Thursday, February 3, 2022

சாளக்கிராம_பூஜை


சாளக்கிராம_பூஜை


#செய்வதன்_பலன்கள் *

1. சாளக்கிராம பூஜை செய்பவன் 
    சித்தம் சுத்தமாகும்.

2. சாளக்கிராம பூஜை செய்பவன் 
    விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான்.

3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம்
   கொலை செய்தவனின் 
   பாபத்தையும் போக்கும்.

4. சாளக்கிராமத்தை நினைத்தாலும்,
    தரிசித்தாலும், பூஜை செய்தாலும்,
    சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள்
    தெறித்து ஓடுவதுபோல.
    பாபங்கள்கழன்றுஓடும்.

5. இதனை பக்தியுடனோ அல்லது 
    பக்தியேஇல்லாது அல்லது 
    எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய
    நேர்ந்தாலும்முக்திஉண்டு.

6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு 
   எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம்,
    நைவேத்தியம்
    இப்பூஜையினை_செய்பவர்கள்
    விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம்
    வாழ்வார்கள்.

8. சாளக்கிராமத்தை
    பக்தியுடன்_நமஸ்கரித்தவன்
    தேவனாகிறான்...! 
    அவன் சாதாரண மனிதன் 
    அல்லன்...!

9. சாளக்கிராமம்- பகவான் இருக்குமிடம். 
     சர்வ பாபங்களையும நாசம்_
     செய்யவல்லது.

10. பாபங்கள் செய்தவர்கள் கூட
      சாளக்கிராம பூஜையினால் பரகதி
     அடைகிறார்கள். பக்தியோடு 
     செய்பவர்கள் முக்தியடைகிறார்கள்.

11. அரணி கட்டையில் அக்னி
      உண்டாவதுபோல, சாளக்கிராமத்தில் 
      ஹரி இருக்கின்றார். லஷ்மி மற்றும்
      வைகுண்டத்தில் இருப்பதைவிட 
      ஹரி சாளக்கிராமத்தில் மிகவும்
      பிரசன்னமாகவே உள்ளார்.

12. சாளக்கிராமத்தை பூஜை செய்தால்  
     அக்னிஹோத்தரமும் பூதானமும் 
     செய்த பலன்.

13. இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும்,
     ஒரு நாள் சாளக்கிராமத்தை பூஜை 
      செய்த பலனுக்கு ஈடாகாது.

14. பன்னிரெண்டு சாளக்கிராமம் 
      கொண்டு பூஜை செய்தால் 
      பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை 
      பன்னிரெண்டு கல்பகாலம் 
      பூஜை செய்தபலன் 
      ஒரே நாளில் கிடைக்கும்.

15. காமக்குரோதம் உள்ள மனிதன்கூட
      சாளக்கிராம பூஜையினால் 
     முக்திபெறுவான்.

16.தீர்த்த யாத்திரையோ, யாகமோ
     செய்யாமலே சாளக்கிராம
      பூஜையினால் முக்தியடைவான்.

17. சாளக்கிராம தீர்த்தத்தாலே சர்வ 
      புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த
      பலனும், 
      சர்வ யக்ஞம் செய்த பலனும்
       கிடைத்துவிடும்.

18. பல புண்ணிய தீர்த்த தேவதைகள்
       சாளக்கிராமத்தில் சூட்சுமாமயிருந்து
       அருள்பாலிக்கின்றனர்.

19. விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம்
       செய்துகொண்டே சாளக்கிராம பூஜை
       செய்பவன் விஷ்ணுபதம் அடைகிறான்.

20. சாளக்கிராமம் இருக்குமிடத்தில் 
       சமஸ்த லோகங்களும், 
       சமஸ்த தேவதைகளும் இருப்பதாக 
       ஐதீகம்.

21.சாளக்கிராம தீர்த்தமே போதுமே நம்உள்ளும் புறமும் 
      சுத்தமாகுமே.

22. ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம்
       சாப்பிட்டாலே போதுமே, மீண்டும்
       பிறவாநிலை கிடைத்துவிடும்.

ஓம் நமோ நாராயணா

ஸ்ரீ குருவாயூரப்பன், guruvayoor, kerala

 கேரள மாநிலம், குருவாயூரிலுள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயத்தில், காலை 3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனம் காண பக்தர்கள் காத்துக் கிடப்பார்கள்.
ஆலயக் கதவு திறந்தவுடன் பக்தர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு, "அம்மே நாராயணா!' கிருஷ்ணா! குருவாயூரப்பா!' என்று அழைத்துக் கொண்டு திருச்சந்நிதி நோக்கி ஓடுவார்கள்.
அங்கு ஸ்ரீ குருவாயூரப்பன் முதல் நாள் இரவு சார்த்தப்பட்ட சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்களுடன் குழந்தைக் கண்ணனாகக் காட்சி தந்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைப்பான்.
ஓரிரு நிமிடங்களில் அவனது அலங்காரம் களையப்பட்டு, உடனடியாக தைலாபிஷேகம் நடைபெறும்.
தைலாபிஷேகம் செய்தவுடன் வாகை மரத்தின் பட்டையை இடித்துத் தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகை சார்த்து என்கிறார்கள்.
அதன்பின் தங்கக் குடத்திலிருக்கும் புனித நீரால் திருமுழுக்காட்டுகின்றனர்.
அதன்பின் அலங்காரம் செய்யப்படுகிறது.
திருமுடியில் மயில்பீலி அணிந்து, கையில் வெண்ணெய் ஏந்தி, சிறிய சிவப்புநிற கோவணம் (கௌபீனம்) தரித்து, புல்லாங்குழலுடன் பாலகோபாலனாக ஸ்ரீ குருவாயூரப்பன் பக்தர்களுக் குத் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறான்.
இந்த அபிஷேகத் தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த வாகை சார்த்து வழிபாடு பற்றி ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு காலத்தில், தாய்- தந்தை யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த காஷு என்ற பத்து வயது சிறுவன் தொடர்ந்தாற்போல் மூன்று தினங்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டதாம்.
பசியின் கொடுமையைத் தாங்கவியலாத அவன் அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி தன்னை மாய்த்துக் கொள்ள நினைத்தான்.
அப்போது நாரத முனிவர் அவன்முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த அட்சய பாத்திரத்திலிருந்து உணவு கிட்டும் என்று கூறினாராம்.
அவனும் அதிலிருந்து தேவையானபோதெல்லாம் உணவை வரவழைத் துச் சாப்பிட்டு பசியாறிக் கொண்டிருந்தான்.
இந்நிலையில் ஒருநாள் காஷுவுக்குப் பேராசை ஏற்பட்டது. மீண்டும் தான் தண்ணீரில் மூழ்குவதுபோல நடித்து, நாரத முனிவரை வரவழைத்து வீடு, செல்வம் போன்றவற்றை அடையலாம் என்று நினைத்தான்.
அதன்படி நதியில் சென்று அவன் மூழ்கியபோது நாரத முனிவரும் வரவில்லை; அட்சய பாத்திரத்தையும் காணவில்லை.
பேராசையால் தனக்கு நேர்ந்த துயரத்தை எண்ணிய காஷு, இறைவனின் புனிதப் பெயர்களை உச்சரித்து அவன் தியானத்திலேயே தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான்.
அவனது நிலையைக் கண்டு வருந்திய லட்சுமிதேவி, உடனடியாக அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்ட, அவரும் அதற்கு இணங்கினார்.
சுயநினைவை இழந்து மயங்கிக் கிடந்த காஷுவுக்கு பகவான் காட்சி கொடுக்க, அவன் எழுந்து நின்று தன்னை அவரது திருவடிகளில் ஆட்கொள்ளுமாறு வேண்டினான்.
திருமாலும் அதை ஏற்றுக் கொண்டு, ""கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது நான் குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனாகக் காட்சி தருவேன்.
ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் முடிந்தவுடன் என்னை வாகைத் தூளினால் தேய்த்து தூய்மை செய்வார்கள்.
அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய்.
இந்த வாகை சார்த்து நல்லெண்ணெய், வாகைப் பொடி அபிஷேகத் தீர்த்தம் மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர் களின் தோல் நோய்களும் தீரும்'' என்று கூறி சிறுவன் காஷுவையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.
இவ்வாறுதான் குருவாயூர் திருத்தலத்தில் குருவாயூரப்பனுக்கு "வாகை சார்த்து' வழக்கம் ஏற்பட்டதாம்

திருநீறு

ஓம் நம சிவாய
கோயிலில் திருநீறு கொடுப்பது ஏன், அது மந்திரமா தந்திரமா? - குளிக்காமல் திருநீறு பூசலாமா?

திருநீறு எனப்படுவது மறைமுக மந்திர மருந்தாகப் பார்க்கப்படுகிறது. திருநீறு பல்வேறு நோய்களை போக்கக்கூடியதாக உள்ளது.திருநீறு எப்படி உருவாகிறது?அறுகம்புல்லை உண்ணும் பசுமாடு போடும் சாணத்தை உருண்டையாக்கி அதனை காயவைத்து எடுக்க வேண்டும். அதனை உமியில் மூடி வைத்து புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது அந்த சாணம் வெந்து திருநீறு எனும் அருமருந்து தயாராகி விடும். இப்படி தயாராவதே உண்மையான திருநீறாகும்.
    

திருநீறு எனப்படுவது மறைமுக மந்திர மருந்தாகப் பார்க்கப்படுகிறது. திருநீறு பல்வேறு நோய்களை போக்கக்கூடியதாக உள்ளது.

திருநீறு எப்படி உருவாகிறது?
அறுகம்புல்லை உண்ணும் பசுமாடு போடும் சாணத்தை உருண்டையாக்கி அதனை காயவைத்து எடுக்க வேண்டும். அதனை உமியில் மூடி வைத்து புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது அந்த சாணம் வெந்து திருநீறு எனும் அருமருந்து தயாராகி விடும். இப்படி தயாராவதே உண்மையான திருநீறாகும்.
​திருநீறு நன்மைகள்

நம்மை சுற்றி நல்லது கெட்டது என பல்வேறு அதிர்வுகள் இருக்கின்றன. நம்மை அறியாமல் நம் உடலுக்குள் அந்த எல்லா அதிர்வுகளும் சென்று வருகின்றன.

அருகம் புல் திருநீறு நம்மை சுற்றி இருக்கும் நல்ல கதிர்களையும், அதிர்வுகளை மட்டுமே உள்வாங்கும் திறனைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக நம் உடலில் பல்வேறு இடங்களில் திருநீறு இட்டுக் கொள்வதன் மூலம் அந்த நல்ல அதிர்வுகள் நம் உடல் ஏற்றுக் கொள்கின்றது.

திருநீறு உடலின் சில பாகங்களிலாவது அணிய வேண்டும் என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக நம் உடலில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வுகளை கொண்டுள்ள நெற்றியில் அணிவது மிகவும் அவசியம். நம் உடலிலேயே நெற்றி மிக அதிகமாக வெப்பத்தை உள் வாங்குவதும், வெளியிடும் பாகங்களாக இருக்கின்றன. இதன் காரணமாக நாம் நெற்றியில் திருநீறு அணிவது மிகவும் அவசியம். நெற்றி முழுவதும் நாம் திருநீறு அணியலாம். அல்லது நெற்றி பொட்டில் நாம் அணிவது அவசியம்.

அப்படி திருநீறு பூசும்போது சூரியக் கதிர்களின் சக்தியை நம் உடலினுள் இழுக்க பயன்படுகிறது. இதனால் நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களை தீர்க்கக் கூடிய அறுமருந்தாக மாறுகிறது.

​திருநீறு எப்படி மருந்தாகிறது?

பசு மாட்டுச் சாணத்தை எரிப்பதால் திருநீறு உருவாகும். அதாவது மாடு அறுகம் புல் உள்ளிட்ட புல் வகைகளை உண்ணுகிறது. அதனை தன் உடலினுள் தேற்றி வைத்து பின் சாணம் போடும். அந்த சாணம் தீயிட்டு எரிக்கும் போது உருவாகும் சில ரசாயன மாற்றங்கள் நம் உடலுக்கு தேவையான நன்மையை கொடுக்க வல்லது.

நெற்றி பகுதி மிக நுண்ணிய நரம்பு அதிர்வுகளை கொண்டுள்ளதால் அதை வைத்து சில மனோ வசியம் செய்ய முடியும். அப்படி மன வசியத்தை தடுக்கும் ஆற்றல் திருநீறு, சந்தனத்திற்க்கு உண்டு.

திருநீறு பயன்கள்

திருநீறு இடும்போது நல்ல கதிர்களை ஈர்த்து உடலுக்கு கொடுப்பதைப் போல, சந்தனம் நம் உடலிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை நீக்குகிறது. அதே வெளியிலிருந்து வரும் வெப்பத்தையும் தடுக்கிறது. இதனால் வெப்ப மிகுதியால் ஏற்படக்கூடிய மூளை சோர்வு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

நாம் நம் விரலை நெற்றி பொட்டில் பட்டும் படாமல் சிறிது நேரம் வைக்க நம் மனம் ஒருநிலைப்படுவதை உணரலாம். அப்படிப்பட்ட மன ஒருநிலைப்பாட்டை அதிக நேரம் நீடிக்க வைக்கும் வல்லமை திருநீறுக்கு உண்டு. இதனால் தியானம் செய்த மன ஒருநிலைப்பாடு, பயன், சிந்தனைத் தெளிவு ஏற்படும்.

​திருநீறு சித்தாந்தம்:

திருநீறு சித்தாந்தம்:

திருநீறின் பயன்பாட்டை சரியாக சொல்லி புரிய வைக்க முடியாது, அதை அனைத்து தலைமுறையினரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான், நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை அணியும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, மனிதம் மிகவும் நம்பக்கூடிய கடவுள் நம்பிக்கையுடன் இணைத்தான்.

மதத்தை காட்டி விஞ்ஞானத்தை அதில் வைத்ததினால் இன்றும் நாம் திருநீறு அணியும் நல்ல பழக்கத்தை வைத்துள்ளோம்.

திருநீறு பூசும் இடங்களும் பயன்களும்:

புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) - ஞானத்தை ஈர்க்க வல்லது.

தொண்டைக்குழியில் பூசுதல் (விசுத்தி சக்கரம்) - நம் சக்தி அதிகமாகும்.

நெஞ்சுக்கூட்டின் மத்தியில் திருநீறு தரித்தால் நம் உடல் தெய்வீக அமைப்பை பெறும்.

​எப்படி அணியலாம்:

எப்படி அணியலாம்:

திருநீறு மோதிர விரலாம் எடுத்து பூச வேண்டும். மோதிர விரல் நம் உடலின் பவித்திரமான பாகமாக பார்க்கப்படுகிறது.

திருநீறு நாம் குளித்த பின்னர் பூசுவது தான் மிக சரியான முறை. சில விதிவிலக்காக வயோதிகம், உடல்நலக்குறைவு, ஆபத்து காலத்தில் குளிக்காமல் பூசுவது தவறில்லை. நம் உடல் தூய்மையை விட உள்ளத்தூய்மை மிக முக்கியமானது.

இருப்பினும் சோம்பலின் காரணமாக அதையே வாடிக்கையாக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

திருநீறு அருமருந்து என்பதை உணர்ந்து இனியேனும் நாம் அன்றாட திருநீறு அணிவதை பழக்கமாக மாற்றிக்கொள்வோம்.. 

ஓம்நம சிவாய

இராமகிரி

இராமகிரி

பிரதோஷம் நடைபெறாத சிவதிருத்தலம் 
சென்னையில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருட்டப்பள்ளியை அடுத்து தற்போது இராமகிரி என்றழைக்கப்படும் திருக்காரிக்கரை என்னும் ஊர் உள்ளது. இங்கு மூலவராக வாலீஸ்வரர் அருள்கிறார். அம்பாளின் திருநாமம் மரகதாம்பாள் என்பதாகும். பஞ்ச பிரம்ம திருத்தலங்களில், சிவபெருமானின் ஈசான முகத்திற்குரிய திருத்தலமாக விளங்குகிறது இத்திருத்தலம். இந்த திருத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனி, வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்திக்கும், சிவலிங்கத்திற்கும் நடுவே அனுமன் வீற்றிருப்பது அபூர்வமான அமைப்பாகும். 
இராவணனை வதம் செய்ததால், இராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷத்தை போக்கிக் கொள்வதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட நினைத்த இராமபிரான், அதற்காக சிவலிங்கம் கொண்டுவர அனுமனை காசிக்கு அனுப்பினார். அனுமனும் காசிக்குச் சென்று அங்கிருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு திரும்பினார்.
ஆனால் காசியின் காவல் தெய்வமாக இருக்கும் காலபைரவரின் அனுமதியை அனுமன் கேட்காமல் சிவலிங்கத்தை எடுத்து சென்றதால் அனுமனை, பைரவர் தடுத்து நிறுத்தினார். அதே நேரத்தில் தேவர்கள் பலரும் அங்கு வந்து, இராமரின் பூஜைக்காக சிவலிங்கம் தேவைப்படுவதைக் கூறி, அனுமனை செல்ல அனுமதிக்கும்படி வேண்டினர். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காலபைரவர், அரைமனதுடன் அனுமன் சிவலிங்கத்தை எடுத்துச்செல்ல அனுமதித்தார்.
இருந்தாலும் காலபைரவரின் மனம் சமாதானம் ஆகவில்லை. எப்படியாவது சிவலிங்கத்தை மீட்க வேண்டும் என்று நினைத்தார். சூரிய பகவான் மற்றும் வருணபகவான் துணையுடன் அனுமனுக்கு கடுமையான தாகம் ஏற்படும் படிச் செய்தார். அதனால் சிவலிங்கத்தை கொண்டு செல்லும் வழியில் தாகத்தால் அனுமன் தவித்தார்.
அப்போது கங்கா தேவியிடம், “அனுமன் செல்லும் வழியில் ஒரு நீர்நிலையை ஏற்படுத்தவேண்டும்” என்று காலபைரவர் கூறினார். அதன்படியே கங்காதேவி அங்கே ஒரு குளத்தை ஏற்படுத்தினாள். குளத்தைக் கண்டதும் அனுமனுக்கு உற்சாகம் பெருக்கெடுத்தது. அந்த வேகத்திலேயே அவருடைய உற்சாகம் வடிந்தும் போனது. கையில் வைத்திருக்கும் சிவலிங்கத்தை யாராவது வாங்கிக் தண்ணீர் அருந்தமுடியும்? அனுமன் சுற்று முற்றும் பார்த்தார். அதற்காகவே காத்திருந்த காலபைரவர், ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு அனுமன் முன்பாகத் தோன்றினார்.
அந்தச் சிறுவனிடம் சிவலிங்கத்தைக் கொடுத்த அனுமன், “எக்காரணத்தைக் கொண்டும் சிவலிங்கத்தைக் கீழே வைக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு தண்ணீர் அருந்தச் சென்றார். அனுமன் அந்தப் பக்கம் போனது தான் தாமதம், சிறுவனாக வந்த காலபைரவர் சிவலிங்கத்தை தரையில் வைத்துவிட்டு மறைந்து விட்டார்.
திரும்பி வந்து பார்த்த அனுமன், தான் கொண்டு வந்த சிவலிங்கம் தரையில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அந்தச் சிவலிங்கத்தை கைகளால் எடுக்க முயன்றார். அவரால் எடுக்க முடியவில்லை. வாலினால் கட்டி இழுக்க முயன்றார். ஆனாலும் இயலவில்லை. தன்னிடம் இருந்து சிவலிங்கத்தைப் பெற்று கீழே வைத்தது காலபைரவர்தான் என்பதை உணர்ந்துகொண்ட அனுமன், காலபைரவரை வழிபட்டு அவருடைய அருளால் மற்றொரு சிவலிங்கத்தைப் பெற்றுக்கொண்டு இராமேஸ்வரம் சென்றதாகத் தலவரலாறு கூறுகிறது.
‘தனக்கு இப்படி ஒரு நிலை இந்தக் குளத்தால் தானே ஏற்பட்டது’ என்ற கோபத்தில், அனுமன் அங்கிருந்த சிறு மலையைப் பெயர்த்து குளத்தில் வீசினார். இராமபிரானின் வழிபாட்டுக்காக அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் அந்த மலை மீது பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த இடத்திற்கு இராமகிரி என்றும் பெயர் ஏற்பட்டது.
அனுமன் வாலினால் கட்டி இழுத்ததால், இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் ‘வாலீஸ்வரர்’ என்னும் திருப்பெயர் கொண்டார். இறைவனின் சன்னிதிக்கு நேராக ஆஞ்சநேயரும், அவருக்கு அடுத்தபடியாக நந்திதேவரும் காட்சி தருகிறார்கள். நந்தியின் வாய் பகுதியில் இருந்து நீர் சுரந்தபடியே இருக்கிறது. எந்த காலத்திலும் வந்துகொண்டே இருக்கும் இந்த நீர், மலையின் உச்சியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. 
இந்தத் திருத்தலத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டைக்குக் காரணமாக இருந்த காலபைரவர், சந்தான பிராப்தி பைரவராக அருள்கிறார். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையைக் கொண்டு வந்து பைரவருக்கு கொடுத்து விட்டு, பிறகு பைரவரின் வாகனமான நாய் உருவத்தை விலையாகக் கொடுத்து திரும்பவும் குழந்தையைப் பெற்றுச் செல்கிறார்கள். ‘திருக்காரிக்கரை’ என்ற பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் திருத்தலத்தை, ‘கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்' என்று வைப்புத்தலமாக வைத்துப் பாடி இருக்கிறார். சிவபெருமானுக்கு முன் நந்தி இல்லாததால் இங்கு பிரதோஷ வழிபாடு நடைபெறுவதில்லை.
கோவிலுக்கு வெளியில் ஒரு தீர்த்தக் குளம் இருக்கிறது. அந்த தீர்த்தக் குளத்தின் ஒரு கரையில் இருக்கும் நந்தி சிலையின் வாயில் இருந்து, தீர்த்தக் குளத்துக்குள் தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தீர்த்தம் ‘நந்தி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் இருந்து வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டிக்கொண்டு இருக்குமாம். இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. தண்ணீர் சுவையாக இருக்கும். நோய்களை குணப்படுத்தி ஆரோக்கியம் தரும் வல்லமை மிக்கதாக இத்தீர்த்தம் உள்ளது என்கிறார்கள்.  
ஓம் நமசிவாய.

80 ஆன்மீக குறிப்புகள்,god praying methods

*80 ஆன்மீக குறிப்புகள்*

1. தினசரி காலையும், மாலையும் தூய
மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள்
பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க
வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம்,
தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த
மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம்,
கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி,
குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி,
வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித
நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை
அண்டாது. தூய்மையான காற்றும்
கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக
வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை
இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து
வைக்காதீர்கள். இது இறை சக்தியைக்
குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள்
ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு
பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம்
ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால்,
அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை
சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில்
பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ
வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக
இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.
அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற
பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும்
இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி
இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது
உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது
துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில்
வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம
நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய்
தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல்
பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது.
இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல்
கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும்
இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத
பூக்களைக் சூடக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள்
வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும்,
விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே
குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம்
அணைக்கக் கூடாது.

16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு
மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை
மணி முதல் ஆறு மணிக்குள் தீபம்
ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும்
நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும்
எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில்
விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய்,
இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை
ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி
பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர
சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ
ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி
வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை
ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான்
விளக்கேற்ற வேண்டும்.

20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில்
பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி
தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட
வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப்
படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை
சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால்,
சிறந்த பலன் கிடைக்கும்.

22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக்
கூடாது.

23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில்
காலையில் தினமும் கேட்பது நல்லது.

24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது
நின்றவாரே தொழுதல் குற்றமாகும்.
அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்ப
ோது காலை, மாலை வேளைகளில்
விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த
பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.
தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய்
உடைக்கக் கூடாது.

26. பூஜையின்போது விபூதியை நீரில்
குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள்
மட்டுமே விபூதியை நீரில் குழைத்து
பூசலாம்.

27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும்
இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது
பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால்
மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப்
பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.

29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல்
உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல்
கூடாது.

30. ஈர உடையுடனும், ஓராடையுடனும்,
தலைகுடுமியை முடியாமலும்,
தலையிலும், தோளிலும் துணியை
போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ
வழிபாடு செய்யக் கூடாது.

31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர
உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி
உதறி உதடுத்தலாம்.

32. சுப்ரபாதத்தை தினமும் காலை
வேளையில் மட்டுமே கேட்க வேண்டும்.
அவ்வாறு கேட்க முடியாத நிலையில்
மாலையில் கேட்பது அவ்வளவு
உசிதமானதில்லை எனப்படுகிறது.

33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க
தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே
வெற்றிதான். காலையில் விழித்தவுடன்
நாராயணனையும் இரவு தூங்கு முன்
சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி
தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில்
தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில்
எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம்
ஏற்றி வைக்கலாம்.

35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய
வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து
கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல்
இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

37. காலையில் நின்று கொண்டு செய்யும்
ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில்
உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால்
பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது
கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை
எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.

39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள்
அணைக்கக் கூடாது.

40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது
தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.

41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு
பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி
வைக்கக் கூடாது.

43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட
துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு
நிவேதனம் செய்யக்கூடாது.

44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும்.
மா இலை தோரணங்களுக்கு பதிலாக
பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால்
மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின்
வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு
வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது.
யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து
கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக்
கொள்கிறார்.

48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும்
துளசியை கையில் வைத்துக் கொண்டு என்
பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின்
தொடர்ந்து செல்வேன் என பகவான்
கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில்
துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை
அவருக்கு உண்டு.

49. தெய்வங்களுக்கு நிவேதனம்
செய்யும்போது வெற்றிலை மற்றும்
பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2,
4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு,
வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள்,
தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில்
நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற
பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில்
வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில்
வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம்
செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல
மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள்
போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும்.
நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில்
ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில்
போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட
வேண்டும்.

53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்
வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி
கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை
ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி
இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது
என்பார்கள்.

54. உறவினர்களை வெளியூர் செல்ல
வழியனுப்பிய பிறகு பூஜை,
முதலியவைகளை செய்யக் கூடாது.

55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம்,
திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை
வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும்.
வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம்
கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம்
பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள்
ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம்
இட்டுக் கொள்ள வேண்டும்.

57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப்
போட்டு கட்டாயம் வைக்க வேண்டும்.
ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும்
வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால்
சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களை
யும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு
குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி,
குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து
விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு
நல்லது.

59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு.
காலையில் எழுந்ததும் துளசியைத்
தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம்
கொடுக்கும்போது சிறிது துளசியுடன்
தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு
தரப்படாத தானம் வீண்.

60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப்
படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க
வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக்
கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை
எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு
வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில்
எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த
அளவு பாக்கு வைக்க வேண்டும்.

61. வெற்றிலை நுனியில் லட்சுமியும்,
மத்தியில் சரவஸ்தியும், காம்பில்
மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே
வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு
வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு
வைக்க வேண்டும்.

62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு
இடது புறம் வருமாறு வைக்க வேண்டும்.
அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி
சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை
போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை
போடும் போது வாழை மரத்திலிருந்து
நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது
பக்கம் வரவேண்டும்.

64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு
முன் தான தருமம் செய்வதென்றால் செய்து
விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம்
செய்யாதீர்கள்.

65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும்
ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல
பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து
முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.
தலையை விரித்து போட்டு இருந்தால்
லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

67. பூஜை செய்யும்போது கடவுள்
உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப்
பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும்,
பாதமும் திறந்து நிலையில் இருக்க
வேண்டும்.

68. செல்வத்திற்குரிய தெய்வங்களான
வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர்
படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து
இருக்குமாறு மாட்டக்கூடாது.

69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப்
படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும்.
வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத்
திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம்.
தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக்
கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால்
தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப்
பார்த்து படங்களை வைக்கவும்.

70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு,
தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து
கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

71. பூஜை அறையில் அதிக படங்களையும்,
தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம்
என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக்
கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும்
இடையில் போதிய இடம் விட்டு வைக்க
வேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில்
சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு
நிவேதனம் செய்யக்கூடாது.

73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர்
பாத்திரங்களில் நேரடியாக வைத்து
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை
வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட
விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும்
விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு
செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது
நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு
அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும்
கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு
வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது
லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு
வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு
கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே
உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம்
சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது
வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி
வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும்
உதவும். வெளியே செல்லும்போது சட்டைப்
பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து
சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி,
தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

⚛️⚛️⚛️⚛️⚛️.

சக்தி வாய்ந்த ஆறு_சிவ_மந்திரங்கள்

*சக்தி வாய்ந்த ஆறு_சிவ_மந்திரங்கள்* .

*🔯இதை சொன்னாலேயே எல்லாமே கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது.*

1.பஞ்சாக்ஷர சிவ மந்திரம்:
*****************************
"ஓம் நமசிவாய"

 இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.

2.ருத்ர மந்திரம் :
******************
"ஓம் நமோ பகவதே ருத்ராய"

3.சிவ காயத்ரி மந்திரம் :
**************************
"ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்"

4.சிவ தியான மந்திரம்:
*************************
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.

5.மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:
*********************************
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

6.கபாலி மந்திரம்:
********************
"ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்"
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

Rudratsam,ருத்ராட்சம்,

ருத்ராட்சம்
ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். அல்லது இந்த ஜென்மத்தில் மஹா புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் மட்டுமே அணிவதற்கு இறைவன் கருணை செய்வார். 
இவ்வுலகில் பிறந்த அனைவரும் ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் ஜாதி மதம் பேதம் இல்லாமல் யார் வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம் பயப்பட வேண்டாம்.
ருத்ராட்சத்தின் மகிமையை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். பல யுகங்களாக ஆன்மிக அன்பர்களுக்கு பல்வேறு வகையில் ருத்ராட்சம் பலன்களை கொடுத்துக் கொண்டிருந்தாலும், அது தோன்றிய வரலாறு என்பது மிகவும் சுவாரஸ்யமானது. 
முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து, இது என்ன பழம் இப்பழத்தை இது வரை நான் பார்த்ததில்லையே என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு நாரதா பூர்வ காலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் சர்வ வல்லமை படைத்தவனாகவும்,பிரம்மனிடம் வரம் பெற்றவனாகவும் இருந்தான்.அந்த கர்வத்தினால் சர்வ தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் என்னிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டினார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் முறையிட்டோம்.
அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரேசக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல 1000 ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் (தியானம், தவம்) சிந்தனையில் ஆழ்ந்தார்.
அப்போது மூன்று கண்களையும் அவர் மூடும்போது, பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்சமரமாக உண்டானது. அந்த ருத்ராட்சம் மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது, என்று மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார். பக்தியுடன் அதை அணிபவரை எப்பொழுதும் கண்போலக் காப்பாற்றுவார் . எனவே அனைவரும் ஒரு ஐந்து முகம் ருத்ராட்சம் கழுத்தில் எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாமா?
ஆமாம்! ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும், இல்லறத்தில் ஈடுபடும் போதும், பெண்கள் மாதவிடாய் காலத்திலும், இறப்பு வீட்டிற்கு போகும் போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபுராணம் தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் மேன்மையும், வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். 
பெண்கள் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியவேண்டும்.. 
எல்லா காலத்திலும் எல்ல வயதினரும் எல்லா நேரங்களிலும் அணிந்து கொண்டே இருக்கலாம் இதனால் பாவமோ தோஷமோ கிடையாது. ருத்ராட்சம் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

Tamil god murugan*திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல்*

.*திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல்*

ஒவ்வொரு ஆலயத்திலும், சுவாமிகளுக்கு நைவேத்தியம்  
செய்வதற்கு மடப்பள்ளி இருக்கும்.

அதுபோல திருச்செந்தூர், செந்திலாண்டவர் கோயிலில்  
இருக்கும் மடப்பள்ளியில் நைவேத்தியம் தயாரிப்பதற்கு  
முதியவர் ஒருவரை ஆலயத்த்தாரால் அமர்த்தியிருந்தார்கள்.  
அவர் முருகன் மீது அதிதீவிரமான பக்தியைக் கொண்டிருந்தார்.

நைவேத்தியத்திற்குண்டான நேரத்திற்கு, வயோதிகத்தின்  
காரணமாய் சரியான நேரத்திற்கு, இவரால் நைவேத்ய உணவு  
தயாரித்து கொடுக்க முடியவில்லை.  
இதனால் ஆலய அர்ச்சகர்கள் பலமுறை அவரிடம் கோபம்  
கொண்டு ஏசினர். முதியவர் முருகனிடம் தன் நிலை குறித்து  
புலம்பி அழுதார்.

ஒரு நாள், அவர் மிகவும் தாமதமாக உணவு சமைத்துக்  
கொடுக்கவே, ஒரு அர்ச்சகர் கோபத்தில் அவரை கடுமையாகத்  
திட்டி விட்டார்.

இதனால் மனம் வருந்திய முதியவர், தன் உயிரை மாய்த்து  
விடுவதே சரி என்றெண்ணி கடலுக்குள் இறங்கினார்.

அவர் கடலினுள் செல்ல செல்ல, நீர்மட்டம் கூடுதலாகாமல்  
அவரது முழங்கால் வரை மட்டுமே இருந்தது. அவரும் ஆழத்தை  
எதிர் பார்த்து சற்று தொலைவிற்கு நடந்து போனார்.  
அப்போதும் முழங்காலுக்கு மேல் கடல்நீர் உயராமல் இருந்தது.

இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம் என்று அவர் செல்லவும்  
, “நில்லுங்கள்..” என குரல் கேட்க சமுத்திரத்தில் நின்றவாறு  
திரும்பிப் பார்த்தார். கரையில் ஒரு சிறுவன் நின்று  
கொண்டிருந்தான்.அவன் முதியவரிடம் முதலில் கரைக்கு  
வாருங்கள் என அழைத்தான். அவரும் திரும்பி வந்து,  
அச்சிறுவன் முன்பு நின்றார்.

கடலில் மூழ்கி உயிரை விடும் அளவிற்கு உங்களுக்கு  
அப்படியென்ன கஷ்டம் வந்து விட்டது என்றான் அச்சிறுவன்.  
முதியவர், அவனிடம் தன் கவலைகள் அனைத்தையும் சொல்லி  
அழுதார்.

“இதற்காகவா உயிர் துறப்பார்கள்..” என்று சிறுவன் சிரித்தான்.  
உங்களுக்கு வேறு பணி இருக்கும்போது எதற்காக மடப்பள்ளியில்  
வேலை பார்க்கிறீர்கள்? என்றான். முதியவர், எனக்கு சமையலை  
தவிர வேறு பணி எதுவும் தெரியாது குழந்தாய் என வருத்தத்துடன்  
சொன்னார்.

நீங்கள் திருச்செந்தூரில் பல காலமாக இருக்கிறீர்களே!,  
இந்த தலத்தின் தல புராணத்தை எழுதினால் என்ன? என்றான்  
சிறுவன். இந்த வார்த்தையைக் கேட்டதும் அதிர்ந்துவிட்டார்  
முதியவர்.

என்ன? திருச்செந்தூர் தல புராணத்தை நான் எழுதுவதா?  
பள்ளிக்கூடம் போகாத எனக்கு, கல்வியறிவு கொஞ்சமும்  
கிடையாதே. என்னா ல் இது எப்படி சாத்தியமாகும்? என்றார்.

மனத்தால் நினைத்தால் இதெல்லாம் சாத்திய மாகும். மேலும்,  
நீங்கள்தான் தலபுராணத்தை எழுத வேண்டும் என்று  
செந்திலாண்டவனும் விரும்புகிறான். இதோ அதற்கான  
ஊதியத்தை பிடியுங்கள் என்று ஒரு துணிமுடிப்பை அவர் கையில்  
வைத்தான்.  
சிறுவனிடம் கை நீட்டி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார்  
முதியவர்.

இனிமேல் நீங்கள் சமையல் பணி செய்பவர் அல்ல, இன்று முதல்  
வென்றிமாலை கவிராசர் என்று அழைக்கப்படுவீர்கள் என்று  
சொல்லிப் போய் மறைந்தான் அச்சிறுவன். முதியவர் ஒன்றும்  
புரியாமல் நின்றார்.

முதியவருக்கு குழப்பமாக இருந்தது. வந்த சிறுவன் முருகனோ?  
அழகே உருவான செந்தி லாண்டவன் கோலத்துடனே அவன்  
தெரிந்தானே? உயிர் மாய்ப்பதை நிறுத்தவே முருகன் வந்து  
மறைந்தானோ?

தெளிச்சி அடைந்த முதியவர், கிருஷ்ண சாஸ்திரி என்பவரைப்  
போய் பார்த்தார். அவரிடம் செந்திலாண்டவன் தல புராணத்தை  
சொல்லு ம்படி விவரமாகக் கேட்டார்.

பின், அதனை நூலாக எழுதினார். அதனை அரங்கேற்றம் செய்ய  
அர்ச்சகர்களை நாடினார்

முருகன் தனக்கு காட்சி தந்ததையும் அவர் சொல்லியபடி நூல்  
இயற்றியதையும் அர்ச்சர்களிடம் கூறினார்.

அங்கிருந்த அர்ச்சகர்கள் யாவரும் இதை நம்ப வில்லை. மாறாக  
அவரைக் கேலி செய்து கோயிலிலிருந்து ஓட விரட்டி விட்டனர்.  
கோயிலை விட்டு வெளியேறிய கவி, மனம் குமுறி, தான் இயற்றிய  
நூலை கடலில் வீசிவிட்டார்.

கடலில் விழுந்த, கவிராசர் நூல், அலைகளால் இழுத்துச்  
செல்லப்பட்டு, திருச்செந்தூரிலிருந்து, அடுத்த கிராமத்துக்  
கடற்கரையில் கரை ஒதுங்கிக் கிடந்தது.

அடுத்த ஊரில் அங்கு வசித்த வந்த அறிஞர் ஒருவர் காலாற  
கடற்கரையில் நடந்து வந்த போது, அவரின் கண்களில் இந்நூல்  
காணப் பட்டன. அதை எடுத்து பிரித்து படித்தார் அவர்.  
வியப்படைந்து போனார்.

எவ்வளவு மகோத்மன்யமான இது கடலில் கிடந்து கசங்குகிறதே!,  
என்று அந்நூலை செந்திலாண்டவன் கோயிலுக்குள் கொண்டு  
சென்று அர்ச்சகர்கள் முன் படித்து காட்டினார்.

நூலின் முடிவில் நூலை எழுதியது வென்றி மாலை கவிராயர்  
என குறிப்பு இருந்ததைப் பார்த்து அர்ச்சகர்கள் அனைவரும்  
வியந்து போயினர். கவிராயரை தேடி கண்டு அழைத்து வந்தனர்  
அர்ச்சகர்கள்.

உங்களிடம் அவமதிப்புடன் நடந்து கொண்டதற்கு, முதலில்  
எங்களை பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டும் என கேட்டு,  
தகுந்த மரியாதையையும் செய்தனர்.

பின்பு, செந்திலாண்டவன் முன்னிலையில் தல புராண  
அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது.

படிக்காதவரையும் பாவலராக்கினான் செந்திலாண்டவன்  
முருகன். முருகன் மீது அவர் கொண்டிருந்த பக்தி எவ்வாறு ஆயினும்,  
கற்காத ஒருவன் கவியரசனான்.

ஓம் சரவணபவ…  
கந்தா சரணம்…. ஷண்முகா சரணம்….

தை மாத‌ சிறப்புகள்... Thai tamil months special s

🌹தை மாத‌ சிறப்புகள் !
➖➖➖➖➖➖➖➖

சூரியனின் தேர்ப்பாதை வடதிசையில் மாறும் உத்தராயண காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள். இது மிகவும் புண்ணியமான காலம் என்று புராணங்கள் சொல்கின்றன. உயர்வான இந்த மாதத்தில் பல தலங்களில் சிறப்பான பூஜைகள் நடைபெறும்.

🌹‘தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத‌த்தில் மக்கள் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, தை வெள்ளி வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றுகின்றனர்.

🌹தை கிருத்திகை

தை மாதத்தில் வரும் கிருத்திகையில் விரதமிருந்து கந்தவேளை வணங்கி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணத்தடை நீங்கம் என்பது ஐதீகம்.

சஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.

இதில் உத்தராயன புண்ணிய காலம் இன்றாகும். சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக மலர்வது "தை' மாதம். பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும்; கட்டாயம் குழந்தையும் பிறக்கும்.

எனவே இந்த தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல 
சௌபாக்கியங்களும் சேரும்.

🌹தைப்பூசம் :

இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருக்கடவுள் ஆகியோரை வழிபாடு செய்கிறோம்.

 சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடலரசனாக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள் தைப்பூசம் என்றும், உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாள் தைப்பூசம் என்றும் கருதப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இவ்விழா உலகெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தேவ குருவான பிரகஸ்பதி பூச நட்சத்திரத்திற்கு உரியவர். அறிவுக் கடவுள் என்று அவர் போற்றப்படுகின்றார். எனவே, பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி அமையும் மாதமான தை மாதத்தில் தைப்பூச தினத்தன்று புண்ணியத் தீர்த்தங்களில் நீராடினால், அறிவாற்றல் வளரும் என்பது ஐதிகம்.

மயிலை கபாலீசுவரர் கோயிலில் தைப்பூச நாளையொட்டி முதல்நாள் சந்திரசேகர சுவாமி தெப்போற்சவமும், இரண்டாவது மூன்றாவது நாட்கள் சிங்கார வேலர் தெப்போற்சவமும் நடைபெறும்.

சமயபுரம் மாரியம்மன் தைப்பூசத்தன்று மாரியம்மன் வட திருக்காவிரிக்கு எழுந்தருளி, அண்ணனாகிய ரங்கநாதரிடமிருந்து பட்டாடை, பரிவட்டம் மற்றும் சீர்வரிசைகளைப் பெற்றுத் திரும்புகிறாள்.

🌹தை அமாவாசை :

தை அமாவாசை அன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.

ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

தை அமாவாசை அன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது

உத்திராண்ய காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும், தட்சியாண காலத்தின் முதல் மாதமான ஆடி மாத அமாவாசையும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையும் முன்னோர்களுக்கான வழிபாட்டிற்கு உகந்தவை எனக் கருதப்படுகின்றன.

 இவ்வழிபாட்டின் மூலம் தாங்கள் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், குழந்தைப்பேறு, குடும்பத்தில் ஒற்றுமை, சுபிட்சம், மகிழ்ச்சி ஆகியவை கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.

🌹ரத சப்தமி :

 ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர்பிறையில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் சூரியன் தனது வடஅரைக்கோளப் பயணத்தைத் தொடங்குகிறார்.

 இந்நாளில் விரதம் மேற்கொள்வதால் ஆரோக்கியம், நோய் இல்லாமை, செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம், புண்ணியம் ஆகியவை கிடைக்கும்.

மேலும் மனக்கவலை, வியாதி ஆகியவற்றை நீக்கும். வழியில்லாமல் தவிக்கும்போது வழி காட்டும் என்றும் கருதப்படுகிறது.

ரத சப்தமி அன்று சந்திரசேகர சுவாமி ரதத்தில் எழுந்தருளி, மேலண்டைக் குளக்கரையில் தீர்த்தவாரியும், பின்னர் திருவீதி உற்சவமும் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமைகளில் கற்பகாம்பாள் பிராகார உலா நடைபெறும்.

🌹பீஷ்ம அஷ்டமி

ரதசப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர்.
58 நாட்கள் அம்புபடுக்கையில் படுத்து இருந்த பிதாமகர் பீஷ்மர் பரமாத்மாவின் கடாக்ஷத்தால் 
ஸ்ரீ வைகுண்ட ப்ராப்தி அடைந்த நாள்.வேதம் படிக்கும் படித்த வித்யார்த்திகள் அனைவரும்  மந்திர ரூபமாக பிதாமகருக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த பாக்கியத்தை கொடுக்கும்.
தவிர மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் பிதாமகருக்கு தர்ப்பணம் செய்யலாம்.
 அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பிதுர் பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை!

🌹வசந்த பஞ்சமி

ஸ்ரீசரஸ்வதி அவதரித்த தினமே வசந்த பஞ்சமி. அந்த நாள் தை மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமியாகும். இதனை "மகாபஞ்சமி' என்றும் சொல்வர். 
அம்பிகை ஜனனமான வசந்த பஞ்சமி தினத்தில் சங்கீதத்தாலும் நாம சங்கீர்த்தனம், பஜனை முதலியவற்றாலும் அம்பிகையை ஆராதிப்பது சிறப்பு. ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், ஞான சித்தியாகும். அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்பந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது. 
ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இன்று தான். வட மாநிலங்களில் பங்குனி மாதத்தில் வசந்த பஞ்சமி, வசந்த ருதுவின் ஆரம்ப தினமாகக் கொண்டாடபடுகிறது. மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாள் அன்றுதான் வித்யாரம்பம் செய்கிறார்கள்.

🌹வீரபத்ர வழிபாடு :

 வீரபத்ர வழிபாடு என்பது செவ்வாய் தோறும் ஓராண்டு காலம் கடைபிடிக்கப்படுகிறது.

ஓராண்டு வழிபட முடியாதவர்கள் தை மாத செவ்வாய்க்கிழமையில் மட்டுமாவது இவ்வழிபாட்டினை கடைபிடிக்கலாம்.

இவ்வழிபாட்டை மேற்கொள்வதால் நீங்காத தடையும் நீங்கும். தீராத பகைiயும் தீரூம். நவகிரக பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.

🌹தை வெள்ளி வழிபாடு :

 உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தையில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

அன்றைய தினங்களில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

🌹 தை மாதத்தின் திருவிழாக்களைக் கொண்டாடி, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி இறையருள் கிடைக்கப்பெற்று வளமான வாழ்வு வாழ்வோம்.

Akhtiyar, Tamilnadu,அகத்தியர்,

அகத்தியர் உருவாக்கிய 166 அகத்தீஸ்வரர் சிவாலயங்கள்(மொத்தம் 1008 ஆலயங்கள் உள்ளன. மீதி கோவில்களை தேடி கொண்டு இருக்கிறோம்!!!)
------------------------------------------------------------
19.1.2022 புதன் கிழமை அன்று 
   அகத்தியரின் ஜென்ம நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் வருகிறது.   

உங்களுக்கு அருகில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம் சென்று ஒரு மணிநேரம் 

"ஓம்   ஹ்ரீம் அகத்தியமகரிஷி  நமக" என்று ஜெபிக்கவும்.

முருக கடவுள் அவதாரம் எடுக்கும் முன்பே நமது தாய் தமிழ் மொழி தோன்றி விட்டது.

முருக கடவுள் அவதாரம் எடுத்த பிறகு அவருக்கு தாய் தமிழ் மொழியினை பரமேஸ்வரன் என்ற சிவ பெருமான் போதித்தார்!

அதன் பின்னர் அகத்தியர் சித்தருக்கு முருக கடவுள் தாய் தமிழ் மொழி சொல்லி கொடுத்தார் !!!

அகத்திய சித்தர் நாம் வாழ்ந்து வரும் பூமி முழுவதும் பயணம் செய்து எல்லா பகுதியிலும் வாழ்ந்து வந்த மக்கள் அனைவருக்கும் தமிழ் மொழியை சொல்லி கொடுத்தார்!!!

கடந்த 22,05,124 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பேசப் பட்டு வரும் ஒரே மொழி நமது தமிழ் மொழி !!!

இன்று பாரத நாட்டில் தமிழ்நாடு மாநிலத்திலும் இலங்கை நாட்டிலும் முழுமையாக   ஆன்மீக தமிழ்  பேச பட்டு எழுதப்பட்டு வருகிறது.

இது தவிர உலக நாடுகள் பலவற்றிலும் வாழ்ந்து வரும். தமிழ் மக்களால் பேசப்படும் மொழி யாக இருக்கிறது.

 இதனால் நம்முடைய ஆதிமூல முதல் குரு அகத்தியரின் அருள் நமக்கு கிடைக்கும்!!!

தகுந்த ஆன்மீக குரு வேண்டும் என்று தேடல் நம்மில் பலருக்கு இருக்கிறது.

அவர்களுக்கு தகுந்த மற்றும் உண்மையான குரு இந்த பிறவியிலேயே கிடைக்க வேண்டும் என்று விரும்புவோர் தினமும் ஒரு மணி நேரம் வரை " ஓம் ஹ்ரீம் அகத்திய மகரிஷி நமக " என்ற மந்திரம் ஜெபித்து வர வேண்டும்.

தினமும் ஒரு மணி நேரம் வீதம் 3 முதல் 7 ஆண்டுகள் வரை இவ்வாறு ஜெபம் செய்து வந்தால் குரு கிடைத்து விடுவார்!!!

1.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,ஆடையூர் கிராமம் ,அண்ணாமலை கிரிவலப்பாதை திருவண்ணாமலை.(வாயு லிங்கத்திற்கும் சந்திர லிங்கத்திற்கும் இடையே ஆடையூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது.கிரிவலப்பாதையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்)

2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்,சென்னை -49.   (ஐஸ்வர்ய வீரபத்திரர் சன்னதியும்,அம்பிகையின் நேரடிப்பார்வையில் குரு பகவான் சன்னதியும் இருக்கும் ஆலயம்)

3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,         பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை(விமான நிலையம் பின்புறம் 2 கி மீ  தொலைவில்,பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ தொலைவில்)

4. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,தண்டையார்பேட்டை, சென்னை.

5. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,நல்லூர் கிராமம், சென்னை.

6. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,சோழிபாளையம் சென்னை.

7. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,கொளத்தூர் ,சென்னை.

8. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,வேலப்பன்சாவடி, சென்னை.

9. அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில், சித்தாலபாக்கம், சென்னை.

10. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேங்கடமங்கலம், சென்னை.

11. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மிட்டனமல்லி, ஆவடி, சென்னை.

12. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பூந்தண்டலம், சென்னை.

13. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கொளப்பாக்கம், சென்னை.

14. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பவுஞ்சூர், சென்னை.

15. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அணைக்கட்டு சேரி, சென்னை.

16. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழைய பெருங்களத்தூர், சென்னை.

17. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெடுங்குன்றம், சென்னை.

18. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் சோனலூர்,மாம்பாக்கம், சென்னை.

19. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை.

20.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை

21.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)

22.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகிலாண்டபுரம்,காங்கேயம்

23.அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில்,நுங்கம்பாக்கம்,சென்னை;.

24.அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகத்தியான்பள்ளி,வேதாரண்யம்.நாகை மாவட்டம்.(வேதாரண்யம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ)

25.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்,துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

26.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில்,ஏம்பல்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில், (ஆவுடையார் கோயில் என்ற ஊரில் இருந்து தென்மேற்கே பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது)புதுக்கோட்டை மாவட்டம்.

27.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)

28.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.

29.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில்(புதுக்கோட்டை)=கேட்டை நட்சத்திர ஸ்தலம்

30.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)

31.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம்(உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)

32.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,பஞ்செட்டி,பொன்னேரி,திருவள்ளூர் மாவட்டம்,(வழி:சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில்,சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்;பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது;(பஞ்சேஷ்டி என்றும் கூறுவது உண்டு) (செங்குன்றம் டூ காரனோடை அருகில்)

33.ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்,அம்பாசமுத்திரம்,திருநெல்வேலி மாவட்டம்;

34.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருவொற்றியூர்,சென்னை;

35.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வில்லிப்பாக்கம்(வில்லிவாக்கம் அல்ல),சென்னை(வழி:சென்னை டூ பாண்டிச்சேரி சாலையில் கடப்பாக்கம் சென்றடைய வேண்டும்;அங்கிருந்து  வெண்ணாங்குப்பட்டு செல்ல வேண்டும்;அங்கிருந்து மேற்காகச் செல்லும் குணாம்பேடு சாலையில் 5 கி மீ பயணித்தால் வில்லிப்பாக்கம் வரும்;

36.அருள்மிகு  முத்தாம்பிகை சமேத    அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புத்திரன் கோட்டை,செய்யூர் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(வழி:மதுராந்தகத்தில் இருந்து 25 கி மீ தொலைவில் இருக்கின்றது;மதுராந்தகம் மற்றும் சூணாம்பேட்டையில் இருந்து புத்திரன் கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கின்றது;புத்திரன் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது)

37.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாலவேடு,வந்தவாசி வட்டம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

38.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சோமூர்,கரூர் மாவட்டம்(மிகவும் பாழடைந்திருக்கின்றது;வாருங்கள் புனர் நிர்மாணம் செய்வோம்=2018)

39.அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சுனை.(வழி:மதுரை டூ திருச்சி சாலையில் 45 கி மீ பயணித்து கருங்காலக்குடி செல்ல வேண்டும்;அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி மீ பயணித்தால் கோவிலை அடையலாம்)

40.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நெமிலிச்சேரி,சென்னை(வழி:குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி மீ)

41.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மேலக்காட்டூர்,தஞ்சாவூர் மாவட்டம்;(திருப்பனந்தாளில் இருந்து 5 கி மீ)

42.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர்,பூந்தோட்டம்.(மயிலாடுதுறை டூ பேரளம்)

43.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பொதட்டூர் பேட்டை,திருத்தணி அருகில்,சென்னை;

44.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாம்பவர் வடகரை;திருநெல்வேலி மாவட்டம்;

45.அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நஞ்சுண்டாபுரம்,தாராபுரம் தாலுகா;

46.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புரிசை.(செய்யாறு டூ வந்தவாசி சாலையில்  தென் கிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றது)

47.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழைய பாளையம்,துவரங்குறிச்சி அருகில்;(வேறு அருகில் ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது;1.9.2018

48.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர்(முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்திருக்கின்றது)சேத்தியாத்தோப்பு;
(சேத்தியாதோப்பு என்ற ஊரிலிருந்து தென்கிழக்கு திசையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.)கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்கு காத்துக்கொண்டிருக்கின்றது 1.9.2018

49.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.(2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)

50.அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வன்னிவேடு,வாலாஜாபேட்டை;

51.அருள்மிகு  சிவகாமிசுந்தரி சமேத      அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி.திருச்சி அருகில்

52.அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பாதூர்,உளுந்தூர்ப்பேட்டை.

53.அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணப்பாறை(ஆண்டார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்),திருச்சி மாவட்டம்.

54.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சிறுமலை,திண்டுக்கல் மாவட்டம்.(வழி:திண்டுக்கல் டூ நத்தம் சாலை)

55.அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புதுப்பாளையம் கிராமம்,வெம்பாக்கம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

56.அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,திருப்பதி நகர்,வடசேரி,நாகர்கோவில்.

57.அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி டூ வயலூர் சாலை,மல்லையம்பட்டு,ஸ்ரீரங்கம் தாலுகா,திருச்சி மாவட்டம்.(கண் பார்வைக்கு உரிய பரிகார ஸ்தலம்)

58.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,அயத்தூர்,வேப்பம்பட்டு,திருவள்ளூர் மாவட்டம்.

59.அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோவில்,ஆற்காடு சாலை,வளசரவாக்கம்,சென்னை-87.

60.அருள்மிகு அகத்தியர் கோவில்,ஓரத்தூர்,மாடம்பாக்கம்,நீலாமங்கலம்,கூடுவாஞ்சேரி,காஞ்சிபுரம் மாவட்டம்-603202

61.அருள்மிகு பெரிய நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,நெய்வாசல் கிராமம்,கீழச்செவல்பட்டி அருகே,திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்;

62.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம்,கும்பமுனி மங்கலம்,பொன்னேரி.(சென்னைக்கு அருகில்)

63.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,மேலையூர்,பூம்புகார் அருகில்(மயிலாடுதுறை டூ பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீ) மேலையூரில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;

64.அருள்மிகு வண்டார்க்குழலி (ஸ்ரீபிரம்மராம்பிகை) சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையங்குடி,ஆலத்தம்பாடி அருகில்,திருவாரூர்.

65.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம்,செம்மங்குடி(கும்பகோணம்  குடவாசல் அருகில்)

66.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,கீழ்த்தானம்(பொன்னமராவதி - காரையூர் அருகில்)

67.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், அனகாபுத்தூர் ,சென்னை.

68.அருள்மிகு யோகாம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,குளவாய்ப்பட்டி(புதுக்கோட்டை டூ அறந்தாங்கி)=புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலைவிடவும் மிகவும் பழமையான ஆலயம்;யோகா ஆசான்கள் அடிக்கடி வந்து செல்ல வேண்டிய ஆலயம் இது;

69.அருள்மிகு அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சித்தாலப்பாக்கம்,தாம்பரம் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.( புனர் நிர்மாணப்பணிகளுக்கு அன்பளிப்பு வழங்கிட செல் எண்:9884995203) இன்று 11.4.2019 தேதிப்படி இவர்களுக்கு ரூ.21 லட்சம் தேவை; சிவத்தொண்டில் விருப்பம் உள்ளவர்கள்,அகத்தியர் தனது குருவாக எண்ணுபவர்கள் தொடர்பு கொண்டு புனர் நிர்மாணப் பணிகளில் இணைத்துக் கொள்ளலாம்

70.அருள்மிகு மனோன்மணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணமை(மகாபலிபுரத்தில் இருந்து புதுச்சேரி சாலையில்  8 கி மீ சென்றால் மணமை கிராமம் வரும்;அதன் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)

71.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,ஷேசம்பாடி அருகில்,(கும்பகோணம் டூ  ஆலங்ககுடி)

72. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அருங்குளம், திருத்தணி.(திருத்தணியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில்)

73.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், செம்பேடு, திருவள்ளூர். (திருவள்ளூர் என்ற ஊரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்)

74.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஊதிக்காடு, திருவள்ளூர்.( திருவள்ளூர் என்ற ஊரிலிருந்து வடக்கே 6 கிலோமீட்டர் தொலைவில்)

75.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், விடையூர், திருவள்ளூர். (திருவள்ளூர் என்ற ஊரில் இருந்து மேற்கே 9 கிலோமீட்டர் தொலைவில்)

76. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், வடமதுரை, ஊத்துக்கோட்டை. (பெரியபாளையம் என்ற ஊரிலிருந்து தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)

77. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வஞ்சிவாக்கம், பொன்னேரி.(பொன்னேரி என்ற ஊரில் இருந்து  வடகிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)

78. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், சோழவரம், பொன்னேரி .(பொன்னேரி என்ற ஊரிலிருந்து தெற்கே 14 கிலோமீட்டர் தொலைவில்)

79. அருள்மிகு ராஜேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை.

80.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஓரத்தூர், ஸ்ரீபெரும்புதூர் வட்டம். (ஸ்ரீபெரும்புதூர் என்ற ஊருக்கு தெற்கே 25 கிலோமீட்டர் தொலைவில்)

81. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சிறுவள்ளூர், காஞ்சிபுரம். (காஞ்சிபுரத்திற்கு வடக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)

82. அருள்மிகு அகத்தீஸ்வரர்  திருக்கோயில்  உள்ளாயிவூர், வாலாஜாபேட்டை. (வாலாஜாபேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே 11 கிலோ மீட்டர் தொலைவில்)

83.அருள்மிகு செல்லியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் வெங்குடி, வாலாஜாபேட்டை. (வாலாஜாபேட்டை என்ற ஊரிலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)

84. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், நெல்வேலி, வாலாஜாபேட்டை (வாலாஜாபேட்டை என்ற ஊரில் இருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)

85.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் , விசூர், உத்திரமேரூர். (மானாம்பதி க்கு தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)

86.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,காட்டான் குளம், உத்தரமேரூர்.(உத்திரமேரூர்  என்ற ஊருக்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)

87. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பெருந்தண்டலம், செங்கல்பட்டு (செங்கல்பட்டு என்ற ஊரிலிருந்து கிழக்கே பதினொரு கிலோமீட்டர் தொலைவில்)

88. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்  ஒழுகலூர், செங்கல்பட்டு. (செங்கல்பட்டு என்ற ஊரில் இருந்து தெற்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)

89. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மாடயம்பாக்கம், மதுராந்தகம் (செய்யூர் என்ற ஊருக்கு வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில்)

90. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் கீழ்கொடுங்கலூர், வந்தவாசி.(வந்தவாசி என்ற ஊரிலிருந்து கிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவில்)

91. அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், உளுந்தை, வந்தவாசி வட்டம் (வந்தவாசி என்ற ஊரிலிருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவில்)

92. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஆர்பாக்கம், திருவண்ணாமலை வட்டம். (திருவண்ணாமலை என்ற ஊரில் இருந்து வடக்கே 21கிலோமீட்டர் தொலைவில்)

93. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். (திருவண்ணாமலை என்ற ஊருக்கு தென்கிழக்கு 23 கிலோமீட்டர் தொலைவில்)

94. அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், புதுப்பாளையம், செய்யாறு வட்டம். (மாமண்டூர் என்ற ஊரில் இருந்து தெற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)

95. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் செய்யாதுவனம்,செய்யாறு வட்டம்.(செய்யாறு என்ற ஊரில் இருந்து மேற்கே 3 கிலோமீட்டர் தொலைவில்)

96. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வாச்சனூர், செய்யாறு வட்டம்.( செய்யாறு என்ற ஊரில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில்)

97. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பரஞ்சி,அரக்கோணம் வட்டம். (அரக்கோணம் என்ற ஊரில் இருந்து மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)

98. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நாகவேடு, அரக்கோணம். வட்டம் (அரக்கோணம் என்ற ஊரிலிருந்து தென்மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில்)

99. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வெண்ணம்பள்ளி, வாலாஜாபேட்டை.(வாலாஜாபேட்டை என்ற ஊரிலிருந்து வடமேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில்)

100. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பெருங்காஞ்சி, வாலாஜாபேட்டை. (சோளிங்கர் என்ற ஊரில் இருந்து தெற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில்)

101. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், குகைநல்லூர், குடியாத்தம்  வட்டம்.(திருவலம்  ஊரில் இருந்து வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)

102. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மணலூர்பேட்டை, திருக்கோயிலூர் வட்டம்.(திருக்கோயிலூர் என்ற ஊருக்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)

103.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கூவனூர், திருக்கோவிலூர் வட்டம். (திருக்கோவிலூர் என்ற ஊருக்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)

104. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சிமெய்யூர், திருக்கோயிலூர் வட்டம்.(சித்தலிங்க  மடத்தில் இருந்து  கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில்)

105. அருள்மிகு முத்தாலம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், அவலூர்பேட்டை, செஞ்சி வட்டம். (செஞ்சி என்ற ஊருக்கு வடக்கே 28  கிலோமீட்டர் தொலைவில்)

106. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , வீராமூர், செஞ்சி வட்டம்.  (செஞ்சி என்ற ஊருக்கு வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில்)

107. அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில்  சீ, செஞ்சி வட்டம்.(செஞ்சி என்ற ஊருக்கு வடமேற்கே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில்)

108. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர், திண்டிவனம். வட்டம் (திண்டிவனம் என்ற ஊரிலிருந்து தென்கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவில்)

109. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,தென்பேர், விழுப்புரம் வட்டம் (விழுப்புரம் என்ற ஊரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில்)

110.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,ஒலக்கூர் ,திண்டிவனம் வட்டம்.(திண்டிவனம் என்ற ஊருக்கு வடக்கே 12 கிலோமீட்டர் தொலைவில்)

111. அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், விக்கிரவாண்டி.(சுயம்புலிங்கமாக இங்கே அன்னை புவனேஸ்வரி அருள் புரிந்து கொண்டிருக்கிறாள்)

112. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மரகதபுரம், விழுப்புரம் வட்டம் (விழுப்புரம் என்ற ஊரிலிருந்து தென்மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில்)

113. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,சாத்தமங்கலம், சிதம்பரம் வட்டம் (சேத்தியாதோப்பு என்ற ஊருக்கு தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)

114. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பெருங்களூர், சிதம்பரம் வட்டம் (சிதம்பரம் என்ற ஊரிலிருந்து தென்மேற்கே 15 கிலோமீட்டர் தொலைவில்)

115. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்,  வட மூர், காட்டுமன்னார்கோயில்  வட்டம். (லால்பேட்டை என்ற ஊரில் இருந்து வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)

116. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருச்சின்னபுரம், காட்டுமன்னார்கோயில் வட்டம். (லால்பேட்டைக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில்)

117.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் தீவலூர் காட்டுமன்னார்கோயில் வட்டம் (பெண்ணாகடத்தில் இருந்து வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)

118. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , பாட்லூர் ,திருச்செங்கோடு வட்டம்.(திருச்செங்கோடு என்ற ஊரில் இருந்து தென்மேற்கே 15 கிலோமீட்டர் தொலைவில்)

119. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் கொடூர், நாமக்கல் வட்டம்.( பரமத்தி என்ற ஊருக்கு வடக்கே 12 கிலோமீட்டர் தொலைவில்)

120. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் கீழையூர், அரியலூர் வட்டம் (கீழப்பழுவூர் என்ற ஊருக்கு மேற்கே மூணு கிலோ மீட்டர் தொலைவில்)

121..அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,வடுகன்பற்று,  அகத்தீஸ்வரம்,குமரி மாவட்டம்.

122. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், விளந்தை, உடையார்பாளையம், பெரம்பலூர் மாவட்டம்.(ஆண்டிமடம் என்ற ஊரிலிருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)

123.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கீழையூர், சீர்காழி வட்டம். (திருவெண்காடு என்ற ஊருக்கு தென்கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில்)

124. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சேமங்கலம், மயிலாடுதுறை வட்டம் (திரு நின்றியூர் என்ற ஊரில் இருந்து வடகிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)

125. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மறையூர், மயிலாடுதுறை வட்டம் (மயிலாடுதுறை என்ற ஊரிலிருந்து தென்மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில்)

126. அருள்மிகு அபிராமி அம்மை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்,  கூழையூர், மயிலாடுதுறை வட்டம்.

127. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை வட்டம்.

128. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,  ஐவ நல்லூர், நாகப்பட்டினம் வட்டம்.(நாகப்பட்டினம் என்ற ஊரிலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)

129. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பிரதாபராமபுரம், நாகப்பட்டினம் வட்டம்.(வேளாங்கண்ணி என்ற ஊரில் இருந்து தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)

130. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருப்பூண்டி, நாகப்பட்டினம் வட்டம்.(வேளாங்கண்ணி என்ற ஊரில் இருந்து தெற்கே 8 கிலோமீட்டர் தொலைவில்)

131. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வாய்மேடு, வேதாரண்யம் வட்டம் (வேதாரணியம் என்ற ஊரிலிருந்து மேற்கே 25 கிலோமீட்டர் தொலைவில்)

132. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிள்ளியனூர், நன்னிலம் வட்டம் (பேராளம் என்ற ஊரில் இருந்து மேற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில்)

133.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,நாகக்குடி, நன்னிலம் வட்டம் ( நன்னிலம் என்ற ஊரில் இருந்து தெற்கே 7 கிலோமீட்டர் தொலைவில்)

134.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , கீரங்குடி, நன்னிலம் வட்டம் (திருவாஞ்சியம் என்ற ஊரில் இருந்து தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில்)

135.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பூங்குலம், நன்னிலம் வட்டம் (நன்னிலம் என்ற ஊரில் இருந்து தென்மேற்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில்)

136.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , பழையவல்லம், திருவாரூர் வட்டம் (திருவாரூர் என்ற ஊரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில்)

137.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அத்திபுலியூர், திருவாரூர் வட்டம் (கீழவேலூர் என்ற ஊருக்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)

138.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்,  சுகந்த விளாகம், திருவாரூர் மாவட்டம் (திருவாரூர் என்ற ஊருக்கு கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில்)

139.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்,  கிள்ளுகுடி, திருவாரூர் வட்டம் (கீழவேல்லூர் என்ற ஊரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில்)

140.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பின்னவாலூர், திருவாரூர் மாவட்டம் (திருவாரூர் என்ற ஊருக்கு தெற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)

141. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , மாலவராயநல்லூர், மன்னார்குடி வட்டம். (மன்னார்குடி என்ற ஊருக்கு கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில்)

142. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஆலத்தம்பாடி, திருதுறை பூண்டி வட்டம் (திருதுறைபூண்டி என்ற ஊருக்கு வடக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)

143.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழையங்குடி, திருத்துறைப்பூண்டி வட்டம் (திருத்துறைபூண்டி என்ற ஊருக்கு வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில்)

144. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், எக்கல்,திருத்துறைப்பூண்டி வட்டம் (திருதுறைபூண்டி என்ற ஊருக்கு வடக்கு எட்டாவது கிலோமீட்டர் தொலைவில்)

145. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மேல காட்டூர், திருவிடைமருதூர் வட்டம் (திருப்பனந்தாள் என்ற ஊருக்கு வடகிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)

146. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கண்ணார குடி (சிக்கல் நாயக்கன் பேட்டை) (திருப்பனந்தாள் என்ற ஊருக்கு கிழக்கே நாலு கிலோ மீட்டர் தொலைவில்)

147. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்  ,செம்பங்குடி, கும்பகோணம் வட்டம் (நாச்சியார்கோயில் என்ற ஊருக்கு தெற்கே மூணு கிலோ மீட்டர் தொலைவில்)

148. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சந்திரசேகரபுரம், பாபநாசம் வட்டம் தஞ்சை மாவட்டம் (வலங்கைமான் என்ற ஊரிலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)

149. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்,  முனியூர், பாபநாசம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம்(அம்மா பேட்டை என்ற ஊரில் இருந்து வடமேற்கு 7 கிலோமீட்டர் தொலைவில்)

150. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தெக்கூர்,பாபநாசம் வட்டம் தஞ்சை மாவட்டம் (ஒரத்தநாடு என்ற ஊருக்கு தென்மேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில்)

151. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பனங்குடி (இங்கே பரமேஸ்வரன் கோயில் என்று அழைக்கிறார்கள்) குளத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் (அன்னவாசல் என்ற ஊரிலிருந்து தென்கிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில்)

152. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பலுவாஞ்சி,மணப்பாறை திருச்சி மாவட்டம் (மணப்பாறை என்ற ஊருக்கு தெற்கே 17 கிலோமீட்டர் தொலைவில்)

153. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,திருமுக்கூடல், கரூர் வட்டம் (கரூர் என்ற ஊருக்கு கிழக்கே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில்)

154. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,காரத்தொழுவு ,உடுமலை வட்டம் (உடுமலை என்ற ஊருக்கு வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)

155. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,ஐயப்பட்டி,மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் (மேலூர் என்ற ஊருக்கு வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில்)

156. அகத்தீஸ்வரர் திருக்கோயில் , திருச்சுனை,மேலூர் வட்டம் ,மதுரை மாவட்டம் (மேலூர் என்ற ஊருக்கு வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் மலை மீது)

157. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேதியன்குளம், தேவகோட்டை வட்டம் (தேவகோட்டை என்ற ஊரில் இருந்து மேற்கே 13 கிலோ மீட்டர் தொலைவில்)

158.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருமணவயல், தேவகோட்டை வட்டம் (தேவக்கோட்டை என்ற ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில்)

159. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் (சொக்கலிங்கம் கோயிலுக்கு அருகே) புளியங்குடி, நெல்லை மாவட்டம்.

160. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வீரசிகாமணி, சங்கரன்கோயில் வட்டம் ( சங்கரன்கோவில்  என்ற ஊரில் இருந்து தென்மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)

161.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , பின்னவாசல்,பேராவூரணி வட்டம். (பேராவூரணி என்ற ஊருக்கு தென் மேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)

162. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,மணக்காடு, பேராவூரணி வட்டம் (பேராவூரணி என்ற ஊருக்கு தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)

163. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழைய பாபநாசம், பாபநாசம் வட்டம், செங்கோட்டை தாலுகா நெல்லை மாவட்டம்.

164.அருள்மிகு ஸ்ரீ யோகாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், குளவாய்பட்டி, மதுரை டு ஆவுடையார் கோயில் சாலை மார்க்கம்.

165. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், புல்வயல், காரைக்குடி டு பிள்ளையார்பட்டி பகுதி.

166. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அச்சரவாக்கம் (திருப்போரூர் டு செங்கல்பட்டு மார்க்கம்)

Monday, January 31, 2022

Terminalia chebula-kadukkai-கடுக்காய்

 கடுக்காய் கல்பம்


கடுக்காய் கல்பம் செய்ய அரை கிலோ (மஞ்சள் நிற) கடுக்காய், அரை லிட்டர் பசும்பால் தேவை. பாலில் கடுக்காயைப் போட்டு, அடுப்பில்வைத்து கால் மணி நேரம் காய்ச்சவும். சூடு ஆறியதும் இறக்கி, கடுக்காயை மட்டும் வெயிலில் உலரவைக்கவும். மூன்று நாள்கள் உலரவைத்த பிறகு, இதை விதையுடன் மிக்ஸியில் அரைத்து, கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும். கடுக்காயின் விதை நச்சு. ஆனால், அதைப் பால் ஊற்றிக் காய்ச்சியதன் மூலம் நச்சு விலகி, கல்பமாகிவிடும். 
இந்தக் கடுக்காய் கல்பத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, இரவு உணவுக்குப் பின்னர் அருந்தலாம். மற்ற கல்பங்களைப்போல அல்லாமல் கடுக்காய் கல்பத்தை மட்டும் பல ஆண்டுகளுக்குச் சாப்பிடலாம். 


கடுக்காய் லேகியம்
கடுக்காய் லேகியம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைச் சிலர் கிண்டலாகச் சொல்வதும் உண்டு. உண்மையில் கடுக்காய் லேகியம் சாப்பிடுவதால், நரைத்த தலைமுடிகூட கருகருவென வளரும். முற்காலங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் உறுதியாக இருக்க ,கடுக்காய் சேர்த்துக் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விதையை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும். 

கடுக்காயில் பலவகைகள் உள்ளன. அதில் பிஞ்சுக் கடுக்காய் மலச்சிக்கலைப் போக்கும். மலத்தை இளக்கும்; உடலுக்கு அழகூட்டி, மெருகூட்டும். செங்கடுக்காய் காசநோயைப் (டி.பி) போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும். வரிக்கடுக்காய் பல்வேறு நோய்களை விரட்டும்; விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் கடுக்காய்த் தூளை எடுத்து, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் (48 நாள்கள்) சாப்பிட்டுவந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும்; மலச்சிக்கல் குணமாகும்.
கடுக்காய்த்தூளுடன் சிறிதளவு சோம்பு (பெருஞ்சீரகம்) சேர்த்து மண் சட்டியில் தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்ட வேண்டும். அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்துவந்தால் உடல் எடை குறையும். 

மூன்று கடுக்காய்த் தோல்களுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்; மலச்சிக்கல் விலகும்; உடல் பலம் பெறும்.
இப்படிப் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் கடுக்காய், உடல் பலவீனத்தைப் போக்கும்; ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி என்றும் இளமையான தோற்றத்தைத் தரும்.


English,

1,

Half a kilo (yellow) mustard, half a liter of cow's milk is required for mustard fermentation. Put the mustard in the milk and bake in the oven for a quarter of an hour. When it cools down, remove and let the mustard dry in the sun. After drying for three days, grind it in a mixer with the seeds and place in a glass bottle. Mustard seed is poisonous. However, by distilling it with milk, the toxin is removed and it becomes fermented.Take a teaspoon of this mustard paste and mix it with hot water and drink it after dinner. Unlike other kalpas, only mustard kalpas can be eaten for many years.

2,

You may have heard of mustard legume. There are some who say this as a joke. In fact, eating mustard legumes will make even gray hair grow thicker. Histories say that the buildings built in the past were built with mustard to be sure. Mustard is mentioned in paranormal medical texts about four thousand years ago. This should be used after removing the seed.There are many types of mustard. Pinch mustard in it will cure constipation. Loosen the stool; Aromatizing and polishing the body. Red sorghum can cure tuberculosis (TB)and beautify the lean body. Varicose veins repel various diseases; Increases sperm count.Take five grams of mustard powder and mix it with hot water and drink it before going to bed at night. Eating a zone (48 days) of ginger, zucchini and mustard eliminates digestive disorders; Constipation is cured. Add a little anise (fennel) to the mustard powder, add water to a clay pot and distill well. If you mix pure one with it and drink it twice a day, you will lose weight. Grind the required amount of ginger, chilli, tamarind, black gram with three mustard skins in ghee, add salt and wash. If it is mashed and eaten with asparagus, the digestive power will increase; Constipation recedes;Gain physical strength.Mustard, which cures various diseases like this, will cure physical ailments; Removes male cell defects and gives a youthful appearance.


Sunday, January 23, 2022

தீராத நோய் தீர்க்கும் ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில், செட்டியாபத்து தலவரலாறு

                                   தீராத நோய் தீர்க்கும் ஐந்துவீட்டு சுவாமி                                                      திருக்கோவில்,

இந்த கோவிலானது நான்கு திசைகளிலும், நான்கு வாசல்களை கொண்டுள்ளது. இதில் வடக்கு வாசல் வழியாக உள்ளே செல்லும் போது முதலில் ஸ்ரீ பெரியசாமி சன்னதி அமைந்திருக்கிறது. அடுத்ததாக ஸ்ரீ வைணவ பெருமாள் சன்னதியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அனந்தம்மாள் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ ஆத்தி சுவாமி சன்னதியும், அதனையடுத்து ஸ்ரீ திருப்புளி ஆழ்வார் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ பெரியபிராட்டி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே கோவிலுக்குள் 6 தெய்வங்கள், ஐந்து சன்னதிக்குள் அமைந்திருப்பதால் இந்த கோவிலுக்கு ஐந்து வீட்டு சுவாமிகள் கோவில் என்று பெயர் வந்தது.

ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் வழிபடும் இந்த கோயிலை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், கோவிலுக்கான செலவுகளை பஞ்சபாண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில் செய்யப்படும் அன்னதானமானது மீனவர்கள், அங்காடியில் வியாபாரம் செய்பவர்கள், வெற்றிலை விற்கும் நாடார்கள், ஆடு மாடுகளை வளர்த்துவந்த கோணார்கள், நெசவாளர்கள் இப்படி ஜாதி மத வேறுபாடின்றி இவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட சன்மானத்தில் இந்த ஆலயமானது பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.


ஜாதி பேதம் நீங்கிய வரலாறு 

எல்லா ஜாதி மக்களும் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலுக்கு வந்து வணங்கினாலும், அவரவர் மனதுக்குள் ஜாதி வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் இருந்தது. ஜாதி ஏற்றத்தாழ்வு அதிகமாக பார்க்கும் அந்த காலகட்டத்தில் ஒரு துப்புரவு தொழிலாளி இறைவனுக்கு பிரசாதத்தை படைத்து வழிபட்டான். ஆனால் அந்த பிரசாதத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, யாரும் அந்த பிரசாதத்தை பெற்றுக் கொள்ள வில்லை. அதன் காரணம், அவன் செய்யும் துப்புரவு தொழிலும் அவன் ஜாதியில் குறைந்த அந்தஸ்தை உடையவன் என்பதும் தான்.

அவன் அந்த கோவிலில் அழுது புலம்பி தவித்து சோர்ந்து கோவில் வாசலிலேயே உறங்கிவிட்டான். அந்த சமயத்தில் தொழிலாளியின் கனவில் வந்த பெரியசாமிகள், ‘அந்த பிரசாதத்தை ஓரிடத்தில் புதைத்து வைத்துவிட்டு அடுத்த வருடம் வந்து அதை திறந்து பார்க்க சொல்’ என கூறிவிட்டு மறைந்து விட்டனர். திடுக்கிட்டு விழித்த அந்தத் தொழிலாளி அந்த கோவிலுக்கு தெற்குப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் பிரசாதத்தை ஒரு வாழை இலை கொண்டு மூடி, அதை பானையோடு புதைத்து வைத்தான். மறுவருடம் அந்த கோவிலுக்கு வந்த துப்புரவு தொழிலாளி பெரியசாமியை வணங்கிவிட்டு, அவன் புதைத்து வைத்திருந்த அந்த பிரசாதத்தை தோண்டி எடுத்து பார்த்தான். அந்த பிரசாதமானது அப்பொழுதுதான் புதியதாக செய்ததைப் போன்று ஆவி பறக்க இருந்தது. இதை பார்த்த பக்தர்கள் அந்தத் தொழிலாளியின் பிரசாதத்தின் மகிமை கண்டு, அந்த பிரசாதம் தங்களுக்கும் வேண்டுமென்று அனைவரும் கேட்டு கேட்டு வாங்கிச் சென்றனர். அந்த துப்புரவு தொழிலாளிக்கு இறைவன் கொடுத்த ஆசிர்வாதம் தான் இது. அந்த நாளில் இருந்து யாரும் இந்த கோவிலில் ஜாதி மதத்தினை மனதளவில் கூட பார்ப்பதில்லை.

பலன்கள்

 ‘ஹரி ஓம் ராமானுஜாய’ ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் மந்திரமாக இது கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு சென்று இந்த மந்திரத்தை உச்சரித்து அந்த இறைவனிடம் வேண்டினால், திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். நவக்கிரகங்களின் தோஷங்கள் நீங்கும். மனோதைரியம், நிம்மதி, எடுத்த காரியத்தில் வெற்றி, இவைகளை பெற்று வளமாக வாழலாம்.

 தரிசன நேரம்: காலை 7AM-8.30AM மணி வரை மதியம் 11AM-12 மணி வரை மாலை 5.30PM- 7 மணி வரை.

முகவரி: திருச்செந்தூர், தூத்துக்குடி, செட்டியாபத்து, தமிழ்நாடு 628210. 

தொலைபேசி எண். 04639-250630.


Thursday, January 20, 2022

Geetha Matriculation Higher Secondary School, Thoothukudi

 

                                 Geetha Matriculation Higher Secondary School, thoothukudi






* Std : Lkg To X Std
* Office Timings : 9.15 Am To 5.30 Pm
* Board Of Education : Matriculation.
* Basic Facilities : Play Ground, Computer Lab, Science Lab, Library, Transport.
* Extra Facility : Smart Classes, Tata Class Edge.
* Extra Activities : Skarate, Yoga, Scatting, Chess, Bharatanatyam.
* Admission : April - May



Signal Ponraj Night Clup Parota Shop Thoothukudi

                                                                    Ponraj Night Clup-Thoothukudi,


Signal Ponraj Night Clup Parota Shop Thoothukudi,tamilnadu ,india,

சுவையான பரோட்டா சாப்பிட சிக்னல் பொன்ராஜ் நைட் கிளப் ,தூத்துக்குடி,தமிழ்நாடு,,இந்தியா

Tata PUNCH-India's Safest Car

                                               Tata PUNCH-India's Safest Car

The Tata Punch has achieved a five star rating for adult occupant protection and four stars for child occupant protection in Global NCAP’s latest #SaferCarsForIndia crash tests.

The Tata Punch was tested in the most basic safety specification, fitted with two airbags, ABS brakes and ISOFIX anchorages. The Punch can be improved by equipping the model with standard Electronic Stability Control (ESC), side head impact protection systems as standard, and 3 point belts in all seating positions. It is important to highlight once again Tata’s decision to install both child occupant’s as rearward facing, demonstrating that this position offers the best safety option as both child dummies received good protection.

The Punch was tested in compliance with the requirements of Global NCAP’s voluntary test procedure.

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...