்தலும் தவிர்க்கப்படும் .
****அவ்வாறு துக்கத்தை ஒரு வருடகாலம் அனுஷ்ஷப்பதனால் டீ.வி , சினிமா , செய்தித்தாள் படித்தல் , புது ஆடைகள் , ஸ்வீட்டுகள் , காபி , டீ , ருசிகர உணவுகள் , கேளிக்கைகளை ஒரு வருட காலம் எவரேனும் ஒத்தி வைகிறார்களா ? இறைவனா ஓராண்டு தன்னைக் காணலாகாது என்று விதிப்பார் ??? இறைப் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் ! துன்பங்கள் மலை மலையாய்ப் பெருகும்.. 

#கலியுகத்தில் ,அதுவும் பல பூஜைகளும் , வேத சக்திகளும் வெகு வேகமாக மறைந்து வரும் கலியுகத்தில் , " ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " என்ற அறியாமையினால் தோன்றிய தவறான எண்ணத்தைக் கட்டாயம் சமுதாயத்தில் இருந்து அகற்றியே ஆக வேண்டும் .

#தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி


How to call to Tamilnadu from Karnataka in mobile number?

 codes 81,82,83,+ Numper 

Thursday, March 10, 2022

பிரசாதம் என்பது


*பிரசாதம் என்பது இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும் தூய்மையான பலவகையான உணவுப் பொருட்கள், 

பூக்கள், 

துளசி...

போன்ற இலைகளை பக்தர்களுக்கு விநியோகம் செய்வது ஆகும்.

*ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.

*பொதுவாக,

*சிவன் கோவில்களில் வில்வ தீர்த்தமும், 

*பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தமும் கொடுப்பார்கள்.

*தீர்த்தம் வாங்கும் போதும் வரிசையில் நின்று இடது கைக்கு மேல் வலது கையை வைத்து உள்ளங்கையில் தீர்த்தத்தை விடச் சொல்லி வாங்கிப் பருக வேண்டும்.

*ஒருவர் வாங்கிய தீர்த்த பிரசாதத்தை மற்றவரின் கைகளில் இடுவது தவறான செயலாகும்.

*அதே போல, 

*சர்க்கரைப்பொங்கல்,

*புளியோதரை... 

போன்ற பிரசாதங்களை வாங்கும்போது தன் கைகளில் உள்ள பிரசாதத்தை வாயினால் கடித்து சாப்பிடுவதை சிலர் வழக்கமாக்கி கொண்டிருக்கிறனர். 

அதுதான் மிகுந்த பாவமாகும்...

*விலங்குகள் தான் வாயினால் கடித்து சாப்பிடக்கூடியவை. 

ஏனென்றால், 

அவைகளுக்கு கைகளால் எடுத்து வாய்க்குள் வைத்துக் கொள்ள இயலாது.

*உள்ளங்கையில் அத்தனை தெய்வங்களும் குடியிருப்பதாக ஐதீகம்.

*நமக்கு இறைவன் இருகைகளைக் கொடுத்திருக்கிறான். 

அந்த இரண்டு கைகளால் இறைவனை நாம் வணங்கியதற்காக வழங்கப்படுகிற பிரசாதத்தை வலது கையால் வாங்கி இடது கையில் வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் வலது கையால் அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட வேண்டும்.

*அ வ்வாறு செய்யாதவர்கள் அடுத்த பிறவியில் விலங்காக பிறப்பர் என்று புராணங்கள் சொல்கின்றன...

MYSTRY.... கல் கருடன் நாச்சியார்கோவில்

சில புரியாத புதிர்கள்  
MYSTRY.... 

கல் கருடன் 
நாச்சியார்கோவில் 

புவியீர்ப்பு விசை பூமியை சுற்றி எங்கும் இருக்கிறது.
அது பொருட்களை பூமியை நோக்கி 
இழுக்கிறது.
தூரம் செல்ல செல்ல புவியீர்ப்பு சக்தி
குறைகிறது. 

பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒருவர் 400 km உயரத்தில் வானவெளியில் 63 கிலோ எடையுடன் இருப்பார். 

ஒரு பொருள் பூமியை விட்டு பறந்தால் அது தனது எடையை இழக்கிறது. 

கையில் உள்ள பொருளை எப்படி வீசினாலும் அது நிலத்தை அடையும் வரை எடையற்ற நிலையில் தான் இருக்கும். 

அது போல பூமியில் இருந்து அனுப்பப்படும் செயற்கை கோள்கள் 
நானூறு கிமீ. உயரத்திற்கு மேல் கொண்டு செல்லப் பட்டு, கிடை மட்டமாக [Horizontal direction ] மணிக்கு 27,700 கிமீ வேகத்தில் வீசி 
எரியப்படுகிறது. 

அது பூமியை அடையும் வரை எடையற்ற நிலையில் இருக்கும், அதில் உள்ளவர்களும் எடையற்றே இருப்பார்கள். செயற்கை கோளை அப்படியே விட்டு விட்டால், அது பூமியை நோக்கி விழும், புவியீர்ப்பு சக்தியால் அதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு குறைந்து கொண்டே வரும், 

எனவே, அது பூமியை நோக்கி விழுந்தாலும் அதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

விழனும் ஆனா விழக்கூடாது!! 

பூமி கோள வடிவில் இருப்பதால் அதன் மேற்பரப்பு சமதளமாக இருக்காது, 

ஒவ்வொரு எட்டு கி.மீ தொலைவு செல்லும்போதும் 
பூமி உருண்டை ஆதலால்
நேர்கோட்டில் இருந்து 5 மீட்டர் விலகி இருக்கும்.  

உயரத்தில் இருந்து எந்த ஒரு பொருளை விட்டாலும் முதல் வினாடியில் 5 மீ கீழே இறங்கியிருக்கும்.  

இவை இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு விஷயம் புலனாகிறது!!  

அது, ஒரு பொருளை பக்க வாட்டில் வினாடிக்கு எட்டு கிமீ வேகத்தில் எறிந்தால் அது ஒருபோதும் தரையைத் தொடாது!!    

பூமியை சுற்றிக்கொண்டே இன்னொறு நிலவாக செயல்படும். 

புவியீர்ப்பு கோளை பூமி நோக்கி
இழுத்துக்கொண்டே இருக்கும்.

நாம் நிற்பது, நடப்பது அனைத்து பொருட்களும் பூமியில் இருப்பது அனைத்திற்கும் காரணம் புவியீர்ப்பு 
சக்தியே. 

அந்த புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து
நிறுவப்பட்டதே கல் கருட பகவான். 

கோச்செங்கட்சோழன் முயற்சியால் உருவான கோவில்
ஸ்ரீனிவாசப் பெருமாள் நாச்சியார் கோயில் . 

மன்னர் கோச்செங்கட்சோழன்
தேவசேனாபதியாரிடம் 
தனது கோவிலில் சிலை செய்ய நல்ல 
சிற்பி வேண்டி வந்தார். 

மயூரசன்மன்
தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன். 

முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் அழகாக பாடமாக அறிந்தவன்.  
‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் 
நல்ல முறையில் கற்றவர். 

மன்னருக்கு மயூரசன்மனை அறிமுகம் செய்து வைத்து 
எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் என்றார். 

தேவசேனாபதி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறீர்கள்?" என்று கேட்டார். 

திருநறையூருக்கு" என்றார் மன்னர். 

‘ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. 

பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.  

மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செதுக்க வேண்டிய சிற்பம் எது?" என கேட்டார். 

இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்திவைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன். 

மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.  

மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்." 

மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். 

மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். 

மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம்வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன். 

சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன். 

மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.  

பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்" என்றான் மயூரசன்மன். 

செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன். 

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் இருந்து அருள்பாலிக்கிறார்.

மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. 

கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், 

மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், 

பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. 

அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!.. 

சுமார் மூன்று டன் எடைக்கு மேலே உள்ள கருட பகவானின் எடையை
பூமியிலேயே குறைத்தது எப்படி
படிப்படியாக அதிகரித்து வெளிவருவதில் 
வீதியுலா முடிந்து திரும்ப உள் செல்கையில் படிப்படியாக குறைவதும் 
புரியாத புதிரான விந்தைகள்தானே!

Friday, March 4, 2022

விக்ரகம்

வீடு கட்டும் போது சாரம் தேவைப்படுகிறது.

வீடு கட்டி முடித்த பிறகு சாரம் தேவையில்லாமல் போகிறது.

இறை வழிபாட்டில் ஆரம்பத்தில் விக்ரக ஆராதனை அவசியமாக இருக்கிறது.

இறை ஞானம் கிடைக்கப் பெற்றபின் விக்ரகம் இல்லாமலே வழிபாடு செய்ய முடிகிறது.

-பகவான் இராமகிருஷ்ணர் அருளிய கருத்து-

Tuesday, March 1, 2022

குரு ராகவேந்திரர் திருவடிகள் சரணம்...

சமாதியில் இருந்து வெளியில் வந்து உரையாடிய ராகவேந்திரர்.

தான் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்க ளை புரிந்து மக்களை காத்தவர் ஸ்ரீராகவே ந்திரர். அவர் தன் இறப்பிற்கு பிறகும் தன் னை நாடி வரும் பக்தர்களை காத்தருள்வ தோடு தேவைப்பட்டால் நேரிலே தோன்றி அருள்புரிபவர். 

பிரிட்டிஷ் காலத்தில் ராகவேந்திரரே சமா தியில் இருந்து நேரில் தோன்றி ஆங்கிலே யரோடு உரையாடிய ஒரு உண்மை சம்ப வத்தை தான் இந்த பதிவில் பார்ப்பிக்கப் போகிறோம்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது மாஞ்சாலி என்னும் கிராமம். இங்கு தான் பகவான் ஸ்ரீராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்தார். இந்த இடத்தில் தான் பிரகலாதன் யாகம் செய்தான் என்பதால் அதே இடத்தை தன து ஜீவசமாதிக்காக தேர்ந்தெடுத்தார் ஸ்ரீ ராகவேந்திரர். 

அப்போது அந்த பகுதியை ஆண்ட சுல்தா ன் மசூத் கான் என்ற மன்ன னும் அதற்கு ஒப்புக்கொண்டு அந்த இடத் தை ராகவேந் திரருக்கு கொடுக்க, அந்த இடத்தில் கடந்த 1671ம் ஆண்டு ஜீவ சமாதி அடைந்தார்.

கி.பி. 1812ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. அதன் படி கோவில் நிலத்திற்கு யாரும் வாரிசு இல்லை என் றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்து க்கொள்ளலாம். அந்த சட்டத்தின்படி பிரு ந்தாவனத்திற்கு தானமாகக் கொடுக்கப் பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது.

இதற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மன்னர் சுல்தான், பகவான் ராகவேந்திரருக்குஇந்த இடத்தை பல வருடங்களுக்கு முன்பாகவே தானம் செய்ததால் இந்த இடம் ராகவேந்திரருக் கே சொந்தம் என போராடினர். 

இதனை அடுத்து பிரிட்டிஷ் அரசாங்கம், சர் தாமஸ் மன்றோ என்பவற்றின் தலைமை யில் ஒரு குழுவை அமைத்து இதற்கான தீர்வை கண்டறிய உத்தரவிட்டது.

மன்றோவும் அவரது குழுவினரும் ராகவே ந்திரரின் ஆலயத்தை நோக்கி விரைந்த னர். மன்றோ இந்து மதம் மீது மரியாதை கொண்டவர் என்பதால் தன்னுடைய காலனி மற்றும் தொப்பியை வெளியிலே யே கழட்டிவிட்டு ஜீவசமாதி அருகே சென்றார். பின் அங்கு யாரோ ஒருவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு ஆங்கிலத்தில் உரையாட ஆரமித்தார். 

அனால் அவருடன் வந்த குழுவினருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் என்றால் அங்கு யாருமே இல்லை ஆனால் மன்றோ மட்டும் தனியாக பேசிக்கொண்டிருக்கிறா ர். இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று நினைத்தனர் எல்லோரும்.

மன்றோவோ, பிரிட்டிஷ் ஆணை குறித்த முழு விவரத்தையும் தெளிவாகா ஆங்கி லத்தில் எடுத்துரைத்துக் கொண்டிருக்கி றார். அதன் பிறகு மருதரப்பில் உள்ள நியத்தையும் கேட்டறிகிறார். 

இந்த உரை யாடல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை நீடிக்கிறது. அதன் பிறகு ஆங்கில பாணி யில் ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார். அவருடன் வந்த குழுவினர் திகை ப்போடு, யாரிடம் இவ்வ ளவு நேரம் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்டனர்.

அங்கே ஒரு பெரியவர், ஒளிவீசும் கண்க ளோடு காவி உடையில் உயரமாக இருந் தாரே அவரிடம் தான். அவரிடம் நான் அர சின் சட்டம் குறித்து விளக்கினேன். அவரு ம் இந்த சொத்து பற்றிய தெளிவான விளக்கத்தை கொடுத்தார். அதில் இருந்து இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பதை நான் தெளிவாக புரிந்து கொண் டேன் என்றார். 

அதோடு அந்த நபருக்கு எப்படி இவ்வளவு ஆங்கில அறிவு, அவரின் ஒளிவீசும் கண் களும், தெளிவான ஆங்கில உச்சரிப்பும் என்னையே பிரமிக்க வைத்தது என்று அவர் கூறுகையில் அனைவரும் ஆச்சர்ய த்தோடு பார்த்தனர். இதனை கவனித்த அவர் ஏன் நீங்கள் அவரை பார்க்கவில் லையா? என்று குழுவினரைப் பார்த்து கேட்டார்.

எங்கள் கண்களுக்கு அங்கு யாருமே தெரியவில்லை என்று கூறினார்கள் அந்த குழுவினர். தன்னோடு உரையாடியவர் பகவான் ஸ்ரீராகவேந்திரர் தான் என்பதை உணர்ந்த மன்றோ, கடந்த நூற்றாண்டில் ஜீவ சமாதி அடைந்த மகான், பிரச்னையை தீர்க்க நேரில் தோன்றி தன் மொழியில் தன்னோடு உரையாடியதை எண்ணி பூரி த்துப்போனார். 

அந்த சொத்து மடத்திற்கே சொந்தம் என்ப தை அரசிற்கு தெரிவித்த தோடு அன்று முதல் பகவான் ஸ்ரீராகவேந் திரரின் தீவிர பக்தரானார் சர் மன்றோ. இந்த தகவல் அப்போதைய சென்னை மாகாண கெஜட் டிலும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குருவே சரணம்.. 
குரு ராகவேந்திரர் திருவடிகள் சரணம்...

சிவராத்திரியில் ஈசனுக்கு அபிஷேகம்

*மஹா சிவராத்திரியில் எந்தெந்த ராசியினர் எந்த பொருட்களால் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்*

மஹாசிவராத்திரி தினத்தில் விரதம், வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பது மிக முக்கியமானதாகும்.

இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் அவர்களுக்கு என ஒரு சில குறிப்பட்ட விஷேச அபிஷேகம் செய்ய அவர்களுக்கு தேவையான கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஈசனுக்குரிய மஹாசிவராத்திரி நன்னாளில் சிவனை நினைத்து, விரதமிருந்து இரவில் அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்வது நல்லது.

மஹாசிவராத்திரி் வழிபாடு நம் முன் வினைகள், ஜென்ம பாவங்கள் நீக்கி நல்லருள் கிடைக்கச் செய்யும்.

நாம் ஈசனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யலாம், இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் இங்கு குறிப்பிட்டுள்ள அபிஷேகம் செய்வது மேலும் நன்மையை தரும்.

மேஷ ராசி
_____________
மஹாசிவராத்திரி தினத்தில் வெல்லம் கலந்த நீரை ஈசனுக்கு அபிஷேகம் செய்து, படைத்து, சிவ பஞ்சாக்‌ஷர மந்த்ரத்தைச் சொல்ல வேண்டும். இதனால் நாம் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

ரிஷப ராசி
________________
ரிஷப ராசியினர், தயிர் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய, வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மிதுன ராசி
__________________
மிதுன ராசியினர் ஈசனுக்கு கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்ய உங்கள் மனதில் இருக்கும் பல்வேறு ஆசைகள் நிறைவேறும்.

கடக ராசி
_______________
கடக ராசியினர் சர்க்கரை கலந்த பால் கொண்டு அபிஷேகம் செய்யவும். பின்னர் மந்தாரைப் பூவால் அலங்காரம் செய்ய நினைத்தது விரைவில் நடக்கும்.

சிம்ம ராசி
______________
சிம்ம ராசியினர் சிவப்பு சந்தனம் கலந்த பால் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய, உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

கன்னி ராசி
________________
கன்னி ராசியினர் பால் மற்றும் நீரால் அபிஷேகம் செய்யவும். இதனால் உங்களின் ஆரோக்யம் மேம்படும்.

துலாம் ராசி
________________
துலாம் ராசியினர், பசும்பாலால் அபிஷேகம் செய்ய செல்வச் செழிப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

விருச்சிக ராசி
___________________
விருச்சிக ராசியினர் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரைக் கொண்டு ஈசனுக்கு அபிஷேகம் செய்தல் நல்லது.

தனுசு ராசி
_______________
தனுசு ராசியினர் குங்குமப்பூ கலந்த பாலால் ஈசனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்‌ஷர மந்திரத்தை படித்தல் வேண்டும். இதனால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் நீங்கும்.

மகர ராசி
_____________
மகர ராசியினர் நல்லெண்ணெய் கொண்டு ஈசனுக்கு அபிஷேகம் செய்து, வில்வப் பழத்தை படைத்தல் வேண்டும். இதனால் வாழ்வில் எதிலும் வெற்றி கிடைக்கும்.

கும்ப ராசி
_______________
கும்ப ராசியினர் இளநீர் அல்லது கடுகு எண்ணெய்யால் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய உங்களுக்கு நிதி வருவாயில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும்.

மீன ராசி
_____________
மீன ராசியினர் குங்குமப்பூ கலந்த பாலால் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய, வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

தூத்துக்குடியைப் பற்றி

 

சங்க காலம்

  • சங்க காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி சாசனம், தூத்துக்குடியைப் பற்றி குறிப்பிடுகிறது.
  • இரும்பு, செம்பு காலங்களைச் சேர்ந்த நாகரிகங்களை வளர்த்தெடுத்த ஆதிச்சநல்லூர், ஒரு புராதன பண்பாட்டுச் சின்னமாகும்.

வரலாற்றுக் குறிப்புகள்

தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.

  • கி.மு.123இல் தாலமி என்ற கிரேக்கப் பயணி, தனது பயண நூலில் "சோஷிக் குரி"(சிறு குடி) சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான், 'தூத்துக்குடி' என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.
  • அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை, ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்" என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.
  • கி.பி.80இல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் 'தூத்துக்குடி' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மார்க்கோ போலோ எனும் இத்தாலியப் பயணி, முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
  • ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துறையைப் பற்றி, சென்னை அரசாங்கத்திற்கு, தான் சமர்ப்பித்த அறிக்கையில், தோத்துக்குரையாக மாறி இறுதியில் 'தூத்துக்குடி' என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
  • தூத்துக்குடி என்ற பெயர், ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று, 'தூட்டிகொரின்' ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் விளக்கம் அளித்துள்ளார்.

போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும்

கி.பி. 1532-இல் முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இம்மாவட்டத்தில் கால் வைத்தனர். 1658-இல் டச்சுக்காரர்கள் வந்ததனால், போர்ச்சுகல் ஆதிக்கம் அகன்றது. பாளையக்காரர்களின் அழைப்பின் பேரிலும், திருவாங்கூர் மன்னரின் படை உதவியுடனும், டச்சுக்காரர்கள் முன்னேறத் தொடங்கினர். முகம்மது யூசுப் படைதிரட்டுவதை கேள்விப்பட்டதும், டச்சுக்காரர்கள் மணப்பாட்டை காலி செய்து விட்டு, தூத்துக்குடி வழியாக தாய்நாடு சென்று விட்டனர். நாயக்கர் ஆட்சி சந்தாசாகிப்பினால் முடிவுற்றது. கருநாடகம் ஆற்காடு நவாப் கையில் விழுந்தது. முகம்மதலி திருநெல்வேலியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். 1755இல் ஹெரான் தலைமையில் ஆங்கிலேயர் படை கிளம்பியது. பாளையக்காரர்கள், கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இரண்டையும், கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில், நவாப்பிற்குக் கப்பங்கட்ட மறுத்தவர்களில் தலையானவர் பூலித்தேவர் ஆவார்.

இப்பகுதியில், ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் தொடர்ந்து கலகம் செய்து வந்தனர். பாளையக்காரர்களுக்கு ஆதரவாக சந்தாசாகிப், பிரெஞ்சுப் படைகள் இருந்தன. 1761-இல் புதுச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதால், பிரெஞ்சுக்காரர்கள் பாளையக்காரர்களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர். 1764 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது. களக்காடு, பணகுடி பகுதிகள் நவாப்பிற்கும், செங்கோட்டை திருவாங்கூர் அரசருக்கும் விட்டுக் கொடுக்கப்பட்டன. 1767 மேஜர் பிளிண்ட் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார். 1783 ஆம் வருடம் புல்லர்டன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி சூறையாடப்பட்டது. அங்கிருந்த 40,000 பொன் நாணயங்களை ஆங்கிலேயர்கள் பங்கு போட்டுகொண்டனர்.

1785 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நவாப்பின் அமில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1797 ஆம் ஆண்டு கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் பேட்டி காண்பதற்கு, இராமநாதபுரத்திலுள்ள இராமலிங்க விலாசத்திற்கு சென்ற போது குழப்பம் வரவே, ஆங்கிலத் தளபதி கிளார்க் கொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் சிலகாலம் கழித்து பாஞ்சாலங்குறிச்சி, பானர்மேனால் வெற்றிகொள்ளப்பட்டது. படிப்படியாக எதிர்த்த பாளையக்காரர்கள் அனைவரையும் ஒடுக்கி, நவாப்பையும் செல்லாக்காசாக்கி விட்டு ஆங்கிலேயர் 1801-ஆம் வருடம் திருநெல்வேலியை எடுத்துக் கொண்டனர். 1910 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இராமநாதபுர மாவட்டத்தை உண்டாக்கினர். 1986 ஆம் ஆண்டு நிர்வாக வசதி கருதி, கடற்கரையோரப் பகுதிகளைப் பிரித்து, தூத்துக்குடி மாவட்டம் உண்டாக்கப்பட்டது.

சிறப்புப் பெயர்கள்

தூத்துக்குடி நகருக்கு, 'திருமந்திர நகர்'என்றும், 'முத்துநகர்'[] என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன.

திருமந்திர நகர்

தூத்துக்குடிக்கு திருமந்திர நகர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு தனிக்கதை உண்டு. இந்தக் கடற்கரை, மிகப்பெரும் காடாக இருந்ததாம். இராவணன், சீதையைக் கடத்திச் சென்ற பின்பு அவளைத் தேடி வர அனுமனை அனுப்பி விட்டு, ராமன் இந்தப் பகுதியில் மந்திரங்களை உச்சரித்தபடி, தவம் செய்யத் துவங்கினாராம். அவருடைய தவத்திற்குக் கடலலைகளின் பேரிரைச்சல் இடையூறாக இருக்க, ராமன் கடலலைகளைச் சப்தமெழுப்பாமல் இருக்க சபித்து விட்டாராம். அன்றிலிருந்து இப்பகுதியில், கடலலைகள் அடங்கி சப்தமில்லாமல் போய்விட்டது. இன்றும் கடலலைகளோ, சப்தமோ இங்கிருப்பதில்லை. ராமன் திருமந்திரங்களை உச்சரித்த இடம் என்பதால் 'திருமந்திர நகர்' என்று பெயர் வந்துவிட்டது என்று ஒரு சிலர் கருத்து சொல்கின்றனர்.

முத்துநகர்

ஆதிகுடியான பரதவர் இன மக்கள், தூத்துக்குடியில் அதிகளவில் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குலதொழில், 'மீன் பிடித்தல்' மற்றும் கடலுக்கு அடியில் சென்று 'முத்து எடுப்பது' தான். இவர்கள் தொழில் செய்வதை வைத்து முத்துக்கள் அதிகம் கிடைத்த நகரம் என்பதால் முத்து நகர் என்று பெயர் ஏற்பட்டது. பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக விளங்கிய நகரம். பரதவர் மக்கள் நேரிடையாக முத்துக்குளித்தலில் ஈடுபட்ட துறைமுக நகரம் ஆதலால், இது 'முத்துக்குளித்துறை' என்று பெயர் பெற்றது. பின்னாட்களில் 'முத்து நகர்' என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் இரயிலுக்கு, முத்து நகர் விரைவு இரயில் என்று பெயர்.

பெயர்க் காரணம்

நீர் நிறைந்த நிலத்தைத் தூத்து, துறைமுகமும், குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் 'தூத்துக்குடி' என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைக்கொண்டான் கல்வெட்டுக்களில், இவ்வூர் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

துறைமுகம்[

டச்சுக்காரர்களின் காலத்தில் தூத்துக்குடி துறைமுகம்- வரைபடம், 1752இல்
தூத்துக்குடியின் பண்டைய துறைமுகம்- வரைபடம்
ஆங்கிலேயர் ஆட்சியில் தூத்துக்குடி துறைமுகம், 1913இல்

மன்னார் வளைகுடா அருகே அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம், ஒரு 'இயற்கைத் துறைமுகம்'. இப்பகுதி, புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. தூத்துக்குடியைத் தலைமை இடமாகக் கொண்டு ஆண்ட பரதவர்களின் ஜாதி தலைவருக்குச் சொந்தமான பாண்டியன் தீவில், இந்தத் துறைமுகம் அமைந்துள்ளது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு, இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறு பக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம், சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரம்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத்தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய, 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த்துறை ஒன்று, தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்று தனியாக நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்கும் வசதியுடைய தானியங்கியும் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மணிக்கு 700 லிட்டர் பெட்ரோலிய எண்ணெய்ப் பொருள்களை இறக்குமதி செய்யத் தேவையான சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

வர்த்தகம்

  • ஏற்றுமதி/இறக்குமதி கையாளும் நிறுவனங்கள்.
  • உப்பளங்கள்.
  • ஸ்பிக் உரத்தொழிற்சாலை.
  • ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை.
  • தூத்துக்குடி அல்காலி இரசாயன நிறுவனம்.
  • தேங்காய் எண்ணெய் ஆலைகள்.
  • கடல் சார் உணவு தயாரிப்பு நிறுவனங்கள்.

துறைமுக வணிகம்

பிப்ரவரி 1996 ஆம் ஆண்டில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஐஎஸ்ஓ 9002 என்னும் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கிழக்குக் கடற்கரையோரத்தில் சென்னைக்கு அடுத்த தூத்துக்குடியில், இங்கு ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் நடைபெறுகிறது. இங்கு முக்கிய அமைப்புகள் பெரும்பங்காற்றி வருகின்றன.

  1. ஐரோப்பிய வணிகர்களின்-தூத்துக்குடி சேம்பர் ஆஃப் காமர்ஸ்.
  2. இந்திய வணிகர்களின் - இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ்.
  3. தூத்துக்குடி தொழிற்சங்கம்.
  4. தூத்துக்குடி - இலங்கை ஏற்றுமதி இறக்குமதியாளர் வணிகச்சபை.
  5. தன்பாது உப்பு வியாபாரிகள் சங்கம்.
  6. உப்பு உற்பத்தியாளர் சங்கம்.
  7. தூத்துக்குடி நாட்டுப் படகு உரிமையாளர் சங்கம்.
  8. தூத்துக்குடி கப்பல் பிரதிநிதிகள் சங்கம்.
  9. தூத்துக்குடி இரும்பு தளவாட வணிகர் சங்கம்.
  10. தூத்துக்குடி நார்ப்பொருள் வணிகர் சங்கம்.
  11. சுங்க வேலைகளை முடித்துக் கொடுக்கும்-வணிக ஏஜெண்டுகளின் சங்கம்.
  12. கால்நடை ஏற்றுமதியாளர் சங்கம்.
  13. மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ்.
  14. விருதுநகர் சேம்பர் ஆஃப் காமர்ஸ்.
  15. இராமநாதபுரம் சேம்பர் ஆஃப் காமர்ஸ்

ஆகிய அமைப்புகள் பங்காற்றி வருகின்றனர்.

போக்குவரத்து

தூத்துக்குடி நகரமானது சாலை, இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் மற்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை-138 ஐ இணைக்கும் தமிழ்ச்சாலை, தேசிய நெடுஞ்சாலை-38 ஐ இணைக்கும் காமராஜர் சாலை, மாநில நெடுஞ்சாலை-49 ஐ இணைக்கும் இராமநாதபுரம் சாலை, மாநில நெடுஞ்சாலை-176 ஐ இணைக்கும் திருச்செந்தூர் சாலை, வ.உ. சிதம்பரனார் சாலை மற்றும் விக்டோரியா விரிவாக்க சாலை ஆகியவை இந்நகரத்தில் உள்ள முக்கிய சாலைகள். இந்நகரத்திற்கு வெளியே அமைந்துள்ள நெடுசாலையான வ.உ.சி. சாலையானது துறைமுகம், அனல் மின் நிலையம், ஸ்பிக் தொழிற்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை-38 ஆகியவற்றை இணைக்கிறது. இந்நகரத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன; பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் தமிழ்ச்சாலையிலும், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் காமராஜர் சாலையிலும் அமைந்துள்ளது. இந்த இரண்டு பேருந்து நிலையங்களிலிருந்தும் சுமார் 700 பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு, தினசரி பேருந்து சேவைகளை இயக்குகிறது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், பெங்களூரு, சென்னை, வேலூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற முக்கியமான நீண்ட தொலைவிலுள்ள நகரங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது. தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாக இருப்பதால், நிறைய கொள்கலன் லாரிகள், இந்நகரத்திற்கு வந்து, செல்கின்றன. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, நகரத்திற்குள் நுழையும் கொள்கலன் லாரிகளின் எண்ணிக்கை 1000 ஆகும்.

தொடருந்து போக்குவரத்து

தூத்துக்குடி இரயில் நிலையமானது, இந்தியாவின் பழமையான மற்றும் பிரபலமான இரயில் நிலையங்களில் ஒன்றாகும். தூத்துக்குடியில் இருந்து நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகிறது. அவ்வாறு இயக்கப்படும் ரயில்களை சுத்தம் செய்வதற்கும், பராமரிப்பு செய்வதற்கு போதிய வசதிகள் இருக்கும், தென்தமிழ்நாட்டில் உள்ள சில இரயில் நிலையங்களில், இதுவும் ஒன்றாகும். மதுரைக்கும் - தூத்துக்குடிக்கும் இடையிலான பாதை 1874இல் திறக்கப்பட்டது. தூத்துக்குடியை இணைக்கும் இரயில் பாதைகள் சமீபத்தில் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியிலிருந்து சென்னை, மைசூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகியவற்றுக்கு, தினசரி இரயில்கள் இயக்கப்படுகின்றன. விவேக் விரைவு இரயிலானது தூத்துக்குடி - ஓகாவை(குசராத்து) இணைக்கின்றது. தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இரயில் நிலையத்துடன் இணைக்கும், முத்து நகர் அதிவிரைவுத் தொடர்வண்டியானது, தெற்கு இரயில்வேயின் முக்கிய ரயில்களில் ஒன்றாகும். குருவாயூர் இரயிலானது, குருவாயூரியிலிருந்து - சென்னைக்கு, தூத்துக்குடி வழியாக பகல் நேர பயணத்தில் செல்லும் இரயிலாகும்.

வானூர்தி நிலையம்

தூத்துக்குடி வானூர்தி நிலையமானது, நகரின் மையப்பகுதியிலிருந்து 14 கி.மீ. (9 மைல்) தொலைவிலுள்ள வாகைக்குளத்தில் உள்ளது. இந்நிலையத்தில் 10/28க்கு நெறிப்படுத்தும் 1351 மீட்டர்கள் நீளமும், 30 மீட்டர்கள் அகலமும் உடைய, தாரிடப்பட்ட ஓர் ஓடுதளம் உள்ளது. 100 மீட்டர்களுக்கு, 60 மீட்டர்கள் அளவுள்ள முகப்புத் தளத்தில் ஒரே நேரத்தில் ஏடிஆர் 72 இரகம் அல்லது அதை ஒத்த இரண்டு வானூர்திகள் நிறுத்த வசதி உள்ளது. இதன் நிலைய வளாகத்தில் உச்சநிலையில் 72 பயணிகளை மேலாளுமாறு வசதிகள் உள்ளன. இங்கிருந்து இன்டிகோ விமானம் சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு, ஸ்பைஸ் ஜெட் விமானம் சென்னைக்கும் இயக்கப்படுகின்றன.

துறைமுகம்

இங்குள்ள வ. உ. சிதம்பரனார் துறைமுகம், இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் நடுநிலக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி/இறக்குமதி நடைபெறுகிறது.

Sunday, February 27, 2022

திருமந்திர நகர் ,thoothukudi

 

                                         திருமந்திர நகர்

தூத்துக்குடிக்கு திருமந்திர நகர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு தனிக்கதை உண்டு. இந்தக் கடற்கரை, மிகப்பெரும் காடாக இருந்ததாம். இராவணன், சீதையைக் கடத்திச் சென்ற பின்பு அவளைத் தேடி வர அனுமனை அனுப்பி விட்டு, ராமன் இந்தப் பகுதியில் மந்திரங்களை உச்சரித்தபடி, தவம் செய்யத் துவங்கினாராம். அவருடைய தவத்திற்குக் கடலலைகளின் பேரிரைச்சல் இடையூறாக இருக்க, ராமன் கடலலைகளைச் சப்தமெழுப்பாமல் இருக்க சபித்து விட்டாராம். அன்றிலிருந்து இப்பகுதியில், கடலலைகள் அடங்கி சப்தமில்லாமல் போய்விட்டது. இன்றும் கடலலைகளோ, சப்தமோ இங்கிருப்பதில்லை. ராமன் திருமந்திரங்களை உச்சரித்த இடம் என்பதால் 'திருமந்திர நகர்' என்று பெயர் வந்துவிட்டது என்று ஒரு சிலர் கருத்து சொல்கின்றனர்.

பெயர்க் காரணம்

நீர் நிறைந்த நிலத்தைத் தூத்து, துறைமுகமும், குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் 'தூத்துக்குடி' என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைக்கொண்டான் கல்வெட்டுக்களில், இவ்வூர் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது


தூங்கா நகரம், madurai

*உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?*

"The World's only living civilization"
உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்வு செய்த போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும்
ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.

ஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் *"மதுரை "* தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.

நகரம் மட்டும் இயங்கவில்லை. தனது கலாச்சாரத்தையும் இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை
*"The World's only living civilization"*
என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின்
"The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ் கூறுகிறார்.

மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது. 

இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம்.
அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக வழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது. அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.

ஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயங்கிக் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக இருக்கிறது அல்லவா?

அது மட்டுமல்ல மதுரைக்கு *"தூங்கா நகரம்"* என்ற பெயரும்சில ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.

*ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும் மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான்* என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!..

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...