Thursday, February 3, 2022

விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில்

விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் வரும் சில வார்த்தைகள் முடிந்த போதெல்லாம் கூறுங்கள் நன் மை அடையுங்கள்

ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)

*படிப்பில் வல்லவனாக*
வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி

*வயிற்று வலி நீங்க*
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா
ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ

*உற்சாகம் ஏற்பட*
அதீந்த்ரியோ மஹாமாயோ
மஹோத்ஸாஹோ மஹாபல

*ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட*
மஹா புத்திர் மகாவீர்யோ
மகாசக்திர் மஹாத்யுதி

*கண்பார்வை தெளிவுபெற*
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்

*பெருமதிப்பு ஏற்பட*
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
ஜஹ்நுர் நாராயணோநர

*எண்ணிய காரியம் நிறைவேற*
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன

*கல்யாணம் நடக்க*
காமஹா காமக்ருத் காந்த:
காம: காமப்ரத: ப்ரபு

*உயர்ந்த பதவி ஏற்பட*
வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:
ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ

*மரண பயம் நீங்க*
வைகுண்ட: புருஷ: ப்ராண:
ப்ராணத: ப்ரணவ: ப்ருது:

*அழியாச் செல்வம் ஏற்பட*
அர்த்தோநர்த்தோ மஹாகோசோ
மஹாபோகோ மஹாதந

*நல்ல புத்தி ஏற்பட*
ஸர்வதர்சீ விமுக்தாத்மா
ஸர்வஜ்ஞோ ஜ்ஞான முத்தமம்

*சுகம் உண்டாக*
ஆநந்தோ நந்தநோ நந்த:
ஸத்யதர்மா த்ரிவிக்ரம

*க்ஷேமம் உண்டாக*
அனிவர்த்தி நிவ்ருத்தாத்மா
ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ

*துன்பங்கள் தொலைய*
பூசயோ பூஷணோ பூதிர்
விசோக: சோகநாசன

*வியாதிகள் நீங்க*
பூர்ண: பூரயிதா புண்ய:
புண்யகீர்த்தி ரநாமய

*மோக்ஷமடைய*
சத்கதி: சத்க்ருதி: ஸத்தா
ஸத்பூதி: ஸத்பராயண

*சத்ருவை ஜெயிக்க*
ஸுலப: ஸுவ்ருத: ஸித்த:
சத்ருஜிச் சத்ருதாபன

*ஆபத்து விலக*
அமூர்த்திரநகோ சிந்த்யோ
பயக்ருத் பயநாசந

*மங்களம் பெருக*
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி
ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண

*துர்சொப்பனம் நீங்க*
உத்தாரணோ துஷ்க்ருதிஹா
புண்யோ துஸ்ஸ்வப்நநாசந

*பாபங்கள் நீங்க*
தேவகீ நந்தந: ஸ்ரஷ்டா
க்ஷிதீச: பாபநாசந:

தைப்பூச பெருவிழா பழனி முருகன் கோவிலில் , palani,

தைப்பூச பெருவிழா பழனி முருகன் கோவிலில் 


தைப்பூச பெருவிழா பழனி முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தைப்பூச திருவிழா நடந்த களைப்பில் இருக்கும் பழனி தண்டாயுதபாணிக்கு எடப்பாடியில் வசிக்கும் பருவதராஜ குல மக்கள் ஆயிரக்கணக்கான காவடிகளுடன் வந்து பல டன் பஞ்சாமிர்தம் செய்து குளிர குளிர அபிஷேகம் செய்து மருமகனை குளிர்வித்துள்ளனர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமான் எப்படி மருமகன் அக முடியும் என்று கேட்கிறீர்களா? திருச்செந்தூர் முருகன் மீனவப்பெருமக்களுக்கு மாப்பிள்ளை சாமி, அதே போலத்தான் எடப்பாடி மக்களுக்கு முருகப்பெருமான் மருமகன் சாமி. வள்ளியை மணம் முடித்த முருகனை மருமகனாக கொண்டாடுகின்றனர் எடப்பாடி மக்கள்.

மருமகனுக்காகவே 300 ஆண்டுகளுக்கும் மேலாக காவடி சுமந்து கொண்டு பாதை யாத்திரையாக வந்து 20 டன் பஞ்சாமிர்தம் தயாரித்து அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்தாக கொண்டுள்ளனர்.

360 ஆண்டு கால பாரம்பரியம் 
பருவத ராஜகுல காவடி குழுவினர்

தைப்பூசத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுவினர் சார்பில், சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தருவது வழக்கம். 

கடந்த 360 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக வரும் எடப்பாடியை‌ சேர்ந்த பருவத ராஜகுல காவடி குழுவினர் பழனிகோவிலுக்கு வந்து இரவு நேரமும் பழனி மலைக்கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட செப்புப்பட்டயம் வழங்கப்பட்டுள்ளது.

ஆட்டம் பாட்டம் 
பய பக்தியோடு விரதம்
பழனி மலை முருகனை தரிசிக்க செல்பவர்கள் மாலையில் கீழிறங்கி விட வேண்டும். ஆனால் எடப்பாடி பருவதராஜ குல மக்கள் மட்டும்தான் விடிய விடிய தங்கியிருந்து பல ஆயிரம் கிலோ பஞ்சாமிருதம் தயாரித்து வழிபடுகின்றனர். மலையை பல டன் மலர்களால் அலங்கரித்து ஆட்டம் பாட்டம் என பழனியை அதிர வைத்து விடுவார்கள்.
பழனி மலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டதும் எடப்பாடி கிராம மக்கள் பாதயாத்திரைக்கான காப்பு கட்டி, விரதத்தைத் தொடங்கிவிடுவார்கள். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஒட்டுமொத்த கிராமமே விரதமிருப்பர்

கொண்டாட்டமாக வந்த பக்தர்கள்
பழனி ஆண்டவரைத் தரிசித்து, வீடு வந்து சேர்ந்ததும் படையல் போட்டப் பிறகுதான் அவர்களின் விரதம் நிறைவு பெறும். அந்தளவுக்குப் பக்தியுடன் விரதம் இருந்து தன் மருமகனை வழிபடுகிறார்கள் எடப்பாடி மக்கள்.
இந்த ஆண்டும் பழனி தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுவினர் காங்கேயம், வட்ட மலை, தாராபுரம் வழியாக நேற்று பழனியை வந்தடைந்தனர். ஆயிரக்கணக்கான எடப்பாடி மக்கள் சர்க்கரைக் காவடி, கரும்புக் காவடி, இளநீர்க் காவடி, தீர்த்தக் காவடி என்று விதவிதமான காவடியெடுத்து பெருங்கொண்டாட்டத்துடன் பழனியில் குவிந்தனர்.

படி பூஜை 
படிகளுக்கு பூஜை
மலைக் கோவிலில் படி பூஜை செய்து வழிபட்டனர். மலையில் தங்கியிருந்த மக்கள் ஓம் சரவண பவ என்று மலர்களால் அலங்காரம் செய்தனர். விபூதி படையல் போட்டு அரோகரா என்று முழக்கமிட்டனர். அந்த முழக்கம் மலை முழுவதும் எதிரொலித்தது. எடப்பாடி காவடிக் குழுவில் அன்னதான குழு, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குழு என பல்வேறு குழுக்கள் உள்ளன. எடப்பாடி பஞ்சாமிர்தம் தயாரிப்பு குழுவினர் பழனி மலைக்கோவிலுக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரித்தனர்.

எடப்பாடி பக்தர்கள்
இதற்காக 10 டன் வாழைப் பழங்கள், 5 டன் சர்க்கரை, இரண்டரை டன் பேரீச்சம் பழம், 1 டன் கற்கண்டு, 250 கிலோ தேன், 250 கிலோ நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை பயன்படுத்தி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டது. ராட்சத அண்டாக்களில் வாழைப்பழம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கலந்து தயாரிக்கப்பட்ட இந்த பஞ்சாமிர்தம் பழனியாண்டவருக்கு படைத்து, பின்னர் எடப்பாடி பக்தர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள்.

மருமகனுக்கு அபிஷேகம் 
நோய் தீர்க்கும் திருநீறு
வள்ளியை மணம் முடித்த முருகனை மருமகனாக கொண்டாடுகின்றனர் எடப்பாடி மக்கள். நோய் தீர்க்கும் பிரசாதமாக பழனி மலை விபூதியை கொண்டாடுகின்றனர். உடல் நிலை பிரச்சினை ஏற்பட்டால் முருகனை நினைத்து திருநீறு பூசினால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. முருகப்பெருமான்தான் இவர்களுக்கு குல தெய்வம். தெய்வமாக பார்ப்பதை விட மருமகனாக பார்ப்பதுதான் இவர்களுக்கு பிடித்திருக்கிறது. அந்த பாசத்துடன்தான் தைப்பூசம் முடிந்து சீர் கொண்டு வந்ததோடு பல ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரித்து அபிஷேகம் செய்து வழிபட்டு வீடு திரும்புகின்றனர்.

மீனாட்சி அம்மன், madurai Meenakshi Amman

மீனாட்சி அம்மன்:

"அம்மாடி!! மீனாக்ஷி!! ராஜ உத்தரவு!! மடப்பள்ளில நிறைய நைவேத்யம் பண்ணனும்!! முடியல்லே!! சித்த தூங்கிக்கறேன்!! மறக்காத நேரத்துக்கு எழுப்பிடுடீ!! மறந்துடாதே" மீனலோசனையின் மீதுள்ள அதீதமான உரிமையால் ஶ்ரீநிவாஸர் தேவிக்கே உத்தரவிட்டு, மடப்பள்ளியை உள்பக்கமாய் தாழ் போட்டுக்கொண்டு உறங்கிப்போனார்.

தடதடவென சத்தம்!! "யார் மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது!!" கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் ராஜ ஸேவகர்கள்!!

"என்னங்கானும்!! நீர் கதவை அடைச்சுண்டு உள்ள என்ன பண்றீர்!! காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா!! குருக்கள் காத்துண்ட்ருக்கார்!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ!!" ராஜ ஸேவகர்களோடு வந்த பட்டரின் குரல்.

"ஐயோ!! மீனாக்ஷி!! கைவிட்டுட்டியேடீ!! எழுப்பி விடுன்னு சொன்னேனே!! ஒரு நைவேத்யமும் தயாராகலையே!! நான் என்ன பண்ணுவேன்!! அம்மா!! ராஜ தண்டனை தான் எனக்கு இன்னிக்கு!!" பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார் ஶ்ரீநிவாஸர்.

"நகருங்காணும்!!" பட்டரொடு நான்கைந்து பேர் நுழைந்தனர் உள்ளே!!

"ஆஹா!! சக்கரைப் பொங்கல்!! தேங்காய் சாதம்!! புளியஞ்சாதம்!! எலுமிச்சை சாதம்!! போளி!! வடை!! பால் பாயசம்!! ஒன்னு பாக்கியில்லையே ஓய்!! இத்தனையும் தனியாவா பண்ணேள்!! ஒன் சிஷ்யாள்ல்லாம் அண்ணா கதவை சாத்திண்டார்!! எப்படி திறக்கறதுன்னு தெரியல்லேன்னு புலம்பிண்ட்ருந்தாளே!! " சொன்னவரின் கண்கள் சர்க்கரை பொங்கலிலும், போளியிலுமே இருந்தது.

மீனாக்ஷிக்கு நைவேத்யம் ஆனதும் ஸோமசுந்தரன் இதை சாப்டறானோ இல்லையோ, நாம சாப்டுடனும் அவர் மனது துடித்துக் கொண்டிருந்தது.

ஶ்ரீநிவாஸருக்கு ஒரே குழப்பம்!! "என்னதிது!! நாம தான் எழுந்துக்கவே இல்லையே!! யார் இதெல்லாம் பண்ணிருப்பா!!" நிகழ்வின் ப்ரமிப்பில் ஶ்ரீநிவாஸர் விலகவில்லை.

"உம் கைக்கு தங்க மோதரம் போடனும் ஒய்!! வாரும்!! மீனாக்ஷிக்கு தீபாராதனை ஆகப்போறது!! பார்ப்போம்!!" எல்லோரும் சிவராஜமாதங்கியின் ஸந்நிதிக்கு விரைந்தனர்.

குருக்கள் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பின் தீபாராதனைக்கு திரையை விலக்கினார்.

"ஐயோ!! மாணிக்க மூக்குத்தி காணுமே!! அம்மா!! மீனாக்ஷி!! என்னடி சோதனை இது!!" குருக்களின் கதறல் மீனாக்ஷி கோவிலுக்கு வெளி வரை எதிரொலித்தது.

மீனலோசனையின் அழகையே மெருகூட்டும் மூக்குத்தி தொலைந்த துக்கம் ராஜாவிற்கும், மற்ற அனைவருக்கும்!! ஶ்ரீநிவாஸருக்கோ நடப்பதைக் கண்டு பயம்!! அபசாரம் நிகழ்ந்ததோ என்று!!

அசரீரி கேட்டது  
"அஞ்சற்க!! என் பிள்ளை ஶ்ரீநிவாஸன் சரீர களைப்பால் என்னை எழுப்பிவிடச் சொல்லி உறங்கிப்போனான்!! காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன்!! அயர்ந்து அவன் உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன். துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப்பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து, அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன்!! குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ!! அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது!! மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள் !! மூக்குத்தி இருக்கும்!!" சட்டென நின்றது அசரீரீ

நடப்பது கனவா நினைவா என யோசிப்பதற்க்குள் மீனாக்ஷி மூக்குத்தி மடப்பள்ளியிலிருந்து வந்தது.

"அம்மா!! மீனாக்ஷி!!" ஶ்ரீநிவாஸர் கண்களில் ஜலம் பெருக கதறி மீனாம்பாளின் பாதத்தில் விழுந்தார். "அம்மா!! அம்மா!!ன்னு ஸதா கூப்பிட்டதற்கு நீயே எனக்காக நைவேத்யம் சமைச்சிருக்கியே!! தாயே!! நான் என்ன பாக்யம் பண்ணேன்!!" கண்ணீர் கண்களை மறைக்க கதறினார் ஶ்ரீநிவாஸர்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம்

பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியாதவர்கள், இதை செய்யுங்கள். பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றிய பலனை நம்மால் பெற முடியும்.

அதிகாலை விடியும் பொழுதில் சுத்தமான காற்று வீசிக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்த பிரபஞ்சம் நேர்மறை ஆற்றலை பூமிக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் மனதார நினைக்கும் எந்த ஒரு காரியமும் நிச்சயமாக நடந்தே தீரும். இறை ஆற்றல் நிரம்பி வழியும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வது நன்மை தரும் என்பது சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விஷயம்.

ஆனால் நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து பூஜையறையில் தீபம் ஏற்றுவது என்பது இயலாத காரியமாக இருக்கிறது. சில பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் சுத்தமாக இருக்கும் சமயத்தில் முகம் கை கால்களை அலம்பி விட்டு பூஜையறையில் தீபம் ஏற்றலாம் என்று.

ஆனால் சில பேருக்கு குளிக்காமல் பூஜை அறைக்குள் செல்வது பிடிக்காது. குளிக்காமல் தீபம் ஏற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு வேறு ஏதாவது ஒரு வழி உள்ளதா. பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பலனைப் பெற வேறு ஒரு வழி உள்ளது.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு இனிப்புப் பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம், இதில் உங்கள் வீட்டில் எது இருந்தாலும் சரி. அதில் சிறிதளவை எடுத்துக் கொண்டு போய் வீட்டு வாசலுக்கு வெளியே, நீங்கள் கோலம் போடும் இடத்தில் ஒரு ஓரமாக போட்டு விடுங்கள்.

பிரம்ம முகூர்த்தத்தில் அன்னதானம் செய்த புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும். அதாவது அந்த நேரத்தில், ஓரறிவு கொண்ட புழு பூச்சிகள், எறும்புகள், வண்டுகள் தூங்காமல் தனக்கான இரை தேடிக் கொண்டுதான் இருக்கும். அந்த சிறுசிறு பூச்சிகளுக்கு நீங்கள் போடும் இந்த இனிப்பு பொருள் உணவாக அமையும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் பசியோடு இரை தேடிக் கொண்டிருக்கும் அந்த ஜீவன்கள், நீங்கள் போட்ட உணவை பிரம்ம முகூர்த்தத்தில் சாப்பிட்டு, உங்களை வாழ்த்த, அந்த வாழ்த்து முழுமையாக உங்களை வந்து சேரும். இதனால் உங்களுடைய வாழ்க்கையில் கோடான கோடி புண்ணியத்தை நீங்கள் அடையலாம்.

எறும்புகளுக்கு இறை போட்டு விட்டு, வீட்டிற்குள் வந்து பத்து நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். மனதார உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு என்ன தேவையோ அதை நேர்மறையாக நினைத்து தியானம் செய்ய வேண்டும். அதன் பின்பு நீங்கள் மீண்டும் உறங்கச் செல்லலாம். குறிப்பாக இந்த வேலைகளை அதிகாலை 3.00 மணியிலிருந்து 5.00 மணிக்குள் செய்து முடித்திருக்க வேண்டும். இந்த இரண்டு மணி நேரத்தில் நீங்கள் செலவழிக்கப் போகும் 15 நிமிடம் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்களை உண்டு பண்ணும்.

இதை செய்வதற்கு 15 நிமிடத்திற்கு மேல் எடுக்காது. வெறும் 48 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றத்தை நீங்களே உணரலாம். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் சிறப்புப்பதிவு.

மகாதீபக் கொப்பரைக்கும் ஒரு வரலாறு........

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு மஹா தீபம் ஏற்றப் படவுள்ள ௨௫௦[250] கிலோ எடை கொண்ட கொப்பரை , கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபக்கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சிக்கு இன்று எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்த ஆண்டு புதிய தீபக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.௨௫௦ கிலோ எடை கொண்ட பஞ்சலோகக் கொப்பரை கோயம்பத்தூரைச் சேர்ந்த ஓர் அன்பரால் காணிக்கையாக வழங்கப்பட்டதாகும்.

நாளை , அதிகாலை, நான்கு மணிக்கு, கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள், ‘ஏகன், அனேகன்’ என்பதை விளக்கும் பரணி தீபமும், மாலை, ஆறு மணிக்கு, ௨௬௬௮ [ 2668 ] அடி உயர மலை உச்சியில், ‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இதையொட்டி,அண்ணாமலையார் திருக்கோயிலின் சிறிய நந்தியார் சந்நிதி முன்பு இன்று அதிகாலை பருவதராஜகுல மரபைச்சார்ந்த அன்பர் வேல்முருகன் அவர்களின் தலைமையில் மகா தீபக் கொப்பரைக்கு அலங்கார தீபாராதனை நிகழ்த்தப் பெற்று பதினைந்து ஊழியர்கள் மூலமாக "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற முழக்கத்துடன் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது.சென்ற ஆண்டின் பழைய கொப்பரையை விட நூறு கிலோ எடை கொண்ட தீபக்கொப்பரையைக் கொட்டும் மழையிலும் பத்திரமாகக் கொண்டு சென்றனர்.
 
இதில், ஏற்றப்படும் மஹா தீபத்தை, ௪௦ கி.மீ., வரை பார்க்க முடியும்.கொப்பரை, வெப்பத்தால் சேதமாகாமல் இருக்க, மேல்பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவும், ௨௫௦ [250] கிலோ எடையில், கால் அங்குலம் தடிமன் கொண்டதாகவும், ௨௦ வளையங்களுடன் கூடிய செப்புத் தகட்டில் செய்யப்பட்டுள்ளது.

கொப்பரைக்குக், காவி வர்ணம் பூசப்பட்டு, ‘'சிவ சிவ’' என்ற வாசகம் எழுதப்பட்டு, விபூதிப் பட்டையுடன் கூடிய லிங்கம், , தீப விளக்கு எரிவது போலவும் அதன்கீழ் மகாதீபம் என்ற சொற்களுடன் படம் வரையப்பட்டுள்ளது.

முன்னதாக,இந்த கொப்பரை நேற்று கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன .

பழைய கொப்பரையும் பழுது பார்க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

 திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை ௨ ,௬௬௮ [ 2668 ] அடி உயரம் கொண்டது.[ தற்போது தமிழக அரசு இதன் உயரம் ௨௭௪௮ [ 2787 ] அடிகள் என அறிவித்துள்ளது.] இதன் உச்சியில் பிரம்மாண்டமான கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்.

 பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த தீப உற்சவம். மலைமேல் மகாதீபம் என்ற பெருமை இங்கு மட்டுமே உள்ளது. பின்னாட்களில் திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றும் வழக்கம் உண்டானது.

 மகாதீபம் ஏற்றும் உரிமை செம்படவர் எனப்படும் மீனவர் இனத்தவருக்கு உரியது. மீனவர் தலைவரான பர்வதராஜன் என்பவனின் மகளாகப் பார்வதி தேவி பிறந்தார் . மீன் போன்ற அழகிய விழிகளை உடையவள் என்ற பொருளில் '' கயல் கண்ணி '' என்று பெயரிட்டனர். பலரும் '' கயல் கன்னி '' என்று குறிப்பிடுகின்றனர்; இது தவறு. '' கயல் கண்ணி '' என்பதே சரி. மீனாட்சி அம்மனுக்கு அங்கயற்கண்ணி, அதாவது அம் + கயல் + கண்ணி என்று ஒரு பெயர் உண்டு. இந்த கயல் கண்ணியினைச் சிவபெருமான், மீனவ இளைஞனாக வந்து, மணந்து, தேவியின் சாபம் நீக்கி, இருவரும் சிவ பார்வதியாக பருவதராஜனுக்குத் தரிசனம் தந்தனர். இதனால் மீனவர்களுக்குப் பருவதராஜகுலத்தார் என்று பெயர் ஏற்பட்டது.செம்படவர் என்ற பெயரும் இதே பொருளில்தான். படகுகளில் செல்வதால் படவர்; சிவன் + படவர் என்பதே செம்படவர் என்று ஆனது.
 இந்த பருவதராஜகுலத்தார் தான் தலைமுறை தலைமுறையாக மகாதீபம் ஏற்றும் உரிமைகளை உடையவர்கள். 

தீபத் திருவிழாவின் பத்தாம் நாள் மாலையில் மலைமேல் ஏற்றுவதற்காக தீபக் கொப்பரை, மலைமீது முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டிருக்கும்.

 தீபத் திருவிழாவில் தீபம் ஏற்றும் கொப்பரை பற்றியும் வரலாறு உண்டு. 

ஆதி காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் செய்து கொடுத்துள்ளனர். அது பற்றி தகவல் திரட்ட படவில்லை. புதுயுகம் ௧௬௬௮ [1668 ] ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட ௩௫௦ ஆண்டுகள் முன்பு வேங்கடபதி என்பவர் நாலரைபாகம் எடைகொண்ட[ இது எந்தவகை எடை என்று தெரியவில்லை ] வெண்கலத்தால் செய்யப்பட்ட கொப்பரை செய்து அளித்துள்ளார்., கோயிலில் இது பற்றிய குறிப்பு பதிவாகி உள்ளது.இது, தொடர்ந்து நெடுங்காலம் பயன்படுத்தப்பட்டதால் சேதமடைந்தது.

 இதையடுத்து, இப்போது உள்ள கொப்பரையின் வடிவமைப்பு உருவானது.இது ௧௯௯0 [1990 ]ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ௯௨ [ 92 ] கிலோ செம்பு ௧௧௦ [ 110 ]கிலோ இரும்புச் சட்டங்களால் வடிவமைக்கப்பட்டது.கொப்பரையில் அடிப்பாகம் ௨௭ [ 27 ] அங்குல விட்டமும் மேற்புறம் ௩௭ [ 37 ] அங்குல விட்டமும் உடையது. மொத்த உயரம் ௫௭ [57 ] அங்குலம்.
இந்தக் கொப்பரையைத் தயார் செய்து தரும் பணியைப் பக்திபூர்வமாக செய்து வருபவர் சுமார் ௭௦ [70 ] வயதான மண்ணு நாட்டார் என்ற பருவதராஜகுலப் பெரியவர்.  

அவருடைய மகன் பாஸ்கர், இவ்வாறு கூறுகிறார்=

''கார்த்திகை தீபத் திருவிழாவின் சிறப்பே 'மகா தீபம்' தான். இந்த 'மகா தீபம்' ௨ ,௬௬௮ [ 2,668 ]அடி உயரம் உள்ள மலை உச்சியில் ௩௦ [ 30] ஆம் தேதி மாலை ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றும் உன்னதமான இந்தப் பணியை, 'நாட்டார்கள்' என்று அழைக்கப்படும் பர்வதராஜ குலத்தைச் சேர்ந்தவர்களான நாங்கள், தலைமுறை தலைமுறையாகச் செய்து வருகிறோம். மகா தீபத்துக்கான பிரம்மாண்டமான கொப்பரை தயாரிப்பதில் இருந்து, மலை மீது ஜோதியை ஏற்றுவது வரையிலான இறைப்பணியைச் செய்வது எங்கள் குல வம்சத்தினர்தான்.

இதில் நாங்கள், கடந்த ௧௯௯௦[ 1990] -ஆம் ஆண்டில் இருந்து கொப்பரையைச் செய்வது மற்றும் வருடம்தோறும் பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்யும் வாய்ப்பை அண்ணாமலையார் அருளால் பெற்றிருக்கிறோம்.

மலை மீது ஏற்றப்படும் ஜோதி பிரகாசமாக சுடர்விட முக்கிய காரணம் அதன் கொப்பரையே. கடந்தமுறை கொப்பரை தாமிரத்துடன் இரும்பு கலந்து தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை முழுக்க முழுக்க தூய தாமிரத்தகட்டினால் (செம்புத்தகடு) தயாரிக்கப்பட்ட கொப்பரையையே 'மகா தீபம்' ஏற்ற பயன்படுத்துகிறோம். ஆகம விதிகளின்படி மகா தீபக் கொப்பரை, மொத்த உயரம் ௫௭ [57 ] அங்குலம். அதன் வாய் ௩௭ [ 37 ] அங்குல விட்டமும் கொண்டதாக வடிவமைக்கப்படும்.

 மகா தீபத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கொப்பரை பழுதானதால் ௨௦௧௬ [2016] ஆம் ஆண்டு ஆண்டு புதிய கொப்பரை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை என் தந்தை மண்ணு நாட்டார் தயாரித்துத் தந்துள்ளார். அவர் தயாரித்துத் தரும் மூன்றாவது கொப்பரை இது.

சுமார் இரண்டு இலட்சம் மதிப்பில், மொத்த உயரம் ௫௭ [57 ] அங்குல உயரத்தில், கீழ்வட்ட சுற்றளவு ௨௭ [27 ] அங்குலம், மேல்வட்ட சுற்றளவு ௩௭ [ 37 ]அங்குலம், ௨௦௦ [ 200 ] கிலோ எடையில் கொப்பரை செய்யப்பட்டுள்ளது.''இவ்வாறு அவர் மகன் பாஸ்கர் கூறினார்.இந்த கொப்பரை மீண்டும் செப்பனிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்து என்பது குறிப்பிடத்தக்கது. 


வில்வம்

வில்வம் !மகாவில்வம் !
நமக்கு நாமே வைத்தியம் மூலிகை மருத்துவம் 9
            யாவர்க்குமாம் இறைவனுக்கு ஓர் பச்சிலை என திருமூலர் அருளிய ஒரு வாசகம் இறைவனுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும்.
              இறை வழிபாடு செய்ய பூ பணியார பலகாரம் தேவையில்லை ஒரு பச்சிலை போதும் இறைக்கும் இரைக்கும்!
           வில்வம் மூன்று இலைகள் கொண்டது சிவனுக்கும் மகாலக்ஷ்மி பூஜைக்கும் வில்வமே பிரதானமானது கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பில்வாஷ்டகம் சொல்லி வில்வ பூஜை உண்டு தற்போது நிறைய சிவன் கோவிலில் வில்வம் என்று நொச்சி இலையை தான் அர்ச்சித்து வருகின்றனர். சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் வைத்தீஸ்வரன் கோவிலிலும் இந்த நிலை உண்டு .
   வில்வத்தில் 3,5,7,9, 11, 12, என்று இலைகள் இணைந்த தொகுப்பு உண்டு இதில் சில இடங்களில் 13 இலைகள் கொண்டது மகாவில்வம் .
            திதிகளில் பிரதமை துவிதியை என்று கணக்கிட்டில் 13 திதி சிவனுக்கு உகந்த திதி பிரதோஷ நாள் இந்த 13 இலை கொண்ட மகாவில்வாச்சனை செய்வது சிறப்பானது 13 இலை கொண்ட மகாவில்வத்தை கொண்டு சிவபூஜை செய்து இன்னும் சிறப்பானது 
          10, 13 முகம் கொண்ட ருத்ராட்சம் மனிதர்கள் அணிய கூடாது என்று சொல்வதுண்டு அதற்கு காரணம் அதை அணியும் தகுதி சிவனுக்கு மட்டுமே உள்ளது.
       பத்து இலை கொண்ட வில்வத்தை கொண்டு பத்து தலை ராவணன் சிவபூஜை செய்து சாகாவரம் பெற்றார். தசாவதாரம் பத்து என்று பத்தையும் பற்றியதால் பத்து முகம் ருத்ராட்சமும் மனிதர்கள் அணிய கூடாது. தற்போது கிடைப்பதும் மிக அரிது அதிக அளவில் மூன்று ஐந்து முகம் கொண்ட மரங்கள் தான் உள்ளது முன்பு ஒரு முகம் முதல் பல முகம் கொண்ட ருத்ராட்சம் இந்தியாவில் இருந்தது இந்த மரத்தின் அடர்வு காரணமாக ஆங்கிலேயர் இரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகளும் பயன்படுத்தியதால் பல அரிதான ருத்ராட்சம் மரங்கள் அ அழிந்து விட்டது. 
            இந்த 13 என்ற எண்ணை கண்டால் ஆங்கிலேயர்கள் கூட அலறி ஓடுவார்கள் இதற்கு பின்னால் இருப்பது இந்திய இலை ரகசியம் தான்! 
       உலகில் குள்ளமான சீனர்கள் எல்லாவற்றையும் குறைக்க முயற்சி செய்வார்கள் எல்லா நாட்டையும் குறைந்து மதிப்பிடுவார்கள் 13 னை 1+3=4 என்று குறைத்து 4 ஆம் எண்ணை பேய் எண் என்று சொல்லி பேய்யை கண்டது போல் பேய் போல் ஓடுவார்கள்.
         கோனேரி ராஜபுரம் உமாமகேசுவர் கோவிலில் தல விருட்சமாக இருப்பது இந்த 13 இலைகள் கொண்ட மகாவில்வமாகும் !
🌿மருத்துவ பலன்கள்:
 வில்வம் துவர்ப்பு சுவையுள்ள தழை ! துவர்ப்பு சுவையுள்ள பொருட்கள் அனைத்தும் இரத்ததை சுத்தம் செய்யும் துவர்ப்பு சுவை அதிகம் உண்ணும் போது உடலில் தேவையற்ற சக்கரை அளவை சரிசெய்யும் ஆற்றல் வில்வத்திற்கு உண்டு.
              ஆதிமூலனுக்கு உகந்த இந்த இலை மனித உடலில் மூலத்தை சரிசெய்யும்.
   🌿தினமும் மூன்று வேளை ஐந்து இலையுடன் சிறிது ஜிரகத்தை வைத்து சாப்பிட்டால் மூல நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
🌿 ஜூரம் தீர ஐந்து வில்வ இலைகளை மென்று சாப்பிட்டால் ஜூரம் தீரும் குழந்தைகளுக்கு இலையை அரைத்து வடிகட்டி ஒரு சங்கு அளவு கொடுத்தால் ஜூரம் தீரும்.
🌿 பெண்களுக்கு ஏற்படும் அதிக படியான உதிரப்போக்கை கட்டுபடுத்த வில்வ இலைகளை அரைத்து ஒரு அரை நெல்லிக்காய் அளவு மூன்று வேலையும் சாப்பிட்டால் மூன்று தினங்களில் நிற்கும்.
🌿 தோல் வியாதிகளுக்கு வில்வ இலை சிறிது ஜிரகம் பத்து மிளகு இவைகளை அரைத்து பசும் மோரில் கலந்து மூன்று மாதங்கள் குடித்து வந்தால் ஆண்டு கணக்கில் இருந்த தோல் நோயாக இருந்தாலும் சரியாகும்.
🌿 கண்பார்வை குறைபாடு கண் எரிச்சல் இருந்தால் வில்வ இலைகளை விளக்கெண்ணெய் அல்லது வெண்ணெய் போட்டு வதைக்கி கண்மீது வைத்து கட்டினால் கண் நோய் தீரும்.
🌿 வில்வ இலைகளை அரைத்து இளநீரில் கலந்து குடித்தால் இளைஞர்கள் உடல் நோய் தீரும்.
🌿 வில்வ பட்டைகளை சந்தனம் போல் இழைத்து முகத்தில் போட்டால் விளக்கு போல் ஜொலிக்கும்.
🌿 வில்வ இலைகளை நிழலில் காய வைத்து சித்தரெத்தை அதிமதுரம் மிளகு வெள்ளெருக்கு பூ இதழ்களை நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து வைத்து இரண்டு கிராம் எடையளவு தேனில் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா அடியோடு தீரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
🌿 சித்தமேறி பித்து பிடித்து பிடித்தவர்களுக்கு இரு மண்டலம் வில்வம் இலைகளை அரைத்து விழுங்க வைத்தால் சித்தம் தனியும். 
🌿 வயிற்றில் புண் வந்தால் அல்சர் நோய் இதை சரிசெய்ய வில்வம் இலைகள் மட்டுமே தினமும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து குடித்தால் போதும் இலைகள் கிடைப்பது அரிது என்றல் வில்வாதி லேகியம் என்று கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி சாப்பிடலாம் எல்லா வகையான இரைப்பை குடல் நோய் தீர வில்வாதி லேகியம் காலை மாலை சாப்பிடலாம் வயிற்றில் புண் வந்தால் நாக்கில் மாவு படியும் வயிற்று புண் வந்தால் முதலில் நாக்கில் மாவு படரும் அதை அலோபதி மருத்துவத்தில் டைப்ஃபாயிடு மீனவர் என்று சொல்வார்கள் நாம் உடனே மருத்துவர் பரிந்துரைத்த டோலோ 650-1000 வரை வீட்டமீன் மாத்திரை இல்லாமல் இஷ்டப்படி போட்டு ஏற்கெனவே புண்ணாகி போன இரப்பையை மேலும் ரணபடுத்தி விடுவோம் அடுத்து வயிறு எல்லாம் எரியுது பத்து நாட்கள் கழித்து கதறுவது வழக்கம் உடனே மருத்துவர் ஒரு இண்டோஸ்கோப் செய்து பார்த்து விடலாம் பார்த்து பெப்டிக் அல்சர் என ஒரு முழம் நீளத்திற்கு மருத்துகளை எழுதி தருவார்கள் இதை ஈஸியாக சரி செய்ய வில்வாதி லேகியம் காலை மாலை அரை நெல்லிக்காய் அளவு எடுத்து கொண்டால் போதும். 
            சித்த வைத்தியம் தற்போது செயல் படாமல் இருக்க காரணம் அந்த காலத்தில் நோய் வந்து வைத்தியரிடம் சென்றால் முதலில் பேதி மருந்து கொடுத்து முதல் நாள் உணவில் உள்ள உப்பு புளியை உடலை விட்டு விலக வைத்து மறுநாள் மருந்துகளை உப்பு புளி இல்லாமல் பத்தியம் இருக்க சொல்லி மருந்துகளை கொடுப்பார் விருந்து மருந்தும் மூன்று நாட்கள் ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் மருந்து உண்ண விரைவில் பலன் கிடைத்தது புளியை சேர்த்தால் தழைகளில் உள்ள மருத்துவ குணங்கள் முறிந்து விடும் வீட்டில் உடலுக்கு நல்லது என்று கருவேப்பிலை கொத்தமல்லி புதினா சட்னி அரைப்பது உண்டு அதில் சுவைக்கு புளியை சேர்த்து விடுவார்கள் ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி தயிர் போல் பலனை முறிந்து விடும் அதற்கு பதிலாக தற்போது நெல்லிக்காய் எல்லா நேரத்திலும் கிடைக்கிறது அதை அதேஅளவு அல்லது சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம் இலைகளில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
 வில்வ பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும் ஆனால் அதை சாப்பிடுவது கஷ்டம் பழத்தை தலைக்கு தேய்த்து குளித்தால் முடி உதிர்வது நிற்கும் அதுவே ஜெல் போல் இருக்கும்.
    வில்வ பூ வாசம் தாமரை பூ வாசம் போல் இருக்கும் மிகவும் ரம்மியமாக இருக்கும்.
 வில்வ இலை கொண்டு மகாலக்ஷ்மியை வழிபட்டால் மகா லக்ஷ்மி மனம் மகிழ்ந்து நமக்கு வேண்டியதை வேண்டிய படி அருள்வார் 

பகவத்கீதை

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை. 

43 அறிவுரைகள்! இதற்கு மேல் 
எவரும் அறிவுரை கூற இயலாது.

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 
13. அவ்வப்போது பரிசுகள் அளி. 
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே. 
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே! 
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு. 
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ 

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.

பசு.god

பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர்என்று தெரியுமா..?
தலை - சிவபெருமான் 
நெற்றி - சிவசக்தி 
வலது கொம்பு - கங்கை 
இடது கொம்பு - யமுனை 
கொம்புகளின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள். 
கொம்பின் அடியில் - பிரம்மன், திருமால் 
மூக்கின் நுனி - முருகன் 
மூக்கின் உள்ளே - வித்யாதரர்கள் 
இரு காதுகளின் நடுவில் - அஸ்வினி தேவர் 
இரு கண்கள் - சூரியன், சந்திரன் 
வாய் - சர்ப்பாசுரர்கள் 
பற்கள் - வாயுதேவர் 
நாக்கு - வருணதேவர் 
நெஞ்சு - கலைமகள் 
கழுத்து - இந்திரன் 
மணித்தலம் - எமன் 
உதடு - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
கொண்டை - பன்னிரு ஆதித்யர்கள் 
மார்பு - சாத்திய தேவர்கள் 
வயிறு - பூமிதேவி 
கால்கள் - வாயு தேவன் 
முழந்தாள் - மருத்து தேவர் 
குளம்பு - தேவர்கள் 
குளம்பின் நுனி - நாகர்கள் 
குளம்பின் நடுவில் - கந்தர்வர்கள் 
குளம்பின் மேல்பகுதி - அரம்பெயர்கள் 
முதுகு - ருத்திரர் 
யோனி - சப்த மாதர் (ஏழு கன்னியர்) 
குதம் - லட்சுமி 
முன் கால் - பிரம்மா 
பின் கால் - ருத்திரன் தன் பரிவாரங்களுடன்
பால் மடி - ஏழு கடல்கள் 
சந்திகள் - அஷ்ட வசுக்கள் 
அரைப் பரப்பில் - பித்ரு தேவதை 
வால் முடி - ஆத்திகன் 
உடல்முடி - மகா முனிவர்கள் 
எல்லா அவயங்கள் - கற்புடைய மங்கையர் 
சிறுநீர் - ஆகாய கங்கை 
சாணம் - யமுனை 
சடதாக்கினி - காருக பத்தியம் 
வாயில் - சர்ப்பரசர்கள் 
இதயம் - ஆகவணியம் 
முகம் - தட்சரைக் கினியம் 
எலும்பு, சுக்கிலம் - யாகத் தொழில்
அனைத்தும் பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.
ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள்.
அப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள்.
எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.
கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது’ என்று சொன்னது.
லட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.
லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள்.
அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.
ஓம் காமாதேனுவே போற்றி!

சாளக்கிராம_பூஜை


சாளக்கிராம_பூஜை


#செய்வதன்_பலன்கள் *

1. சாளக்கிராம பூஜை செய்பவன் 
    சித்தம் சுத்தமாகும்.

2. சாளக்கிராம பூஜை செய்பவன் 
    விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான்.

3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம்
   கொலை செய்தவனின் 
   பாபத்தையும் போக்கும்.

4. சாளக்கிராமத்தை நினைத்தாலும்,
    தரிசித்தாலும், பூஜை செய்தாலும்,
    சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள்
    தெறித்து ஓடுவதுபோல.
    பாபங்கள்கழன்றுஓடும்.

5. இதனை பக்தியுடனோ அல்லது 
    பக்தியேஇல்லாது அல்லது 
    எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய
    நேர்ந்தாலும்முக்திஉண்டு.

6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு 
   எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம்,
    நைவேத்தியம்
    இப்பூஜையினை_செய்பவர்கள்
    விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம்
    வாழ்வார்கள்.

8. சாளக்கிராமத்தை
    பக்தியுடன்_நமஸ்கரித்தவன்
    தேவனாகிறான்...! 
    அவன் சாதாரண மனிதன் 
    அல்லன்...!

9. சாளக்கிராமம்- பகவான் இருக்குமிடம். 
     சர்வ பாபங்களையும நாசம்_
     செய்யவல்லது.

10. பாபங்கள் செய்தவர்கள் கூட
      சாளக்கிராம பூஜையினால் பரகதி
     அடைகிறார்கள். பக்தியோடு 
     செய்பவர்கள் முக்தியடைகிறார்கள்.

11. அரணி கட்டையில் அக்னி
      உண்டாவதுபோல, சாளக்கிராமத்தில் 
      ஹரி இருக்கின்றார். லஷ்மி மற்றும்
      வைகுண்டத்தில் இருப்பதைவிட 
      ஹரி சாளக்கிராமத்தில் மிகவும்
      பிரசன்னமாகவே உள்ளார்.

12. சாளக்கிராமத்தை பூஜை செய்தால்  
     அக்னிஹோத்தரமும் பூதானமும் 
     செய்த பலன்.

13. இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும்,
     ஒரு நாள் சாளக்கிராமத்தை பூஜை 
      செய்த பலனுக்கு ஈடாகாது.

14. பன்னிரெண்டு சாளக்கிராமம் 
      கொண்டு பூஜை செய்தால் 
      பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை 
      பன்னிரெண்டு கல்பகாலம் 
      பூஜை செய்தபலன் 
      ஒரே நாளில் கிடைக்கும்.

15. காமக்குரோதம் உள்ள மனிதன்கூட
      சாளக்கிராம பூஜையினால் 
     முக்திபெறுவான்.

16.தீர்த்த யாத்திரையோ, யாகமோ
     செய்யாமலே சாளக்கிராம
      பூஜையினால் முக்தியடைவான்.

17. சாளக்கிராம தீர்த்தத்தாலே சர்வ 
      புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த
      பலனும், 
      சர்வ யக்ஞம் செய்த பலனும்
       கிடைத்துவிடும்.

18. பல புண்ணிய தீர்த்த தேவதைகள்
       சாளக்கிராமத்தில் சூட்சுமாமயிருந்து
       அருள்பாலிக்கின்றனர்.

19. விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம்
       செய்துகொண்டே சாளக்கிராம பூஜை
       செய்பவன் விஷ்ணுபதம் அடைகிறான்.

20. சாளக்கிராமம் இருக்குமிடத்தில் 
       சமஸ்த லோகங்களும், 
       சமஸ்த தேவதைகளும் இருப்பதாக 
       ஐதீகம்.

21.சாளக்கிராம தீர்த்தமே போதுமே நம்உள்ளும் புறமும் 
      சுத்தமாகுமே.

22. ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம்
       சாப்பிட்டாலே போதுமே, மீண்டும்
       பிறவாநிலை கிடைத்துவிடும்.

ஓம் நமோ நாராயணா

ஸ்ரீ குருவாயூரப்பன், guruvayoor, kerala

 கேரள மாநிலம், குருவாயூரிலுள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயத்தில், காலை 3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனம் காண பக்தர்கள் காத்துக் கிடப்பார்கள்.
ஆலயக் கதவு திறந்தவுடன் பக்தர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு, "அம்மே நாராயணா!' கிருஷ்ணா! குருவாயூரப்பா!' என்று அழைத்துக் கொண்டு திருச்சந்நிதி நோக்கி ஓடுவார்கள்.
அங்கு ஸ்ரீ குருவாயூரப்பன் முதல் நாள் இரவு சார்த்தப்பட்ட சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்களுடன் குழந்தைக் கண்ணனாகக் காட்சி தந்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைப்பான்.
ஓரிரு நிமிடங்களில் அவனது அலங்காரம் களையப்பட்டு, உடனடியாக தைலாபிஷேகம் நடைபெறும்.
தைலாபிஷேகம் செய்தவுடன் வாகை மரத்தின் பட்டையை இடித்துத் தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகை சார்த்து என்கிறார்கள்.
அதன்பின் தங்கக் குடத்திலிருக்கும் புனித நீரால் திருமுழுக்காட்டுகின்றனர்.
அதன்பின் அலங்காரம் செய்யப்படுகிறது.
திருமுடியில் மயில்பீலி அணிந்து, கையில் வெண்ணெய் ஏந்தி, சிறிய சிவப்புநிற கோவணம் (கௌபீனம்) தரித்து, புல்லாங்குழலுடன் பாலகோபாலனாக ஸ்ரீ குருவாயூரப்பன் பக்தர்களுக் குத் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறான்.
இந்த அபிஷேகத் தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த வாகை சார்த்து வழிபாடு பற்றி ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு காலத்தில், தாய்- தந்தை யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த காஷு என்ற பத்து வயது சிறுவன் தொடர்ந்தாற்போல் மூன்று தினங்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டதாம்.
பசியின் கொடுமையைத் தாங்கவியலாத அவன் அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி தன்னை மாய்த்துக் கொள்ள நினைத்தான்.
அப்போது நாரத முனிவர் அவன்முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த அட்சய பாத்திரத்திலிருந்து உணவு கிட்டும் என்று கூறினாராம்.
அவனும் அதிலிருந்து தேவையானபோதெல்லாம் உணவை வரவழைத் துச் சாப்பிட்டு பசியாறிக் கொண்டிருந்தான்.
இந்நிலையில் ஒருநாள் காஷுவுக்குப் பேராசை ஏற்பட்டது. மீண்டும் தான் தண்ணீரில் மூழ்குவதுபோல நடித்து, நாரத முனிவரை வரவழைத்து வீடு, செல்வம் போன்றவற்றை அடையலாம் என்று நினைத்தான்.
அதன்படி நதியில் சென்று அவன் மூழ்கியபோது நாரத முனிவரும் வரவில்லை; அட்சய பாத்திரத்தையும் காணவில்லை.
பேராசையால் தனக்கு நேர்ந்த துயரத்தை எண்ணிய காஷு, இறைவனின் புனிதப் பெயர்களை உச்சரித்து அவன் தியானத்திலேயே தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான்.
அவனது நிலையைக் கண்டு வருந்திய லட்சுமிதேவி, உடனடியாக அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்ட, அவரும் அதற்கு இணங்கினார்.
சுயநினைவை இழந்து மயங்கிக் கிடந்த காஷுவுக்கு பகவான் காட்சி கொடுக்க, அவன் எழுந்து நின்று தன்னை அவரது திருவடிகளில் ஆட்கொள்ளுமாறு வேண்டினான்.
திருமாலும் அதை ஏற்றுக் கொண்டு, ""கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது நான் குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனாகக் காட்சி தருவேன்.
ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் முடிந்தவுடன் என்னை வாகைத் தூளினால் தேய்த்து தூய்மை செய்வார்கள்.
அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய்.
இந்த வாகை சார்த்து நல்லெண்ணெய், வாகைப் பொடி அபிஷேகத் தீர்த்தம் மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர் களின் தோல் நோய்களும் தீரும்'' என்று கூறி சிறுவன் காஷுவையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.
இவ்வாறுதான் குருவாயூர் திருத்தலத்தில் குருவாயூரப்பனுக்கு "வாகை சார்த்து' வழக்கம் ஏற்பட்டதாம்

திருநீறு

ஓம் நம சிவாய
கோயிலில் திருநீறு கொடுப்பது ஏன், அது மந்திரமா தந்திரமா? - குளிக்காமல் திருநீறு பூசலாமா?

திருநீறு எனப்படுவது மறைமுக மந்திர மருந்தாகப் பார்க்கப்படுகிறது. திருநீறு பல்வேறு நோய்களை போக்கக்கூடியதாக உள்ளது.திருநீறு எப்படி உருவாகிறது?அறுகம்புல்லை உண்ணும் பசுமாடு போடும் சாணத்தை உருண்டையாக்கி அதனை காயவைத்து எடுக்க வேண்டும். அதனை உமியில் மூடி வைத்து புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது அந்த சாணம் வெந்து திருநீறு எனும் அருமருந்து தயாராகி விடும். இப்படி தயாராவதே உண்மையான திருநீறாகும்.
    

திருநீறு எனப்படுவது மறைமுக மந்திர மருந்தாகப் பார்க்கப்படுகிறது. திருநீறு பல்வேறு நோய்களை போக்கக்கூடியதாக உள்ளது.

திருநீறு எப்படி உருவாகிறது?
அறுகம்புல்லை உண்ணும் பசுமாடு போடும் சாணத்தை உருண்டையாக்கி அதனை காயவைத்து எடுக்க வேண்டும். அதனை உமியில் மூடி வைத்து புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது அந்த சாணம் வெந்து திருநீறு எனும் அருமருந்து தயாராகி விடும். இப்படி தயாராவதே உண்மையான திருநீறாகும்.
​திருநீறு நன்மைகள்

நம்மை சுற்றி நல்லது கெட்டது என பல்வேறு அதிர்வுகள் இருக்கின்றன. நம்மை அறியாமல் நம் உடலுக்குள் அந்த எல்லா அதிர்வுகளும் சென்று வருகின்றன.

அருகம் புல் திருநீறு நம்மை சுற்றி இருக்கும் நல்ல கதிர்களையும், அதிர்வுகளை மட்டுமே உள்வாங்கும் திறனைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக நம் உடலில் பல்வேறு இடங்களில் திருநீறு இட்டுக் கொள்வதன் மூலம் அந்த நல்ல அதிர்வுகள் நம் உடல் ஏற்றுக் கொள்கின்றது.

திருநீறு உடலின் சில பாகங்களிலாவது அணிய வேண்டும் என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக நம் உடலில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வுகளை கொண்டுள்ள நெற்றியில் அணிவது மிகவும் அவசியம். நம் உடலிலேயே நெற்றி மிக அதிகமாக வெப்பத்தை உள் வாங்குவதும், வெளியிடும் பாகங்களாக இருக்கின்றன. இதன் காரணமாக நாம் நெற்றியில் திருநீறு அணிவது மிகவும் அவசியம். நெற்றி முழுவதும் நாம் திருநீறு அணியலாம். அல்லது நெற்றி பொட்டில் நாம் அணிவது அவசியம்.

அப்படி திருநீறு பூசும்போது சூரியக் கதிர்களின் சக்தியை நம் உடலினுள் இழுக்க பயன்படுகிறது. இதனால் நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களை தீர்க்கக் கூடிய அறுமருந்தாக மாறுகிறது.

​திருநீறு எப்படி மருந்தாகிறது?

பசு மாட்டுச் சாணத்தை எரிப்பதால் திருநீறு உருவாகும். அதாவது மாடு அறுகம் புல் உள்ளிட்ட புல் வகைகளை உண்ணுகிறது. அதனை தன் உடலினுள் தேற்றி வைத்து பின் சாணம் போடும். அந்த சாணம் தீயிட்டு எரிக்கும் போது உருவாகும் சில ரசாயன மாற்றங்கள் நம் உடலுக்கு தேவையான நன்மையை கொடுக்க வல்லது.

நெற்றி பகுதி மிக நுண்ணிய நரம்பு அதிர்வுகளை கொண்டுள்ளதால் அதை வைத்து சில மனோ வசியம் செய்ய முடியும். அப்படி மன வசியத்தை தடுக்கும் ஆற்றல் திருநீறு, சந்தனத்திற்க்கு உண்டு.

திருநீறு பயன்கள்

திருநீறு இடும்போது நல்ல கதிர்களை ஈர்த்து உடலுக்கு கொடுப்பதைப் போல, சந்தனம் நம் உடலிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை நீக்குகிறது. அதே வெளியிலிருந்து வரும் வெப்பத்தையும் தடுக்கிறது. இதனால் வெப்ப மிகுதியால் ஏற்படக்கூடிய மூளை சோர்வு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

நாம் நம் விரலை நெற்றி பொட்டில் பட்டும் படாமல் சிறிது நேரம் வைக்க நம் மனம் ஒருநிலைப்படுவதை உணரலாம். அப்படிப்பட்ட மன ஒருநிலைப்பாட்டை அதிக நேரம் நீடிக்க வைக்கும் வல்லமை திருநீறுக்கு உண்டு. இதனால் தியானம் செய்த மன ஒருநிலைப்பாடு, பயன், சிந்தனைத் தெளிவு ஏற்படும்.

​திருநீறு சித்தாந்தம்:

திருநீறு சித்தாந்தம்:

திருநீறின் பயன்பாட்டை சரியாக சொல்லி புரிய வைக்க முடியாது, அதை அனைத்து தலைமுறையினரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான், நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை அணியும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, மனிதம் மிகவும் நம்பக்கூடிய கடவுள் நம்பிக்கையுடன் இணைத்தான்.

மதத்தை காட்டி விஞ்ஞானத்தை அதில் வைத்ததினால் இன்றும் நாம் திருநீறு அணியும் நல்ல பழக்கத்தை வைத்துள்ளோம்.

திருநீறு பூசும் இடங்களும் பயன்களும்:

புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) - ஞானத்தை ஈர்க்க வல்லது.

தொண்டைக்குழியில் பூசுதல் (விசுத்தி சக்கரம்) - நம் சக்தி அதிகமாகும்.

நெஞ்சுக்கூட்டின் மத்தியில் திருநீறு தரித்தால் நம் உடல் தெய்வீக அமைப்பை பெறும்.

​எப்படி அணியலாம்:

எப்படி அணியலாம்:

திருநீறு மோதிர விரலாம் எடுத்து பூச வேண்டும். மோதிர விரல் நம் உடலின் பவித்திரமான பாகமாக பார்க்கப்படுகிறது.

திருநீறு நாம் குளித்த பின்னர் பூசுவது தான் மிக சரியான முறை. சில விதிவிலக்காக வயோதிகம், உடல்நலக்குறைவு, ஆபத்து காலத்தில் குளிக்காமல் பூசுவது தவறில்லை. நம் உடல் தூய்மையை விட உள்ளத்தூய்மை மிக முக்கியமானது.

இருப்பினும் சோம்பலின் காரணமாக அதையே வாடிக்கையாக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

திருநீறு அருமருந்து என்பதை உணர்ந்து இனியேனும் நாம் அன்றாட திருநீறு அணிவதை பழக்கமாக மாற்றிக்கொள்வோம்.. 

ஓம்நம சிவாய

இராமகிரி

இராமகிரி

பிரதோஷம் நடைபெறாத சிவதிருத்தலம் 
சென்னையில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருட்டப்பள்ளியை அடுத்து தற்போது இராமகிரி என்றழைக்கப்படும் திருக்காரிக்கரை என்னும் ஊர் உள்ளது. இங்கு மூலவராக வாலீஸ்வரர் அருள்கிறார். அம்பாளின் திருநாமம் மரகதாம்பாள் என்பதாகும். பஞ்ச பிரம்ம திருத்தலங்களில், சிவபெருமானின் ஈசான முகத்திற்குரிய திருத்தலமாக விளங்குகிறது இத்திருத்தலம். இந்த திருத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனி, வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்திக்கும், சிவலிங்கத்திற்கும் நடுவே அனுமன் வீற்றிருப்பது அபூர்வமான அமைப்பாகும். 
இராவணனை வதம் செய்ததால், இராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷத்தை போக்கிக் கொள்வதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட நினைத்த இராமபிரான், அதற்காக சிவலிங்கம் கொண்டுவர அனுமனை காசிக்கு அனுப்பினார். அனுமனும் காசிக்குச் சென்று அங்கிருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு திரும்பினார்.
ஆனால் காசியின் காவல் தெய்வமாக இருக்கும் காலபைரவரின் அனுமதியை அனுமன் கேட்காமல் சிவலிங்கத்தை எடுத்து சென்றதால் அனுமனை, பைரவர் தடுத்து நிறுத்தினார். அதே நேரத்தில் தேவர்கள் பலரும் அங்கு வந்து, இராமரின் பூஜைக்காக சிவலிங்கம் தேவைப்படுவதைக் கூறி, அனுமனை செல்ல அனுமதிக்கும்படி வேண்டினர். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காலபைரவர், அரைமனதுடன் அனுமன் சிவலிங்கத்தை எடுத்துச்செல்ல அனுமதித்தார்.
இருந்தாலும் காலபைரவரின் மனம் சமாதானம் ஆகவில்லை. எப்படியாவது சிவலிங்கத்தை மீட்க வேண்டும் என்று நினைத்தார். சூரிய பகவான் மற்றும் வருணபகவான் துணையுடன் அனுமனுக்கு கடுமையான தாகம் ஏற்படும் படிச் செய்தார். அதனால் சிவலிங்கத்தை கொண்டு செல்லும் வழியில் தாகத்தால் அனுமன் தவித்தார்.
அப்போது கங்கா தேவியிடம், “அனுமன் செல்லும் வழியில் ஒரு நீர்நிலையை ஏற்படுத்தவேண்டும்” என்று காலபைரவர் கூறினார். அதன்படியே கங்காதேவி அங்கே ஒரு குளத்தை ஏற்படுத்தினாள். குளத்தைக் கண்டதும் அனுமனுக்கு உற்சாகம் பெருக்கெடுத்தது. அந்த வேகத்திலேயே அவருடைய உற்சாகம் வடிந்தும் போனது. கையில் வைத்திருக்கும் சிவலிங்கத்தை யாராவது வாங்கிக் தண்ணீர் அருந்தமுடியும்? அனுமன் சுற்று முற்றும் பார்த்தார். அதற்காகவே காத்திருந்த காலபைரவர், ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு அனுமன் முன்பாகத் தோன்றினார்.
அந்தச் சிறுவனிடம் சிவலிங்கத்தைக் கொடுத்த அனுமன், “எக்காரணத்தைக் கொண்டும் சிவலிங்கத்தைக் கீழே வைக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு தண்ணீர் அருந்தச் சென்றார். அனுமன் அந்தப் பக்கம் போனது தான் தாமதம், சிறுவனாக வந்த காலபைரவர் சிவலிங்கத்தை தரையில் வைத்துவிட்டு மறைந்து விட்டார்.
திரும்பி வந்து பார்த்த அனுமன், தான் கொண்டு வந்த சிவலிங்கம் தரையில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அந்தச் சிவலிங்கத்தை கைகளால் எடுக்க முயன்றார். அவரால் எடுக்க முடியவில்லை. வாலினால் கட்டி இழுக்க முயன்றார். ஆனாலும் இயலவில்லை. தன்னிடம் இருந்து சிவலிங்கத்தைப் பெற்று கீழே வைத்தது காலபைரவர்தான் என்பதை உணர்ந்துகொண்ட அனுமன், காலபைரவரை வழிபட்டு அவருடைய அருளால் மற்றொரு சிவலிங்கத்தைப் பெற்றுக்கொண்டு இராமேஸ்வரம் சென்றதாகத் தலவரலாறு கூறுகிறது.
‘தனக்கு இப்படி ஒரு நிலை இந்தக் குளத்தால் தானே ஏற்பட்டது’ என்ற கோபத்தில், அனுமன் அங்கிருந்த சிறு மலையைப் பெயர்த்து குளத்தில் வீசினார். இராமபிரானின் வழிபாட்டுக்காக அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் அந்த மலை மீது பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த இடத்திற்கு இராமகிரி என்றும் பெயர் ஏற்பட்டது.
அனுமன் வாலினால் கட்டி இழுத்ததால், இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் ‘வாலீஸ்வரர்’ என்னும் திருப்பெயர் கொண்டார். இறைவனின் சன்னிதிக்கு நேராக ஆஞ்சநேயரும், அவருக்கு அடுத்தபடியாக நந்திதேவரும் காட்சி தருகிறார்கள். நந்தியின் வாய் பகுதியில் இருந்து நீர் சுரந்தபடியே இருக்கிறது. எந்த காலத்திலும் வந்துகொண்டே இருக்கும் இந்த நீர், மலையின் உச்சியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. 
இந்தத் திருத்தலத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டைக்குக் காரணமாக இருந்த காலபைரவர், சந்தான பிராப்தி பைரவராக அருள்கிறார். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையைக் கொண்டு வந்து பைரவருக்கு கொடுத்து விட்டு, பிறகு பைரவரின் வாகனமான நாய் உருவத்தை விலையாகக் கொடுத்து திரும்பவும் குழந்தையைப் பெற்றுச் செல்கிறார்கள். ‘திருக்காரிக்கரை’ என்ற பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் திருத்தலத்தை, ‘கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்' என்று வைப்புத்தலமாக வைத்துப் பாடி இருக்கிறார். சிவபெருமானுக்கு முன் நந்தி இல்லாததால் இங்கு பிரதோஷ வழிபாடு நடைபெறுவதில்லை.
கோவிலுக்கு வெளியில் ஒரு தீர்த்தக் குளம் இருக்கிறது. அந்த தீர்த்தக் குளத்தின் ஒரு கரையில் இருக்கும் நந்தி சிலையின் வாயில் இருந்து, தீர்த்தக் குளத்துக்குள் தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தீர்த்தம் ‘நந்தி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் இருந்து வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டிக்கொண்டு இருக்குமாம். இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. தண்ணீர் சுவையாக இருக்கும். நோய்களை குணப்படுத்தி ஆரோக்கியம் தரும் வல்லமை மிக்கதாக இத்தீர்த்தம் உள்ளது என்கிறார்கள்.  
ஓம் நமசிவாய.

80 ஆன்மீக குறிப்புகள்,god praying methods

*80 ஆன்மீக குறிப்புகள்*

1. தினசரி காலையும், மாலையும் தூய
மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள்
பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க
வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம்,
தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த
மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம்,
கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி,
குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி,
வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித
நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை
அண்டாது. தூய்மையான காற்றும்
கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக
வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை
இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து
வைக்காதீர்கள். இது இறை சக்தியைக்
குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள்
ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு
பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம்
ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால்,
அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை
சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில்
பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ
வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக
இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.
அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற
பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும்
இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி
இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது
உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது
துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில்
வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம
நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய்
தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல்
பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது.
இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல்
கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும்
இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத
பூக்களைக் சூடக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள்
வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும்,
விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே
குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம்
அணைக்கக் கூடாது.

16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு
மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை
மணி முதல் ஆறு மணிக்குள் தீபம்
ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும்
நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும்
எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில்
விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய்,
இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை
ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி
பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர
சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ
ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி
வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை
ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான்
விளக்கேற்ற வேண்டும்.

20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில்
பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி
தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட
வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப்
படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை
சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால்,
சிறந்த பலன் கிடைக்கும்.

22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக்
கூடாது.

23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில்
காலையில் தினமும் கேட்பது நல்லது.

24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது
நின்றவாரே தொழுதல் குற்றமாகும்.
அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்ப
ோது காலை, மாலை வேளைகளில்
விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த
பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.
தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய்
உடைக்கக் கூடாது.

26. பூஜையின்போது விபூதியை நீரில்
குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள்
மட்டுமே விபூதியை நீரில் குழைத்து
பூசலாம்.

27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும்
இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது
பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால்
மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப்
பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.

29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல்
உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல்
கூடாது.

30. ஈர உடையுடனும், ஓராடையுடனும்,
தலைகுடுமியை முடியாமலும்,
தலையிலும், தோளிலும் துணியை
போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ
வழிபாடு செய்யக் கூடாது.

31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர
உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி
உதறி உதடுத்தலாம்.

32. சுப்ரபாதத்தை தினமும் காலை
வேளையில் மட்டுமே கேட்க வேண்டும்.
அவ்வாறு கேட்க முடியாத நிலையில்
மாலையில் கேட்பது அவ்வளவு
உசிதமானதில்லை எனப்படுகிறது.

33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க
தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே
வெற்றிதான். காலையில் விழித்தவுடன்
நாராயணனையும் இரவு தூங்கு முன்
சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி
தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில்
தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில்
எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம்
ஏற்றி வைக்கலாம்.

35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய
வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து
கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல்
இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

37. காலையில் நின்று கொண்டு செய்யும்
ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில்
உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால்
பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது
கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை
எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.

39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள்
அணைக்கக் கூடாது.

40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது
தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.

41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு
பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி
வைக்கக் கூடாது.

43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட
துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு
நிவேதனம் செய்யக்கூடாது.

44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும்.
மா இலை தோரணங்களுக்கு பதிலாக
பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால்
மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின்
வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு
வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது.
யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து
கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக்
கொள்கிறார்.

48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும்
துளசியை கையில் வைத்துக் கொண்டு என்
பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின்
தொடர்ந்து செல்வேன் என பகவான்
கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில்
துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை
அவருக்கு உண்டு.

49. தெய்வங்களுக்கு நிவேதனம்
செய்யும்போது வெற்றிலை மற்றும்
பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2,
4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு,
வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள்,
தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில்
நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற
பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில்
வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில்
வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம்
செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல
மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள்
போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும்.
நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில்
ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில்
போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட
வேண்டும்.

53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்
வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி
கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை
ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி
இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது
என்பார்கள்.

54. உறவினர்களை வெளியூர் செல்ல
வழியனுப்பிய பிறகு பூஜை,
முதலியவைகளை செய்யக் கூடாது.

55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம்,
திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை
வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும்.
வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம்
கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம்
பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள்
ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம்
இட்டுக் கொள்ள வேண்டும்.

57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப்
போட்டு கட்டாயம் வைக்க வேண்டும்.
ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும்
வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால்
சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களை
யும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு
குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி,
குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து
விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு
நல்லது.

59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு.
காலையில் எழுந்ததும் துளசியைத்
தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம்
கொடுக்கும்போது சிறிது துளசியுடன்
தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு
தரப்படாத தானம் வீண்.

60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப்
படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க
வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக்
கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை
எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு
வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில்
எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த
அளவு பாக்கு வைக்க வேண்டும்.

61. வெற்றிலை நுனியில் லட்சுமியும்,
மத்தியில் சரவஸ்தியும், காம்பில்
மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே
வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு
வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு
வைக்க வேண்டும்.

62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு
இடது புறம் வருமாறு வைக்க வேண்டும்.
அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி
சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை
போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை
போடும் போது வாழை மரத்திலிருந்து
நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது
பக்கம் வரவேண்டும்.

64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு
முன் தான தருமம் செய்வதென்றால் செய்து
விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம்
செய்யாதீர்கள்.

65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும்
ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல
பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து
முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.
தலையை விரித்து போட்டு இருந்தால்
லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

67. பூஜை செய்யும்போது கடவுள்
உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப்
பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும்,
பாதமும் திறந்து நிலையில் இருக்க
வேண்டும்.

68. செல்வத்திற்குரிய தெய்வங்களான
வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர்
படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து
இருக்குமாறு மாட்டக்கூடாது.

69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப்
படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும்.
வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத்
திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம்.
தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக்
கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால்
தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப்
பார்த்து படங்களை வைக்கவும்.

70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு,
தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து
கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

71. பூஜை அறையில் அதிக படங்களையும்,
தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம்
என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக்
கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும்
இடையில் போதிய இடம் விட்டு வைக்க
வேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில்
சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு
நிவேதனம் செய்யக்கூடாது.

73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர்
பாத்திரங்களில் நேரடியாக வைத்து
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை
வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட
விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும்
விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு
செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது
நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு
அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும்
கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு
வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது
லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு
வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு
கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே
உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம்
சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது
வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி
வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும்
உதவும். வெளியே செல்லும்போது சட்டைப்
பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து
சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி,
தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

⚛️⚛️⚛️⚛️⚛️.

சக்தி வாய்ந்த ஆறு_சிவ_மந்திரங்கள்

*சக்தி வாய்ந்த ஆறு_சிவ_மந்திரங்கள்* .

*🔯இதை சொன்னாலேயே எல்லாமே கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது.*

1.பஞ்சாக்ஷர சிவ மந்திரம்:
*****************************
"ஓம் நமசிவாய"

 இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.

2.ருத்ர மந்திரம் :
******************
"ஓம் நமோ பகவதே ருத்ராய"

3.சிவ காயத்ரி மந்திரம் :
**************************
"ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்"

4.சிவ தியான மந்திரம்:
*************************
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.

5.மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:
*********************************
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

6.கபாலி மந்திரம்:
********************
"ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்"
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

Rudratsam,ருத்ராட்சம்,

ருத்ராட்சம்
ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். அல்லது இந்த ஜென்மத்தில் மஹா புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் மட்டுமே அணிவதற்கு இறைவன் கருணை செய்வார். 
இவ்வுலகில் பிறந்த அனைவரும் ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் ஜாதி மதம் பேதம் இல்லாமல் யார் வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம் பயப்பட வேண்டாம்.
ருத்ராட்சத்தின் மகிமையை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். பல யுகங்களாக ஆன்மிக அன்பர்களுக்கு பல்வேறு வகையில் ருத்ராட்சம் பலன்களை கொடுத்துக் கொண்டிருந்தாலும், அது தோன்றிய வரலாறு என்பது மிகவும் சுவாரஸ்யமானது. 
முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து, இது என்ன பழம் இப்பழத்தை இது வரை நான் பார்த்ததில்லையே என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு நாரதா பூர்வ காலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் சர்வ வல்லமை படைத்தவனாகவும்,பிரம்மனிடம் வரம் பெற்றவனாகவும் இருந்தான்.அந்த கர்வத்தினால் சர்வ தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் என்னிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டினார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் முறையிட்டோம்.
அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரேசக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல 1000 ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் (தியானம், தவம்) சிந்தனையில் ஆழ்ந்தார்.
அப்போது மூன்று கண்களையும் அவர் மூடும்போது, பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்சமரமாக உண்டானது. அந்த ருத்ராட்சம் மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது, என்று மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார். பக்தியுடன் அதை அணிபவரை எப்பொழுதும் கண்போலக் காப்பாற்றுவார் . எனவே அனைவரும் ஒரு ஐந்து முகம் ருத்ராட்சம் கழுத்தில் எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாமா?
ஆமாம்! ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும், இல்லறத்தில் ஈடுபடும் போதும், பெண்கள் மாதவிடாய் காலத்திலும், இறப்பு வீட்டிற்கு போகும் போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபுராணம் தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் மேன்மையும், வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். 
பெண்கள் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியவேண்டும்.. 
எல்லா காலத்திலும் எல்ல வயதினரும் எல்லா நேரங்களிலும் அணிந்து கொண்டே இருக்கலாம் இதனால் பாவமோ தோஷமோ கிடையாது. ருத்ராட்சம் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...