Saturday, May 21, 2022

கன்னிகா பரமேஸ்வரி அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம்

கன்னிகா பரமேஸ்வரி அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம். எனவே அன்னையின் ஜயந்தி தினமான இன்று, வாசவி ஜெயந்தி விரதம் அன்று பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர்
   
.
அன்னையின் மூல மந்திரமான

ஓம் பாலாரூபிணி வித்மஹே

பரமேஸ்வரி தீமஹி

தன்னோ கந்யா ப்ரசோதயாத்

என்னும் மந்திரத்தைச் சொல்லிவர சகல நன்மைகளும் கைகூடும்.

கன்னிகா பரமேஸ்வரி அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம். எனவே அன்னையின் ஜயந்தி தினமான இன்று, வீட்டிலிருக்கும் அம்மன் படத்துக்கு பூ சாத்தி, நீர் மோர், பானகம் ஆகியன செய்து படைத்து வழிபட வேண்டும். அவ்வாறு செய்தால் அன்னை மனம் குளிர்ந்து நம்மைச் சூழ இருக்கும் இன்னல்களிலிருந்து விலக்கிக் காப்பாள் என்பது ஐதிகம்.

இன்று வாசவி ஜெயந்தி விரதம்
ஒரு பெண்ணின் வாழ்வில் பிறந்த வீடும், புகுந்த வீடும் சரிசமமான சிறப்பைப் பெறுகிறது. பிறந்த இடத்தின் பெருமையை பேணிக்காக்க வேண்டிய கடமையும், புகுந்த இடத்தின் மதிப்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புணர்வும் கொண்ட பெண்கள் இங்கு போற்றப்படுகின்றனர். அப்படி.. தான் பிறப்பெடுத்த பிறந்த இடத்தின் பெருமையைக் காப்பாற்றி, அதன் வழி வந்தவர்களின் குலதெய்வமாக வணங்கப்படுபவளே ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி என்னும் பெண்தெய்வம். இவளே ‘வாசவி’ என்ற திருநாமத்திலும் அழைக்கப்படுகிறாள்.

ஒரு சமயம் ஈசனும் அம்பாளும் கயிலாயத்தில் வீற்றிருந்தனர். கயிலையின் முதன்மை காவலாளியான நந்தியம் பெருமான், புனித கங்கையில் நீராடுவதற்காக புறப்படத் தயாரானார். தான் சென்றால், இறைவனுக்கு காவல் வேண்டுமே என்பதற்காக, சமதி என்ற மகரிஷியிடம், தான் வரும் வரை கயிலையின் வாசலில் காவல் காக்கும்படியும், யார் வந்தாலும் இறைவனின் அனுமதி பெற்றே உள்ளே அனுமதிக்கும்படியும் கூறிச் சென்றார்.

 
சமதி முனிவரும் கண்ணும் கருத்துமாக காவல் காத்து வந்தார். அப்போது கோபத்திற்கு பிரசித்தி பெற்ற துர்வாச முனிவர், அங்கு வந்தார். அவரை சமதி மகரிஷி உடனடியாக உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவரை, பூமியில் மனிதனாக பிறக்கும்படி துர்வாசர் சாபமிட்டார். அதன்படி சமதி மகரிஷி, பெனுகொண்டா நகரத்தில் குசும ஸ்ரேஷ்டியாக பிறந்தார்.

அதன்பின் வந்த நாள் ஒன்றில், ஈஸ்வரனின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த நந்தி, ஈசனின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது தன் காலிலும் விழாமல் அவமதித்து விட்டதாக நினைத்த பார்வதி, நந்தியை பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

தவறு செய்யாத தன்னை சபித்ததால் பார்வதி மீது கோபம் கொண்ட நந்தி, அவரையும் பூமியில் பிறந்து கன்னியாக வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்று சாபமிட்டார்.

அவர்கள் இருவரும், துர்வாசரால் சாபம் பெற்று ஏற்கனவே பூமியில் அரசராக வாழ்ந்து வந்த குசும ஸ்ரேஷ்டி- குசுமாம்பிகை தம்பதிக்கு பிள்ளை களாக பிறந்தனர். விருபாஷன் என்ற பெயருடன் நந்தியும், வாசவாம்பா என்ற பெயருடன் பார்வதியும் வளர்ந்தனர்.

வாசவாம்பா மணப் பருவம் அடைந்தாள். அந்த சமயத்தில் சித்திரகாந்தன் என்னும் அரசன் பல இடங்களில் வெற்றிக்கொடி நாட்டி, இந்த நாட்டிற்கு வந்தான். அவன் வாசவாம்பாவைக் கண்டு காதல் கொண்டான். அவளை மணம் செய்து தரும்படி, அவளது தந்தையான குசும ஸ்ரேஷ்டியிடம் கேட்டான். ஆனால் அவர் தன்னுடைய இன மக்களிடம் கேட்க வேண்டும் என்றும், இன்னும் சில நாட்களில் தகவல் சொல்வதாகவும் கூறினார்.

பின்னர் தன்னுடைய குலத்தைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி அரசன் விவாதித்தான். பெனுகொண்டா ஆட்சிக்குட்பட்ட 18 நகரங்களில் வாழ்ந்து வந்த 714 கோத்திரங்களை சேர்ந்த வைஸ்சியர்களின் சபை இதுபற்றி விவாதித்தது. 612 கோத்திரத்தார் மணமுடிக்கலாம் என்றும், 102 கோத்திரத்தார் குலப்பெருமை காக்க இதற்கு சம்மதிக்க மாட்டோம் என்றும் கூறினர். கருத்து வேறுபாடு அதிகரிக்க, சம்மதம் தெரிவித்த 612 கோத்திரத்தார் தங்கள் குடும்பங்களுடன் ஊரை விட்டு வெளியேறினர்.

இதையெல்லாம் அறிந்த வாசவாம்பா, தன் திருமணம் தொடர்பாக வாதிட்டு, தன் இனத்தவர்கள் பிரிந்ததை நினைத்து வேதனை அடைந்தாள். தன்னால் தான் அனைவருக்கும் வேதனை என்று நினைத்தவள், தன் குலப்பெருமை காப்பதற்காக தன்னை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தாள். அதற்கு பெரியவர்களின் சம்மதத்தையும் வாங்கினாள்.

அதன்படி அங்கிருந்த ஆலயம் முன்பு பெரிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, அதில் வாசவியின் அக்னிப் பிரவேசம் நிகழ்ந்தது.

வாசவி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியாக தோன்றி அங்கிருந்த அனைவருக்கும் அருள்காட்சி தந்து மறைந்தாள்.

அன்னை தீக்குளித்த நாளான தை அமாவாசைக்குப் பின் வரும் இரண்டாம் நாளை அக்னி பிரவேச தினமாகவும், அன்னை இந்த பூமியில் அவதரித்த சித்திரை மாத வளர்பிறை தசமியை வாசவி ஜெயந்தியாகவும் பக்தர்கள் கடைப்பிடிக்கின்றனர். பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர்.

வீட்டில் பணவரவு அதிகரிக்க

💸 வீட்டில் பணவரவு அதிகரிக்க...          

இன்று எல்லோருக்கும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிரதானமாக இருக்கும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனையாக தான் இருக்கும்.

சிலர் வீட்டில் பணவரவு அதிகமாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் பணமானது செலவாகி கொண்டே இருக்கும்.

என்னதான் பணம் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் முழுவதும் ஏதாவதொரு பட்ஜெட்டிற்குள் அடங்கி விடுகிறது. ஒரு ரூபாய் கூட அதில் இருந்து சேர்த்து வைக்கவே முடியவில்லை.

பொதுவாக சிலரிடம் பணம் சேருவது கிடையாது. இதற்கு காரணம் அவர்களை அறியாமல் அவர்கள் செய்யும் சில தவறுகளாக கூட இருக்கலாம்.

இத்தகைய சூழ்நிலையை மாற்றி, வீட்டில் பணவரவு தங்க, சக்தி வாய்ந்த பரிகார முறையை பற்றி பார்க்கலாம் வாங்க..

💷 வீட்டில் பணம் தங்குவதற்கு அரிசி மற்றும் மாவு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் 5 துளசி மற்றும் 2 குங்குமப்பூ போன்றவற்றை வைக்கவும். இந்த பரிகாரத்தை சனிக்கிழமைகளில் செய்தால் வீட்டில் பணம் அதிகரிக்கும்.

💷 வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது கண்டிப்பாக ஒரு 100 ரூபாயாவது சட்டை பையிலோ அல்லது பர்சிலோ வைத்திருக்க வேண்டும். குறிப்பாக வியாபாரிகள் இதை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் பணத்தை ஈர்க்கும் சக்தி பணத்திற்கு தான் உண்டு.

💷 தொழில் புரிவோர் தாங்கள் தொழில் செய்யும் இடத்தில் தினமும் தொழிலை ஆரம்பிக்கும் முன்பு கடவுள்களுக்கு ஊதுபத்தியை ஏற்றுவதன் மூலம் பணவரவு உண்டாகும்.

💷 வீட்டின் பின்புறம் கற்றாழை செடி ஒன்றை வளர்த்து வர, வீட்டில் நிதி நிலைமை கட்டுக்குள் வரும்.

💷 பணத்தை வைக்க நாம் உபயோகிக்கும் பர்ஸ், பணப்பெட்டி, சிறிய டப்பா போன்றவை எப்போ தும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமான இடத்தில் தான் லட்சுமி எப்போதும் தங்க விரும்புவாள்.

💷 நமது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் முன்பு மகாலட்சுமியை மனதார நினைத்து இதில் அதிகம் பணம் சேர வேண்டும் என வேண்டிக்கொண்டு பணத்தை வைக்க வேண்டும். பெண்கள் பொதுவாக சமையலறையில் ஏதாவது ஒரு டப்பாவில் பணத்தை சேமிப்பர் அவர்களுக்கும் இது பொருந்தும்.

💷 இலவங்கப்பட்டையை நம் பணப்பெட்டியில் வைத்து வர பண வரவு அதிகரிக்கும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும்.

💷 பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி குபேர மூலையில் வைத்து தீபம் காட்டி பூஜித்து வந்தால் வீட்டில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

💷 வீட்டில் அத்தியாவசிய பொருட்களான உப்பு, பருப்பு போன்றவை எப்பொழுதும் குறையாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

இந்த முறைகளை கடைபிடித்து பணவரவை அதிகரிப்போம்.. நலமுடன் வாழ்வோம்..!

சிவதனுசு

🏹 சிவதனுசு! 

சிவபெருமானிடம் கோடிக் கணக்கான தனுசுகள் அதாவது வில்கள் உண்டு. இவை அனைத்தையுமே சிவதனுசு என்றே கூறுகின்றோம். மக்களின் சிற்றறிவுக்குத் தெரிந்த வரை சிவபெருமான் தன்னிடம் உள்ள மூன்று சிவதனுசுகளைச் சிவப் பிரசாதமாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்துள்ளார். இதில் ஒன்று ராவணனுடைய தவத்தை மெச்சி அவனுக்கு அளிக்கப்பட்டது.

சிவபெருமாளே வழங்கிய வில் என்றால் அதன் மகிமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா? சிவ தனுசுவை வைத்திருக்கும் ஒருவனை எந்த உலகத்திலும் யாராலும் வெல்ல முடியாது. ஆனால், இந்த வில்லை முறையாகப் பயன்படுத்தும் வரைதான் அது சிவப் பிரசாதமாக இருக்கும். அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அது தன் சக்தியை இழந்து விடும்.

இதை பூரணமாக உணர்ந்தவன்தான் இராவணன், ஆனால், தான் என்ற அகங்காரம் காரணமாக சிவ வாக்கை மறந்து எல்லா லோகங்களுக்கும் சென்று அனைத்து லோகங்களையும் வென்று தேவர்கள், கந்தர்வர்கள் என அனைவரையும் வென்றான்.

நவகிரக லோகங்களுக்கும் சென்று எல்லா நவகிரகங்களையும் தன் அடிமையாக்கி தன் சிம்மாசனப் படிகளாக்கி அவர்களை அவமானப்படுத்தினான். இத்தகைய அதர்மமான செயல்களால் சிவதனுசுவின் சக்தி சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது.

அனைத்து லோகங்களையும் வென்ற இராவணன் கடைசியில் பிரம்ம லோகத்திற்கும் சென்றான். பிரம்மாவையும் வென்று தன் அடிமையாக்க வேண்டும் என்பது அவன் விருப்பம். பிரம்ம லோகம் சென்ற ராவணனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இராவணனின் தவறான செய்கைகளால் தன் சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்த சிவதனுசு இராவணன் பிரம்ம லோகத்தை அடைந்தவுடன் முழுதுமாகத் தன் சக்தியை இழந்து விட்டது.

இதைச் சற்றும் எதிர்பாராத இராவணன் செய்வதறியாது திகைத்தான். பிரம்ம லோகத்தை ஆளும் பிரம்மாவை எதிர்க்க முடியாமல் வெட்கம் அடைந்து தலை குனிந்தான் இராவணன். தன் செய்கையால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைந்து வருந்தி உடனடியாகத் தன் சொந்த அரக்க லோகத்திற்கு வெறுங் கையுடன் திரும்பி விட்டான்.

இனி சிவ தனுசால் என்ன பயன் என்று எண்ணி அதைத் துõக்கி எறிந்து விட்டான். இதைப் பார்த்தார் ஜனக மகாராஜா. சிவ பிரசாதம் என்றுமே சிவப் பிரசாதம் அல்லவா? இதை இராவணன் அறியவில்லையே என்று வருந்தி அந்த சிவதனுசுவை தான் எடுத்து வைத்துக் கொண்டு அதற்குத் தினமும் எல்லா விதாமன அபிஷேக ஆராதனைகளையும் பூஜைகளையும் பன்னெடுங் காலமாக ஆற்றி வந்தார் ஜனக மகாராஜா.

காலச் சக்கரம் சுழன்றது…

குழந்தை பாக்கியம் இல்லாததால் சீதையைப் பூமியில் கண்டெடுத்துத் தன் மகளாக ஜனகர் வளர்த்து வந்தார் அல்லவா? சீதை சிறுமியாக இருக்கும்போது ஒரு நாள் தன் தோழிகளுடன் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்தப் பந்து உருண்டு போய் சிவ தனுசுவின் கீழ் மறைந்து விட்டது. பந்தைத் தேடி வந்த சீதை தன் இடது கையால் சிவ தனுசுவைச் சாதாணமாக தூக்கிப் பிடித்துக் கொண்டு வலது கையால் பந்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள்.

இந்தக் காட்சியைக் கண்ட ஜனக மகராஜாவுக்கு ஒரே ஆச்சரியம். ஏனென்றால் அந்த சிவ தனுசுவை 10,000 வீர மல்லர்கள் சேர்ந்தால்தான் நகர்த்தவே முடியும். ஆனால், இந்தக் குழந்தை அலட்சியமாக இடது கையால் தூக்கி விட்டதே. அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அதே சமயத்தில் இன்னொரு வருத்தமும் அவருக்கு எற்பட்டது.

இந்தப் பராக்கிரமம் பொருந்திய கன்னியை எவருக்கு மணம் முடிப்பது? இவளுக்கே இவ்வளவு ஆன்மீக பலம் இருந்தால் இந்தச் சிறுமியை மணக்கும் வீரன் எத்தகைய பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும்? உண்மையில் அப்படி ஒருவன் ஈரேழு உலகத்திலும் இருக்கிறானா என்பதே சந்தேகம். இருந்தாலும் எப்படி, எங்கே அவனைத் தேடுவது? இப்படி பல்வேறு சிந்தனைகளிடையே உழன்றார் ஜனக மகாராஜா.

மகளுக்கு திருமண வயது வந்தவுடன் தகுந்த மணவாளணைத் தேர்ந்தெடுப்பது என்று ஆலோசித்தார். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய அற்புதமான யோசனைகளையெல்லாம் கூறினர்.

இறுதியில் சிவ தனுசுவை நாணேற்றி உடைப்பவருக்கே சீதா தேவி மனைவி ஆவாள் என்று அறிவித்தார். அதன் பிறகு நடந்தவைகள் உங்களுக்கு நன்றாக தெரியும். ஸ்ரீராமர் சிவதனுசை நாணேற்றி உடைத்துவிட்டார். அதன் பிறகு அவருக்கு திருமணம் நடந்தது.

அதற்குப் பின் முறிந்த சிவ தனுசு என்னவாயிற்று? என்பதனைப் பற்றி பார்ப்போம்.

நாம் நினைப்பது போல சிவ தனுசு என்பது சண்டைக்காகப் பயன்படுத்தக் கூடிய ஒரு வில் மட்டுமன்று. சிவ தனுசு சிவபெருமானுடைய திரண்ட சக்தியின் ஒரு கூறு. சிவ தனுசில் ஆயிரக் கணக்கான தனுர் வேத தேவதைகளும் தெய்வங்களும் ரிஷிகளும் முனிவர்களும் வாசம் செய்தனர்.

தனுசு முறிந்ததால் அனைத்து தெய்வ சக்திகளும் வெளிவந்து தாங்கள் எங்குச் செல்வது என்று தெரியாமல் திகைத்தன. எல்லோரும் ஜனக மகாராஜாவை வணங்கி, சுவாமி, பன்னெடுங் காலமாக நாங்கள் இந்த சிவ தனுசிலே குடி கொண்டுள்ளோம்.

இப்போது இந்தத் தனுசு முறிந்து விட்டால் நாங்கள் எங்கே செல்வது? எங்களுக்கு சாத்வீகமாக எதிலும் ஈடுபட முடியாது. தனுர் வேதத்தில் இலயித்துள்ள எங்களுக்கு வீரம், சண்டை இவற்றில்தான் மனம் ஈடுபடும். எனவே, தாங்களுக்கு எங்கள் மார்கத்திலேயே ஒரு நல்ல வழியைக் கூற வேண்டும், என்றவுடன் ஜனகர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார்.

பின்னர் சிவ தனுசிலிருந்து வெளிவந்த எல்லா தேவ, தெய்வ சக்திகளையும் 1008 அஸ்திரங்களில் ஆவாஹணம் செய்தார். அந்த 1008 அம்புகளையும் ராமபிரானுக்கே வெற்றிப் பரிசாக அளித்து விட்டார். அந்த தனுர் வேத சக்திகளும் ராமபிரானுடைய அம்பாரத் துணியிலேயே குடி கொண்டு ராமருக்கு உறுதுணையாக நின்றன.

இலங்கையில் ராவணனுக்கு எதிராக நடந்த யுத்தத்தில் இராவணனின் உடலைத் துளைத்து அவனைப் பரலோகத்திற்கு அனுப்பியதும் இந்த 1008 அஸ்திர சக்திகளே. இராவணன் சிவ தனுசை முறையாகப் பயன்படுத்தாது யாரை எல்லாம் அதர்மமாகத் துன்புறத்தினானோ அவர்களுடைய சாபங்களே சிவ தனுசு அஸ்திரங்களாக மாறி அவன் உயிரைக் கவர்ந்தன.

உண்மையில் இராமர் இராவணனைக் கொல்லவில்லை. இராவணனுடைய தீவினைகளே அவன் உயிரைக் கவர்ந்தன. தன் வினை தன்னைச் சுடும் என்று முதுமொழிக்கு நிரூபணமாக நின்றதும் சிவ தனுசே.

ஓம் நம சிவாய...


Tuesday, April 26, 2022

இராமகிருஷ்ணர் சொல்கிறார்



*நாம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போல இறைவனிடமும் பேசமுடியும் என்று பகவான் இராமகிருஷ்ணர் சொல்கிறார்.-கடவுளிடம் பக்தி செலுத்தி வருவோம்.ஒருநாள் அவரிடம் மனிதர்களிடம் பேசுவது போல் பேசுவோம்.*

Sunday, April 24, 2022

ஒருவரின் ஆன்ம தேடலை தருவதும் எட்டாம் பாவகம்..ஜோதிட சிந்தனைகள்

 









8 - ம் பாவகம் சொல்லும் நேர்மறை சூட்சுமங்கள் ..
👉அமானுஷ்யங்கள் என்பது பில்லி சூனியம் ஏவல், (Black magic) போன்றவையா?என்றால் நிச்சயமாக அது மட்டும் இல்லை. கண்ணுக்குத் தெரியாத இயல்புக்கு மாறான, திடீரென தோன்றும் அல்லது ஆழ்மனதின் எண்ணங்கள் ஆகவோ,ஒருவரின் கர்ம தேடலும் இதற்குள் வரையறுக்கப்பட்ட வையாகும்.
👉ஒருவரின் கர்ம தேடல் அல்லது ஆத்ம தேடல். எட்டாம் பாவகத்துடன் தொடர்பு பெற்றது. எட்டாம் பாவகம் என்பது ஆயுள் அவமானங்கள் மட்டுமா? ?
👉இதைத்தான் தருமா எட்டாம் பாவகம் என்றால் ஒருவரின் ஆன்ம தேடலை தருவதும் எட்டாம் பாவகம்..
👉திடீர் அதிர்ஷ்டம் தலைமறைவு வாழ்க்கை அமானுஷ்யங்கள் எண்ணங்கள், மறைமுக தன லாபம்,
👉ஒருவரின் மறைமுக தாம்பத்திய வாழ்க்கை, அங்கீகரிக்கப்படாத அல்லது மறைமுக வாழ்க்கையின் மூலம் பெற்றெடுக்கும் பிள்ளைகள்,
👉 இயல்புக்கு மாறான இதற்கு முன் சந்திக்காத எண்ண ஓட்டங்களை உருவாக்குவது. ஒருவரின் ஆத்ம தேடல் ஆன்மாவை உணர வைப்பது கர்மாவில் இருந்து ஒருவர் மீண்டு வருவது போன்ற செயல்கள்.
👉மறைபொருள் தேடல் ஜோதிட ஞானம். போன்றவற்றையும் தேட வைப்பது எட்டாம் பாவகம். .
👉சரி கால புருஷனுக்கு எட்டாம் பாவகம் விருச்சிகம். பொதுவாகவே விருச்சிகத்தில் சர்ப கிரகங்களான ராகு கேது இடம் பெற்றவர்களுக்கும்,
👉எட்டில் சுபகிரக சேர்க்கை பெற்றவர்களும் அமானுஷ்ய தேடல்கள் கர்ம தேடல்கள் இருக்கும் .
உதாரணமாக ஒருவருக்கு மகர லக்னம் என்று எடுத்துக்கொண்டால் அவருக்கு எட்டாம் பாவகம் சிம்மம் அப்படி என்றால் அவருடைய தேடல் என்னவாக இருக்கும் என்றால், சிம்மம் என்பது கால புருஷனுக்கு ஐந்தாம் பாவகம் ஐந்தாம் பாவகம் ஆசையை தூண்டும் இடமாக இருக்கும். இயல்புக்கு மாறான அல்லது தன் நிலைக்கு மாறான விஷயங்களுக்கான தேடல்களை குறிக்கும் ..
👉சரி இது மட்டும்தான் தேடலாக இருக்குமா? .சிலருக்கு கும்பம், இன்னும் சிலருக்கு எட்டாம் பாவத்தோடு குரு ராகு கேது சுக்கிரன் போன்ற கிரகங்கள் தொடர்பு கொள்ளும்பொழுது அவர்களுடைய தேடல் தான் யார் என்பதையும் தன்னுடைய கர்ம தேடலாகவும் மறைபொருள் தேடல் .போன்றவையும் ஏற்படும் ..
👉தொல்லியல்துறை ,மண்ணுக்கு அடியில் கிடைக்கும் பொருட்களான தங்கம் வைரம் போன்ற துறைகளில் இருப்பவர்கள் இன்னும் சொல்லப்போனால் சந்திரன் மற்றும் சுக்கிரன் எட்டாம் பாவத்தோடு தொடர்பு கொள்ளும் பொழுது அவர் நீர்நிலைகளில் ஏதேனும் ஒரு துறையில் ஆராய்ச்சி மற்றும் தேடல்களை கொண்டவர்களாக இருப்பார்கள்.
👉வானியல் தேடல்கள், பிரபஞ்ச தேடல்கள், தன்னுள் இருக்கும் ஆத்ம சக்தியை உள்ளிழுத்துக்கொண்டு கண்ணுக்குப் புலப்படாத விஷயங்களை தேடுவது, போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் இந்த ராகு கேதுக்கள்.
👉இவர்கள் எட்டாம் பாவத்தோடு அல்லது விருச்சிகத்தில் அல்லது கும்பம், மீனம் .போன்ற ராசிகளில் தொடர்புகொள்ளும் பொழுதும் ஆழ்மன தேடல் அதிகரிக்கும்.
👉இன்னும் சிலரோ சர்ப கிரகங்களைப் பற்றியும் தன்னுடைய கர்மாவை பற்றியும் ,மேலும் மரபியல் சார்ந்த நோய்களை பற்றியும் அதற்கு தீர்வு காணும் எண்ணத்தோடு தேடல்களை உருவாக்குவதே எட்டாம் பாவகத்தின் சிறப்பு ..எட்டு சுபத்துவம் ஆனால், வெளிநாட்டு வாழ்க்கை மட்டுமல்ல, அமானுஷ்யங்களை யும் தேட வைக்கும் ..
👉8- ம் பாவகத்தின் Positive விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்

வரம் வாங்கி வந்தால் மட்டும்

 *வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை..

1. நிறைய சகோதரர் சகோதரிகளுடன் பிறப்பது.. மற்றும் கடைசி வரை உடன்பிறந்தவர்களுடன் நல்உறவு..!
2. பெற்றோர்களின் வறுமையைப் பார்க்காத இளமை..!
3. எந்த வயதிலும் எந்த கல்வி கலையையும் கற்கும் வாய்ப்பு..!
4. பள்ளி, கல்லூரி நட்புகள் கடைசி காலம் வரை கூடவே பயணிப்பது மற்றும் பிரியமான நண்பர்கள் வாய்ப்பது..!
5. நம் மனசுக்கு பிடித்தவருடன் திருமண வாழ்க்கை..!
6. நாம் ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடும் சுதந்திரம்..!
7. அடிப்படைத் தேவைகளுக்கான சொத்து சுகத்தோடு இருப்பது..!
8. எதற்கும் ஏங்காத பிள்ளைவரம்..!
9. தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாதிருத்தல் மற்றும் தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உயர் பண்புகள்..!
எல்லாவற்றிற்கும் மேலாக,
10. *கடைசி காலத்தில் படுக்கையில் படுக்காமல் சாகும்வரை தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் வரமும்*..!
வரம் வாங்கிப் பிறந்தால் மட்டுமே கிடைக்கக் கூடியவை கடவுளிடம் நான் வேண்டுவதும் இவையே நம்பிக்கையுடன் நீங்களும் வேண்டிடுங்கள்

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் சுவாமி ஆலயதரிசனம்.

 

சிவாயநம
நமசிவாய
எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள் திருக்கூட்ட சிவனடியார்களுடன் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் சுவாமி ஆலயதரிசனம்.
திருவள்ளூர் மாவட்டம் சென்னை நகரில் அமைந்துள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த,
தொண்டை நாட்டுத்தலங்களில் 20 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற 274 தலங்களில் 253 வது தலமாகவும் விளங்கும்
பிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் சிவபெருமானிடம் தன்னுடைய கோரிக்கையை வைக்க யாகம் செய்தார். அந்த யாகத்தின் பலனால் சிவபெருமான் தோன்றி பிரளயத்தினை நிகழ்த்தாமல் தடுத்தார்.
இதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் இறை (வரி) விதித்து, அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது, அரசனுக்கும் ஓலைநாயகத்திற்கும் தெரியாதபடி, இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து, "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க" என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், இறைவனுக்கு "எழுத்தறியும் பெருமான்" என்றும் பெயர் ஆயிற்று. இச்செய்தி பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
உபமன்யு முனிவரிடத்து சிவதீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் தம் திருமேனியில், இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால், "படம்பக்கநாதர் " என்ற திருநாமத்தையும் பெற்றார். அப்பாம்பின் வடிவத்தை (சுவடு) இறைவன் திருமேனியில் இன்றும் காணலாம்.
சுந்தரர், சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, இத்தலமரமான மகிழ மரத்தின் முன்னால், "நான் உன்னைப் பிரியேன்" என்று சங்கிலியாரிடம் சத்தியம் செய்து, இத்தல எல்லையைத் தாண்டியதும், தன் கண்பார்வையை இழந்தார்.
'வட்டப்பாறை அம்மன் ' (காளி) சந்நிதி - இந்த அம்மன் ஒரு காலத்தில் மிக்க உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும், ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச் சாந்தப்படுத்தியதாகவும் தலவரலாறு கூறும்
தலமாக திகழும்
மூவரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்
திருவொற்றியூர்
என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் வடிவுடையம்மை (வட்டப்பாறையம்மன்)
உடனுறை அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் (படம்பக்கநாதர்) சுவாமி ஆலயத்தை
தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன் அடியேனுக்கு அளித்துள்ளார்.
மேலும் அனைத்து அடியார்களும் இங்குவந்து இந்த ஈசனை தரிசனம் செய்து அவரின் திருவருளை பெற இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறோம்.
திருச்சிற்றம்பலம்.
May be an image of 5 people, outdoors, temple and text that says 'தியாகராஜ சுவாமி திருக்கோயில் ARULMIGU THIYAGARAJASWAMY THIRUKOIL'


2010 வருட கணக்கின் படி கலியுகம் 5111 வருடம் முடிந்து விட்டது

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான
சகாதேவன் சாஸ்திரத்தில் வல்லவர். 🌳
🌕 இவர் இயற்றிய இந்த சாஸ்திரம் தமிழில் இருக்கிறது. கால ஸாஸ்திரம்
🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡
⭕ கால அளவை கூறும் கால ஸாஸ்திரம்
தாமரை இதழ்களை எட்டு அடுக்கி ஒரு
நுட்பமான ஊசிக்கொண்டு துவாரம் பண்ணுவதற்கு ஆகும் நேரமே ஒரு க்ஷணமாகும்.
02 க்ஷணம்கள் 01 இல்லம்
02 இல்லம்கள் 01 காஷ்டை
02 காஷ்டைகள் 01 நிமேஷம்
02 நிமேஷங்கள் 01 துடி (15 விதற்பரைகள்)
02 துடிகள் 01 துரிதம் (30 விதற்பரைகள்)
02 துரிதம்கள் 01 தற்பரை (60 விதற்பரைகள் )
60 தற்பரைகள் 01 வினாழிகை
60 வினாழிகைகள் 01 நாழிகை
60 நாழிகைகள் 01 நாள்
07 நாட்கள் 01 வாரம்
(ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி இவையே ஏழு நாட்கள்)🌿
🔥 பதினைந்து நாட்கள் ஒரு பக்ஷம்,🌿
(ப்ரதமை,த்வீதியை,த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி,
தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,சதுர்தசி,பௌர்ணமி.இது சுக்லபக்ஷம்)
(ப்ரதமை,த்வீதியை,த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி,
தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,சதுர்தசி,அமாவாசை.இது க்ருஷ்ணபக்ஷம்.)
இரண்டு பக்ஷங்கள் ஒரு மாதம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மாதங்கள் இரண்டுவகைப்படும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
01 சந்திரமானம்🌿
02 ஸௌரமானம்🌿
01 சைத்திரம்
02 வைசாகம்
03 ஜேஷ்டம்
04 ஆஷாடம்
05 ச்ராவணம்
06 பாத்ரபதம்
07 ஆஸ்வீயுஜம்
08 கார்திகம்
09 மார்கசிரம்
10 புஷ்யம்
11 மாகம்
12 பால்குனம்
என இப்பன்னிரெண்டும் சாந்திரமான மாதங்கள் இவை சூரிய சந்திர்கள் கூடி பிரிதல் மூலம் எற்படுவதாம்.🌿
01 மேஷம் (சித்திரை)
02 ரிஷபம் (வைகாசி)
03 மிதுனம் (ஆனி)
04 கடகம் (ஆடி)
05 சிம்மம்(ஆவணி)
06 கன்னி (புரட்டாசி)
07 துலா (ஐப்பசி)
08 வ்ருச்சிகம் (கார்திகை)
09 தனுஸு (மார்கழி)
10 மகரம் (தை)
11 கும்பம் (மாசி)
12 மீனம் (பங்குனி)
என இப்பன்னிரெண்டு மாதங்கள் ஸௌரமான மாதங்களாகும்.🌿
இவை ஸூரியனுடைய ஓட்டத்தால் மட்டுமே ஏற்படுவதாகும்.🌿
இரண்டு மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
01 வஸந்தம், (சித்திரை,வைகாசி)🍁
02 க்ரீஷ்மம்,(ஆனி,ஆடி)🍁
03 வர்ஷம்,(ஆவணி புரட்டாசி)🍁
04 சரத்,(ஐப்பசி,கார்த்திகை)🍁
05 ஹேமந்தம்,(மார்கழி,தை)🍁
06 சிசிரம்.(மாசி,பங்குனி)🍁
என ருதுக்கள் ஆறு வகைப்படும். 🍁
ருதுக்கள் மூன்று சேர்ந்த்து ஒரு அயணம்,
01 உத்ராயணம்,🌿
02 தக்ஷிணாயம்
என அயணங்கள் இரண்டு வகைப்படும்.🌿
இரண்டு அயணங்கள் சேர்ந்தது ஒரு வருஷம்.🌿
இவ்வாறு பக்ஷங்கள்லும்,மாதங்களாலும்,ருதுக்களாலும்,அயணங்களாலும், உருவான வருடங்கள் மொத்தம் அறுபதாகும் (60)
அவயைாவன
01 ப்ரபவ,02 விபவ 03 சுக்ல 04 ப்ரமோதூத 05 ப்ரஜோத்பத்தி 06 ஆங்கீரஸ 07 ஸ்ரீமுக 08 பவ 09 யுவ 10 தாது 11 ஈஸ்வர 12 வெகுதான்ய
13 ப்ரமாதி 14 விக்ரம் 15 விஷூ 16 சித்திரபானு 17 ஸுபானு 18 தாரண 19 பார்திப 20 விய 21 ஸர்வஜித் 22 ஸர்வதாரி 23 விரோதி
24 விக்ருதி 25 கர 26 நந்தன 27 விஜய 28 ஜய 29 மன்மத 30 துன்முகி 31 ஹேவிளம்பி 32 விளம்பி 33 விகாரி 34 ஸார்வாரி 35 பிலவ
36 சுபக்ருது 37 சோபக்ருது 38 க்ரோதி 39 விசுவாவசு 40 பராபவ 41 பிலவங்க 42 கீலக 43 ஸௌம்ய 44 ஸாதாரண 45 விரோதிக்ருது
46 பரிதாபி 47 ப்ரமாதீச 48 ஆனந்த் 49 ராக்ஷஸ 50 நள 51 பிங்கள் 52 காளயுக்தி 53 ஸித்தார்தி 54 ரௌத்ரி 55 துன்மதி 56 துந்துபி
57 ருத்ரோத்காரி 58 ரக்தாக்ஷி 59 க்ரோதன 60 அக்ஷய. என்பனவையே 60 வருடங்களாகும்.🌿
🍒 இவ் அறுபது வருடங்கள் ஒன்று முடிந்தால் ஒரு பரிவ்ருத்தியாகும்.🌿
🍒 ஆறு பரிவ்ருத்திகள் சேர்ந்தால் ஒரு தேவவருடமாகும் அதாவது 360 மனித வருடங்களாகும்.🌿
🍒1200 தேவ வருடம் ஒரு கலியுகம் ( 432000 மனித வருடம்)🌿
2400 தேவ வருடம் ஒரு த்வாபரயுகம் (864000 மனித வருடம்)🌿
3600 தேவ வருடம் ஒரு த்ரேதாயுகம் (1296000 மனித வருடம்)🌿
4800 தேவ வருடம் ஒரு க்ருதயுகம் (1728000 மனித வருடம்)🌿
மேற்கூறப்பட்ட நான்கு யுகங்கள் ஒன்று சேர்ந்தது 12000 தேவயுகமாகும்.(4320000 மனித வருடமாகும்)இதை ஒரு சதுர்யுகம் அல்லது ஒரு மஹாயுகம் என்று கூறப்படுகிறது.🌿
🍒 மாஹாயுகங்கள் எழுபத்துஒன்றும்(71)சற்று சந்தி வருடங்களும் சேர்ந்த்து ஒரு மன்வந்த்ரம் எனப்படும்.🌿
இது ஒரு மனுவினுடைய காலமாகும்.🌿
மனுக்கள் மொத்தம் பதினான்கு(14)பேர்களாவார்.🌿
01) ஸ்வயம்புவ மனு 02) ஸ்வாரோசிஷ மனு 03) உத்தம மனு 04) தாமஸ மனு 05) ரைவத மனு 06) ஸாக்ஷூஸ மனு 07) வைவஸ்வத மனு 08) ஸாவர்ணி மனு 09) தக்ஷஸாவர்ணி மனு 10) ப்ரம்மஸாவர்ணி 11) தர்மஸாவர்ணி 12) ருத்ரஸாவர்ணி 13) தேவஸாவர்ணி 14) இந்த்ரஸாவர்ணி
போன்றவைகளே பதினான்கு மனுக்களின் பெயர்களாகும்.🌿
சந்தி வருடங்களுடன் கூடிய இம்மொத்த மனுக்களின் காலமும் ஒன்று சேர்ந்த்து ஒரு கல்பமாகும். 🌿
🍒 ஒரு கல்பம் என்பது மொத்தம் (1000) ஆயிரம் மஹாயுகங்களாகும்.🌿
ஒரு கல்பம் என்பது ப்ரம்மாவிற்கு அரை நாளாகும்.🌿
இரண்டு கல்பம் சேர்ந்த்து ப்ரம்மாவிற்கு ஒரு நாளாகும்.🌿
பகலில் ப்ரம்மாவிழித்திருந்து இரவில் உறங்குவார்.🌿
ப்ரம்மாவின் பகல் பொழுதிலேயே ஸ்ருட்டிகள் நடக்கும் இரவில் ப்ரபஞ்சத்தை ஒடுக்கிக்கொண்டு தூங்குவார்.🌿
ப்ரம்மாவின் மாதத்தில் முப்பது(30) பகல் பொழுதும் முப்பது (30) இரவு பொழுதும் அடங்கும்,🌿
01) வாமதேவ கல்பம் 02) ஸ்வேதவராஹ கல்பம் 03) நீல லோஹித கல்பம் 04) ரந்தர கல்பம் 05) ரௌரவ கல்பம் 06) தேவ கல்பம் 07) ப்ருகத் க்ருஷ்ண கல்பம் 08) கந்தர்ப கல்பம் 09) ஸத்ய கல்பம் 10) ஈசான கல்பம் 11) தம கல்பம் 12) ஸாரஸ்வத கல்பம் 13) உதான கல்பம் 14) காருட கல்பம் 15) கௌரம கல்பம் 16) நாரஸிம்ம கல்பம் 17) சமான கல்பம் 18) ஆக்னேய கல்பம் 19) ஸோம கல்பம் 20) மானவ கல்பம் 21) தத்புருஷ கல்பம் 22) வைகுண்ட கல்பம் 23) லக்ஷ்மி கல்பம் 24) ஸாவித்ரீ கல்பம் 25) கோர கல்பம் 26) வராஹ கல்பம் 27) வைராஜ கல்பம் 28) கௌரீ கல்பம் 29) மஹேஸ்வர கல்பம் 30) பித்ரு,என ஸ்ருஷ்டிகள் நடக்கும் ப்ரம்மாவின் பகல் பொழுதின் பெயர்களாகும்.🌿
இரவு காலத்தில் ப்ரம்மா உறங்குவதால் அந்தந்த கல்பத்தின் இரவாகவே கொள்ளப்படும்.🌿
அறுபது கல்பம்(60) சேர்ந்த்து ப்ரம்மாவிற்கு ஒரு மாதமாகும்,🌿
எழு நூற்று இருபது (720) கல்பம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு வருடமாகும், 🌿
இந்த கணக்கின் படி ப்ரம்மா (100) ஆண்டு காலம் வாழ்வார்,🌿
பிரம்மாவின் பூர்ண ஆயுள் எழுபத்திரெண்டாயிரம் (72000) கல்பகாலமாகும்.🌿
இனி பிரம்மாவின் ஸ்ருஷ்டி முதல் சென்ற நாட்களை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பதை கூறப்போகிறேன் கவனமாக கேட்கவும்.🌿
வாமதேவ கல்பம் முடிவடைந்து ஸ்வேதவராஹ கல்பத்தில் இதுவரை ஆறு மனுக்களின் காலமும் அவர்களின் சந்திவருடங்களும் முடிவடைந்து தற்சமயம் ஏழாவது மனுவான வைவஸ்வதமனுவின் காலத்தில் இருபத்துஏழு சதுர்யுகங்கள் முடிந்து இருபத்து எட்டாவது சதுர்யுகத்தில் நான்காவது யுகமான கலியுகம் நடந்துக்கொண்டிருக்கிறது.🌿
2010 வருட கணக்கின் படி கலியுகம் 5111 வருடம் முடிந்து விட்டது..🌿
இது சகாதேவன் சாஸ்திரத்தில் இருக்கிறது


Featured Post

தலையெழுத்தையே மாற்ற வல்லது.

தலையெழுத்தையே மாற்றவல்லது சிவபுண்ணியம் அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன...