Wednesday, August 30, 2023

கடவுள்_நம்_வாழ்க்கையில்

 கடவுள்_நம்_வாழ்க்கையில்

ஆழமான சிந்தனையுடன் படித்து உணர்ந்து மகிழ்வோம்
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்
வெறுங்கையோடு பார்க்கப் போகாதே
ஏதாவது கொண்டு போ என்றார்கள்
குசேலனின் அவல் போல் இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்
மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்
ரொம்ப உயரம் போலவே
ஏற முடியுமா என்னால்
மலையைச் சுற்றிலும் பல வழிகள்
மேலே போவதற்கு
அமைதியான வழி
ஆழ்ந்த தியானத்தி்ன் வழி
சாஸ்திர வழி
சம்பிரதாய வழி
மந்திர வழி
தந்திர வழி
கட்டண வழி
கடின வழி
சுலப வழி
குறுக்கு வழி
துரித வழி
சிபாரிசு வழி
பொது வழி
பழைய வழி
புதிய வழி
இன்னும்...இன்னும்
கணக்கிலடங்கா
அடேயப்பா
எத்தனை வழிகள்
ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி
கண்டுகொள்ளவில்லை
சில வழிகாட்டிகள்
என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை
ஒதுக்கினர் சிலர்
'நான் கூட்டிப் போகிறேன் வா
கட்டணம் தேவையில்லை
என் வழியி்ல் ஏறினால் போதும்
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு
என கை பிடித்து இழுத்தனர் சிலர்
மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்
உனக்குப்பதில் நான் போகிறேன்
கட்டணம் மட்டும் செலுத்து
என சிலர்
பார்க்கணும் அவ்ளோதானே
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்
அது போதும்
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்
ஆணவ அதிகாரத்துடன் சிலர்
அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது
உன்னால் ஏறமுடியாது
தூரம் அதிகம் திரும்பிப்போ
அவரை என்னத்துக்குப் பார்க்கணும்
பார்த்து ஆகப்போறது என்ன
அதைரியப்படுத்தினர் சிலர்
உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை
ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்
அது ஒரு வழிப்பாதை
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது
அப்படியே போக வேண்டியதுதான்
பயமுறுத்தினர் சிலர்
சாமியாவது பூதமாவது
அது வெறும் கல்
அங்கே ஒன்றும் இல்லை
வெட்டி வேலை
போய் பிழைப்பைப் பார்
பாதையை அடைத்து வைத்துப்
பகுத்தறிவு பேசினர் சிலர்
என்ன செய்வது
ஏறுவதா
திருப்பிப் போவதா
குழம்பி நின்ற என்னிடம்
கை நீட்டியது
ஒரு பசித்த வயிறு
கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்தக் கையில் வைத்தேன்.
மவராசனா இரு
வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்
நன்றியுடன் எனை நோக்கிய
அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து
புன்னகைத்தார் கடவுள்.
இங்கென்ன செய்கிறீர்
நான் இங்கேதானே இருக்கிறேன்
அப்போ அங்கிருப்பது யார்
மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்
ம்ம்ம் அங்கேயும் இருக்கிறேன்
எங்கேயும் இருப்பவனல்லவா நான்
இங்கே எனைக் காண முடியாதவர்
அங்கே வருகிறார்
சிரமப்பட்டு
ஆனால் திணறினேன்
இது உமது உருவமல்லவே
அதுவும் எனது உருவமல்லவே
எனக்கென்று தனி உருவமில்லை
நீ என்னை எதில் காண்கிறாயோ
அது நானாவேன்
அப்படியென்றால்
வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே
பசித்த வயிற்றோடு கைநீட்டியவன்
உணவளித்த உன் கண்களில்
காண்பதும் எனையே
தருபவனும் நானே
பெறுபவனும் நானே
நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்
என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..
மனதுதான் வேண்டும்.
அப்போ உனைப் பார்க்க
மலை ஏற வேண்டாம் என்கிறாயா?
குழப்பத்துடன் கேட்டேன்.
தாராளமாக ஏறி வா
அது உன் விருப்பம்
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே
அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.
கடவுளே'...விழித்தேன்...
எனக்குப் புரியவில்லை...
புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல...
உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்...
என்னைக் காண
நீ சிரமப்பட்டு
மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...
பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...
நீ இருக்குமிடத்திலேயே என்னை காண்பாய்
#புன்னகைத்தார்_கடவுள்
திருச்சிற்றம்பலம்
சிவ ஓம் நமசிவாய

Lord Shiva, Lord Shiva 🙏🌺🙏
#கடவுள்_நம்_வாழ்க்கையில்
Let us read and understand with deep thought and enjoy
God was sitting on the top of the mountain
Don't look empty handed
They said take something
Leaving after finishing up Kusselan's Aval
Standing on the hills in the hills
Just like so tall
Can I climb
So many ways around the mountain
To the top
The way to calm
The path of deep meditation
The Shastra way
The formal way
The magical way
The tricky way
Payment way
The hard way
The easy way out
Short way
The fastest way out
The recommendation way
The public way
The old way
A new way
And yet... Still more
It's countless
Oh my god!
How many ways
A guide in everything
Not noticed
Some of the guides
You don't deserve to climb my way
Some of the people who have reserved
'I will take you come on
No fees required
Just get in my way
I need to count how many people climbed my way
Some people pulled me by holding my hand
You don't want the difficulty of climbing up
I'm going in your instead
Just pay the fees
Some of my people
Have to see that's all
Showing it from here see
That's enough
Only we can climb all that
Some people with arrogant power
You can't go there all
You can't climb
Distance go back more
What to see him for
What is going to happen by seeing
Some people who did it amazing
Really not far you see
If you climb you must keep climbing
That is a way of way
Once you start climbing you can't return
It has to go as it is
Some of them are scared
Is it a god or a demon
It was just a stone
There is nothing in there
Useless work
Go and see survival
Keeping the path blocked
Some people spoke rationalism
What to do
To climb
Shall I go back
Confused with me
Stretched the hand
A hungry stomach
What was brought to God
I put it in that hand.
Be a king
I saw a greeted face
Thankfully towards me
From those fungled eyes
God smiled.
What are you doing here
I am right here
Then who is there
Stretched my hand towards the mountain top
Mmmm been there too
I am not the one who is everywhere
Who can't find me here
There he comes
With a lot of difficulties
But I struggled with it
This is not your image
That is also not my image
I don't have a separate image
What do you find me in
That would be me
That means
I'm the one you know in the eyes of greeted
The man who extended his hand with a hungry stomach
In your eyes that fed you
Seeing is also myself
I am also the giver
I am the one who gets it
I'm everywhere and in everything
I don't need eye to get my darshan..
The heart is what is needed.
To see you then
You mean no to climb a mountain?
Heard it with confusion.
Come on up freely
It's your choice
I said I am there too
You can see me there too.
Oh my God'... Woke up ...
I don't understand...
It's not that hard to understand...
If you live only for yourself...
To see me
When you go hard
Gotta climb the mountain to the top...
If you lived for other lives...
You will find me where you are
#புன்னகைத்தார்_கடவுள்

Some ways to increase wealth ஐஸ்வர்யம் பெருக

 ஐஸ்வர்யம் பெருக சில வழிமுறைகள்

1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்க்கவும்.
2. குளித்தபின்பு முதுகை முதலில் துடைக்கவும். பின்பு, முகத்தை துடைக்கவும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.
3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது. பணப்பெட்டியில் பச்சை கற்பூரம் வைக்க வேண்டும்.
4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டு கொண்டு தான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.
5. இரவில் தயிர் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
6. பூஜை அறையில் பழனியாண்டவர் படம் வைப்பதாக இருந்தால், ஆண்டியின் கோலமான வடிவம் இருப்பின் அதற்கு பதில் ராஜா அலங்கார காட்சி படம்வைத்து இருப்பது வைக்கவும்.
7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் . தஷ்ணா மூர்த்தி.மகாலட்சுமி. படம் வைக்கவும்.
8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர்.மகா லட்சுமி படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும். பூஜை அறையில் பழுதடைந்த கிழிந்த கண்ணாடி உடைந்த. பிளாஷ்டிக் படங்களை வைப்பது தவறு. முடிந்தவரை லேமினேஷன் இல்லாமல் கண்ணாடி போட்ட படங்களை பூஜிப்பது சிறப்பு.
9. படத்திற்கும், கல்லாபெட்டிக்கும் அல்லது பீரோவிற்கும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.
10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
11. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.
12. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும்.அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படமோ. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி விநாயகர் படமோவெல்லாம் மாட்டக் கூடாது. மிகப்பெரிய தவறு.
13. ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மூப்பெரும் தேவியான சித்தர் தலைவி வாலை பாலா திரிபுரசுந்தரி மந்திரம் அல்லது தங்கள் ஆத்மமூர்த்தியின் மூலமந்திரம் கூறவும். அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும். அதன்பின் பொருள்செல்வம் தானே வரும்.

Some ways to increase wealth
1. See palms when you wake up in the morning.
2. Wipe your back first after taking a bath. Then, wipe the face off. When you start after bathing, the goddess of Goddess will take place in the body first. Then only Lakshmi will come.
3. Lungis called Kylies should not be worn during worship or worshiping God. Green camphor should be kept in money box.
4. Left hand should always touch interest while eating. Shouldn't say knock the interest. That's the right word for the applause.
5. Curd should not be added at night.
6. If Palaniyandavar is keeping picture in the puja room, if the aunty has a rangual shape, instead keep the Raja decoration scene picture.
7. Ezhumalaiyan looks at the doorstep of the house. Dashna Murthy. Mahalakshmi. Put the picture up.
8. Maha Sornakarshana Bhairavar's movie and Aishwareshwarar. Maha Lakshmi movie should also be kept compulsory. Broken torn glass in puja room. Putting up plastic pictures is wrong. It is better to worship pictures with glasses without lamination as much as possible.
9. Jasmine flower is a must for picture, call box or bureau. Jasmine Lakshmi's favorite flower.
10. When you give money to someone, you have to pay the head part so that you have it.
11. Lakshmi, Kuberar mantras should be recited daily, or someday "Om Aishwaraya Nama" as Mahan Thirumoolar said. This must be said when putting jasmine flower.
12. Remove the Bhootham picture which says Kannashishti picture in front of the house and trap Vinayagar and Murugar pictures. Only then will the goddess be seen. Apart from that the monster movie. Vinayaka's angry eyesight Vinayagar movies should not be caught. The biggest mistake.
13. Recite the Moolamantra of the elder Devi Siddhar Thalaivi Valai Bala Tripurasundari at least once a day. Then only Arulselvam will come first. After that money will come automatically.

Sunday, August 27, 2023

டாஸ்மாக்

டாஸ்மாக்
நேற்று டாஸ்மாக்கில் RC விஸ்கி கேட்டு நின்றேன். விஸ்கி இல்லை. 1848 என்ற விஸ்கி இருப்பதாகச் சொன்னார்கள். முன்பு ஒருமுறை அதை முயற்சி செய்த அனுபவம் இருப்பதால் வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். என்ன குடிக்கலாம் என யோசித்தபோது உடன் வந்த நண்பன் Chevalier பிராந்தி எடுக்கச் சொன்னான். பல வருடங்களுக்குப் பிறகு பிராந்தி பக்கம் திரும்பினேன்.

இரவு பதினோரு மணிவரைக்கும் பேசிக்கொண்டே இருவரும் மது அருந்தினோம். பிராந்தியின் சுவையை என்னால் ரசித்து அனுபவிக்க முடியவில்லை. பெர்ஃபியூமில் தண்ணீர் கலந்து குடித்தால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது மணமும் சுவையும். ஒரு மிடற் கூட என்னிஷ்டப்படி இறங்கவில்லை. ஒரு குவாட்டர் மற்றும் இரண்டு அவுன்ஸ் குடித்திருப்பேன். அதற்குமேல் ம்ம்ஹூம். இரவு உணவு முடித்து அரை சொம்பு அளவுக்குத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தேன். 

காலையில் எழுந்தபோது தலையில் தனியாக எதோ ரசாயன மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தது. தலை தனியாக செயல்பட்டது. இரண்டு நெற்றிப்பொட்டை சுற்றியும் அப்படி ஒரு அழுத்தம். Leh Ladakh பக்கம் பல இடங்களில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். அங்கெல்லாம் தலைக்குள் இது மாதிரி அழுத்தம் ஏற்பட்டு மூச்சுத் திணறல் வரும். இன்று காலையில் எனக்கு மூச்சுத் திணறல் மட்டும் இல்லை. மற்றபடி எல்லாம் உண்டு. நெற்றிப்பொட்டின் இரண்டு பக்கமும் விரலால் அழுத்தியபடி அமர்ந்திருந்தேன்.

இந்தப் புதிய உணர்நிலைக்கு மத்தியில் மனம் மதுவை வேண்டியது. கொஞ்சம் மது எடுத்துக்கொள்ளுமாறு மூளை என்னை உந்தியது. உலகின் எத்தனை பெரிய மதுவையும் நான் அதிகாலையில் குடித்தது கிடையாது. ஆனால் பின்னிரவின் தொடர்ச்சியை கைவிடாமல் மறுபடியும் போதையில் திளைக்கத் தூண்டிய என் எண்ணங்கள் எனக்குப் புதிய அனுபவம். 

தொடந்து மது எடுத்துக்கொள்ளச் சொன்ன என் மனதின் குரலை தீர்க்கமாக நிராகரித்தேன். செல்ஃபோனை எடுத்து இரவில் உடனிருந்த நண்பனை அழைத்தேன். பிரந்திக்குப் பிறகான என் உடல் மற்றும் மனநிலை குறித்த விளக்கத்தை அவனிடம் பகிர்ந்தேன்.

தமிழ்நாட்டு மக்கள் காலையில் எழுந்ததும் குடிக்கிற காரணம் இப்போது புரிந்தது. இரவில் இவர்கள் அருந்துவது மதுவே கிடையாது. எல்லாம் கெமிக்கல். இந்தக் கெமிக்கல் மனித மூளையை சிறை பிடிக்கிறது. அதனுடைய கட்டுப்பாட்டை இழக்கவைக்கிறது. போதை இறங்கிய பின்னர் மறுபடி உடனே போதையேற்றிக்கொள்ளத் தூண்டுகிறது. 

என்னோட வாழ்நாள்ல இப்டி காலைல சரக்கடிக்கனும்னு தோனுனதே கெடையாது மாப்ள என நண்பனிடம் புலம்பினேன். நான் புலம்புவதை சிரித்துக்கொண்டே கேட்டான்.

கண் விழித்த பத்து நிமிடத்தில் ஒரு மனிதனை மது அருந்த மனம் உந்தினால் அவன் பாவமில்லையா? காசு கொடுத்துக் குடிக்கும் மக்களுக்கு கெமிக்கலை கலந்து கொடுத்து தீராத குடிப்பழக்கத்துக்கு ஆளாக்குவது கருணையற்ற கேடான செயல்.

தேடி வந்த போதையுடன் திருப்தியாக திரும்பிச் செல்லும் ஒருவனுக்கு உபரியாக ஒன்றைத் தருகிறது அரசாங்கம். போதை தெளிந்த கொஞ்ச நேரத்தில் அவன் மறுபடியும் திரும்பி வரவேண்டும். இதுதான் இலக்கு. கெமிக்கல் கலந்து கொடுத்தால் மூளை அவன் கட்டுப்பாட்டில் இருக்காது. ரசாயனத்தின் சொற்படி கேட்கும். திரும்ப வருவான். திரும்பத் திரும்ப வருவான்.

உலகின் பல நாட்டு மது வகைகளை ருசித்திருக்கிறேன். ஒவ்வொரு ஊரின் பிரத்தியேக வடிப்பு சாராயங்களை குடித்திருக்கிறேன். இதில் எங்குமே இல்லாத அதிமோசமான ஒன்று டாஸ்மாக்கில் விற்கப்படுகிறது. 

மக்களை குடிகாரர்கள் எனக் கைகாட்டி சுலபமாகத் தப்பிக்கலாம். ஆனால் வியாபாரம் செய்யும் அரசாங்கம் கெமிக்கல் கலந்து கொடுத்து தொடந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கும் வேலையைச் செய்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

குடி குடியை கெடுக்கும்

மாறுவோம் ...🙏

Friday, August 18, 2023

கட்டிடங்கள் குளிர்ச்சியாக

குளிர்ந்த காற்று அடர்த்தி அதிகமானது; சூடான காற்று இலகுவானது ஆகவே இயல்பாகவே குளிர்ந்த காற்று அறையில் அடிப்பகுதியிலும் சூடான காற்று அதிலிருந்து மேலெழுந்து அறையின் கூரைப்பகுதியை ஆக்கிரமித்தவாறும் இருக்கும்.
பழைய ஓடு அல்லது ஓலை வேய்ந்த கட்டிடங்களில் அறையின் கீழ்பாதியிலுள்ள திறப்புகள் வழியே உள்வரும் (பொதுவாகக் குளிர்ந்த) காற்று உள்ளிருக்கும் காற்றை இடப்பெயர்ச்சி செய்து உள் நிரம்பும். அதே நேரத்தில் அறையிலிருக்கும் சூடான காற்று கூரையின் துளைகள் வழியே தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும். ஜன்னல்கள் சிறியதாக இருந்தாலும்கூட கூரைவேய்ந்த கட்டிடங்கள் குளிர்ச்சியாக இருப்பதற்கு இந்த காற்றோட்டம் ஒரு முக்கியக் காரணம்.
ஆனால், நவீன காங்கிரீட் கட்டுமானங்களில் சூடான காற்று வெளியேற துளைகள் ஏதும் இல்லாததோடு மின்விசிறிகள் மேலிருக்கும் சூடான காற்றையே கீழே திசைதிருப்புமாறு சுழல்வதால் வெப்பம் அதிகரிக்கிறது. வெளியே நல்ல காற்றோட்டம் இருந்தால்கூட நாம் அதை உணர முடிவதில்லை.
நவீன கட்டுமானங்களில் சரியான அளவுகள் திசைகளில் ஜன்னல்கள் அமைப்பது மற்றும் காற்றுத் தடுப்பான்கள் போன்றவற்றை அமைப்பதன்மூலம் இந்த பிரச்சினையை ஓரளவுக்கு சரி செய்ய முடியும்.
பல்வேறு விதமான ஜன்னல் திறப்புகளில் காற்றோட்டத்தை விளக்குகிறது கீழ்கண்ட படம். சிவப்பு நிறம் சூடான காற்றையும் நீல நிறம் குளிர்ச்சியான காற்றையும் குறிக்கிறது. வெளிக்காற்று அதன் உயரத்தைப் பொறுத்து சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Cold air is density; hot air is lighter so naturally cold air will rise above the room and occupy the roof.
Old tile or leafy buildings will relocate and fill the inside (generally cold) air through the openings of the room. Meanwhile, the hot air in the room continues to flow through the holes of the roof. The wind is one of the main reasons why roofed buildings are cool even when the windows are small.
But modern concrete structures have no holes for hot air exit and electric fans are rotating to distract the hot air above. Even if it's good wind outside we don't feel it.
Modern structures can somewhat solve the problem by setting up windows in directions and airproofers.

The following picture describes the air flow in the various window openings. Red means hot air and blue indicates cool air. It is notable here that the air may be hot or cold depending on its height. 

I'm lucky

 If you have food to eat, clothes to eat and place to live, you are more comfortable than 75% of the people in the world.

If you have money in the bank you are one of the 8% rich people. 80% of the people in this world have no bank account.
If you have a computer, you are one of the 1% people who have a chance.
If you can talk to your thoughtful person on mobile, you are better than 175 crore people in the world without any chance to talk so.
If you wake up fresh in the morning without sickness, you are more blessed than many who died in the bed without that opportunity.
If you are not visibility, hearing and speechless, you are better than 20 million people in the world.
If you are not caught in the torture of war, starvation, prison sentence, know that 70 million people around the world have a good life.
If you can worship the God you love without being undertaken by many atrocities, you have received the privilege that 300 crore people in the world could not get.
Understand that you don't know the pain if you are with your parents without leaving them.
If thirsty and you get water to drink, you are very blessed.
About 100 million people around the world don't even have safe water to drink.
If you can read this message with educational knowledge, you have got the education that 80 crore people who cannot read worldwide.
If you can read this message online, you are better than 300 crore people who don't get it.
If you can smile with your head up high, you are more blessed than those who are not courageous and trustworthy.
Aren't you lucky when God has given you so much when you can't even enjoy the facilities and technology you don't even have knowledge of it?!!!
You are the lucky one....
Let go of wasted worries, confusion in the family, drugs and help others as much as you can with the courage to say I'm lucky. These are all the precious gifts that God gave us.

உண்ண உணவும் , உடுக்க உடையும் , வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்
உனக்கு வங்கியில் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். இந்த உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.
உன்னிடம் கணிப்பொறி இருந்தால் , நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.
நினைத்த நேரத்தில் , நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் , அவ்வாறு பேச வாய்ப்பே இல்லாமல் , இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.
நோயின்றி காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால் , அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே , உயிர் துறந்த பலரை விட நீ பெரும் பாக்கியசாலியே.
பார்வைத் திறனும் , செவித்திறனும் , வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் , அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்.
போர் , பட்டினி , சிறை தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால் , உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள.
பற்பல கொடுமைகளுக்கு உள்ளாகாமல் , நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால் , உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்.
உன் பெற்றோரை விட்டுப் பிரியாமல் அவர்களுடன் இருந்தால் , நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்.
தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் , நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் தான்.
இந்த உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்குக் கூட இல்லை.
கல்வி அறிவு பெற்று , இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால் , உலக அளவில் எழுத படிக்க இயலாத 80 கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்று உள்ளாய்.
இணையத்தில் இந்த செய்தியை , உன்னால் படிக்க முடிந்தால் , அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்.
உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் , அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும் , நம்பிக்கையும் இல்லாதவர்களை விட , நீ கொடுத்து வைத்தவன்.
நீங்கள் அனுபவித்து வரும் , வசதிகளையும் தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல் , ஏன் அது பற்றிய அறிவே கூட இல்லாமல் , கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க , ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது , நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா ?!!!
நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்....
வீண் கவலைகளை விட்டு , அந்தக் கவலைகளைக் காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள் , போதை பொருட்கள் என்பவற்றை விட்டு விட்டு , நான் அதிர்ஷ்டசாலி என்ற தைரியத்தோடு உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள.இவை அனைத்துமே கடவுள் நமக்கு கொடுத்த விலை , உயர்ந்த பரிசுகள்.

அன்பே சிவம்

 *"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!"* அன்பே சிவம்

**********
என் அப்பன் சிவபெருமானின் அருளும். சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சித்தர் அருட்பார்வை பெற்றவர்கள் மட்டுமே இந்த பதிவை முழுமையாக படிக்கும் எண்ணமும் துன்பங்களில் இருந்து விடுபட வழியும் கிடைக்கும்! சனி.ராகு.கேது/ தசாபுத்திகள் நடந்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படாதவாறு மனதை திசை திருப்பி பதிவை படித்து விட்டு கோவில் உள்ளே சென்று இறைவனை தரிசிக்க முடியாதபடி வாசலில் நின்றவாறு வணங்கி விட்டு கடந்து செல்வதை போல் அவர்களின் மனம் பதிவை பார்த்து விட்டும், படித்து விட்டும் லைக் கமெண்ட் போட்டு விட்டு மனம் கடந்து சென்று விட வைத்து விடும் !
***********
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சித்தர் மிகவும் வித்தியாசமாக ஒருவர் உள்ளத்தை கண்டறிவார்! தன் கையில் செம்பில் ஆன சூட்டுக்கோல் வைத்திருப்பார்! தன்னை தரிசிக்க வருபவர்களிடம் ஒரு முனையை பிடித்து கொண்டு மறுமுனையை தரிசிக்க வந்தவரை பிடிக்க சொல்வார்! அதை பிடித்தவர் சூடு தாங்காமல் அலறினால் என்ன அப்பு சுடுகிறதா? முதலில் மனதில் உள்ள
அழுக்கினை நீக்கி விடு என்று கூறுவார். சூட்டுக்கோலை பிடித்த அடுத்த தருணமே அவர் உள்ளம் திருந்தி வாழ மனம் மாறிவிடும்! நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருந்தால் அந்த சூட்டுக்கோலை பிடித்ததுமே ஜில்லென குளிச்சியாக இருக்கும்.முகம் பளிச்சென்று காட்சியளிக்கும்! அப்பு போய் வா என புன்னகைத்தபடி அன்பாக ஆசி வழங்கி அனுப்பி வைப்பார்!
கலியுகத்தில் அப்பன் சிவபெருமான் சித்தர்கள் மூலமாக மட்டுமே மனிதனின் பிரச்சினைகளையும்.துன்பங்களையும் தீர்த்து வைக்கிறார்! என்னிடம் தொடர்ந்து பல சகோதர,சகோதரிகள் அனைத்து தெய்வங்களையும்,எல்லா கோவில்களும்.சித்தர்கள் ஜீவசமாதிகளுக்கும் பல வருடமாக சென்று வணங்கி வருகிறேன்! தினமும் வீட்டில் தொடர்ந்து பூஜை செய்கிறேன் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை! என் பிரச்சினைகள் எதுவும் தீரவில்லை என கூறி வருந்தும் பலருக்கு என் பதிவு மூலமாக அப்பன் சிவபெருமான் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சித்தர் மூலமாக பிரச்சினைகள் தீர நல்வழி காண்பித்து பலரின் துன்பங்களை தீர்த்து நல்வழி காண்பித்து கொண்டிருக்கிறார்! சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சித்தர் அருட்பார்வை பெற்று இதுவரை என் பதிவின் மூலமாக பலன் பெற்ற சகோதர, சகோதரிகள் மகிழ்ச்சியுடன் கூறும் போது அளவிலான மகிழ்ச்சி!
இப்பிறவியில் அனைவரும் என் பதிவின் மூலமாக மகிழ்ச்சியாக வாழ வழியை காண்பிக்க செய்ய வைத்து அப்பன் சிவபெருமான் இந்த அடியேன் சந்ததியினருக்கு புண்ணியத்தை சேர்த்து வைக்கும் பாக்கியத்தை அருளிருக்கிறார்!என்றே எண்ணுகிறேன்! நாமும் நம் குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற உள்ளம் மட்டுமே நம்மிடம் உள்ளதால் "அன்பே சிவம்" என்பதை நாம் உணர தவற விட்டு விடுகிறோம்!
எல்லாம் என் அப்பன் சிவன் செயல்!
------------------------------------------
இறைவன் சிவபெருமான் ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவர் மூலமாக நாம் பிரச்சினைகளில் இருந்து விட மீண்டும் மீண்டும் உதவிட முயற்சி செய்து கொண்டே தான் இருக்கிறார்!என் பதிவின் மூலமாக! சிவன் பயங்கரமா சோதிக்கிறார் என கூறி கொண்டே தன் இன்னல்களை சந்தித்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோமே தவிர சூட்சும ரூபத்தில் யாராவது ஒருவரின் மூலம் நமக்கு நல்வழி காண்பித்து கொண்டே தான் இருக்கிறார் ! என்பதை உணரும் சக்தியும் நம்பும் மனநிலையில் நம் பலருக்கு இருப்பதில்லை! அதற்கு முக்கிய காரணம்!
ஒரு மனிதனுக்கு சனி.ராகு.கேது திசை/தசாபுத்திகள்.ஜென்ம சனி.ஜென்ம ராகு.ஜென்ம கேது இருந்தாலும் சந்திர திசையில் சனி.ராகு.கேது புத்தி நடந்தாலும் மிகவும் மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்! அவர்களிடம் கேட்டால் இரவு நிம்மதியாக தூங்கி பல வருஷம் ஆயிடுச்சு என்பார்கள்! நல்லவர்கள் கூறுவதை விட கெட்டவர்கள் கூறுவதை எளிதில் நம்பி ஏமாறுவார்கள்! எதையும் எளிதில் நம்பும் மனநிலை இருக்காது! நம்பிக்கை வந்து விட்டால் மேலே கூறிய மூன்று கிரகங்கள் பிடியின் சோதனைகளில் இருந்து தப்பித்து விடுவார்களே! இவர்கள் மூவரின் பிடியில் இருக்கும் போது ஏமாற்றுபவர்களை நம்பியே மனம் செல்ல வைக்கும்! அடிக்கடி உடல்பாதிப்பு.கடன் சுமைகள், கணவன்-மனைவி பிரிந்து வாழுதல், வீட்டில் அடிக்கடி கணவன்-மனைவி சண்டை, அடிக்கடி விபத்து.மருத்துவ செலவுகள் என சந்தித்துக்கொண்டே வாழ்வதை பலரை காண முடியும்! ஒருவருக்கு பித்ருக்கள். குலதெய்வம் ஆசி இல்லாவிட்டால் அவர்கள் படும் வேதனைகளை சொல்லவே வேண்டாம்! நரக வேதனையை அனுபவித்து கொண்டு இருப்பார்கள்! அவர்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அவர்களுக்கு எந்த பலனும் ஏற்படுவதில்லை! என புலம்பி கண்ணீர் விடுபவர்கள் ஏராளம்! எந்த தெய்வத்தை நாம் வணங்கினாலும் நம் குலதெய்வத்தை கேட்டு தான் எந்த தெய்வமும் உதவிடவே முன் வரும்! குலதெய்வம் நம் பித்ருக்களை நோக்கி தங்கள் மகன் வந்திருக்கான்.ரொம்ப கஷ்டப்படறேன் என்னை காப்பாற்று என கேட்கிறான்! அவனுக்கு நான் உதவலாமா? என குலதெய்வம்
பித்ருக்களிடம் கேட்கும்! பித்ருக்கள் என் மகன் எனக்கு தர்ப்பணம் செய்வதில்லை. அமாவாசை தினத்தன்று எனக்கு படைத்து வழிப்படுவதில்லை எங்களை நினைத்து கூட பார்ப்பதில்லை என கூறி கண்கலங்கினால் உடனே அந்த நொடியே குலதெய்வம் கதவு மூடி விடும்.பிறகு நாம் எத்தனை கோவில்.குளம் என சுற்றி சுற்றி வந்தாலும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தாலும் எந்த பலனும் ஏற்படாது! ஆனால் சித்தர்கள் மனம் இறங்கி வந்தால் பித்ருக்கள் குலதெய்வத்தின் கோபத்தை குறைக்க செய்து சாந்தப்படுத்தி தங்கள் வீட்டுக்கு வரவழைக்க செய்து நம் குடும்பத்தை மேன்மை நிலைக்கு அடைய வைக்கும் சக்தியும்.இரக்க குணமும் சித்தர்களுக்கு மட்டுமே உண்டு! இதை தான் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சித்தர் பலரின் துன்பங்களை துடைத்தெறிந்து மகிழ்ச்சியான வாழ்வை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்! சிலர் எனக்கு குலதெய்வமே தெரியாது என்பார்கள்! ஆனால் குலதெய்வத்திற்கு தங்களை தெரியுமல்லவா? தங்களை கண்காணித்து கொண்டே தான் இருப்பார்கள்! குலதெய்வம் நமக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் சித்தர்களுக்கு தெரியாமல் இருக்குமா! தனக்கு சித்தர்கள் மூலமாக நன்மைகள் ஏற்பட்டதும் சித்தரை மறந்து விடுகின்றனர்! மனிதனுக்கு இன்னொரு மனிதன் செய்த உதவியை மறப்பது போல்!
நமக்கு பிரச்சினைகள் தீர இறைவன் ஒருவர் மூலமாக நல்வழி கிடைத்தால் அதை மற்றவர்களுக்கும் கூறி அவர்களும் நல்ல நிலைக்கு வர உதவிடவேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை! அப்படி ஒவ்வொருக்கும் எண்ணம் வந்து விட்டால் "அன்பே சிவம்" என்பதை உணர்ந்து விடுவர்! பிறகு இறைவனை தேடி நாம் செல்லவேண்டியதில்லை! நம்மை தேடி இறைவனே ஓடி வந்து நம் உள்ளத்தில் குடிக்கொண்டு விடுவார்! அதன் பிறகு நம் வாழ்வில் வெற்றியும் மகிழ்ச்சியும் நிலைத்து நிற்கும்!
சிவபெருமானின் திருவாதிரை நட்சத்தில் ஸ்ரீ வாராஹி அன்னைக்குரிய பஞ்சமி திதியில் நான் பிறந்ததால் என்னவோ! எனக்கு சிவசக்தி என் மூலமாக தங்கள் அனைவரின் பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சியாக வாழ எனக்கு சுயநலம் இல்லாத உள்ளதை கொடுத்து அனைவருக்கும் தெரிவிக்க வைத்து வைத்திருக்கிறார்!
என் ஒருவனால் அனைவருக்கும் தெரிவிக்க முடியாது! அதற்கு ஒரே தடம் முகநூல் குரூப்கள் மட்டுமே! அனைவருக்கும் தெரியப்படுத்திட ஒன்றிணைத்து வைத்து இருக்கும்! குரூப் அட்மின்களுக்கு தான் நன்றி கூறவேண்டும்! அவர்களும் பிறர் மகிழ்ச்சியாக வாழவேண்டும்! என எண்ணம் கொண்டு நல்வழி காட்ட துடிப்பவர்கள் தான்!
நாம் பலருக்கு ஜோதிடம் மீது நம்பிக்கை ஏற்படுவதில்லை! காரணம்! பல போலி ஜோதிடர்களை நம்பி பரிகாரம் என்ற பெயரில் பல ஆயிரம் செலவழித்தது தான் மிச்சம்! எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் பணத்தை இழந்த பல சகோதர.சகோதிரிகள் என் பதிவு மூலமாக தான் நல்வழி கிடைத்தது என என்னிடம் தெரிவித்து கொண்டே இருப்பதால் தான் புதியதாக குரூப்பில் இணையும் சகோதர. சகோதரிகளுக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும் என பதிவிட வேண்டியதாயிற்று!
*"I know something else other than that everyone wants to be happy! "* Love is God 🙏
**********
The blessings of my father Sivaperuman. Only those who have the blessings of Shutukol Mayandi Swamigal and Siddhar will get the thought to read this post completely and get rid of sorrows! Saturday. Raghu. If Ketu/Dasabuthi's are going on, diverting their mind and reading the post so that they can't believe, then going inside the temple and standing at the door and praying and passing by, just like the mind will see the post, after reading like commenting and going away!
***********
Suutukol Mayandi Swamigal Siddhar is very different, finds a heart! He would have a red shooter in his hand! He will ask those who come to see him to hold one point and ask the one who came to see the other end! What if the person who caught it screams without bearing the heat, is it hot? First of all in mind
He would say remove the dirt. The next moment he caught the suicide, his mind will change to live with reform! If you have a good heart, catching that suitcase will be cool. The face will look bright! Appu will send with a smile saying goodbye and give blessings with love!
In Kaliyugam, Appan Sivaperuman, man's problems are only through Siddhars. He solves the troubles too! I have many brothers and sisters, all gods and all temples. I have been praying to Siddhars and Jivasamathi for many years! Continuous worship at home everyday but no improvement! For many who are feeling sorry that my problems are not solved, through my post, Appan Sivaperuman Suutukol Mayandi Swamigal is showing the right path to solve the problems of many people through Siddhar! Feeling happy when the brothers and sisters who have benefited from my post so far by getting the blessings of Suutukol Mayandi Swamigal Siddhar!
In this life, by making everyone to show the way to live happily through my post, Father Shiva has blessed me with the privilege of adding good deeds to these servants! I think it is! We miss realizing that "Love is Shiva" because we have only the heart that wants us and our family to live happily!
Everything is my father Shiva's act!
------------------------------------------
Lord Shiva keeps trying to help us over and over again through someone everyday! Through my post! We are living by facing his problems by saying that Shiva is testing us terribly, but he is showing us the right path through someone in a subtle form! Many of us do not have the power to realize and believe! The main reason for that!
Saturn for a man. Raghu. Kethu direction / tenacity. Birth Saturn. Raghu by birth. Saturn is in the direction of moon even if it is a birth. Raghu. Even if Ketu is intelligent, they would be living in deep stress! If we ask them, they will say that it has been years since we slept peacefully in the night! They will be cheated by believing bad people rather than what good people say! There is no mentality to believe anything easily! If trust comes, the above three planets will escape the trials of grip! When you are in the grip of these three, the heart will make you go by trusting the cheaters! Physical injury too frequently. Loan burdens, living separated from husband-wife, frequent fights at home, frequent accidents. We can see many people facing medical expenses! Pitru's for one. If there is no blessings of the family deity, do not tell about their sufferings! They must be suffering hell! Whichever God they worship, they get no benefit! There are a lot of people who shed tears in my eyes! Whichever God we worship, no God will come forward to help only listening to our family deity! Family deity, their son has come towards our ancestors. Suffering so hard he asks to save me! Can I help him? My family deity
Will ask the fathers! Pitru's my son does not obey me On the new moon day, if you cry saying that there is no creation for me and not even thinking about us, the family deity will close the door immediately. Then how many temples are we. Even if you roam around like a pond, if you build a temple and donate food to thousands of people, there will be no benefit! But if the Siddhas come down, the Pitrus will reduce the anger of the family deity, calm down and bring them home and make our family reach to a great level. Only Siddhars have compassion! This is what Shootukol Mayandi Swamigal Siddhar is wiping out the sorrows of many and creating a happy life! Some people will say that they don't know family god! But the family god knows themselves right? They will keep on monitoring themselves! We may not know the family deity, but will the Siddhars not know! When they get benefits through Siddhars, they forget Siddhar! Like forgetting another man's help!
If we get a good way through God to solve our problems, we don't think that we should tell it to others and help them to come to a good position! If everyone gets such a thought, they will realize that "Love is God"! Then we don't have to go seeking God! God will come running in search of us and drink in our hearts! After that success and happiness will prevail in our lives!
What if I was born on the occasion of Sri Varahi Annaikuriya Panchami Thiruvadirai Narshan of Lord Shiva! To me Sivasakthi has given me selflessness free to live happily through me and made everyone know!
My one can't inform everyone! Facebook groups are the only footprint for that! Keeping it together to let everyone know! Thank you only group admins! They should also live happily for others! Only those who want to show the right path with their thoughts!
Many of us don't believe in astrology! The reason ! Trusting many fake astrologers and spending thousands in the name of remedies is what is left! Many brothers who lost money without making any progress. Brother joining the group newly because sisters keep informing me that they got good path through my post. Had to post this post to help sisters too!

Monday, July 31, 2023

இன்று 30/7/2023 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ திருநாள்

இன்று பிரதோஷம் !எப்போது பிரதோஷம் என்றாலும் சிவபுராணம் அவசியம் அனைவரும் ஓத வேண்டும் !பிரதோஷ வேளையில் இன்று 30/7/2023 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ திருநாள் அன்று அவசியம் அனைவரும் படித்து இறைவன் அருளை பெற உதவும் அற்புத பதிகம் இந்த ஒரு பாடலுக்கு சிவபெருமான் மகிழ்ந்து நம் அடியார்களுக்கு வேண்டிய நன்மைகளை அருளி செய்வார் !முக்தி அருள்வார் !
சிவாயநம திருச்சிற்றம்பலம்

சிவபுராணம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

 
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்

சிவாயநம திருச்சிற்றம்பலம்

சிவபெருமானின் தந்தை யார்

சிவபெருமானின் தந்தை யார்? 
மகாதேவன் பிறக்காதவர் . அவர் நித்தியமானவர். அவருக்கு பிறப்பு இல்லை, இறப்பு இல்லை. அவர்தான் அனந்த். யாரும் அவருடையதந்தையும் அல்ல, அவருடைய தாயும் அல்ல. அவர் அனைவருக்கும் தந்தை ஆனால் யாரும் அவருக்கு தந்தை இல்லை.
சிவபெருமானின் தாய் யார்?
சிவன் சுயம்பு (அவன் தன்னை உருவாக்கினான்).

சிவனுக்கு தாய் யார் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், சிவனுக்கு அம்மா இருந்திருந்தால்

சிவனின் கழுத்தில் பாம்பை அணிவதை அவள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாள், அதற்குப் பதிலாக சிவன் அணிந்திருக்கும் புலித்தோலை விட விலையுயர்ந்த நகைகள் மற்றும் ஆடைகளை சிவனுக்கு அணிவிப்பாள்!
சமுத்திர மந்தனிலிருந்து கசிந்த விஷத்தை சிவபெருமான் குடிக்க ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.
அழகிய சிவனின் உடலில் சாம்பலைப் பூச அனுமதிப்பதை விட, அவள் சந்தனப் பொடியைப் பூசியிருப்பாள்!
சிவனை ருத்ர_க்ஷேத்திரத்தில் (புதைகுழியில்) உறங்க விடாமல், தினமும் அவருக்கு தாலாட்டுப் பாடி, அவரை தொட்டிலில் தூங்கச் செய்திருப்பார்.
அகதௌ_பிதரவ் வந்தே பார்வதி பரமேஸ்வரம்

பிரபஞ்சத்தின் தந்தையும் தாயுமான சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நான் வணங்குகிறேன்.

பிறந்தவருக்கு அப்பா அல்லது அம்மா இருப்பார்கள், இல்லையா?

ஆனால் சிவன் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து பிறக்காததால் பிறக்காதவர், எனவே அவருக்கு தந்தை அல்லது தாய் இல்லை.

சிவன் சுயம்புவாக இருப்பதால் (அவர் தன்னை உருவாக்கினார்) மற்றும் நினைவு வடிவில் பழங்காலத்திலிருந்தே (ஆதி, அனந்த்) இருக்கிறார். ஆக, சிவன் எதுவும் இல்லாதபோதும் இருப்பார், எல்லாம் இல்லாமல் போனாலும் கூட.

10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில்



சிவனை பற்றி நாம் அறியாத உண்மைகள்.🍂 *10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு 🍂.சிவபெருமானின் வாகனமான காளையின் சிறப்பம்சங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம் பொறுமையாக படித்து சிவத்தின் பெருமை பற்றி தெரிந்து கொள்வோம் 

சிவார்ப்பணம்

சிவனின்றி அணுவும் அசையாது

*10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு .

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.

அதெப்படி *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள்.

சிவபூமிதான் நாம் வாழும் பூமி .

இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர்

இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.

பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.

நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

திருக்கேதீஸ்வரம்,

திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.

உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்

புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,

ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,

வாழ்க்கையையும்,

பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).

வட அமெரிக்காவில்கொலராடா என்றஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிவலிங்கத்தின் வடிவத்தில் வத்திக்கான் சிட்டி டாப் வியூ சிவலிங்கம் வடிவத்தில் வத்திக்கான் நகரம் கட்டப்படுவதை ஒருவர் கவனிக்க முடியும் (மேல் பார்வையில் இருந்து பார்க்கப்படுகிறது)

அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.

பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.

சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.

சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.

எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.

எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்

சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.

சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.

சிவனின் பெருமையையும் தமிழின் பெருமையையும் உலகளாவிய அமைப்பு.

🍂 சிவபெருமானின் வாகனமான காளையின் சிறப்பம்சங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்
*🍂 " ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப..." என்னும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்திருக்கிறது. 'சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும் சீரார்ந்த பெருமையும்கொண்டது என்பதே இதன் பொருள்.

* 🍂 மாடு என்றால் செல்வம் என்று பொருள். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன்

நந்தி தேவருக்குத்தான் முதன்முதலில் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன.

* 🍂தென்னக சிவாலயங்களில் இருப்பவை, ஓங்கோல் ரக மாடுகளின் தோற்றமுடைய சிற்பங்களே. கவர்ச்சியும் மிடுக்கும் மிக்க இந்த ஓங்கோல் ரக மாடுகள் ஆந்திர மாநிலத்தின் பெருமைக்குரிய சொத்தாகப் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.

*🍂சிவன் கோயில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி தேவரை 'தர்ம விடை' என்று அழைப்பார்கள். அழிவே இல்லாமல் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பது தர்மம். அந்த தர்மம்தான் ஈசனைத் தாங்கி நிற்கின்றது.

* 🍂நந்தி தேவனின் மூச்சுக்காற்றைத்தான் ஈசன் சுவாசிக்கிறார். தர்மம்தான் இறையனாரின் சுவாசம். கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும் வீழ்ந்து வணங்குவதும் கூடாது.

*🍂 சிலாதர் முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

*🍂 நந்தி தேவர், ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.

* 🍂மராட்டிய மாநிலம், நாசிக் அருகே உள்ள பஞ்சவடியில் இருக்கும் கபாலீஸ்ரவரர் மகாதேவ் கோயிலில்தான் சிவபெருமானுக்கு எதிரே நந்திக்கு சிலை இல்லாமல் இருக்கின்றது. நாட்டிலேயே இங்குள்ள சிவனுக்குத்தான் நந்தி தேவர் இல்லை.

* 🍂தமிழ்நாட்டிலேயே, கோயம்புத்தூர் மாவட்டம் நவகரை மலையாள துர்கா பகவதி கோயிலில் மிகப் பெரிய நந்தி உள்ளது. 31 அடி உயரமும் 41 அடி நீளமும் 21 அடி அகலும் கொண்டதாகும். இதற்கடுத்த பெரிய அளவிலான நந்தி தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளதாகும். 12 அடி உயரமும் 20 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்டதாகும்.

* 🍂சிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமாந்தான். சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் வணங்க வேண்டும்.

* 🍂பிரதோஷ காலங்களில் நந்திக்கு ராஜமரியாதை. நந்தியின் காதுகளில் நமது பிரச்னைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார் எனபது நம்பிக்கை.

*🍂 பாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக்கொண்டார். அதைத்தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம்.

* 🍂பிரதோஷ பூஜையில் நந்திக்குத்தான் முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிப்பாடு செய்தமைக்கு ஒப்பாகும்.

* 🍂சிவபெருமானின் வாகனமாக காளை திகழ்வதால்தான், பிரதோஷ காலத்தில் அருகம்புல்லை மாலையாகக் கட்டி அணிவித்து வணங்குகிறோம்.

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...